Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:55:47 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10412
#KOTW10412
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 11, 2013
ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு! நெய்னார் தெரு சாலை தோண்டி ஆய்வு செய்தனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3157 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் முறையீட்டையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் காயல்பட்டினம் சாலைப் பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள், நெய்னார் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலையைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

காயல்பட்டினம் ஆஸாத் தெரு, நெய்னார் தெரு, அப்பா பள்ளித் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் முறைப்படி நடைபெறாததை சுட்டிக்காட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை சார்பில், 04.02.2013 திங்கட்கிழமையன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக முறையீட்டு மனு அளிக்கப்பட்டது.

மேற்படி பணிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து, 26.02.2013 அன்று, நகராட்சி நிர்வாக மண்டல மேலாளர் மோகன் தலைமையில் குழுவினர் காயல்பட்டினம் வருகை தந்து, சாலைப் பணிகளைப் பார்வையிட்டுச் சென்றனர்.



அதன் தொடர்ச்சியாக, 07.03.2013 வியாழக்கிழமையன்று நண்பகல் 12.00 மணியளவில், ஊரக வளர்ச்சித் துறை உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் காயல்பட்டினம் வருகை தந்து, முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காயல்பட்டினம் நெய்னார் தெரு, ஆஸாத் தெரு, அப்பா பள்ளித் தெரு ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.



அதன் தொடர்ச்சியாக, 08.3.2013 அன்று மாலை 04.00 மணியளவில் மீண்டும் காயல்பட்டினம் வருகை தந்த அவர்கள், ஓரளவுக்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ள நெய்னார் தெருவில், சாலையின் சில பகுதிகளில் பள்ளம் தோண்டி ஆய்வு செய்தனர்.











புதிய சாலைக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தை அளந்து, அதன் ஒவ்வோர் அடுக்கிலும் நிரப்பப்பட்ட பொருட்களின் அளவு, தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து சென்றனர்.











காயல்பட்டினம் நகராட்சி பணி மேற்பார்வையாளர் செல்வமணி, திட்ட உதவி அலுவலர் செந்தில், ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செயலாளர் கே.எம்.டி.சுலைமான், பொருளாளர் எம்.எல்.ஹாரூன் ரஷீத் உள்ளிட்டோர் இவ்வாய்வின்போது உடனிருந்தனர்.


இவ்வாறு, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் கிளை செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.

படங்கள்:
K.M.T.சுலைமான்
மற்றும்
M.L.ஹாரூன் ரஷீத்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நோண்டி நொங்கெடுத்துப்புடும்ங்கோய்...!
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [11 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26203

முன்பெல்லாம் எதோ ரோடுன்னு ஒன்னைப் போடுவாங்க அதுவும் ஒரு மழையோடு கரைஞ்சு காணாமல் போயிடும். அளவு எவ்வளவு? கலவை எவ்வளவுன்னு? யாருக்கும் ஒரு ஈரமண்ணும் தெரியாது! இப்ப மக்கள் விழிப்போடு இருக்கிறதாலெ போடுற இடத்தையெல்லாம் தோண்டிப் பார்த்து போட்டவங்களை ரோட்டுலெ விட்டறாங்க!

இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா முடிஞ்சதும் நம்ம நகர்மன்ற உருப்பினர் ஒருவர்,“ ஆமா காண்ட்ராக்டர் எந்த வார்டுலெ ரோட்டைப் போட்டாலும் நோண்டிப்பார்க்க அதிகாரிகளை கூப்பிட்டு வந்து அளந்து பார்க்கிறானுங்க இதனாலெதான் ஒருத்தனும் காண்ட்ராக்ட் எடுக்க வரவே மாட்டெங்கிறாங்க. நெட்டு (இணையதளம்ன்னு) இருந்தா ஊருக்கு நல்லதை செய்யனும் இப்படி எல்லாத்தையும் படம்பிடிச்சு போட்டா ஊருக்கு ஒரு நல்லது நடக்காது! நடக்கவும் விடமாட்டாங்க”, என ஆவேசமாக கொந்தளித்து பேசியது எனக்கு வியப்பாகவும், விநோதமாகவும் இருந்தது.

அண்ணாச்சி அந்தக்காலமெல்லாம் மலையேறிப் போயிடுச்சு! நகர்மன்றத்துக்கு வந்தா கைநிறைய அள்ளிக்கொண்டு போகலாம்ங்க காலம்! இப்ப ரோட்டை தோண்டுற ஈரமண்ணு கூட உங்களுக்கு கிடைக்காது.

-ராபியா மணாளன்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஆப்பு தயாராகுது...?
posted by M.S.ABDULAZEEZ (Gz) [11 March 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 26204

எல்லாத்தையும் நோண்டி நோண்டி ஆராய்ச்சி பன்னிருவன் இப்படி ஒரு சொல்வழக்கு காயலுக்கு உண்டு . ஒரு வேல இதானா...? அது...? சூப்பர்.... இந்த முயற்சிக்கு உழைத்த ஊழல் எதிர்ப்பு இயக்கம், மாவட்ட ஆட்சியர், சாலைப் பணி அதிகாரிகள், அனைவர்க்கும் மனம் மார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...தப்ப முடியாது
posted by mackie noohuthambi (kayalpatnam) [11 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26205

கதையல்ல நிஜம். காலம் காலமாக இன்னும் சொல்லப் போனால் பாவலர் அப்பா காலத்திலிருந்து ரோடு போடும் விஷயம் இப்படிதான் நடந்து வருகிறது.

நாங்கள் YUF சங்கத்தில் இருப்போம். அப்பா வந்து அடே ஒழுங்கா ரோடு போடுறானா என்று பாருங்கள் என்று சொல்வார்கள். நம் கண்ணில் மண்ணை தூவிவிட்டு ரோடு போடுகிறவர்கள் எவ்வளவு தவறு செய்தாலும் அதற்காக நியமிக்கப் பட்ட இஞ்சினியர்கள் மனசு வைத்தால் நமது பப்பு வேகாது.

ஆனால் இந்த காலம். நமது இளைஞர்கள் இணையதளங்களை கையில் வைத்துக்கொண்டு கண்களை என்னை ஊற்றிக்கொண்டு இந்த மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்கள். அவர்களை பாரட்டுவதுமட்டுமல்ல அவர்கள் முயற்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் கொடுக்க வேண்டும்.

எதனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
சொந்த நாட்டிலே நம் நாட்டிலே

சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம்பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி.... அடேயப்பா 50 வருஷத்துக்கு முன் கேட்ட பாட்டு...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மக்கள் வரி பணம் மக்களுக்காவே ...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26206

அட்மின் அவர்கள் கவனத்திற்கு... அதன் தொடர்ச்சியாக, 08.30.2013 அன்று என்பதை 08-03-2013 என்று மாற்றி அமைக்கவும்...

மக்கள் வரி பணம் மக்களுக்காவே சரியாக செலவிட படவேண்டும்...

மக்கள் விழிப்புடன் இருக்கும் வரை இது தொடரும்...

Administrator: Corrected. Thanks


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எங்கள் வார்டுக்கும் வாருங்கள்... உங்களின் ஒத்துழைப்பு வேண்டும்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [12 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26217

அன்பான சகோதரர்களே... இது போன்று எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெறும் போதும் என் பகுதி மக்களும் - சென்னை ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகளும் பங்கெடுத்து ஆய்வு செய்ய கேட்டுக்கொள்கிறேன்... தனி ஆளாக நான் அனைத்தையும் (சாலைகளை) சரி பார்க்க முடியாது உங்களின் கூட்டு பங்களிப்பை (ஒத்துழைப்பை) எதிர்பார்க்கிறேன்...

வெளிப்படை ஆய்வே சிறந்தது...

என்றும் உங்கள் ஒத்தழைப்பை நாடும்...
13வது வார்டு உறுப்பினர்..

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by salai s nawas (singapore) [12 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26218

KMT சுலைமான் காக்கா மற்றும் நண்பன் ஹரூன் ரஷீத், உங்கள் சேவை செழிக்கட்டும். உங்களுக்கும் நன்மை பெருகட்டும்.

இவ்வளவு விழிப்புணர்வு ஊட்டிய செயல் kayalpatnam .com அவர்களை சேரும் என்பதை யாரும் மறுக்க முடியாது.

தொடரட்டும் உங்கள் சேவை.

என்றும் உங்களுடன்
மண்ணின் மைந்தன்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [12 March 2013]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26219

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அங்கத்தினர் மற்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.

ஊரில் இருந்துக்கொண்டு வெட்டியாக சுத்துவதை விட்டுவிட்டு, ஊருக்கு ஏதாவது ஒரு நன்மை செய்து விடமாட்டோமா என்று ஏங்கிக்கொண்டு இருக்கும் நல்லவர்களை மீண்டும் பாராட்டி நினைவுகொள்ளுகிறோம்.

நம்மையும், நம் செய்கைகளையும் கண்கானிக்கின்றார்கள் என்றாலே தவறுகள் குறையும்.

தவறுகள் குறையட்டும், தரமான வேலைகள் நடைபெறட்டும், ஒற்றுமை ஓங்கட்டும், வளமான வாழ்வு நம் மக்களுக்கு கிட்டட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [12 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26231

ரோடு ரோடாகிவிடும். முந்தைய நகரமன்றத்தில் ரோடு ஒப்பந்தகரரை,பகுதி வார்டு உறுப்பினர் ஏதிர்பார்த்த வண்ணம்மகவே இருந்து குண்டும் குழியும்மாக பலநாள் ரோடு கிடப்பில் இருக்கும்.

இன்றைய ஆபிதா அம்மையார், நகரமன்ற பொறுப்பு ஏற்றதும் ஊர்மக்களே விழிப்புனர்வோடு செயல்பட்டு வருவதை கண்டு பொறும் மகிழ்ச்சி அடைகிறேன். எந்த காலத்தில் நமதூரில் அளவு கோல் கொண்டு ரோடு ஆராய்ந்த சரித்திரம் உண்டு.

இன்றைய இந்த அம்மையரரின் நிர்வாகம் மக்களை விளிப்புரர்வோடு இருக்க ஒரு முன்மாதிரி நிர்வகம்மகவே திகழ்கிறது. நாளைய சரித்திரம் சொல்லும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. சென்னை ஊழல் எதிர்ப்பு இயக்கம் !
posted by Salai Mohamed Mohideen (Ottawa) [13 March 2013]
IP: 199.*.*.* Canada | Comment Reference Number: 26233

சென்னை ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் காயல்பட்டினம் கிளை நிர்வாகிகள் சாட்டையை நன்றாக சுழற்றுகின்றார்கள்.

தவறு செய்பவர்கள் முதுகுகள் பழுக்கட்டும். ஊழல்கள் ஒழிந்து நாடு வளம் பெறட்டும் & மக்களின் வாழ்வு மேம்படட்டும். தொடரட்டும் உங்களின் பணி!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved