Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:40:16 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6826
#KOTW6826
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 2, 2011
பாதாள சாக்கடைத் திட்டம் முதற்கட்ட ஆய்வுப்பணி விரைவில் நடைபெறும்! நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4775 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (44) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு:
காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார்.

நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் 14 தற்காலிக பணியாளரை கொண்டு 4 ஆண்டுகளாக நகராட்சியில் சுகாதார வாகனங்கள், ஆணையர் அலுவலக ஈப்பு வாகனம், தெருவிளக்கு பராமரிப்பு பணிகள், குடிநீர் விநியோகப் பணிகள், கணினி சம்பந்தமான பணிகள் அனைத்தும் செயல்பட்டு வருவதாகவும், இந்த தற்காலிக பணியாளர்களுக்கு இவர்கள் பெற்று வரும் ஊதியத்திலிருந்து 30 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டுமென்றும் நகர்மன்ற உறுப்பினர் காசிராஜன் கோரிக்கை வைத்தார். அதனை கூட்டம் ஏற்றுக்கொண்டது.

பாதாள சாக்கடை திட்டம்:
காயல்பட்டண நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் - அதனடிப்படையில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்திட்டத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில், நகராட்சி ஆணையாளர் கண்ணையா, நகர்மன்ற உறுப்பினர்கள் காசிராஜன், எம்.என்.சொளுக்கு, நோனா ஜாஃபர் சாதிக், எஸ்.ஐ.ரஃபீக், கணேசன் பால்ராஜ், சி.எஸ்.சதக்கத்துல்லாஹ், காஜா, திருத்துவராஜ், தீபா, செய்தலி ஃபாத்திமா, கிதுரு ஃபாத்திமா, ஜெய்னம்பு, அஹ்மத் ஃபரீதா, கிதுரு ஃபாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நன்றி:
தினமலர் (02.08.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நகருக்கு பொருந்தாத ஒரு திட்டம்
posted by நட்புடன்... முத்து இஸ்மாயில் (KAYALPATNAM) [02 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6596

நம் நகருக்கு பொருந்தாத ஒரு திட்டம் அது பாதாள சாக்கடைத் திட்டம் - சந்து புந்து (முடுக்கு) உள்ள வீட்டுக்கு இது பொருந்தாத ஒன்று நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் போட்டு என்ன செய்ய ? எது நடக்குமோ நடக்க வேண்டியதர்க்கு கூட்டம் போட்டால் புரோஜனமாக இருக்கும் (குறிப்பாக - தட்டுப்பாடு இல்லாத சுத்தமான குடி தண்ணீர், தொடர் மின் சப்ளை விநியோகம் மற்றும் தெருக்களின் குப்பைகளை உடனே சரி செய்தல் இப்படி புரோஜனமான கூட்டம் போட்டு தீர்மானம் பன்னுங்க...

நட்புடன்... முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by jamal (srilanka) [02 August 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 6597

ஏன் பொருந்தாது? முடுக்கு இருந்தால் என்ன? முடுக்கிலிருந்து லைன் எடுத்து வந்து பொதுவான ரோட்டில் இணைப்பு கொடுத்து பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றலாமே? மிகவும் அருமையான திட்டம். வரவேற்க வேண்டிய திட்டம். விரைவில் நிறைவேற்ற வேண்டும். ஆனால் ஊழல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by kasim (Saudi Arabia) [02 August 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6598

பாதாள சாக்கடைத் திட்டம் நம் நகருக்கு பொருந்தாத திட்டம். இப்போது உள்ள சாக்கடை முறையே சிறந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Abdulkader ThaikaSahib MSS (Riyadh, KSA) [02 August 2011]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6600

இப்பதானங்க ஊர்ல பல இடங்களில் புதுசா ரோடு போட்ருக்காங்க???? பாதாள சாக்கடைன்னு சொல்லிட்டு திரும்ப போட்ட ரோட தோண்ட போறாங்களா???? இருப்பினும், இத்திட்டம் நமதூரில் நடைமுறை சாத்தியம் இல்லை......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by A.W.S. (Kayalpatnam) [02 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6601

Recently I have been Traveling extensively within Tamil Nadu. I found no city or town as clean as ours. Almost every town with underground drainage system looks filthy and smell bad. I sometimes wonder how these people live in these conditions. I believe our town will be better off without underground drainage system.

If this project sanctioned or approved, I am sure some of our elected members will have a fair share from the loot / spoils.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஊருக்கு நடைமுறை சாத்தியம் இல்லாத திட்டம்
posted by M A K J - முகமத் காசிம் (காயல்பட்டினம்) [02 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6604

தற்போது நடைமுறையில் (புழக்கத்தில்) இருக்கும் கக்குகூஸ் தொட்டி மற்றும் குடிநீர் இணைப்பு பைப்புகளை உடைத்து விட்டு தான் முடுக்கில் (பாதாள சாக்கடைத் திட்ட) - (குழாய் போட முடியும்) தோண்ட வேண்டி வரும் ! அப்படி இருக்க முடுக்கில் குடி இருக்கும் யாரும் இதை ஏற்று கொள்ள மாட்டார்கள் - ஊருக்கு நடைமுறை சாத்தியம் இல்லாத திட்டம் எல்லாம் வேண்டாம்.. எது சாத்தியமோ அதை செய்யவும்... காயல்பட்டினம் நகராட்சி இடம் பண இருப்பு அதிகம் இருந்தால் (3 தெருவுக்கு ஒரு குப்பை வண்டி வீதம்) குப்பை வண்டியை அதிக படுத்தி நகரை சுத்தமாக்குங்கள்...

M A K J - முகமத் காசிம் - 17 /20 மொஹுதூம் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Nusky (Jeddah) [02 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6606

பொருந்தாதது மட்டுமல்ல பொருத்தமல்லாத திட்டமும் கூட .இனி நமதூரிலும் மற்ற ஊர்களைப்போல் கம கம வாசனையை அனுபவிக்கலாம். கொசுத்தொல்லை மட்டுமல்ல, நமதூரில் மட்டுமே பார்க்க முடியாத ஒரு விலங்கினம் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்து விடும் (khinzeer ). சுத்தம் என்பது சுத்தமாக இல்லாமல் போகும். என்ன ? வேலை வாய்ப்புகள் பெருகும்!!! (நகராட்சி துப்பரவு பணியாளர்களுக்கு) தூர நோக்கு பார்வையுடன் சிந்தித்து இத்திட்டத்தில் மண் அள்ளிப்போடுவது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by amzedmoosa (dammam) [02 August 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6611

பொரூந்தாதது எனகூறும் நண்பர்கள் சிந்தித்து பாருங்கள் நமது ஊரில் எவ்வளவு வீடுகளில் முடுக்கு சண்டை உள்ளது எவ்வளவு சாக்கடை (கான்தொட்டி) சண்டை உள்ளது என பாருங்கள் பாதாளசாக்கடை திட்டம் நமது ஊரை பொறுத்தவரை அவசியம் என்பது எனது கருத்து வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Sewage treatment
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [02 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6612

Pls have a look on: http://en.wikipedia.org/wiki/Sewage_treatment

Moderator: Comment edited! Instead of pasting full text from other sources, just give its link only pls...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Bribe
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [02 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6613

When bribe and looting are absent. We can see the Singapore here.

In Asia Singapore is the only country which has less in looting. Let see. Who ready to make India looting free? The Government or Citizens?

Government.. Absolutely NOT.
Citizens.. They are in Government..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. நம் ஊருக்கு அவசியமற்றது இந்த சாக்கடை திட்டம்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [02 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6614

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகராட்சியில் நீண்ட காலமாக பணி புரிந்து வரும் தற்கால பணியாளர்களுக்கு 30 சதவிகிதம் கூடுதல் ஊதியம் கொடுப்பதாக தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தொழிலாளர்களுக்கு அவர்கள் செய்யும் தொழிலுக்கும், விலைவாசிகளுக்கும் ஏற்றவாறு கால சூழ்நிலையை அனுசரித்து ஊதியத்தை கூடுதலாக கொடுப்பதால் அவர்கள் முழுமனதோடு பணியை செவ்வனே செய்ய வழி வகுக்கும் - மேலும் அவர்கள் பணியில் ஏதும் குறை ஏற்பட்டால் நிர்வாகமும் முறையாக அதை தட்டி கேட்க, கண்டிக்க ஏதுவாகும்.

நடப்பு நகராட்சியின் பதவி காலம் முடியும் முன்பு தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கொடுத்திருப்பது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கும்.
------------------------------------------
பாதாள சாக்கடை திட்டம் விளக்கம்:

பாதாள சாக்கடை திட்டம் என்பது " மிகவும் சிறந்த திட்டம் " என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்பார்கள் உண்மைதான். பாதாள சாக்கடையை முறையாக உருவாக்கி , முறைப்படி உபயோகித்தால் அது சிறந்ததாகும்.

பாதாள சாக்கடை என்பது பூமிக்கடியில் போடப்படுவது அதுவும் குறிப்பிட்ட அடிகள் அளவுக்கு கீழே (மறைவிடம் - HIDING PLACE) இராட்சசக் குழாய்களை பொருத்துவார்கள். அது பல மைல்கள் தூரம் சென்று ஊருக்கு வெளியே போய் கழிவுகளை கொட்டும். அது போகின்ற வழியில் எல்லாம் பல சந்திப்புகள் ( JUNCTION - MAN HOLE ) உருவாக்கபட்டிருக்கும் அடைப்புக்கள் ஏற்பட்டால் பழுது பார்ப்பதற்காகவும் - பல திசைகளிலுமிருந்து வரும் குழாய்களை இணைப்பதற்காகவும்.

ஒவ்வொரு தெருக்களிலிருந்தும் இந்த இராட்சசக் குழாய்கள் வரும் - இந்த இராட்சசக் குழாயில்தான் வீடுகளிலிருந்து வரக்கூடிய கழிவு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த திட்டத்தில் செயல்படக்கூடிய எந்த குழாயும் வெளியே தெரியாது மிக குறைந்த பட்சம் மூன்று அடி ஆழமிருக்கும். தனித்தனியாக ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குடிநீர் குழாய் வருவதுபோல் வராமல் பல வீடுகளிலிருந்தும் கூட்டாக பெரிய குழாய் வழியாக வந்து தெருவில் உள்ள இராட்சச குழாயில் இணைக்கப்பட்டு வெளியேறும்.

ஊருக்கு வெளியே விடக்கூடிய அந்த சாக்கடைக் கழிவுகளை முறைப்படி சுத்திகரித்து அழிக்கணும் இல்லாவிட்டால் பெரும் வியாதிகள் வரும். அப்படி முறையாக சுத்திகரிக்காவிட்டால் நமது ஊரும் நம்மை சுற்றியுள்ள ஊரும் துர்நாற்றத்தால் நிறைந்து காணப்படும். சுருக்கமாக சொன்னால் சென்னையிலே கூவம் (ஆறு) துர்வாடையை வீசுகிறதே! அதைவிட மேலாக இங்கே வீசும்.
------------------------------------------------
நம் நாட்டிலே எங்கே இருக்கிறது பாதாள சாக்கடை ?????

தலைநகர் சென்னையிலே கூட செயலில் இல்லை இந்த திட்டம். எங்கேயுமே பாதாளத்தில் இல்லை - மேல் தளத்தில்தான் இருக்கிறது.

உதாரணத்திற்குகூட ஓர் ஊரையும் காட்ட முடியாது. எங்கு பார்த்தாலும் தெருக்களின் இரு பக்க ஓரமும் சாக்கடைகளை உருவாக்கி அதன் மேலே கருங்கல்லால் அல்லது காங்கிரிட்டால் மூடி போட்டு மூடி இருப்பார்கள் அதுவும் பெரும்பாலான இடங்களில் திறந்தேதான் இருக்கும்.

எனவே நம் நாட்டிலே பாதாள சாக்கடை என்பது எங்குமில்லை சாதாரண சாக்கடை அதாவது தொடர் சாக்கடைதான் செயலில் இருக்கிறது. எல்லா இடங்களும் திறந்த வழி சாக்கடையாக இருப்பதால் பொறுப்பற்ற மக்கள் குப்பையைக் கூட சாக்கடையில்தான் கொட்டுகிறார்கள்.

தலைநகர் மட்டுமல்ல பெரிய நகரமோ , சிறிய நகரமோ எதிலும் இந்த சாக்கடையால் யாரும் முழுப் பயனடைந்ததில்லை. மாறாக துர்நாற்றமும் , கொசுக்களும் - ஏன் பன்றிகளின் ஆதிக்கமும்தான் பெருகி இருக்கிறதே தவிர பயனில்லை.

மழை வந்துவிட்டால் தெருக்களிலே யாரும் நடக்க முடியாத அளவிலே ஜலங்கள் அல்ல மலங்கள்தான் அதிகமாக மிதக்கும். இந்த சாக்கடை முறைதான் இன்று நமது நாட்டிலே இருக்கிறது.
---------------------------------------
நம் ஊருக்கு அவசியமற்றது இந்த சாக்கடை திட்டம்.

நம்முடைய ஊரின் , சுகாதாரத்திற்கும், கலாச்சாரத்திற்கும் மற்றும் ஊரின் அமைப்பிற்கும் பொருந்தி வராது இந்த திட்டம்.

சுகாதாரம் : நம்ம ஊரைப் பொறுத்தவரை குப்பைகளை தெருக்களிலே முறையற்றபடி கொட்டி கேடு விளைவிக்கிறார்களே தவிர மற்றபடி பன்றி, நாய் போன்ற மிருகங்களின் தொல்லைகள் இல்லை எனலாம். மேலும் மற்ற ஊர்களை ஒப்பிடும்போது நம்ம ஊர் ரொம்ப மோசமில்லை. இருந்தாலும் இந்த சாக்காடை திட்டம் வந்தால் நிலைமை தலை கீழாகும்.

கலாச்சாரம்: நம்ம ஊரின் கலாச்சாரத்திற்கு இந்த திறந்த வெளி சாக்கடை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். உதாரணத்திற்கு திருமணம், மார்க்க சொற்பொழிவுகள் மற்றும் பல விசேசங்களுக்கு நாம் தொன்று தொட்டு தெருக்களையே பயன்படுத்தி வருகிறோம். இந்த சாக்கடை திட்டம் வந்தால் நம்முடைய கலாச்சாரத்திற்கு குந்தகம் ஏற்படும்.

ஊரின் அமைப்பு: நம்முடைய ஊரின் அமைப்பிற்கும் நம் நாட்டில் உள்ள பிற ஊர்களின் (ஒரு சிலதை தவிர) அமைப்பிற்கும் பெரும்கொண்ட வித்தியாசமிருக்கிறது.

வீடுகள் 'அளவிலே' சிறிதாக இருந்தாலும் மற்ற ஊர்களைவிட கட்டுமான அமைப்பிலே வேறுபாடுகள் இருக்கிறது. எந்த ஒரு வீடும் (ஒரு சிலதை தவிர) மூன்று பக்கமும் வாசல், ஜன்னல் இல்லாமல் இருக்காது.

ஊரில் நான்கு அல்லது ஐந்து வீடுகள் தவிர மற்ற எல்லா வீடுகளும் இரண்டு, இரண்டாக ஒட்டிய வீடுகளாகவே இருக்கும். இரண்டு வீடுகளுக்கு ஒரு இடை வெளி நான்கு, ஐந்து அடியில் இருக்கும் அது அல்லாது தொடர் வீடுகள் எங்கும் இல்லை.

இன்னும் பல விசேச அமைப்புகளை பெற்ற ஊராக இருப்பதால் இந்த சாக்கடை திட்டம் செயல் வடிவம் பெறாது.

மேலும் முறையான பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்றால் அதனுடைய செலவு திருச்சி மாநகருக்கோ அல்லது மதுரை மாநகருக்கோ சாக்கடை திட்டத்திற்கு செலவாகுவதை விட கூடுதல் செலவே இதற்கு ஆகும் என்பதை உணர வேண்டும்.

நம் ஊரின் மண்வளம் சிறப்பு மிக்கது இப்போது நடைமுறையில் இருக்கும் கழிவு நீர் தொட்டிகளினால் அதிக அளவிலே எந்த பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. ஒரு வேளை பாதிப்பு இருக்குமானால் அதற்கு வேறு வழியில் தீர்வு காணலாமே தவிர பாதாள சாக்கடை திட்டம் என்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத , எங்குமே எந்த ஊரிலுமே நன்மையையை உண்டு பண்ணாததை புதியதாக நம் ஊருக்கு அறிமுகப்படுத்த வேண்டாம்.

இன்று ஒவ்வொரு வீட்டிற்கும் மூன்று பக்கங்களிலிருந்தும் வரக்கூடிய (சுகாதார) காற்றை துர்வாடையும் , நச்சும் கூடிய காற்றாக மாற்றிட வேண்டாம்.
--------------------------------------------
நகர் மன்ற அங்கத்தினர்களே!.

காயல்பட்டண நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து கடிதம் பெறப்பட்டு இருப்பதால் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற ஆரம்ப கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானித்திருக்கிறீர்கள்.

நிர்வாக ஆணையரிடமிருந்து வந்திருக்கும் கடிதத்திற்கு நடவடிக்கை எடுக்காமல் - பதில் கொடுக்காமல் கிடப்பில் போட முடியாது என்றாலும் ஊரின் கலாச்சாரத்தையும் அதற்கும் மேலாக ஒட்டு மொத்த மக்களின் சுகாதாரத்தையும் மனதில் கொண்டு இந்த திட்டம் நம் மக்களுக்கு அவசியமில்லை என்பதை விளக்கி கூறி அதற்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவர்மீதும் கடமையாகும்.

அரசாங்கமும் , மேல் அதிகாரிகளும் போடக்கூடிய ஆணைகளை அப்படியே பின்பற்றக் கூடியவர்கள்தான் நகராட்சி ஆணையர்கள். அவர்கள் மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்று நினைத்தால் கூட சூழ்நிலை சந்தர்ப்பங்கள் அவர்களை நல்லது செய்ய விடாமல் தடுக்கும். ஆனால் மக்கள் பிரதிநிதியாகிய நீங்கள்தான் மக்களின் நன்மையைக் கருதி செயல்பட வேண்டும் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள்.

இப்போதுள்ள நகராட்சியின் பதவி காலம் முடியும் முன்பு உங்களால் ஊருக்கும் , மக்களுக்கும் என்னென்ன நன்மைகளை செய்ய முடியுமோ அவைகளை செய்து வருங்காலத்திலே நல்லதொரு நகர் மன்றம் செயல்பட ஒத்துழையுங்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ,டாஸ்மாக் சென்று தண்ணி அடிக்கணும்
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [02 August 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6615

இது மிகவும் அலசப்பட வேண்டிய ஒரு சமாச்சாரம்.

மற்ற ஊர்களை நம் ஊரை வைத்து ஒப்பிட்டு பார்த்தால், நம்மூரில் அப்படி ஒன்றும் சாக்கடை தெருவிலோ, முடிக்கிலோ ஓடவில்லை (சில வீடுகளில் வாசிங் மிசின் தண்ணீரை முடுக்கிலும், ரோட்டிலும் ஓடவிடுவது வேறு விசயம்), சுகாதாரம் நன்றாக தான் உள்ளது (குப்பைகளை தவிர), நம் நிலத்தடி நீர் ஓரளவு இருக்கிறது என்றால் அதற்கு நம்முடைய கான் சிஸ்டம் தான் காரணம்.

நம் ஊரை சுற்றி உள்ள ஆசாரிமார் தெரு, விசாலாட்சி அம்மன் தெரு போன்ற தெருக்களில் சாக்கடை ஓடுகிறது, அதற்க்கு ஒரு நல்ல வழியை சொன்னால் நல்லது..

சாக்கடை காண் 2 ,3 வருடத்திற்கு ஒருமுறை நிறைகிறதா, துப்பரவு பண்ணினோமா, நிம்மதியாக ஓரளவு சுகாதாரத்துடுடன் இருக்கிறோம்மா.. இதுவே நல்லது..

ஒரு விஷயம் தெரியுமா, யாராவது நம்மிடம் வந்து பணம் தாருங்கள், டாஸ்மாக் சென்று தண்ணி அடிக்கணும் என்று கேட்டால் கொடுப்போமா?

கண்டிப்பாக கொடுப்போம்.

யாருக்கு,எப்போ சொல்லுங்க?

காண் நிறைந்து விட்டது என்று, துப்புரவு பண்ண வருவாரே, அவர் மாலை 6 மணிக்கு வந்து.. முதலாளி ஒரு 100 ரூபாய் கொடுங்க.. ஒரு புல் அடிச்சுவிட்டு 11 மணிக்கு வருகிறேன் என்று வருவாரே.. அப்போதான்..

இது இந்த செய்திக்கு சம்பந்தம் இல்லை என்று யாராவது ஒருவர் பதில் கமெண்ட்ஸ் அடிப்பார் பாருங்க.. என்னத்த சொல்லுறது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. தூத்துக்குடி ஆன்லைன் செய்தி!
posted by S.K.Salih (Kayalpatnam) [02 August 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6616

அன்பர்களே... இதே செய்தி தூத்துக்குடி ஆன்லைன் வலைதளத்தில் 31.07.2011 அன்று பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது:-

காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்திட்டத்திற்கு தலைவர் உட்பட 4 பேர் மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.

காயல்பட்டினம் நகராட்சி கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார். கமிஷனர்(பொறுப்பு) கண்ணையா, ஓவர்சீர் அருள்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகராட்சியில் நீண்ட காலமாக பணிபுரிந்து வரும் 14 தற்காலிக பணியாளர்கள் கொண்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணியாளர்கள் கடந்த 4 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்திலேயே பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு அளித்து தீர்மானம் நிறைவேற்றப்ப்பட்டது.

இதனையடுத்து காயல்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற நகராட்சி ஆணையரிடமிருந்து கடிதம் வந்து தொடர்பாக வாசிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு கவுன்சிலர்கள் மும்பை முகைதீன், சதக்கதுல்லா, சொளுக்கு உள்ளிட்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான், ஆதரவாக இருப்பவர்கள் மட்டும் கையை உயர்த்தவும் என கூறினார். அப்போது தலைவர் வாவு செய்யது அப்துர் ரஹ்மான், கவுன்சிலர்கள் காசிராஜன், திருத்துவராஜ் உட்பட 4 பேர் மட்டுமே திட்டத்தை செயல்படுத்த ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பேசிய கமிஷனர் கண்ணையா, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது பேசிய எதிர்ப்பு கவுன்சிலர்கள், எங்களது எதிர்ப்பை தீர்மான புத்தகத்தில் எழுதிவிடுங்கள் என்றனர்.

இதனையடுத்து பேசிய கவுன்சிலர் திருத்துவராஜ், நகராட்சி பகுதியில் 325 இடங்களில் தெரு விளக்குகள் மாட்டுவதற்கு எம்எல்ஏ நிதி ஒதுக்கி தந்தார். இதில் 65 லைட்டுகள் இன்னும் மாட்டப்படவில்லை. இதுகுறித்து மின்வாரிய இன்ஜினியரிடம் கேட்டால் எங்களிடம் மாட்ட வேண்டிய லைட்டுகளை உடனடியாக பொறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் திருத்துவராஜ், கிதிர்பாத்திமா, செய்யதலி பாத்திமா, கிதிர்பாத்திமா, காஜா, ரபீக், ஜெயனம்பு, மெய்தீன், சொளுக்கு அப்துல்காதர், தீபா, கணேசன் பால்ராஜ், சதக்கதுல்லாஹ், ஜாபர் சாதிக், காசிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by சட்னி ,எஸ்.எ.கே .செய்யதுமீரான் (காயல்பட்டினம் ) [02 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6617

காயலர்களாகிய நாம் அனைவர்களும் இந்த திட்டத்திற்கு எதிராக ஒட்டு மொத்த குரல் கொடுக்கணும் , இது நமது நகருக்கு அவசியம் இல்லாதது . நமது நகர் மன்றம் துப்புரஉ பணியாளர்கள் பற்றாகுறையால். நாறும் மன்றமாக உள்ளது தெரு விளக்குகள் இல்லாது இருட்டாக உள்ளது .

மொஹ்தூம் தெரு ,மொஹுதூம் பள்ளி அருகில் உள்ள மின்விளக்கு பல மாதங்களாக எரியாது மக்களுக்கு மிக கஷ்டமாக உள்ளது . இந்த புனிதமிகு ரமலான் மாதத்தில் அதிகாலை , இரவு வணக்க வழிபாடுகளை செய்யும் மக்களுக்கு மிக கஷ்டமாக உள்ளது.எங்களில் சிலர் பழைய கால அரிக்கன் விளக்கு ஏற்றி இதன் முலம் நகர் மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறார்கள் இதனை நகர் மன்றம் கவனத்தில் கொண்டு உடன் நிவர்த்தி செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

நகர் மன்ற தலைவர் தேர்ந்து எடுக்கப்பட்ட எங்கள் 5 வது வார்ட் மக்தூம் தெரு நிலைமை இப்படி என்றால் மற்றவைகள் எப்படியோ .

கண்ணுக்கு தெரியும் இது போன்ற பல மக்கள் பிரச்சினைகளை தீர்த்து விட்டு இந்த பாதாள சாக்கடைக்கு போகலாம். அதற்குள் இந்த நகரமன்றத்தின் ஆயுட்காலமும் நிறைவுக்கு வந்து பல பொதுநலவாதிகள் உறுப்பினர்களாகி நல்லதோர் நிர்வாகத்தை தருவார்கள் . இறைவன் நாடினால் .

தமிழக அரசும் ,உயர் அதிகாரிகளும் ,மற்றும் நிர்வாககதினர்களும் எங்களுருக்கு இப்பொழுது அவசியமும் ,அவசரமும் இல்லாத இந்த திட்டத்தை கிடப்பில் போடுமாறு மிகுந்த தய உடன் கேட்டுகொள்கின்றோம் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அணைத்து உறுபினர்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகள் .

அன்புடன் .

சட்னி ,எஸ்.எ.கே .செய்யதுமீரான் காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. நம்மூருக்கு ஒரு சாவு மணி
posted by சாளை நவாஸ் (sg) [03 August 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6618

இன்னொரு மறைந்து கிடக்கும் விஷயத்தையும் சொல்லி விடுகிறேன். பாதாள சாக்கடை நம்மூருக்கு ஒரு சாவு மணி. ஏன் என்றால் திடீரெண்டு அரசாங்கம் இதில் ஆர்வம் கட்டுகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு உண்மை விளங்கும்.

பக்கத்துக்கு ஊர்களுக்கும் இந்த திட்டம் அமுலுக்கு வர போகிறது. அங்கே ஏற்கனவே எடுத்த சர்வேயின் படி திட்டம் ரெடி, ஆனால் சாக்கடையை எங்கே கொட்டுவது, இருக்கவே இருக்கு கடல். மற்ற கடலோர கிராமங்களில் இது சாத்திய படாத ஒன்று. ஆக காயல்பட்டினம் கடற்கரைதான் சரியான தேர்வு.

சும்மா ஒரு குழாய் போட்டு கடற்கரையில் கொட்டினால் பலத்த எதிர்ப்பு வரும். ஆகையால் இந்த ஊரிலும் பாதாள சாக்கடை திட்டத்தை அமுல் படுத்தினால் , எல்லாம் சுமூகமாக முடியும்.

உங்கள் சாணக்கிய புத்தி எங்களுக்கு தெரியாதா? சாதாரண அடிப்படை தேவைக்கு ஆர்வம் காட்டாத நகராட்சி (அரசாங்கம்), சாக்கடைக்கு ஆர்வம் காட்டும் உங்கள் சாக்கடை புத்தியை நாங்கள் அறியாமலா பொய் விடுவோம்.

நகராட்சி தலைவர் அவர்களே! உங்கள் கையை தூக்கி இந்த ஊரை சாக்கடையாய் ஆக்கி விடாதீர்கள். கையை தூக்கும் முன் அறிவுசார்ந்த மக்களிடம் அணுகி கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும். நீங்கள் ஊருக்கு நல்லது செய்தானே மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்.

இப்படிக்கு
மண்ணின் மைந்தன் சாளை நவாஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத திட்டம்
posted by KMT Shaikna Lebbai (Singapore) [03 August 2011]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 6620

முதல்ல நகர் மன்றத்தில இருக்கிற சாக்கடைய சுத்தம் செய்யணும். வேறென்னங்க.

ஊருல எவ்வுளவோ பிரச்சணைகள் இருக்கு.அதை எல்லாம் விட்டுட்டு,மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத இந்த பாதாள சாக்கடை திட்டத்தை செயல் படுத்த போறாங்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. பாதாள சாக்கடை திட்டம்
posted by Zubair Rahman (Bengaluru) [03 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 6623

பெரும்பாலானோர் கருத்து சரியாக உள்ளது.

"பாதாள சாக்கடை திட்டம்"
(கொள்ளை கும்பலின் மற்றுமொரு அவதாரம்)

ஊரின் எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து எதிர்ப்பு பிரசாரம் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கான எதிர்ப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

அதிலும் சாளை நவாஸ் அவர்களின் கருத்து ஆழமாக சிந்திக்க தூண்டுகிறது, ஏனெனில் இறுதியாக கழிவு கொண்டு விடப்படும் இடம் நம் ஊர்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

மற்றொன்று தூத்துக்குடி ஆன் லைனில் வந்த செய்தி (sk -ஸாலிஹ் அவர்களின் பதிப்பு) " யார் எதிர்த்தாலும் இத்திட்டத்தை அரசு முடித்தே தீரும்" அதெப்படி மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசாக இருந்தாலும் எத்திட்டத்தையும் நடைமுறைபடுத்த முடியுமா?

"அரசு ஊழியர்கள் மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல கடமைப்பட்டவரே தவிர அரசின் பிடிவாத செயலுக்கு சங்கு ஊதாக்கூடது"

ஊரின் நன்மைக்காக அரசியல் அங்கத்தில் சேர்ந்தவர்களும், தயவுசெய்து ஒன்றிணைந்து இத்திட்டத்தை எதிர்க்க வேண்டும். "எந்த ஒரு திட்டமானாலும் ஊருக்கு நீண்ட கால நன்மை பயக்கக்கூடியதையே செயல் படுத்தவும்" இதற்கு ஆதரவு கொடுக்கும் "ஊழல் வாதிகளே" உங்களுக்கு தேவை என்றால் எதையும் எப்போதும் செய்து விடலாம் இல்லையா? ஏன் அடித்த கொள்ளை, அடித்துக்கொண்டிருக்கும் கொள்ளை, இனி அடிக்கபோகும் கொள்ளைக்கும் சேர்த்து கணக்கு எழுதி விட்டீர்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஊர் தெருக்களிலும், முடுக்கிலும் துர்நாற்றம் வேண்டாம்...
posted by நட்புடன்... முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [03 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6624

சகோதரர் N.S.E. மஹ்மூது அவர்களின் கருத்து வரவேற்க்க கூடியது (நம் ஊருக்கு அவசியமற்றது இந்த சாக்கடை திட்டம்) இப்போது நம் நாட்டில் நடைமுறையில் உள்ளதை உள்ளபடியாக எழுதி இருக்கிறார் அவருக்கு என் பாராட்டுக்கள் -

இந்த பாதாள சாக்கடைத் திட்டம் இதை வரவிடாமல் தடுபதற்க்கு மக்கள் ஒன்று திரண்டு நம் எதிப்பை பதிவு செய்து தடுக்க வேண்டும் இல்லையென்றால் நல்லா இருக்கும் நம்ம ஊர் கலாச்சாரம் மற்றும் சுகாதாரம் கெட்டு நாரி போகும் என்பதில் சிறு அளவும் சந்தேகம் இல்லை... நமது ஊருக்கு அருகில் உள்ள தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் பாதாள சாக்கடை எந்த முறையில் செயல் படுகிறது என்பதனை அனைவரும் அறிவீர்கள்.

துர்நாற்றத்தின் முழுமையான அடையாளம்தான் இந்த பாதாள சாக்கடைத் திட்டம். தயவு செய்து பாதாள சாக்கடைத் திட்டத்தால் நமது ஊர் தெருக்களிலும், முடுக்கிலும் துர்நாற்றம் வேண்டாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Javed Nazeem (Chennai) [03 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6626

Is there a way to preserve the posts made here? The comments by NSE Mahmood and Salai Nawas are highly valuable. I am not sure if the panchayat board president was aware of the impacts before raising his hand. These posts need to be taken to him and this activity needs to be nipped in the bud.

Else we may have another one to fight with - along with the dangers of Cancer and the Tsunami Quarters. We already have a red sea during the DCW dump, we may get a black one too if this gets implemented.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. வேண்டாம் இந்த வீரளியம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [03 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6628

அன்புள்ள நகர் மன்ற தலைவர் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்.

என்னே காயலான்கள் ! நன்மை செய்யவும் விடமாட்டேன்கிறாங்க, தீமை செய்யவும் விடமான்ட்டேன்கிறாங்க ! அப்போ நீங்க தான் நன்மைபயக்காத தீமைகளை அடியோடு வேரருக்கனும். இவ்வளவு பட்டவர்த்தனமாக நம்மவர்கள் அதிலும் ரொம்போ நாள் கழிச்சு வந்திருக்கும் NSE மஹ்மூது மாமா அவர்கள் கோடிட்டு காட்டியதுபோலே எங்குமே செயல்படாத ஒரு திட்டம் நமக்கு எதற்கு? அதிலும் நம் தலையில் நாமே மண் வாரிப்போட நம் வரிப்பணத்தை நம்மை வைத்தே செலவளிப்பதா ?

தம்பி நவாஸ் மற்றும் ஜியாவுதீன் சொல்வதுபோலே உங்களால் நிரூபித்துக்காட்ட இயலுமா இந்த திட்டத்தினால் நமக்கு நம் மண் வளத்திற்கு கெடுதல் இல்லை என்று ?

இல்லையேல், தயவுசெய்து எப்படி தொழில்நுட்ப ரீதியாக நீங்கள் இந்த திட்டத்தை மறுக்க முடியுமோ அப்படி மறுப்பதோடு நின்று விடாமல் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கண்டிப்பாக நமதூரின் உடனடி தேவைகளான சாலைகள் மேம்பாடு குப்பை அள்ளும் வாகனங்கள், சாலையோர மின்சார விளக்குகள் தடையில்லாத தன்நீர்வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்து நமதூர் மக்கள் மக்களாக வாழ வழி வகை செய்து தாருங்கள். அதுவும் நம் நகராட்சி உங்களின் நிர்வாகத்தில் இருக்கும் போதே.. ?

பாதாள சாக்கடையை சுற்றி ஒரு கூட்டம் உங்களயே சுற்றிக்கொண்டு இருக்கும் தயவு செய்து ஊர் நலமே என்று நீங்கள் முடிவு எடுங்கள் உங்கள் பின்னால் இந்த ஊரே திரளும். ஒரு முன்மாதிரி நகராட்சி என்று சரித்திரம் சொல்லட்டும்.

வஸ்ஸலாம்.

அட்மின் அவர்களுக்கு ஒரு கனிவான வேண்டுகோள்: இங்கே நாங்கள் பதிவு செய்யும் கருத்துக்களை தயவுசெய்து நமது நகராட்சி தலைவர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லவும். நமது ஒட்டுமொத்த குரல்கள் நகராட்சியில் ஒலிக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. நமதூரை பாதாள சாக்கடைக்குள் தள்ளி விட வேண்டாம்..
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [03 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6629

அன்பின் காயல் நகர்மன்றத் தலைவர் அவர்களே ....

பாதாள சாக்கடைத் திட்டம் என்ற திட்டத்தின் கீழ் நமதூரை பாதாள சாக்கடைக்குள் தள்ளி விட வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். நிறைவேற்ற வேண்டிய எவ்வளோ திட்டங்கள் கிடப்பில் இருக்கும் பொழுது. பல ஊர்களில் கிடப்பில் போட்ட திட்டத்தை இங்கு செயல் படுத்த என்ன அவசியம்.

ஏற்கனவே நமதூர் கடல் நீர் DCW நிறுவனத்தின் கழிவு நீர் கலப்பதால் மாசு பட்டுள்ளது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றது மேலும் இதன் மூலம் கேன்சர் பரவுதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றது. ஆகவே புள்ளி வைக்க வேண்டிய இந்த விசயத்தை தயவு செய்து கமா ,,,, போட்டு ஆரம்பித்து விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. சாக்கடைகளின் சாக்கடை திட்டம். சாநேக்கியர்களின் சதித்திட்டம்.
posted by s.s.md meerasahib (riyadh) [03 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6630

இங்கு கருத்து கூறும் பல நண்பர்கள் நல்ல அலசி ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள். இத்திட்டம் நம் ஊருக்கு தேவை இல்லாத ஒன்று. வெளி நாடுகளில் இத்திட்டம் நல்ல பயனை தருகிறது. ரோட்டின் நடுவே... பெரிய குழாய்கள் பொருத்தப்பட்டு.... ஒவொரு விட்டின் மெயின் கட்டரில் இருந்தும் 8 " குழாய் மூலம் மெயின் கட்டரில் இணைக்கப்படுகிறது. எந்த ஒரு பிரச்சனைகளும் இல்லை.

ஆனால் வெளிநாடுகளின் அமைப்பும் நம் நாட்டின் அமைப்பும் வேறு.... அங்கு முதலில் வீடு கட்டும் முன்பே... குடிதண்ணீர் வசதி, மின் வசதி,கழிவு நீர் வசதிகளை திட்ட மிட்ட பின் தான் வீட்டுக்கே.... பெர்மிசன் வழங்குவார்கள். இதில்தான் முறையான திட்டமிடல் இருக்கிறது. மேலும் எல்லாம் குழாய்கள் முலம்.வெளியில் தெறிவது இல்லை கட்டரின் மூடிகள் கூட ரோட்டோடு ரோடாக தெறிவது இல்லை. மேலும் கழிவு நீர்கள் ஊரின் ஒதுக்கு புரத்தை அடைந்ததும் அந்த கழிவு நீரை மாற்று ரசாயனம் கலந்து உரமாக மாற்றுகிறார்கள் இதில் முழு கவனமும் செலுத்துவதை நாம் காண்கிறோம். இப்படி பார்த்து பறித்து செய்யவேண்டிய காரியம் நம் நாட்டுக்கு சத்தியமே இல்லை. மேலும் குழாய்களே... தொடமாட்டார்கள் ரோட்டு வீட்டின் படிகளை ஒட்டியே.... கால்வாய் வெட்டி விடுவார்கள். சிந்திக்கவே..... கொமட்டுகிறது.

இதை வர விட்டால் ஊரின் மொத்த கண்ட்ரோளையும் நாம் இழப்போம். சாக்கடை நாருதோ.......... இல்லையோ...... அதன் பணியாட்கள் போக்குவரத்தால் தெருவும், ஊரும் நாறிவிடும்.
கட்டைக்கால்கள் கூட்டம் கூட்டமாக மேயதுடங்கும்...
அதை பிடிக்க இரண்டு கால் கூட்டமும் ஊரில் அடியெடுத்து வைக்கும்.

இவைகள் எல்லாம் என் கற்பனை அல்ல..... அமுல் படுத்தின நகரம்களை போய் பாருங்கள். நாகர்கோவிலுக்கு போயி பாருங்கள். கலாட்சார சீரழிவு கொடிகட்டி பறக்கும், தினமும், தினமும் நம் ஊர் ஒவ்வொரு பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாகவே.... உள்ளது. இத்திட்டம் காயல் பட்டினத்தின் பெருமையை அழிக்க போட பட்ட திட்டம். நம் ஊர் மற்ற ஊர்களை ஒப்பிட்டு பார்க்கும் போது சுத்தத்தில் எந்த குறைவும் இல்லை. மேலோட்ட குப்பைகளை நம் நகராட்சி நன்கு முயற்ச்சி எடுத்தால் ஓரிரு மாதம்களில் சுத்தமாகிவிடும். இத்திட்டம் வராமல் இருக்க சர்வேயே... அனுமதிக்க கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. திட்டமே ஒரு சாக்கடை
posted by பாளையம் M.S. சதக்கத்துல்லா (Dammam, Saudi Arabia) [03 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6631

நகராட்சி நிர்வாகத்தினரே,

நம்மூர் இரண்டாம் நிலை குடிநீர் திட்டம் என்ன ஆச்சு? அதை நிறைவேற்ற ஊர் மக்களே காசு தாருங்கள் என்று கையேந்தும் நம் நகராட்சி, தேவையே இல்லாத பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கங்கணம் கட்டுவது ஏன்?

பாதாள சாச்கடை திட்டதிற்காக செலவிடப்படும் எங்கள் வரிப்பணத்தை, தயவுசெய்து குடிநீர் திட்டத்திற்காக ஒதுக்குங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. செய்தியின் சாராம்சத்தை அடிப்படையாக ...........
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [03 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6632

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பான சகோதரர்களே!

இந்த கருத்து பகுதியில், (கருத்து வரிசை எண் 13 ) தூத்துக்குடி ஆன்லைன் வலைதளத்தில் 31.07.2011 அன்று வெளியிடப்பட்டுள்ளதாக சகோதரர் S.K. ஸாலிஹ் அவர்கள் கொடுத்திருக்கும் பாதாள சாக்கடை திட்டம் பற்றிய செய்தியை பல முறை முழுமையாகப் படித்து , அந்த செய்தியின் சாராம்சத்தை அடிப்படையாக கொண்டு உங்கள் கருத்துக்களை பதிந்தால் மேலும் சில தகவல்கள் கிடைக்கும்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. நினைத்தேன்..... சிரித்தேன்.
posted by zubair (riyadh) [03 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6633

அன்பு காயல் சகோதரர்களே..... இத்திட்டத்தால் நம் எல்லாவருக்கும் நல்ல ஒரு போனஸ் கிடைக்க போகிறது. நம் எல்லாவருடைய வீட்டிலும் இடம்கள் குறைவு. முன் திட்டமிடாததாலும், இடம் அளவுகள் குறைவாலும் நம் வீடுகளுக்கு கம்பியூட்டர் வைக்க தனி அறை தேவை பட்டது. இனி அந்த கவலை தேவை இல்லை.

இத்திட்டம் அமுல் படுத்தப்பட்டால்.... நம் கழிவறையை.. பலுங்கு தரை போட்டு கம்பியூட்டர் அறையாக மாற்றிவிடலாம். கக்கூசுதான் நம் ரோடுகளின் இரண்டு புறமும் வரபோகிறதே...!!! அது போதும். பாதாள சாக்கடைகள் என்ற பெயரில் மிதக்கும் சாக்கடை திட்டம் உள்ள ஊர்களில் போய் பார்த்தால் தெரியும். கலை 5 :30 மணி முதல் 8 மணிவரை இதுதானே...... நடக்கிறது. தாய்மார்களுக்கு கூட சொரணை இல்லாமல் பிள்ளைகளை இருத்திவிட்டு பார்த்துகொண்டு இருக்கிறார்கள் பொது இடம்,ஆட்கள் நடந்து கொண்டு இருக்கிறார்களே.... என்ற என்னமோ,நாணமோ,கவலையோ ஒன்றும் இல்லை அவர்களுக்கு. அடல்ஸ்களுக்கு கம்மாக்கரை என்ற இடம் உள்ளது. ஆண்களுக்கு தனி நேரம், பெண்களுக்கு தனி நேரம். இதுலாம்...... நேரம் பார்த்து வரக்கூடியவையா....? ஆகையால்.... அவசரத்திற்கு அடல்ஸ்களும் வீட்டின் படியில் இருப்பது போல் இருந்து கொண்டு காரியத்தை சாதித்து விடுகின்றனர். எழுதியதில் தவறிருந்தால் மன்னிக்கவும். உண்மை இருந்தால் ஆதரிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by vsm ali (Hetang , Jiangmen , China) [03 August 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 6634

பாதாள சாக்கடை திட்டம் , நல்ல ஒரு திட்டம்தான். ஆனால் நமது ஊரின் அமைப்பில் அதை நிறைவேற்ற முடியுமா ? குறுகலான முடுக்குகள் , சிறிய தெருக்கள் , சாத்தியப்படுமா ? மற்றபடி , லஞ்சம் , ஊழல் என்பதெல்லாம் இங்கு தேவையற்ற விவாதம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Good Alarm
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [03 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6635

It is a good alarm to all of us. As people said here if there is no proper planning prior to construction of building will lead to let the wastage to be dump in our sea beds which will impact the environment.

It is better if the present wastage dump for each home. But my personal request to all of us that please instruct our women folks not to dump the Washine Machine wastage in to normal wastage tanks.

The detergent chemical will easily kill the bacteria for decay the wastage as if they are let in to nomal wastage tanks. Which will lead to clean the tanks frequently. So advice the women folks or engineers to plan the Washine Machine wastage in separate tanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. நம் ஊர் மக்களின் வாழ்வு ஒரு கேள்வி குறி தான்
posted by syed ahamed (காயல்பட்டினம்) [03 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6637

பாதாள சாக்கடைத் திட்டம் நமது ஊருக்கு அவசியமற்றது இதனால் மிக பெரிய நாற்றங்கள் மற்றும் நோய்கள் வரலாம். வெளிநாடு போல நம் நாட்டை ஒப்பிடாதீர்கள்.

இந்த திட்டத்தை வரவிடாமல் ஊர் மக்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும்... அப்படியும் மீறி இந்த திட்டம் நிறைவேறுமானால் நம் ஊர் மக்களின் வாழ்வு ஒரு கேள்வி குறிதான் - அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் - இவர்கள் திட்டம் தோல்வி அடைய அனைவரும் துவா செய்வோமாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [03 August 2011]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6638

அஸ்ஸலாமு அழைக்கும்.
அட்மின் அவர்கள் அனுமதித்தால்....

இந்த கருது பகுதி மூலம் காயலர்கள் அனைவரும் இந்த பாதாள சாக்கடை திட்டத்திற்கு தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம்.....

மேலும் இங்கு பதியப்படும் அனைத்து கருத்துகளையும் நகரமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கவனத்திற்கு எடுத்து செல்லலாம்.

ஆகவே மற்ற செய்திபோல் அல்லாமல், அனைவரும் நகர் நலன் கருதி இதில் தங்கள் கருத்தை பதிவு செய்யவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Cnash (Makkah ) [03 August 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6640

இங்கு நண்பர் SK ஸாலிஹ் இன் பதிவை பார்க்கும் போது நம் நகராட்சி யார் சொல்லையும் கேட்க தயாரா இல்லை என்பது தெளிவா தெரிகிறது.. அவர்கள் முடிவு எடுத்து விட்டு சும்மா ஒப்புக்கு போட்ட கூட்டம்தானா இது?

ஆதரிக்கிறவர்கள் யார் என்று கேட்டு விட்டு வெறும் நாலு பேரு கையை தூக்கி இருகிறார்கள்! அப்போ எதிர்ப்பு தெரிவித்த மற்ற கவுன்சிலர் உடைய கருத்துலாம் வெறும் ரெகார்ட்க்கு தானா.. அவர்கள் மக்களால் தேர்ந்து எடுக்க படவில்லையா.... பெரும்பான்மை உறுப்பினர் கருத்து குப்பையில் போட்டீர்கள்!!

ஊரில் உள்ள மற்ற போது நல அமைப்புகள் ஜமாத்துக்கள் உடைய கருத்துகைளையாவது கேட்டீர்களா!! அப்டி என்ன அவசரம்!!

நன்மை தீமைகளை நன்கு ஆராய்து ஊர் மக்களுக்கு நன்மை தருமா என்று பார்த்து விட்டு திட்டத்தை கொண்டு வாருங்கள்!! நீங்க கொண்டு வருகின்ற திட்டம் பல தலைமுறைக்கு உங்களை வாழ்த்துவதாக இருக்கட்டும்!!

வரும் காலங்களில் நல்லா இருந்த ஊரு நாறி போயிட்டு இவங்களாலேதான் சொல்லும் அளவுக்கு வராமல் காப்பது உங்கள் கையில் உள்ளது... தலையாய பிரச்னை நல்ல குடிநீர், ரோடு, குப்பை சுகாதாரம் என்று நிறைய இருக்கும்போது அவசர கதியில் எந்த தீர்மானம் ஏன்?

காயல் ஐக்கிய பேரவை என்று ஒன்று இருக்குதே அவங்க இதை எல்லாம் கண்டு கொள்வார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. காயல் மாநகர் இனிமேல் (அத்தர் வாசனை) கமழும் மாநகர்
posted by A.W.Md Abdul Cader Aalim Bukhari (Mumbai) [04 August 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 6642

அஸ்ஸலாமு அலைக்கும் காயலர்களே!

இந்த திட்டம் எவ்வளவு அருமையான ஒன்று அதை போய்....... இப்படி தடுக்க நினைக்கின்றீர்களே! ஏங்க நம்ம ஊர் சன் டீவியில வந்த ஊருங்கோ அதனால தான் நம்ம ஊரை வெளிநாட்டை விட அழகானதாக மாற்ற நினைக்கின்றார்களோ என்னவோ!!!. நான் நினைக்கின்றேன் கழிவுகளை ஒன்று சேர்த்து நமதூருக்கு தேவையான கேஸ் போன்றவைகளை தயார் செய்யலாம் என்று எண்ணுகின்றார்களோ எண்னவோ. எது எப்படிய்யோ காயல் மாநகர் இனிமேல் (அத்தர் வாசனை) கமழும் மாநகர் தான். அது சரி இந்த கமழும் திரவத்தை எங்கு சேர்ப்பார்கள் ஒரு சமயம் நமதூரின் சுகாதாரத்துக்கு காரணமாக உள்ள அந்த தொழிற்சாலையிக்கு அருகில் இருக்குமோ!!!!! சரி பொருத்து இருந்து தான் பார்ப்போமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. ஆண்டுக்கு ரூபாய் 3000 கட்டணம் வசூலிப்பார்கள் !
posted by நட்புடன்... முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [04 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6644

பாதாள சாக்கடைத் திட்டம் சும்மா சாதாரண திட்டம் இல்லை! ஆண்டுக்கு ரூபாய் 3000 முதல் 4000 வரை கட்டணம் வசூலிப்பார்கள்! பணத்தையும் கொடுத்து துர்நாற்றத்தையும் பெற வேண்டும்

இந்த பாதாள சாக்கடைத் திட்டத்தால் ஊர் நார போவது நிச்சியம்....!

நட்புடன்... முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.) [04 August 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6647

இந்த.. சாக்கடை திட்டத்தை... கொண்டுவரதுடிக்கும்... ....களை வண்மயாக கண்டிக்கிறோம்..... ஊரில் உள்ள நல்லவர்களே... வாலிபர்களே... உங்களுடன் நாங்களும் போராட தயாரகி விட்டோம்..... இது நம் ஊரை நாசமாக்க... திட்டமிட்ட செயல்....

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. சொரிய வைக்குகிறார்கள்
posted by saha (Chennai) [04 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6649

ஊரில் உள்ள மற்ற போது நல அமைப்புகள் உடைய கருத்துகலை கேட்டீர்களா!! அப்படி என்ன அவசரம்! அவசியம் ''சும்மா இருப்பவர்கலை சொரிய வைக்கிறார்கள்''


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. OUR MUNICIPALITYH CANNOT MAINTAIN THIS PROJECT
posted by sulaiman (kayalpatnam) [04 August 2011]
IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 6650

பொதுமக்களின் இவ்வளவு எதிர்ப்பிற்கு பிறகும் நகராட்சி இத்திட்டத்திற்கு செயல்வடிவம் கொடுத்தால் அனைத்து ஜமாஅத் மக்களும் ஒரு மனுவில் கையெழுத்து இட்டு நகராட்சி முன் முற்றுகை இட்டு இதை நிறுத்த வேண்டும்,

THE MAIN REASON WHY WE ARE NOT SUPPORTING THIS IN OUR KAYAL IS :-

MAINATANANCE IS THE PRIMARY DISADVANTAGE, OUR MUNICIPAL WOKERS CANNOT(IM SURE) MAINTAIN THIS DRAINAGE PROPERLY,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Shameemul Islam SKS (Chennai) [04 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6652

பாதாள சாக்கடை குறித்து இப்பகுதியில் பல்வேறு கருத்துக்கள் பதியப்பட்டுள்ள நிலையில் நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.

1 ) இத்திட்டம் ஊர் கலாச்சாரத்திற்கு ஊறு விளைவிக்கும் திட்டம்.

2 ) ஊரெங்கும் நாற்றங்கள் வீசும்.

3 ) நான்கு கால்கள் நடமாட்டம் பெருகும்.

4 ) மேலும் குப்பைக் கூளங்கள் சேரும்.

5 ) பிற ஊர்களின் நாற்றங்களும் காயல் வழியாக கடலுக்கு அனுப்பப்படும்.

6 ) ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் போதாதென இன்னொரு புதிய பிரச்னைக்கு இப்போது வழிகோளப்பட்டுள்ளது.

7 ) ரோடுகளில் இனி எந்த கல்யாண காட்சிகளும் நடத்த முடியாமல் போகும்.

8 ) கையை தூக்காமல் எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்களுக்கு நன்றி.

9 )நகர் மன்றத் தலைவர் கையை உயர்த்தியதற்கு வருத்தங்கள்.

11 ) ஒருசில கருத்துக்கள் துவக்கத்தில் ஆதரித்து பிறகு எதிர்ப்பதற்கான காரணங்களையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

13 ) ஏற்கனவே நகராட்சிப் பணங்கள் கொள்ளையடிக்கப்பட்டது போக இது இன்னொரு நல்ல வாய்ப்பு.

14) நிற்க, ஆதரிப்பவர்கள் எதனால் ஆதரித்தனர் என்ற கருத்து இதுவரை இங்கு வெளியிடப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பதிவு செய்தால் நலம்.

15 ) நகர் மன்றத்தலைவர் எதனால் கையை உயர்த்தினார்கள். தாமாகவே எடுத்த முடிவா அல்லது நிர்ப்பந்தமா என்பதை அவர்களே சொன்னால் நலம். தாமாகவே எடுத்த முடிவு தானென்றால் அதற்கு எதிராக இங்கு எழுப்பப்பட்டுள்ள ஐயங்களுக்கான விடைதான் என்ன என்பதை தயவு செய்து பதிவு செய்தால் நலம்.

நம்மூருக்கு அருகில் உள்ள திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தாங்கள் போய் வராதவர்களா, ஊரில் நுழையும் முன்பே நம்மை அந்த நாற்றங்கள் தானே வரவேற்கின்றன. தயவு செய்து விளக்கம் தாருங்கள்.

16 ) நகராட்சிக் கூட்டத்தில் அதன் ஆணையாளர் அவர்கள் பெருவாரியான கருத்துக்களுக்கு மதிப்பளிக்காமல் ஏற்கனவே எடுத்து வைத்த முடிவை அறிவித்திருப்பது ஒரு ஜனநாயக கேலிக்கூத்தாக உள்ளது. அவர்களும் அதற்கு பதிலளித்தால் நலம்.

ஐய்யா, நாங்கள் ஐந்து வேலை பள்ளிவாசல் சென்று தொழுது வருபவர்கள். எங்கள் ஆடைகளில் ஒரு சிறு அசுத்தம் இருந்தாலும் இறைவன் அத்தொழுகையை ஏற்றுக்கொள்ள மாட்டான். இது இவ்வாறிருக்க பாதாள சாக்கடையுடன் கூடிய காயல் நகரை மழைக்காலத்தில் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா.

மேலும் அம்மழைக் காலத்தில் (பாதாள)சாக்கடை ஓடும் நகரங்களில் கொசுக்களால் பரவும் -பெயர் தெரியாத அல்லது தங்களைப் போன்ற ஆணையர்கள் பெயர் வைக்கத் திணறும்- புதுப்புது நோய்களை நினைத்தாலே எங்கள் உடலும் உள்ளமும் நடுங்குகிறது ஐயா. எங்களின் இந்த ஐயங்களுக்கு பதிலளிப்பீர்களா ஐயா.

அது போல அன்பு அண்ணன்கள் காசிராஜனும் திருத்துவராஜ் அவர்களும் தாங்கள் ஊரே எதிர்க்கும் இந்த திட்டத்திற்கு ஏன் ஆதரவு தெரிவித்தீர்கள் என்று கூறினால் நலம். உங்களுக்கும் சேர்ந்து தானே இந்த பிரச்னைகள். விளக்கம் தாருங்கள். நம்மை விட்டு சென்று விட்ட நம் முன்னோர்கள் பாக்கியம் மிக்கவர்கள். இந்த அவலங்களை எல்லாம் பார்க்காமலே போய் விட்டார்களே அதனால் தான்.

நாம் எவ்வளவு தான் செய்திகளைப் பதிவு செய்ய இந்த கீ பேடைத் தட்டினாலும் என்ன பயன். அரசின் பிடிவாதமான முடிவுகளை எதிர்த்திட நமக்கென்ன, ஆற்றலா உள்ளது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. மக்களின் விருப்பத்திற்கு மாற்றமானதை ...............
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [04 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6670

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தூத்துக்குடி ஆன்லைன் வலைதளத்தில் வந்திருக்கும் செய்தியை அடிப்படையாக வைத்து இந்த கருத்தை பதிகிறேன்.

அதாவது பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட ஓட்டெடுப்பு எடுக்கப்பட்டபோது வெறும் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்து கையை உயர்த்தியிருக்கிறார்கள் மற்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.

உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கு கூட ஆதரவு இல்லாத நிலையில் எப்படி தீர்மானம் நிறைவேற்றப்படும் ???.

மேலும் கமிஷனர் கண்ணையா அவர்கள் பேசும்போது " பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது, எனவே கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் " என்றிருக்கிறார்!!!.

பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கையில் எதை அடிப்படையாக வைத்து இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று கமிஷனர் சொன்னார் என்பது தெரியவில்லை?

பெருபான்மையான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேறினால்தான் இத்திட்டப் பணிகளைத் தொடங்க முடியுமே தவிர உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியாது.

----------------------------------------------



மேலும் சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரிடமிருந்து பெறப்பட்ட கடிதம் என்ன சொல்கிறது? " காயல்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஆரம்ப கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ள நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும்படி வழியுறுத்துகிறது.

ஆரம்பக் கட்ட சர்வே பணிகளை மேற்கொள்ளுங்கள் என்று சென்னை நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவு பிரபிக்கவில்லை - மாறாக நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றும்படியே கடிதம் மூலம் வேண்டியிருக்கிறார்.

இதன் மூலம் நன்கு புலனாகிறது பெரும்பான்மை உறுப்பினர்களால் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் எதுவும் செய்ய மக்கள் மன்றம் இடம் கொடுக்காது என்பது.

-----------------------------------------------



இந்த பாதாள சாக்கடை திட்டத்தினால் ஏற்படும் பல சிக்கல்களையும் அறிந்துணர்ந்த தமிழக முதல்வர் அவர்கள் "பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் பகுதிகளில் மட்டும், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் "என்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்கள், கடந்த பிப்ரவரியில் செய்தி தாளில் படித்தது.

ஆகவே , நகர் மன்றத்தின் உறுப்பினராக இருந்தாலும் சரி, அதிகாரியாக இருந்தாலும் சரி மக்களின் விருப்பத்திற்கு மாற்றமானதை திணிக்க முயல வேண்டாம்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by kavimagan (dubai) [05 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6673

முதலில் இது பாதாள சாக்கடைத் திட்டமே அல்ல.வீதியோர சாக்கடைத் திட்டம் என்பதே சரி.காசிராஜன் மாமா அவர்கள் இந்தத் திட்டத்தை ஆதரித்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. காரணம்,அவர் வசிக்கும் பகுதியில் இன்றுவரை நடைமுறையில் இருப்பது திறந்தவெளி கழிப்பகங்களே!

நகர்மன்றத் தலைவர் அவர்களுக்கு ஏதேனும் நிர்ப்பந்தம் இருப்பின் அதனை அவர்கள் அறிவிக்க வேண்டும்.இதனை எதிர்க்கும் முகமாக ஒட்டுமொத்த நகரமும் அணிவகுத்து நிற்கிறது என்பதனை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by சாளை நவாஸ் (sg) [05 August 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 6674

NSE மஹ்மூத் மாமா, உங்கள் கருத்துக்கள் எல்லாம் எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இனிமேல் செயலில் தான் காட்டவேண்டும்..நம் வீட்டை நாம் தான் சுத்தபடுத்த வேண்டும். இப்படி பேசிகொண்டிருந்தால் அங்கே செயல் திட்டம் முளைக்க ஆரம்பித்து விடும். அதை கிள்ளி எறிவது நம் கடமை.

இனிமேல் நாம் என்ன தான் செய்ய வேண்டும் ? திட்டம் இல்லா எல்லாம் செயலும் தோல்வியிலே முடியும். இதோ திட்டம் வகுப்போம். ஒன்று படுவோம். வாருங்கள் .

மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Javed Nazeem (Chennai) [05 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6676

சும்மா இருக்கவன சொறிஞ்சி உட்டுட்டாங்கடா (34) is an apt comment.

In an attempt to backup the valuable comments made here, I have made a PDF and posted in the below link. Comments till 39 appear in that file.

http://wp.me/p1tjVx-e

If anybody has an objection, pls let me know.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Print Out to the President
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [08 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6731

இன்ஷா அல்லாஹ், இங்கு பதியப்பட்டுள்ள சில கருத்துக்களை பிரிண்ட் செய்து நகராட்சி தலைவருக்கு கூரியர் மூலம் அனுப்பலாம் என்றிருக்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Riyas (Chennai) [09 August 2011]
IP: 136.*.*.* United States | Comment Reference Number: 6737

இந்த திட்டம் முற்றிலு நமது ஊருக்கு பொருந்ததா திட்டம்,இந்த திட்டத்தினால் நமது உருரின் சுத்தம் சீர்கெட்டு போகும் என்பது உறுதி.அதனால் இந்த திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்தி விட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:பாதாள சாக்கடைத் திட்டம் ம...
posted by Ahamed (Chennai) [09 August 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 6761

13 . அப்போது பேசிய கமிஷனர் கண்ணையா, பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு எடுத்துள்ளது. எனவே கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றார்.
------------------------------
நமது எதிர்ப்புகளை இங்கு தெரிவித்தால் மட்டும் போதாது. மாறாக,
1 . உரிய அதிகாரிகளுக்கு EMAIL மூலம் நமது எதிர்ப்பை தெரிவிக்கலாம்.

2 . நமவூர் / வெளியூர் பொது நல சங்கங்கள் மூலம் நமது எதிப்பினை தெரிவிக்கும் பொருட்டு " ஒவ்வொருவரும் கையெழுத்து" போட்டு அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் கவனத்தை திசை திருப்பலாம்.

3 இதனையும் மீறி பாதாள சாக்கடை திட்டத்தை அமுல்படுத்த முற்பட்டால் "போராட்டத்தில் ஈடுபடலாம்".

முளையிலேயே கில்லி எரிவது நல்லது.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Letter sent to the President
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [10 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6784

Assalamu Alaikum,

The comments of brothers N.S.E. மஹ்மூது (Kayalpatnam), Shameemul Islam SKS (Chennai), and முத்துவாப்பா (அல்-கோபர்) were printed and couriered to Haji Wavoo Abdul Rahman, our municipality president. The full letter, its word document and PDF versions can be found at http://wp.me/PmMJ0-f1

I also request other brothers to send letters to the president or their Ward members. Their addresses can be found in this website http://kayalpatnam.com/municipality-councillors.asp


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved