|  ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும். 
 ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். அறுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியை குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
 
 அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
 
 அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினம் அரூஸிய்யா பள்ளியில், மாடு பங்கு ஒன்றுக்கு ரூ.2000/- என தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 பங்கு சேர விரும்புவோர், அதன் பொறுப்பாளர்களான
 மூஸா நெய்னா (கைபேசி எண்: +91 94432 05207),
 காதர் (கைபேசி எண்: +91 96291 34316)
 ஆகியோருள் ஒருவரைத் தொடர்புகொண்டு தமது பங்கை உறுதி செய்துகொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
 இப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இவ்வாண்டுதான் துவக்கமாக ஒருங்கிணைந்த உள்ஹிய்யா ஏற்பாடுகள் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 தகவல்:
 ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ
 |