Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:29:35 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10419
#KOTW10419
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மார்ச் 12, 2013
இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நகர்மன்றத் தலைவர் ஆற்றிய உரை தொகுப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4755 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று (10.03.2013) காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில் நடைபெற்றது.

இவ்விழாவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வரவேற்புரையாற்றினார். அவரது உரையின் தொகுப்பு வருமாறு:-



எல்லாப்புகழும் இறைவனுக்கே! வல்லோன் அவனே துணை நமக்கே!!

காயல்பட்டினம் நகராட்சி வரலாற்றிலும், காயல் மாநகர் மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பொன்னெழுத்துகளால் பொறித்து, நினைத்து நினைத்து பூரிப்படையக் கூடிய வகையிலே நமதூரின் - நமதூர் மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான இரண்டாவது குடிநீர் திட்டம் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நமது மரியாதைக்கும், பாசத்திற்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் இதோ இன்று நனவாகி நடைபெற்றுக் கொண்டிருகின்றது.

இந்த இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழா நிகழ்ச்சிக்கு தலைமையேற்று சிறப்பித்து தர வருகைதந்துள்ள - இத்திட்டத்திற்குத் தேவையான 56 சென்ட் நிலத்தை அரசின் சார்பில் வழங்கியிருக்கிற மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு இந்நேரத்தில் நம் நகர மக்கள் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...

காயல்பட்டினம் நகராட்சி இரண்டாம் குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, விழா பேருரையாற்ற வருகை தந்துள்ள - இந்நகரின் சிறப்பான இத்திட்டமானது காலதாமதமின்றி துவங்கி, சீராக நடைபெற உதவிகள் செய்த - செய்துகொண்டிருக்கின்ற மாண்புமிகு தொழிலாலர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவர்களே!

வாழ்த்துரை வழங்க வருகை தந்துள்ள அரசு அதிகாரிகளே! உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே! அரசு அலுவலர்களே! நகர்மன்ற உறுப்பினர்களே! உங்கள் அனைவரையும் காயல்பட்டினம் மக்களின் பிரதிநிதியாக - நகரமன்றத் தலைவராக வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நமதூரின் சரித்திரப் புகழ்மிக்க இந்த இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியை, மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும், வாய் நிறைய வாழ்த்துகளோடும், உள்ளார்ந்த பிரார்த்தனையோடும் காண்பதற்கு வருகை தந்துள்ள எனது அன்பிற்குரிய காயல் மாநகரின் அனைத்து சமுதாய மக்களே! ஆன்றோகளே! சான்றோர்களே! பெரியோர்களே! பெண்களே! உங்கள் அனைவரையும் காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சார்பாக வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

மன் லம் யஷ்குரின் நாஸ லம் யஷ்குரில்லாஹ் - அதாவது மனிதர்களுக்கு நன்றி செலுத்தாதவன், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவனாக மாட்டான் என்பது நபிமொழி. அந்த அடிப்படையில், இந்த மக்களுக்காவே வாழ்ந்து கொண்டிருக்கின்ற, மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப தமிழக அரசின் திட்டங்களைத் தீட்டி, அவற்றை செயல்படுத்தி, வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிற - இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் தலைசிறந்து விளங்க வேண்டுமென்பதற்காக அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற நமது தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு காயல்பட்டினம் மக்களின் சார்பாகவும், எமது காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கிறேன்.

அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட IUDM திட்டத்தின் மூலம் நிதியுதவி கிடைக்கப் பெற்றதை பெருமையோடு இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மத்திய அரசின் நிதியை பெற்றுத் தருவதற்காகவும் அவர்கள் பல வகைகளில் முயற்சிகள் செய்வதற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

காயல் மாநகரின் வரலாற்றிலே இடம்பெற்றுள்ள இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டம் பற்றி இங்கு உங்களோடு ஒருசில வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக தாராளமாக இடமும், பணமும் தந்துதவிய சென்ற தலைமுறை பெரியோர்கள் பற்றி இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது எனது கடமை என்ற அடிப்படையில், இந்த நல்ல தருணத்தில் அவர்களை நன்றியோடு நினைவுகூர விரும்புகிறேன்.

நம் கண் முன்னே காட்சியளித்துக் கொண்டிருக்கின்ற இந்த காயல்பட்டினத்தின் முதல் குடிநீர் தொட்டியானது (பேருந்து நிலைய வளாகத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை சுட்டிக்காண்பிக்கிறார்...) முதலாவது கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக உருவாக்கப்பட்டது. இதன் அடிக்கல்லானது அப்போதைய முதல் மந்திரி பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் நாட்டப்பட்டு, 1955ஆம் ஆண்டில் அவர்களாலேயே திறந்தும் வைக்கப்பட்டது.

நமதூர் பெரியோர்களின் பெருந்தன்மையையும், வாரி வழங்கும் வள்ளல் தன்மையையும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்ற இந்த நீர்த்தேக் தொட்டி அமைந்துள்ள இடத்திற்கு ஆப்தீன் ஹாஜி அவர்களின் தாயார் ஹாஜ்ஜா அஹ்மது மீரா நாச்சி என்ற பொம்பளை பிள்ளை ஹாஜி அவர்களும், புளியங்கொட்டை பு.க.செய்யிது முஹம்மது அவர்களும் ஆளுக்கு தலா ஒன்றரை ஏக்கர் நிலம் வழங்கியுள்ளனர்.

முதலாவது குடிநீர் திட்டத்திற்கு இப்போதைய 5 கோடி ரூபாய் மதிப்பிற்குச் சமமாக அன்றே 50 ஆயிரம் ரூபாயை தனி நபராக அ.க.அப்துல் காதர் அவர்கள் வழங்கி பெருமை சேர்த்தார்கள்.

இது தவிர அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த பெரியோர்களாம் - ஊரின் நன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, வாரி வழங்கியிருக்கின்ற வள்ளல்களின் பெயர்களை இங்கே - இந்த இடத்திலே நன்றியோடு நான் நினைவுகூர விரும்புகின்றேன்...

01. புளியங்கொட்டை செய்து முஹம்மது அவர்கள்
02. ஐ.எல்.எஸ். ஆப்தீன் ஹாஜி அவர்கள்
03. என்.கே.அமீர் சுல்தான் அவர்கள்
04. எல்.கே.லெப்பை தம்பி அவர்கள்
05. அ.க.அப்துல் காதர் அவர்கள்

06. எம்.டி.எஸ்.முஹம்மது தம்பி அவர்கள்
07. பி.எஸ்.அப்துல் காதர் அவர்கள்
08. எஸ்.ஓ.ஹபீப் ஹாஜி அவர்கள்
09. எம்.கே.டி.முஹம்மது அபூபக்கர் அவர்கள்
10. எஸ்.கே.முஹம்மது லெப்பை அவர்கள்

11. ம.கு.சம்சுதீன் அவர்கள்
12. வி.எம்.எஸ். லெப்பை அவர்கள்
13. கே.டி.கோசல்ராம் அவர்கள்
14. ஒத்த முத்து ஹாஜி அவர்கள்
15. பொன்னையா நாடார் அவர்கள்

16. பொன்னுசாமி நாடார் அவர்கள்
17. தங்க ராஜ் நாடார் அவர்கள்
18. ராஜபாண்டி நாடார் அவர்கள்
19. துரை ராஜ் நாடார் அவர்கள்
20. அருணாசல நாடார் அவர்கள்

21. பாளையம் செய்யது முஹம்மது லெப்பை அவர்கள்
22. பபியான் ரோட்ரிகோ அவர்கள்
23. மதுரையைச் சேர்ந்த இஞ்சினியர் பிஜிலி ஸாஹிப் அவர்கள்

முதலாம் குடிநீர் திட்டத்திற்கு வாரி வழங்கிய இவ்வள்ளல்களை, இந்த இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் நாம் நினைவுகூர்வோம்...

2030ஆம் ஆண்டு மக்கள் தொகையை முன்கணக்கிட்டு, தொலைநோக்கு அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்த இரண்டாம் குடிநீர் திட்டமானது எங்களது நகர்மன்ற பொறுப்புக் காலத்தில் துவங்கப்படுகின்றமைக்காக, எனது பாசத்திற்குரிய நகர்மன்ற உறுப்பினர்களும், நானும் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!

இத்திட்டத்திற்கான முயற்சியானது பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது என்பதை நாம் யாரும் மறக்கவோ, மறுக்கவோ முடியாது.

நம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் திருமதி கே.எம்.இ.நாச்சி தம்பி அவர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள்,
நம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் அ.வஹீதா பி.எஸ்ஸி. அவர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள்,
நம் நகர்மன்றத்தின் முன்னாள் தலைவர் ஹாஜி வாவு செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் மற்றும் அவர்களது உறுப்பினர்கள்
ஆகிய இவ்வனைவருக்கும் நம் நகர மக்கள் அனைவரின் சார்பிலும் நெஞ்சம் நிறைந்த நன்றியை இதோ இந்த மேடையிலேயே சமர்பிக்கின்றேன்.

இத்திட்டத்திற்காக உழைத்த - பாடுபட்ட - கோரிக்கைகளை எடுத்துரைத்த நம் ஐக்கிய பேரவை பெரியோர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும், அனைத்து பொதுநல அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு திட்டமானது செயல்வடிவம் பெற்று சிறப்பாக செயல்படுத்தப்படுவதில் எனது மதிப்பிற்குரிய நகராட்சி அலுவலர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. அந்த வகையிலே, இதற்காக பேருதவி புரிந்து வரும் நம் நகராட்சி ஆணையாளர் அவர்களுக்கும், நகராட்சி அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், இத்திட்டத்தை வடிவமைத்த வேப்காஸ் நிறுவனத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டம் குறித்து சென்னையில் நாம் சந்தித்த பொழுது முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் நல்கி தற்போது தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக இருக்கும் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், நமது நகராட்சி நிர்வாகத்துறையின் ஆணையர் திரு. சந்திரகாந்த் காம்ப்ளே ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும் நகராட்சி நிர்வாகத் துறை இணை ஆணையர் திரு. அஜய் யாதவ் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கும், நமது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் திரு. மோகன் அவர்களுக்கும், நமது நகராட்சி நிர்வாக மண்டல பொறியாளர் திரு. கனகராஜ் அவர்களுக்கும், நமது பொறியாளர் (பொறுப்பு) திரு. முத்து அவர்களுக்கும், மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தினை சிறப்பான முறையில் நிறைவேற்றி, சீரிய பணியை ஆற்றவுள்ள ஸ்ரீராம் நிறுவனத்திற்கும், நமது ஊர் மக்கள் யாவரின் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பாசத்திற்குரிய அன்னாச்சி அமைச்சர் சீனா தானா செல்லப்பாண்டியன் அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்து, நன்றி கலந்த எனது வரவேற்புரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்...

இந்த இரண்டாம் குடிநீர் திட்டமானது சிறப்பான முறையில் தங்குதடையின்றி நடைபெற எல்லா வகையிலும் உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும், ஆதரவையும் எதிர்பார்த்தவர்களாக நம்பிக்கையோடு நாங்கள் இருகின்றோம்...

இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்குரிய போதிய அலுவலர்கள் நமது நகராட்சியில் இல்லை. அண்மையில்தான் நமது முதல்வர் பாசத்திற்குரிய மாண்புமிகு அம்மா அவர்களால் சில நகராட்சி பணி இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இடங்களுக்குரிய பணியாளர்களை உடனடியாக பணி நியமனம் செய்யவதன் மூலம் இந்த இரண்டாம் குடிநீர் திட்டமானது சிறப்பாக நடைபெற, இது குறித்த தலையாய கோரிக்கையை அம்மா அவர்களிடம நிச்சயம் தாங்கள் எடுத்துச் சென்று ஆவன செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு, எமதூர் மக்களின் சார்பாக உங்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை உள்ளன்போடு வருக வருக என வரவேற்று எனதுரையை நிறைவு செய்கிறேன், நன்றி.


இவ்வாறு, காயல்பட்டினம் இரண்டாவது குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றினார். அவரது உரையின் அசைபட (வீடியோ) பதிவைக் காண இங்கே சொடுக்குக!

கள உதவி:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் (காயல்பட்டினம்.காம்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [12 March 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26224

காயல் மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டமான இரண்டாவது குடிநீர் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடந்தேறிய விழாவில் நகரமன்ற தலைவியின் வீர அரசியல் அரசு விழா பேச்சு, ஆளும் அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் ஆட்சரியபடுதியது.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. அம்மா.. அம்மா... அம்மா... இரு அம்மாக்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [12 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26226

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா (அம்மா) அவர்களின் நல்லாசியுடன் இந்த இரண்டாம் குடிநீர் திட்ட அடிக்கல் நாட்டுவிழா நமது நகராட்சி தலைவி ஆபிதா (அம்மா) அவர்களின் பதவி காலத்தில் இன்று நிறைவு பெறுவது மகிழ்ச்சியே...

நகராட்சி தலைவி ஆபிதா அம்மாவின் துடிப்பான சுறுசுறுப்பான சேவைகளுக்கு பக்கபலமாக இருக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் திரு.ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றி... நன்றி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...அருள்வாய் ரஹ்மானே......!
posted by மஹ்மூதுரஜ்வி (தம்மாம்,சவூதிஅரேபியா) [12 March 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 26228

அஸ்ஸலாமு அலைக்கும்,

யா அல்லாஹ்! இரண்டாவது குடிநீர் திட்டத்தினை எம்மூருக்கு கொண்டு வர அயராதுழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் உன் அருள் மழையினை சொறிந்தருள், இத்திட்டம் முழுமை பெற்று அதன் பலனை அனைவரும் நுகர அருள் புரிவாய் ரஹ்மானே,எங்களிடையே நன்மையான செயல்களில் ஒற்றுமையினை நிரந்தரமாக்கி எம்மக்களின் பிணி நீக்கி அருள் பாலிப்பாயாக ஆமீன் ஆமீன் யா-ரப்பல் ஆலமீன்.

மஹ்மூதுரஜ்வி
தம்மாம்,சவூதிஅரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வீர மங்கையின் உன்னத உரை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU) [12 March 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26229

வீரமங்கை வீறுநடைபோட ஆரம்பிந்த்டுள்ள அறிகுறிகளை காணுகின்ற காயல் குடிமகனாகிய எனக்கு,இன்னும் இன்னும் இறையோனை முன்னிறுத்தி மாணிக்கமாய் மிளரப்போகும் காலம் கடும்தூரமில்லை என்றேதோனுகிறது!

வெற்றிபாதையில் செல்லுங்கள்,உங்கள் சுமையை பகிர்ந்து கொள்ள பக்கபலமாக வருவார்கள்,உங்களுடன் இருக்கும் உன்னதஉறுப்பினர்கள் உள்ளசுத்தியுடன்!

ஒருசில பொலுதிற்கு முன்னாள் வந்துபோன வருத்தமுடைய நிகழ்வுகலெல்லாம் நீந்து போய்விட்டது நெடியோன் துணையுடன்! ,இனி நடப்புது நல்லதாக நடக்கும் நமதூர் கண்மணிகளுக்காக காலத்தால் நன்மைகள்செய்ய நாடிவிட்டோம் நகர்மன்றதிலுள்ள நாங்கனைவர்களும், என்ற நல்லிசை சங்கனாததின் ரீங்கார ஓசையை மனமகிலுடன் மானசீகமாக நான்உட்பட தலைவியின் உரையை கேட்க்கும் அனைவர்களும் உணர்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் யதார்த்தமான உண்மை!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by salai s nawas (singapore) [13 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 26234

இரண்டாவது குடிநீர் திட்டம் விளக்கு அப்பா பேரூராட்சி தலைவராக இருந்த காலத்திலும் பேசப்பட்டது. அந்த நல்ல உள்ளதை இந்நேரத்தில் நினைத்து பார்க்க கடமை பட்டுள்ளோம்.

எங்களின் பாட்டனார் சாளை அமீர் சுல்தான் அப்பா அவர்களும் முதலாம் குடிநீர் திட்டத்தில் பங்களித்தது நினைக்க பூரிப்பாக இருக்கிறது.

திரு பொன்னையா நாடார் அவர்களை பற்றி நம்மூர் சில குறிப்புகளிலும் கல்வெட்டுகளிலும் பார்த்துள்ளேன். ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவராக இருந்துள்ளார் என்பது மட்டும் தெரியும். காயல்பட்டினம் முன்னேற்றத்துக்கு நிறைய பாடுபட்டு இருக்கிறார். இவரை பற்றி வேறு சில குறிப்புகள் இருந்தால் அறியத்தரவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...நடந்தாய் வாழி காவேரி .
posted by mackie noohuthambi (kayalpatnam) [13 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 26236

நடந்தாய் வாழி காவேரி. வெற்றி திருமகளின் வீர வரலாற்றில் மற்றுமொரு வைர மகுடம். வெற்றி திருமகள் என்று சொன்னால் சிலருக்கு புரட்சி தலைவி என்ற நினைவு வரலாம் சிலருக்கு நமதூர் தலைவி நினைவு வரலாம். வானத்தில் பறப்பதும் பூமியில் நடப்பதும் அவரவர் எண்ணங்களே. எண்ணம்போல் வாழ்வு. இந்த சிறப்பான விழாவில் நான் பார்வையாளர்களில் ஒருவனாக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

23 கொடை வள்ளல்களின் பெயரை ஞாபகப்படுத்திய வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்ச்சி மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

"மூன்றடி மண் கேட்டான் வாமனன் உலகிலே,
மூன்றாவது அடியை அவன் வைத்ததோ
அந்த நிலம் கொடுத்து உதவியவனின் தலையிலே"

என்று ஒன்று புராண கதை சொல்வார்கள். கொடை வள்ளல்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அவர்களில் எத்தனை பேரை நாம் இன்று நினைவில் வைத்திருக்கிறோம். அவர்களுக்கு நாம் என்ன கைம்மாறு செய்தோம்.

அவர்களின் ஒவ்வொருவரின் பெயரையும் நமதூரின் ஒவ்வொரு தெருவுக்கும் சூட்டி நாம் மகிழ வேண்டும் என்ற பேரவா எனக்குள் எழுந்தது, இந்த நகர்மன்றத்தில் அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றி மறைந்து வாழும் வள்ளல்களுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தவேண்டும். அவர்களின் வாரிசுகள் மகிழ்ச்சி அடைவார்கள்.

இந்த காலத்தில் அப்படி ஒரு நில சுவான்தார்கள் இருந்தால் அவற்றை அடுத்தவர்கள் பெயருக்கு பட்டா போட்டு கொடுத்திருப்பார்கள் அல்லது பிளாட் போட்டு விலை நிலங்களாக மாற்றி இருப்பார்கள். இப்போதும் கூட சில விதிவிலக்குகள் உண்டு. ஆனால் விதிவிலக்குகள் வழிகாட்டி ஆக முடியாது.

இன்னும் பதினெட்டு மாதங்களில் நமது வீடெங்கும் தினந்தோறும் குடிநீர் ஒலித்து ஓடவிருக்கிறது என்ற செய்தி காதுகளில் தேனாக பாய்கிறது. அது மதம், ஜாதி, கட்சி, தெரு முஹல்லா என்ற அடையாளங்களை தாண்டி அல்லாஹ்வின் அருட்கொடை எல்லோருக்கும் சொந்தம் என்று வரவிருக்கிறது. வானும் காற்றும் நீரும் நெருப்பும் பொதுவில் இருக்குது, மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது ..பிரித்து வைத்து பார்பதெல்லாம் மனித இதயமே, பிரிவு மாறி உறவு வந்தால் இன்பம் பிறக்குமே.. என்று ஒரு புது கவிதை சொல்கிறது.

மேடையிலே அமர்ந்திருந்த பெரியவர்கள், சுற்றியிருந்த நகரமன்ற உறுப்பினர்கள் ஊரின் பல்வேறு சமூக ஆர்வலர்கள் எல்லோரையும் பார்த்தபோது, எல்லா நாளும் இந்த நாளாக, இனிய நாளாக இருக்காதா, எல்லோரும் ஒன்றுபட்டு வளமுடனும் நலமுடனும் வாழும் நாளாக இருக்காதா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாளாக மலராதா என்ற பெரு மூச்சு சுவாசமாக வெளிவந்ததை கூடி இருந்தவர்கள் முகத்தில் பார்க்க முடிந்தது, அகத்தின் அழகு முகத்தில் தெரியும்தானே.

அப்படி ஒரு சூழல் கனிந்து வர, இந்த நிகழ்ச்சி ஒரு முன்னோடியாக அமைய எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Excellent speech
posted by A.M. Seyed Ahmed (Riyadh) [13 March 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26240

Dear president...

Excellent talk...you remind everyone in your speech including other religious donors for the first & second pipeline plan with our kayal gaints & give Thanks on our behalf....and you have all the quality to lead the kayal......

___________________________________________________

காதலன் : கடலைப் பார் கண்ணே.. எவ்வளவு அழகாக இருக்கிறது.. ??

காதலி : கடலைதான் தினமும் காட்டுகிறாயே.. இன்னிக்காவது, ரெண்டு ரூபாய்க்கு கடலையை வாங்கி என் கண்ணில் காட்ட கூடாதா என் கண்ணாளா..!

___________________________________________________________

காதலன் போல்இல்லாமல்

எங்கள் கண்ணில் காயலின் கனவு திட்டமான 2 வது குடிநீர் திட்டத்தை காட்டிய எல்லோருக்கும் அதற்கு உதவிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்..

31 States,
1618 Languages,
6400 Castes,
6 Religion,
6 Ethnic Groups,
29 Major festivals
& 1 Country!

Be Proud to be an Indian!.and kayalan.

Kind courtesy : S.A. Ayesha Hannan


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தியாகசீலர்களின் நினைவு தினம்,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [13 March 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 26243

பத்து நாளைக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு தண்ணீர் வரும் இதுதான் பல ஆண்டுகளாக கோடையில் ஊரு மக்கள்படும் சொல்லன்னா துன்பம் என்றால் அது மிகையாகாது எனலாம்.

இந்த நிலைமையை மாற்ற இருக்கும் இரண்டாம் குடிநீர் திட்டம் நமக்கு ஒரு வரபிரசாதமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்த கூட்டத்தில் தலைவி உரை அணைத்து அம்சங்களும் உள்ளடக்கிய சிறப்பு பேச்சாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தன் சொந்த உறவினர்களின் நிலங்களையே கபாது செய்யும் இந்த காலத்தில் ஏக்கர் கணக்கில் தங்கள் சொந்த இடங்களை, நிதியை மதம்,ஜாதி,என அனைத்தையும் கடந்து மக்களுக் காக வழங்கிய நம் முன்னோர்களை அந்த தியாகசீலர்களை நினைவு கூறியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

மறைந்தும் நற்கருமங்கள் செய்தமைக்காக நன்மை பெற்று கொண்டு இருக்கும் இந்த கனவான்களின் மறுமைவாழ்க்கை சிறப்பாக அமைய இறையிடம் இறைஞ்சுவோம்.நம் நினைவில் இந்த தியாகிகளை நினைவில் நிலை நிறுத்துவோம்.இந்த திட்டம் எந்த தடயமின்றி விரைவாக செயல்பட வாழ்த்துவோம்.

YOURS,
NIZAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இணைந்து பாடுபடுவோம் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [15 March 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26267

அல்ஹம்துலில்லாஹ் ! ஒரு அருமையான நிகழ்ச்சி ! குடி தண்ணீருக்காக நமதூர், நமது அருகாமையில் உள்ள மக்களும் , கடந்த காலங்களில் எப்படியெல்லாம் பொது சேவை செய்துள்ளார்கள் என்பதை இந்நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சிக்குரியது !

(சதகா) மரணத்திற்கு பின்னும் நன்மைகள் மண்ணறைக்கு வந்துகொண்டிருக்கும் நன்மைகளில் குறிப்பாக" தண்ணீர் வசதி செய்துகொடுக்கும் " சதகாவே" என்பது மாநபி (ஸல்) அவர்களின் மாண்பான உரையாகும் !

அந்த அடிப்படையில் மர்ஹூம்கலான நல்லோர்களின் "மண்ணறை" மக்களுக்கு "குடிநீர்" வசதிக்காக தான , தருமம் செய்த உதவியினால் கண்டிப்பாக நன்மையால், ஒளியினால் நிரம்பி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை !

ஆம் ! நாளை நமது "மன்னறைக்கும்" இந்த இனிய இறையருள் சூலவேண்டும் என்றால் நாமும் நமதூர் மக்களுக்கு "குடிநீர்" வசதிக்காக நம்மால் இயன்ற உதவிகளை செய்திடுவோம் !

அந்த வாய்ப்பு ஒருவேளை நமக்கு கிடைக்காவிட்டால் "குறைந்த பட்சம்" நமக்கு என கிடைக்கும் நீரை நல்ல முறையில் பயன்படுத்தி, வீண்விரயம் இல்லாமல் , பிறரின் நீரின் பங்கை நாம் பல முறையற்ற வசதிகளை பயன்படுத்தி உறிஞ்சாமல் இறைஅச்சத்துடன் வாழ்ந்தால் " பிறரின் ஹக்கை பறிக்காதவர்" என்ற சிறப்பு நிச்சயம் நமக்கு கிடைத்தே தீரும் !

அடுத்து இந்த விழாவில் நமதூர் மக்கள், பிற ஊர் மக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அதிகாரிகள், அரசு அதிகாரிகள், முதல் அமைச்சர் , இதர அமைச்சர்கள் , மாவட்ட ஆட்சியர் , நமதூர் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் என அணைத்து தரப்பு மக்களும் உறுதுணை, ஒத்துழைப்பு என நன்றி கூறப்பட்டனர் என்பது அழகிய நடைமுறையாகும் !

ஊர் நலன் என்று வரும்போது அனைவரும் ஒன்றாக கலந்து "பொதுப்பணி " செய்வதே ! நமக்கும் , நமதூருக்கும் நமது வருங்கால சந்ததிக்கும் நன்மையாக அமையும் !

இதற்கு மாறாக நான், பெரியவனா ? நீ பெரியவனா ? என்ற ஈகோ மனப்பான்மை வந்தால் நன்மைக்கு மாறாக , தீமையே மிஞ்சும் !

ஆகவே ! நமதூரின் நன்மைக்கு அனைத்துமக்களும் இறைவனுக்காக "இக்லாசுடன் " தூய எண்ணத்துடன் பாடுபடுவோமாக !

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது பொது சேவைகளை அங்கீகரித்து அருள்பாலித்து , இம்மை , மறுமை என ஈருலக சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்குவானாக ! ஆமீன் ! வஸ்ஸலாம் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved