Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:14:12 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9345
#KOTW9345
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 11, 2012
இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்க தக்வா / இக்ராஃ தலைவர் முன்முயற்சி! 30 பேர் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராக விருப்பம்!! தக்வா பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிப்பு!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3402 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்திற்கு சொந்த இடத்தை - தனது பொறுப்புக்காலத்திற்குள் வாங்கிடுவதற்காக, அனைவரும் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராகுமாறு, தக்வா பொதுக்குழுக் கூட்டத்தில் தக்வா / இக்ராஃ தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று முதற்கட்டமாக 30 பேர் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழுக் கூட்டம் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை பின்வருமாறு:-

நிகழ்முறை:
இறையருளால் எமது தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வாவின் பொதுக்குழுக் கூட்டம் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில், வாவு ஏ.எஸ்.முஹம்மத் அலீ அவர்களின் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையிலும், இந்தியாவின் காங்கயம் நகரிலிருந்து வருகை தந்திருந்த கரூர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் நூஹ் முன்னிலையிலும் நடைபெற்றது.

ஹாஃபிழ் எம்.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

தலைமையுரை:
அதனைத் தொடர்ந்து, தக்வா மன்றத் தலைவரும், இக்ராஃ தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-



அனைவருக்கும் முன்னுதாரணமான காயலர்கள்...
"வணிகத்தைக் குறிக்கோளாகக் கொண்டு கடல் கடந்து வந்து வாழ்ந்தாலும், பிறந்த மண்ணுக்கும், மக்களுக்கும் நலவுகள் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று நமதூர் மக்களிடம் உள்ள இந்த உணர்வு தங்களுக்கெல்லாம் முன்னுதாரணமான அம்சமாகும்“ என பலர் சொல்ல நாம் கேள்விப்படுகிறோம்... இந்த ஒப்பற்ற உணர்வின் வெளிப்பாடுதான் தக்வா போன்ற பல்வேறு அமைப்புகளால் உலகம் முழுவதும் மிளிரும் காயல் நல மன்றங்கள்!

யாம் பெற்ற இன்பம் எம் மக்களும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில், அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள செல்வத்திலிருந்து சிறியதொரு தொகையை நம் ஊரில் வாழும் வசதி குறைந்தவர்களுக்கு கல்வி, மருத்துவம், தொழில் போன்றவற்றில் பொருளாதார ரீதியாகவும், ஆலோசனை - வழிகாட்டுதல்கள் மூலமாகவும் வழங்கியுதவிடும் உயரிய நோக்கில் இக்ராஃ, கே.எம்.டி. மருத்துவமனை, ஷிஃபா அமைப்பு, பைத்துல்மால்கள் மூலமாகவும் நம் தக்வா இயன்ற அளவு நலத்திட்டப் பணிகளைச் செய்து வருகிறது. இருந்தாலும் இது மிகக் குறைந்த அளவுதான். நம்மூர் மக்கள் தன்னிறைவு பெற்றவர்களாகத் திகழவேண்டும் என்பதே நம் லட்சியமாகும்...

கல்வியில் தன்னிறைவு...
நம் மக்கள் தன்நிறைவு பெறுவதற்கு அடிப்படைத் தேவை கல்விதான்... அந்த கல்வியை நாம் கொடுத்து விட்டால் தன்னிறைவை அடைவது அவர்களுக்கு மிக எளிது. எனவேதான், கல்வியை எளிதாக்கும் நோக்கில், அதற்கென இக்ராஃ உருவாக்கப்பட்டு, உலக காயல் மன்றங்களால் அதன் கல்வித் துறை கூட்டமைப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த இக்ராஃவை பலப்படுத்த வேண்டியது நமது கட்டாயக் கடமை என்பதை நாம் உணர வேண்டும்.

இக்ராஃவுக்கு சொந்த இடம்...
அதன் முன்னோடியாக, இக்ராஃவிற்கென - அதன் தேவைக்கேற்ப சொந்த இடம் ஒன்றை வாங்குவதற்குத் தேவையான நிதியாதாரத்தை போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது....

இக்ராஃவின் நடப்பாண்டு தலைமைப் பொறுப்பு தக்வா வசம் உள்ள நிலையில், இது விஷயத்தில் நம் மன்றத்திற்கு கூடுதல் பொறுப்பு உள்ளது.

எனவே, நம்மில் பெரும்பாலான உறுப்பினர்கள், ஒரேயொரு முறை ரூபாய் 15,000 செலுத்தி, இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராவதன் மூலம், இந்த நிதியாதாரத்தை விரைவாக உருவாக்க இயலும்... இதற்காக சென்ற கூட்டத்தில் நான் வைத்த வேண்டுகோளை ஏற்று நம் உறுப்பினர்கள் 12 பேர் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராகியுள்ளீர்கள்... இன்னும் அதிகளவில் நம் உறுப்பினர்கள் இணைவதன் மூலம், இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களில் பெரும்பகுதியினர் தக்வா உறுப்பினர்கள்தான் என்ற நிலை உருவாக வேண்டும்... இதுவே எனது ஆசை... இந்த ஆசையை நிறைவேற்றித் தருவீர்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன்...


இவ்வாறு, இக்ராஃ / தக்வா அமைப்பின் தலைவரும், பொதுக்குழுக் கூட்ட தலைவருமான ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தனதுரையில் தெரிவித்தார்.

செயலர் உரை:
அதனைத் தொடர்ந்து மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் பின்வருமாறு:-



ஒரே அம்சத்தை தொடர்ந்து பேசுவதால் நன்மையே!
இதுநாள் வரை நம் மன்றக் கூட்டங்களில் கே.எம்.டி. மருத்துவமனை பற்றியே பேசிக்கொண்டிருந்தோம்... இப்போது இக்ராஃ பற்றியே பேசிக்கொண்டிருக்கிறோம்... என்று நம்மில் பலர் கேட்கின்றனர். நாம் ஒன்றை நன்றாக கருத்திற்கொள்ள வேண்டும்... இவ்வளவு நாளாக கே.எம்.டி. பற்றிப் பேசிப்பேசி, தக்வாவின் பெயரைப் பறைசாற்றும் அளவுக்கு அம்மருத்துவமனைக்கு பிரசவ அரங்கை நாம் கட்டிக் கொடுத்திருக்கிறோம்...

அதே போல, இக்ராஃவின் முழுத் தேவையையும் நம்மால் பூர்த்தி செய்ய இயலாது என்றாலும் கூட, கூடுதல் பங்களிப்பையாவது தர வேண்டுமே என்ற வேட்கையால்தான் அதுகுறித்தும் தொடர்ந்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்... ஆனால் பேச்சுக்கள் வெறும் பேச்சுக்களாகவே நின்றுவிடாமல், ஒவ்வொரு பேச்சும் ஒரு செயல்திட்டமாக உருவெடுக்க வேண்டும்... அப்போதுதான் நாம் எடுக்கும் முயற்சி, செலவழிக்கும் நேரம் - தொகை என அனைத்தும் முழுப் பயனைத் தரும். எனவே, இக்ராஃவிற்குத் தேவைப்படும் இடத்தை வாங்கிடத் தேவையான பொருளாதாரத்தை நாம் முழுமையாக வழங்கிட இயலாமற்போனாலும், அதன் பெரும்பகுதியையாவது நாம் கொடுத்தேயாக வேண்டும் என்பதால்தான் இதுகுறித்து இக்கூட்டத்திலும் தொடர்ந்து பேசப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்...

நம் தலைவர், வாவு சம்சுதீன் ஹாஜி அவர்கள் இக்ராஃவுக்கு தலைவராக இருப்பது இந்த ஒரு வருடம் மட்டுமே! எனவே இந்த ஓர் ஆண்டிற்குள்ளாகவே ஓர் இடத்தை வாங்க அனைத்து முயற்சிகளும் செய்து, இன்ஷா அல்லாஹ் சாதித்து விடவேண்டும் என்ற இலக்கை நாம் வைத்துள்ளோம். அந்த இலக்கை அடைந்திட நம் பங்களிப்பு, அளவில் கூடுதலாக இருந்தால்தான் மற்ற மன்றத்தினருக்கு அது உந்துதலை ஏற்படுத்தும்... நம்முடைய ஆர்வத்தைப் பார்த்து மற்றவர்களும் கூடுதலாக சேரும் வாய்ப்பும் உள்ளது... அதிலும் நமக்கு நன்மை கிட்டும். இன்ஷா அல்லாஹ்!

தற்போது நாம் 60 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சிறிய அமைப்பாகத்தான் உள்ளோம் என்றாலும், சாதிப்பதில் நாமும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபிக்க வேண்டும்... என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...


இவ்வாறு, மன்றச் செயலாளர் எம்.எஸ்.செய்யித் முஹம்மத் உரையாற்றினார்.

இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக 30 பேர்...
தலைவர் மற்றும் செயலாளர் உரைகளைத் தொடர்ந்து, ஏற்கனவே தக்வாவில் உள்ள 12 ஆயுட்கால உறுப்பினர்கள் தவிர மேலதிகமாக இக்கூட்டத்தில் 18 பேர் - 15,000 ரூபாய் செலுத்தி, தம்மை இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆக, தக்வாவிலுள்ள இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்கள் 30 பேரின் பெயர் பட்டியல் பின்வருமாறு:-

01. வாவு முஹம்மத் அலீ
02. வாவு உவைஸ்
03. என்.எஸ்.ஹனீஃபா
04. வாவு ஜஃபருல்லாஹ்
05. எஸ்.ஏ.ஆர்.யூனுஸ்

06. மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.அபுல்ஹஸன் ஷாதுலீ
07. எம்.எஸ்.செய்யித் முஹம்மத்
08. ஃபியாஸ் இத்ரீஸ்
09. எம்.எச்.முஹம்மத் ஸாலிஹ்
10. வாவு எஸ்.மொகுதூம்

11. வாவு எஸ்.எச்.மொகுதூம்
12. வாவு யு.மொகுதூம்
13. எஸ்.எச்.அப்துல் கஃப்பார் ரிழ்வான்
14. மா.செ.முஹம்மத் ஸஈத்
15. வாவு எம்.எம்.ஷம்சுத்தீன்

16. தங்கள் எம்.ஏ.சி.செய்யித் இப்றாஹீம்
17. எம்.ஐ.அப்துல் வஹ்ஹாப்
18. சோனா முஹம்மத் அப்துல் காதிர்
19. எஸ்.எச்.அபூஸாலிஹ்
20. வி.எஸ்.எஸ்.பஸ்லுல் கரீம்

21. எம்.ஸதக்கத்துல்லாஹ்
22. ஆர்.காஜா நவாஸ்
23. எஸ்.ஐ.முஹம்மத் முஹ்யித்தீன்
24. டபிள்யு.எம்.ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத்
25. ஒய்.எம்.எம்.அபுல் ஹஸன்

26. எஸ்.ஏ.கே.லெப்பைத்தம்பி
27. எஸ்.எச்.மொகுதூம்
28. எம்.எஸ்.முஹம்மத் நூஹ்
29. கே.எஸ்.மொகுதூம் முஹம்மத்
30. எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப்

உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம்:

இக்ராஃவிற்கு பரிசீலிக்கப்பட வேண்டிய இடங்கள்...
பின்னர் நடந்த கலந்துரையாடலில், தாய்நாடு ட்ராவல்ஸ் ஸஈத், தீவுத்தெரு - ஸீகஸ்டம்ஸ் சாலை சந்திப்பிலுள்ள - எல்.கே.துவக்கப் பள்ளி அமைந்திருந்த இடத்தை இக்ராஃவிற்கு கேட்டுப் பார்க்கலாம் அல்லது அப்பா பள்ளி, மாட்டுக்குளம் பகுதியில் இடம் பார்க்கலாம் என்று தெரிவித்தார்.

கூட்டங்களில் கலந்துகொள்ளாதோரிடம் காரணம் கேட்க வேண்டும்...
மேலும், தக்வாவால் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்பிருந்தும் பங்கேற்காமல் இருப்போரிடம் அதற்கான காரணத்தை நாம் அமைப்பு ரீதியாக முறைப்படி கேட்க வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார். அதனை நல்ல யோசனை என்று பாராட்டிய தலைவர், இக்ராஃவிற்காக உறுப்பினர் ஸஈத் தெரிவிக்கும் இடங்களை அதற்குரியவர்களிடம் முறைப்படி கேட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

பொருளாளருடன் துணைக்குழுவினர்...
மன்றத்தின் நிதியாதாரம் சந்தாவில்தான் உள்ளது என்பதால், மன்றப் பொருளாளரின் பணிகளுக்குத் துணையாக சிலரை நியமிக்க வேண்டும் என்று மன்றத் துணைத்தலைவர் தங்ஙள் இப்றாஹீம் தெரிவிக்க, அது ஏற்கப்பட்டு - உறுப்பினர் அப்துல் வஹ்ஹாப், உதவிச் செயலாளர் யூனுஸ் ஆகியோர் இது விஷயத்தில் பொருளாளருக்கு துணைப்பணியாற்ற பொறுப்பளிக்கப்பட்டனர்.

குறுஞ்செய்தி மூலம் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு...
மன்றக் கூட்டங்களில் கலந்துகொள்ளக் கோரி மின்னஞ்சல் மூலமும், நம் நகரின் இணையதளம் மூலமும் அழைப்பு விடுக்கப்பட்டும், தாம் பார்க்கவில்லை என சில உறுப்பினர்கள் தெரிவிக்கும் நிலையுள்ளதால், மேலதிகமாக இனி அவரவர் கைபேசிக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்பலாம் என்று உறுப்பினர் அப்துல் வஹ்ஹாப் தெரிவித்த கருத்து ஏற்கப்பட்டு, இனி வருங்காலங்களில் கைபேசி குறுஞ்செய்தி மூலம் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு, என்.எஸ்.ஷேக், கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் ஆகியோர் பொறுப்பளிக்கப்பட்டனர்.

தக்வாவிற்கு தனி இணையதளம்
தக்வாவிற்கென தனி இணையதளம் அல்லது கருத்துப் பதிவு தளம் அமைக்க வேண்டும் என உறுப்பினர் ஃபியாஸ் இத்ரீஸ் தெரிவிக்க, அதனைப் பொறுப்பெடுத்து செய்வதற்கு யாரேனும் முன்வந்தால் செய்யலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, உறுப்பினர் ஃபியாஸ் இத்ரீஸ், என்.எஸ்.ஷேக் ஆகியோர் அப்பொறுப்பை தாங்கள் கவனித்துக்கொள்வதாக விருப்பம் தெரிவித்தனர்.

புதிய இலச்சினை அறிமுகம்:
பின்னர், உறுப்பினர் வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் உருவாக்கியிருந்த இலச்சினை - தக்வாவின் புதிய இலச்சினையாக தேர்வுசெய்யப்பட்டது. இலச்சினை விளக்கம்:
நெற்கதிர் - தாய்லாந்து ஆசியாவின் நெற்களஞ்சியம்
மாணிக்கக் கல் - தாய்லாந்தில் விளைவது; காயலர்களின் பாரம்பரிய தொழில் சார்ந்தது
பட்டதாரி உடை - உயர் கல்விக்கு நம் உதவி
மருத்துவ அடையாளம் - மருத்துவ உதவி
வரைபடம் - தாய்லாந்தின் வரை படம்
மூவர்ணம் - இந்திய தேசிய கொடியின் நிறங்கள்

இந்த இலச்சினையை உருவாக்கித் தந்தமைக்காக உறுப்பினர் எம்.என்.காதிர் ஸாஹிபுக்கு மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டம் முதற்கொண்டு இனி வருங்காலங்களில் இப்புதிய இலச்சினையையே பயன்படுத்துவதென்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்:
எதிர்வரும் ஹஜ் பெருநாளன்று - பெருநாள் தொழுகை நிறைவுற்ற பின்னர், பாங்காக் சன் மூன் ஸ்டார் புதிய இல்லத்தில், அன்று பெருநாள் ஒன்றுகூடல் - பகல் உணவுடன் நடைபெறுமென கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

பின்னர், கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-

தீர்மானம் 1 - நபிகளாரை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்திற்குக் கண்டனம்:
நம் உயிரினும் மேலான கண்மணி நபி (ஸல்) அவர்களைக் கேலி செய்து திரைப்படமெடுத்த தயாரிப்பாளர்கள், அதை வெளியிட்ட கூகுள் - யூடியூப் நிறுவனம், அதைக் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் கண்டிக்க மறுத்த அமெரிக்க அரசு ஆகியோருக்கு இம்மன்றம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் 2 - “வாழ்நாள் சாதனையாள”ருக்கு வாழ்த்து:
சென்னை - டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக் கழகத்தால், “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப்பட்ட - நம் மண்ணின் மைந்தர் - குழந்தை நல மருத்துவர் டாக்டர் முஹம்மத் தம்பி அவர்களை இம்மன்றம் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறது.

தீர்மானம் 3 - ஜக்வா தலைவர் மறைவுக்கு இரங்கல்:
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி பிரபு முஸ்தஃபா கமால் அவர்களின் மறைவிற்கு இம்மன்றம் தன் இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் பிழைபொறுப்பு - மஃபிரத்திற்காக துஆ செய்கிறது.

தீர்மானம் 4 - நகர்மன்றத்தினருக்கு வேண்டுகோள்:
நம் காயல் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணக்கமாக செயல்பட்டு, நம் ஊரில் சிறந்த நிர்வாகத்தைத் தருமாறு இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக, கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் நன்றி கூற, ஹாஃபிழ் லியாவுதீன் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.



கூட்டத்திற்கு வந்திருந்த அனைவருக்கும், திரை மறைவிலிருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும், வாவு முஹம்மத் அலீ, தங்ஙள் இப்ராஹீம். பாங்காக் ஜெம் ஹவுஸ் நிறுவனத்தார், தாய்நாடு ட்ராவல்ஸ், கே.டி.ஜெம் ஹவுஸ் ஆகியோர் அணுசரணையில் கூட்ட நிகழ்விடத்திலேயே மதிய உணவு விருந்தோம்பல் நடைப்பெற்றது.



இவ்வாறு, தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பொதுக்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
M.S.செய்யித் முஹம்மத்
படங்கள்:
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான்


[செய்தியில், தீர்மானங்கள் உட்பட கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 16:24 / 12.10.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:.சிறப்பான கூட்டம்.....
posted by ceylon fancy KAZHI. (jeddah,Saudi Arabia.) [11 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22747

தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வாவின் செயல்பாடுகள் மிக சிறப்பாக உள்ளது. யாம் பெற்ற இன்பம் எம் மக்களும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் எல்லா காயல் நல மன்றத்துக்கும் நிச்சயமாக இருக்கும்.நம் மக்கள் தன்நிறைவு பெறுவதற்கு அடிப்படைத் தேவை கல்விதான்... அந்த கல்வியை நாம் கொடுத்து விட்டால் தன்னிறைவை அடைவது அவர்களுக்கு மிக எளிது. எனவேதான், கல்வியை எளிதாக்கும் நோக்கில், நம் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கட்டாயக் கடமை என்பதை உலக காயல் நல மன்றங்கள் உணர வேண்டும்.நம் காயல் நல மன்றங்களால் நடத்தப்படும் கூட்டங்களில் பங்கேற்க வாய்ப்பிருந்தும் பங்கேற்காமல் இருப்போரிடம் அதற்கான காரணத்தை நாம் அமைப்பு ரீதியாக முறைப்படி கேட்க வேண்டும் என்ற யோசனை நல்ல யோசனை .பாராட்டுக்கள். எனது பக்கத்து வீட்டு காரர், கரூர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தின் மூத்த பங்குதாரர் ஹாஜி எம்.எஸ்.முஹம்மத் நூஹ் அவர்களை போட்டோவில் பார்த்தது கூடுதல் சந்தோசம்.

சிலோன் பேன்சி காழி ,
ஜித்தா ,
சவுதி அரேபியா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...thakwa
posted by NIZAR AL (kayalpatnam) [11 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22752

இக்ராவின் ஆயுள் உறுப்பினராக இணைந்திருக்கும் தக்வா உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்,தக்வாவின் இந்நிகழ்ச்சியை நம் ஊரு மக்களின் புகைபடதோடும் நல்ல ஒற்றுமையாக கலந்து பார்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

நம் ஊரின் கல்வி அமைப்பாக செயல்படும் இந்த இக்ரா பற்றி நம் ஊரில் உள்ள பெரும்பாலருக்கு என்ன நடக்கிறது என்பதே விளங்குவதில்லை.எனவே இக்ரா தலைவருக்கு இதன் மூலம் வேண்டுகோள் என்னவெனில் முதலில் இக்ரா என்ற அமைப்பு என்ன செய்கிறது,இது வரை என்ன செய்திருக்கிறது,இதில் பொது மக்கள் எப்படி பங்குகொள்ளலாம்,எப்படி தங்கள் சேவையை,செலவுகளை ஈடுபடுத்தலாம் என்பன விஷயங்களை மக்களிடம் விலுபுணர்வை ஏற்படுத்தும் முயற்சியை முதலில் செய்யுங்கள்,இக்ரா என்ற பெயர் மற்றும்தான் மக்களிடம் சென்றுள்ளதே தவிர வேறதும் இல்லை.தக்வாவின் சேவை தொடர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள்
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22755

வாவு சம்சுதீன் மாமா அவர்களின் ஆதங்கம் புரிகிறது. மற்ற உறுப்பினர்களின் எதிர் வாதங்களும் நியாயமானவையே. பேசிக் கலைவதற்கு அல்ல கூட்டம். பேசி இன்னென்ன முடிவுகள் எடுத்து அது செயலாக்கம் பெற்றன என்று வரும்போதுதான் அந்த கூட்டம் அர்த்தம் உள்ளதாக அமையும். ஆனாலும் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிரமங்கள் இலேசானதல்ல. சொல்வது யார்க்கும் எளிதாம். அரியவாம் சொல்லியவண்ணம் செயல் என்று சொல்வார்கள்.

இக்ரா வுக்கு சொந்தமாக ஒரு இடம் வாங்க அங்கிருப்பவர்கள் யோசித்து முடிவெடுக்க முடியாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இக்ராவில் அங்கம் வகிப்பவர்கள், காயல்பட்டினத்தில் இப்போது இருப்பவர்கள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டு இடங்களை அடையாளம் காட்டினால் மற்றவர்கள் பேசலாம். அவர்களுக்குதான் அதைப்பற்றிய நுணுக்கம், யார் யார் நிலம் எங்கு எங்கு உள்ளது. எது இக்ரா அமைய பொருத்தமானது, அந்த நிலத்தின் சொந்தக்காரர் பொதுநலத்தில் அக்கறை உள்ளவரா, குறைந்த விலைக்கு அதை தருவாரா, நன்கொடயாகவே தருவாரா என்ற விவரங்களை எல்லாம் அவர்கள்தான் சேகரித்து தர முடியும். எனவே ஊரிலுள்ள இக்ரா நண்பர்கள் ஆதரவாளர்கள் ஒரு குழு ஏற்படுத்தி ஊரை சுற்றி வலம் வரவேண்டும்.

எங்கோ ஒரு காட்டு பகுதியில் யாராவது நிலம் தந்தால் அதை வாங்கி என்ன செய்ய. ஊர் எல்லைக்குள்ளும் இருக்க வேண்டும். மக்கள் தினசரி வந்து போக தோதாகவும் இருக்க வேண்டும்.பல விஷயங்களை இதில் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. KMT நிலம் வாங்க சம்பத்தப்பட்டவர்கள் என்ன அணுகுமுறையை கையாண்டார்கள் என்ற விபரத்தை பாசி ஹாஜி, உவைஸ் ஹாஜி, ஹாஜி காக்கா போன்றோரை அணுகி கேட்கலாம்.சாதாரண விஷயமல்ல, மாமா அவர்கள் தலைவராக இருக்கும் ஒரு வருட காலத்துக்குள் இதை செய்து சாதனை படைக்க ஆசைப்பட்டாலும். நிலம் வாங்குவது என்பது கடையில் போய் என்ன விலை கொடுத்தாவது நாம் ஆசைப்பட்டதை வாங்குவது போல் உள்ள சமாச்சாரமா இதெல்லாம் தக்வா உறுப்பினர்கள் வல்லவர்கள்,தொழில் அதிபர்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும். உங்கள் கவலைகள் உயர்ந்த நோக்கம் உள்ளவை. அல்லாஹ்வின் உதவியை நாடி எல்லோரும் து ஆ கேட்போம். அல்லாஹ் நாடினால் நல்ல உள்ளங்களை இணைக்க அவர்களை அடையாளம் காட்ட,அவனுக்கு ஒரு நொடி போதும்.நல்ல இக்ஹ்லாசான எண்ணங்களுக்கு அல்லாஹ் துணை நிற்பான்..

ஆயிரம் பக்கங்கள் உள்ள காவியம் ஒவ்வொரு வரியாகத்தான் எழுதப்படுகிறது...ROME IS NOT BUILT IN A DAY என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே. தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்..... தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் ..... கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும். முயற்சிப்போம் இறைவனிடம் கையேந்துவோம் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை. நமது கனவுகள் நனவாகும் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நன்மையான செயல்பாடுகளுக்கு நன்மையே.. நடக்கும்... விரைவில் நல்ல இடம் அமையும்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227) [11 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22756

இக்ராவின் ஆயுள் உறுப்பினராக இணைந்திருக்கும் தக்வா சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்...

உலக காயல்நல மன்றங்களின் கல்வி கூட்டமைப்பான இக்ராவிற்க்கு கூடிய விரைவில் சொந்த இடம் அமையவும்... அதற்க்கான பொருளாதாரத்தையும் வல்ல இறைவன் நிவர்த்தி செய்வானாக... ஆமின்...

நன்மையான செயல்பாடுகளுக்கு நன்மையே.. நடக்கும்... விரைவில் நல்ல இடம் அமையும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இந்த தலைவரின் நல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [11 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22757

இக்ராஃவுக்கு சொந்த இடம் வாங்க தக்வா / இக்ராஃ தலைவர் முன் முயற்சி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது...

இந்த தலைவரின் நல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

தொடரட்டும் இக்ராவின் கல்வி உதவி சேவை...

அதன் சேவையால் கல்வியில் சிறந்து மேலோங்கி விளங்கட்டும் நமது நகர் மக்கள்...

என்றும் நகர் நலன் விரும்பும்..
M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [11 October 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 22758

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல உள்ளம் உடையவர்கள் , கல்விக்காக விட்டு குடுக்கும் மனப்பான்மை உடையவர்கள் நினைத்தால் இப்பொழுது இடம் கொடுக்க முடியும் அதற்கு அல்லா அவர்களுக்கு ஹிதாயத்தை கொடுக்க வேண்டும்

இப்படிக்கு
Seyed Mohamed Sayna
Kayal Ikiya Mandram
Bangkok Thailand

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இக்ராஃவிற்கு வந்து கேட்டறிந்த பின் கருத்துப் பதியலாமே...?
posted by S.K.Salih (Kayalpatnam) [11 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22759

கருத்துப் பதிவு எண்கள் 22752 மற்றும் 22755இல், சில விஷயங்களை முதற்கட்டத்திலேயே இப்படித்தான் என்று முடிவெடுத்துவிட்டு, அதனடிப்படையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.

இக்ராஃவுக்கு இடம் வாங்கும் விஷயத்தில் வெளியூர்களிலிருந்து கொண்டு விவாதிப்பதால் மட்டும் முடிவெடுத்துவிட முடியாது என்பதில் இருவேறு கருத்திற்கிடமில்லை. ஆனால், அடுத்து அவர்கள் தெரிவித்த உள்ளூர் நடைமுறைகள் இங்கு நடைபெற்றதா, இல்லையா என்பதை - இக்ராஃவுடன் தொடர்புடையவர்களைக் கேட்டறிந்து கருத்துப்பதிவு செய்திருக்கலாம். (அவர்களுக்கு அறிவுரை சொல்லுமளவுக்கு எனக்கு எந்தத் தகுதியையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.)

கருத்துப்பதிவு என் 22755இல் தெரிவிக்கப்பட்ட உள்ளூர் நடைமுறைகள் அனைத்தையும் - இக்ராஃ தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் மாமா அவர்கள் உட்பட இக்ராஃ நிர்வாகத்தினர் செவ்வனே செய்துள்ளனர் - இனியும் செய்வர். இதுவரை ஈடுபட்ட தனது அனுபவங்களின் அடிப்படையிலேயே அவர்கள் அங்கு உரையாற்றியுமிருக்கிறார்கள்.

எனவே, இனியேனும் ஒரு நிர்வாகம் குறித்து கருத்துப் பதிவு செய்யுமுன் அது தொடர்பானவர்களிடம் கேட்டறிந்து செயல்படுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

இக்ராஃ ஒரு திறந்த புத்தகம். அதில் தகுதியுள்ளோர் உறுப்பினராக அனைவருக்கும் வாசல் எப்போதும் திறந்தே உள்ளது. இக்ராஃவின் ஒவ்வொரு செயல்திட்டமும் பொதுமக்களுக்கு பிரசுரங்களாகவும், டிவி நிகழ்ச்சிகளாகவும், பத்திரிக்கை - இணையதள செய்திகளாகவும் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டே வருகிறது. உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமாக தெரிவிக்கப்பட வேண்டிய தகவல்கள் அவர்களுக்கு கடிதம் - மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கருத்துப் பதிவு எண் 22752இல் குறிப்பிட்டுள்ள படி இக்ராஃ குறித்து எதுவுமே தெரியாது என்று சொல்வது வியப்பான ஓர் அம்சமே! (அதிலும், இணையதளத்தை தொடர்ந்து பார்த்து வரும் இரு அன்பர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது கூடுதல் வியப்பு!!!)

இன்னும் விளக்கம் தேவைப்பட்டால், இதே காயல்பட்டணம்.காம் இணையதளத்தில், “செய்திகளைத் தேட” என்ற பகுதியில், “Enter tag to search news database / செய்திகளை தேட குறி சொல்லை வழங்கவும்” என்ற இடத்திலுள்ள பெட்டியில் 'IQRA' என்று தட்டச்சு செய்து சமர்ப்பித்தால், இக்ராஃவின் அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம்.

அன்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ்,
துணைச் செயலாளர்,
இக்ராஃ கல்விச் சங்கம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [11 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22761

தலைவரின் நல் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்... பாராட்டுக்குரியது... போர்ருதல்க்குரியது.,வாழ்த்துக்குரியது ., விரைவில் நல்ல இடம் அமையும்... நன்மையே.. நடக்கும். நன்மையான செயல்பாடுகளுக்கு.... நல்ல இக்ஹ்லாசான எண்ணங்களுக்கு என்றென்றும் அல்லாஹ் துணை நிற்பான் நிச்சயம்!!

இக்ராவின் ஆயுள் உறுப்பினராக இணைந்திருக்கும் தக்வா உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்............


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22762

மருமகன் ஸாலிஹ் அவர்களின் தெளிவான கருத்துக்கு நன்றி. குறை சொல்லும் நோக்கமோ அறிவுரை கூறும் எண்ணமோ கிஞ்சிற்றும் இல்லை. எனக்கு மனதில் பட்டதை சொன்னேன். இக்ரா அலுவலகம் அமைய எவ்வளவு சதுர அடியில் இடம் தேவைப்படும் என்ற புள்ளி விவரங்கள் எனக்கு தெரியாது. . நேரில் வந்து இதெல்லாம் நான் கேட்டு தெரிந்து என்ன செய்ய முடியும், ஒரு அணில் மண் சுமந்து வர முடியுமா? அது புராணத்தில் நடக்கும். எனவே, தயவு செய்து உங்கள் விளக்கத்தை தந்ததற்கு நன்றி. நான் யாரையும் குறை காண நினைக்கவில்லை. எனது கருத்து உங்களை காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.ஆனால் சுதந்திரமாக கருதுப்பதிவதற்கு அனுமதி தாருங்கள். மற்றப்படி தணிக்கை செய்யவேண்டியவைகளை தணிக்கை செய்யும் உரிமையும் உங்களுக்கு உண்டுதானே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [11 October 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22764

அருமையாகவும், உபயோகமாகவும் நடந்து முடிந்த தக்வா பொதுக்குழுக் கூட்டத்திற்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

* 30 சகோதரர்கள் இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினராக விருப்பம் தெரிவித்தது, மிகவும் சந்தோசமாக உள்ளது.

* செயலாளர் சகோ. எம்.எஸ்.செய்யித் முஹம்மத் அவர்களின் உரை, பிரயோசனமான உரையாக உள்ளது.

* குழந்தை பேச்சு மாதிரி இனிமையாக இருக்கும் தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் அவர்களின் பேச்சில் பல நல்ல கருத்துக்களும்,விவரங்களும், நுணுக்கங்களும் இருக்கும்.

தான் தலைவராக இருக்கும் காலத்தில் இக்ரா-விற்கு ஒரு சொந்த இடம் வாங்கிவிடனும் என்ற ஒரு "வெறி" அவர்களிடம் உள்ளது. இந்த நல்ல வெறியை வல்ல ரஹ்மான் அங்கீகரிப்பானாக.

இக்ரா ஸ்காலர்சிப் 14 மீதம் இருந்தததை, தம்மாம் நற்பணி மன்ற சகோதரர்கள் பொறுப்பு ஏற்று,இக்ரா-விற்கு விபரம் தெரிவித்தால்,

பதில்- " தலைவர் ஷம்சுத்தீன் ஹாஜி அவர்கள் பலரை தொடர்பு கொண்டு, அனைத்தையும் பூர்த்தி செய்துவிட்டார்" என்று வந்துவிட்டது. அவர்களின் பொறுப்புக்களை உணர முடிகின்றது. தேங்க்ஸ்.

* மன்றத்தின் புதிய இலச்சினை நன்றாக உள்ளது. சகோ. வாவு எம்.என்.காதிர் ஸாஹிப் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்த இலச்சினையில் கல்வி, மருத்துவம் மற்றும் சிறுதொழில் உதவி என்ற சின்னங்கள் உள்ளன.

வைரம் சின்னம், சிறுதொழில் உதவிக்கு என்று எடுத்துக்கொள்ளலாமா.. அல்லது..

அங்கு அதிக சகோதரர்கள் செய்யும் தொழில் வைர வியாபாரம் என்று எடுத்துக்கொள்ளலாமா..!!!!

உங்களை அனைவர்களின் எல்லா நல்ல எண்ணங்களை வல்ல அல்லாஹ் கபூல் ஆக்குவானாக.

** ஒரு சகோதரர் இக்ரா என்ன செய்கின்றது? அனைத்து மக்களுக்கும் இக்ரா-வைப்பற்றி தெரிவது இல்லை என்ற கருத்து பதிவு செய்து இருந்தது, இந்த வார 'கரண்டு கட்' காமடிகளுக்கு அடுத்த காமடி இதுதான்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இன்று நள்ளிரவில் இதமழை!  (13/10/2012) [Views - 2533; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved