Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:10:30 PM
ஞாயிறு | 6 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1893, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:35
மறைவு18:06மறைவு20:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19666
#KOTW19666
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 8, 2017
தூ-டி வந்த முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் சந்திப்பு!! படுகொலை செய்யப்பட்ட காயலர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4238 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

SRM என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆம்னி பேருந்தில், காயல்பட்டினத்திலிருந்து சென்னைக்குப் பயணித்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் மீராத்தம்பி, தூத்துக்குடியருகில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, மது போதையிலிருந்த இருவரால் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், நேற்று தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம், படுகொலை செய்யப்பட்ட காயலரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி, மனிதநேய ஜனநாயகக் கட்சியின் நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-

படுகொலை செய்யப்பட்ட காயல்பட்டினம் இளைஞருக்கு இழப்பீடு வழங்கக் கோரி, முதலமைச்சருடன் மஜக நிர்வாகிகள் நேரில் சந்திப்பு :

இன்று (07-09-2017) தூத்துக்குடி வருகை புரிந்த தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி K.பழனிச்சாமி அவர்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் அ.ஜாஹீர்உசேன் தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.

26-08-2017 அன்று திருச்செந்தூரிலிருந்து சென்னைக்கு SRM பேருந்தில் காயல்பட்டினம் இளைஞர் மீரா தம்பி பயணம் செய்த போது, அதே பேருந்தில் முன்பதிவில்லாமல் குடிபோதையில் பயணம் செய்த இருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மீரா தம்பி படுகொலை செய்யப்பட்டார்.

இத்துயரச் சம்பவத்தை அறிந்தவுடன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செயலாளர் என்.ஏ. தைமிய்யா அவர்கள் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி MLA அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து சம்பந்தப்பட்வர்களை உடனடியாக கைது செய்ய மஜக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மஜக சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி MLA அவர்கள், கொலை செய்யப்பட்ட மீராதம்பிக்கு அரசின் சார்பில் இழப்பீடு வழங்குமாறு தொலைபேசியில் வலியுறுத்தினார்.

படுகொலைசெய்யப்பட்ட மீராதம்பியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கக்கோரியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்கக்கோரியும், மற்றும் படுகொலைக்கு காரணமான SRM பேருந்து நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரிடம் தூத்துக்குடி (தெ) மாவட்டச் செயலாளர் ஜாஹிர் ஹுசைன் நேரில் வலியுறுத்தினார். பின்னர் கோரிக்கை மனுவும் முதல்வரிடம் வழங்கப்பட்டது.



மஜக சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை உற்றுநோக்கிய முதல்வர், இழப்பீடு மற்றும் அரசுவேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்தார். மேலும் SRM பேருந்து நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் மாவட்ட செயலாளர் ஜாஹிர் ஹுஸைன், மாவட்ட துணைசெயலாளர் முகம்மது நஜீப், மாவட்டதொழிலாளர் அணி செயலாளர் ராசிக் முசம்மில், கொலை செய்யப்பட்ட மீராதம்பியின் தகப்பனார் பஹ்ருதீன், மீரா தம்பியின் சகோதரி சுலைஹா ஆகியோர் முதலமைச்சரை சந்தித்தனர்.

கோரிக்கை நிறைவேறும் வரும் பயணம் தொடரும்..... இறைவன் நாடினால்

- மஜக ஊடகப் பிரிவு


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இழப்பீடும் வேலை வாய்ப்பும்
posted by mackienoohuthambi (kayalpatnam ) [08 September 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45780

சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் முயற்சியில் மீரான்தம்பி அவர்கள் குடும்பத்துக்கு கணிசமான இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் உறுதி படுத்தப் பட்டால் தமீமுன் அன்சாரி அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதில் நமக்கு மகிழ்ச்சி ஏற்படும். மேலும் இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையை சமுதாயத்துக்காகப் பயன்படுத்திக் கொள்ள அவர் தயங்கள் கூடாது. கட்சி மாறுவது அணி மாறுவது என்பது தமிழக அரசியலுக்கு புதிதல்ல.

யாருடனும் மிக நெருக்கமாகவும் இருக்காதீர்கள்
யாருடனும் மிக இறுக்கமாகவும் இருக்காதீர்கள்
ஏனெனில் பிறிதொரு காலத்தில் நெருக்கமாக இருப்பவர் இறுக்கமாக மாறிவிடுவார் இறுக்கமாக இருப்பவர் நெருக்கமாகிவிடுவார் என்ற கருத்துப் பட நபிகள் நாயகம் திருவாய் மலர்ந்தருளிய மணிமொழி ஒன்று படித்தேன்.

எனது அன்பு நண்பர் மறைந்த SK அவர்களிடம் அவரது நண்பர் ஒருவர்..''அடே, இப்படி ஒவ்வொரு கட்சியிலும் இருக்கிறாயே, பிஜேபி யிலும் இருப்பாயா'' என்று கேட்டாராம். அவர் அதற்கு பதில் சொன்னார் ''இந்த ஊருக்கும் இஸ்லாமிய சமுதாயத்துக்கும் அந்த கட்சி உதவியாக இருந்தால் அந்த கட்சியிலும் இருப்பேன்'' என்றாராம். ''நான்'' ''எனக்கு'' என்று சிந்திக்காமல் இந்த ஊர் நமது சமுதாயம் என்று சிந்தித்த ஒரு அற்புதமான மண்ணின் மைந்தர் மறைந்தாலும் நமது உள்ளமெல்லாம் நிறைந்து வாழும் SK அவர்கள். தமீமுன் அன்சாரி அவர்களுக்கு SK அவர்கள் ஒரு ROLE MODEL

அல்லாஹ் உங்கள் கோரிக்கை வெற்றி பெற செய்து மீரான்தம்பி அவர்கள் குடும்பத்தில் விளக்கேற்றி வைத்த நன்மையையும் தருவானாக. ஆமீன். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Nizam (India) [10 September 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45781

இந்த கொலை நடந்து சற்றேற குறைய ஒரு மாதத்தை நெருங்கியும் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இதை சி பி சி ஐ டி பிரிவுக்கு மாற்றி துரிதமாக குற்றவாளிகள் தண்டிக்கபட வேண்டும் இதை காயல் இயக்கங்கள் முன்னின்று அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் இது பற்றிய தகவல்களை அவ்வப்போது காயல் நெட் பகிர்ந்து கொண்டால் நல்லதாக இருக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved