Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:48:36 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7001
#KOTW7001
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011
நகராட்சித் தேர்தலை கருத்திற்கொண்டு, ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவக்கம்! உலக காயலர்களுக்கு ஓர் அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7230 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (52) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் நகர மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டும் முகமாக ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ ‘MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA)‘ என்ற பெயரில் அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.

அவ்வமைப்பின் சார்பாக காயல்பட்டினம் பொதுமக்கள் கவனத்திற்கு ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கை பின்வருமாறு:-

எல்லையிலா வல்லமையின் அல்லாஹ்வின் திருப்பெயரால்!

உலகெங்கும் வாழ்கின்ற காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

இன்ஷாஅல்லாஹ், எதிர்வரும் அக்டோபர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருப்பது தாங்கள் அறிந்ததே! கடந்த தேர்தலின்போது, நகர்மன்ற உறுப்பினர்களுள் பெரும்பான்மையானோர், நமது ஆய்வு செய்யாத அவசர புத்தியால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மோசமான விளைவுகளையும், சுயநலமிகளால் ஏற்பட்ட கேடுகளையும், கடந்த ஐந்தாண்டு காலமாக நாம் அனுபவித்தோம். நகர்மன்றத்திற்கு நல்ல தலைவர் கிடைத்துவிட்டார் என்று நிம்மதி அடைந்த நாம், சரியான மன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டதால் நகர்மன்றம், நாறும் மன்றமாகிவிட்டதை கண்கூடாகக் காண்கிறோம்.

இந்த முறையும், கடந்த முறையைப்போல, எடுத்தோம்,கவிழ்த்தோம் என்று சமூக அக்கறை இல்லாதவர்களை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கும் அவல நிலை ஏற்படாமல் தடுக்க நாம் சிந்தித்து செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். தனி நபர்களின் விருப்பத்தை தாண்டி, ஒட்டுமொத்த நகர மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ஜனநாயகரீதியான ஒரு மன்றம் அமைக்கப்பட்டால் மாத்திரம்தான், நாம் எதிர்பார்க்கும் நல்லதொரு காயலை கட்டமைக்க முடியும்.

அப்படிப்பட்ட ஒரு மகத்தான பணி நடந்தேறவும், நல்ல ஒழுக்கசீலர்களை தேர்ந்தெடுக்க மக்களை வழிநடத்தவும்,உலகளவில் சமூக ஆர்வலர்கள் ஒன்றுகூடி,ஒரு தற்காலிக அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்ற ஏராளமான காயலர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, அல்லாஹ்வை முன்னிறுத்தி, நகர்நலன் ஒன்றை மாத்திரமே கருத்திற்கொண்டு MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA) என்னும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிகாட்டும் தற்காலிக அமைப்பு இன்றுமுதல் செயல்படத் துவங்குகிறது என்னும் இனிய செய்தியை உலகெங்கும் வாழும் காயலர்க்கு அறியத் தருகிறோம்.

இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக மரியாதைக்குரிய சாளை ஷேக் சலீம் (அமீரக காயல் நல மன்ற துணைத் தலைவர்), ஃபாஸுல் கரீம் (கத்தர் காயல் நல மன்ற தலைவர்) ஆகியோர் பொறுப்பேற்கின்றனர்.

இதன் துணை ஒருங்கிணைப்பாளராக சாளை நவாஸ் (சிங்கப்பூர்) அவர்களும், செய்தித் தொடர்பாளராக கவிமகன் காதர் அவர்களும் பணியாற்ற இசைந்துள்ளனர். இந்த MEGA என்னும் தற்காலிக அமைப்பிற்கும், உலகின் காயல் நல மன்றங்கள் மற்றும் வேறெந்த சமூக, கொள்கை, அரசியல் அமைப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதனை உறுதிபட அறியத் தருகிறோம்.

கடந்த காலங்களில் நாம் எத்தனையோமுறை நகர்நலன் கருதி நமது காயல்பட்டணம்.காம்இல் செய்த விவாதங்கள், காயல் மாநகரில் வாழும் வாக்காளர்களை சென்றடையும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆதலால் உண்மை நிலையை ஊருக்கு எடுத்துச் சொல்லவும், அந்ந்தந்த பகுதிகளில் இருக்கும் ஜமாஅத் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்புகொள்ளவும், நல்லவற்றை பல்வேறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் மூலம் நகர மக்களுக்கு எடுத்துச் செல்லவும், நல்லவர்களை அடையாளம் காட்டவும் இப்படி ஒரு அமைப்பு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறோம்.

இன்றைக்கு நாம் துவங்கும் பணி, இன்ஷா அல்லாஹ் அடுத்த ஐந்து வருடங்களுக்கு, நகரத்திற்கும், நகர மக்களுக்குமான நல்லதோர் நகர்மன்றம் அமைவதற்கு அச்சாரமாக அமையவேண்டும் என்பதே எமது ஆசை, குறிக்கோள்.

இந்த அமைப்பிற்கு தலைமை ஏற்பதற்கும்,துணை ஒருங்கிணைப்பாளர், செயற்குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், என்று அனைத்து பொறுப்புகளுக்கும் வர விரும்பும், தன்னார்வலர்கள் தயவு செய்து, salai_saleem@hotmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.

ஒன்றுபடுவோம்!
நல்லதோர் நகர்மன்றம் அமைத்திடுவோம்!!


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர் - MEGA


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Mohamed Salih (Bangalore) [19 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7008

மாஷா அல்லா

இது ஒரு நல்ல முயற்சி ..

இந்த முயற்சி வெற்றி பெற எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்யவும் .

நான் இந்த குழுவில் இணைய ஆவள இருக்கிறன் .

சாலை சலீம் காக்க உங்க மெயில் செக் பண்ணுக ப்ளீஸ் ....

வித் பெஸ்ட் விஷ்செஸ்,

K. Mohamed Salih.
Bangalore.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by latif (riyadh) [19 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7010

its welcome , but it should voulnteers should be participate from other Jamaath also.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நாம் ஆக்கிய உறுப்பினர்) இவர் நம்மை ஏமாத்துவார்
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [19 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7011

இந்த காலத்தில் நல்லவர்கள் யாரும் நகராட்சி வார்டு உறுபினராக வர விரும்புவது இல்லை - நகராட்சியில் பணி புரியும் அரசு ஊழியர்கள் அத்தனை நபர்களும் பணத்தை (லஞ்சத்தை) குறிக்கோளாக கொண்டே தன் வேலையை செய்கிறார்கள் இதற்க்கு பக்க துணையாக நம் உறுப்பினர்கள் செயல் படுகிறார்கள் - நம்மிடம் அதை சரி செய்து தருகிறேன் இதை சரி செய்து தருகிறேன் என்று சொல்லி (அதிகாரி) கொஞ்சம் ரூபாய் 5000 பணம் (லஞ்சம்) எதிர்பார்க்கிறான் சொல்லி தனக்கு ஒரு 2500 ரூபாய் அதிகாரிக்கு 2500 ரூபாய் - அதிகாரியே பணம் எதிர் பார்க்கா விட்டாலும் நம் நகராட்சி வார்டு உறுப்பினர் இருக்காரே... ! இவர் தனக்காக அதிகாரி பேர் சொல்லி (நாம் ஆக்கிய உறுப்பினர்) இவர் நம்மை ஏமாத்துவார் ... ! இதான் இன்றைய மற்றும் நாளைய நம் நகராட்சி வார்டு உறுபினர்களின் மன நிலை...! இது மாறபோவது இல்லை... !

‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ மாற்றுகிறதா ? பார்போம் என் வீட்டில் 15 VOTE இருக்கு யாருக்கு (எந்த நல்லவருக்கு) VOTE போடணும் சொல்லுங்க ‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு அவர்களே....சொல்லுங்க...

தேர்தல் நாள் வரும் போது சொல்லுங்க... ! நீங்க சொல்ற நல்லவருக்கு 15 VOTE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Zubair Rahman (Bengaluru) [19 August 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 7012

இந்த அமைப்பின் அனைத்து செயல்களையும் வல்லோன் ரஹ்மான் வெற்றியாக்கித்தருவானவும் ஆமீன்.

சாலை சலீம் காக்கா, கவிமகன் காதர் காக்க, இன்னும் இப்பணியில் தங்களை இணைத்த , மற்றும் இணைக்க உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பிரார்த்தனையுடன் கூடிய நல் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by A.R.Refaye (Abudhabi) [19 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7013

தலைவர் என்பது ரொம்பபெரிய பதவி,

பொறுப்பு ,கௌரவம் மிகசிலர் மட்டுமே அதற்கு தகுதியானவர்கள்.ஒரு அலுவலகத்தை எடுத்துக்கொண்டால் உச்சனானிகொம்பில் ஒரு பெரிய தலைவர் அவருக்கு கிழே பல நிலைகளில் சிறிய,சின்னஞ்சிறிய தலைவர்கள் இருப்பார்கள்,இவர்கள் எல்லாம் சேர்த்து இழுத்தால்தான் அந்த தேர் நகரும்.

இதனால் நமது தனிப்பட்ட முன்னேற்றத்திர்க்கும் சரி, சமுதாய முன்னேற்றத்திர்க்கும் சரி தலைமைகுனத்தை வளர்த்து கொள்வது நல்ல தலைவர்களுடைய முக்கிய அவசியம்.

ஒரு தலைவன் எந்த புது விசயத்தையும் கற்றுக்கொள்கின்ற ஆர்வத்தோடு இருக்கவேண்டும் மற்றவர்கள் செம்மறி ஆடுகள் போல் ஒரே பாதையில் சென்றால் கூட , நாம் மட்டும் சுற்றி உள்ள மற்ற பகுதிகளை கண்காணிக்க வேண்டும்,இந்த பக்கம் போனால் என்ன?என்று யோசிக்க வேண்டும் அந்த ஆர்வம்தான் நமது சமுதாய முன்னேற்றத்திர்க்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது.

தலைவர்கள் யாரும் நடக்காத பாதையில் நடந்தால் மட்டும் போதாது யாரும் செய்யாத ஒன்றை செய்கின்ற திறமையும் பிறர் கண்ணில் படாத விஷயங்கள் இவர்களின் மனக்கண்ணில் தோன்ற வேண்டும் அரைத்த மாவையே அறைகிற குணம் பயன் படாது.

கையில் ஒரு பதவி பொறுப்பு வந்து விட்டால் நம் இஷ்டம் போல் தப்பு செய்யலாம் என்று நினைப்பது மனித இயல்பு அனால் தலைவர்கள் தப்பு செய்யக்கூடாது.

சிலர் வாய்கிழிய பேசுவார்கள் அனால் செயல் பாட்டில் ஒதுங்கி நிற்பதோடு குருக்கிடல்கள் வரும்போதெல்லாம் போதுமட சாமி என்று திரும்பி போகாமல் முன்னேற்றுபவர்கள் தான் தலைவர்கள்.

நாம் எந்த துறையில் இருக்கிறோமோ அது பற்றிய தெளிவு ஒரு தலைவர்களுடைய முக்கிய அவசியம் எப்பேர்பட்ட தலைவரும் அந்தரத்தில் கொடிகொட்ட முடியாது எத்தனை சிறப்பான லட்சிய கனவுகள் கொண்டிருதாலும் எதார்த்தத்தை புரிந்து தரையில் கால் பதித்து நிற்கிற தலைவர்கள்தான் மிகப்பெரிய வெற்றி அடைகிறார்கள்.

எனவே தயார் ஆகுங்கள் சிறந்த நகராச்சி தலைவர்களையும் அதை பெரும் பொருட்டு தொடங்கிய உள்ள MEGA அமைப்புக்கும் நல்ல தலைவர்களை தர......

நம் கருத்துக்களை தருவோம்.

A.R.Refaye- Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மீண்டும், மீண்டும் செய்த தவறையே செய்யாமல்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [19 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7019

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவங்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

இன்றைய நம் நகராட்சியின் செயல்பாட்டால் மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் - அதற்கு காரணம் மக்கள்தான்.

சென்ற தேர்தலில் சிந்தித்து செயல்பட்டு நல்ல உறுப்பினர்களை நகர் மன்றத்திற்கு தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தால் இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்காது.

-----------------------------------

மக்கள் மீண்டும் அதே தவறை செய்து அடுத்த ஐந்து வருடங்கள் கஷ்டப்படாமல் இருப்பதற்காக நம் சகோதரர்கள் பலரும் கலந்து ஆலோசித்து இந்த தேர்தல் வழிகாட்டு அமைப்பை தொடங்கியிருக்கிறார்கள்.

இது ஏதோ ஒரு சிலரின் சொல்படியோ அல்லது ஒரு கூட்டத்தின் சொல்படியோ இயங்கும் அமைப்பாக இல்லை - நகர மக்களின் ஒட்டு மொத்த குரலாக இருந்து செயல்படும் அமைப்பு என்பதை மக்கள் உணர்வீர்கள்.

இதில் அங்கம் வகித்திருக்கும் சகோதரர்கள் அனைவருமே சுயநலம் இன்றி அல்லாஹ்வை முன்னிறுத்தி, நகர்நலன் ஒன்றை மாத்திரமே கருத்திற்கொண்டு இந்த அமைப்பை துவங்கி இருக்கிறார்கள்.

-----------------------------------

மக்களே !

பொது மக்களாகிய நாம் மீண்டும், மீண்டும் செய்த தவறையே செய்யாமல் , இந்த முறை அவசரபடாமல் தீர ஆலோசித்து நல்ல உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து நகராட்சியை மலரச்செய்வோமாக, அதற்கு வல்ல அல்லாஹ்! அருள் செய்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by SyedAhmed (HK) [19 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 7020

அஸ்ஸலாமு அழைக்கும்

கவிமகன் காதர் காகா அவர்களின் இந்த அற்புதமான வரலாற்று சிறப்பு மிற்க முயற்சிக்கு வல்ல நாயன் வெற்றிகளை அளிக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் துஆ செய்ய வேண்டும்.

அறிவார்ந்த சமுதாய மக்களின் அணுகுமுறையை நூறு சதவிகிதம் உள்ளடிக்கியடாக இந்த திட்டம் அமைந்து உள்ளது.

நோன்பு மாதத்தில் உண்மையான சடகதுள் ஜாரியா செய்து உள்ளீர்கள். நன்மை விரும்பும் அனைவரும் இன்ஷா அல்லா உங்களுடன் நிற்பார்கள்.

உங்களுக்கு எனது நன்றியும் துஆவும் வாழ்த்துக்களும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by mohamed abdul kader (dubai) [19 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7024

அஸ்ஸலாமு அழைக்கும்

இது போன்று ஒரு அமைப்பு துவங்கப்பட்டிருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்படிப்பட்ட அமைப்புகல் நமது (ஒட்டு மொத்த) ஊரின் ஒவ்வொரு பொது காரியங்கள் செயல்படுத்தும்போது ஒவோன்றுகும் அமைத்து நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் .

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஜமாஅத் தலையிட்டு ஒரு நல்ல உறுப்பினர்.
posted by நட்புடன்... முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [19 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7025

இந்த முறை அவசரபடாமல் தீர ஆலோசித்து நல்ல உறுப்பினர்களை அந்த.. அந்த.. ஜமாஅத் தலையிட்டு ஒரு நல்ல உறுப்பினர் ஒருவரை தேர்ந்தெடுத்து நகராட்சியை மலரச்செய்வோமாக - வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by MAK.JAINULABDEEN(president,kakkum karangal narpanimandrum) (kayalpatnam) [19 August 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 7028

அஸ்ஸலாமு அலைக்கும். வெளிநாடு வாழ் காயல் நண்பர்களின் இந்த நல்ல முயற்சி கண்டிப்பாக நமதூருக்கு பயனளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. நிகரில்லா அன்புடையோன் ஆகிய அல்லாஹ் இந்த முயற்சியை வெற்றியாக்கி தருவானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. களம் இறங்கி கவனமுடன் செய்ய வேண்டிய அமானிதம்
posted by சட்னி.செய்யது மீரான் (.காயல்பட்டினம் ) [19 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7032

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ துவங்கி உள்ள சாளை சலீம் காக்கா, கவிமகன் அப்துல் காதர் தம்பி , இன்னும் இப்பணியில் தங்களை இணைத்துள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் அன்பான வேண்டுகோள் .

இதில் உள்ள நீங்கள் அனைவர்களும் கடல் கடந்து பணியாற்றுபவர்கள் ,நல்லவர்கள், பொதுநலவாதிகள். நீங்கள் எடுத்துள்ள பணி மிகவும் முக்கியமானது களம் இறங்கி செய்ய வேண்டியது ,மேலும் அதை விட அமானிதமானதும் ஆகும்.

நமது நகர் மன்றத்திற்கு இது வரை தலைவர்களாக வந்தவர்களில் சிலரை தவிர பெரும்பாலானவர்கள் நல்லவர்களாக,மறைந்தும் மரியாதைக்குரியவர்களாக உள்ளார்கள்.

இதுபோன்று உறுப்பினர்களாக பலரைத்தவிர ஒரு சிலர்கள் மட்டுமே நல்லவர்களாக,மக்கள் பணியாற்றுபவர்களாக இருந்தார்கள்,மேலும் இருக்கிறார்கள் .யாரை நாம் உறுப்பினர்கள் ஆக்கணும் என்பதை விட யாரை நாம் ஆக்க கூடாது என்பதில் மிக கவனம் செலுத்தி, விழிப்புனர்வூடன் இருக்கணும் . நாம் யாரை முன்னிருத்துகிறோமோ அவர்களை எல்லா விதத்திலும் உணர்ந்து செயல் புரியணும் . இறைவன் நாடினால் நல்லவர்கள் வருவார்கள் .

இப்பொழுது உறுப்பினர்களா உள்ள சிலர்கள் அடுத்து வர உள்ள தேர்தலில் மீண்டும் நிற்க ஆசைப்பட்டு அதற்கான வேளையில் இறந்க்கிவிட்டர்கள். பால் மட்டுமே குடித்தால் பரவாஇல்லை பால்தரும்பசுவின் மடுவையே அறுத்து தின்றவர்கள் ஆசை சும்மா விடுமா .ஆனால் உங்களை அல்லாஹ் சும்மா விடமாட்டன்.உஷார் உஷார்

நமது மக்களும் முன் போன்று உங்களை போன்று தறுதலைகளை தேர்ந்து எடுத்து இப்பொழுதும் தன் தலையில் தானே மண்ணை வாரி போட தயார் இல்லை. நீங்கள் குடிகாரர்கள், கயவர்கள், கள்ளர்கள் ,சுய நலவாதிகள் என்று தேர்ந்து எடுத்த ஒரு வருடத்திலே உங்களை அறிந்து இந்த நான்கு வருடத்தையும் கழித்து வருகிறார்கள் காயல் மக்கள்கள் ..

மீண்டும் உங்களை நம்பி பசுமாட்டை தந்து மடுவையும் இழக்க மாட்டோம் என மக்கள் முடிவு எடுத்து ரொம்ப நாளாகி விட்டது வேறு பிழைப்பை பார்த்து கொள்ளை அடித்த பொருள், சொத்துகளை நல்ல வழியில் செலவு செய்ய பாருங்கள். புண்ணியமாவது வரும் .

எங்கள் 5 வது வார்டு மக்கள்களின் பெரும்பாலான ஒட்டு பெற்று வார்டு உறுப்பினராகி ,அடுத்து தலைவரும் ஆகியுள்ள நடப்பு மன்ற தலைவர் அவர்களே கடந்த 5 ஆண்டுகாலமாக எங்கள் பகுதிக்கு வந்ததும் இல்லை, எங்கள் தேவை என்னவென்றும் தெரியாது இருந்து விட்டிர்கள் .இந்த அமர்வு முடிய இன்னும் சில நாட்கள் உள்ள இந்த நேரத்தில் வந்தாவது எங்களுக்கு என்ன செய்துள்ளிர்கள் .இன்னும் செய்யணும் என்று பாருங்கள். மக்களிடம் கேளுங்கள்.உங்களை தேர்ந்து எடுத்த மக்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய அமானிதம் இது .அல்லாஹ் பெரியவன்.

இந்த அமைப்பு உருவாக்கி உள்ள நல்ல உள்ளங்கள் நம் மக்களுக்கும், நகருக்கும் அவசியமான ,அவசரமான இந்த கால கட்டத்தில் நல்லதோர் பணி புரிய களம் இறங்கி செயல் ஆற்றிட வேண்டி ,விரும்பி கேட்டுக்கொள்ளும் ஆயிரமாயிரம் காயலர்களில் நானும் ஒருவன்.

அன்புடன்.சட்னி.செய்யது மீரான் .காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Cnash (Makkah) [20 August 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7037

நல்ல முயற்சி இதில் பங்காற்றிய உங்களுக்கும் இன்னும் பங்கு வகிக்க இருக்கும் ஆயிரகணக்கான பல நல்ல உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்!! இவ்வளவு நாள் விவாதம் செய்தது கருத்து பரிமாற்றம் செய்தது, எல்லாம் இன்று செயல்வடிவம் பெற்றுஇருக்கிறது, மேலும் செயலுக்கு (execution ) வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. நல்ல ஒரு உறுப்பினரையும் தலைவரையும், ஒரு முன்மாதிரி நகர்மன்றதையும் பெற்று தந்ததிற்காக ஆயிரமாயிரம் நல்லோர்களில் துஆ என்றும் உங்களுக்கு இருக்கிறது!! இதில் என்னையும் ஒருவனாய் மகிழ்ச்சியோடு இணைத்து கொள்கிறேன்!!

இது ஒரு நல்ல துவக்கம்!! இதன் நோக்கம் வெற்றி பெறுவது நம் கையில் தான் உள்ளது இது தான் நல்ல தருணம்!! ஒரு அண்ணா ஹசாரேயின் முயற்சி இன்று பல கோடி இந்திய மக்களை ஊழலுக்கு எதிராக தட்டி எழுப்பி தெருவுக்கு வந்து போராட செய்து இன்று ஆளும் வர்கத்தையும், பாராளுமன்றம் முதல் பட்டிதொட்டி வரை ஸ்தம்பிக்க செய்து இருக்கிறது !!

தனிஒரு மனிதன் Facebook மூலம் செய்த புரட்சி இன்று எகிப்தில் இன்று ஒரு ஊழல் சாம்ராஜ்யத்தையே வீழ்த்த உதவியது!! அது போல நாம் இன்று இந்த இணைய தளத்தின் மூலம் இணைக்கும் கை ஒரு புரட்சிக்கு வழிகண்டு...ஊழல் பேர்வழிகளை அடையாளம் கண்டு நால்லோர் நிரம்பிய நகர்மன்றமாக, ஊரு நலனில் மக்கள் நலனில் அக்கறை கொண்ட உறுப்பினர்கள் நிறைந்த மாமன்றமாக உருவாக கட்சி பாகுபாடுகள் மறந்து, கொள்கைகள் மறந்து, வேறு எல்ல வேற்றுமையும் மறந்து நம்நலனுக்காக கை கொடுப்போம்!! வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்!

இந்த இயக்கத்தில் இணைய இருக்கும் உறுபினர்கள் மற்றும் நிர்வாகிகள் வசதிக்காக இந்த செய்தியை kayal .com ஒரு flash message ஆகவோ POP UP ஆகவோ செய்து இந்த இணையத்தில் வைத்தல் பல உறுபினர்கள் இணையவும் இன்னும் இந்த செய்தி பல வாசகர்களை சென்றடையவும் இலகுவாக இருக்கும். நண்பர் கவிமகள் அவர்கள் இதற்க்கு முயற்சி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ َ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Najeeb nana (Kayalpatnam) [20 August 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 7042

சகோதரர் மீரானின் 5 -வது வார்டு உறுப்பினரை பற்றிய கருத்து முற்றிலும் சரியே. வேறு யாரும் இல்லீங்கே அது, நமது நகர் மன்ற தலைவர்தான்.

இந்த 5 -வது வார்டின் மறைந்த உறுப்பினரை போன்று அனைத்து உறுப்பினர்களும் இருந்தால் "நாம் காணும் நகர் மன்றம்" நம் கண் முன்னே வந்து நிற்பதற்கு எந்த தடங்களும் இருக்காது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [20 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7048

சிங்கம் ஒன்று புறப்பட்டதே..

இதற்க்கு பின்னால் வர எம்மையும் சேருங்கள்.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Siddiq (Chennai) [20 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7052

அஸ்ஸலாமு அலைக்கும்.

களத்தில் இறங்கி வேலை செய்பவர்களை தேர்ந்து எடுத்தால் சிறப்பாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Javed Nazeem (Chennai) [20 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 7053

எம்மையும் சேருங்கள். M.I. யும் சேருங்கள் :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by salih (bangkok) [20 August 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 7056

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ ‘MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA)‘ என்ற பெயரில் அமைப்பு துவக்கப்பட்டுள்ளதை கேள்விப்பட்டு மிக்க சந்தோஷம்.

ஜனநாயகரீதியான ஒரு மன்றம் அமைக்கப்பட்டு நம்மக்களுக்கும்,நகருக்கும் அவசியமான நல்லபல திட்டங்களை செயல்படுத்திட பாடுபடும் MEGA அமைப்பிற்கு எனது ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இந்தியா மற்றும் உலக காயல் நல மன்றங்களையும் இணைத்து செயல்பட்டால் இன்னும் வலிமையோடு செயல்படலாம்.வெற்றி பெற வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. பூமி பந்தில் ஒரு புதிய வெளிச்சம்
posted by musthak ahamed (mumbai) [20 August 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 7057

அஸ்ஸலாமு அழைக்கும் ரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு

சில நிகழ்வுகள் இப்படித்தான் நடந்து விடுகிறது..............எழுத்து என்பது அல்லாஹ் கொடுத்த அருட்கொடை இது பற்றியும் நாளை தலைக்குமேல் சூரியன் தகிக்கும் வேளை விசாரிக்கபடுவோம்.

மாற்றம் மட்டும் தான் மாறாதது ........என்ற உலக உண்மையின் அடிப்படையில் இதுவும் மாறும்..........

இந்த உலகம் தோன்றியதில் இருந்து எத்தனை சர்வதிகாரர்கள், அல்லாஹ்விடமே போட்டி போட்டு அரண்மனை கட்டிய மன்னர்கள். நான்தான் மன்னன் என்றான் செருக்கு தலைக்கேறி .......நான் தான் கடவுள் என்றான்........ பின் சிறு எறும்பு தலைக்கேறி கிறுக்கனாய் மரித்தான்...........

ஒரு நாள் வரும்............இவ்வுலகம் அழிக்கப்பட்ட தருணம்....... கேட்பான் .......எவனடா மன்னன்.......எவனடா அரசன்........எழும்பி வாடா..........என்பான்............சவால் விடுவான்..................

இது எல்லோருக்கும் தெரியும்............இருப்பினும் தற்காலிக செருக்கு கண்ணை மறைக்கிறது.............

அல்லாஹ்வே ஆட்சி அதிகாரத்தை வழங்குகிறான் .........நியாய நகர்வுகளில் சந்தோசம் கொள்கிறான். நிலைக்க செய்கிறான்........ இம்மையிலும் மறுமையிலும் பெருமை படுத்தி சந்தோசம் கொள்கிறான்.........

அநியாயம் தலை விரித்தாடும் போது அவன் சத்தியம் செய்தானே ....எழுதுகோல்.......... அதனை கொண்டே அழித்துவிடுவான்...........

இதற்கு அண்மை சான்று எகிப்திய புரட்சி............

இதோ தொடங்கிற்று ,,,,,,,,,,,,,,,,,,ஒரு புனித புரட்சி.............

பூமி பந்தின் ஒரு புதிய வெளிச்சம் ........நம் காயலில்.......தொடங்கிற்று......... ஆலிம்கள்,,,,,,,,கல்வியாளர்கள்........சான்றோர்கள் ....அனுபவஸ்தர்கள்.... தனவந்தர்கள்..............எல்லோரும் இதில் இணைந்து விடுவதுதான் உத்தமம்...................... இருட்டை போக்க ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது.......

நாமும் இணைந்து கொள்வோம்.............

நாளை இறைவனின் கேள்விக்கான பதிலை தயாரித்து கொள்வோம்............

அமைப்பின் தோற்றம், குறிக்கோள், அதன் செயல் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு தெரியபடுத்த வேண்டும்........

இதுதான் போர்...........இதுதான் ஜிஹாத்...................

விதைக்க துவங்குவோம்............காயங்களை மருந்தாக்குவோம்.......

ஒரு வேளை அருப்பததற்கு நாம் இல்லாமல் போகலாம்.......... நம் சந்ததியினர் சந்தோசமாய் இருப்பார்கள்...........

எவருக்கும் அஞ்சாது..........எல்லை தொடும் வரை கண் துஞ்சாது...... உழைப்போம்............. இதுவும் மாறும்............................நம் கனவு கண்ட காயல் நம் கண் முன்னே விரியும்..............

உங்களோடு இணைய என் கரங்களை நீட்டுகிறேன்................

மாற்றம் வேண்டும் அனைவரும் மாறத்தான் வேண்டும்.............

அல்லாஹ்வின் அருள் எப்போதும் நம் அனைவர்களின் மீதும் பரவட்டுமாக............. இந்த அமைப்பின் அனைத்து அன்பர்களுக்கும்.......வாழ்த்துக்கள்.....

நிறைய கனவுகளோடும்.............நிறைவேற்றும் முயற்சிகளோடும்......

முஸ்தாக் அஹ்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by SHAIK (colombo) [20 August 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 7061

அஸ்ஸலாமு அழைக்கும்

என்னையும் இதில் இணைத்து கொள்ளுகின்றேன் என் குடும்பாதரயும் இணைத்து கொள்ளுகின்றேன்

ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by குல்குஸ்மா முத்துவாப்பா... (அல்-கோபர்) [20 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7062

MEGA அமைப்பு எல்லாம் வல்ல இறைவனின் உதவியால் மகா வெற்றி பெற வாழ்த்துக்கள் . இந்த அமைப்பின் உறுப்பினர்களே நம் நகர் மன்ற உறுப்பினர்களாக வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் . கத்தி முனையை விட கூர்மையாய் இருந்து குத்திக் கிழிக்கட்டும் உங்கள் எழுத்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. சபாஷ்.! காயலின் அன்ன ஹசாரேக்களே !!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [20 August 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7064

அப்பாடா... ஒரு வழியா எத நினைத்தோமோ அதே நடக்க அல்லாஹ்வால் உருவாக்க வடிவம் தரப்பட்ட அமைப்பு தான் இந்த அமைப்பு..... அல்ஹம்து லில்லாஹ்...

ஆன் லைன் மூலமா இன்றைக்கி என்னென்னமோ நடக்ற இந்த உலகத்துல after all ஒரு நகராட்சி தூய்மை கொண்டதாக அமைத்துக்கொடுக்க நம்மால் முடியாத என்ன? வருங்க தோழர்களே.... வீறு கொண்டு எழுவோம்....
களப்பணி ஆற்ற திறமை வாய்ந்த இளம் வாலிப பட்டாளங்கள் கிளம்பட்டும்!
இந்தியா விலேயே ஒரு முன் மாதிரி கிராம மாக திகழ நம் நகரத்தின் நகராட்சி அமைப்பை நாம் உருவாக்கி காட்டுவோம் !!

யாரோ சிலர் எடுக்கும் முடிவை மாற்றி ...அரசியல் ...ஊழல் ....அற்ற உண்மையான சமுதாய உணர்உள்ள சிறந்த நிர்வாகத்தை உருவாக்கி இந்த தலை முறைக்கு மட்டும் அல்லாமல் வருகிற சந்ததியும் பலன் பெரும் வண்ணம் நாம் செயல் ஆற்றுவோம் வாருங்கள் தோழர்களே...உங்கள் பதிவை... இந்த காயல்பட்டணம் .காம் மூலம் பதிந்து இந்த அமைப்பை உருவாக்கியவர்களுக்கு தோளோடு தோள் கொடுக்க வீறு நடை போட சீறி எழுங்கள் தோழர்களே!

இன்னும் நாம் உறங்கியது போதும்.... விழித்துக்கொள்ளுங்கள். இல்லையேல் நிரந்தரமாக தூங்க வேண்டியது தான் வரும்... அல்லாஹ் இனியாவது நம்மை தீயவர்கள் பிடியிலிருந்தும் பாது காப்பான்...

அன்னா ஹஜாரே இப்போ இந்த அமைப்பின் உருவில் கவிமகன் காதர் ...சாளை சலீம் ...கத்தார் பாஜ்ல் கறீம் போன்றவர் வடிவில் நம் முன்னே தோன்றி இருக்கிறார்....நழுவ விடாதீர்....அலை அலையாய் திரண்டு அணி சேர்வீர் .....ஊரில் இருக்கும் நம்மவர்களை இந்த அணியில் ஒன்று சேர்வதற்கு ஊக்கம் ...ஆக்கம் கொடுப்பீர்.......

எங்கள் K.V.A.T. அறக்கட்டளை உங்களோடு தோள் கொடுப்பதற்கு தயார் !!! எங்களை போன்று யாரெல்லாம் அணி சேர வருகிறீர்களோ அனைவர்களும் அல்லாஹ்விடத்தில் நல்லதோர் அருளை பெற முடியும் ....இது ஒரு சமுதாய புரட்சி மட்டும் அல்ல.....இஸ்லாமிய வாழ்க்கை நெறிமுறைக்கு வித்திடுவது என்பது தான் எதார்த்தம் !!!

தூய எண்ணத்தோடு துவக்கப்பட்டு ....சிறிதும் சுய நலனே இல்லாமல் செயல் பட துடிக்கும் கவிமகன் காதர் போன்றோர்களின் (யாரெல்லாம் துணையாக நிற்கிறார்களோ அனைவர்களின் ) சிந்தனை வடிவம் செயலாக மாற்றி காட்ட அணி அணி யாக திரள்வீர் !!! நாளைய உலகம் நம் கையில் என்பதை நிரூபித்துக் காட்டுவீர் தோழர்களே ........

சட்னி மீரான் அவர்களே... நமதூர் நகராட்சி தலைவர் அவர்களை தயவு செய்து குறைத்து மதிப்பிடாதீர் ...நமதூர் .வரலாற்றில் இடம் பெற்ற தூய மா மனிதர் அவர்...அன்று ஒரு ஆனா கானா ...இன்று ஒரு ஆனா ரானா ...இதை நாளைய தலை முறை சொல்லும் ....நம் தலை முறை குடிக்கும் தண்ணீர் உள்ள வரை ....சேவை செம்மல் ....கரை படாத கரத்துக்கு சொந்த காரர் ....அவர் நம்ம வார்டுல நின்னா நமக்கு தான் பெருமையே தவிர அவருக்கு அல்ல... குறை சொல்லவோ குதிக்காடவோ அல்ல ....ஒரு சிறிய விளக்கம் அவ்வளவு தான் .....

எழுச்சி கொள்ள தூண்டும் நெஞ்சம் ,
K.V.A.T. ஹபீப் முஹம்மது
தோஹா/கத்தார் .
kvat.habib@gmail.com
00974 55657147


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. கறை படாத கரத்திற்கு சொந்தக்காரர்
posted by சட்னி.செய்யது மீரான் (காயல்பட்டினம் ) [20 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7070

அஸ்ஸலாமு அலைக்கும்...

யாரையும் குறை கூறவோ ,குற்றம் சாட்டவோ, முகஸ்துதி ,குஷி படுத்தவோ நாம் முற்பட்டால் நமக்கு வேண்டால் நல்லதாக தோன்றலாம் நம்மை தேர்ந்து எடுத்த மக்களுக்கு அதில் எந்த நன்மையையும் இருக்காது. என்னை நீங்கள் தேர்ந்து எடுத்தால் உங்களுக்கு நான் என்னால் இயன்ற நற்சேவை செய்வேன் என்று சொல்லி ஓட்டுகளை பெற்று உறுப்பினர் ஆகி விட்டு அந்த மக்களுக்கு எந்த வித உதவியும் செய்யவில்லை என்றாள் என்ன சொல்வது . நகர் மன்ற தலைவர் ஆக இருந்தாலும் எங்கள் 5 வது வார்டுக்கு உறுப்பினர் ஆவார்கள் . நகர் மன்ற தலைவர் அவர்கள் உங்களுக்கு மட்டும் அல்ல எங்களுக்கும்,நம்மில் அனைவருக்கும் மரியாதைக்கும், மதிப்பிற்கும் உரியவர்கள் நல்லவர் கறை படாத கரத்திற்கு சொந்தக்காரர் என்பதில் எள் முனை அளவேனும் சந்தேகம் இல்லை.

எங்கள் 5 வது வார்டுக்கு உறுப்பினர் ஆகி நல்லதோர் சேவை செய்த மறைந்த ஜனாப்,ஜாவீத் முஹ்சீன் அவர்களை இன்றலவூம் மக்கள்கள் மனதார பாராட்டி ,துவா செய்கிறார்கள். வாழ்ந்தவர் கோடி ,மறைத்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவரே மாபெரும் மனிதர் ஆவார்கள் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். உள் சுவரை பூசி விட்டு வெளி சுவரை புசனும் என்று நம் முன்னோர் சொன்ன முதுமொழி காதில் கேட்டு கொண்டு இருப்பதால் இந்த ஏக்கமுடன் கருத்தை பதிவு செய்கின்றோம் .

நாளை வரும் நம் உறுப்பினர்களும்,தலைவர்களும் இதனை இவர்களை போல் பின்பற்றினால், மேலும் மக்கள் குறை பேசினால் உங்களை போல் வருத்த படனும் நாங்களும், நமதூர் மக்களும். நல்லதை எண்ணுவோம் நன்மைகளை செய்வோம்

நாயன் அல்லாஹ்வின் நல்லுதவியால்.

இன்ஷா அல்லாஹ் என்றும் மாறா அன்புடன்

சட்னி.செய்யது மீரான்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by vsm ali (Kangxi , Jiangmen, China) [21 August 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 7071

MEGA படிப்பதற்கு நன்றாக உள்ளது. அதில் என்னை சேருங்கள் , என் குடும்பத்தார் அனைவரும் MEGA வில் இணைகிறோம் , அதற்காக உழைக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். ஒருசிலர் மன்ற தலைவர் , மன்ற உறுப்பினர்களை சாடியும் உள்ளார்கள். ஒருமுறையாவது தலைவர் எங்கள் பகுதிக்கு வந்திருப்பாரா ? மன்ற உறுப்பினர் எங்கள் குறைகளை கவனித்திருப்பாரா ? என்றெல்லாம் கேள்விகள்.

நான் கேட்கிறேன் , மன்ற தலைவரோ , மன்ற உறுப்பினரோ நம் குறைகளை கவனிக்கும் அளவுக்கு நாம் விட்டுவைத்திருக்கிறோமா? அனைத்தையும்தான் நாமே வழிய சென்று லஞ்சமாக கொடுத்து, வேலையை முடித்து விடுகிறோமே! பிறகு, அவர்களுக்கு எப்படி தெரியும் நம் குறைகள். ஒரு வேலை நடக்க வேண்டும் என்றால், நாம் சற்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும், நடக்காத பட்சத்தில் இவர்களை நாட வேண்டும். ஆனால் நமக்கோ அவசரம், லஞ்சத்தை வழிய சென்று கொடுத்து அந்த வேலையை முடித்து விடுகிறோம்.

அதிகாரிகளும் , ஏழை , பணக்காரன் பாகுபாடின்றி அனைவரிடமும் லஞ்சம் எதிர்பார்க்கிறார் . கொடுக்க முடியாதவர்கள் புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். " மக்கள் எவ்வழியோ , அவ்வழிதான் மன்றமும்," Birth certificate முதல் death certificate வரை நாமே வழிய சென்று சில நூறுகளை கொடுத்து அவசரமாக காரியத்தை முடிக்கிறோம். யாருடைய தவறு ?

postman , money order பணம் கொண்டுவந்தால் , அவருக்கு " கை மடக்கு " . எதுக்கு என்று கேட்டால் " ஒரு சந்தோசத்துக்குத்தான் " என்கிறார்கள் . இது யாருடைய தவறு ?

குப்பை வண்டி வரும் நேரம் குப்பையை வண்டியில் கொட்டாமல் , வேலைக்காரி வந்ததும் , தெருவில் கொட்டுவது . இது யாருடைய தவறு ?

திருட்டுத்தனமாக தண்ணீர் உறிஞ்சி , ஏமாந்தவர்களுக்கு கண்ணீரை தண்ணீராய் கொடுப்பது . இது யாருடைய தவறு ? இதை ஒரு நகர் மன்ற தலைவரோ , உறுப்பினரோ வீடு வீடாக போய் பார்க்க சாத்தியமா ?

ரோட்டை அடைத்து , மேடை போட்டு , திருமணங்கள் , விருந்துகள். போக்குவரத்திற்கு இடையூறு . இது யாருடைய தவறு ?



வீடு கட்டுறேன், காங்கிரீட் போடுறேன் என்று சொல்லி , நாட்கணக்கில் , தெருவில் மணல் , கற்களை போட்டு , போக்குவரத்திற்கு இடையூறு . இது யாருடைய தவறு ?

ஆக இப்படி தவறுகள் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மன்ற உறுப்பினரையும் , தலைவரையும் தேர்ந்தெடுத்தது நாம்தானே ? நாம் தவறு செய்து விட்டு , அவர்களை குறை சொன்னால் பொருந்துமா ? வரும் தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் அப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் , இப்படி உள்ளவராக இருக்க வேண்டும் என்றெல்லாம் சொல்லும் மக்கள், நாம் நகராட்சி விதிகளுக்கு உட்பட்டு, இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, என்றைக்காவது நினைத்தது உண்டா?

ஆக , நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்களையும் , தலைவரையும் குறை சொல்ல கூடாது. குறை நம்மிடம்தான் உள்ளது . முதலில் அதை நிவர்த்தி செய்ய வழி தேடுங்கள்.

Administrator: Portion not relevant to news item edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [21 August 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 7074

சகோதரர் சட்னி செய்யத் மீரான் அவர்களே!

எனது பதிவை சரியாகப் புரிந்துககொள்ளாமல் ஏனோதானோவென்று மறுப்புரை எழுதி இருக்கின்றீர்கள். ஒரு வார்டு மெம்பராக அவரிடம் இருக்கும் சிற்சில குறைகளை, ஒரு நகர்மன்றத் தலைவராக அவர் செய்த நிறைகளை எண்ணி பொருந்திக்கொள்ளுங்கள் என்பதுதான் எனது கருத்து. அடுத்த தலைமுறையின் தாகம் தீர்க்க உதவிய ஒரு பண்பாளரின் கண்ணியம் காக்கப்படவேண்டும் என்று எழுதுவது முகஸ்துதியா? முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அல்லாஹ்வின் உதவியால் வேறு யாரிடமும் கையேந்தாமல் பொதுசேவை ஆற்றி வரும் எனக்கோ, எங்கள் கே.வி.ஏ.டி.அறக்கட்டளைக்கோ யாரையும் முகஸ்துதி செய்து பயனடையும் வழக்கம் எந்தக்காலத்திலும் இல்லை. இனிமேலும் அப்படிப்பட்ட சூழ்நிலை வராமல் இறைவன் காப்பாற்றுவான்.

பள்ளிப்பருவம் முதற்கொண்டு, இளம்பிறைக்கொடியை கரத்திலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை இதயத்திலும் ஏந்திய எனது ஆருயிர்த் தோழர் மர்ஹூம் முஹ்சீன் அவர்களது சேவையை நீங்கள் சொல்லி தெரிந்து கொள்ள கூடிய நிலையில் நான் இல்லை.

இந்த புனிதமான ரமழானில், நான் வைத்த வைக்கின்ற கோரிக்கை எல்லாம், கண்ணியத்திற்குரியவர்களின் சிறுசிறு குறைகளை பெரிதுபடுத்த வேண்டாம் என்பது மாத்திரமே! மற்றவர்கள் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதனை புரிந்து, பதில் எழுதுவதே அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்க முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இன்ஷா அல்லாஹ் அமையட்டும் சிறந்த / முன்மாதிரி நகர் மன்றம்
posted by Mauroof (Dubai) [21 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7075

FIRST OF ALL I SALUTE THE ORGANIZERS OF THE "MEGA".

பல காரியங்களின் வெற்றிக்கு அடித்தளமாக அதன் பெயரும் ஒரு காரணியாக விளங்குவதுண்டு. அதே போன்று அமைக்கப்பட்டுள்ள "MEGA" (நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு) என்பதும் இன்ஷா அல்லாஹ் அது பெறப்போகும் மகத்தான வெற்றியை பாறைசாற்றுகிறது அல்ஹம்துலில்லாஹ்.

"இவர்கள் எதிர்பார்க்கும் நகர்மன்றம்" குறித்து நகரின் நலனில் அக்கறை கொண்ட சகோதரர்கள் பலரின் விரிவான கட்டுரைகள் மிகுந்த மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியது. மேலும் இந்த விருப்பங்கள் ஒரு அமைப்பாக உருவாக காரணகர்த்தாவாக இருந்தவர்களும் / இருக்கின்றவர்களும் மேலும் இவ்வமைப்பில் நகரின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இணைய இருக்கும் சகோதரர்களும் மிகுந்த மதிப்பிற்கும் பாராட்டிற்கும் உரியவர்கள்.

நகர மக்கள் முழுமையாக இவ்வமைப்பிற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் நகர் நலனில் அக்கறை கொண்ட ஆன்றோர்களும் சான்றோர்களும் எதிர்பார்க்கும் ஒரு சிறந்த நகர் மன்றம் அமைவது சாத்தியமே என்று உறுதிபட கூறுவதுடன் என்னால் ஆன பங்களிப்புகளையும் நல்கிட விழைகிறேன் இன்ஷா அல்லாஹ். வாழ்த்துக்கள் அன்பர்களே.

மேலும் இந்த அறிக்கையின் வாசகர் கருத்து பகுதியில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by V D SADAK THAMBY (Guangzhou(China)) [21 August 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 7077

MEGA வின் நோக்கம் நன்றாகவுள்ளது.

அப்படியானால் காயல் ஐக்கிய பேரவை ? தேவை இல்லையா? ஏன் MEGA காயல் ஐக்கிய பேரவைக்கு இது சம்பந்தமான ஆலோசனைகளை வழங்கக்கூடாது? காயல் ஐக்கிய பேரவையை ஒதுக்கி பின்தள்ளிவிட்டு, MEGAவை முன்னிறுத்துவது எதிவிளைவையே உண்டுபண்ணும். சமுதாயத்தை பிரித்துவிடும் செயலாக அமைந்துவிடக்கூடாது. சென்றமுறை பிற சமூகத்தினர் 5 இடங்களை கைப்பற்றினர். காயல் ஐக்கிய பேரவையின் வழிகாட்டுதல் இல்லாமல் MEGA தனிமுகமாக செயல்பட்டால், இந்த 5 இடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சிலரின் நகரமன்ற தலைவரின் செயல்பாட்டை குறைசொல்லும் போக்கு நல்லதல்ல. இது ஒற்றுமைக்கு பதிலாக வேற்றுமையை உண்டாக்கும்.

கருது சொல்லும் சாக்கில் மனம் வந்த வாக்கில் குற்றம் சாட்டக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by jamal (srilanka) [21 August 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 7078

இந்த அமைப்பு தேவையான ஒன்றுதான். ஒருசிலரின் கையில் சர்வாதிகாரமாக செயல்படும் அமைப்பை விட இவ்வாறு ஜனநாயக ரீதியாக ஓப்பனாக செயல்படும் அமைப்பு வருவது நமது ஊருக்கு நல்லது. எதையும் வெளிப்படையாக பேசலாம். ஒருபக்க சார்பு இருக்காது. எனது ஆதரவு இந்த அமைப்பிற்கு என்றும் உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Ibrahim (Hong Kong) [21 August 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 7079

இப்போது எல்லாம் சரி தான். Election வரும் போது இவன் இந்த கொள்கை அவன் அந்த கொள்கை என்று வராமல் இருந்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by சாளை நவாஸ் (singapore) [22 August 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7082

சகோதரர் சதக்தம்பி அவர்களே, உங்கள் கருத்தை நானும் ஆதரிக்கிறேன்.எந்த பேரவையும் வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் எங்கே போனது செயல்பாடு? பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வந்த பொது, ஊர் நலன் கருதி அறிக்கை ஏதும் விட்டார்களா? இல்லை. நாகராட்சி தேர்தல் அறிக்கை விட்ட போது ஏதும் அறிவிப்பு செய்தார்களா? இல்லை. ஊர் நலன் என்ற பொறுப்பை கையில் எடுத்துக்கொண்டு உறங்கி கொண்டு இருந்தால், பறிப்பவர் பறித்து கொண்டு பொய் விடுவர், அதில் என் உரிமையும் சேர்ந்தே பறிக்கபடுகிறது. எப்படி விட முடியும். ஒன்று செயுங்கள் அல்லது செயல்பட விடுங்கள்.

“இந்த ஐக்கியப் பேரவை சிங்கம்... ஆனால் உறங்கிக் கொண்டிருக்கிறது...” எஸ்.கே.மாமா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. என்றுதான் விழிக்கும்?

ஊருக்கு நல்லது நடந்தால் அந்த இனிப்பை சுவைக்கபோவதும் நாம் தான், மாற்றமாக நடந்தால் அந்த கசப்பை அருந்தபோவதும் நாம் தான்.

எந்த பொறுப்பையும் அடுத்தவர் தலையில் கட்டிவிட்டு நான் இங்கே சுயநலமாக என் குடும்பம் நல்ல இருந்தா போதும் என்று உறங்கிக்கொண்டு இருக்க முடியாது.

சலீம் காக்கா, கவிமகன் காக்கா மற்றும் சகோதரர் கரீம் போன்ற பொதுநல உள்ளங்கள் ஆரம்பித்து விட்டு இருக்கும் இந்த MEGA அமைப்புக்கு உங்களை போன்ற பொதுநல ஆர்வலர்கள் ஆதரவு கண்டிப்பாக தேவை.

வேற்றுதல் இன்றி மாற்றங்களை உருவாக்குவோம். முன்னேற்றுவோம் காயலை வெற்றி நடை போடுவோம்.

என்றும் காயல் நலம் விரும்பும்
மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. சூடும்,சுவையும் பறக்க கிளம்பி விட்டது .
posted by சட்னி .செய்யது மீரான் (.காயல்பட்டினம் ) [22 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7083

அஸ்ஸலாமு அலைக்கும்.

என் அன்பினும் இனிய சகோதரர்களுக்கு நான் ஏதோ தலைவர் அவர்களை குறை கூறி கருத்தை பதிவு செய்வதாக தவறாக புரிந்து கொண்டு வரிந்து கட்டி வருகிறிர்கள்.

அவர்கள் முதலில் நகர் மன்ற உறுப்பினராக போட்டியிட்டு பெரும்பான்மை மக்களின் வாக்கினை பெற்று அமோக வெற்றி பெற்று பின்னர் உறுப்பினர்களின் வாக்கு பெற்று நகர் மன்ற தலைவர் ஆனார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளுங்கள் . எங்கள் வார்டுஉறுப்பினர் நகர் மன்ற தலைவர் ஆக வந்ததும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

வார்டு உறுப்பினராக போட்டியிடும் சமயம் அந்த பகுதி மக்களுக்கு வாக்குறிதி கொடுத்து வெற்றி பெற்றுள்ளார்கள்.வாக்களித்தால் அதனை நிறைவேற்றாது போனால் அமானிதம் பேணாதவர்களை அருள்மறை குர்ஆனில் வல்லோன் அல்லாஹ் எச்சரிக்கும் வசனங்களை நாம் அறிந்து இருக்கின்றோம். அது பெரியதோ ,சிறியதோ இருப்பினும் சரியே. அந்த ஒரு நிலைமைக்கு அவர்கள் ஆளாகி விட கூடாது என்ற எண்ணத்திலும் அவர்கள் மீது நாங்கள் அளவு கடந்த மரியாதையும்.மதிப்பும் வைத்து இருப்பதுடன் எங்களில் அவர்கள் ஒருவர் என்ற நல்ல நோக்கத்திலும் தான் இதனை எழுதுகிறோம். எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.

பிரதமராகவோ.முதல்வராகவோ,மந்திரியாகவோ இருந்தாலும் ஒட்டு மொத்த நாட்டுக்கும் உரியவர்கள் ஆனாலும் அவர்கள் தான் தேர்ந்து எடுக்கப்பட்ட அந்த தொகுதி மீது தனி கவனமும் , கரிசனமும் செலுத்துவதை நாம் யாவரும் அறிந்தது தான். அப்படி பட்ட நப்பாசையும் எங்களுக்கு இருப்பதும் எல்லா வகையிலும் நியாயமே. நாங்கள் எங்களுக்கு உரியவர்களிடம் கேட்கிகின்றோம் இது போல் நீங்கள் உங்களுக்கு உரியவரிடம் கேளுங்கள் அது உங்களின் உரிமையும் திறமையும் ஆகும்.

என் மரியாதைக்குரிய ஹபீப் காக்கா யாரையும் குறை கூறவோ ,குற்றம் சாட்டவோ, முகஸ்துதி ,குஷி படுத்தவோ நாம் முற்பட்டால் நமக்கு வேண்டால் நல்லதாக தோன்றலாம் நம்மை தேர்ந்து எடுத்த மக்களுக்கு அதில் எந்த நன்மையையும் இருக்காது , என எழுதியதை எல்லாம் விட்டு முகஸ்துதி என்ற வார்த்தைக்கு மட்டும் தன்னிலை விளக்கம் தந்துள்ளிர்கள்

எங்கள் 5 வது வார்டுக்கு உறுப்பினர் ஆகி நல்லதோர் சேவை செய்த மறைந்த ஜனாப்,ஜாவீத் முஹ்சீன் அவர்களை இன்றலவூம் மக்கள்கள் மனதார பாராட்டி ,துவா செய்கிறார்கள் என்று எழுதியது உங்களுக்கு பாடம் நடத்த இல்லை இதனை காணும் என் அன்பு காயல்மக்களுக்கு அறியபடுத்தவே ஆகும் அன்பரே . இந்த புண்ணியம் பூத்து குலுங்கும் புனிதமான ரமழானில், நான் வைக்கும் , வைக்கின்ற கோரிக்கை எல்லாம், எனது பதிவை சரியாகப் புரிந்துககொள்ளாமல் ஏனோதானோவென்று மறுப்புரை எழுதவோ,மற்றவர்கள் என்ன எழுதி இருக்கின்றார்கள் என்பதனை புரிந்து, பதில் எழுதுவதே அறிவுக்குப் பொருத்தமானதாக இருக்கும் என்பதே.

நம் சென்னை சைனா பஜாரில் மழை அடிக்க சைனா நாட்டில் குடை பிடித்த கதையாக தன் வீட்டிற்க்கு அருகில் குப்பை மேடு கிடக்க அதற்க்கு எந்த தீர்வும் காணாததுடன் திருவிளையாடல் தருமி கணக்கில் லஞ்சம் ,கைமடக்கு, குப்பை வண்டி வரும் நேரம் குப்பையை வண்டியில் கொட்டாமல் , வேலைக்காரி வந்ததும் , தெருவில் கொட்டுவது . இது யாருடைய தவறு ,ரோட்டை அடைத்து , மேடை போட்டு , திருமணங்கள் , விருந்துகள். போக்குவரத்திற்கு இடையூறு . இது யாருடைய தவறு வீடு கட்டுறேன், காங்கிரீட் போடுறேன் என்று சொல்லி , நாட்கணக்கில் , தெருவில் மணல் , கற்களை போட்டு , போக்குவரத்திற்கு இடையூறு . இது யாருடைய தவறு ? பலவித கேள்விகணைகள் இவை அனைத்தும் அவருக்கும் , அவர் வீட்டுக்கும் ,சார்ந்தவர்களுக்கும் பொருந்தும் தானே .நாம் வேண்டால் நாடோடியாக இருக்கலாம் நம் வீடும் ,குடும்பமும் காயலில் தான் உள்ளது என்பதை உணர்வோமாக

.புனித மிகு லைலத்துள் கதர் இரவு ஆரம்பமாகிவிட்டது நல்ல அமல்களை செய்து இரு உலகத்திற்கும் நன்மைகளை தேடுவோமாக . வல்லோன் அல்லாஹ் நமது எல்லா நல்ல அமல்களையும் ஏற்று நற்கூலியினை தருவதுடன் நம் நல்ல எண்ணம் போல் அனைத்தையும் சாதகமாக்கி தருவானாக ஆமீன் ,ஆமீன்

என் அன்பு தம்பி கவிமகனார் காதர் சூடும்,சுவையும் பறக்க கிளம்பி விட்டது .

வாழ்க ஜனநாயகம் ,வளர்க ஒற்றுமை .

அன்பான வாழ்த்துக்களுடன்
சட்னி .செய்யது மீரான் .காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by vsm ali (Kangxi , Jiangmen , China) [22 August 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 7084

ஊரில் இருக்கும் சங்கங்கள் போதாதென்று , இது என்ன புதுசா MEGA ? இப்படி ஆளாளுக்கு தனித்தனியா சங்கம் ஆரம்பித்தால் ஊறில் இருக்கும் ஒற்றுமை பாதிக்கப்படாதா ? MEGA வின் நோக்கம் நன்றாகவே உள்ளது . ஆனால் " அணுகுமுறை " சரியில்லை .

உலகின் எந்த ஒரு காயல் நலமன்றத்துடநேயும் , எந்த ஒரு அமைப்பிற்கும் தொடர்பில்லை , எங்கள் வழி " தனி வழி " என்று சொல்வது அவ்வளவு சரியாக படவில்லை . நமது ஊரின் தலையாய அமைப்பாகிய " காயல் ஐக்கிய பேரவை " உள்ளது . உங்களது நோக்கம் , எண்ணங்களை அவர்களுக்கு சொல்லலாமே ?

MEGA வின் அமைப்பாளர்கள் , நமதூருக்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருபவர்கள்தான் . ஆனால் இந்த விசயத்தில் சற்று யோசித்து செயல்படுவது நல்லது என்று தோன்றுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by vsm ali (Kangxi , jiangmen, china) [22 August 2011]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 7086

நண்பர் சட்னி செய்து மீரான் அவர்கள் , நகர் மன்ற தலைவர் , மற்றும் உறுப்பினர்களை பற்றி எனாதானோவென்று சொல்லிவிட்டு , இப்போது அதில் இருந்து நழுவ பார்க்கிறார். இதுபோக , என்னைப்பற்றியும் தனியாக சாடி இருக்கிறார். யாராவது , தன் தலையில் தானே மண்ணை போட்டு கொள்வார்களா ? அதுபோல எங்கள் வீட்டின் முன் நாங்களே குப்பை கொட்டுவோமா ?



நான் ஊரில் பொதுவாக உள்ள குறைகளை சுட்டிக்காட்டி , தவறு நம்மிடம்தான் உள்ளது, நகராட்சி தலைவர் , உறுப்பினர்களை குறை சொல்ல வேண்டாம் என்று சொன்னேன். எங்கள் வீட்டின் முன் குப்பை கிடப்பது உண்மை. ஆனால் அதை நாங்களோ , எங்கள் வீட்டின் வேலைக்காரியோ கொட்டியது இல்லை.வேறோ எவரோ செய்த வேலை . அதனால்தான் என்னுடைய ஆதங்கத்தை எழுதினேன். ஆகையால் நண்பர் அவர்கள் கமெண்ட்ஸ் பதிவிற்கு முன் , யார் மனமும் புண் படாதவாறு எழுதவும்.

Administrator: Message edited. Please avoid personal attacks. We would like to repeat, this is comments page, not discussion board


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Salai Sheikh Saleem (Dubai) [22 August 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7092

அன்புள்ளம் கொண்ட சகோதரர்களே!

அஸ்ஸலாமுஅலைக்கும்!

நல்லதோர் நகர்மன்றம் அமைக்கின்ற மகத்தான பணியை ஒருங்கிணைப்பதற்காகத் துவக்கப்பட்ட MEGA வில் இணைந்து பணியாற்ற இசைந்து மின்னஞ்சல் மூலம் தங்களது பெயரை பதிவுசெய்துள்ள நண்பர்களுக்கும்,நமது காயல்பட்டணம்.காம் வலைதளத்தின் மூலமாகவும், அலை மற்றும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு தார்மீக ஆதரவு தெரிவித்துவரும் அன்பு நெஞ்சங்களுக்கும்,ஆக்கபூர்வமான ஆலோசனைகள் பலவற்றை வழங்கிவரும் சொந்தங்களுக்கும் MEGA தனது இதயப்பூர்வமான நன்றியை உரித்தாக்குகிறது.

மதிப்பிற்குரிய சகோதரர் VD .சதக்கு தம்பி அவர்களே!

MEGA என்பது,எதிர்வரும் நகராட்சித் தேர்தலில், நகர மக்களுக்கு வழிகாட்டும் ஒரு தற்காலிக அமைப்பு மாத்திரமே! இந்த அமைப்பு ஐக்கியப்பேரவை உட்பட வேறு எந்த அமைப்பானாலும், நல்லதை செய்யும்போது நிச்சயம் ஆதரிக்கும். சமூக,கொள்கை, அரசியல் சார்பற்ற இந்த அமைப்பின் ஒரேநோக்கம், சிறப்பானதொரு நகர் மன்றம் அமைத்திட மக்களுக்கு வழிகாட்டுவது மாத்திரம்தான்.

இந்த அமைப்பு நகரின் அனைத்து சமூக இயக்கங்கள், ஜமாத்கள் மற்றும் நல்லதைநாடும் தனிநபர்களின் நேர்மையான ஆலோசனை எதுவாக இருந்தா லும் ஏற்றுக்கொள்ளும். இந்தப்பணியை ஐக்கியப் பேரவை சுயநலம் மற்றும் பாகுபாடின்றி செய்யுமானால் அவர்களது செயல்பாடுகளை ஆதரிக்க MEGAவிற்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

எந்தவித சுயநலமும் இல்லாமல், அல்லாஹ்வை முன்னிறுத்தி ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, வேறு எந்த அமைப்பிற்கும் எதிரானது அல்ல என்பதை உறுதிபடத் தெரிவிக்கின்றோம். ஆகவே, எங்களது இந்த தன்னலமற்ற பணிக்கு, மண்ணின் மைந்தர்கள் அனைவரும் ஆதரவுதர வேண்டும் என்று MEGA மீண்டும் மீண்டும் அன்புடன் வேண்டுகிறது.

நல்லதோர் நகர்மன்றம் நாடும்

சாளை சலீம், பஜுல் கரீம்,
ஒருங்கிணைப்பாளர்கள். MEGA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Salih (Chennai) [22 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 7093

காயல்பட்டினம் சிறு கிராமம் அல்ல, ஒரு சிறு நகரமாகும். அது போல - அதன் முன் உள்ள பிரச்சனைகளும் ஒண்ணு-இரண்டு அல்ல, பல பிரச்சனைகள். ஆகவே ஒரு அமைப்பின் மூலம் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து விட முடியும் என்று எண்ணுவது தவறு என்றே தோணுகிறது.

MEGA குழுவினை பொறுத்தவரை அது தற்காலிக குழு என்றே தன்னை கூறியுள்ளது. ஆகவே அதனை ஊரில் உள்ள பிற அமைப்புகளுக்கு மத்தியில் புது அமைப்பு என நினைப்பது தவறு. அது குறிக்கோள்களாக எடுத்துக்கொண்டுள்ள விஷயங்கள் - காயலர்கள் அனைவரும் தனிப்பட்ட முறையிலும், அவர்கள் சார்ந்துள்ள ஜமாஅத்துக்கள் மூலமும் மக்களிடம் எடுத்து செல்லவேண்டிய விசயங்களே.

ஒரு புது அமைப்பின் உதயத்திலோ, அல்லது புது குழுவின் உதயத்திலோ நாம் அச்சம் எப்போது கொள்ள வேண்டும் என்றால் - முன்னரே உள்ள அமைப்புகளுடன் எதிரும், புதிருமாக செயல்பட்டால் மட்டுமே. அவ்வாறு மெகா செயல்படாது என நம்புவோமாக.

ஐக்கிய பேரவையை பொருத்தவரை - அது பத்து ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. இரு உள்ளாட்சி தேர்தல்களை (2001 மற்றும் 2006) கண்டுள்ளது. அக்காலகட்டத்தில் நாம் பெற்ற இரு நகர்மன்றங்களின் தரம் நாம் அனைவரும் அறிந்ததே. ஆகவே வரும் (2011) தேர்தலிலும் ஐக்கிய பேரவையே அனைத்து விசயங்களையும் கவனித்து கொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பது - கடந்த பத்து ஆண்டுகளின் வரலாற்றில் நாம் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்றே அர்த்தம் கொள்ள செய்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Ibrahim (Hong Kong) [22 August 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 7095

அறிக்கை அதிகமாக விடாமல் மக்கள் பணி செய்ய ஆசை படும் அன்பர்கள் ஊருக்கு சென்று பொது வாழ்வில் ஈடுபடுவது நல்லது. இது போன்ற விசியத்தில் உங்களுக்கு மற்றவர்கள் பிரதிநதியாக இருப்பதைகாட்டிலும் நீங்கள் நேரடியாக களத்தில் குதிப்பது ஆரோக்கியமானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. பிற சமூகத்தினர் 5 இடங்களை கைப்பற்றினர் என்று சதக் தம்பி அவர்கள் எழுதுகிறார்.. ! ஏன் ? பிற சமூகத்தினர் வரகூடாது ?
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [22 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7102

பிற சமூகத்தினர் 5 இடங்களை கைப்பற்றினர் என்று சதக் தம்பி அவர்கள் எழுதுகிறார்.. ! ஏன் ? பிற சமூகத்தினர் வரகூடாது ? அவர்கள் என்ன தான் அப்படி தப்பு செய்து விட்டார்கள் ? காயல் ஐக்கிய பேரவையின் வழிகாட்டுதல் மூலம் - நம்மவன் பல லட்சம் ரூபாய் செக்கு மோசடி செய்தானே அவன் இடத்தில ஒரு பிற சமூக சகோதரர் இருந்தால் இது நடக்குமா ?

(நம்மவன் - பிற சமூகத்தினர் என்ற பாகுபாடு வேண்டாம் - ஒரு சிலரை தவிர நம்மவன் எல்லோரும் நல்லவர்களா ? காயல் ஐக்கிய பேரவை அணைத்து ஜமாத்துடன் கலந்து இனி வரும் தேர்தலில் யாரை தலைவராகவும் துணை தலைவராகவும் அறிவிக்க இருக்கிறார்கள் ?

‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ (MEGA) இவர்கள் அணைத்து ஜமாத்துடன் கலந்து யாரை தலைவராகவும் துணை தலைவராகவும் அறிவிக்க இருக்கிறார்கள் ? மக்கள் யாரை தேர்ந்து எடுகிறார்கள் மக்கள் விருப்பம்....!! துவேசம் உள்ளவனை புறம் தள்ளுவோம் - ஊரில் நம் மக்கள் நல்லாவே அடையாளம் கண்டு விழிப்புடனே இருக்கிறார்கள்....

ஒற்றுமையுடன் வாழ அல்லாஹ் அருள் புரியட்டும் - ஆமீன்

நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by syedahmed (GZ, China) [22 August 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 7105

ஐக்கிய பேரவை என்று சிறப்பாக செயல்பட்டுகொண்டிருக்கும் நேரத்தில் இதற்கு மாற்றமான வேறொரு பிரிவு எதற்கு? சமுதாய நலன்களை கருத்தில் கொண்டு ஒரே அணியில் செயல்படுவதே சிறந்தது. புதிது புதிதாக இயக்கங்களை தொடங்கி நம் முன்னோர்கள் துவங்கிவைத்த ஐக்கிய பேரவை அமைப்பை பின் தள்ளுவது சரி இல்லை. நகராட்சி தேர்தலில் அனுபவம் பெற்ற உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து முறைப்படி தேர்வு செய்ய ஐக்கிய பேரவை மூலமே முடிவெடுப்பதுதான் நல்லது. ஊரின் ஒற்றுமைக்கும் வழி காட்டியாக அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. MEGA நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு.
posted by Abdul Kader (Hong Kong) [23 August 2011]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 7153

சகோதரர்கள் சாளை சலீம், பஜுல் கரீம், மற்றும் அனைத்து MEGA நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு.

1. அதாவது உங்களது அமைப்பு தற்காலிகமானது நீங்கள் ஆலோசனைகள் வழங்கிவிட்டு சென்று விடுவீர்கள்.
2. உங்களது ஆலோசனைகள் தவறாகும் பட்சத்தில் நீங்ககள் பொறுப்புதாரிகள் ஆக மாட்டிர்கள்.
3. ஒரு பொறுப்பாளி சிங்கப்பூரிலும், இன்னும் ஒருவர் கத்தாரிலும் ஏனைய மற்றவர்கள் அமீரகத்திலும் இருந்து கணிணி மூலம் நல்லவர்களையும் வல்லவர்களையும் அடையாளம் கண்டு கொள்வீர்கள்.
4. நீங்கள் இருக்கும் நாடுகளில் வாக்கு ஜனநாயகம் என்றால் என்னவென்று தெரியாததால் ஏற்படும் விளைவே இது என்று நன்றாக புரிகிறது.

உங்களுக்கு ஒரு “வேதனையான, உண்மையான” நகைச்சுவை அரசியல் நிகழ்வு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 2001ம் ஆண்டு நமதூரில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வார்டிர்காக ஒரு பழம்பெரும் அரசியல்வாதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஒரு எழுச்சிமிகு நபர் நிற்கின்றார். கடுமையான போட்டி நிலவுகின்றது. அந்த எழுச்சிமிகு நபரின் சார்பில் மிகவும் நேர்மையான வாக்குச்சாவடி முகவர் பணி செய்கின்றார். கள்ள வாக்குகள் பதிவுகள் நடக்காத வண்ணம் நன்றாக செயல் படுகின்றார். ஏறத்தாழ பழம்பெரும் அரசியல்வாதி தோற்கும் நிலை ஏற்படுகின்ற வேளையில், பழம்பெரும் அரசியல்வாதி தனது அரசியல் சாதுர்யமாக எழுச்சிமிகு நபரின் சார்பில் பணி செய்கின்ற வாக்குச்சாவடி முகவரின் தேநீரில் பேதி மாத்திரைகள் கலந்து அவரை தந்திரமாக வாக்குசாவடியில் இருந்து அகற்றி கள்ள வாக்குகள் பதிவு செய்து மிக சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று மிக “நன்றாக” தனக்காக மட்டுமே பணிபுரிந்தார் என்பதை மிக சிலரே அறிவார்கள்.

2006 ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் நமதூரில் வேறு ஒரு வார்டில் வேறு ஒரு அரசியல்வாதி வேறு விதமான யுக்தியை பயன்படுத்தி சொற்ப வாக்குகளைப் பெற்று வென்றார் என்பது வேறு நிகழ்வு.

MEGA சகோதர்கள் வேறு வேறு தேசங்களில் இருந்து video conference / web conference என்று High Tech சிந்தனையுடன் செயல்படும் போது நமது அரசியல்வாதிகள் ரூம் போட்டு Low Tech சிந்தனையுடன் வெற்றி காண்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அரசியல் குள்ளநரி தனங்கள், சூதுகள் மற்றும் சாதுரியங்கள் தேர்தல் களத்தில் நடக்கும் போது, MEGA சகோதர்கள் தம்தம் இருப்பிடங்களில் இருந்து கணினி ஆலோசனைகள் கூறுவதை தவிர்த்துவிட்டு அரசியல் களத்தில் குதித்து வெற்றி காண வேண்டும் என்பதே எங்களை போன்றோர்களின் ஆசை.

சாக்கடை, சாக்கடை என்று கூச்சல் போட்டால் மட்டும் சாக்கடை அகலாது அதில் நாம் நமது அயல்நாட்டு தொழிலை விட்டு இறங்க வேண்டும். அதனை MEGA சகோதர்கள் கண்டிப்பாக செய்வார்கள் என்பதில் அவர்களின் ஆரோக்கியமான ஆவலில் இருந்து தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by MUTHU AHAMED (DUBAI) [23 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7155

இங்கே சகோதரர் அப்துல் காதர் என்பவரின் கேள்விகளைப்பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்.பிழைப்புக்காக வளைகுடாவில் வாழ்பவர்களுக்கு வாக்கு ஜனநாயகம் என்பதைக் குறித்து தெரியாதா? அப்படியானால் கம்னியுஸ்ட் நாட்டில் வாழ்பவர்களுக்கு? என்ன கருத்துங்க இது?

தற்காலிக அமைப்பு என்றால் தேர்தல் முடிந்ததும் வேட்டியை உதறி விட்டுப் போய் விடுவார்களா? இதே ஒருங்கிணைப்பாளர்கள் CFFC என்னும் தற்காலிக அமைப்பை உருவாக்கி, பிராக்டிகலாக கேன்சருக்கான காரணங்களை ஆராய்ந்து,அதன் ரிப்போர்ட்டை அரசுக்கும்,பத்துக்கும் மேற்பட்ட நாடுகளின் இந்திய தூதரகங்களிலும் சமர்ப்பித்து, அந்த கொடிய நோயை காயலில் இருந்து அகற்ற இன்னும் போராடிக்கொண்டு இருக்கின்றார்களே! இதில் உங்களைப்போன்று இஷ்டத்திற்கு கேள்விகள் கேட்கும் நல்லவர்களின் பங்களிப்பு என்ன என்பதை நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

கம்ப்யுட்டரில் உட்கார்ந்துகொண்டு நல்லவர்களை அடையாளம் காட்டப் போவதாக மெகா அமைப்பு சொல்லவே இல்லையே? நான் உட்பட பலர் எங்களுடைய பெயரைப் பதிவு செய்து, நல்லது நடக்கவேண்டும் என்ற ஆசையில் ஊருக்குப் போய் இதற்கான பணிகளை ஆற்ற துடித்துக்கொண்டிருக்கிறோமே! சும்மா இருந்து கொண்டு இஷ்டத்துக்கு ஏதாவது எழுதி எங்க மனச புண்படுத்தாதீங்க!

நீங்கள் தரும் ஆலோசன தப்பகிவிட்டால் என்ன செய்வீர்கள் என்று நெகடிவா கேட்கும் நீங்க,சுனாமி வீடு பிரச்சினைலே மக்களை தவறா வழிநடத்திய, தவறான துணைத் தலைவரை தேர்ந்தெடுத்த ஐய்க்கியப் பேரவைக்கு ஒரு கடிதம் எழுதி கேட்க வேண்டியதுதானே?

உங்களைப் போல கேள்வி மேல கேள்வி கேட்டு, நல்லது செய்றவங்கள திசை திருப்புரவர்கள் இருக்கும்வர பேதிமாத்திர என்ன அனஸ்தீசியாவே கொடுப்பாங்க! ஆணா இந்தமுற அது நடக்காது!

சாக்கட சாக்கட என்று சும்மா கூச்சல் போடுறத விட்டுட்டு எங்களோட வாங்க! நல்லது நடக்க ஏதாவது உருப்படியா செய்யலாம்! முடிஞ்சா ஊருக்குப் போய் செய்யலாம்! இல்லேன்னா குறைந்தபட்சம் இன்டர்நெட், வீடியோ கான்பரன்ஸ் எதுமூலமாகவும் செய்யலாம்!

அனைத்து தோழர்களுக்கும் நான் சொல்லவருவது அடுத்தது என்னன்னு மெகா சொல்றவரைக்கும் பொறுங்க! தயவுசெய்து நீங்களாகவே அப்படி இப்படின்னு இஷ்டத்திற்கு எழுதி காரியத்த கெடுக்காதீங்க!

மெகா ஆதரவாளன்
முத்து அஹமது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by சாளை நவாஸ் (singapore) [24 August 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 7166

சகோதரர் செய்யித் அஹ்மத் சொல்லுகிற மாதிரி எங்கோ உட்கார்த்து கொண்டு எழுதிக்கொண்டு இருக்கவில்லை. தினமும் ஊர் தொடர்பிலே இருந்து கொண்டு இருக்கிறோம். எங்கள் வேலை பளுவிர்கிடையிலும் இதை செய்து கொண்டு இருக்கிறோம் என்றால் அதன் முக்கியதுவத்தை உணர வேண்டும். MEGA தற்காலிக அமைப்புதான், இதை விட்டு நான் நகராட்சயில் நிரந்தரமாக உட்கார்த்து கொண்டு இருக்க முடியாது. எங்கள் முடிவும் தவறாக அமையாது, ஏன் என்றால் எங்கள் அணுகுமுறை ஒவ்வொரு ஜமாஅத்தை சார்ந்தே இருக்கும். ஜமாஅத் எடுக்க போகிற முடிவுதான். நாங்கள் தன்னிச்சையாக ஒன்றும் முடிவு எடுக்கவில்லை.

நல்வழி காட்டுகிறோம், முடிந்தால் செல்லுங்கள். உங்களுக்கு நீங்களே தடைகல்லாக இருக்காதீர்கள்.

மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by vsm ali (Kangxi , Jiangmen , China) [24 August 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 7169

நண்பர் அப்துல் காதர் அவர்களின் கருத்து வேதனையான ஒன்று . ஏதோ நகைச்சுவையாக எழுதுகிறோம் என்று நினைத்து விட்டார்போலும். பிழைப்பு தேடி வெளிநாடு வந்தவர்களை ஊரில் settle ஆக சொல்கிறார். இவர் மட்டும் ஹாங்காங் இல் இருப்பாராம். MEGA தற்காலிகமானதோ , நிரந்தரமானதோ , அவர்களின் நோக்கம் நன்றாக இருப்பினும் , அணுகுமுறை சரியில்லை என்றே தோன்றுகிறது. அனைத்து நல மன்றங்களின் ஆலோசனையை பெறலாம், இவர்களின் எண்ணங்களை அவர்களிடம் சொல்லலாம். அதை விடுத்து , நாங்கள் " தனி " , வேறு எவரிடமும் எங்களுக்கு தொடர்பில்லை என்றெல்லாம் கூறுவது அவ்வளவு ஆரோக்கியமாக தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by kavimagan (dubai) [24 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7170

சகோதரர் வி.எஸ்.எம்.அலி அவர்கள்,மெகாவிற்கு வேறெந்த காயல் நல மன்றங்கள், சமூக,கொள்கை,அரசியல் அமைப்புகளுன் தொடர்பில்லை என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். MEGA வின் இரு அமைப்பாளர்களும் வெவ்வேறு காயல் நல மன்றங்களில் முக்கிய பொறுப்புகளை வகிப்பதாலும், என்னைப்போன்றவர்களுக்கு அரசியல் சாயம் இருப்பதாலும் அந்த அறிக்கையில் அவ்வாறு கூறப்பட்டது. அதன் சரியான அர்த்தம் வேறு எந்த அமைப்புகளோடும் சம்மந்தம் இல்லை என்பதுதான். MEGA எல்லா சமூக நல அமைப்புகளோடும் தொடர்பு கொள்ளும்.முக்கியமாக ஜமாத்தினால் அடையாளம் காட்டப்படும் நபர்களை மாத்திரமே அடையாளம் காட்டும். என் வழி தனி வழி என்றெல்லாம் ஒன்றுமில்லை.எங்கள் வழி மக்கள் வழி. உங்களைப்போன்ற சமூக ஆர்வலர்களின் நல்வழி! தயவுசெய்து எங்களோடு இணைந்து தாங்களும் பணியாற்ற உங்களை அன்புடன் அழைக்கிறேன்.

சகோதரர் அப்துல் காதர் அவர்களே!

உங்களுடைய கேள்விகளுக்கு எல்லாம் ,இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் கிடைக்கும்.போகப்போக எங்களுடைய செயல் திட்டங்கள் அனைத்தும்,நம் மக்களுக்கு தெரியத்தான் போகிறது. உங்களைப்போன்ற நல்லார்வலர்களின் ஆதரவும், அபிமானமும்,துஆவும் எங்களுக்குத் தேவை. எங்களுடன் இணைந்து செயலாற்ற உங்களையும்,அனைத்துக் காயலர்களையும் அன்புடன் மீண்டும் மீண்டும் மெகா அழைக்கிறது.நன்றி! அஸ்ஸலாமுஅலைக்கும்!

கவிமகன் காதர்
செய்தித் தொடர்பாளர்.....MEGA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. 3வது செயலை செய்ய வேண்டாம்
posted by A.W.Md Abdul Cader Aalim bukhari (mumbai) [24 August 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 7172

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் அப்துல் காதர் அவர்களே! இந்த‌ நல்ல‌ செயலில் தாங்களும் இணையுங்கள் அல்லது நல்லது செய்பவர்களை பாராட்டுங்கள்,ஊக்குவியுங்கள் தயவு செய்து இந்த 2க்கும் மாற்றமான 3வது செயலை செய்ய வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by M.EL.NUSKI (Riyadh -KSA) [24 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7173

சகோதரரர் அப்துல்காதர் அவர்களே H.K.இல் மட்டும் என்ன ஜனநாயகமா நடக்கிறது. வெளிநாடுகளில் வாழும் உங்களை போன்றவர்கள் ஊருக்கு வந்து மக்கள் பணியாற்ற முன் வரவேண்டும் தானே. நீங்களும் ஒதுங்குவது மட்டுமல்லாமல் ஆர்வமுடன் செயல் பட்டு ஊரின் முன்னேற்றத்திற்கு பாடுபட துனிபவர்களையும் கொச்சை படுத்த வேண்டாம்.

செயல் படாமல் இருந்த இக்ரா கல்வி சங்கத்தை ஊரில் உங்களை போன்றவர்கள் இருந்தும் செயல்படுத்த முடியவில்லை . ஆனால் வெளிநாடுகளில் உள்ள காயல் அமைப்புகள்( H .K . உட்பட ) இக்ராவின் பொறுப்பை கையில் எடுத்து சிறப்பாக செயல் படுகிறதா இல்லையா.

அதே போன்று ஐக்கிய பேரவை உடன் இணைந்து செயல் பட்டு அவர்களின் ஆலோசனை பெற்று, பணியாற்ற நமது உரிமைகளை போராடி பெற்றிட முன் வர வேண்டும். அதுவும் உங்களை போன்ற ஆர்வமுள்ளவர்களயும் இதில் ஈடுபடுத்த வேண்டும என்ற நல்ல நோக்கில் அமைக்கபட்டது தான் இந்த அமைப்பு.

ஏதாவது எழுத வேண்டும் என்பதற்காக நல்ல பணியை கையில் எடுத்து இருக்கும் ஆர்வலர்களின் ஆர்வத்தை குறைத்து விடாதீர்கள். நல்லதை செய். அல்லது அமைதியாக இரு மூன்றாம் நபராக இருந்து விடாதே. என்ற மார்க்க போதனையை மனதில் கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by Muthu Ibrahim (Hong Kong) [24 August 2011]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 7174

இதில் பிரச்சினை என்னனா ஒரு அமைப்பு உருவாகும் போது அதன் குறிகோள், அதன் நோக்கம் மக்களுக்கு முழுமையாக விளங்க வேண்டும்.

இதில் இந்த அமைப்பு உருவாக வேண்டும் என்ற போர்வையில் சிலர் தனி மனிதர்களை, பொது அமைப்புகளை இழிவாக அல்லது தரம் தாழ்ந்து விமர்சித்தால் எப்படி பொது மக்களின் ஆதரவை எதிர்பார்க்க முடியும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [24 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 7183

அஸ்ஸலாமு அல்லைக்கும்! இந்த mega அமைப்பு செய்தியை படிக்குமுன்னே இதன் செய்திதொடர்பாளர் கவிமகன் கடடுரையை படித்தேன். ஒரு சோறு பதம் போல அவரின் உள்ளுணர்வு ஓரிடத்தில் வெளி வந்துவிட்டது.. அவர் கடடுரையில் ஒரு சிலரை அடையலாம் காட்ட வேண்டும் என்ற எண்ணம் எப்படி எவ்வியதோ தெரியவில்லை.. அவரது கட்டுரையானது பளிச்சென்ற வெண்மையான துண்டில் ஒரு சிறு கரும்புள்ளி கவ்விகொண்டது..

இப்படி பட்டவர்கள் பொறுப்பிலிருக்கும் இந்த MEGA அமைப்பைவிட, கீழே நான் கேள்விப்பட்ட அமைப்பை பற்றி சில வரிகள் சொல்ல ஆசை படுகிறேன். . நீதிஉடைய நடுநிலயளர்கள் இதையும் படித்துவிட்டு ஒரு முடிவுக்கு வருவார்கள் என நம்புகிறேன்..

எச்சூழ்நிலையிலும்,எதிலும் நடுநிலை காணும் கண்யவான்ங்கள் அடங்கிய ஒரு அமைப்பு கிட்டத்தட்ட ஊரின் ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற அங்கிகாரமைப்பிலுல்ல்வர்கள், குறிப்பிட்ட தெரு, குறிப்பிட்ட ஜமாத்து, குறிப்பிட்ட கட்சி, குறிப்பிட்ட பகுதி, கொள்கை, கோடீஸ்வரர்களின் குறுக்கு வழி திணிப்பு ஆகியவற்றிக்கு இமியளவும் இடம்தராமல் ,எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக, மனசாட்சியுடனும், நீதிடனும் செயல்பட துடிக்கும் ஒரு தூய்மையான இயக்கத்திற்கு,

தொலை தூரத்தில் கடல்கடந்து வாழும் அணைத்து அயல் நட்டு சகோதரர்களும் உங்கள் அன்பொழுகும் ஆதரவை அளித்திட வேண்டுகிறேன்.

இரவு பகல் பாராமல் இறைவனுக்கு அஞ்சிய இதயமுள்ளவர்கள் இப்படி ஒரு இயக்கத்தை இங்கு அமைக்க முழுமூச்சுடன் செயல்பட்டுகொண்டிருக்கிரர்கள்.

ஒரு ( ரியால்/ தெர்கம்} உதவியளிக்க முன் வந்தாலும், ஊரிலுள்ள ஒரு குண உயர்வாலரின் உதவி தேவைப்படும் உங்களுக்கு, ஒட்டுமொத்த ஊரையே ஆளக்கூடிய தலைவரையோ,உறுப்பினர்களையோ தேர்வு செய்யும் பொறுப்பை, உங்களோடு இல்லாவிட்டாலும்,உங்களுணர்உடன் ஒன்றி செயல்பட சித்தமாக இருக்கும் இப்புண்ய இயக்கத்திற்கு உங்கள் இதயம் நிறைத்த ஆதரவை அல்லாஹ்விற்கு அஞ்சிய அணைத்து அயல்நாட்டு நடுநிலையானவர்கள் தந்திடவேண்டுமென எதிர்பார்கிறேன். நல்ல செய்தி நெருக்கத்தில் இன்ஷாஅல்லாஹ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. அன்பான வாசகர்களே!
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [24 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7184

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அன்பான வாசகர்களே!

‘நகராட்சித் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘ ‘MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION (MEGA)‘ என்ற இந்த செய்தியை வாசிப்பவர்கள் தயவு செய்து தெளிவாக வாசித்து அதற்கு கருத்துக்களை பதிந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமையுண்டு - அந்த கருத்துக்கள் இந்த அமைப்புக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம் அதிலே எந்த தவறுமில்லை.

ஆனால் சொல்லப்படும் கருத்துக்கள் இந்த செய்தியை அடிப்படையாக வைத்தே இருக்க வேண்டும், யாரையும் புண் படுத்தாமல் , மரியாதை குறைவான வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதுடன் - செய்திக்கு சாதகமோ , பாதகமோ - எதுவானாலும் பிரயோசனமான கருத்தாக இருக்கவேண்டும்.

அதல்லாது எல்லோரும் எழுதுகிறார்கள் நாமும் எழுதுவோம் என்று செய்தியின் முக்கியத்துவத்தை புறம் தள்ளி - கேளியும் ,கிண்டலுமாக அர்த்தமற்ற கேள்விகளுடனும் , தேவையற்ற விளக்கங்களுடனும் எழுதுவது ஆரோக்கியமாகாது.

யார் , யாரெல்லாம் எப்படியெல்லாம் கருத்துக்கள் எழுதியிருக்கிறோம் என்பதை , எழுதியிருக்கும் நாம் அனைவரும் மீண்டும் ஓரிரு முறை படித்து பார்த்தால் விளங்கும் நாம் எழுதியிருப்பது தவறா? இல்லை சரியா ? என்பது.

--------------------------------------------------

என்னுடையப் பார்வையில் மட்டுமல்ல நடுநிலையாக சிந்திக்கும் எவருக்கும் இந்த அமைப்பு இன்றைய கால சூழலுக்கு உகந்ததாகவே தெரிகிறது அதிலே எந்தவித சந்தேகமுமில்லை.

" மெகா " என்ற இந்த அமைப்பு தேர்தலுக்காக உருவாக்கப்பட்டிருக்கிற தற்காலிக வழிகாட்டு அமைப்புதானே தவிர - ஐக்கிய பேரவை , காயல் நல மன்றங்கள் , சங்கங்கள் மற்றும் பொதுத்தொண்டு நிறுவனங்கள் போன்று நிரந்தரமாக இருந்து செயல்படும் நிறுவனம் அல்ல.

இதை நமது மெகா சகோதரர்களே தெளிவாக தெரிவித்திருக்கிறார்கள் - நமது ஊரில் பல பொது தொண்டு நிறுவனங்கள் வெகு நாட்களாக இருந்து நல்ல பல சேவைகளை செய்து வந்தாலும் - தேர்தல் நேரத்தில் மெச்சும்படியான எந்த ஒரு நல்ல முடிவுகளையும் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத , மறைக்க முடியாத உண்மை.

இதை நாம் எல்லோரும் உணர்ந்து இருக்கிறோம் - நம்மிலே சிலருக்கு ........... இல்லை........ இல்லை .......... பலருக்கு - ஏதாவது ஒரு நல்ல அமைப்பு உருவாகி இந்த நகர்மன்றத்தை சீர்படுத்த வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கிறது. ஆனால் அதை யார் செய்வது ? எப்படி செய்வது ? பூனைக்கு மணி கட்டுவது யார் ? என்ற முனங்களுடன் இதுவரை இருந்து வந்தோம்.

ஆனால் நமது சகோதரர்கள் அதை வெறும் முனங்களுடன் ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை, செயலில் காட்ட வேண்டியதுதான் நம் உடலும், உயிரும் கடல் கடந்திருந்தாலும் நினைவெல்லாம் ஊரில்தானே! நாம் திரும்ப செல்வதும் நம் சொந்த ஊருக்குத்தானே!! என்றவர்களாக

நகர் நலனை கருத்தில் கொண்டு அல்லாஹ்வை முன்னிறுத்தி ஓர் அமைப்பைத் தொடங்குவோம் உலகெங்கும் வாழும் நமது ஊர் மக்களும், ஊரில் உள்ள மக்களும் ஓன்று சேர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம், அதன் மூலம் வருகின்ற நகர்மன்றத் தேர்தலில் நல்லவர்களை தேர்ந்தெடுத்து நல்லாட்சி அமைக்கலாம் என்ற நல்ல எண்ணத்திலே இந்த தற்காலிக அமைப்பைத் தொடங்கி இருக்கிறார்கள்.

--------------------------------------------------

இதிலே அவர்களுக்கு எந்த உள்நோக்கமுமில்லை - அவர்கள் யாரும் போட்டியிடப்போவதுமில்லை - மேலும் அவர்கள் இன்ன, இன்ன ஆளை தேர்தலில் நிறுத்துகிறோம் என்று சொல்லவுமில்லை.

மாறாக உங்கள் பகுதியிலே, உங்கள் ஜமாஅத்திலே நல்லவர்களை தேர்ந்தெடுத்து நகர்மன்றத்திற்கு அனுப்புங்கள் என்றுதான் சொல்கிறார்கள்.

அவர்கள் நமக்கு தருவது வெறும் வழிக்காட்டல் மட்டுமே! இதிலே நமக்கு , நம் மக்களுக்கு விழிப்புணர்வுதான் ஏற்படுகிறது.

மேலும் அவர்கள் கூறுகிறார்கள் :

"கடந்த காலங்களில் நாம் எத்தனையோமுறை நகர்நலன் கருதி நமது காயல்பட்டணம்.காம்இல் செய்த விவாதங்கள், காயல் மாநகரில் வாழும் வாக்காளர்களை சென்றடையும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஆதலால் உண்மை நிலையை ஊருக்கு எடுத்துச் சொல்லவும், அந்ந்தந்த பகுதிகளில் இருக்கும் ஜமாஅத் மற்றும் சமூக அமைப்புகளுடன் தொடர்புகொள்ளவும், நல்லவற்றை பல்வேறு தகவல் மற்றும் ஒளிபரப்பு ஊடகங்கள் மூலம் நகர மக்களுக்கு எடுத்துச் செல்லவும், நல்லவர்களை அடையாளம் காட்டவும் இப்படி ஓர் அமைப்பு செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கருதுகிறோம்." என்று, இதன் மூலம் தெளிவாகிறது மெகா சகோதரர்கள் கடல் கடந்திருந்துக் கொண்டு இன்டர்நெட் மூலமாக இந்த அமைப்பை நடத்த வில்லை என்பது புலனாகிறது.

அதனால் நாம் அனைவரும் இது போன்ற சுயநலமில்லாத அமைப்புக்கு ஒத்துழைப்பு கொடுப்பதே சிறந்தது அதல்லாது தேவையற்ற வாக்குவாதங்களை செய்வதில் பயனில்லை.

-------------------------------------------------

மக்களே !

இந்த முறை நடைபெறப் போகிற தேர்தலில் பழைய உறுப்பினர்களை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு - நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினால் இன்ஷா அல்லாஹ்! நமது நகர்மன்றம் மிகச்சிறப்பாக இயங்கும்.

இன்ஷா அல்லாஹ்! உறுப்பினர்கள் நல்லவர்களாக அமைந்துவிட்டால் - நிச்சயமாக லஞ்சம் வாங்கக்கூடிய அதிகாரியும், அலுவலர்களும் இடத்தை காலி பண்ணி விடுவார்கள்.

மக்களே! நமக்குள்ளே எத்தனை கோஷ்டி , பூசல்கள் இருந்தாலும் அவைகளை மறந்துவிட்டு ஒற்றுமையாக செயல்படுங்கள். வீணாக தேவையற்ற முறையில் பலபேர் போட்டிப்போட்டு ஓட்டுக்களை சிதறடித்து பிரிந்துவிடாதீர்கள்.

மந்தையை விட்டு பிரிந்த ஆடுதான் ஒநாயிக்கு இரையாகும் எனவே - நாமும் மந்தையைவிட்டு பிரிந்து போன ஆடுகளாய் பிரிந்து போய் அன்னியருக்கு இடம் கொடுக்காமல் - ஓன்று பட்டு ஒற்றுமையாக இருந்து செயல்படுவோமாக.

--------------------------------------------------

ஆகவே மக்களே!

அவசியமான , தேவையான கருத்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டு இந்த அமைப்புக்கும் நாம் ஊக்கம் கொடுத்து ,முடிந்தவரை நாமளும் மக்களை விழிப்புணர்வு பெறச்செய்து வருகின்ற தேர்தலில் நன் மக்களை தேர்ந்தெடுத்து அனுப்பி நம் நகர் மன்றத்தை ஒரு சிறந்த நகர்மன்றமாக இயங்க செய்வோமாக.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவரையும் ஒரு குடையின் கீழிருந்து ஒற்றுமையாக வாழ கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. நடுநிலையாளர்களின் சிந்தனைக்கு!
posted by kavimagan m.s.abdul kader (dubai) [24 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7186

இதற்கு முந்தைய செய்திகளில், பல்வேறு விவாதங்களில் அரைகுறையாக எழுதி, எனது கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் பதுங்கி விட்டவர்கள், எனது கட்டுரை வெளியாகி பத்துநாட்கள் கழித்து, MEGA அமைப்பிற்கு எந்தவித சம்மந்தமும் இல்லாத, சில விஷயங்களைக் கூறி, குழப்பம் விளைவிக்கும் முயற்சியை துவங்கி இருக்கின்றார்கள்.

முதலில் ஒரு கட்டுரையாளனாக எனது பதிலைக் கூறியாக வேண்டும். நகரின் அனைத்துப் பகுதி, கொள்கை மற்றும் வெவ்வேறு ஜமாஅத்களைச் சார்ந்த, கண்ணியமிக்கவர்களை, நகரின் முன்மாதிரி பொதுநல ஊழியர்களை, எந்த அரசியல் கட்சியையும் சாராத நல்லவர்களது சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, இவர்களினும் சிறந்த, நான் அறியாத நன்மக்கள் ஊரில் இருக்கலாம். இவர்கள்தான் என்று இல்லை! இவர்களைப் போன்றவர்கள் வரலாமே என்று சுட்டிகாட்டுவதற்குத்தான் என்பதனையும் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தேன்.

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், பல்வேறு கருத்து விவாதங்களில் வாசகர்களால் புறம் தள்ளப்பட்ட காழ்ப்புணர்ச்சியை இவர் கக்கி இருப்பது, எனக்கு எவ்வித ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தவில்லை.

MEGAவைத் தொடங்கும்போதே மக்கள் பணத்தில் சுகம் கண்டவர்கள் இந்த அமைப்பை சீர்குலைக்க எல்லாவித முயற்சியையும் கையாளத் தயங்கமாட்டார்கள் என்பது நான் எதிர்பார்த்ததுதான்.

மொத்தத்தில், எத்தனை அமைப்புகள் துவங்கப்பட்டாலும் நல்லது நடக்க பூனைக்கு மணியை கட்டினோம் என்ற திருப்தியோடு, தொடர்ந்து தொய்வின்றி எனது பணி தொடரும்.

MEGA துவங்கப்பட்ட ஓரிரு நாட்களிலேயே உள்ளூர் மற்றும் சர்வதேச காயலர்களின் மகத்தான ஆதரவைப் பெற்று, இதன் ஆக்கப்பூர்வமான பணிகள் துவங்கப்பட்டுவிட்ட நிலையில், தனிநபர் தாக்குதல் மற்றும் குரோத எண்ணங்கள் வெளிப்படத் துவங்கி விட்டது. இவை அனைத்தையும் தாண்டி, இறையருளால் ஊழல்வாதிகள் வீழ்த்தப்பட்டே ஆகவேண்டும்.

அது நகர மக்களின்,நல்லவர்களின் கடமை.

நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம் கட்டுரையாளனாக,
கவிமகன் எம்.எஸ்.அப்துல் காதர்,
அலைபேசி :00971 558864866,
ஐக்கிய அரபு அமீரகம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by HUBAIB (KAYALPATTINAM) [24 August 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 7188

Moderator: சகோ. ஹுபைப் அவர்களே, தாங்கள் புனைப்பெயரில் கருத்துப் பதிவு செய்தது மட்டுமின்றி, இல்லாத மின்னஞ்சல் முகவரியை சமர்ப்பித்துள்ளதால், தங்கள் கருத்து தள்ளுபடி செய்யப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. எண்ணித் துணிக.......
posted by musthak ahamed (mumbai) [24 August 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 7195

எத்துனை விதமான கருத்துக்கள்...............எத்துனை விதமான மறுப்புக்கள்.................. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் சகோதரர்களே.......................உலக சரித்திரத்தின் பக்கங்கள் உங்களுக்காக திறந்தே இருக்கிறது.............அதை கொஞ்சம் புரட்டி பாருங்கள்.................களத்தில் இருந்து பணியாற்றுவது ஒரு வகை...............களத்தின் பின்னால் இருந்து பணியாற்றுவது இன்னொருவகை........

களத்தின் பின்னால் இருந்து வெற்றி கண்ட எத்தனையோ சம்பவங்கள் நம் கண் முன்னே உண்டு. புனித மக்காவை, புண்ணியம் நிறைந்த கவ்பாவை கைபற்றுவதற்க்கான எல்லா திட்டங்களும் மதினாவில் இருந்து தான் செயல் படுத்தப்பட்டது...................

ஹிட்லரின் இன வெறியில் நாடிழந்து சிதறிய ஒரு சிலரும் வேறு வேறு தேசங்களின் இருந்து தான் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள்.

அண்மை கால சான்று எகிப்தில் ஏற்பட்ட புரட்சி..................face book மூலம் பல்வேறு தேசங்களில் உள்ளவர்கள் தொடர்பு கொண்டு உணர்வுகள் கிளறப்பட்டு.....ஒரு சுப தினத்தில் முபாரக் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட்டது...................... இது போல் எல்லாம் சத்தியமே .......................அல்லாஹ் அருளால் இதுவும் சாத்தியமே ............. மெகா சகோதரர்களே .................எந்த காரணம் கொண்டும் பின் வாங்காதீர்கள்...............பேசுபவர்கள் பேசி கொண்டே இருக்கட்டும்.....................இவரால் இந்த மாற்றம் வந்து விடுமோ..........இது நடந்துதான் விடுமோ என்ற பயம் தான் காரணம்................

இது ஒன்றும் சமாதான அமைப்பு அல்ல........... ஊழலுக்கு எதிரான போர்............ தீயார்களுக்கு எதிரான போர்.............. கெட்டவர்களை சமுதாயத்திற்கு அடையாளம் காட்டும் போர்.............. இதில் இன்னும் காயங்கள் ஏற்படும்.................... ஒரு நாள் வரும் .................... காயலின் மைதானாத்தில் ஓன்று கூடுவோம்.............. சாதித்ததை சந்தோசமாய் பகிர்ந்து கொள்வோம்..........

எண்ணித் துணிக கருமம்......... துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு.............

முஸ்தாக் அஹ்மத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. பகைதனை போக்கி, பலம்தனை பெருக்கி
posted by சட்னி .செய்யது மீரான் (காயல்பட்டினம்) [24 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7196

அஸ்ஸலாமு அலைக்கும்.

நாம் ஒன்றும் நகர் மன்ற உறுப்பினர்களையோ,தலைவரையோ முடிவு செய்து தேர்ந்து எடுக்கவில்லை . அவர்கள் அரியணை காணவில்லை . நாம் நமக்குள் கருத்துக்களை பதிவு செய்து ஒருவருக்கு ஒருவர் உரிமையோடு,உறவோடு கலந்துரையாடி வருகின்றோம் என்ற எண்ணத்தில் இதனை திறந்த மனதோடும்,பரந்த உள்ளத்தோடும் பார்க்க முதலில் முடிவு செய்வோம்.

மரியாதைக்குரிய ஆதம் சுல்தான் காக்கா நீங்கள் தம்பி கவி மகன் அப்துல் காதர் கட்டுரை தனை படித்து விட்டு அந்த பகுதியில் தங்கள் கருத்தை பதிவு செய்து இருக்கலாம் . அதை விட்டுவிட்டு இதில் நீங்கள் விமர்சிப்பது போகும் ஊருக்கு பிடிக்காதவன் வழி சொன்ன கதையாக உள்ளது .

நானும் இந்த வலை தளத்தை நீண்ட நெடிய நாட்களாக பார்த்து வருவதோடு மட்டும் அல்லாது செய்திகளை விட முதலில் கருத்துகளை படிக்க ஆர்வம் உள்ளவன் . பல தடவை கருத்து உரசல்கள் உங்கள் இருவருக்கும் உண்டாகி உள்ளதையும் பார்த்துள்ளோம் . அதை வைத்து கொண்டு அவரை விமர்சனம் செய்வதையும்,அவர் மீது உங்களுக்கு உள்ள தனிப்பட்ட கோபத்தால் ஒட்டு மொத்த இந்த அமைப்பினரின் நல்ல எண்ணத்தை பாழாக்கிட முயற்சி செய்யாதிர்கள் .

தம்பி கவி மகன் அப்துல் காதர் உட்பட இதில் உள்ள அனைவர்களும் வயதால் சிறியவர்கள் ,உங்கள் மகனுக்கு சமமானவர்கள் . எதோ அமைப்பு புதிதாக உருவாக இருப்பதாக கூறி புலி வருது கதையாக எச்சரித்து உள்ளீர்கள் . இதனை பார்க்கும் வாசகர்கள் குழம்பி போய்விடுவார்கள். சொல்ல வந்ததை விபரமாக சொன்னால் குழப்பம் இல்லை.

என் அன்பு சகோதரர்களுக்கு இதன் மூலம் அறியதருவது நேற்று புதன் மாலை ஈக்கிஅப்பா தைக்கா வளாகத்தில் வைத்து காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் சார்பாக ஊரில் உள்ள அனைத்து நற்பணி அமைப்புகள் கலந்து கொண்ட உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான ஒரு கலந்துரையாடல் நடந்தது.அதில் நானும் எங்கள் அமைப்பான ரஹமத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் மற்றும் சமுக நல பேரவை சார்பாக அழைப்பு வர கலந்துகொண்டேன். நோன்பு திறப்பு ஏற்பாடும் செய்து இருந்தார்கள்.ஊரில் உள்ள பெரும்பான்மை நல அமைப்புகள் நண்பர்கள் வந்தும் நல்லதோர் கருத்துகளை பரிமாற்றம் செய்தோம். இதற்கான எல்லா வித ஏற்பாடுகளும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றம் நண்பர்கள் நல்ல முறையில் செய்து உபசரித்தார்கள் .மிக்க நன்றிகள் கோடானு கோடி .

இதில் சமிபத்தில் உருவான காயல் நல அறக்கட்டளை சார்பாக ஆதம் சுல்தான் காக்கா கலந்தும் கருத்துகள் வழங்கினார்கள்.

உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமான புதிய அமைப்பு தற்காலிகமானதாக உருவாக்கும் முயற்சியில் அடிஎடுத்து வைத்து இருப்பதோடு இந்த மெகா உட்பட எல்லா நல அமைப்புகள் நாடு போற்ற மக்கள் போற்றும் நல்லதோர் நகர் மன்றம் உண்டாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவர்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் எனும் நல்ல எண்ணத்தில் அமைக்க முடிவு செய்ய பட்டுள்ளது .அடுத்து வரும் கூட்டங்களில் இதில் வராதவர்களின் கருத்துக்களை பெற்று அமைப்பின் முழு விபரமும் அறியதருவார்கள் . இன்ஷா அல்லாஹ். இதை தான் சூசகமாக சொல்லி உள்ளார்கள் போல்.

அல்லாஹ் ஒருத்தனுக்காக மட்டுமே நாம் அச்சம் கொள்ளனும். அவனுக்காக மட்டுமே நாம் நன்மையின் அடிப்படையில் ஒன்றுபடணும் ஒற்றுமையின் கயிற்றை பற்றி பிடிப்போம் அந்த ஓரிறையின் உதவியால் வெற்றி பெறுவோம்.ஆமீன்.

பகைதனை போக்கி, பலம்தனை பெருக்கி ஒற்றுமையுடன் நடை போட்டு வெல்வோம்.நண்பர்களே

நல்லதோர் நகர் மன்றம் காண நாடும் உங்களில் ஒருவன்

சட்னி .செய்யது மீரான்
காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:நகராட்சித் தேர்தலை கருத்த...
posted by muhamed (kayal) [25 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 7256

Moderator: Br. Muhamed, pls submit your full name to approve your comments!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved