Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:22:20 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9594
#KOTW9594
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 9, 2012
ஃபஜ்ருக்கு நாங்க, அஸருக்கு நீங்க! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3511 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு வடகிழக்குப் பருவமழை காரணமாக, காயல்பட்டினம் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி, கொசுக்களின் பெருக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் கொசுக்களின் அட்டூழியம் தாங்காமல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மனம்போன போக்கில் அலைந்து திரியும் அப்பிராணிகள், நிறைவில் கடைவீதிகளிலும், கடற்கரையிலும் தஞ்சமடைந்து ஓய்வெடுப்பதை வழமையாகக் கொண்டுள்ளன.



இன்று காலையில் சூரிய உதய நேரத்தின்போது கடற்கரையில் மாடுகள் முகாமிட்டிருந்த காட்சிகள்:-





கள உதவி:
மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ Y.ஸதக்கத்துல்லாஹ் ஃகைரீ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மாடுகளின் மாநாடு மந்தைவெளியாகிடுச்சு...எங்க கடற்கரை...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [10 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23665

வேடிக்கயான தலைப்பாக இருந்தாலும் வேதனையான செய்தியாக உள்ளது. இப்படி கல்நடைகள் அதுபாட்டுக்கு தாராளமா கடற்கரையில் இளைப்பாறும்போது அது அமர்ந்த இடத்தில் மலம் ஜலம் கழித்து மண்ணை அசுத்தப்படுத்தி விடக்கூடும். அநேக தொழுகையாளர்கள் அமரும் மணல்வெளி இப்படி அசுத்தப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

கேட்பாரற்று அலைந்து திரியும் ஆடு மாடுகளை மக்கள் நலன் கருதி நகர்மன்ற சுகாதார ஆய்வாளர் பறிமுதல் செய்து பொது ஓர் இடத்தில் வைத்து ஏலம் விட வேண்டும். இப்படி செய்தால்தான் அதன் உரிமையாளர்களுக்கு புத்தி வரும்.

இந்த நடவடிக்கையை திருச்செந்தூர் திருக்கோவில் பராமரிப்பு சபையினர் கோவில் வளாகத்தில் சுற்றி வரும் ஆடு மாடு, போன்ற கால்நடைகளைக் கைப்பற்றி நகராட்சியில் ஒப்படைத்து ஊருக்கு வெளியில் உள்ள ஓர் இடத்தில் வைத்து ஏலம் விடுகின்றனர். ஆலயத்தின் அருகில் ஆங்காங்கே எச்சரிக்கைப் பலகையும் வைத்துள்ளனர்.

அட! நம்ம ஊரில் இவ்வளவு மாடுகளா? இல்லை, மாடுகளின் மாநாடு ஏதும் நடக்கின்றதா? ஓஹோ! இதுக்கு பெயர் தான் போன மாட்டைத் தேடுவாரில்லை! வந்த மாட்டைக் கட்டுவாரில்லை! என்பதோ?

இந்த ஹஜ்ஜுப் பெருநாள் உள்ளுஹியாவுக்கு வந்த மாடுகளில் ஏதேனும் குறை குற்றம் இருக்கிறதே என மாட்டுத் தரகர்கள் விட்டு வைத்துளார்களா? ஒன்றுமே புரியவில்லை!

தங்க நிறத்தில் ஜொலித்த எங்கள் காயல் கடற்கரை மண் சிற்றுலா வரும் வெளியூர்க்காரர்கள் மற்றும் கறிக்கஞ்சி கரி அடுப்பு போன்றவற்றால் அதன் தனித்தன்மையை இழந்து தரம் குன்றி தரைமட்டமாகப் போய் பல வருடங்கள் ஆகின்றன. இனி இது ஒன்ணுதான் பாக்கி இருந்திச்சு! இப்போ அதுவும் நடந்தேறி வருவதில் மட்டற்ற மகிழ்ச்சி...! இந்த விஷயத்துலெ பயணாளிகள் சங்கமாவது... பருப்பு கத்திரிக்காவாவது! எப்படியும் போங்க...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மாட்டுத்தாவணி
posted by NIZAR AL (kayalpatnam) [10 November 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23669

முதலில் களப்பணியில் தன்னை ஈடுபடுத்தி இருக்கும் என் பாசத்துக்குரிய தம்பி அல்ஹாபில் சதக்கத்துல்லாஹ் ஆலிம் கைரி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இது கடல்கறையா அல்லது மாட்டுதாவனியா? என்னங்க பண்றது மாட்டை விலைக்கு வாங்கிரதோட சரிங்க, அதற்கு தீனியும் வைக்கிறதில்லை. காலையிலும் மாலையிலும் இரத்தத்தை உறிஞ்சிகறது போல பாலை எடுக்குறதுக்கு மட்டும்தான் மாட்டை தேடுறாங்க, அதல்லாத மற்ற நேரங்களில் எங்க போனாலும் இவர்களுக்கு கவலையில்லை, வீட்டில் வைத்தால் தீனி போடணுமே, வெளியில் இப்படி சுற்றி திரியும் மாடுகளினால் ஏற்படும் ஆபத்துகள், வாகன விபத்துக்கள், இன்னும் குப்பைதொட்டியில் உள்ளே குளியல் போட்டு அசிங்கங்களை எல்லாம் ரோட்டில் வெளியெடுத்து போடுதல், எதிர்பாக்காத நேரத்தில் முடுக்குகளில் புகுந்து குழைந்தைகள் அலறல், மாடு முட்டி விபத்து, இப்படி எத்தனையோ ஆபத்துக்கள் இருந்தும் மாட்டு உரிமையாளர்கள் இதை பற்றி துளி கூட கவனிப்பதில்லை. ஒரு கால்நடையை பரிமாறிக்க இயலாவிட்டால் இவங்களுக்கு எதற்கு இந்த கால்நடை? விற்றுவிட வேண்டியதுதானே? கொஞ்சம் பாருங்களேன் மாடும் வேணும் ஆனா பால்மட்டும் எடுத்து விட்டு பரதேசம் அனுப்புவேண்டு செய்தால் அசல் கால்நடைகள் இவர்கள்தானே.

எந்த நாட்டிலும் மாடுகளை காப்பகத்தில் தவிர வேறு எங்கும் காணமுடியாது, இப்போது மக்கா ரபீக் சொல்வதுபோல நகரங்களில் மாட்டை பிடித்து அபராதம் மற்றும் ஏலம் விடுவது நடக்கிறது, நம்ம நகராட்சியில் இதைவிட எத்தனையோ முக்கியமான தேவைகள் நிவர்த்தி செய்யாம இருக்கும்பொழுது இதெல்லாம் நம்ம நகராட்சிக்கு துக்கடா மேட்டருங்க!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 November 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23671

ஹாயாக வாக்கிங் போயிட்டு சிறிது ரெஸ்ட் எடுத்தால் உடனே போட்டோ எடுத்து, உலகம் பூர பார்க்கும் படி எங்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள். அப்படி என்ன தவறு நாங்கள் செய்துவிட்டோம்.

மனிதர்களான நீங்கள் செய்யாத அசிங்கத்தையா நாங்கள் செய்கின்றோம்.

- கடற்கரையில் ஒரு இடத்திலாவது நிம்மதியாக இருக்க முடிகின்றதா? ஒரே குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், ஐஸ் குச்சிகள்.

- நேற்று என் தங்கை படுத்தபோது, உம்மாமா...மா என்று அலறி அடித்து எழுந்து விட்டாள். வயிறு பூரா இரத்தம். பார்த்தால் அங்கு உடைந்த கஞ்சி கிளாசை புதைத்து வைத்து உள்ளீர்கள்.

- வெள்ளை வெளேர் என்று இருந்த என் மற்ற தங்கை, கடற்கரையில் புரண்டு படுத்து எழுந்த உடன், உடம்பு பூராவும் கருப்பு புள்ளி புள்ளியாக பதிந்து ஆளே மாறி விட்டாள். அவ்வளவு அடுப்பு கரிகள்.

- ஆங்காங்கு கஞ்சி சட்டிகளை கழுவி, ஊற்றி ஒரே கெட்ட வாடை.

- அவசர தாகத்திற்கு குடிக்க கொஞ்சமாவது தண்ணீர் வைத்து உள்ளீர்களா?

- மழை பொழிந்ததால் ஒதுங்க ஏதாவது இடம் உள்ளதா?

- சிறுவர்களுக்கு உச்சா, கக்கா வந்தால், அங்கேயே குழி தோண்டி முடித்து விட்டு, மண்ணை போட்டு மூடி விடுகிறீர்களே..! அதை விடவா நாங்கள் அசிங்கம் பண்ணி விட்டோம்.

- இரவு 11 மணிக்கு மேல் வந்து போகும் சிலர் செய்யும் அசிங்கம் தெரியுமா.

* இப்படியே அடுக்கிக்கொண்டு போகலாம். .அவ்வளவு கவலை தரும் விஷயங்கள் நடக்கின்றன.

தே..மே.. என்று எதையும் கண்டும் காணாமல், அசைபோட்டுக்கொண்டு இருக்கும் எங்களை சும்மா சும்மா சீண்டாதீர்கள்.

நாங்களே எங்கள் தோழி ஒருத்தி மின் கம்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்து விட்டாள் என்ற சோகத்தில் இருக்கின்றோம். அவள் வழமையாக அங்குதான் படுப்பாள், மின்சாரமே ஊரில் இல்லையே என்ற தைரியத்தில்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நிதர்சன உண்மைகள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [10 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23675

தம்பி ஜியாவின் அற்புதமான கருத்து பதிவுகளுக்கு பாராட்டுக்கள். கருத்துக்களில் அவரின் வழமையான கிண்டல்கள் கலந்திருந்தாலும் ( காயல் கலைவாணர் என்று அவருக்கு பட்டம் கொடுக்கலாம்) - சிந்திக்க வைக்கும் நிதர்சன உண்மைகள்.

இதற்க்கெல்லாம் கடற்க்கரை பயனாளிகள் சங்கம் மட்டுமே ஒன்றும் செய்து விடமுடியாது - தனி மனித பொறுப்புக்களும் விழிப்புனர்ச்சிகளும்தான் இதற்க்கு ஒரே தீர்வே தவிர, ஒருவர் கண்ணாடி தம்ப்ளரை உடைத்து மண்ணில் புதைப்பதையோ, இரவில் இருட்டில் கடை கட்டும்போது யாரும்தான் பார்க்கவில்லையே என்று மீதம் இருக்கும் அடுப்புக்கரியையும் கழிவுகளையும் அங்கேயே கொட்டிவிட்டு செல்வதையும் கண்கானித்துகொண்டிருக்க முடியாதுதானே...

எனக்கென்னவோ நாமேதான் நமது கடற்கரையின் எழிலுக்கு எதிரிகள் என்று கூறத் தோன்றுகிறது.

நகராட்சி இதற்கு தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் - கடற்க்கரை பயனாளிகள் சங்கத்துடன் கைகோர்த்து ஆவன சிந்தித்து செயல்பட்டால்தான் நமது கடற்கரை காப்பற்றப்படும் இல்லையேல் இன்னும் ஒரு கூவம் உங்களுக்காக காதிற்குக்கிறது மிக விரைவில்.

CHOICE IS OURS !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. மனிதர்களே கண்ட இடங்களில் அசிங்கம் பண்ணும் போது நீங்க எவ்வளவோ தேவலை...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [10 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23693

ஃபஜ்ருக்கு ஆனாலும் சரி அஸருக்கு ஆனாலும் சரி... நீங்க நமது நாட்டு மின்சார துறையை நம்பி மின் கம்பத்தின் அருகில் மட்டும் போய் ஓய்வு எடுக்க நினைக்காதீர்கள்...

சமீபத்தில் குழந்தை உண்டான ஒரு பிள்ளைதாச்சி உங்கள் இனம் இந்த மின் கசிவால் துடி துடித்து இறந்தன... ஆகையால் மின் கம்பம் அருகில் நெருங்கதீர்கள்...

உங்களுக்கு இதுவே சரியான தேர்வு... பொது இடத்தில மனிதர்களே கண்ட இடங்களில் அசிங்கம் பண்ணும் போது நீங்க எவ்வளவோ தேவல..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மோனோ ரெயில்...? (?!)  (9/11/2012) [Views - 3559; Comments - 7]
நள்ளிரவில் இதமழை!  (9/11/2012) [Views - 2245; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved