Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:46:19 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9424
#KOTW9424
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 20, 2012
காயல்பட்டினம் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 8309 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி மன்ற கூட்டரங்கில், 20.10.2012 அன்று (இன்று) நண்பகல் 12.00 மணியளவில், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கருத்தரங்கம், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.

காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் குறித்தும், அதனைப் பரப்பும் கொசுக்கள் உருவாகும் விதம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.



*** டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல்கள் குணப்படுத்தக் கூடியவையே... அச்சப்பட வேண்டியதில்லை...

*** நல்ல தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் முட்டையிட்டு உருவாகும். எனவே, வீடுகளில் சேகரிக்கும் தண்ணீரை எப்போதும் இறுக மூடி வைத்துக் கொள்ள வேண்டும்...

*** உறங்கும்போது கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையைப் பயன்படுத்துவதே சிறந்தது... எனினும், கொசு ஒழிப்பிற்காக பயன்படுத்தப்படும் மேட், திரவம் உள்ளிட்டவற்றை அளவோடு பயன்படுத்துவதில் தவறில்லை... கொசுவர்த்திச் சுருள் எனில் - இயன்றளவுக்கு அதன் புகையை சுவாசிக்க வாய்ப்பில்லாத வகையில் அமைத்துக்கொள்வது நல்லது...

*** பொதுமக்கள், தாம் குடிக்கும் நீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து குடிக்க வேண்டும்...

*** கண்ட இடங்களிலும் நீரைத் தேங்க விடக்கூடாது... நீர் தேங்கும் வகையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் டயர், சிரட்டை, உடைந்த பாத்திரங்கள், வளைந்த ஓடுகள் உள்ளிட்ட பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்...

*** குளிர்சாதனப் பெட்டியின் அடியிலிருக்கும் கழிவு நீர் தட்டை குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது கழுவி சுத்தம் செய்து மீண்டும் பொருத்த வேண்டும்...

*** 15 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்கே டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படுகிறது... அவர்களின் குருதியில் இருக்க வேண்டிய platelets எண்ணிக்கை குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்...

*** பொதுமக்களில் யாருக்கேனும் காய்ச்சல் ஏற்பட்டால், வெறுமனே மாத்திரை - மருந்துகளை உட்கொண்டுவிட்டு - சாதாரண காய்ச்சல்தான் என்ற நினைப்பில் இருந்துவிட வேண்டாம்... நாளை அதுவே உங்கள் உயிரைப் பறிக்கும் நோயாக இருக்கலாம்... எனவே, காய்ச்சல் கண்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்...

*** வெளியூர்களிலிருந்து ஊருக்கு வருவோருக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அரசு மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்...

*** வட்டாரத்தின் எந்தப் பகுதியில் யாருக்கு டெங்கு காய்ச்சல் இருந்தாலும் அத்தகவலை ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தகவல் தரப்பட்டுவிடும்... அதனடிப்படையில், காய்ச்சல் பாதித்த பகுதி சுற்றுவட்டாரங்களில் தடுப்பு நடவடிக்கைகளை அலுவலர்கள் மேற்கொள்வர்...

*** வீடுகளில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கம் உள்ளதா என்பதைக் கண்டறிந்து களைந்திடும் பணிக்காக இல்லம் தேடி வரும் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள், அலுவலர்களுக்கு வீட்டிலிருப்போர் - குறிப்பாக பெண்கள் முழு ஒத்துழைப்பளிக்க வேண்டும்...

*** காயல்பட்டினத்தைச் சார்ந்த வீடுகளில் இதுபோன்று சுகாதாரப் பணிகளுக்காக வரும் அலுவலர்கள் நீண்ட நேரம் காக்க வைக்கப்படுவதால் அவர்களின் பணி பாதிக்கிறது... எனவே, வெளியிடங்களிலிருக்கும் அவர்களின் உறவினர்கள், பொதுநல ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர் இது விஷயத்தில் அக்கறையெடுத்து, அம்மக்களுக்கு உணர்த்தி, அலுவலர்கள் விரைந்து தமது பணிகளை முடிக்க ஆவன செய்து தர வேண்டும்...

*** டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களை அதன் முட்டைப் பருவத்திலேயே அழித்து விட வேண்டும். அதனை வளர விட்டால், அதனால் பாதிப்பு நிச்சயம் ஏற்படும்...

*** வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நாம் வாழ முற்பட்டால், வேண்டாத நோய்கள் நம்மை அண்டாமல் பாதுகாக்க இயலும்...


இவ்வாறு, காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் உரையாற்றினார்.

இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்கள், நகர பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் பின்வருமாறு:-


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒருவரின் அலட்சிய போக்கு பிறருக்கு துன்பம் வர நேரிடுகிறது...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் - காயல்பட்டினம்... (97152 25227) [20 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22933

காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் மூலம் அறிவுறுத்தும் ஆலோசனைகளை நம் மக்கள் பின்பற்றினாலே...! டெங்கு காய்ச்சலை நாம் நமது நகரில் நுழைய விடாமல் தடுக்கலாம்...

ஒருவரின் அலட்சிய போக்கு பிறருக்கு துன்பம் வர நேரிடுகிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [20 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22938

சுற்றுபுரத்தை தூய்மையாக வைத்திடுவோம்.கொசுக்களை ஒழிப்போம்.டெங்குவை தடுப்போம்!விரட்டுவோம்!சுத்தமான நகரை உருவாக்குவோம்.சுகமாக,நலமாக,வாழ்வோம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [20 October 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22941

அருமையான விளக்கம்.

தேவையான விழிப்புணர்வு. நல்ல விவரமான பிரசுரம். நகராட்சிக்கு நன்றிகள்.

ஓகே. மக்களுக்கு விழிப்புணர்வு சரிதான். ஆனால் நகராட்சிக்கு விழிப்புணர்வு இல்லையே.

நானும் பல செய்திகளில் கருத்துக்களை பதிவு செய்து விட்டேன். நகராட்சி அதிகாரிகள், தலைவி அவர்கள், உறுப்பினர்கள் எல்லாம் வலை தளத்தில் கருத்து பதிவுகளை படிப்பாகள் என்ற நம்பிக்கையில் எழுதினேன். அப்படி இல்லை போல.

அதான், எங்கள் மஹ்லரா நகரில் இருக்கும் ஒரு சிறு குட்டையைப்பற்றி தான்.

ஊர் முழுவதற்கும் கொசு உற்பத்தி செய்து அனுப்பும் நிலையமாக அந்த குட்டை திகழ்கிறது. அதற்க்கு ஒரு வழி பண்ணாமல், அதை செய்யுங்க, இதை செய்யுங்க, அங்கு தண்ணீர் தேங்காமல் பாருங்க என்று விழிப்புணர்வு.. விழிப்புணர்வு என்று சொல்லுவது.. நகைப்புக்கு உண்டான செயல் தான்.

* எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு சிறுமிக்கு சென்ற முறை காய்ச்சல் வந்தது, சுகாதார அதிகாரிகள் ஜீப் போட்டு ஓடோடி வந்தார்கள்.

அந்த குட்டையைக்காட்டி குறைகளை சொன்னோம். பார்த்தார்கள், அதிர்ந்தார்கள், ஆவண செய்கின்றோம் என்று சொல்லி சென்றார்கள். சொன்னமாதிரி ஆவணத்தில் எழுதி விட்டு சென்றார்கள். பயன் இல்லை.

** இன்னும் ஒரு சமாச்சாரம் தெரியுமா, இந்த மலேரியா-டெங்கு கிருமிகளை பரப்பும் கொசுக்கள், 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரைத்தான் விரும்பி கடிக்கின்றதாம். கொய்யாலே.. இதுக்கும் இளசு தான் இஷ்டமாம்.

நான் கூறவில்லை.. கொசுவைப்பற்றி ஆராய்ச்சி செய்யும் டாக்டர் ஜிதிந்தர் பாட்டியா அவர்கள் தான் கூறுகிறார்கள்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Awareness..
posted by Jahir Hussain VENA (Bahrain) [21 October 2012]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 22962

"நானும் பல செய்திகளில் கருத்துக்களை பதிவு செய்து விட்டேன். நகராட்சி அதிகாரிகள், தலைவி அவர்கள், உறுப்பினர்கள் எல்லாம் வலை தளத்தில் கருத்து பதிவுகளை படிப்பாகள் என்ற நம்பிக்கையில் எழுதினேன். அப்படி இல்லை போல"

Copy and Paste

இதில் என்ன சந்தேகம்........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [24 October 2012]
IP: 5.*.*.* | Comment Reference Number: 23034

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் நகர் மன்ற தலைவி அவர்கள் தலைமையில் .இதற்க்காக ஒரு பிரசாரம் நோட்டிசும் / பிரச்சார விழிப்புணர்வும் ..... டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக முழுமையான முயற்சி எடுத்து இருப்பது. பாரட்டுக்குரிய விசையம் தான்.

நம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ் அவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் குறித்தும், அதனைப் பரப்பும் கொசுக்கள் உருவாகும் விதம் குறித்தும், தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசிய அனைத்து கருத்துக்களும் அருமை.... நம் மக்கள் கண்டிப்பாகவே கடைபிடிக்க வேணும் ....+

இந்த கொடிய டெங்கு காய்ச்சல் நோயில் இருந்து.... நம்மை நாமே மேலும் பாதுகாத்து கொள்ள நாமும் முழு கவனமாகவே இருக்கவேணும் .நாம் கொதிக்கின்ற நீர்ரை தான் கண்டிப்பாக பருகவேண்டும் / நம் வீட்டை சுத்தமாகவே வைத்து இருக்கவேணும்.நம் உடைகளை ஈரமாக்கி மொத்தமாக நம் வீட்டின் உள் பகுதியில் கண்டிப்பாகவே போடகூடாது......இந்த மாதிரி இடத்தில் தான் கொசுக்கள் .....இந்த கிளை மேட்டில் தான் மொத்தமாகவே உறுபத்தியாகும்.....

நம் நகர் மன்ற பின்புற பகுதியில் தான் முதலில் இந்த கொசு மருந்து கண்டிப்பாக அடிக்க வேணும்.அவ்வளவு கண்றாவியாக இருக்கிறது அந்த பகுதி ......இந்த கொடிய டெங்கு காய்ச்சல் கொசு இங்கு இருந்து தான் முதலில் வெளியே கிளம்புமோ என்னவோ ????

அல்லாஹ் நம் மக்களை யாவர்களையும் இந்த கொடிய டெங்கு காய்ச்சல் நோயில் இருந்து காப்பற்றி நம்மை சிறப்பாக்கி வைபானாகவும் ஆமீன்.

இந்த கொடிய நோயில் இருந்து நம் அனைவர்களையும் காப்பாற்ற ஜும்மாவில் துவா கேட்க வேணும். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved