Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:35:00 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7269
#KOTW7269
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 23, 2011
கட்சி சாயம் இல்லாத நகர்மன்ற தலைவர் தேவை: MEGA வேண்டுகோள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3862 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.

காயல்பட்டின நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும், அரசியல் சாயம் இல்லாத நகர்மன்ற தலைவரின் அவசியம் குறித்தும் - MEGA சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!

அன்பிற்கினிய காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல்பட்டணம் நகர்மன்றதிற்கான தேர்தல் - இன்ஷா அல்லாஹ் - வரும் அக்டோபர் 17 அன்று நடைபெறவுள்ளது. செயலாற்றக்கூடிய, ஊழலற்ற நகர்மன்றதினை உருவாக்கும் நோக்கத்தில் நம் நகரில் பல அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அந்த உயரிய எண்ணம் வெறும் கனவாக இல்லாமல், கைக்கூட - நமக்கு தேவை அரசியல் சாயம் இல்லாத நகர்மன்றம்.

ஊழலற்ற நகர்மன்றத்தை - கட்சி சாயம் கொண்ட வேட்பாளர்களால் தருவது கடினம் என்பது அனைவரும் அறிந்ததே. ஒரு சில கட்சிகளை தவிர, பல கட்சிகள் - நகர்மன்றங்களையும், பிற உள்ளாட்சி அமைப்புகளையும் - தங்கள் ஆளுமையில் வைத்துக்கொண்டு - பல நிர்வாக, பொருளாதார முறைகேடுகளை நடத்த துணைபோகும் என்பது வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம்.

ஆகவே - வரும் நகர்மன்ற தேர்தலில் எவ்வகையிலும் அரசியல் கட்சிகள் சாயம் இல்லாத ஒரு நகர்மன்ற தலைவரை தேர்வு செய்ய நாம் பாடுபட வேண்டும் என்பதே MEGA வின் நிலை. ஆகவே - குறுகிய காலமே இருப்பதால், அதற்கான நமது முயற்சிகளை துரிதப்படுத்தி, செப்டம்பர் 29 க்குள் ஒரு நல்ல முடிவினை எடுக்குமாறு MEGA அன்புடன் வேண்டுகிறது.

(மேலும் காயல்பட்டின) நகர்மன்றத் தலைவராக ஒரு பெண்மணிதான் வரமுடியும் என்ற அரசின் நியாயமற்ற முடிவை MEGA வன்மையாகக் கண்டிக்கிறது.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சுருக்கமான/கனம் பொருந்திய அறிக்கை
posted by Mauroof (Dubai) [23 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8685

சுருக்கமான அறிக்கை ஆனால் மிக முக்கியமானது/அவசியமானது. MEGA எந்த நோக்கத்திற்காக துவங்கப்பட்டதோ அந்த நோக்கம் எத்தனை தடைகள் வந்த போதும் அல்லாஹ்வின் துணையோடும் அவன் நாடும் நன்மக்களின் பேராதரவோடும் வெற்றி பெற துவாவுடன் கூடிய வாழ்த்துக்கள்.

நான் இப்போதும் சொல்கிறேன், நமதூர் நகரமன்றத்தின் "தலைவர்" பதவி பெண்களுக்காக சட்டத்திற்கு புறம்பாக ஒதுக்கப்பட்டது "கொடுங்கோல் மற்றும் நாசகார ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளில் ஒன்றே".

இந்த சூழ்ச்சிகள் அரசனையாக வருவதற்கு நமதூரிலும் சில "எட்டப்பர்கள்" தங்களால் இயன்ற முயற்சிகளை செய்துள்ளார்கள் என்றால் அது மிகை ஆகாது.

அந்தோ பரிதாபம் சூழ்ச்சியாலர்களிலேல்லாம் மிக பெரிய சூழ்ச்சியாளன் படைத்த இறைவன் என்பதை சிந்திக்க மறந்து போகிறார்களே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by mackie noohuthambi (kayalpatnam) [24 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8688

இப்போது பொது மக்கள் கேட்கும் கேள்வி இதுதான். நீங்கள் எல்லோரும் அதாவது ஐக்ய பேரவை, மெகா, ஒருங்கினைப்புக்கமிட்டி எல்லோரும் ஒரே குரலில் பேசுகிறீர்களா, உங்களுக்குள் கருத்து ஒற்றுமை ஏற்பட்டு விட்டதா,

யார் சொல்லும் ஆளுக்கு நாங்கள் வோட்டு போடவேண்டும். அவரவர்கள் விரும்பும் நபருக்கா, அல்லது ஐக்கிய பேரவை சொல்லும் ஆளுக்கா, மெகா சொல்லும் ஆளுக்கா அல்லது ஒருங்கிணைப்பு கமிட்டி சொல்லும் ஆளுக்கா? முதலில் அதை தெளிவாக சொல்லுங்கள் குளம் அளைந்து மீன் பிடிக்க சொல்ல வேண்டாம்.

29m திகதி வேட்பு மனு கொடுக்க கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகரமன்ற தலைவர் பெண் தான் என்று அரசு முடிவு செய்து அறிவித்துள்ளதை கண்டித்து எல்லோரும் தேர்தலை புறக்கணிக்க தயாரா? நீரோட்டம் இல்லாமல் நிலம் விளையாது, போராட்டம் இல்லாது நலம் விளையாது.

கூடங்குளம், அன்னா ஹசாரே போன்றவர்கள் இதற்கு சான்று. அதிலும் நாம் எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி கிடைக்கும். எனவே சீக்கிரமாக முடிவு எடுத்து மக்களுக்கு அறிவியுங்கள்.

முன்னர் ஒரு முறை சிங்கிதுரையில் வீடு கட்டுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கருணாநிதிக்கு போஸ்ட் கார்டு அனுப்பிவிட்டு தேர்தல் வந்தவுடன் ஒட்டு மொத்தமாக உதய சூரியனில் பட்டன் அழுத்திய கதையாக போய் விடக்கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கட்சி சாயமா ? கருவாடு சாயமா ? அதலாம் அப்புறம் பார்போம் சகோதரர்களே...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8696

அஸ்ஸலாமு அழைக்கும்.

கட்சி சாயமா ? கருவாடு சாயமா ? அதலாம் அப்புறம் பார்போம் சகோதரர்களே... இதற்க்கு தாங்கள் கருத்து என்ன ?

காயல்பட்டினம் நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதில் வழிகாட்டுதல்கள் சரியாக பின் பற்றவில்லை என காயல்பட்டினம் நகராட்சி தேர்தலுக்கு தடை கோரி பொது நல வழக்கு போடலாமே...

சட்ட விதிகளின் படி 10 வருடத்துக்கு ஒரு முறைதான் இம்மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள் அதன் படி காயல்பட்டினம் நகராட்சி தலைவர் பதவி 1996 முதல் 2006 வரை 10 வருடங்கள் மகளிருக்கு ஒதுக்கப்பட்டு முறையே பெண்கள் காயல்பட்டினம் நகராட்சி தலைவராக இருந்தனர்

மீண்டும் பொது தொகுதியாக மாற்றப்பட்டு 2006 முதல் 2011 வரை தற்போது தலைவராக வாவு செயத் அப்துல் ரகுமான் அவர்கள் இருந்து வருகிறார். எனவே அடுத்த 5 வருடங்களுக்கு 2016 வரை பொது தொகுதியாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் தற்போது மகளிருக்கான தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது வழக்கத்துக்கு விரோதமாக உள்ளது.

மேலும் நகராட்சி தலைவர் பதவிக்கு மகளிருக்கான வாய்ப்பை காயல்பட்டினத்துக்கு ஒதுக்குவதை காட்டிலும் மற்ற ஊர்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்கி பெண் தொகுதியாக அறிவித்தால் அந்தந்த ஊர் பெண்களுக்கும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். இப்படி செய்தால் அனைத்தூர் மகளிருக்கும் சமமான வாய்ப்பு கிட்டும்.

நகராட்சி தலைவர் பதவி மகளிருக்கான வாய்ப்பை தொடர்ந்து காயல்பட்டினத்துக்கு வழங்குவதினால் இந்த முறை வேறு ஒரு நகராட்சி மகளிருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டி பறித்தது போல் ஆகிறது

மேலும் பெண் தொகுதியா பொது தொகுதியா என்று ஒதுக்கப்படுவதற்கு 15 நாட்களுக்கு முன் இதற்கான முன்னறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் மற்றும் பல்வேறு காரணங்களை எடுத்து கூறி கீழக்கரை சகோதரர்கள் வழக்கு தொடுத்தது போல் ஊரில் உள்ள எத்தனையோ அமைப்புகளில் ஒரு அமைப்பு பொது நல வழக்கு போடலாமே...

தமிழன்.. முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by mohd ikram (saudi arabia) [24 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8698

நமது நகர்மன்றம் பெண்களுக்கு ஒதுகபட்டத்தை எதிர்த்து நாம் வழக்கு போட்டால், நமது ஊருக்கு தேர்தல் நடக்காமல் நிறுத்தி வைத்து விட்டு கேசு, வழக்கு என்று பல வருடங்களை வீணாக்கி விடுவார்கல் . அதனால் நமது ஊரில் இனி வார்டு மெம்பெர் & நகரமன்ற தலைவர் இல்லாமல் நமது ஊரு இன்னும் நாறிவிடும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். நடப்பது ஜெயா வின் ஆட்சி எது வேண்டுமாலும் நடக்கலாம். அதனால் நாம் எல்லோரும் ஓன்று சேர்ந்து நல்ல தலைவியை நமது ஊரு மக்களுக்கு அடையாலம் காட்டுவது நமது கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [24 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8710

மெகாவின் உண்மையான நோக்கத்திற்கு ஊர் மக்கள்தான், நல்ல ஒற்றுமையான முடிவைத் தர வேண்டும். கவி மகனார் காதர் அவர்களே! சிறு வேண்டுகோள். முறை கேடுகளை நடத்த(சில கட்சிகள்) துணை போகும் என்பது வரலாறு நமக்கு கற்றுத்தந்த பாடம்.!!! இதுதான் சரியான வார்த்தை! இதனால்தான் மெகாவும் உருவாகியது.! எனது கருத்து தப்பாக இருப்பின், பொருந்திக் கொள்ளவும்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by K S Mohamed Shuaib (Kayalpatinam) [24 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8716

கட்சி சாயம் இல்லாத நகராட்சி என்ற கருத்தை கூறவந்த சகோ. முஹிதீன் இக்ரம் "நடப்பது ஜெயா ஆட்சி..."என்று ஏன் அரசியல் பேசுகிறார்? இப்படியே ஒரு குறிப்பிட கட்சியை வெறுத்து வெறுத்தே நமதூர் "ஒருகுறிப்பிட்ட கட்சிக்கும் தலைவருக்கும் விசுவாசமான ஊர் "என்று அரசியல் அரங்கில் அடையாளம் காணப்பட்டுவிட்டது.

சிலர் இதை ஒத்துக்கொண்டாலும் மனதளவில் அவர்களும்கூட அப்படியே இருக்கின்றனர். இதன் காரணமாக நம்மில் பலர் தெளிவான சிந்தனை இன்றி எந்த பிரச்சினையும் அந்த குறிப்பிட்ட :கட்சி"யின் வட்டத்திற்கு உள்ளாகவே எடை போடுகின்றனர். அதற்க்கு மேல் அவர்களுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதில்லை.

சகோ. இக்ரம் தன் மனதளவில் கொண்டாடும் தலைவர் இந்த ஊருக்கும் சமுதாயத்திற்கும் என்ன செய்தார்? கடந்த ஐந்து ஆண்டுக்கால ஆட்சியில் இந்த ஊருக்கு என்ன நன்மை கிடைத்தது?என்பதை அவர் கொஞ்சம் சிந்தித்து பார்க்கவேண்டும். அவ்வாறு செய்துவிட்டு அவர் ஜெயா"குறித்து விமர்சிப்பதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [24 September 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8719

ஊழலற்ற நகர்மன்றத்தை கட்சி சாயம் கொண்ட வேட்பாளர்களால் என்றில்லை கண்டிப்பாக யாராலும் தருவது மிகவும் கடினம் . கண்டிப்பாக தேனை தொட்டவன் நக்கி தான் ஆவான் ஆகையால் இதில் யாரும் விதிவிலக்கல்ல. ஆளும் கட்சி சாயம் கொண்ட வேட்பாளர் தலைவராகா வந்தால் தான் குறைந்தது சட்ட மன்ற தேர்தல் மூலம் ஆளும் கட்சிக்கு நமதூரின் மீது ஏற்பட்ட கோவம் சிறிதளவாவது குறையும் என்பது என் கருத்து ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by hasan (khobar) [24 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8721

தமிழ்நாட்டில் மொத்தம் 125 நகராட்சிகளே உள்ளன. இதில் இதுவரை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் கூட்டணி கட்சிகளை கூட ஆலோசிக்காமல் 124 நகராட்சிக்கும் வேர்பாளர்களை அறிவித்து விட்டார்.கூடவே பல பேரூராட்சிகளுக்கும் வேர்பாளர்களை அறிவித்தா வண்ணம் உள்ளார்.இதில் அம்மையார் வேர்பாளர் அறிவிக்காமல் மீதம் உள்ள ஒரே நகராட்சி எது தெரியுமா... ஆம் நம் காயல்பட்டணம்தான் ...

அம்மையார் காயல்பட்டணத்தை மட்டும் விட்டு வைத்தது ஏன்... கண்டிப்பாக நம்மை மதித்தோ பயந்தோ இருக்க வாய்ப்பில்லை.

அப்படியென்றால் இது நமக்கு நன்மை பயக்குமா? யோசிக்க வேண்டிய ஒன்றுதான்..

நம் காயல் மாநகரம் என்று பெருமையுடன் கூறும் நம் காயல்பதி உண்மையில் மாநகராட்சியானாலும் கட்சிகள் போட்டியிட கூடாது என்பது சரியா?

அவர்கள் அப்பொழுது விட்டு வைப்பார்களா?

நாளை நாம் நம் நகருக்கு திட்டங்களை பெற முதலமைச்சரை அணுகும் போது அவர் உங்கள் ஊர் மட்டும் எங்களுக்கு ஓட்டும் போட மாட்டீர்கள். உங்கள் நகராட்சியில் போட்டியிடவும் விட மாட்டீர்கள் என்று சொன்னால் நாம் என்ன பதில் சொல்வோம்?

சிந்திப்பீர்...

திரையரங்குகள் வேண்டாம்..மதுக்கடைகள் வேண்டாம் என்றால்..அது ஏற்றுக் கொள்ள கூடிய ஒன்று....

ஆனால் ரயில்வே ஸ்டேஷன் ஊருக்குள்ளே வரக்கூடாது...

கடற்கரை சாலை ஊருக்குள்ளே வரக்கூடாது..வந்தா எங்க நிலங்கள் எல்லாம் போயிரும்...

பேருந்து எங்கள் தெருவில் வரக்கூடாது.வந்தால் எங்கள் பிள்ளைகள் நடமாட முடியாது.

எல்லா நகராட்சியிலும் (முஸ்லிம் நகராட்சி உற்பட) கட்சிகள் போட்டி இடலாம்...

ஆனால் காயல்பட்டினத்தில் கூடாது என்றால்...

யோசியிங்கள்...

ஏன் நம் தாய் இயக்கங்களுமா போட்டியிட கூடாது...

இரண்டு முறை பொதுசெயலாளர் பதவியை நம் மண்ணின் உண்மையான மைந்தனுக்கு தந்த முஸ்லிம் லீக்குக்கு என்ன குறை...

பேராசியர் அவர்கள் தலைமையில் சிறப்பாக சட்டசபையில் தனி கட்சியாக உள்ள நம் மமகஉக்கு என்ன குறைச்சல்..

திமுக வும் அதிமுக வும் தான் முஸ்லிம் லீக்கையும் மமகவையும் கழற்றி விட்டனவே...

முஸ்லிம் லீக்கைவும் மமகவும் காயல்பட்டினத்தில் போட்டியிடாமல் எங்குபோய் போட்டியிடும்...

சிந்தியுங்கள்...இதுவே தருணம்...கேரளாவில் மலபாரில் முஸ்லிம்களின் ஒற்றுமையால் அங்கு முஸ்லிம் லீக்கை தோற்கடிக்க எவராலும் முடியாது.அதனால் இன்று முஸ்லீம் லீக் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்கில் உள்ளது.

அதைப்போல ஏன் ஒரு முஸ்லிம் லீக்கோ..மமக வோ ..காயல் பட்டணத்துக்கு இருக்ககூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by M. Sajith (DUBAI) [24 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8723

சூரியனைத்தவிர மற்ற சின்னங்களில் வாக்களித்தல் பெரும் பாவம் போல கருதுவோர் இன்னும் நம்மிடையே அநேகர் இருக்கின்றனர்.

இது "லீக்"கின் நெடுநாள் கூட்டனி ஏற்படுத்திய 'முஸ்லிம்களின் நன்பன்' மாயை. நல்ல வேளையாக இடையில் சமது சஹிப் அம்மாவிடம் ஏற்படுத்திய இடைக்கால 'ஒற்றுமை' எல்லா அரசியல் கட்சியும் அவங்கவங்க பிழைப்பைதான் பார்கிறாங்க சமுதாயத்த இல்லேன்னு பலருக்கும் புரியவைத்தது.

என்னதான் இது புரிந்தாலும், இந்த தேர்தல்ல ஒரு கட்சிக்கும், அடுத்த தேர்தல்ல வேற கட்சிக்கும் வாக்களிப்பதில் தவறேதுமில்லை என்பது தெரிந்தாலும் உள்ளத்தில் ஏற்படும் நெருடலை நம்மில் பலரும் மறுக்க இயலாது.

தெளிவான மற்ற கட்சிகளில் இல்லை என்றால் DEFAULT திமுக அனுதாபி (லீக்கினரும் இதில் அடக்கம்) - இதுவும் இல்லாத காயலர்கள் இருக்கவாசெய்கிறார்கள்?

சாயம் போக வெள்ளாவியில் வைத்து வெளுத்து எடுத்தால்தான் உண்டு !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by OMER ANAS (DOHA QATAR.) [25 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8727

இங்கு கருத்து சொல்பவர்கள் அனைவருக்கும் நன்றி.!!!

முதலில் நாம் ஒற்றுமையாக இருப்பது முக்கியம். அப்படி இருக்கிறோமா? நிச்சயம் இல்லை. குடும்பத்தில் கூட இல்லை. மனைவி ஒரு கட்சி. கணவன் ஒரு கட்சி. மனைவி சுன்னத் ஜமாஅத். கணவர் பற்பல ஜமாஅத். கணவருக்கு முதல் நாள் கடற்கரையில் தொழுகை. மனைவிக்கு அடுத்த நாள் தைக்காவில் தொழுகை. (மக்களுக்கு இரண்டு 100 ரூபாய்) இது குடும்ப குழப்பம்

இதுவே இப்படி இருக்கும் போது கட்சி சார்பாக கண்ணியமானவரை நிறுத்தினால், கூட கட்சிதான் பிரதானமாக விளங்கும். முஸ்லீம் லீக், ம ம க என்று வைத்தால் கூட யார் தலைவராக வரணும், யார் துணைத்தலைவராக வரணும், என்று நாம் இங்கு கருத்து சொல்லிக் கொண்டு போவோம்! பொதுவானவர் என்று வரும் போது அவரின் குணம் மட்டும் அறிந்து நாம் தேரவு செய்வோம்.

ஊரில் மீண்டும் M K T அப்பா L K அப்பா காலத்தை புகுத்த நினைப்போர், இதை புரிந்தது கொண்டால் சரி.!!! கட்சிதான் முக்கியம் என்றால், நாம் ஒற்றுமையை இழப்போம். இது சரியா? சகோதரர்களே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [25 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8760

சகோதரர் ஹசன் அவர்கள் மிகவும் சரியாக கருத்து பதித்துள்ளார். கமெண்ட்ஸ் No. 8, (Comment Reference Number: 8721). Very Good.

நான் டைப் பண்ணின கருத்தை அப்படியே BACKSPACE பட்டனை அழுத்தி அழித்து விட்டனேன்.

சாளை S.I.ஜியாவுதீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:கட்சி சாயம் இல்லாத நகர்மன...
posted by salih (chennai) [25 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8764

ஏன் உள்ளாட்சி மன்றங்களில் கட்சிகளுக்கு ஆதரவளிக்க கூடாது எனபதற்கு பல காரணங்கள் கூறலாம்.

ஒரு காரணம்: சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் ஆட்சி அமைக்க கட்சிகள் தேவைப்படலாம். ஆனால் உள்ளாட்சி மன்றங்களுக்கு கட்சிகளின் அவசியம் இல்லை.

தற்போது நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் கூட - சில கிராமப்புற பொறுப்புகளுக்கு, கட்சி சார்பாக வேட்பாளர்கள் - சட்ட பூர்வமாக நிற்கமுடியாது. அதற்க்கு தடை உள்ளது.

இந்தியாவில் - ஊழலை ஒழிக்க, பலர் பரிந்துரைக்கும் திட்டங்களில், கட்சி சார்பற்ற உள்ளாட்சி தேர்தல்களும் ஒன்று. கட்சி சார்பாக வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது, சில கட்சிகள் வளர்வதற்கு உதவியாக இருக்கலாம். ஆனால் - எங்கு நமக்கு முடியுமோ, அங்கு கட்சிகளை ஒதுக்கி வைப்பதே நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. கட்சிகள் கூடாது என்பது ஏன்?
posted by kavimagan (dubai) [26 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8775

இங்கே நண்பர் ஹசன் அவர்களது கருத்து எளிமையும், வலிமையையும் மிக்கதாக இருந்தாலும்,சில யதார்த்த உண்மைகளை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இரண்டு சமுதாய இயக்கங்களைத் தவிர,வேறு எந்த கட்சியை ஆதரித்தாலும்,அது நமதூருக்கு,பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கும் என்பதுதான் உண்மை.உதாரணத்திற்கு, தி.மு.க.வந்தால் அரசின் நெருக்கடிக்கு ஆளாகவேண்டும். அ.தி.மு.க.வந்தால்,பாதாள சாக்கடை உட்பட அரசின் எல்லா நிர்ப்பந்தங்களையும் ஏற்க வேண்டியது வரும்.நீதிமன்றம் செல்லக்கூட வழி இருக்காது.மேலும், குத்தகை விஷயங்களில் கட்சி தலையீடு இருந்து கொண்டே இருக்கும்.இதுதான் யதார்த்தம்.நாளை ஒருவேளை மாநகராட்சியானால் அது குறித்து,அப்போதைய சூழ்நிலைக்கேற்ற மாதிரி முடிவெடுக்க முடியும்.நிகழ்காலத்தை தொலைத்துவிட்டு,எதிர்காலத்தை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்?

சமுதாய இயக்கங்கள் போட்டியிடுவதில் தவறில்லை என்றே வைப்போம்.தாய்சபை போட்டியிட்டால் ம.ம.க.வும், ம.ம.க. போட்டியிட்டால் தாய்சபையும் பரஸ்பரம் ஆதரிக்கும் என்று இரண்டு இயக்கங்களும் ஒத்துக்கொள்ளாதவரை, அது நகரின் ஒற்றுமையில் மென்மேலும் கீரலை ஏற்படுத்திவிடும்.

கட்சிகள் அல்லாத பஞ்சாயத்துகள்,மிகவும் சிறப்பாக,பல்வேறு ஊர்களில் செயல்பட்டுக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காண்கின்றோம்.தேவை கட்சிகள் அல்ல! மனசாட்சியும், மனிதநேயமும்,மார்க்கப்பற்றும்,மதிநுட்பமும் நிறைந்த ஒரு மகத்தான தலைவர் அல்லது தலைவி மாத்திரமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved