Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:55:39 PM
சனி | 27 ஜுலை 2024 | துல்ஹஜ் 1822, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4912:2903:5206:4508:00
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:37
மறைவு18:39மறைவு11:26
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:2005:46
உச்சி
12:24
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
19:0219:2819:54
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10294
#KOTW10294
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 26, 2013
காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம்! பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு!! தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப் படாமலேயே கூட்டம் நிறைவுற்றது!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4010 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (20) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்ற (பிப்ரவரி மாத) சாதாரண கூட்டத்தில், பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த காரணத்தால், தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் நிறைவுற்றது. விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் நகர்மன்ற சாதாரண கூட்டம் 26.02.2013 செவ்வாய்க்கிழமையன்று (இன்று) காலை 11.20 மணியளவில், நகர்மன்றக் கூட்டரங்கில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில்,
02ஆவது வார்டு உறுப்பினர் முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பி.எம்.எஸ்.சாரா உம்மாள்,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,
07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,

08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டி.பீவி ஃபாத்திமா என்ற பெத்தாதாய்,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன்,
12ஆவது வார்டு உறுப்பினர் ரெங்கநாதன் என்ற சுகு,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,

15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாப்தீன்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர் கலந்துகொண்டனர். துவக்கமாக, கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் கைச்சான்று பெறப்பட்டது.

இக்கூட்டத்தில், பின்வருமாறு கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது:-











துவக்கமாக, கூட்டம் துவங்குவதாகவும், அனைவரும் ஒத்துழைக்குமாறும் நகர்மன்றத் தலைவர் கேட்டுக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து, கூட்டப்பொருட்கள் வாசிக்க ஆயத்தமான நேரத்தில், காயல்பட்டினம் நகராட்சியின் 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் எழுந்து பேசினார்.



தலைவி அவர்கள் எங்கள் அத்தனை கவுன்சிலர்கள் மீதும் சி.எம்.ஏ. அலுவலகத்தில் கம்ப்ளெய்ன்ட் பண்ணியிருக்காங்க... அதன் மீது நடவடிக்கையும் கோரியிருக்கிறாங்க... இத்தனை காலமாக பலமுறை ஒத்துழைப்பு கொடுத்தும் எந்தப் பணியும் நடைபெறவில்லை... பலமுறை ஆலோசனைகளை அவர்களிடம் சொன்னோம்... கேட்கவேயில்லை...

இன்னும் மூன்றரை வருடங்கள் உள்ளன... இப்படியே இருந்தால் இந்த ஊருக்கு ஒன்றுமே நடக்காது! நாங்கள் மக்கள் சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறோம்... அவர்கள் தனியாக ஈடுபடுகிறார்கள்... எங்கள் மீது அவர்கள் கொடுத்த கம்ப்ளெய்ண்ட் அடிப்படையில் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும்! உங்கள் மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம்... அதனால், இனிமேல் உங்கள் தலைமையில் கூட்டம் நடத்துவதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறி வெளிநடப்பு செய்கிறோம்...


இவ்வாறு, எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் பேசி முடிக்க, 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீனைத் தவிர மற்ற அனைத்து உறுப்பினர்களும் கூட்டரங்கை விட்டும் வெளியேறிச் சென்றனர்.





இதனையடுத்து, தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், தம்மாம் காயல் நற்பணி மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை துணைத்தலைவர் எஸ்.அப்துல் வாஹித் உட்பட சுமார் 20 பேர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.



கூட்ட நிகழ்வுகளின் அசைபட (வீடியோ) காட்சியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Waste of Time
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [26 February 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 25746

Come out of Narrow minded Circle and start to think with broad mind will help and fetch the better yield.

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று.

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by azath jawahar (kayalpatnam) [26 February 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 25748

என்னமோ நீங்களும் சொல்லறீங்க நாங்களும் நம்புறோம் அந்த புகார் கொடுத்த நகலை வாங்கி காமிச்சி இருக்காலாம் நல்ல இருந்து இருக்கும் ................... தலைவி என்ன சொல்ல போறாங்க? ஏற்கனவே அனகே தீர்மானங்கள் நிறைவேறாமல் இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு தலைவியும் தலைவி மட்டும் இல்லை உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. தனக்கு தனக்குன்னா படக்கு படக்குன்னு வருதா?
posted by kavimagan m.s.abdul kader (qatar) [26 February 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25750

அல்லும் பகலும் சமூகத்திற்காக உழைக்கும் சமூக ஊடகவியலாளர் மீது, மத வன்முறையைத் தூண்டுவதாக ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் இவர்கள் புகார் கொடுக்கலாம்.

நேர்மையுடன் கடமையாற்றும் தலைவி அவர்களைக் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கும்பலாய்ப் போய் புகார் கொடுத்து விட்டு, தலையைத் தொங்கப் போட்டு பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கலாம்.

சென்னை வரை சென்று உள்ளாட்சித் துறை அதிகாரிகளிடம் இல்லாததை பொல்லாததை எல்லாம் அள்ளி விட்டு, சென்னையை சுற்றிப் பார்த்து விட்டு, சுத்தவான்களாய் ஊர் வரலாம்.

மந்திரிகளிடம் தந்திரமாய்ப் பற்றி வைக்கலாம்.

இவர்களைப் பற்றி யாரேனும் ஏதேனும் காற்று வாக்கில் கலந்து விட்டாலே போதும்... பொசுக்கென ரோஷம் வந்து விடுகிறது.

இவர்களின் இத்தனை புகார்களையும் தலைவி அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இவர்களோ பதைக்கிறார்கள். பதறிப் போய் வெளிநடப்பும் செய்கிறார்கள். மடியில் கனமில்லை எனில் வழியில் பயம் எதற்கு?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Cnash (Makkah) [26 February 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 25752

WELL DONE !! KEEP GOING!!

இன்னும் மூன்றரை வருங்கள் உள்ளன... இப்படியே இருந்தால் இந்த ஊருக்கு ஒன்றுமே நடக்காது! நாங்கள் மக்கள் சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறோம்...

THESE WORDS TO BE ENGRAVED IN THE INSCRIPTION OF OUR MUNICIPAL OFFICE.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by முத்துவாப்பா.... (al khobar) [26 February 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25755

நாற்காலிகளும் காலி ....
நாங்களும் காலி - உங்களை தேர்தேடுத்ததினால்

தலைவின் தலைவலி என்று தீருமோ ....
காயலின் தலைவிதி என்று மாறுமோ .....

நலத்திட்டங்கள் என்று வரும் என்று நாங்கல் ஏங்க...
உங்கள் திட்டம் பலிக்கவில்லை என்று நீங்கள் புலம்ப ...

இன்னும் மூன்றரை வருடங்கள் தான் உள்ளனவாம் .
அதன் பின்னாவது நீங்குமா காயலின் ஏழரை ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Kader K.M (Dubai) [26 February 2013]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25758

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்!
வருந்தாத உள்ளங்கள் வாழ்ந்தென்ன லாபம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) [26 February 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25769

தலைவி மீது உங்களுக்கு நமபிக்கையில்லை. உங்களை தேர்ந்தெடுத்து அனுப்பிய ஊர் மக்களாகிய எங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கையில்லை.

ஒரு தடவை கோவிச்சுக்கிட்டா மரியாதை இருக்கும். இப்படி அடிக்கடி கோவிச்சிக்கிட்டா அதுக்கு எந்த ரெஸ்பெக்டும் இருக்காது.

எனவே இப்படி தற்காலிகமாக வெளி நடப்பு செய்து படம் காட்டாமல் நிரந்தரமாக நீங்கள் அனைவரும் நகர்மன்ற இருக்கைகளை காலி செய்து விட்டால் நன்றாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. புடவையை......... .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [26 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25771

ஒரு பெண்ணின் புகாருக்கு பயந்துகொண்டு...... சாரி மேலும் எழுத நேரம் இல்லை போத்திஸ் புடவை, புடவை கடையிலிருந்து கூப்பிடுகிறார் ஒருவர்.

அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

முஹம்மது ஆதம் சுல்தான்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. பொருத்தமான சில பழமொழிகள் ...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [26 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25773

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.

ஒரு பொய்யைத் திருபத் திரும்ப கூறினால் அது உண்மையாகும். மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மழை விட்டாலும் தூவானம் விடாது போல.

தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியும்.

சீப்பை ஒளித்து வைத்தால் திருமணம் நின்று விடுமா?

மஞ்சள் கண்ணாடி போட்டு பார்த்தால் காண்பதெல்லாம் மஞ்சள் நிறம்.

ஏட்டி எறிந்த வரையில் தான் பாயும். பணம் பாதாளம் வரை பாயும்.

தனக்கு இரண்டு கண்கள் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு ஒரு கண்னாவது போகணும். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆயிரம் பழமொழிகளை! அனைத்தும் நம் நகர் மன்றத்திற்குப் பொருந்தும்.

-ராபியா மணாளன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...அடுத்த ஸீன் என்ன?
posted by mackie noohuthambi (kayalpatnam) [26 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25774

சினிமா பார்க்கும்போது ஒரு பரப்பான காட்சி வரும். அடுத்த ஸீன் என்ன என்று சாய்ந்திருப்பவர்கள் ஒரு சிலிர்ப்புடன் சேர் நுனியில் அமர்ந்து எதிர்பார்த்து காத்திருப்பார்கள். சில சமயம் விறுவிறுப்பாகவும் இருக்கும், சில சமயம் சோர்ந்து போகும் காட்சியாகவும் இருக்கும். அதே போல் நகர் மன்றம் ஆகிவிட்டது.

தலைவிக்கு உறுப்பினர்கள் மீது நம்பிக்கை இல்லை. உறுப்பினர்களுக்கு தலைவி மீது நம்பிக்கை இல்லை. இதற்கிடையில் தலைவி அவர்கள் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொள்வதாக நேற்று முன்தினம் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு மூன்றாவது சக்தி தன்னை அச்சுறுத்துவது போன்றும் பேசி இருக்கிறார்கள்.

125 ஆண்டு பாரம்பரியம் மிக்க நகரமன்றத்தின் souvenir வெளியிட வேண்டியவர்கள் இப்படி மன்றத்தை சீரழித்து கொண்டிருக்கிறார்களே என்று மக்கள் வேதனை படுகிறார்கள். லஞ்சம் வாங்காத தலைவிக்கு தலை இடி கொடுக்கிறார்கள் என்று ஒரு சாராரும், உறுப்பினர்களை தலைவி மதிப்பதில்லை, அவர்களுடன் ஆலோசனை செய்வதில்லை, தான்தோன்றித்தனமாக நடக்கிறார் என்று எதிர் சாராரும் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொண்டு இருந்தால், அங்கே வருகின்ற தண்ணீர் வசூல் பணம், வீட்டு வரி வசூல் பணம். dcw தரும் பணம், அரசு தரும் பணம் இந்த வருவாய் பணம் இலட்சக்கணக்கில் வருகிறதே, எரிகிற வீட்டில் கிடைக்கிறது மிச்சம் என்று, இந்த பணங்களை யாரும் சுருட்டிக் கொண்டு போய் விடுவாகளோ என்று பயமாக இருக்கிறது.

அதிகாரிகள் மட்டத்தில் நிறைய ஊழல்கள் கையாடல்கள் நடப்பதை தினசரி பத்திரிக்கைகளில் படிக்கிறோம். சென்ற ஆட்சியில் அப்படி ஒரு செக் மோசடி நடந்ததாக கேள்விப் பட்டேன். இது ஒரு சிறிய ஊர். கேட்கவா வேண்டும்.

நிலைமை கைமீறி போகுமுன் நடுநிலையாளர்கள் சமூக ஆர்வலர்கள், ஊர் நன்மையில் அக்கறையுள்ளவர்கள், தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களை ஒதுக்கி வைத்து விட்டு இந்த stalemate தேக்க நிலை இனியும் நீடிக்காமல் இருக்க ஆவன செய்யுங்கள் என்று பொது மக்கள் புலம்புகிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. ஊருக்கு உழைப்பவர்கள்
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [26 February 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 25779

வீடியோ எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தடவை வெளிநடப்பு செய்த இவர்கள் இப்போது சொல்லிய காரணம் "தலைவி எங்கள் மீது complaint செய்துள்ளார்கள்" என்பது. compliant பண்ணியதற்காக வெளிநடப்பு செய்வது சரிதான் என்றிருந்தால் தலைவி யல்லவா வெளிநடப்பு செய்திருக்க வேண்டும். complaint செய்வதற்கென்றே மாவட்ட தலைநகருக்கும் மாநிலத் தலைநகருக்கும் புனித யாத்திரை மேற்கொண்டவர்கள் தலைவியா அல்லது இந்த புண்ணியவான்களா?

தேர்தலில் அடைந்த தோல்வியை "மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்று பெருந்தன்மையாக ஏற்றுகொண்டவர்கள் ஒரு வகை. தலைவிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பார்த்து ரசித்துக்கொண்டு குளிர்காய நினைப்பவர்கள் இன்னொரு வகை. நெருக்கடி ஏற்படுத்துபவர்களுக்கு ஆசிர்வாதம் கொடுப்பவர்கள் மற்றொருவகை.

நம் மக்கள் இம்மூன்று வகையினரையும் நன்கறிவார்கள்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...களைந்து போனது மக்களின் கனவு..!
posted by OMER ANAS (DOHA QATAR.) [27 February 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 25782

என்னவென்று இங்கே எங்கள் கருத்தை பதிவு செய்திட சொல்கிறீர்கள் அட்மின்...? இந்த நிலையிலும் தலைவிக்கு வெஞ்சாமரை வீச ஒரு கூட்டம். உறுப்பினர்களை நியாயப் படுத்தி புல்லாங்குழல் வீச ஒரு கூட்டம்.

இது இப்படியே போனால், உங்களை பார்த்து கா.......றி உமிழக்கூட எங்கள் நாவிழ் எச்சில் இல்லாமல் போய்விடும். கொஞ்சமாவது உங்களை தேர்ந்து எடுத்தோரை பற்றியும்,நம் ஊரின் முன்னேற்றத்தினை பற்றியும் ஒரு நாலாவது உங்களை நீங்கள் சுய பரிசோதனை செய்து சிந்தித்து இருப்பீர்களா எங்கள் சகோதர சகோதரிகளாகிய தலைவி மற்றும் உறுப்பினர்களே...? செம்மறி ஆட்டு கறியை மட்டும் தின்போறாகிய நாம் அந்த மந்தை ஆடுகள் போல் கிடைக்கு நாழு ஆடாக சென்றோமே என்றால் நமதூருக்கு யார் நல் வழி சொல்வது?

கலைந்தே போனது எங்கள் மக்களின் கனவுகள்!
காணாமல் போனதுஉங்களால் எங்களின் உறவுகள்!

புரட்சித் தலைவியோ அதிமுகவில் சேரட்டும்.
கழக உறுப்பினர்களோ தி மு கவிலேயே இருக்கட்டும்.
எங்கள் ஊரோ இவர்களால்,
உருப்படாமல் போகட்டும்!

மன வேதனையுடன்,
உமர் அனஸ்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [27 February 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25784

மக்களுக்காகவே சேவை செய்ய நாடி நகரமன்றதிற்கு வந்தவர்களை போல தெரியவில்லை வெளியேறியவர்கள். என்ன நடந்துவிட்டது? ஆபிதா அம்மையார் அரசியல் கட்சி பக்கம் இணைத்து விட்ட காரணத்தால் அதிகாரம் வலுவடையும். நம்மால் (வெளிநடப்பு செய்த உறுபினர்களை கொண்டு) ஒன்றுமே சாதிக்கவோ,மிரட்டவோ முடியாது என்று கருதி சுயநினைவு இல்லாமல், ஆசான் சொல்லுக்கு கட்டுப்பட்டு வெளியேறிய அனைத்து உறுப்பினர்கள். இந்த உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தை புறக்கணிப்பதை விட தானாகவே உறுப்பினர் பதவியை ராஜனாமா செய்ய முன்வரவேண்டும். இன்னும் சொல்லப்போனால் இந்த நகரமன்ற தலைவியை யார் எந்த தந்திரம் இட்டு கலைக்க நினைத்தாலும் ஒன்றும் நடக்காது.

நிறுவகதினர்க்கு அன்பு வேண்டுகோள்

எக்காரணம் கொண்டும் வாசகரின் ஆர்வத்தை கத்திரி போட்டு குறைக்க வேண்டாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Salai S Nawas (singapore) [27 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25785

ஊழலற்ற நகராட்சியை உருவாக்குவோம் என்று சொன்னோம் அன்று

நகராட்சி அற்ற காயலை உருவாக்குவோம் என்று சொல்கிறோம் இன்று

வாழைபழத்தை தின்று விட்டு தோலை ரோட்டில் வீசி எரிந்து, அதே தோலினால் வலிக்கி விழுந்தவனின் கதை தான் நியாபகம் வருகிறது.

வெளிநடப்பு -- நீங்கள் காயலுக்கு செய்யும் துரோகம் இல்லை உங்கள் குடும்பத்துக்குத்தான்.

- வருத்ததுடன் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. மக்களுக்கான வெளிநடப்பு அல்ல...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (KAYALPATNAM ) [27 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25794

இக்கூட்டத்தில் 11 கூட்டப் பொருட்கள் (அந்தந்த வார்டுக்கு தேவையான முக்கிய தீர்மானங்கள்) குறித்து விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் வெளிநடப்பு செய்த யாருக்காவது தனது வார்டின் மீது அக்கறை (பொறுப்பு) மனதில் இருந்து இருந்தால் இப்படி வெளிநடப்பு செய்து இருப்பார்களா...?

இந்த உறுப்பினர்களின் குற்றச்சாட்டு என்ன.. அதை நாம் முதலில் அறிந்து கொள்வோம்...! உங்களின் (உறுப்பினர்கள்) மீது மேலிடத்தில் புகார் தெரிவித்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்... அந்த புகாருக்கும் உங்கள் வார்டுக்குரிய நல திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்...? சொல்லுங்கள் சகோதரர்களே...!

இந்த புகாரானது உங்களின் தனிப்பட்ட சுய சந்திப்பு - புகாரை எதிர்கொள்வது... இதற்கு முன் தலைவிக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் - மாநில தலைமை நகராட்சி துறைகளில் உறுப்பினர்களாகிய நீங்கள் புகார் கொடுக்கவில்லையா என்னா...? அவர் அதை (தலைவி) எதிர்கொள்ளவில்லையா என்ன..? அவரை போல நீங்கள் அந்த புகாரை சந்திக்க வேண்டியதுதானே...? அதுதானே முறையாக இருக்கும்... அதை விட்டு விட்டு மக்களின் நல திட்டத்தை நிறைவேற்றாமல் நீங்கள் நகர் மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா இது..!

ஆக மொத்தத்தில் வெளி நடப்பு செய்த உறுப்பினர்கள் அனைவர்களும் சின்ன மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதை தான் எனது நினைவிற்க்கு வருகிறது...!

நகராட்சிக்கு வரி செலுத்தி வரும் நகர் மக்கள் யாவரும் உங்கள் வெளிநடப்பை ஆதரிக்கவில்லை... இந்த வெளி நடப்பு உங்களின் தனிப்பட்ட விருப்பத்தின் முடிவு... உங்கள் வார்டு தேவைக்காக (நல்ல திட்டத்திற்காக) மக்களுக்காக அல்ல...

Moderator: செய்திக்குத் தொடர்புற்ற வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. நகராட்சியும் & பொதுமக்களும் !!
posted by Salai. Mohamed Mohideen (Dallas) [27 February 2013]
IP: 173.*.*.* United States | Comment Reference Number: 25795

ஒன்றை வருட "சாதனை" அல்லது நகராட்சியில் நடந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க "மாற்றம்" என்னவென்றால்... 'ஓரிருவராக' இருந்த எதிர்ப்பாளர்கள் அணி நன்றாக 'டெவலப்' ஆகியுள்ளது. நல்லதொரு டீம் டெவலப்மன்ட்! நன்மையான காரியங்களுக்கு ஆள் சேர்ப்பது ( டீம் ) மட்டும் "தண்ணி வாங்குது". பொதுவாக, பதவி & பணத்தாசை யாரை தான் விட்டு வைத்தது. இருப்பவர்கள் இல்லாதவர்கள் என பலரும் ஒரு கட்டத்தில் இவைகளுக்கு பலிகடா ஆக வேண்டிய நிர்பந்தம்... காலத்தின் கொடுமையே !!

"மக்கள் சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறோம்" என்று மார்தட்டுபவர்கள் (அது தலைவியாக அல்லது உறுப்பினர்களாகவே இருக்கட்டும்) தொடர் வெளிநடப்பு செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து அனுசரித்து போய் கொண்டிருப்பார்கள்!

வெளிநாடுகளில் வசிக்கும் ஒவ்வொரு ஆன்மாவும், நமதூர் எப்படியாவது முன்னேறிவிடாதா... நம் மக்கள் முன்னேறிட விடமாட்டார்களா என்று காயல் நல மன்றங்களை தோற்றுவித்து அனுதினமும் கவலைப்பட்டு கொண்டும், பாலைவனத்தில் அல்லது ஏதோ ஒரு வெளிநாட்டில் தான் கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி ஈட்டிய பணத்தை 'சந்தாவாக' (கல்வி மருத்துவம் சிறுதொழில் போன்றவைகளுக்கு) வழங்கியும் & தன் பொன்னான விடுமுறை நேரத்தை கூட நமதூர் மக்களுக்காக தியாகமும் பண்ணி வருகின்றார்கள்.

ஒரு கூட்டம் (முன்னேற்றத்தை நோக்கி) இப்படியென்றால் ... இன்னொரு கூட்டம் "ஈகோவுடனும் சுயநலத்துடனும்" நமதூரை பின்னோக்கிய பாதையில் செலுத்தி கொண்டிருக்கின்றார்கள் என்று நினைக்கும்போது வேதனைதான் மிஞ்சுகின்றது. நகர்மன்றத்தினரே சற்று சிந்தித்து செயல்படுங்கள் !!

காயலர்கள் இல்லாத துறையும் & கால் படாத தேசமும் இல்லை. காலம் காலமாக வியாபாரத்திலும் & நவீனயுகத்தில் தொழில் நுட்பத்திலும் ஒரு திறமையான சமுதாயமாக விளங்கும் நமதூருக்கு ஏன் இப்படி பட்ட ஒரு அவலம்????? என்று இவைகள் துடைத்தெறியபடும் ????

ஒன்றரை வருடமும் உருண்டோடிவிட்டது. வெளிநடப்புகளும், ஈகோ & நகராட்சியை நகர விடாத கூத்துக்களும் நமக்கு கூட பழகி போய்விட்டது. எதிரியின் எதிரி நண்பன் என்றும், கொள்கை, வட்டாரம், ஆளும்/அதிகாரவர்க்கம் என்ற பல வறட்டு விடிவாதங்களை என்றைக்கு மூட்டை கட்ட போகின்றோம்??? ஊர் விடயங்களில் இவைகளையெல்லாம் புறந்தள்ளி விட்டு பொதுநலத்துடன் என்றைக்கு "களம்" காணுகின்றோமோ & பொதுமக்களாகிய நாம் தட்டி கேட்கின்றோமோ அன்றைக்குத்தான் இது போன்ற வெளிநடப்புகளும் நகராட்சி அவலங்களும் ஒரு முடிவுக்கு வரும்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மக்களின் மனநிலை
posted by S.A.Muhammad Ali Velli (Dubai) [27 February 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25799

இந்த செய்தியை படிக்கும் போது எனக்கு இந்த கதை தான் ஞாபகம் வருகிறது.

-----------------------------------

பஸ்ஸில் இரண்டு பெண்கள் சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்...

ஒருத்தி ஜன்னலை மூட சொல்லி, இன்னொருத்தி ஜன்னலை திறக்க சொல்லி...

ஏனென்றால் காற்று இருந்தால் மூச்சு திணறி செத்து விடுவேன் என்றும், காற்று இல்லையென்றால் மூச்சு திக்கி செத்து விடுவேன் என்றும் பஞ்சாயத்து...

கூட்டத்தில் இருந்த பெரியவர் கண்டக்டரிடம் சொன்னார். முதலில் ஜன்னலை மூடுங்கள் ஒருத்தி செத்து விடுவாள். அப்புறமா ஜன்னலை திறங்கள் இன்னொருத்தியும் செத்து விடுவாள். பிரச்சினை சால்வ்டு...!

சண்டையை எப்படி நிறுத்துவது என்று மூச்சு திணற யோசித்துக் கொண்டிருந்த கண்டக்டருக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

எப்படி அய்யா இது மாதிரி ஒரு யோசனை உங்களுக்கு வந்தது என்று அந்த பெரியவரிடம் கேட்க..

பெரியவர் கூறினார்:

அந்த ரெண்டு பேரோட புருஷன் நான் தான்...!

------------------------------------

இந்த கதையில் உள்ள புருசனின் நிலையில் தான் நம் ஊர் மக்கள் இருக்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மன்றம் கலைக்க படுமா?,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [27 February 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 25804

நகரமன்றத்தின் இந்த மாத கூட்டம் தொடக்க சம்பிரதாயங்கள் முடிஞ்சதோட கூட்டம் முடிஞ்சி எல்லோரும் வெளியே போயாச்சி, இன்னும் இந்த கண்ணாமுச்சி ஆட்டம் முடியலங்க?முஸ்லீம் லீக் முயற்சியில் இரண்டு அணியினரையும் அழைத்து ஒரு புரிதல் கூட்டம் KMT மருத்துவமனையில் நடந்தது.

அதன் மூலம் சற்று பிரச்சனை தணிந்து வந்து நம் ஊருக்கு தேவையான அவசியமான தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது மக்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனால் இப்பொழுது மீண்டும் குழப்பம் ஆரம்பிச்சிடுச்சி, உறுப்பினர்களுக்கு நகரமன்ற தலைவியை பிடிக்கல, தலைவிக்கு உறுப்பினர்களை பிடிக்கல, இதில ஒரு முக்கிய விஷயம் என்ன தெரிமா? மக்களுக்கு உங்க ரெண்டு பேரையும் பிடிக்கல?

எந்த பகுதியிலும் நடைபெறாத அளவுக்கு வோட்டு போட்டு உங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு மிகுந்த சோதனை காலம் ,மக்கள் பணி முடங்கி போகும் அபாயம் உள்ளது. இன்னும் மூன்று அரை வருடங்கள் எப்படின்ன? இப்பமே தலை சுற்றுகிறது.

எனவே பெரும்பான்மையான மக்கள் நிலைப்பாடு எதுவாக இருக்கும் நினைக்குறீங்க? தமிழக அரசு இந்த மன்றத்தை கலைத்து புதிய தேர்தலோ அல்லது அதிகாரிகளை கொண்டு மீதமுல்ல ஆண்டுகளை அரசு செயல்படுத்த வேண்டும். இதை தவிர நகர்மன்றம் ஆரோக்கியமாக மக்கள் பணியாற்ற வேறு எந்த வழியும் இருப்பதாக தெரியல.

YOURS,
NIZAR,
DEEVU STREET,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. முஸ்லீம் லீக் முயற்சியில் கூட்டப்பட்ட புரிதல் கூட்டம் அல்ல...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [27 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25823

முஸ்லீம் லீக் முயற்சியில் இரண்டு அணியினரையும் அழைத்து ஒரு புரிதல் கூட்டம் KMT மருத்துவமனையில் நடந்தது... இந்த பதிவிற்க்கு சகோதரர் நிசார் அவர்கள் தெளிவு பெற சில விளக்கம்.. முஸ்லீம் லீக் முயற்சியில் கூட்டப்பட்ட புரிதல் கூட்டம் அல்ல... ஊர் பெரியவர்களில் சிலரால் கூட்ட பட்ட புரிதல் கூட்டம் என்பதை சகோதரர் நிசார் இந்த உண்மையை விளங்கி கொள்வது சிறந்தது...!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. உத்தம புத்திரன்...
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [28 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25868

சுமார் ஒன்னரை ஆண்டுகள் நடைபெற்ற நகர்மன்றத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கெடுத்து இதுவரை வெளிநடப்பு செய்யாத உத்தமன், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் அவர்களைப் பராட்டி பொது மக்கள் சார்பில் கேடயம்மும், சான்றிதழும் வழங்க வேண்டும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இதுதான் கதியோ...? (?!)  (27/2/2013) [Views - 3073; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved