Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:33:48 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7274
#KOTW7274
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 24, 2011
நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ரஃப்யாஸ் ரோசெரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ.ஆபிதா போட்டி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3802 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அக்டோபர் 17 அன்று காயல்பட்டின நகராட்சிக்கு நடைபெறவுள்ள தேர்தல்களில் - நகர்மன்ற தலைவர் பொறுப்புக்கு ரஃப்யாஸ் ரோசரி மழலையர் பள்ளி நடத்தும் பி.எம்.ஐ. ஆபிதா போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். இவரின் தந்தை பாளையம் இப்ராகிம் ஆவார். இவரின் கணவர் எம்.எம். சேக் அப்துல் காதர். 38 வயது நிரம்பிய ஆபிதா - B.Sc. , B.Ed. பட்டதாரி ஆவார்.

தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை தெரிவித்து - நகரில் உள்ள அனைத்து ஜமாஅத்துக்களுக்கும், பொது நல அமைப்புகளுக்கும் அவர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

12 ஆண்டுகளாக காயல்பட்டணம், மகுதூம் தெருவில் ரஃப்யாஸ் ரோசெரி மழலையர் பள்ளி நடத்தி வரும் நான் நடைபெற இருக்கின்ற நகராட்சி மன்ற தேர்தலில் நகராட்சி மன்ற தலைமை பதவிக்கு எந்த ஒரு கட்சியையோ, அமைப்பையோ, தனிப்பட்ட நபர்களையோ சார்ந்தில்லாமல் மக்களின் பிரதிநிதியாக, மக்களின் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் மக்கள் மூலமாக தரும் தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொள்வேன். இறைவன் மீது ஆணையாக எந்த ஒரு சூழலிலும் சத்தியத்திற்கும், நியாயத்திற்கும், தர்மத்திற்கும் அனைத்து மக்களின் ஒருமித்த குரலுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும், அதிகார போக்கிற்கும், அநீதிக்கும், ஊழலுக்கும் எதிராக என்றும் குரல் கொடுப்பேன் என்றும் உறுதி கூறுகிறேன்.

எல்லாம் வல்ல இறைவனின் கிருபையோடு அனைத்து சமுதாய மக்களின் மகத்தான ஒத்துழைப்போடு, நகராட்சி உறுப்பினர்களாக வருகின்ற சகோதர, சகோதரிகளின் உறுதுணையோடு, இளைய சமுதாயத்தினரின் எழுச்சிமிகு ஊக்கத்தோடு, புதிய நற்சிந்தனைகளோடு, அனைத்து ஜமாஅத்துக்களின் பக்கபலத்தோடு நல்ல திட்டங்களை செயல்படுத்தி, சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்தி காயல் மாநகரை முன் மாதிரி நகரமாகக இறை உதவிக்கொண்டு சிரியவளாகிய நான் என்னால் முடிந்த அளவிற்கு முயற்சிகள் செய்து முன்னேற்றம் ஏற்பட வழி செய்வதற்குரிய வலிமையை தர என்னை படைத்தது வழிநடத்தும் வல்ல நாயனிடம் வேண்டுகிறேன்.

நான் இந்த பதவிக்கு தகுதியானவள் என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில் உங்களின் அன்பான ஆதரவும், மனதார ஒத்துழைப்பும் வேண்டுமென்று உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
என்றும் மக்கள் பணியில்,
உங்கள் அன்பு சகோதரி,
ஆபிதா.


இவ்வாறு தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Seems positive
posted by Ahamed mustafa (Dubai) [24 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8704

Good one & a well deserved initiative for some one young & having a good academic background. This am sure can turn to a well deserved victory. Why don't we all support this candidature. A learned young professional, having a well organized track record can bring value to this position.

Instead of going for women old enough & not much learned, I support this proposal.

Looking for more takes on this.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்.......
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Jeddah-K.S.A.) [24 September 2011]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8707

நல்வாழ்த்துக்கள்... சகோதரி... அவர்களே... வாருங்கள்... தங்களின்... பங்களிப்பை... நமதூருக்கு... தாருங்கள்... தங்கள்... முயற்சிக்கு... எனது... salluet .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by hylee (colombo) [24 September 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 8708

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by M Sajith (DUBAI) [24 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8713

நல்ல மாற்றங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

சூழ்நிலையாலோ நிற்பந்தத்தாலோ என்ன செய்ய என சம்மதிப்பவரைவிட விரும்பி ஏற்றுக்கொள்பவர் தான் சிறப்பாக செயல்பட முடியும். All the Best.

சகோதரர் அஹ்மத் முஸ்தபா, தன் துணைவியாரையும் முன்னிருத்தலாம் என்பதும் என் வேண்டுகோள்.

கல்வி, வெளியுலக அனுபவம், இவரை போலவே பள்ளி நிர்வகிக்கும் அனுபவம் எல்லாமும் உள்ளவர் என்பதால் இந்த வேண்டுகோள்.

நல்ல போட்டி, அதன் பின் செய்யப்படும் நல்ல தேர்வு இதுதான் சிறந்தது என்பது என் கருத்து Pls.consider and motivate her..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by K S Mohamed Shuaib (Kayalpatinam) [24 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8714

இந்த முறை ஆரோக்யமான போட்டியை நமதூர் நகராட்சி சந்திக்கும் போல் தெரிகிறது. வார்டுகளிலும் அதுபோல்தான் போட்டி இருக்கும் என படுகிறது. ஜனநாயகத்தில் போட்டி எனபது இயல்பானது. ஆனால் தேர்தலின் போது முடிந்தவரை கண்ணியமான நடைமுறைகளை அமுல்படுத்தி குறைந்தபட்ச ஜனநாயக அம்சங்களை யேனும்நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்......!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வருக! உங்கள் வரவு நல்வரவாகுக...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [24 September 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8722

இச் சகோதரியின் விருப்பத்தைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளலாம்.குளம்,முஹம்மது ஷுஐபு அவர்கள் கூறிய கருத்துக்களையே நானும், இங்கு முன் வைக்கின்றேன்.நகர்மன்றம் நலமன்றமாய்த் தழைத்தோங்க வாழ்த்துக்கள்!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by amzedmoosa (dammam) [24 September 2011]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8725

அஸ்ஸலாமுஅலைக்கும் இது மாதிரி படித்த சகோதரிகள் வரவேண்டும் என்பதே அனைவரின் கருத்து. சகோதரி அவர்களே! தங்களது சேவை நமது ஊருக்கு மிகவும் தேவை வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by M.S.MAHMOOD RAJVI (KAYALPATNAM) [25 September 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 8729

அஸ்ஸலாமுஅலைக்கும்

இந்த சகோதரிக்கு இத்தேர்தலில் வாய்ப்பளிக்கலாமே உலக படிப்பறிவும் மார்க்கப்பற்றும் உடைய இவர்களுக்கு வாய்ப்பளித்தால் இவ்வூர் நலம் பெற வாய்ப்புண்டு. இன்ஷாஅல்லாஹ்.

இறைவன் மிக அறிந்தவன் !

மஹ்மூத் ரஜ்வி, காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:படித்த என் தோழி
posted by KAMILA KIZHAR (chennai) [25 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8730

ஆபிதா என் தோழி..படித்த பண்பு உள்ளவள் ...அவரை நகரமன்ற தலைவர் பதவிக்கு நிறுத்தலாம். வெற்றி பெற வாழ்த்துக்கள் ...

காமிலா கிஸார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அரசியல் கடந்த இந்த கருத்து
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [25 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8732

அஸ்ஸலாமு அழைக்கும்..

நமதூர் உள்பட பல முஸ்லிம் ஊர்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது..இன்னும் சில முஸ்லிம் ஊர்கள் தலித் தனி தொகுதியாக ஒதுக்க பட்டுள்ளது. ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும், தன்னிடம் முழு பலம் உள்ளது என்று எண்ணி, முஸ்லிம்களை நசுக்க சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களுக்கு இன் த வசனம் தெரியாது...சூழ்ச்சியாளர் கெல்லாம் பெரிய சூழ்ச்சி யாளன், வல்ல அல்லாஹ்..அவனின் சூழ்ச்சிக்கு முன் இந்த சூழ்ச்சி ஒன்றும் அல்ல.

ஆட்சியாளர்களுக்கு இந்த வசனத்தை, அவர்களுடன், நெருக்கமாக இருப்பவர்கள் தெரிவிக்கலாம். பனு இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக பிரவ்ன் சூழ்ச்சியை விடவா இது பெரிய சூழ்ச்சி. ஏகத்துவ இஸ்லாத்திற்கு எதிராக , அபுஜஹீல் கூட்டம் சூழ்ச்சி செய்து, சிறு கூட்டதிடம் பதறு போரில் மண் கவ்வியது ஞாபகம் இருக்கட்டும்..

இன்றும் கூட, இந்த சூழ் நிலையில், இதை எதிர்த்து கேட்காமல் , பாத்திமா முச்சாபார் தலைமையில் உள்ள இந்தியன் உனியன் முஸ்லிம் லீக் ADMK ஆதரவு நிலை எடுத்து உள்ளது.. இதை எதிர்த்து கேட்க வேண்டியவர்கள், சீக்கிரம் கேட்பார்கள் என்று நம்புவோம்.

பெர்ணம்பெட் தலித் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து , ஏற்கனவே TNTJ போராட்டம் நடத்தி விட்டது.. அம்மாவின் வெற்றிக்கு அரும்பாடு பட்ட முஸ்லிம்களின் முதுகில் குத்தப்பட்டுவிட்டது.// இது அம்மாவின் KNOWLEDGE செல்லவே இல்லை என்போர் இப்போதாவது எடுத்து செல்லட்டும்..

இப்போதாவது, அரசியல் சார்ந்த மற்றும் பொது நல இஸ்லாமிய கட்சிகள் ஒன்று சேர்வது, காலத்தின் கட்டாயம்.. ஒன்று மறக்க கூடாது.. நமக்கு இரு கழகம்க்களுமே துரோகம் தான் செய்கிறது..1996 ஆம் ஆண்டு, dmk ஆட்சியில் தான், நமதூர் தலிவர் பதவி முதலில் பெண்களுக்கு ஒதுக்க பட்டது..சென்ற ஊராட்சி தேர்தல், dmk ஆட்சியில் தான், புனித ரமளானில் (கால அவகாசம் இருந்தும் ) நடத்தப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by V D SADAK THAMBY (Guangzhou(China)) [25 September 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 8733

நான் முன்பொருமுறை தெரிவித்ததுபோல , இந்த சகோதரி நகர் மன்ற தலைமை பொறுப்பிற்கு தகுதியானவர் .

படித்தவர் .பண்பாளர் .இளையவர் .நிர்வகிக்கும் திறமையுடையவர் .

அனைத்து பொதுனலமன்றங்களும்,இவரின் கோரிக்கையை ஏற்று , ஒருமனதாக இவரை தேர்ந்தெடுக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. சீரிய சிந்தனை மிக்க நல்ல சேவகி..
posted by M.S.H. MUTHU JAREENA : SHELL HOUSE (காயல்பட்டினம்) [25 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8736

நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு ரஃப்யாஸ் ரோசெரி மழலையர் பள்ளி நிறுவனர் ஆபிதா அவர்கள் சரியான தேர்வாக கருதுகிறேன். இவர் மக்களுக்கு அளித்து இருக்கும் உறுதி மொழி கடிதத்தின்படி மக்கள் குறைகளை நல்லமுறையில் நிவர்த்தி செய்வார்... நல்ல ஆற்றல் உடையவர்.. அணைத்து சமூக மக்களிடையே நல்ல நேயத்தோடு பழக கூடிய பண்பாளர்... சீரிய சிந்தனை மிக்க நல்ல சேவகி.. இந்த சேவகி வெற்றி பெற்று இவரின் சேவை நமது நகர்மன்றம் மூலம் நமது மக்கள் பயன் பெற்று இந்த சேவகி வாழ்த்து பெற அட்வான்ஸ் நல் வாழ்த்துக்கள்..

அன்புடன் -

M.S.H முத்து ஜரீனா
M.A.K.J ஆமினா நஸ்மியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by ZUBAIR RAHMAN (Bengaluru) [25 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8740

வாழ்த்துக்கள்.... தங்களின் குறிக்கோள் வெற்றி அடைய வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன்.

இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?


[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by Hasbullah Mackie (dubai) [25 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8743

தானாக முன்வந்து தலைவி பதவி கோரியிருப்பது வரவேற்கக் கூடியது தான் ஆனாலும் மார்க்க ரீதியின் அடிப்படையில் பெண்கள் வீட்டில் இருந்து சமுதாய சேவைகள் செய்தால் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் ஸல்லல்லாஹு வசல்லம் முற்றிலும் அடிபணிந்து இறை அச்சத்துடன் இருக்கலாம் என்பது எனது கருது.

ஏனென்றால் ஊர் தலைவிக்க இருக்க விரும்பும் நீங்கள், நடக்கின்ற அரசியல் சாக்கடைகளில் கலந்து உங்களின் உண்மையான இறை அச்சத்தை வீணடிக்க வேண்டாம் என்பது எனது அபிப்பிராயம். தேர்தலில் போட்டியிடும் முன்பு மார்க்கத்தில் விளக்கமுள்ள ஆலிம்களை கலந்து முடிவெடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by M Sajith (DUBAI) [25 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8744

நமதூர் நகர் மன்றத்திற்கு 'தலைவி'தான் என்பது நிர்பந்தம் - தலைமை பொறுப்பில் யாரும் இல்லாமல் வெற்றிடமாக விட இயலாது - இது சூழ்நிலை.

வழக்கு தொடர்வது இடைகால தடை வாங்குவது போன்ற நடவடிக்கைகளும் தற்காலிகம் தான். இம்முறை இல்லை என்றால் அடுத்த தேர்தலில் நமதூர் பெண்களுக்கு ஒதுக்க படுவதை தவிர்க்க இயலாது.

என்னதான் முயன்றாலும், நபி(ஸல்) அவர்களின் முன்னரிவிப்புகளில் ஒன்றான 'ஆட்சி பொறுப்பு பெண்களிடம் வரும்' என்பது நடந்தே தீரும்.

நம்முள் இறையச்சம் உள்ளவரை தயார் செய்து கொள்வதுதான் இதற்கு வழி. அவர் வழி தவறமல் செல்லவும் அவ்வாறு நடந்தால் சுட்டிக்காட்டி சரி செய்வது நம் எல்லோரின் பொறுப்பு.

வரம்பு மீறாமல் நடந்து கொள்வதில் பொறுப்பில் உள்ளவர்க்கும், அந்த பொறுப்பை கொடுத்த நம் எல்லோருக்கும் சமமான பங்கு உள்ளதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம்.

வீட்டில தொடங்கி, ஊர், மாநிலம், நாடு இன்னும் உலக அலவில் IMF வரை நம்ம 'கன்ட்ரோல்' போயி ரெம்பா நாலாச்சி சார் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by Mohamed Salih (Bangalore) [26 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8771

Salam..

Wish u all the best .. my sister..

Mohamed Salih..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by Mohamed Salih (Chennai) [26 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8783

சென்னை மாநகராட்சி கமிசனராக பணியாற்றிய திரு. ஜோதி ஜெகராஜன் IAS போன்ற அரசு உயர் அதிகாரிகளின் பாராட்டையும்,நன் மதிப்பையும் பெற்றவரும் இன்னும் இதுபோன்ற அரசு அதிகாரிகளின் செல்வாக்கை பெற்றவரும் நகரில் இரசாயணம் உரம் கலக்காமல் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள் மரம் செடி கொடிகளை மக்களுக்கு வழங்கி பசுமை புரட்சி செய்து கான்சருக்கு எதிராக சத்தமில்லாமல் சாதனை புரிந்து வரும் சகோதரி ஆபிதா B.sc., B.Ed., அவர்கள் லஞ்ச லாவண்யதிர்க்கு அப்பாற்பட்டவர், எந்த ஒரு அரசியல் கட்சியையும் சேராதவர், திறமையான நிர்வாகி குறிப்பாக சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடிய இளவயதுடயவர். இவரை தேர்ந்தெடுத்தால் நமதூர் பல வழிகளிலும் முன்னேற்றமடையும் என்பது என் கருத்து.

அன்புடன்

S.A.C. முஹம்மது ஸாலிஹ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by D.Seyed Omer Abdul Cader ( ஹாஜியார் ) (chennai) [26 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8795

நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு போட்டி இடும் ஆபிதா லாத்தா அவர்கள் வெற்றிபெற என் மனதார வாழ்த்துக்கள்... உங்கள் சேவை எங்களுக்கு தேவை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by A.R.Ahamed Mohideen (Chennai) [26 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8797

அஸ்ஸலாமு அழைக்கும் நமது ஊருக்கு சேவை செய்ய நாடும் அன்பு சகோதரி ஆபிதா அவர்களுக்கு என் மனமார வாழ்த்துக்கள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by S.H.Abbas Muhiyadeen (Chennai) [26 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8798

நகர்மன்ற தலைவி பொறுப்புக்கு போட்டி இடும் ஆபிதா லத்தா அவர்களுக்கு போட்டி இல் வெற்றி பெற என் மனதார வாழ்த்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:நகர்மன்ற தலைவி பொறுப்புக்...
posted by சாளை நவாஸ் (singapore) [27 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8904

சகோதரி ஆபிதா, நீங்கள் ஐக்கிய பேரவையால் தேர்வு செய்யப்படவில்லை என்று அறிந்து வருத்தம் அடைத்தேன்.

கண்டிப்பாக நீங்கள் ஊருக்கு வேறு வழியில் நன்மை செய்யலாம், குறிப்பாக பெண்களிடம் கேன்சர் விழிப்புணர்வு, பசுமை காயல் போன்றவற்றை நல்ல முறையில் செய்து வாரலாம்.

தகுதிகள் இருந்தும் எதனால் தேர்வு செய்யப்படவில்லை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved