Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:25:23 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19394
#KOTW19394
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 3, 2017
திமுகவிலிருந்து வெளியேறிய நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள், தெற்கு மாவட்டச் செயலாளர் முன்னிலையில் மீண்டும் இணைவு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3354 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த 2013ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியிலிருந்து வெளியேறி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் துணைத்தலைவரும் – 11ஆவது வார்டு உறுப்பினருமான எஸ்.எம்.முகைதீன், 16ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் எஸ்.ஏ,சாமு ஷிஹாபுத்தீன், SDPI ஷேக் உள்ளிட்டோர் – 02.07.2017. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில், திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும் – திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தனர்.







திமுக மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் எஸ்.ஐ.காதர், மாவட்ட முன்னாள் பிரதிநிதி ஏ.எஸ்.காதிர் ஸாஹிப், காயல்பட்டினம் நகர்மன்ற 17ஆவது வார்டு முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் உள்ளிட்டோர் இதன்போது உடனிருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எண்ணத்தில் என்னடி மாற்றம் இது இப்பித்தார் நிகழ்ச்சி செய்த மாயம்...
posted by mackie noohuthambi (kayalpatnam ) [03 July 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45639

இஃப்த்தார் நிகழ்ச்சியை நடத்தி கச்சிதமாக காய் நகர்த்திய அண்ணாச்சி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எனது முந்தைய பதிவை பார்ப்பவர்களுக்கு தெரியும் நான் சொன்னது எத்தனை உண்மை என்று.

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் அரசியல் காற்றில் ஆட்சியும் பறக்கும் நொவ் THE BALL IS IN DMK'S COURT மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ''அம்மா அம்மா எங்கள் அம்மா அம்மா என்றால் அறிவு என்று கனல் காக்கும் பாடல்கள்'' பட்டி தொட்டியெல்லாம் வைரலாக வைரஸாக பரவி கலைஞரின் சிம்மாசனத்தையே சிம்ம சொப்பனமாக்கி காட்டியது ஒரு காலம்.

ஆனால் அந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள தவறி விட்டார்கள் அதிமுக பொது செயலாளர் சசிகலா அவர்கள் - அம்மாவின் அன்பு சகோதரி . ''பாட்டும் நானே பாவமும் நானே'' என்று எல்லாமாக ஆக பார்த்த பார்வதி தேவியாக நினைத்ததுதான் வினையாக வந்து முடிந்ததது.''நான் சக்தியாக இருக்கிறேன் நீ சிவனாக இரு'' என்று பன்னீர் செல்வத்தை முதல்வராக தொடர்ந்து இருக்க விட்டிருந்தால் ''சக்தி இல்லையேல் சிவன் இல்லை'' என்று உரக்க சொல்லி இருக்கலாம். பன்னீர்செல்வம் இப்படி ருத்ரதாண்டவம் ஆடியும் இருக்க மாட்டார். என்ன செய்ய எல்லாம் ஈசனின் திருவிளையாடல்...

கலைஞர் அழகாக சொல்வார்.

தென்றலை தீண்டியதில்லை நான்
நெருப்பை தாண்டி இருக்கிறேன்...

இப்போது அனிதா காட்டில் '' மழை''
கலைஞர் வீட்டில் ''இலை''..

மழை அழகா வெயில் அழகா
நீ கோபப்பட்டால் வெயில் அழகு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [03 July 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45640

பதவிக்காக கட்சி மாறிவந்தவர்கள், அதிமுகாவில் எதிர்பார்த்தது கிடைக்காததால் பதறிப்போய் மீண்டும் திமுகாவில் இணக்கம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Rதி.மு.கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது!..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [03 July 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45641

தி.மு கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தாய் கழகத்திற்கு வந்துதான் ஆகணும்.

விளக்கின் வெளிச்சம் நாடி விட்டில்பூச்சிகளாய் சென்றவர்கள், வீழ்ந்தவர்கள்தான் அதிகம்,உண்மைநிலை அறிந்து தங்கள் வீட்டிற்கே திரும்பி வந்தவர்கள் சிலரே!

தி.மு கழகம் அழிந்துவிடும்,அல்லது அழித்துவிடலாம் என்று காமராஜர் காலம் முதல் ஜெயலலிதா வரை கனவுலகில் மிதந்தார்கள்,பல கனாக்கோட்டைகள் கட்டினார்கள்.முடிவு கட்டியவர்கள் எல்லாம் காணாமல் போனார்கள்,அவர்கள் கட்சிகள் கடலில் கரைகின்ற கசாயம்போல் கரைந்து கொண்டிருக்கிறது!

2G ,5G,10G என்ற எந்த பாச்சாவும் பலிக்கவில்லை, பழித்தவர்கள்தான் பாழ்சிறையில் பவ்வியமானார்கள்!

கொள்கை கோட்பாடு ,சீரான சுதந்திரத்தலைமை, எமக்குப்பின் எந்த ஒருவரும் தலைமை தாங்க தகுதியுள்ளவர்கள் என்ற ஜனநாயக மாண்பு, தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை சமுதாய நலனுக்காக உழைக்கும் ஒரு வீரிய இலட்சியம் ஆகிய அத்தனை புண்ணிய நோக்கத்தை அடிப்படையாக கொண்ட எந்த அமைப்பும் அழிந்துவிடுவதில்லை,அதே நிலையிலுள்ள தி.மு.கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியவில்லை, அழிக்கவும் முடியாது!

தற்போது நாட்டில் ஒரு பாசிச சக்தி பரவி வருகிறது, சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்திற்கு இது ஒரு சோதனைகாலம். தற்போதுள்ள அரசினால்(எந்த அணி என்று தெரியவில்லை)நமக்கு இமியளவுகூட பாதுகாப்பு இல்லை.!

முஸ்லிம்கள் முழுஉரிமையுடன் நடமாட தடை ,உடையில் கூட கட்டுப்பாடு இன்னும் எந்தெந்த வழியில் நம் சுதந்திரத்தை பறிகொடுக்க முடியுமோ,அத்தனையும் பறிபோகும் அளவிற்கு காவிகட்சி தலைமை ஒரு சட்டம் போட்டால்,அச்சட்டத்திற்கு சாஷ்ட்டாங்கமாய் விழுந்து வணங்கி வரவேற்று ஒப்புதல் அளிக்கக்கூடிய ஒரு கோழை கும்பலின் ஆட்சியின் கீழ்தான் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்!

இதற்கு பிறகும் நம்மில் சிலர் இந்த அவல ஆட்சிக்கு ஆதரவாக இருப்பார்களேயானால்,அவர்கள் முற்றிலும் தாங்கள் ஏற்ற இனத்தாலும்,மதத்தாலும்,மார்க்கத்தாலும் முலுமை பெறாத பச்சோந்திகளாகத்தான் இருப்பர்! .

நம் சிறுபான்மையினரின் வாழ்வாதார உரிமையை பெற்றுதர பாடுபடக்கூடிய கட்சியாகவும்,பாசிச கட்சிக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவும் நிகழக்கூடிய கட்சியாகிய தி.மு கழகத்தை நாம் எந்தெந்த வழியில் வலிவு பெறச்செய்வோமோ,அந்த வழிதான் நம் வாழ்வு செம்மைபெறும் ஒரு வடிகால் வழியாகும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன் ,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Vilack sma (jeddah) [03 July 2017]
IP: 176.*.*.* Ukraine | Comment Reference Number: 45642

ரொம்ப அவசியம் . இவர்கள் இணைப்பால் தி மு க வலுப்பெற்று விட்டதால் , திருமதி மீரா குமாரி அவர்கள் ஜனாதிபதி ஆவது உறுதியாகி விட்டது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved