Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:47:27 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9321
#KOTW9321
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 8, 2012
காயல்பட்டினம் நகராட்சியில் தனிமனித ஆதிக்கம்! ஜனதா கட்சி மாநில பொதுக்குழு கூட்டத்தில் காயலர் பேச்சு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3429 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் தனிமனித ஆதிக்கம் உள்ளதாகவும், அது களையப்பட வேண்டும் என்றும், கோயமுத்தூரில் நடைபெற்ற ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுக்குழுக் கூட்டத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - அக்கட்சியின் உறுப்பினர் பேசியுள்ளார்.

இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எல்.மூஸா நெய்னா வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

ஜனதா கட்சியின் மாநில பொதுக்குழுக் கூட்டம் கோயமுத்தூர் தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள கீதா ஹாலில், 02.10.2012 அன்று நடைபெற்றது.

கட்சியின் தேசிய தலைவர் சுப்பிரமணிய சாமி தலைமையிலும், தமிழக தலைவர் சந்திரலேகா முன்னிலையிலும் நடைபெற்ற இப்பொழுக்குழுவில், ஊழல் ஒழிப்பு குறித்தும், காயல்பட்டினம் நகராட்சியில் நிலவி வரும் தனி மனித ஆதிக்கம் குறித்தும், காயல்பட்டினத்தைச் சார்ந்த - கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் என்.டி.முஹம்மத் முஹ்யித்தீன் உரையாற்றினார்.



காயல்பட்டினத்தில் வெளிப்படையாக நடைபெறும் இக்குற்றத்தைக் கண்டித்து நகரின் அரசியல் கட்சிகள் எதுவும் குரலெழுப்பாத நிலையில், ஜனதா கட்சி மட்டுமே பிரசுரம் மூலம் பொதுமக்களுக்கு உண்மை நிலவரத்தை துணிச்சலுடன் விளக்கியதாகவும் அவர் தனதுரையில் தெரிவித்தார்.

பின்னர், காயல்பட்டினத்திலிருந்து கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து, கட்சித் தலைவர்களுக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.



இக்கூட்டத்தில், ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எல்.மூஸா நெய்னா, காயல்பட்டினம் நகர கிளை தலைவர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் எம்.ஏ.சொளுக்கு, பொதுக்குழு உறுப்பினர் என்.டி.முஹம்மத் முஹ்யித்தீன், எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் உட்பட திரளானோர் கலந்துகொண்டனர்.






இவ்வாறு, ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எல்.மூஸா நெய்னா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...யார் அந்த தனி மனிதன்?
posted by mackie noohuthambi (kayalpatnam) [08 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22693

ஜனதா கட்சி காயல்பட்டினதிலிருப்பது இப்போதுதான் தெரிகிறது. மூசா நைனா காக்கா ஆம்னி பஸ் தொழிலில் இருப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவர் ஒரு மாபெரும் தமிழகம் தழுவிய ஒரு பேரியக்கத்தின் செயலாளராக இருப்பது அறிந்து சந்தோஷம்.

காயல்பட்டினத்தின் நகராட்சியில் ஒரு தனி மனிதன் ஆதிக்கம் நடப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன.

சுப்ரமணிய சாமி அவர்கள் எப்போதுமே குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து அவர்கள் பெயர் விலாசத்துடன் பேசும் ஒரு சக்தி வாய்ந்த தலைவர், அவர் சொல் பொது மக்கள் மத்தியில் எடுபடுகிறதோ இல்லையோ அது வேறு விஷயம். ஆணித்தரமாக பேசக்கூடியவர். தன் பேச்சில் பிடிவாதமாக இருப்பவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரின் கீழ் செயலாற்றுபவர்கள்.

நமதூர் நகரமன்றத்தின் தனி மனித ஆட்சி நடப்பதாக சும்மா சொல்லிவிட்டு போகக்கூடாது. அந்த நபரை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அப்போதுதான் பொது மக்களும் அவரிடம் கேள்வி கேட்டு உண்மையை வெளிக்கொண்டு வரமுடியும். அவர் நம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து விடுவாரோ என்ற பயம் இருந்தால் பொது வாழ்வில் நிலைத்து இருக்க முடியாது என்பதை கடந்த கால அரசியல் வரலாறுகள் உணர்திக்கொண்டிருக்கின்றன.

பொது மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள். யார் அந்த தனி மனிதன், சுற்றி வளைக்காமல் நேரடியாக சொல்லுங்கள். ஜனதா கட்சியின் தானை தலைவர்களே....வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by muhammed younus (muscat) [08 October 2012]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 22694

இந்த செய்தி இந்த அமைப்பின் மாவட்ட துணை தலைவரின் "you tube" சிரிப்போடு சேர்த்து வெளியிட தகுதி வாய்ந்தது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. கர்ஜனை தொடரட்டும்
posted by சொளுக்கு.M.A.C.முஹம்மது நூகு (CHENNAI) [08 October 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 22697

அடேங்கப்பப்பா இவ்வளவு கூட்டமா? கட்சியில் உள்ள அனைத்து பதவிகளும் நமதூருக்கே கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. ஒரு சிங்கம்தான் கிளம்பியது என்று பார்த்தால் இவ்வளவி சிங்கங்கள் அதுவும் நமதூரிலா? யானைக்கு ............. ஆக இருப்பதை விட எறும்புக்கு தலையா இருப்பது தான் பெருமை.

மூஸா காக்கா அவர்களே தொடர்ந்து உங்கள் கர்ஜனை தொடரட்டும் யாருக்கும் அஞ்சாதீர்கள். எக்காரணத்தை கொண்டும் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் விலை போய் விடாதீர்கள்.

கூடிய விரைவில் அகில இந்திய மாநாட்டை காயல்பட்டணத்தில் நடைபெற செய்து நமதூருக்கு பெருமை சேர்த்திடுங்கள். அடுத்த தேர்தலுக்கு பிறகு உங்களை போக்குவரத்து துறை அமைச்சராக நான் பார்க்க ஆசைபடுகிறேன். எனது ஆசை நிறைவேற அல்லாஹ்விடம் துஆ கேட்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by M.S. Sayyid Mohammed (Bangkok) [09 October 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 22707

சுப்ரமணிய சுவாமி கூட்டத்தில் நீங்கள் பேசியிருப்பதால் இதை நிச்சயமாக ஒரு தேசிய பிரச்சனையாக கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உண்டு. ஏன் சர்வ தேச பிரச்சனையாகக் கொண்டு சென்றாலும் ஆச்சரியமில்லை. விரைவில் நம் காயலர் ஒருவர் ஐ நா சபைக்கு அழைக்கவும் படலாம். கோவையில் பேசிய பேச்சின் ஒளிப்பதிவு இருந்தால் தயவு செய்து வெளியிடுங்கள்.

M .S .செய்யது முஹம்மது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by salai s nawas (singapore) [09 October 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 22709

மாபெரும் சபையினில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாற்றுக்குறையாத மன்னவன் இவனென்று
போற்றி புகழ வேண்டும்.

காயல் புயல் மூசா காக்கா, சந்திரலேகா அம்மா உங்களை பார்த்து புன்முறுவல் பூக்குராங்களே....... காமெடி கீமெடி ஏதும் அவுத்து விடீன்களா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அவலங்களை எடுத்து கூறி இதற்க்கு தீர்வு காண சுவாமிஜியை வலியுறுத்தியது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல விசியம்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [09 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22710

வாக்களித்த மக்களுக்கு பயனுள்ள நல்ல நகர்மன்றமாக செயல் பட அவர் சார்ந்த ஜனதா கட்சி தலைமைக்கு நமது நகர்மன்றத்தின் அதிர்ப்தியான செயல்பாடு அவலங்களை எடுத்து கூறி இதற்க்கு தீர்வு காண சுவாமிஜியை வலியுறுத்தியது வரவேற்கப்பட வேண்டிய ஒரு நல்ல விசியம்...

நகரில் செல்வாக்கு உள்ள எந்த கட்சியும் மக்களுக்கு பயன் இல்லாத நகராட்சி செயல்பாடுகளை கண்டித்து துண்டு பிரசுரமோ...! கட்சியின் சார்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்யவோ..! முன் வரவில்லை...



Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Late News
posted by M Sajith (DUBAI) [09 October 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22712

யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், முசா காக்காவின் நோடிசுக்கு பிறகு நடந்த அவசரகூட்டம் ஆரவாரம் இல்லாமல் அமைதியாக நடந்ததா இல்லையா...

அதில் மீடியாவும் இருந்தது, பொதுமக்களும் பார்வையாளர்களாக இருந்தார்கள், தலைவரும் இருந்தார் உறுப்பினர்களும் இருந்தனர்... பிடிவாதம் மட்டும் காணவில்லை..!!

சிறு துரும்பு பல்குத்தவும் உதவும், கண்ணை கலக்கவும் உதவும்!!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பெட்ரோல் விலை குறைந்தது!  (9/10/2012) [Views - 2442; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved