Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:24:04 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21449
#KOTW21449
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுன் 2, 2019
இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்றப் பொதுக்குழு!! உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1970 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம், 09.05.2019. வியாழக்கிழமையன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர். இதுகுறித்த செய்தியறிக்கை:-

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 14-ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, மேமாதம் 09 ஆம் நாளன்று ,வியாழக்கிழமை 5.30 மணியளவில்,அபூதபீ Ruchi Restaurant – Hamdhan street(Behind Al Mariah Mall) ஹாலில் மன்றத் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் தலைமையில், நடைபெற்றது.

இஃப்தார் நிகழ்ச்சியில் பேரீச்சைபழம் மற்றும் சுவை மிகுந்த பழ வகைகள், வடை, சமோசா, குளிர் பானங்கள், இனிப்பு வகைகள் ,மற்றும் தேனீர் பரிமாறப்பட்டன.

அதன் பின்னர் மஃரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 7:45 மணியளவில் மன்ற 14- ஆவது பொதுகுழு கூட்டம் ஆரம்பமானது.

இந்நிகழ்ச்சியை மன்ற செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் இஷாக் ஆலிம் மஹ்ழரீ அவர்கள் அழகான முறையில் தொகுத்து வழங்கினார்கள். இளவல் ஹபீப் ரஷாத் இறை வசனம் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.

வரவேற்பு மற்றும் மன்றத்தலைவர் உரை

வந்தோரை அகமகிழ்வோடு மன்றத் தலைவர் எம்.எம்.மக்பூல் அஹ்மத் அவர்கள் அனைவரையும் வரவேற்று தனதுரையைத் துவக்கிய அவர், மன்றச் செயல்பாடுகளில் குறிப்பாக மன்ற மூலம் செய்து வரும் சேவைகளை நினைவுக்கூறி இவ்வாண்டு மன்றம் மற்றும் உறுப்பினர்களின் தனியான அனுசரணையால் 131குடும்பங்களுக்கு நோன்பு சமையல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

மேலும் தாய்லாந்து மன்றத்தோடு இணைந்து ஆண்டுதோறும் நமதூர் இறையில்லங்களில் பணிபுரியும் இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை மற்றும் கத்தார் நலமன்றத்துடன் கைகோர்த்து ஏழை எளிய மாணவ /மாணவிகளின் பள்ளிச்சீருடை வழங்கிட பொருளுதவி செய்திட்ட அபூதபீ காயல் நலமன்றத்தின் உறுப்பினர்கள் மற்றும் இதற்கான முயற்சிகளில், பணிகளில்ஈடுபட்ட அனைவர்களுக்கும்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.



ஆலிம் இஷாக் மஹ்ழரீ உரை

தொடர்ந்து மன்றப் செயற்குழு உறுப்பினரான மவ்லவீ ஹாஃபிழ் இஷாக் மஹ்ழரீ அவர்கள் நமது அனைத்து கருமங்களும் நல்ல முறையில் அமைந்திட, நம் செல்வங்களை - நம்மோடு மட்டும் இருத்திக்கொள்ளாமல், பிறருக்கும் சென்றடையச் செய்ய வேண்டுமென்றும், உரிய நேரத்தில் உடனுக்குடன் அவர்களுக்கு உதவுவது அனைவர் மீதும் கடமை என்றும் உறுப்பினர்கள் அனைவர்களும் ஆலோசனைகளை மன்ற நிர்வாகிகளிடம் அவ்வப்போது தெரிவித்து மன்றத்தின் திட்டங்களுக்கு துணைநிற்க்குமாறு கேட்டுக்கொண்டார்..

(2019) ரமழான் நோன்பை முன்னிட்டுஅபூதபீ காயல் நல மன்றத்தின்சார்பில் 131 ஏழைக் குடும்பத்திற்கு நோன்பு காலஅத்தியாவசிய உணவுப்பொருட்களும் அத்துடன்பெருநாளை முன்னிட்டு இவர்கள்அனைவருக்கும் 1/2 கிலோ ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது.

நன்றியுரை:

மன்றத்தின் மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் அவர்கள் இஃப்தார் மற்றும் பொதுக்குழ அழைப்பினை ஏற்று குடும்ப சகிதம் வருகை தந்த அனைவர்களுக்கும் மன்றதின் சார்பாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இறுதியாக ஹாஃபிழ் F.சாகுல் ஹமீது அவர்கள் துஆ இறைஞ்ச,கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.

பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற உறுப்பினர்களும், குடும்பத்தினரும் திரளாகக் கலந்து சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!

இஃப்தார் மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும், https://photos.app.goo.gl/KvzfJWYwdL423Xzu5 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம்.

அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...

தகவல்:
A.R.ரிஃபாய்
(மக்கள் தொடர்பு & செய்தி/ ஊடகத்துறை பொறுப்பாளர்)

படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...BUFFET IS AGAINST ISLAMIC IDEOLOGY
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 June 2019]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46420

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் மன நிறைவை தந்த விழாவில் BUFFET முறையில் உணவு வழங்கப்பட்டது என்ற செய்தி சற்று முகம் சுளிக்க வைத்தது. நபிகள் நாயகம் அவர்கள் நின்று கொண்டு தண்ணீர் குடிப்பதை கூட அனுமதிக்கவில்லை. ZAM ZAM தண்ணீர் கூட ஒரு சமயத்தில் நின்று குடித்தார்களே தவிர அதை வழக்கமாக்கி கொள்ளவில்லை நாடறிந்த நாவலர் உலமாக்கள் ஹாபிஜாக்கள் நிறைந்து காணப்படும் இந்த மன்றத்தில் இந்த கிறிஸ்தவர்கள் பழக்கம் நம்மவர்களை எப்படி தொற்றிக் கொண்டது என்று தெரியவில்லை இடம் இல்லை நிர்ப்பந்தம் என்றெல்லாம் நாம் சொல்லி நபிகள் நாயகத்தின் சொல்லை சுன்னத்தை புறக்கணிக்க முடியாது. நான் இங்கு அதை குறிப்பிட்டிருப்பது உங்களை கண்டிக்கும் நோக்கமில்லை இதை கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை என்பதால்தான் எனது சுன்னத்துக்கள் மங்கிப் போன காலத்தில் எவர் எனது ஒரு சுன்னத்தை எடுத்து நடப்பாரோ அவருக்கு நூறு ஷஹீதுகளின் நன்மை உண்டு என்று ஓர் ஹதீஸ் படித்தேன். .படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எல்லோருக்கும் எனது இதயம் நிறைந்த ஈகை திருநாள் வாழ்த்துக்கள்.

VA KULLU VA AAM ANTHUM BI KHAIR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. விளக்கம் கேட்ட பின் விமர்சித்திருக்கலாம்!
posted by S.K.Salih (Kayalpatnam) [03 June 2019]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 46421

இச்செய்தியின் கீழ் மக்கீ நூஹுத்தம்பி மாமாவின் கருத்தைப் படித்தேன். “பஃபே முறை கிறிஸ்துவ கலாச்சாரம்... நின்றுகொண்டு சாப்பிடுவது நமக்குத் தடுக்கப்பட்டது” என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.

நானும் நமதூரில் பல திருமணங்களில் நடத்தப்பட்ட எத்தனையோ பஃபே முறை உணவு ஏற்பாடுகளில் பங்கேற்றிருக்கிறேன். பஃபே என்பது எனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தத்தை நானே தேர்ந்தெடுத்து உட்கொள்வது என்றுதான் நான் புரிந்திருக்கிறேன். அப்படி பங்கேற்ற எந்த விருந்திலும் நான் நின்றுகொண்டு சாப்பிட்டதில்லை. காரணம், அங்கேயே அலங்கரிக்கப்பட்ட மேசைகளும், அதைச் சுற்றி இருக்கைகளும் இருந்தன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...Buffet உணவு முறையும் சுன்னத்தை பின்பற்றுதலும்
posted by HUSAIN NOORUDEEN (Kayalpatnam ) [04 June 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46423

மக்கி மாமா அவர்களின் ஆதங்கம் நியாயமாக இருந்தாலும், அவர்கள் கவலை படும்படியாக நின்று சாப்பிடும் நிலையை எமது அபூதபீ காயல் நலமன்றம் ஏற்படுத்தவில்லை.

தம்பி SK ஸாலிஹ் குறிப்பிட்டுள்ளது போல் வந்தவர்கள் அனைவருக்கும் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் இந்த Buffet ஏற்பாடு நமக்கு மட்டும் செய்யப்பட்டிருந்தாலும், நமது மன்றத்தினர் கலைந்ததும் பிறர் வந்து உணவு அருந்த தொடங்கினர். எனவே உணவு வீணாகாமல் தடுக்கப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...விமர்சனம் அல்ல விளக்கம்
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 June 2019]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 46425

மருமகன் ஸாலிஹ் ஹுசைன் நூருதீன் ஆகியோருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக. குறிப்பிட்டது விமர்சனம் அல்ல விளக்கம்.

oxford dictionary இப்படி சொல்கிறது.... buffet a long table where we can get food usually cold to be eaten standing or sitting down somewhere else.

நான் கண்டா இடங்களில் இலங்கையில் தம்மாமில் ரியாத்தில் இப்படி நின்று கொண்டு தின்பதையும் அதற்கான light music இசைக்கப்படுவதும் தான் . நிலைமை அந்த அளவுக்கு இங்கு போகவில்லை என்ற ஹுசைய்ன் நூருதீன் அவர்களின் விளக்கம் ஏற்புடையதே..

மனதில் பட்டத்தை சொல்வதில் தவறில்லை இதற்கெல்லாம் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்க தேவை இல்லை. பொதுவாகவே இது மேலை நாட்டு கலாச்சாரத்தில் வந்ததுதான். நாம் தேவைக்கேட்ப அதை மாற்றிக் கொண்டால் சரிதான்.

நான் குறிப்பிட்டவாறு எதுவும் எதிர்காலத்தில் நடந்து விடக் கூடாது என்பதில் நீங்கள் விழிப்பாக இருக்கலாம். வேறொன்றும் இல்லை. யாருடைய மனமானது இந்த பதிவைக் கண்டு புண் பட்டால் அதற்காக வருந்துகிறேன் . மாறாக நான் சொல்வதிலும் தவறில்லை என்று மனம் பண்பட்டால் அதற்காக அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறென்.

நன்றி ஈத் முபாரக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புரிதலுக்கு நன்றி மாமா...!
posted by S.K.Salih (Kayalpatnam) [07 June 2019]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 46428

மாமா... தங்கள் முதல் கருத்தின் தொணி குற்றஞ்சாட்டுவது போல் இருந்ததாலேயே - அம்மன்றத்தினர் மனம் வருந்தும் முன் என் மனப்பதிவை வெளிப்படுத்தினேன்.

அதையே தாங்கள், “நின்றுகொண்டு சாப்பிட்டிருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும்” என்ற தொணியில் கூறியிருந்தால் இத்தனை கருத்துப் பரிமாற்றங்களுக்கு அவசியமிருந்திருக்காது.

தங்களது இரண்டாவது கருத்திலேயே தங்கள் மனப்பதிவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

எனினும் - நிறைய வாசிப்பும், பட்டறிவும் கொண்ட தாங்கள் சிறியவனான எனது கருத்தையும் கருத்திற்கொண்டு, புரிதலை வெளிப்படுத்தியிருப்பது தங்களது பெருந்தன்மை.

புரிதலுக்கு நன்றி மாமா...

ஜஸாக்கல்லாஹு கைரா...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved