Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:07:16 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21169
#KOTW21169
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 8, 2018
காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் விட்டுச் சென்ற பணம் எவ்வளவு? “நடப்பது என்ன?” குழுமம் தகவலறிக்கை!! (பாகம் 10 – நிறைவுப் பாகம்!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1192 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

[பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10 | }

காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் நகர்மன்ற முன்னாள் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் எவ்வளவு பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறித்த தகவல்களை உள்ளடக்கி, “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-

இத்தொடரின் பாகம் 1 முதல் பாகம் 9 வரையில் நாம் கண்டது போல், காயல்பட்டினம் நகராட்சியின் 2011-2016 நிர்வாக காலத்தில், குறைந்தது 50 கோடி ரூபாய் மதிப்பிலான செலவீனங்கள் மேற்கொள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தின் நகர்மன்றத்ததலைவர் திருமதி ஐ,.ஆபிதா சேக், கஜானாவில் விட்டுச்சென்ற தொகை - நடந்துக்கொண்டிருந்த, நிர்ணயம் செய்யப்பட்ட பணிகளுக்கான தொகைகள் போக - சுமார் 6 கோடி ரூபாய் மட்டுமே! ஹாஜி வாவூ செய்யது அப்துர் ரஹ்மான், தன் பதவி காலத்தில் விட்டுச்சென்ற பணத்திற்கு ஏறத்தாழ நிகரான தொகை இது!!

இந்த 6 கோடி ரூபாயில் பெருவாரியான பங்கு - SFC மானிய வகையை சார்ந்தது. அந்த மானிய கொள்கைப்படி, முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள (PRIORITIES) பணிகளுக்கே அந்த தொகையை செலவு செய்ய இயலும்.

உண்மை இவ்வாறிருக்க - ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும் - 15 கோடி ரூபாய், 25 கோடி ரூபாய், 50 கோடி ரூபாய் நிதியினை, செலவு செய்யாமல், திருமதி ஆபிதா சேக், காயல்பட்டினம் நகராட்சி கஜானாவில் விட்டு சென்றார் என்ற பொய்யான பரப்புரையை ஏன் மேற்கொண்டார்கள்?

இந்த கேள்விக்கான பதில் - காயல்பட்டினம் நகரின் பஞ்சாயத்து தலைமைக்கான நீண்ட வரலாற்றில் புதைந்துள்ளது.

காலம்காலமாக - காயல்பட்டினம் உள்ளாட்சி அமைப்பின் தலைமை, நகரின் செல்வந்தர்கள் அலங்கரிக்க, அவர்களின் பிறப்புரிமையாகவே பார்க்கப்பட்டு வந்தது. அந்த பொறுப்பினை ஏற்று - நகர் நலப் பணிகளைச் செய்ய, சாமானியர்கள் எவரும் கனவு கூட காண இயலாது. பஞ்சாயத்து / நகராட்சி உறுப்பினர்கள் போன்ற அதிக பணி எதிர்பார்ப்பு உள்ள பொறுப்புகள், நகரின் சாமானியர்களுக்கு - ஆதிக்கசக்திகளின் எழுதப்படாத விதியாக - ஒதுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலை 2011 இல் மாறியது.

அவ்வாண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில், ஜனநாயக விரோத அமைப்புகளும், நகரின் ஆதிக்க சக்திகளும், நிலப்பிரபுத்துவவாதிகளும், ஊழலில் ஊறிய அரசியல்வாதிகளும், திருமதி ஐ.ஆபிதா சேக் அவர்களிடம் படுதோல்வியை தழுவினர். அந்த தோல்வியில் இருந்து இன்று வரை அவர்கள் மீளவில்லை.

பணம், அதிகாரம், ஆள்பலம் எவ்வளவு இருந்தாலும், நேர்மை துணையில்லை என்றால் நிலையான வெற்றிக்காண இயலாது என்ற வாழ்நாள் பாடத்தை அந்த தேர்தல் - அந்த வர்க்கத்திற்கு - புகட்டியது.

2011 தேர்தலுக்கு பிறகு, அந்த கூட்டம் - பெருவாரியான, நகர்மன்ற உறுப்பினர்களை கையில் எடுத்துக்கொண்டு, ஆபிதா சேக் தலைமையிலான நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து, அவரை பதவி விலக செய்ய, முயற்சி செய்தது. அதிலும் தோல்வியை தழுவியது!

ஊழலில் தழைத்த, இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்த IAS அதிகாரி ஒருவரின் ஆலோசனைப்படி, நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்தது அந்த கூட்டம்! பணம், அதிகாரம் மமதை - சில நேரங்களில் கண்ணை மறைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட நகர்மன்றத்தலைவர் மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டு வர இயலாது என்ற சட்டவிதி - அந்த கூட்டத்திற்கு தெரியாமல் போனது!! அவர்களின் அந்த முயற்சியினை உயர்நீதிமன்றம் தடுத்தது. அந்த கூட்டம் மீண்டும் தோல்வியை தழுவியது!

பிறகு, நகர்மன்றத் தலைவரை புறந்தள்ளிவிட்டு - துணைத்தலைவர், உறுப்பினர்கள் தலைமையில் தங்கள் காரியங்களை சாதிக்கலாம் என முயற்சி செய்தது, அந்த ஆதிக்க கூட்டம். அதிலும் தோல்வியை கண்டது!

ஆதிக்க சக்திகளுக்கு எதிரான இந்த முக்கிய போராட்டங்களுக்கு மத்தியிலும், சில பணிகள் சில காலம் தடைபட்டாலும், பல பணிகள் நடைபெற்றன. குறிப்பாக - நகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம், இரண்டாம் குடிநீர் திட்டம், பல சாலைகள், மழைநீர் வடிகால்கள், அம்மா உணவகம், திடக்கழிவு திட்டங்கள் போன்றவை! முக்கியமாக - நம் வரிப்பணத்தில் இயங்கும் நகராட்சி குறித்த விழிப்புணர்வு, ஆர்வம் - அதிகமான மக்களை, இந்த வெளிப்படையான நிர்வாக காலகட்டத்தில் சென்றடைந்தது.

இந்த பின்னணியில் தான், 2011-2016 காலகட்டத்தில் நகராட்சியில் ஒரு பணியும் நடக்கவில்லை என்று மேற்கொள்ளப்படும் பொய்யான பரப்புரையை நாம் பார்க்கவேண்டும்.

காயல்பட்டினம் வரலாற்றில் - 2011 உள்ளாட்சி தேர்தல், ஒரு திருப்புமுனை.

அந்த தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டம், அடுத்து வரும் தேர்தலில் - மீண்டும் தலைதூக்க முயற்சி செய்கிறது.

மக்களை ஆளவேண்டியது மக்களா அல்லது குறுகிய அதிகார வட்டமா?

இது தான் நம் அனைவரின் முன் உள்ள கேள்வி. இதற்கான பதிலை, கண்டிப்பாக காலம் சொல்லும்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும்!



இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]

[பதிவு: டிசம்பர் 8, 2018; 9:30 am]
[#NEPR/2018120801]


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[பாகம் 01 | பாகம் 02 | பாகம் 03 | பாகம் 04 | பாகம் 05 | பாகம் 06 | பாகம் 07 | பாகம் 08 | பாகம் 09 | பாகம் 10]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்!
இங்கு சொடுக்கவும்
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
டிச. 06 நள்ளிரவில் இதமழை!  (7/12/2018) [Views - 1223; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved