Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:04:29 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18452
#KOTW18452
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 12, 2016
ரூ.500, 1000 பணத்தாள்களை மாற்ற வங்கிகளிலும், ஏ.டீ.எம். களிலும் நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருப்பு! கொதிப்பில் ‘குடி’மகன்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3738 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்கள் இனி செல்லாது என்றும், அவற்றை 10.11.2016. முதல் 31.12.2016. நாளுக்குள் வங்கிகளில் கொடுத்து, மாற்றிக்கொள்ளலாம் என்றும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி 08.11.2016. அன்று ஊடகங்கள் வாயிலாக அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக, 10.11.2016. வியாழக்கிழமை முதல் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வங்கிகளிலும், ஏ.டீ.எம். தானியங்கி மையங்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

காயல்பட்டினத்தின் அனைத்து வங்கிகளிலும், ஏ.டீ.எம். மையங்களிலும், அஞ்சல் அலுவலகத்திலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பணப்பரிமாற்றம் செய்து வருகின்றனர்.

பிரதமரின் அறிவிப்பு வெளியான பின், வங்கிகள் செயல்படத் துவங்கி - மூன்றாவது நாளை அடைந்துவிட்டபோதிலும், வங்கிகளில் நுழைவாயில் மூடப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் வாடிக்கையாளர்கள் கொஞ்சங்கொஞ்சமாக உள்ளே அனுப்பப்பட்டு, பணப்பரிமாற்றத்திற்கு அனுதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்றும் (12.11.2016. சனிக்கிழமை) நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த காட்சிகளைக் காண முடிந்தது. ஊரே ஓய்ந்திருக்கும் மதிய நேரத்தின்போது காயல்பட்டினத்தின் மூன்று வங்கிகளிலும், ஏ.டீ.எம். தானியங்கி மையங்களிலும் காணக்கிடைத்த - பொதுமக்கள் திரள் காட்சிகள்:-













500, 1000 பணத்தாள்கள் செல்லாது என அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் (09.11.2016.) முதல், நகரில் 10, 20, 50, 100 ஆகிய சில்லறை பணத்தாள்களுக்கு கடும் கிராக்கி இருந்தது.

வாகனங்களுக்கு பெட்ரோல் போடச் சென்றால், “500 ரூபாய்க்கும் பெட்ரோல் போடுறதுன்னா போடுங்க! சில்லறையெல்லாம் தர இயலாது!” என்று கூறப்பட்டதாகவும்,

பலசரக்குக் கடைகளிலும், உணவகங்களிலும் வாங்கப்பட்ட / உட்கொள்ளப்பட்ட பொருட்களுக்கு சில்லறைத் தொகை இல்லையெனில் கடனாகக் கணக்கெழுதி, “அடுத்து வரும்போது சில்லறையாகப் பணத்தைத் தாருங்கள்!” என்று கடை உரிமையாளர்களால் கூறப்பட்டதாகவும் பொதுமக்கள் கூறினர்.

இந்நிலை காரணமாக நகரில் பணப்பரிமாற்றம் மிகவும் குறைந்து, 500 ரூபாய், 1000 ரூபாய் பணத்தாள்களைக் கட்டுக்கட்டாக வைத்திருப்போரெல்லாம் - 10, 20, 50, 100 பணத்தாள்களை வைத்திருப்போரை புருவமுயர்த்தி வியப்புடன் நோக்கியது நகருக்குப் புதிய காட்சி.

இவற்றுக்கிடையே, நன்கு மழைபெய்து - சாலையோரங்களில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், 09.11.2016. அன்று இரவில் காயல்பட்டினம் - ஸீ கஸ்டம்ஸ் சாலை - அல்ஜாமிஉல் அஸ்ஹர் முனையில் நகரின் ஒரு ‘குடி’மகன் கோபத்தில்,

“.............. (அச்சில் கோர்க்க இயலாத சொற்கள்) ஐநூறு ரூவா செல்லாதாம்... டாஸ்மாக்குல போயி ரூவாய குடுத்தா வாங்க மாட்டேங்குறான்! ............ய!”

என்று கூறியவாறு, தன் கையிலிருந்த 500 ரூபாய் பணத்தாளை, சாலையில் தேங்கியிருந்த மழை நீரில் வீசியெறிந்தார். அதைச் சரியான நேரத்தில் க்ளிக்கியவர் காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு அதை அனுப்பிவிட்டார்.



படங்களுள் உதவி:
K.S.முஹம்மத் ஷுஅய்ப் (ஃபேஸ்புக் வழியாக...) &
அஹ்மத் ஸாலிஹ்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...''பிச்சைக்காரன்'' சொன்னதை செயல்படுத்திய மோடி
posted by mackie noohuthambi (kayalpatnam ) [12 November 2016]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44877

‘‘இந்தியாவில் ஏழைகளே இல்லாமல் போவதற்கு ஒரே வழி ஆயிரம் ரூபாய் நோட்டையும், ஐநூறு ரூபாய் நோட்டையும் ஒழிப்பதுதான்..!’’ - ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற இந்த வசனம் கடந்த சில நாட்களாக முகநூல், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்களில் பெரிய அளவில் டிரெண்டிங் ஆகியுள்ளது. பிரதமர் மோடி அவர்கள் இயக்குனர் சசி அவர்களின் திரைப் படத்தை பார்த்தாரோ என்னவோ....இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை அறிவித்து விட்டு ஜப்பானில் போய் ஒளிந்து கொண்டார்.

8 ஆம் திகதி மாலை 6 மணிக்கெல்லாம் இந்த செய்தி தலைநகர் டில்லியில் கசிந்து விட்டதாக நமதூர் நண்பர் ஒருவரே என்னிடத்தில் சொன்னார் . டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் சிலர் எழுப்பியுள்ள சந்தேகங்கள், நீதிமன்றத்தில் பொது நல வழக்கின் தீர்ப்புக்கள், 9 கோடி ரூபாய் வரை புதிய 2000 நோட்டுக்கள் தேர்தல் கமிஷனால் கைப் பற்றப் பட்டுள்ள செய்திகள் எல்லாமே மோடி அவர்களின் நம்பகத் தன்மையை சந்தேகிக்க வைக்கிறது. அவரே ILLEGAL TENDER என்ற நிலைக்கு ஆளாகி விட்டாரா என்று பலரும் பேசிக் கொள்கிறார்கள். SURGICAL OPERATION என்பதே ஒரு நாடகம் என்கிறார்கள்.

வீதியிலே காணும் காட்சிகளை பார்க்கும்போது அவர் கடத்தல்காரர்களை ஹவாலா காரர்களை தண்டிக்கிறேன் என்று சொல்லி சாதாரண அன்றாட காய்ச்சிகளை பதற வைத்திருக்கிறார், ஏழைகளின் வாழ்வின் விளக்கேற்றி வைக்கிறேன் என்று சொல்லி அவர்கள் மீதே எண்ணையை ஊற்றி பற்ற வைத்திருக்கிறாரோ என்று எண்ண தோன்றுகிறது.

ATM தொடர்ந்து இயங்காத நிலை, வங்கிகளில் குறிப்பிட்ட தொகைகள் கிடைக்காத நிலை எல்லாம் பார்க்கும் போது ஒரு தெளிவான திட்டம் இல்லாமல் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் ஜப்பான் போகுமுன் இதை செய்துவிடவேண்டும் என்ற அவசர கதியில் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிகிறது.

அடுத்தநாள் அமெரிக்கா தேர்தல். அங்கும் ஒரு அதிரடி நடந்திருக்கிறது. எல்லோரும் ஹிலாரி கிளின்டன் ஜனாதிபதியாக வருவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் DONALD TRUMP ஜனாதிபதி ஆகி இருக்கிறார். கோமாளிகள் ராஜ்யத்தில் அறிவாளிகளுக்கு வேலை இல்லை என்று சொல்வார்கள்.

இங்கே ஒரு மதவாதி தலைவராக இருக்கிறார்
அங்கே ஒரு இனவாதி தலைவராகி இருக்கிறார்.....

ஆண்டவா இன்னும் 3 வருடங்கள்..குரங்கு கையில் அகப்பட்ட பூமாலைபோல் இந்த நாட்டில் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ. நீயே மிக அறிந்தவன். .

HASBUNALLAAHU NIUMAL VAKEEL NIUMAL MOULA VA NIUMAN NASEER .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [13 November 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44878

ATM- OUT OF SERVICE
BANK- OUT OF CASH
PUBLIC- OUT OF CONTROL
MODI- OUT OF COUNTRY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Sheikna (Dubai) [13 November 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44879

1வாரம் பணம் வங்கி என்று கூச்சல் வரும் அடுத்து வேறு நிகழ்வுகள் வந்ததும் இதை மறந்து விடுவோம்...இது தான் சாமான்ய மக்களின் வாழ்வு...😏

வெள்ளம் போய்
கன்டைனர் வந்தது
டும் டும் டும் டும் 🐒

கன்டைனர் போய்
சரஜிக்கல் ஸ்டரைக் வந்தது
டும் டும் டும் டும் 🐒

சரஜிக்கல் ஸ்டரைக் போய்
பொது சிவில் வந்தது
டும் டும் டும் டும் 🐒

பொது சிவில் போய்
செல்லாத பணம் வந்தது
டும் டும் டும் டும்🐒

செல்லாத பணம் போய்
இனி என்ன வருமோ??? 🙉
டும் டும் டும் டும்🐒


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. விழிப்போடு இருப்போம்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [13 November 2016]
IP: 5.*.*.* | Comment Reference Number: 44880

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தேரில்
தேர்ந்தெடுத்த மக்கள் தெருவில்

மாறி,மாறி எதையாவது செய்துகொண்டிருந்தாள்
திசைத்திருப்பும் முயற்சிகள்
மக்களைசிந்திக்கவிடுவதில்லை
ஹிட்லரின் வியூகங்கள்

ஆனால் ஏற்கனவே ஹிட்லரையும்,முசோலினியையும் கண்டுகாவுவாங்கியதுதான் இந்தஉலகம் இன்ஸா அல்லாஹ் இந்தக்காவிகளின் வியூகங்கள் தவிடுபொடியாகும்

நம்ரூத்திற்கு செருப்புதான் நிறைவுதந்தது ஃபிர்அவ்னுக்கு நிறைவுதந்தபாடம் உப்புநீரிநாள் செய்யப்பட்டபாடமே

நோட்டுகளால் நிர்ணயிக்கப்பட்ட ஓட்டுக்கள்
இப்பொழுது வெற்றுநோட்டுகளாய் ரோட்டில்

துக்ளக் குற்றவாளிகளை தண்டிக்கத்தவறினார்
குற்றவாளிகள் துக்ளக்கைத்தாண்டித்தனர்

இன்றைய அரசு நிரபராதிகளைத்தண்டிக்கும்
குற்றவாளிகளாக

சூழ்ச்சிகளும் வியூகங்களும் தொடரும்
விழிப்போடு இருப்போம்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by nizam (india) [14 November 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44881

ஒவொரு இந்திய குடிமகன் அக்கவுண்டில் ரூபாய் பதின்னுந்து லட்சம் போடப்படும் என்ற வாக்குறுரிதியை மோடி மீறிவிட்டார் என்று மக்கள் பரவலாக பேசிக்கொள்ள உ பீ தேர்தல் எப்படியாது வெற்றிகொள்ள வேண்டும் என்ற அழுத்தம் காரணமாக இந்த அரசாணை பிறப்பிக்க பட்டுள்ளது

விளைவுகள் கோரக்பூரில் ஒரு மூதாட்டி வங்கியில் கியூவில் நின்றபோது மரணம் வங்காளத்தில் ஒரு குடும்பஸ்ரீ தற்கொலை பீகாரில் மக்கள் திருமண பணம் செல்லாமலாக்கிவிடுமோ என்ற விரக்தியில் மரணம் தானாவில் ஒரு குழந்தை சிகிச்சை பணம் கெட்ட தாமதம் ஆனதால் மரணம் தொழில்கள் முடக்கம் என தொடர்கிறது

இந்தியா டுடே டீ வியில் பிரபல பத்திரிகையாளர் ஸித்தீக்கீ அவர்கள்கூறும் போது திட்டம் வரவேற்கக்கூடியது ஆனால் அதற்கான திட்டமிடல் மிகவும் மோசமாக உள்ளது பொதுவான குற்றச்சாட்டு இந்த திட்டம் யாரை குறிவைத்ததோ அவர்களை வருத்தவில்லை இதற்க்கு சம்பந்தமில்லாத குப்பனும் சுப்பனும் தான் கியூவில் l நின்று சிரமப்படுகிறார்கள் ஆரம்பத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கொண்டுவந்து இருப்பதாக சொல்ல பட்டது தற்போது பிரதமர் கோவாவில் பேசிப்டோது காங்கிரஸ் கட்சியைத்தான் விமரிசித்து இருக்கிறார் ஆகா இது அரசியல் விளையாட்டு என்பது நிரூபணம் ஆகிறது

முடிவாக கடந்த சில தினங்களாக நடந்த விவாதங்கள் கருத்து கேட்புகள் ஆகிவற்றில் அதிகமான மக்கள் சொன்ன கருத்து கருப்பு பணம் ஒழிய வேண்டும் என்றால் வரிவிதிப்பு முறையை எளிமை படுத்த வேண்டும் வரிகட்டுவது அதனால் நமக்குத்தான் திட்டங்களாக்க நன்மை கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் (நீ யா நானாவில் ஒரு கருத்து நினைவுக்கு வருகிறது சுவிட்சர்லாந்து நாட்டில் கடை காரர் பில் கொடுக்காவிட்டால் மக்கள் சண்டைக்கு வந்து விடுவார்களாம் ஏனென்றால் அந்த வரிப்பணம் அந்த பகுதியில் திட்டங்களாக வ்ருவதை மக்கள் கண்கூடாக பார்ப்பார்களாம்) அதற்க்கு இந்தியாவில் ஊழல் ஒழிக்கப்படவேண்டும் அதுவரை இந்த அரசாணை பலனளிக்காது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved