Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:30:09 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9747
#KOTW9747
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 6, 2012
டிச.06 - பாபரி மஸ்ஜித் இடிப்பு தினத்தை முன்னிட்டு நகரில் கடையடைப்பு! வணிக வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3329 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06ஆம் தேதியன்று, உத்திரபிரதேசம் - அயோத்தியிலுள்ள பாபரி மஸ்ஜித், சமூக விரோதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.







அதனைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 06ஆம் தேதியன்று இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்புகளால் பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் அந்நாளில் காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு, டிசம்பர் 06ஆம் நாளான இன்று காயல்பட்டினத்தில் பெரும்பாலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ள பிரதான வீதி, பெரிய தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார், பேருந்து நிலைய வணிக வளாகம் போன்ற பகுதிகளில் பெரும்பாலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே ஒரு சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆட்டோ - வேன் - கார் உள்ளிட்ட வாடகை வாகனங்கள் ஓடவில்லை.









































இக்கடையடைப்பு காரணமாக நகரின் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடையடைப்பின்போது நகரில் விரும்பத்தகாத நிகழ்வுகள் எதுவும் நடைபெறாதிருக்க, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் தலைமையில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கள உதவி:
A.S.புகாரீ
(பதுரிய்யா ஹோட்டல்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [06 December 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 24380

இன்னும் எத்துனை ஆண்டுகள் கடையடைப்பு போராடம் 20 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கிடைக்கவில்லை நீதி ? dec 5 அன்று நினைவுக்கு வருகிறது dec 7 மீண்டும் மறந்து விடுகிறோம் இதுதான் நம் பலஹீனம். நமது அரசாங்கத்தின் பலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இந்திய தாய் கண் கலங்கிய தினம்.!!!
posted by s.s.md meerasahib (riyadh) [06 December 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24387

நம் இந்திய தாய் கண்கலங்கிய தினம் தான்.... இந்த டிச.06 - பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம். கயவர்கள் தன் தாயை கண்ணத்தில் அடித்து ஜனநாயகத்தை படுகொலைசெய்ய வாளும், கோலும், ஏந்தி காவி உடையுடன் புறப்பட்ட இந்தியாவின் இருண்ட நாள். இந்திய தாய் இருபது ஆண்டுகள் ஆகியும் தன் கண்ணத்தில் அடித்த காவி (பாவி) மக்கள் மன்னிப்பு கேக்கும் என்றெண்ணி இனியும் காத்திருப்பது ஒரு வேலை அது தாயின் தன்மையாக இருக்கலாம். ஆனால் தன் தாயிடமிருந்து நீதியை எதிர்ப்பார்த்து பொறுமையுடன் இருக்கும் இஸ்லாமிய மக்களுக்கு நீதி வழங்காமல் மௌனம்காப்பது ஏனோ? நீதி வழங்குவதில் மௌனம் காப்பது என்பது....... ஜனநாயக படுகொலைக்கு துனைபோவதேயாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஒரு சம்பிரதாயமாக மாறி விட்ட கடை அடைப்பு
posted by mackie noohuthambi (kayalpatnam) [06 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24388

டிசம்பர் 6 ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது. ஆட்சி மாற்றங்கள் நடை பெறுகின்றன. பாபரி மஸ்ஜித் தகர்பில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுவது மட்டுமல்ல, இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவராக பரிமாண வளர்ச்சி பெற்றுள்ளார். 2014 மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதம மந்திரியாகவும் வரக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து கொண்டு இருக்கிறது. ஆனால் பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்படும் என்ற உறுதி மொழியை காங்கிரசோ மற்ற கட்சிகளோ முஸ்லிம்களுக்கு இது வரை அளிக்கவில்லை என்றாலும் முஸ்லிம்கள் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும் அதற்கு துணை போகும் கட்சியையும் ஆதரிதுக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆக, டிசம்பர் 6 ஒரு சம்பிரதாய கடை அடைப்பு நாளாக இருக்கிறது... தொடர்ந்து இருந்து வரும்..... வேறு எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. முஸ்லிம்கள் மாற்றி சிந்திக்க என்ன வழி என்று அதன் அரசியல் தலைவர்கள் வியூகம் வகுக்க வேண்டாமா....சிந்திப்போம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. போராட்டம் தேவைதான்!
posted by Firdous (Colombo) [06 December 2012]
IP: 203.*.*.* Sri Lanka | Comment Reference Number: 24391

இம்மாதிரி போரட்டங்கள் மூலம் பாப்ரி மஸ்ஜித்ஐ நினைவில் நிலை நிறுத்துவதால் வருங்கால சந்ததியினர் அறிந்துக்கொள்ள முடியும். இன் ஷாஹ் அல்லாஹ் மீண்டும் இறையில்லத்தை அதே இடத்தில் கட்டுவதன் மூலம் நமது உரிமையை மீடேடுப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நீதியின் குரல்வளை நெறிக்கப்பட்ட நாள்.... இன்று
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [06 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24393

நீதியின் குரல்வளை நெறிக்கப்பட்ட நாள்,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by sulaiman (abudhabi) [06 December 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24395

அஸ்ஸலாமுஅழைக்கும் ,

காவி பயங்கரவாதிகள் தங்களுடைய நீண்ட நாள் மிருக வெறி கனவை நிறைவேற்றிகொண்ட தினம் டிசம்பர் 6 1992 .நமது நாட்டின் அனைத்து அரசு இயந்திரங்களும் வாய்பொத்தி அநியாயத்திற்கு துணை போன நாள் இது. ஜனநாயகத்தை மதிக்க கூடிய, சமூக நல்லிணகத்தை மதிக்ககூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் விழுந்த மரண அடி பாபர் மஸ்ஜித் இடிப்பு,இந்த நாளை முஸ்லிம்களும் ,நடுநிலைவாதிகளும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

பாபர் மஸ்ஜித் வழக்கை பொறுத்தவரை அதே இடத்தில் மஸ்ஜிதை கட்டிகொடுத்து அங்கு தொழுகை நடப்பதுதான் ஒரே தீர்வு.வேறு எந்த தீர்வையும் முஸ்லிம்கள் எற்றுகொள்ளமாட்டர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. கண்ணீர் வற்றாத காயம் - டிசம்பர் 6
posted by S.A.Muhammad Ali (Dubai) [06 December 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24398

அஸ்ஸலாமு அலைக்கும்.

கடந்த மூன்று மாதங்களில் மூன்று சம்பவங்களை நாம் செய்திகளில் வாசிக்க முடிந்தது. அதாவது ஒரு அமெரிக்க படத்திற்கு எதிராக கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளும் ஓரணியில் அணி திரண்டன. இன்னொரு சம்பவத்தில் தமிழ் நாட்டில் ஒரு சினிமா படத்திற்கு எதிராக கிட்டத்தட்ட எல்லா அமைப்புகளும் ஓரணியில் அணி திரண்டன.

நமது ஊரில் KEPA வின் போராட்டத்தில் பெரும்பாலான அமைப்புகள் ஆதரவு அளித்தால் தான் இந்த ஆர்பாட்டம் மற்றும் கடையடைப்பு பெரிய அளவில் பேசப்படுகிறது. ஒன்றுபட்டால் நாம் பல விசயங்களை சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த நிகழ்சிகள் நமக்கு சொல்கிறது.

இந்த DEC 6 மட்டும் ஒரு சம்பிராதயமாக வருடந்தோறும் நடக்க இந்த ஒற்றுமையின்மை தான் காரணம். மனித சமூகத்தை ஒன்றிணைக்க இஸ்லாம் ஒன்றே வழி. ஆனால் எல்லா இஸ்லாமிய அமைப்புகளும் தனித்தனியாக போராட்டம், ஆர்பாட்டம் நடத்தி தத்தமது அமைப்புகளை வளர்க்கிறார்கள். . ஓர் அமைப்பில் உள்ளவர்கள் மற்ற அமைப்பைப் போட்டி அமைப்பாகப் பார்க்கும் ஷைத்தானிய மாயையில் இருந்து விடுபடுவோம். கடந்த காலம் கடந்த காலமாக இருக்கட்டும். இனி வரும் காலங்களிலாவது அல்லாஹ்வுக்குப் பயந்து நபி(ஸல்) வழியில் ஒன்று பட முயற்சிப்போமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இனி காலமெல்லாம் டிசமர்-6 என்பது கருப்பு நாள் தான்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [07 December 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24400

இந்திய வரலற்றில் ஓர் கருப்பு நாள்!

இந்திய இறையான்மையைத் தகர்த்து தரிப்பனமாக்கிய நாள்!
வெறிகொண்ட கயவர்கள் இந்தியத்தாயின் கற்பை சூரையாடிய நாள்!
சிறுபாண்மை மக்களின் உணர்வுகளை சிதையிலிட்டு கொளுத்திய நாள்!
மதச்சார்பற்ற இந்தியாவின் மார்பில் எட்டி உதைத்த நாள்!
நடுநிலையாளர்களான இந்து சமுதாயத்தினரை தலை குனிய வைத்த நாள்!
நம் இந்திய மண்ணில் கரசேவை எனும் பெயரில் காவிநிறக் கறை படியச் செய்த நாள்!

இப்படி நம் நாட்டின் பெருமை தனை எண்ணிப் பார்த்து பூரிப்படையச் செய்யும் இந் நாள் டிசம்பர்-6 என்பது பாரத மாதாவுக்கு பேதி எடுத்த நாள் என்றும், பாரத மாதா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நாள் என்றும் பல மேடைகளிலும் மண்மறைந்த மானிதர் எஸ்.கே. மாமா அவர்கள் முழங்கக் கேட்டுள்ளேன்.

ஆறாத புண்ணாகவும், மாறாத வடுக்களாகவும் எம் சமுதாய மக்கள் மனதில் இன்றளவும் வேதனை தரும் ஓர் விரும்பதகாத நிகழ்வு தான் இது! இனி காலமெல்லாம் டிசமர்-6 என்பது கருப்பு நாள் தான்!

இடித்ததும், இடிந்ததும், வீழ்ந்ததும், சரிந்ததும் ஒரு ஆலயம் அல்ல! நம் தேசத்தின் ஒற்றுமை. ஒழுக்கம், நீதி, நியாயம் இவைகள் தான்!

உலகமே பாரதத்தின் முகத்தில் காரி உமிழ்ந்த இந்நாளை ஒவ்வொரு வருடமும் (டிசம்பர்-6) நினைக்கும் போது எம் தேசத்தின் மீதுள்ள களங்கம் நீங்க வேண்டுமே? அல்லது நீக்கப்பட வேண்டுமே? எனும் ஆதங்கமும் ஆவலும் தான் மேலோங்குகின்றது.-

ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. டிசம்பர் 6
posted by NIZAR (KAYALPATNAM) [07 December 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 24406

ஆரம்பத்தில் DEC 6 என்றாலே அதல் ஈடுபட்ட அரசியல் தலைவருகளுக்கும், கரசேவர் கூட்டத்துக்கும் தாநாக உச்சா போயிரும். அதுமட்டுமா இந்தநாளில் அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள், நாட்டில் எத்தனை பரபரப்பு, கண்டன ஆர்பாட்டம்,ஊர்வலம், இப்ப ஒன்னுமே இல்லங்க, எதோ முஸ்லிம் பெரும்பான்மையாக ஊரில் கடமைக்கு கடை அடைப்பு நடக்குதுன்னா பாருங்களேன். என்ன பண்றது இதற்கு தீர்வு மஸ்ஜிதின் சொந்தக்காரரான வல்ல இறைவனின் பார்வை பட்டாலே அன்றி இந்த நாட்டை நம்பி வேறு வழியில்லை. .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவில் சிறுமழை!  (6/12/2012) [Views - 2285; Comments - 1]
உனக்குமாடா...? (?!)  (5/12/2012) [Views - 3318; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved