Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:07:37 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9460
#KOTW9460
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, அக்டோபர் 26, 2012
எங்கள் பெருநாள் தண்ணீரிலும், கண்ணீரிலும்தான்! சுலைமான் நகர் மக்களின் குமுறல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4119 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வடகிழக்குப் பருவமழையையொட்டி காயல்பட்டினத்தில் கனமழை பெய்தது. கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாத நிலையிலும், ஏற்கனவே பெய்த மழையால் காயல்பட்டினம் சல்லித்திரடு மற்றும் சுலைமான் நகர் என்ற மாட்டுக்குளம் பகுதிகளில் இன்றளவும் மழை நீர் தேங்கியுள்ளது.









இந்நிலையில், அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை வெட்டி கடலை நோக்கி அனுப்புவதற்காக, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவி அலுவலர் செந்தில், குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் சல்லித்திரடு - சுலைமான் நகர் பகுதிக்கு நேற்று காலை 11.30 மணியளவில் முகாமிட்டனர். 08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா சார்பாக அவரது உறவினர் பாட்டா சதக் உமரும் உடனிருந்தார்.

சல்லித்திரடு பகுதியில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள மழை நீர்த் தேக்கத்தை வெட்டிவிடுவதற்கான முன்முயற்சிகளில் அவர்கள் இறங்கியபோது, அப்பகுதியிலுள்ள தனியார் நில உடமையாளர் ஒருவர் - தனது நிலத்தில் வாய்க்கால் வெட்டக்கூடாது என்று தடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதனையடுத்து, அங்கிருந்து மழை நீரை அப்புறப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு புதிய நகர்மன்றம் பொறுப்பேற்றவுடன் இப்பகுதியில் மழை நீர் தேங்காவண்ணம் நிரந்தரத் தீர்வு காணப்படும் என நகர்மன்றத் தலைவர் கூறிச் சென்றதாகவும், ஆனால் இன்று வரை தீர்வு காணப்படாததால் தாங்கள் நகராட்சி முன் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் சல்லித்திரடு பகுதி மக்கள் தெரிவித்தனர்.



அதற்கு விளக்கமளித்த நகராட்சி அதிகாரிகள், அப்பகுதியில் தேங்கும் மழை நீரை கடலுக்கு அனுப்புவதற்காக நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பணிகளும் துவங்கவுள்ள நிலையில், தனியார் நில உடமையாளர்கள் தடுப்பதாலேயே அவற்றை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனிடையே, மனிதாபிமான அடிப்படையில் - தனக்குச் சொந்தமான நிலப்பகுதியில் மழைநீர் வாய்க்காலை தற்காலிகமாக அமைத்துக்கொள்ள அனுமதி வழங்கியிருந்த சிலருள் ஒருவர் - மறியல் போராட்டம் என்ற அப்பகுதி மக்களின் கருத்தைத் தொடர்ந்து, “அப்படியானால் எங்கள் பகுதியிலும் வாய்க்கால் வெட்டக்கூடாது... அழகிய முறையில் கேட்டுப் பெற வேண்டியதை போராட்டங்கள் மூலம் சாதிக்க நினைப்பது அம்மக்களின் அறியாமை...” என்று தெரிவித்தார்.



சல்லித்திரடு பகுதியில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்து மழை நீர் தேங்கியிருப்பது ஒருபுறமிருக்க, சுலைமான் நகரில் குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து, முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

















இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூறுகையில்...

நம்ம ஊரில் மழை துவங்கிய நாள் முதல் இன்று வரை எங்கள் வீடுகளில் நாங்கள் தங்க இயலவில்லை... வீட்டில் கட்டில் வரை மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது... வீட்டிலுள்ள மின்சாரம் கசிந்து, தண்ணீரில் கால் வைத்தாலே ஷாக் அடிக்கிறது...

வீட்டில் சமையல் செய்ய வழியில்லாத காரணத்தால், ஹோட்டல்களில் காசு கொடுத்து உணவு வாங்கியே பல நாட்களாக சாப்பிட்டு வருகிறோம்... அன்றாடங்காய்ச்சிகளான எங்களுக்கு இது பெரும் சுமையாக உள்ளது...

உள்ளே நாங்கள் படுப்பதற்கு இடமில்லாவிட்டாலும் கூட பரவாயில்லை... அமர்ந்திருப்பதற்குக் கூட இடமில்லை... இந்நிலையில் ஹஜ் பெருநாளும் வருகிறது... எங்கள் அன்றாட வாழ்வே கேள்விக்குறியாகிவிட்டதால், எங்கள் பெருநாள் தண்ணீரிலும், கண்ணீரிலும்தான் கழியும்...

இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வரும் திங்கட்கிழமையன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர் நாளில் - மக்கள் அனைவரும் திரண்டு சென்று மனு அளிக்கவுள்ளோம்...”


இவ்வாறு சுலைமான் நகர் பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.



சுலைமான் நகர் பகுதியில், சுமார் 15 குடிசை வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், குடியிருக்கத் தகுதியற்று காணப்படுகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஊரைச் சுற்றி வேலியா போட முடியும்...?
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [26 October 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23116

என்ன செய்ய? பார்க்கும் போது மனதுக்கு சங்கடமாகத்தான் உள்ளது. சல்லித்திரடு, மொட்டயன் தோட்டம் போன்றவைகள் பழமை வாய்ந்த இடங்கள் தான். அன்றைய காலத்தில் ரெட் ஸ்டார் சங்கத்திற்கு இடப்புறமாக ஓர் சிறிய பாதை இருந்ததாம் அது ஓடக்கரை வழியாக திருச்செந்தூருக்கு செல்லும் மாட்டு வண்டிப் பாதை. காலப்போக்கில் புதிய பாதையை மக்கள் வெகுவாக பயன்படுத்தி பழைய பாதை நூர்ந்துபோயிற்று. மேலும் தண்ணீர் புகுந்துள்ள இடம் புறம்போக்கு அதில் சிறுகச் சிறுக குடியிருப்புக்கள் முளைத்து இன்று நகராகவும்,சிற்றூரகவும் மாறி வருகின்றது. அங்குள்ள புறம்போக்கு நிலத்தை அவர்கள் அனுபவித்துக் கொள்ளலாமே தவிர விலைக்கு விற்க முடியாது எனும் ஓர் சட்ட விதியும் உள்ளது.

அநேகமாக இங்கு குடிசைகள்தான் உள்ளது. பல ஊர்களிலிருந்தும் பிழைப்பு தேடி வந்தவர்கள் தான் அதிகம். இபோது நமதூரைச் சுற்றி மூன்று பகுதிகளிலும் திடீர் நகர்கள் முளைத்த வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும் அவைகள் முறையாக கிரையத்திற்கு வாங்கியதாகவோ? அல்லது இலவச பட்டா போட்ட நிலமாகவோ இருப்பதில்லை. மனிதாபிமான அடிப்படையில் அவர்களுக்கு சிலர் உதவி செய்ய முன் வந்தாலும் பிற்காலத்தில் அது வில்லங்கமாக மாறி தம் சொந்த நிலத்தையே இழக்க நேரிடும் என்பதற்காகத்தான் நில உரிமையாளர்கள் வாய்க்கால் வெட்ட தடுத்து வருகின்றனர். நமதூரை மட்டுமே நம்பி சுற்று வட்டாரத்தில் ஏராளமான குக்கிராமங்கள் வாழ்ந்து வருகின்றன. அதன் வாழ்வாதாரத்திற்கு நமதூர் துணை நிற்பது என்பது மறுக்க முடியாத உண்மையே...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by uvais (srilanka) [27 October 2012]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 23147

what to do if u build a house in a pond


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved