Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:00:03 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9592
#KOTW9592
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 9, 2012
மோனோ ரெயில்...? (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3562 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் தற்போது பெய்து வரும் மழை உள்ளிட்ட காரணங்களால் அப்பாபள்ளித் தெரு, பெரிய நெசவுத் தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டது.

வாகனத்திலும், நடந்தும் செல்வோருக்கு இது பெரும் இடைஞ்சலை ஏற்படுத்தி வருவதாக நகராட்சியில் முறையிடப்பட்டதன் பேரில், சில தினங்களுக்கு முன் அங்குள்ள பள்ளங்கள் நிரப்பப்பட்டன.

இந்நிலையில், நேற்றும் - இன்றும் நள்ளிரவில் பெய்த மழை காரணமாக, அப்பா பள்ளித் தெருவிலும், பெரிய நெசவுத் தெருவிலும் பள்ளங்கள் நிரப்பப்பட்ட பகுதிகளில் மழை நீரை உள்வாங்கி, சொதசொதப்பாக உள்ளது.



அப்பகுதிகளின் வழியே நடந்து செல்வோர் பலர் - பள்ளத்தில் கால் சிக்கி பரிதவித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

நகரில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு பெரிய நெசவுத் தெருவில் பேருந்து போக்குவரத்து உள்ளதால், பேருந்துகளின் பாரம் தாங்காமல் - பள்ளங்களில் நிரப்பப்பட்ட மண் வெளியேறியது. இன்று காலை முதல் மாலை வரை 3 பேருந்துகள் சேற்றுக்குள் சிக்கித் திணறியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.











இதுகுறித்து, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக்கிடம் வினவியபோது, அப்பகுதிகளில் ஏற்பட்ட பள்ளங்கள் போக்குவரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நீரை உறிஞ்சும் ஒரு வகை சரல் கொண்டு அவற்றை நிரப்புவதாகவே நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்ததாகவும், சிறு மழைக்குக் கூட தாங்காத அளவுக்கு மட்டமான மணல் போடப்பட்டுள்ளது தனக்கு வியப்பளிப்பதாகவும் தெரிவித்ததுடன், அப்பகுதிகளின் நடப்பு சீர்கேட்டை உடனடியாக சரி செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

பள்ளங்களில் நிரப்பப்பட்டுள்ள பொருளின் தன்மை - தரம் குறித்து வினவுவதற்காக காயல்படடினம் நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் செல்வமணியைத் தொடர்புகொள்ள முயன்றபோது இணைப்பு கிடைக்கவில்லை. நகராட்சியின் உதவி திட்ட அலுவலர் செந்தில்குமாரைத் தொடர்புகொள்ள முயன்றபோது மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை.

தகவல்:
சித்தீக்
பெரிய நெசவுத் தெரு
காயல்பட்டினம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [10 November 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23663

ஆஹ்.... அச்சு அசல் மோனோ ரயிலேதான் . சிறுவர்களை இதில் ஏற்றி " சுத்தி " காட்டி , நகராட்சி காசு பார்க்கலாமே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மணப்பாரை மாடுகட்டி மாயவரம் ஏரு பூட்டி வயல்காட்டெ உழுது போடு செல்லக் கண்ணு...பசுந்தளையெப் போட்டு பாடு படு செல்லக் கண்ணு...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [10 November 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23666

ஒரு திட்டத்தை வகுத்து அதை செயல்படுத்தும் போது அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அதற்குரிய ஏற்பாடுகளை முழுமையாக செய்து முடித்த பின் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். தவறி விட்டனர்.

இனி அதே அவசரத்தில் அந்த தெருவுக்கு தரமான ரோட்டைப் போடு வழக்கம் போல எல்லா வாகனங்களும் சென்று வர போர்க்கால அடிப்படையில் சாலைப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். அவங்க வெளியூர் போயிட்டாங்க... இவங்க ஆன்ஸர் பண்ண மாட்டிருக்காங்க இந்த நொண்டிச்சாக்கெல்லாம் வேலைக்கு ஆகாது!

நகர்மன்றமே இனியும் கால தாமதம் ஆகுமெனில் வாகனச் சக்கரங்களால் உழுது கொண்டிருக்கும் அப்பகுதியில் இனி அந்த தெருவாசிகள் புது நெல்லு விதச்சு புது நாத்து நட்டு வெள்ளாமெ பார்த்துடுவாங்க..! அப்புறம் நீங்க அறுவடைக்கு ஆளில்லாம திண்டானணும்! பார்த்துக்கங்க...!

-ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [10 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23667

கேஜ்ரிவால் அவர்களை உடனே கூப்பிடுங்கள். இந்த மணல் போட்டு ரோட்டை மூடி ஊழல் செய்தவர்களின் பட்டியலை உடனே வெளியிடுவார். நம்மூரிலும் பல கேஜ்ரிவால்கள், சுப்ரமணிய சாமிகள் இருக்கவே செய்வார்கள். ஊழல் அன்றாட வாழ்கையின் ஒரு அம்சமாகவே போய்விட்டதால் இவ்வளவு நாட்களாக நாமே அதற்கு அடிமையாகி கிடந்தோம்.

மழைக்காலத்தில் ஈசல்கள் படையெடுத்து வருவது போல் இந்த இணையதளங்கள் நமதூரில் கால் பதித்தது முதல் எல்லா விஷயங்களும் தெருவுக்கு வந்துவிட்டன. ஒருவேளை கேஜ்ரிவால்களாக இவர்களே மாறிவிட்டால்? மடியில் "பணம்" உள்ளவர்களுக்குதானே வழியில் பயம்!

வாழ்க, வளர்க தொடரட்டும் இணையதளங்களின் சேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இணையதளத்தை முடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நமது நகராட்சியில் சில பேர் தோல்விகளை சந்தித்தார்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM ) [10 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23670

பள்ளங்களில் நிரப்பப்பட்டுள்ள பொருளின் தன்மை - தரம் குறித்து வினவுவதற்காக காயல்படடினம் நகராட்சியின் பணி மேற்பார்வையாளர் செல்வமணியைத் தொடர்புகொள்ள முயன்றபோது இணைப்பு கிடைக்கவில்லை. நகராட்சியின் உதவி திட்ட அலுவலர் செந்தில்குமாரைத் தொடர்புகொள்ள முயன்றபோது மறுமுனையில் அழைப்பு ஏற்கப்படவில்லை. இது செய்தி)

சகோதரர் மக்கி நூஹு தம்பி அவர்களின் கருத்து நூறு சதவீதம் உண்மையே...

இந்த இணையதளம் நமதூரில் கால் பதித்தது முதல் எல்லா விஷயங்களும் தெருவுக்கு (மக்கள் பார்வைக்கு) வந்துவிட்டன... இதுவே பல ஆதிக்க சக்திகளுக்கும், அதிகார வர்க்கங்களுக்கும் இந்த இணையதளம் வெளியிடும் செய்தி (தகவல்) மீது மிக கசப்பாக அமைந்து வருகிறது...

மக்கள் வரி பணத்தில் செலவிடப்படும் அணைத்து திட்டங்கள் அதன் செயல்பாடுகள் மற்றும் தவறுகளை மக்கள் பார்வைக்கு கொண்டு போவதால் இந்த இணையதளத்தை சமீபத்தில் நகராட்சி கூட்ட நடப்புகளை செய்தி சேகரிக்க விடாமல் பல தடைகள், இடைஞ்சல்கள், இந்த இணையதளத்தை முடக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நமது நகராட்சியில் சில பேர் தோல்விகளை சந்தித்தார்கள்...

இந்த இணையதளம் மூலமாக நமது நகராட்சி செய்திகள் மட்டும் அல்ல...! இன்னும் பல செய்திகளை மக்கள் பார்வைக்கு தொய்வு இல்லாமல் துணிச்சலுடன் தந்து வருவது பாராட்டகூடியது...

நல்லவர்கள் போற்றுகிறார்கள்...
தீயவர்கள் வெறுக்கிறார்கள்...

யார் போற்றினாலும், யார் தூற்றினாலும், யார் வெறுத்தாலும் தமது செய்தியில் நியாயத்தை விட்டு விளகுவதல்ல. என்ற நிலையில் உள்ளார்கள் போலும்...

இதுவே அதிகார வர்க்கங்களுக்கு மத்தியில் பெரும் சவாலாக இந்த இணையதளம் உள்ளது..

நகரில் மக்கள் வரிபனத்தில் செலவிடப்படும் அணைத்து குறைகளையும் மக்கள் பார்வைக்கு செய்தி தரும் இந்த இணையதளத்திற்கு பல கோடி நன்றிகள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [10 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23676

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

தெருக்கள் இருக்கும் நிலையை நன்றாக தெரிந்த பின்னும் வாய் மூடி மௌனியாக இருப்பதில் அர்த்தமில்லை.

தெருவில் மழை நீர் தேங்கி நிற்கிறது அதை வடியச் செய்து போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாது மக்களுக்கு வசதி செய்து தரும்படி கேட்டால் - போக்குவரத்து வாகனங்களை அதிலே சிக்கச் செய்து, மக்களுக்கு மேலும் துன்பத்தை , சிரமத்தை அதிகரிக்கிறார்கள் என்றால் இவர்களை என்னெவென்று சொல்வது.
-------------------------------------
நோட்டமிட வேண்டும் :

மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே - ஏமாற்றங்களிலிருந்து விடுதலை அடையலாம். உண்மையிலேயே இவர்கள் அந்த வேலைக்கு பொருத்தமானவர்கள்தானா? இல்லை வேண்டும் என்றே இந்த செயலை செய்கிறார்களா? என்பதை நோட்டமிடுபவர்கள் நோட்டமிடுகிறார்கள் - இருந்தாலும் மக்கள் நோட்டமிட வேண்டும்.
-------------------------------------------
நடவடிக்கை எடுக்க வேண்டும் :

" நீரை உறிஞ்சும் ஒரு வகை சரல் கொண்டு அவற்றை நிரப்புவதாகவே நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்ததாகவும், சிறு மழைக்குக் கூட தாங்காத அளவுக்கு மட்டமான மணல் போடப்பட்டுள்ளது தனக்கு வியப்பளிப்பதாகவும் நகராட்சி தலைவர் சொல்கிறார் என்ற செய்தி உண்மையாக இருக்குமானால் அவர்கள் மீது நகராட்சி தலைவர் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவரும் மற்றும் அத்தனை உறுப்பினர்களும் இதற்கான செலவுகளை துல்லியமாக ஆராய்ந்து ஒப்புக்கொள்ள வேண்டும்.
--------------------------------------
மக்கள் உஷாராக இருந்தால் :

புதிதாக ரோடு போடும்போது அந்தந்த பகுதி ஆண் மக்களோடு, ஜமாஅத்'கள், சங்கங்கள், இயக்கங்கள் என்று எல்லோருமே தெருவுக்கு வந்து, அவர்கள் முறையாக ரோடு போடுகிறார்களா என்பதை கவனியுங்கள். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் ஏமாற்றுபவர்களால் ஏமாற்ற இயலாது.

ரோடு ஒழுங்காக போட்டால், நீங்கள் ரோட்டிலிருந்து வீட்டிற்கு படிவழியாக ஏறி போகலாம் - விழிப்புணர்வு இல்லாதிருந்தால் ரோட்டிலிருந்து வீட்டிற்கு படிக்கட்டு வழியாக ஏறுவதற்கு பதிலாக இறங்குமுகமாக படிக்கட்டுகளை அமைத்து இறங்கிதான் போகவேண்டும்.

மழை நீர் அத்தனையும் உங்கள் வீட்டிற்குள்தான் அடைக்கலம் புகும். இன்னும் பல தொல்லைகளும் ஏற்படும்.

ஆகையால் இனிமேல் ரோடுபோடும்போது ஆண்கள் அனைவரும் வெளியே வந்து ரோடு போடுவதில் ஏற்படும் தவறுகளை தட்டிக்கேட்டு, அவர்களை ஒழுங்கான முறையில் ரோடு போட செய்ய வேண்டும் – அப்படி செய்ய மக்களால் முடியும். ஒன்றிரண்டு இடங்களில் மக்கள் இறங்கி போராடினால் எல்லாம் சரியாக நடக்கும்.

இதனால் காண்ராக்ட் காரர்களுக்கு நஷ்டம் வரத்தான் செய்யும் அப்படி நஷ்டம் வந்தால்தான் அடுத்த முறை தரமான ரோடு போடுவார்கள் இலஞ்சங்கள் கொடுப்பது ஒழிக்கப்படும்.

மக்கள் உஷாராக இருந்தால் ஏமாற்ற நினைப்பவர்கள் ஏமாந்து போவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. காயல் மெட்ரோ.....
posted by S.M.B Faizal (Abudhabi - Habshan) [10 November 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23691

அஸ்ஸலாமு அழைக்கும்

நம் ஊருக்கு மெட்ரோ வரது யாருமே சொல்லவே இல்லைய. இனி அங்கங்கே மெட்ரோ ஸ்டேஷன் அமைதல் நம் ஊர் மக்களுக்கு வசதியாக இருக்கும். காயல் நகராட்சி கவனத்தில் வைக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...Need action Permanently
posted by shaik mohamed (Dubai) [10 November 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23697

I would like to inform to concerned government authorities once you finalized oneway have you analyize the quality of existing road is suitable for your decision? On that time only sand is availble in Periya Nesavoo street .The whole street seems to be bombblasting area after pass the bus because for the dusty sand. This make dust allergy to the people who staying there and even walkers also.After everything now become big hole in several area 100% not suitable for any vehicle even people cannot walk safley particularly during night without light.

So for the sake of public helath of old people, school going children,women, kindly temporarly divert the busroute to any other alternate route and do proper road in very safty way immeditely.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் இதமழை!  (9/11/2012) [Views - 2245; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved