Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:46:53 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9956
#KOTW9956
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 13, 2013
நகர்மன்ற உறுப்பினர்கள் சார்பில் நடைபெற்ற DCW ஆலை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3865 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

DCW ஆலை சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 12, சனிக்கிழமை அன்று ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது. அக்கூட்டம் குறித்து - கூட்ட ஏற்ப்பாட்டாளர்கள் சார்பாக வெளியிடப்பட்டுள்ளட் அறிக்கை வருமாறு:

காயல்பட்டணம் நகர எல்லைக்குள் அமைந்துள்ள DCW ஆலை குறித்து நமதூரில் அண்மையில் தீவிரமாக எழுந்த எதிர்ப்பினை தொடர்ந்து, அந்நிறுவாகத்தின் சார்பில் நகர்மன்றத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அக்கடிதத்தில் தங்கள் நிலை குறித்து விளக்கம் அளிக்க விரும்புவதாகவும், அதற்காக நகர்மன்றத்தினர் பங்கேற்கும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நகர்மன்றத்தினர் இவ்விசயத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்ற ஆலோசனையை பெறுவதற்கு, அனைத்து ஜமாஅத்துக்கள, புறநகர் ஊர் கமிட்டிகள், முஸ்லிம் ஐக்கிய பேரவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கம், பொதுநல அமைப்புக்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்கும் கூட்டத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

12-01-2013 சனிக்கிழமை காலை 10:30 மணியளவில் ஜலாலியா நிக்காஹ் மஜ்லிஸில் இக்கூட்டம் நடைபெற்றது.



காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் தலைவர் அல்ஹாஜ் M.M. உவைஸ் அவர்கள் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்கள். அல்ஹாஜ் S.M. ஃபாஸி, அல்ஹாஜ் S.M.உஸைர், அல்ஹாஜ் S.O.அபுல் ஹஸன் கலாமி, அல்ஹாஜ் A.A.C. நவாஸ் அஹ்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அல்ஹாஃபிழ் M.M. முஜாஹித் அலி இறைமறை ஓதி இக்கூட்டத்தை துவக்கி வைத்தார்.

நகர்மன்ற உறுப்பினர் திரு.E.M.சாமி வரவேற்புரையாற்றினார். கூட்டம் குறித்த அறிமுகவுரையை நகர்மன்ற உறுப்பினர் சகோ.K.ஜமால் வழங்கி, கூட்டத்தை நெறிப்படுத்தினார்.



முன்னதாக நகர்மன்ற உறுப்பினர்களின் சார்பில், DCW ஆலை பற்றி தங்கள் நிலைபாடு குறித்தும், ஆலையில் இருந்து வந்திருக்கும் அழைப்பு கடிதம் குறித்தும் விளக்கிடும் எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து DCW-வில் இருந்து நகர்மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வந்த கடிதத்தையும், உறுப்பினர்களின் சார்பில் ஆலை நிர்வாகத்திற்கு எழுதப்பட்ட பதில் கடிதத்தையும் கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.



அடுத்து கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகள் தங்களின் கருத்துக்களை விரிவாக பதிவு செய்தனர். நிறைவாக கூட்டத் தலைவர் மற்றும் முன்னிலை பொறுப்பேற்றோர் வழங்கும் ஆலோசனையை தீர்மானமாக ஏற்பதென முடிவாகியது.

முன்னிலை வகித்தோர்களில் ஒருவராகிய அல்ஹாஜ். A.A.C. நவாஸ் அஹ்மது, தலைவர் மற்றும் முன்னிலை வகித்தோர்களின் சார்பில் தன்னுடைய பரிந்துரையை, கலந்து கொண்டோர் கருத்தறிந்து பதிவு செய்தார்.



இக்கூட்டத்தில் பங்கேற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் தக்பீர் முழக்கத்துடன் அவரது பரிந்துரைகளை ஏற்க, அவை தீர்மானமாகின.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

* DCW ஆலையை துறை சார்ந்த அறிவியல் ஆய்வாளர்களை கொண்டு முறையாக நம்முடைய சார்பில் ஆய்வு செய்யும் காலம் வரும் வரை, அந்த ஆலையில் இருந்து நகர்மன்றத்திற்கோ, மற்ற எந்த அமைப்புக்களுக்கோ வருகின்ற பேச்சுவார்த்தைக்கான அழைப்புக்களை தவிர்க்க வேண்டுமென, அனைவரையும் வலியுறுத்தி கேட்டு, இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

* DCW ஆலைக்கெதிரான நடவடிக்கைகளை இன்னும் துரிதப்படுத்தவும், வலுப்படுத்தவும் குழு ஒன்றை அமைப்பதெனவும், அக்குழுவில் ஊரின் பொதுஅமைப்பான ஐக்கிய பேரவை, ஊர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நகர்மன்றத்தினர், இவ்வாலைக்கெதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லும் இயக்கமான சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்பு இவைகளின் பிரதிநிதிகளை இடம்பெறச் செய்வதெனவும், ஒவ்வொரு அமைப்பிலும் 3 பேர் வீதம் மொத்தம் 9 நபர்களை கொண்ட குழுவாக இதுசெயல்படும் என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

நகர்மன்ற உறுப்பினர் சகோ.ஜஹாங்கிர் நன்றி நவில, அல்ஹாஜ் A.R.லுக்மான் அவர்களின் துஆவுடன் கூட்டம் நிறைவுபெற்றது.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் புகைப்படங்கள்:
எஸ்.ஆர்.பி. ஜஹாங்கிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Fareed (Dubai) [13 January 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25015

Salam

Good decision.We want to see all kayalaties and others around KPM should be united until the job is over. Allah will help all your good decisions.Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...மாஷா அல்லாஹ்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [14 January 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25019

இது போன்ற நல்ல ஒற்றுமை என்றும் நமக்குள் வர வேண்டும் என்று எல்லோரும் எதிர் பார்க்கின்றோம்! ஆனாலும், கலுங்கு ஒழுங்கடிக்க ஒழுங்கு கலுங்கடிக்க என்று ஒரு சிலர் எப்படியாவது இதை பெரிது பண்ணி நமக்குள் விவாதமாக்கவே நினைக்கின்றனர்! வேண்டாம் இந்த வீராப்பும் விவாதமும் நமக்குள்! தலைவி ஏதோ ஒரு காரணத்தால் கலந்து கொள்ளவில்லை! அதற்காக நகர் நலனில் நமக்குள்ள உரிமைகள் நிறைவேற எந்த வகையிலும் நாம் தடையாக இருந்திடல் கூடாது!

நம்மை படைத்த இறைவன் மீது சத்தியமாக, கெடுவான் நிச்சயம் கேடு நினைப்பான்! நம் குறை அறிந்தோன் ரப்புல் ஆலமீன் இறைவன் மட்டுமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...A GOOD START IS HALF DONE
posted by mackie noohuthambi (kayalpatnam) [14 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25022

A GOOD START IS HALF DONE என்று ஆங்கிலத்திலே சொல்வார்கள். ஒரு நல்ல ஆரம்பம் ...பாதி நடந்து முடிந்ததற்கு அடையாளம் என்று இதை தமிழ் அகராதி சொல்கிறது. இந்த மாதிரி ஒரு அவையை பார்த்து எத்தனை காலம் ஆகிறது. மாஷா அல்லாஹ் .அல்ஹம்து லில்லாஹ். நாம் எடுக்கும் முயற்சிகள் எல்லாமே இப்படி கலந்தாலோசனைகளுடன் நடந்தால் எல்லாமே வெற்றிதான்.

"பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!! என்று சங்க தமிழ் சொல்கிறது. ஓஹோ ஓஹோ என்று பெரியவர்களை வானளாவ புகழ்வதும் ஓஹோ இவனா ..இவனால் என்ன முடியும் என்று சிறியவர்களை இளைஞர்களை ஏளனமாக இகழ்வதும் ஒரு ஆரோக்கியமான சமுகத்துக்கு ஏற்புடையதல்ல என்று அதற்கு சான்றோர்கள் விளக்கம் தருகிறார்கள்.

எனவே பெரியவர்களின் வழி காட்டுதலுடன் இளைஞர்களின் செயல்பாட்டுடன் நமதூரின் எல்லா விஷயங்களையும் திறந்த மனதுடன் பேசி கருத்து ஒருமித்து நாம் முன்னெடுத்து சென்றால் வானம் வசப்படும்.வெற்றி தொட்டு விடும் தூரம்தான். அல்லாஹ் எல்லோருடைய உள்ளங்களையும் இணைத்து ஊருக்கும் சமுதாயத்துக்கும் நன்மை செய்யும் கூட்டமாக இந்த கூட்டத்தை அதற்கு ஒரு முன்னோடியாக ஆக்கி வைப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல்லதொரு முடிவு ,,,,,,
posted by NIZAR (kayalpatnam) [14 January 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25028

நகர்மன்ற உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட DCW சம்பந்தமான ஆலோசனை கூட்டம் ஒரு சிறந்த நிகழ்வாக அமைந்துள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம்.அணைத்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஊரு பெரியவர்கள்,அணைத்து ஜமாத்தினர்கள் என அணைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒன்று கூடி கருத்துகளை பதிவு செய்து இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஏகோபித்த ஒரு முடிவை எடுத்து உள்ளது வரவேற்கதக்கது.

குஜராத்தில் இருந்து வந்து ஆயிரம் கோடி சம்பாதிப்பதில் நமக்கு ஆட்சேபனை இல்லை.ஆனால் தான் சம்பாதிக்க இருக்கிறவங்க உயிரை எல்லவா காவு வாங்குகிறான் என்றால் பார்த்து கொண்டு சும்மா இருக்க முடியுமா?இதே போன்று ஊரு மக்களின் நல் ஆதரவுடன்,அணைத்து ஜமாஅத் மற்றும் அணைத்து அமைப்புகள் ஒற்றுமையாக இந்த விசயத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை மூலம் முதலில் அமில கடலில் கழிவுகளை கலப்பதை நிறுத்த வைக்க வேண்டும்.மாசு கட்டுபாடு வாரியத்தின் மூலம் தொழிற்சாலையின் மாசு மீறல்களை கட்டுபடுத்தி நம் வருங்கால சந்ததியர்களை காப்போமாக,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. புண்ணிய இலட்சிய பயண எல்லையை இதோ அடைந்து விடுவோம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [14 January 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25035

அனைத்து தரப்பினரும் ஒரு சேர ஓரிடத்தில் கூடி ஊர் மக்களின் நலனுக்காக உன்னத இலட்சிய பயண பாதை நோக்கி பயணமேற்கொண்டிருக்கும் புண்ணியவான்களே, இப் புண்ணிய இலக்கின் எல்லையை இதோ அடைந்து விடுவோம்,எல்லாம் வல்லஅல்லாஹ்வும் அவ் இலக்கை நமக்கருகில் காட்டக்கூடிய அடயாளம் தான் அனைத்து அன்புள்ளங்களும் அணிசேர்ந்திருப்பது!

உயிர் கொல்லி ஆலைக்கெதிரான அறப்போரட்டமானாலும் சரி, அனைத்து ஆலோசனை கூட்டமானாலும்சரி கூடியவரை கலந்துகொண்டு,சென்னைவரை சென்று தன் பங்கை தீவிரமாக செலுத்திய,நகர் மன்ற தலைவியவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு,பல தவிர்க்க முடியாத காரணங்கள் இருக்கலாம் என்று எண்ணுகிறேன்!

அக்காரணங்கள் ஒருவேளை உப்பு சப்பில்லாத காரணங்களாக இருக்குமேயானால்,ஊர் நலன் கருதி உணர்வுபூர்வமாக இப்புண்ணிய பணியில் ஈடுபட்டிருக்கும் பெருந்தன்மையுள்ள பெரியோர்கள் அடங்கிய அனைத்து அன்புள்ள்களின் பேராதரவை பெறத்தவறிய தலைவியாகி விடுவீர்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [14 January 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25036

இந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவி கலந்துகொள்ளாதது ஏன் என சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அப்படி ஒரு கேள்வியை எழுப்புவதற்கு முன்...

DCW விஷயத்தில் தலைவி அவர்கள் - துணிச்சலாக உண்மையை எடுத்துரைக்க இதுவரை தயங்கியதில்லை என்பதை நினைவு கூர நாம் கடமைப்பட்டுள்ளோம்.

தங்கள் தொழில் பாதிக்கக்கூடாது என ஒதுங்க சமூகத்தில் பலர் இருக்க,

கடந்த ஆண்டு நடந்த DCW விரிவாக்க திட்டம் குறித்த ஆய்வு கூட்டத்தில் நேரடியாக சென்று தன் எதிர்ப்பை பதிவு செய்தது

நவம்பரில் நடந்த போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான தாய்மார்களின் ஆதங்கத்தை கட்டுரையாக வெளியிட்டது

டிசம்பரில் சென்னையில் நடந்த போராட்டத்தில் முன்னிலை வகித்து, தலைநகர் ஊடகங்கள் முன்னிலையில் இந்நிறுவனம் குறித்த அச்சத்தை தெளிவாக வெளிப்படுத்தியது

ஆகியவையை யாரும் மறக்கவோ, மறுக்கவோ இயலாது.

ஜலாலியாவில் நடந்த கூட்டத்தில் தலைவி ஏன் கலந்துகொள்ளவில்லை என சிலரிடம் விசாரித்ததில் கிடைக்கப்பெற்ற தகவல் இதற்கான விளக்கத்தை வழங்குகிறது. அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.

DCW நிறுவனம் பல மாதங்களாக நகர்மன்ற அங்கத்தினர்களை சந்திக்க முயற்சி செய்து வருகிறது என்பது ஊரில் உள்ள பல பேருக்குத் தெரியும். இதற்கான முயற்சி பல இடைத்தரகர்கள் மூலம் நடந்து வந்துள்ளது.

போன மாதம் நடந்த நகரமன்ற கூட்டத்தில் முடிவு செய்தபடி DCW சம்பந்தமாக குழு அமைக்க உறுப்பினர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் இந்த மாத துவக்கத்தில் நகராட்சியில் நடந்துள்ளது. அதே வேளையில் DCW நிறுவனமும் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் நகரில் உள்ள நோய்களுக்கு DCW காரணம் இல்லை என்றும், இது குறித்து விளக்கம் அளிக்க உறுப்பினர்கள் ஜனவரி 12 அன்று DCW நிறுவனத்திற்கு நேரடியாக வரும்படியும் அந்நிறுவனம் கேட்டிருக்கிறது. அது மட்டுமன்றி, அந்த விளக்கத்தை மக்களுக்கு உறுப்பினர்கள் சொல்லவேண்டும் (அதாவது PRO வேலை பார்க்க வேண்டும்) என்றும் அந்நிறுவனம் அக்கடிதத்தில் கூறியுள்ளது.

இது குறித்து கருத்து கூறிய தலைவர் மற்றும் 13வது வார்டு உறுப்பினர் ஆகியோர், எக்காலத்திலும் நகர்மன்ற அங்கத்தினர்கள் DCW நிறுவனத்திற்கு பேச்சுவார்த்தைக்கு போகக்கூடாது என தெளிவாக கூறியுள்ளனர். ஒரு உறுப்பினர் தனக்கு ஒட்டு போட்டவர்களை கேட்டு முடிவு கூறுவதாக கூறியுள்ளார். ஒண்ணு, இரண்டு உறுப்பினர்கள் அமைதியாக இருந்துள்ளனர். மீதி அனைத்து உறுப்பினர்களும் - DCW அழைப்பை ஏற்று அங்கு செல்லவேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட KEPA அமைப்பு, நகர்மன்ற அங்கத்தினர் அனைவருக்கும் - DCW அழைப்பை ஏற்கவேண்டாம் என்றும், அதனை தங்களுக்கு சாதகமாக அந்நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என்றும் கடிதம் எழுதியுள்ளார்கள். மேலும், ஐக்கியப் பேரவையை அணுகி - உறுப்பினர்களை செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தும்படியும் கூறியுள்ளார்கள். அப்போது ஐக்கிய பேரவையினர் DCW விசயத்தில், KEPA முயற்சிக்கு ஆதரவு வழங்குவதே தங்கள் நிலை என்றும், உறுப்பினர்கள் DCW நிறுவனத்திற்கு செல்லக்கூடாது என்று தாங்களும் அவர்களிடம் கூறுவதாகவும், அனைத்து ஜமாஅத்துகளின் நிர்வாகிகளையும் தொடர்புகொண்டு, தங்கள் பகுதி கவுன்சிலர்களுக்கு இதை வலியுறுத்துமாறும் KEPA நிர்வாகிகளிடம் கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து - KEPA அமைப்பின் மூத்த நிர்வாகிகள் - நகரின் அனைத்து ஜமாத்துக்களின் தலைவர்களையும் தொடர்பு கொண்டு தங்கள் வார்டு உறுப்பினர்களை DCW அழைப்பை ஏற்று செல்லவேண்டாம் என அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்படி பல ஜமாத்துக்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரையும் வழங்கியுள்ளது.

இதன் பிறகும் கருத்துக் கேட்க வேண்டும் என்று கூட்டத்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அழைப்புகள் உறுப்பினர்கள் சார்பாக ஜமாதுக்களுக்கும், பல அமைப்புகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இந்த அழைப்பை நகர்மன்றத் தலைவரும் சேர்ந்து வழங்குவதாக கூறி, கையெழுத்து போடும் இடத்தில பல உறுப்பினர்கள் கையெழுத்து இருக்க, தலைவியின் கையெழுத்து இடம் மட்டும் காலியாக விடப்பட்டிருந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து நகர்மன்றத் தலைவர், அனைத்து ஜமாதுக்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில் - DCW அழைப்பை ஏற்கக்கூடாது என்ற தனது நிலையை விளக்கி, செல்லவேண்டாம் என KEPA அமைப்பு கொடுத்துள்ள கடிதத்தை சுட்டிக்காட்டி, ஜமாஅத்து நிர்வாகிகளும் செல்லவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதையும் சுட்டிக்காட்டி, இதற்கு பிறகும், இவ்விஷயத்தை ஒரு கூட்டம் போட்டு கலந்தாலோசிக்க வேண்டும் என்பது அவசியமற்றது என்பதே தனது நிலை என்றும் விளக்கியுள்ளார்.

இந்த அவசியமற்ற கூட்டம் மூலம், போராட்டம் வலிமை இழக்க செய்யப்பட வாய்ப்புகள் நேரிடும் என்றும் அவர் அச்சமும் தெரிவித்துள்ளார்.

ஜமாத்துக்களின் கருத்து கேட்க என அழைக்கப்பட்ட கூட்டத்தில் DCW நிறுவனத்தில் பாதுகாப்பு பணியில் இருப்பவரும் புறநகரில் உள்ள ஒரு தெரு சார்பாக கலந்து கொண்டுள்ளார். அதுமட்டுமல்ல! அவர் கூட்டத்தை வீடியோ பதிவும் செய்துள்ளார். போலீஸ் அதிகாரி ஒருவரும் கலந்து கொண்டுள்ளார். ஊருக்கு சம்பந்தமில்லாத ஒரு அமைப்பும் (வீரப்பாண்டியப்பட்டினத்தை சார்ந்தவரால் நடத்தப்படுவது) இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, DCW நிறுவனத்திற்கு ஆதரவாக அங்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அழைப்பு வழங்கப்பட்டதால் கலந்துக்கொள்ளவில்லையெனில் தேவை இல்லாத விவாதங்கள் வளர்க்கப்படும் என்று கூட்டத்திற்கு சென்ற KEPA அமைப்புக்கும் சம்மந்தம் இல்லாமல், 9 பேர் குழு அமைக்கவேண்டும் என நிர்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.

KEPA அமைப்பு அனைத்து ஜமாத்துக்கள், ஐக்கிய பேரவை உட்பட பல அமைப்புகளை சார்ந்தவர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு குழு அமைப்பது அதன் செயல்பாட்டை வெகுவாக பாதிக்கும் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. இதனால் நமது நேரம், பொருளாதாரம், உடல் உழைப்பு என அனைத்தும் விரயமாக்கப்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. வரவேற்ப்போம்
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [14 January 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 25038

DCW விவகாரத்தில் வார்டு பிரதிநிதிகள் அனைத்து தரப்பினரின் கருத்தை கேட்க நினைத்தது வரவேற்கத் தகுந்தது. இது மாதிரி பிற்காலத்தில் முக்கியமான விசயத்திலும் ஊரிலுள்ள அனைத்து தரப்பினர்களின் கருத்தை கேட்டு முடிவெடுப்பார்கள் என்று நம்புவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED ESA LEBBAI (RIYADH -KSA) [15 January 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25039

எல்லா புகழும் இறைவனுக்கே. மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தோம். இப்படி எல்லா விசயங்களிலும் பெரியோரின் ஆலோசனை சிறியோரின் களப்பணி இணைந்த கரங்களாக செயல் படுமேயானால் வெற்றி நிச்சயம். புல்லுருவிகள் இவொற்றுமயை சீர்குலைக்க பார்ப்பார்கள்.குள்ளநரி வீணர்களின் சதிக்கு ஆளாகாமல், நமதூர் என்ற ஒரே எண்ணத்துடன் பீடு நடை போடுவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமதூர் நலப்பணிகள் சீருடனும் சிறப்புடனும் தொய்வு இன்றி நடை பெற அருள் புரிவானாக ஆமீன்.

மற்றற்ற மகிழ்வுடன்
M .E .L .நுஸ்கி
மற்றும் ரியாத் வாழ் காயல் சகோதரர்கள்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by M Sajith (Dubai) [15 January 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25045

ஆரோகியமான தகவல் - அற்புதமான தீர்மானம்

வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. DCW's...Current episode
posted by Jahir Hussain VENA (Bahrian) [15 January 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 25046

எல்லா புகழும் இறைவனுக்கே ...

வெற்றி நோக்கி மீண்டும் ஒரு மயில் கல் ...

DCW's...Current episode

One side send JCB to dispose/minkle their operational waste ...into our sea....(JCB No: TN 69AY-3752) News Id-9926

Another side the same DCW inviting us for meeting ...

What a drama????

Jahir Hussain VENA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [15 January 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25051

அஸ்ஸலாமு அலைக்கும்.

நல்லதோர் ஏற்பாடு தான் ......நாம் ஒற்றுமையாகவே இருந்து இந்த நாசமா போன >>>>DCW <<<< தொழிற்சாலையை எதிர்த்து போராடி வருகின்ற இந்த சூழ் நிலைமைகளில் ....இந்த கூட்டத்துக்கு நம் ஊர் அனைத்து பகுதி & தரப்பு பொது மக்களால் அமோகமான முழு ஆதரவோடு தேர்வு செய்ய பட்ட நம் நகர் மன்ற தலைவி அவர்களை அழைக்காதது மாபெரும் தவறான செயல் அல்லவா ......இப்படி நாம் இந்த >>DCW << தொழிற்சாலையை முழுமையாக எதிர்த்து போராடி வரும் இந்த சமையம் நம் ஊர் பெரிய தலைவர்களுக்கும் சரி / மற்றவர்களுக்கும் சரி ....இது தப்பு என்று பட வில்லையா.....இந்த போராட்டத்தில் நம் ஒற்றுமை தான் நம் ....நாடி துடிப்பாகவே இருக்கவேணுமே தவிர .....வெறுப்பும் / பொறாமையும் அல்ல .....

>>DCW << வை எதிர்க்கிற இந்த போராட்டத்துக்கு நம் நகர் மன்ற தலைவி அவர்கள் KEPA அமைப்போடு முழுமையாகவே ஒத்துழைத்தார்கள் என்பது நம் ஊர் மக்கள் அனைவர்களும் நன்கு அறிவார்கள் ......

நம் நகர் மன்ற உறுப்பினர்கள் அவர்களின் பிரச்சனைகளை...... நகர் மன்றத்தில் வைத்து கொள்ளட்டும்...... DCW .....தொழிற்சாலை எதிர்ப்பு விசயத்தில் காட்ட வேண்டாம் என்றே நமக்கு தோன்றுகிறது .......

பொதுவான கருத்து >>நாம் நம்முடைய இந்த போராட்டத்தில் வெற்றி காண வேண்டும் என்றால் .....ஒன்றுமை தான் முழுக்க .....முழுக்கு ....தேவை .....இதை அறிந்து செயல் படுவது தான் .....KEPA .....அமைப்புக்கு நல்லது .....நம் ஒற்றுமை சீர் குலைந்து விட்டால் .....நமக்கு தான் முழுக்கவே பாதிப்பு.....அந்த நாசமா போன >>DCW << நம் ஊர் நிலைமை அறிந்தால் இன்னும் நம்மிடம் உள்ள பாதிப்பை அறிந்து அவன் வேறு விதமாக ''தன் காயை ' '' நகர்த்தி விட கூடும்........ஆதலால் >>KEPA <<அமைப்பின் முழு கவனமும் ஒற்றுமையின் பக்கமே இருக்கவேணும் .....

ஒற்றுமையின் அவசியத்தை அறிந்து செயல் படுவது தான் சால .....சிறந்தது .......

நமது .....KEPA .....அமைப்பின் வேகமான இந்த நல்லதோர் செயல் பாட்டுக்கு இந்த பிரிவினை நல்லது அல்ல..... என்றே நமக்கு தோன்றுகிறது .....

இன்ஷா அல்லாஹ் ....வருகின்ற அடுத்த கூட்டங்களில் தவறாது நம் ஊர் எல்லா பகுதி / அனைத்து மக்களாலும் ஒரு மனதாக தேர்வு செய்ய பட்ட ஒரு நகர் மன்ற தலைவி அவர்களை அழைப்பது தான் இந்த நம் போராட்டத்துக்கு நல்லதும் + நம்மை வெற்றியின் பக்கம் அழைத்து செல்லும் .....நம் போராட்ட வீரியத்தை '' ஈகோ''என்கிற .....படிவத்தால் சீர் குழைக்காதீர்கள்....இது தான் எம் தாழ்வான வேண்டு கோள்...... இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த அமைப்பினர்கள் ....தலைவிக்கு அழைப்பு கொடுத்தும் ....தலைவி அவர்கள் வர வில்லை என்றால் .... வன்மையாகவே .....கண்டிக்க தக்கது தான் .......

.... KEPA .....அமைப்பினர்கள் ....DCW ....போராட்ட விசையமாக அழைத்த போதெல்லாம் சென்று உறு துணையாகவே முன் இருந்தார்கள் என்பதும் நாம் யாவர்களும் அறிந்ததே .......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Setback 4 DCW & its well wishers !
posted by Salai Mohamed Mohideen (Dallas) [16 January 2013]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 25053

DCW நிறுவனம் (உண்மையான) தன்னிலை குறித்து விளக்கம் அளிக்க விரும்பினால் போராட்ட (KEPA) குழுவினரிடம் அல்லவா வந்திருக்க வேண்டும். அதை விட்டு 'கொல்லைப்புற' வழியாக நகர்மன்ற அங்கத்தினர்களை சந்தித்து, வழமைபோல் தன்னுடைய சொகுசான கெஸ்ட் ஹவுசில் 'நன்றாக' கவனித்து ... நம் போராட்டத்தை பிசு பிசுக்க வைக்க நினைத்த அந்நிறுவனத்துக்கு இச்செய்தி (தீர்மானம் 1) ஒரு சிறிய சறுக்கல் தான் (setback). அநேகமாக அடுத்த சூழ்ச்சி வலையை இடைத்தரகர்கள் (?) மூலம் பிண்ணி கொண்டிருப்பார்கள். அடுத்த அம்பு யாரென்று பார்க்கலாம்.

நகரமன்ற அங்கத்தினர்கள் - உறுப்பினர்களிடம், பொது மக்களின் எதிர்பார்ப்பு... நகரமன்ற கூட்டங்களை ஒற்றுமையாக ஒழுங்காக நடக்க விடுவது மற்றும் வார்டு/ஊர் மக்களுக்கு தன் கடமை செய்வது. அதுவே நமது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மை. எவ்விடயத்தில் நமக்கு போதிய ஞானம் இல்லையோ அதனை அது சம்பந்த பட்ட அல்லது அதற்க்காக பல ஆதாரங்களை (சோதனை மூலம்) திரட்டி வரும் அமைப்பினரிடம் / குழுவினரிடம் விட்டு விடுவது அல்லது அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது தான் எல்லோருக்கும் நல்லது.

இவ்வளவு நாள் கழித்து ( போராட்டம் வீரியம் கண்டுள்ளதை அறிந்து ) 9 நபர்களை கொண்ட குழுவாக செயல் பட சொல்லுவது சற்று வியப்பான (?) தீர்மானமாக உள்ளது. இருப்பினும் இது கேப்பாவின் கரத்தை நமது மக்களின் போராட்ட வீரியத்தை வலுபடுத்துமென்றால் நல்லது ஏனென்றால் இது ஒன்றும் அரசியல் - தனிநபர் ஈகோ கூத்துக்களை கருத்து வேற்றுமைகளை பறைசாற்றுவதட்கான அல்லது நகரமன்ற குழாயடி சண்டைகளை நடத்துவதட்க்கான களம் அல்ல.

இது நமதூரின் வாழ்வாதார பிரச்சனை. ஒருவேளை, இப்போராட்டத்தை வலிமையாக பன்முக (multi-dimensional) முனைப்புடன் போராடி வரும் நம் KEPA குழுவினரை எப்படியாவது வலிமை இழக்க செய்து விடலாம் அல்லது 'பாலிட்டிக்ஸ்' பண்ணி எல்லோரையும் குழப்பி நம் ஒற்றுமையை சிதைத்து இப்பிரச்சனையை திசை திருப்பி (DCW வுக்கு சாதகமாக மாற்றி) விடலாம் என்று எவரேனும் எண்ணினால் (மனப்பால் குடித்தால்) . . . அது வெறும் பகல் கனவாகவே இருக்கும். காலங்கள் மாறிவிட்டது... பொது மக்ககள் அதற்க்கு தக்க பதிலடி தருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

ஒட்டுமொத்த ஊர் மக்களும் இப்பிரச்சனையை மிக கவனிப்பாக அவதானித்து கொண்டிருகின்றார்கள் என்பதனை மனதில் கொண்டு ஒற்றுமையுடன் நாம் ஒன்று திரள்வோம் இக்கொடிய அரக்கனை ஊரை விட்டே விரட்டுவோம்.

நாளைய விடியல் நமது மக்களுக்கு இனிய விடியலாக & நம் ஒற்றுமையை பறைசாற்றட்டும் !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by shaik abbas faisal (kayalpatnam) [16 January 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25056

சகோதரர் ரிபாய் அவர்களுக்கு வேறு வலி இல்லாமல் கூட்டத்திற்கு சென்ற kepa அங்கு வாசிக்கப்பட்ட தீர்மானத்தை எதற்காக தக்பீர் முழக்கத்துடன் ஏற்றுக்கொண்டது,அங்கு தங்கள் கருத்தை சொல்லி 9 பேர் கொண்ட குழு அமைப்பதில் தங்களுக்கு ஈடுபாடு இல்லை என்று மறுத்திருக்கலாமே அப்படி மறுப்பு தெரிவித்ததாக செய்தி வரவில்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved