Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:29:27 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6259
#KOTW6259
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 20, 2011
8ஆம் வகுப்பு தனித்தேர்வெழுதிய ஹாமிதிய்யா ஹிஃப்ழுப் பிரிவு மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3454 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவிலிருந்து, 8ஆம் வகுப்பு தனித்தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மத்ரஸா நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே!

“அருள்மறை திருக்குர்ஆனை ஹிஃப்ழு (மனனம்) செய்துகொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்தல்” என்ற திட்டத்தின் கீழ், இவ்வாண்டு ESLC (8ஆம் வகுப்பு) அரசுத்தேர்வெழுதிய எம் மத்ரஸா மாணவர்கள் அனைவரும் இறையருளால் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது எம் மத்ரஸாவின் 100 சதவிகித தேர்ச்சியாகும்.

இவர்களுள் சிலர், புனித குர்ஆன் மனனத்தை முடித்து, வரும் 23.05.2011 அன்று ஸனது (பட்டம்) பெறவுள்ள நிலையில், 10ஆம் வகுப்பு SSLC தேர்வையும் தனித்தேர்வர்களாக எழுதி, தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களனைவரும் வெற்றி பெற தாங்கள் யாவரும் வல்ல இறையோனிடம் பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்பானவர்களே! இந்த அரிய வாய்ப்பு உங்கள் மக்களுக்கும் கிடைக்கட்டுமே...?

இறைமறை திருக்குர்ஆன் அவர்களின் இதயங்களிலும் பதியட்டுமே...??

திருமறை குர்ஆனை மனனம் செய்துகொண்டே அரசுத் தேர்வும் எழுதட்டுமே...???

அதற்கு அரிய சந்தர்ப்பம் இது! ஆம், எம் மத்ரஸாவில் புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நிறைவான விளக்கம் பெற்றிட நேரில் வாருங்கள் என உங்களை உள்ளன்போடு அழைக்கிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
மத்ரஸா நிர்வாகம் சார்பாக,
ஹாஃபிழ் காரீ சொளுக்கு S.M.S.தவ்ஹீத்,
ஆசிரியர்,
ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம்,
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை வளாகம்,
காயல்பட்டினம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வாழ்த்துக்கள்
posted by K.A.FAIZAL (chennai) [20 May 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 4563

அஸ்ஸலாமு அலைக்கும்.தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இறைமறையை இதயத்தில் பதிய வைத்தால் உலகில் மற்ற அனைத்து காரியங்களும் அற்பமானவை என்பதை இந்த மாணவ கண்மணிகள் இவ்வுலகிற்கு உணர்த்திஉள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் மத்ரஸா ஹாமிதிய்யாவின் வெற்றி பாதைகள் மறுமை வரை தொடரட்டும்.வல்ல நாயன் அருள் புரிவானாக.ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. masha allah
posted by sulaiman (kayalpatnam) [20 May 2011]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 4567

masha allah, they all succeed in their life by hifz ul quran, and insha allah they will be top of their upcoming 10th and +2..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஹிப்ழ்
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [21 May 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 4577

எட்டாம் வகுப்பு தேர்வில் 100% தேர்ச்சி பெற்றது பெரிய ஆச்சரியம் அல்ல. இவர்களால் IAS தேர்வையே மிக சுலபமாக பாஸ் பண்ண முடியும்.

தங்கள் அறியாத அரபி மொழியில் உள்ள, குரானையை ஒரு தவறின்றி அப்படியே மனதில் ஏற்ற சக்தி பெற்ற இவர்களுக்கு, இவ்வுலக தேர்வு எல்லாம் வெறும் ஈசி.. குரானை தங்கள் மனதில் ஏற்றிய இந்த இளவல்களுக்கு, அனைத்தையுமே, அல்லா வெகு சுலபமாக ஆக்கி வைப்பான்.

அல்லாஹ் உதவியால் வாழ்வில் எல்லா நலமும் பெற்று வாழ, வாழ்த்துகளும், துஆக்களும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. திருக்குர்ஆனை சுமந்திருக்கும் நெஞ்சமல்லவா
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [21 May 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 4582

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

8ஆம் வகுப்பு அரசுத்தேர்வெழுதி தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மற்றும் 100 சதவிகித தேர்ச்சி பெறச்செய்திட்ட மதரஸாவின் நிர்வாகத்திற்கும் வாழ்த்துக்கள். அதற்கு உதவி செய்திட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் - அல்ஹம்துலில்லாஹ்.

10ஆம் வகுப்பு SSLC தேர்வை எழுதி, தேர்வு முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களனைவரும் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.

-----------------------------------------------------

“அருள்மறை திருக்குர்ஆனை ஹிஃப்ழு (மனனம்) செய்துகொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்தல்” என்ற திட்டத்தின் கீழ் பெற்றோர்கள் தங்கள் மக்களை சேர்த்து உலக கல்வியை கற்பதுடன் மார்க்க கல்வியையும் கற்க வழி செய்யலாமே. அதன் மூலம் உங்கள் மக்களும் ஹாஃபிழ்களாகி - அவர்கள் மேல் படிப்புகளை மிக சுலபமாக படித்து பல பட்டங்களைப் பெறலாம். ----------------------------------------------------- மக்களே! எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு ஹாமிதிய்யா குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் சேர்ந்து திருக்குர்ஆன் மனனம் செய்து பட்டம் வாங்கி, மீண்டும் பள்ளிப் படிப்பை தொடர்ந்து படித்து இஞ்சினியராகி சவூதி அரேபியா சென்றார். அங்கே வேலை செய்துகொண்டே எம்.பி.ஏ. படித்தார் , பரீட்சை எழுதுவதற்காக ஊருக்கு வந்து மாஷா அல்லாஹ்! 20 பரீட்சைகளை ஞாயிற்றுக்கிழமை உட்பட காலை, மதியம் என்று தொடராக எழுதி அல்லாஹ்! உதவியால் எல்லா பாடங்களிலும் தேர்ச்சிபெற்று பாசாகிவிட்டார் அல்ஹம்துலில்லாஹ்.

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் - இறைவனின் மறையை மனனம் செய்தவருக்கு மனன சக்தி அதிகமாக இருக்கும் என்பதை அறியவும் , சாதாரண மாணவருக்கும் திருக் குர்ஆனை மனனம் செய்தவருக்கும் மிகப் பெரும் அளவில் மனனம் செய்வதில் வித்தியாசமிருக்கும் என்பதை தெளிவுப் படுத்தவுமே.

சாதாரண மாணவருக்கு இரண்டு நாள் தொடராக பரீட்சை என்றால் தடுமாற்றங்கள் ஏற்படும் ஆனால் மேலே குறிப்பிட்ட மாணவருக்கு தொடராக காலை, மதியம் என்று இடைவிடாது 20 பரீட்சைகள் எழுத முடிந்ததென்றால் மாஷா அல்லாஹ்! அது இறைவனின் கொடை அல்லவா! அவனின் வேதத்தை சுமந்திருக்கும் நெஞ்சமல்லவா!!.

-----------------------------------------------------

பெற்றோர்களே!

நீங்கள் உங்கள் மக்களை எந்த தயக்கமுமின்றி -“அருள்மறை திருக்குர்ஆனை ஹிஃப்ழு (மனனம்) செய்துகொண்டே பள்ளிப்படிப்பைத் தொடர்தல்” என்ற திட்டத்தின் கீழ் சேர்த்து உங்கள் மக்களை திருக் குர்ஆனை மனனம் செய்ய வைத்து, அதன் பின் பள்ளிக் கல்வியையும் கற்க செய்வீர்களாக அதன் மூலம் இம்மை , மறுமைப் பேறுகளை பெற எல்லாம் வல்ல அல்லாஹ்! கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. CONGRADJULATION ALL HAFIL STUDENTS & M.A. NIYAMATHULLAH
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [21 May 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 4609

AssalamuAlaikkum.varah.

my heartly congradjulation to all students of HAMIDIYA and specally MR. [HAFIL] M.A. NIYAMATHULLAH. I pray them to get all success in their complete life.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved