Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:37:32 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11280
#KOTW11280
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 14, 2013
ரமழான் 1434: இரட்டைக் குளத்துப் பள்ளியின் இரவு நேர பாரம்பரிய நிகழ்ச்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3411 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நடப்பு ரமழான் மாதத்தை முன்னிட்டு, காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பல்வேறு சிறப்பு அமல்கள் (கிரியைகள்) பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகிறது.

காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் என்ற இரட்டைக் குளத்துப் பள்ளியின் ரமழான் இரவு நேர நடைமுறைகள் மற்ற இடங்களைக் காட்டிலும் சற்றே வேறுபட்டு அமைந்திருக்கும்.

அங்கு, ரமழான் இரவுகளில் இஷா தொழுகைக்குப் பின் தராவீஹ் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்படும். அதனைத் தொடர்ந்து வித்ரிய்யா மஜ்லிஸ் நடைபெறும். இந்நிகழ்வுகளில், அந்த மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த ஆண்கள் திரளாகக் கலந்துகொள்வர்.







பள்ளியினுள் வித்ரிய்யா மஜ்லிஸ் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், வெளிப்பள்ளியில் - பள்ளி நிர்வாகிகள் மற்றும் கஞ்சி கமிட்டியினர் இணைந்தமர்ந்து, அன்றன்றைய வரவு - செலவு கணக்குகளைப் பதிவேடுகளில் பதிவு செய்து, சரிபார்க்கும் பணியைச் செய்வர்.



வித்ரிய்யா மஜ்லிஸ் நிறைவில் அனைவருக்கும் தேனீர் போன்ற குடிப்புகளும், பலவகை தின்பண்டங்களை உள்ளடக்கிய ‘நார்ஷா’வும் வினியோகிக்கப்படும்.



அனைத்து நிகழ்வுகளும் நிறைவுற்ற பின்னர், முரசு (டங்கா, நகரா) அடித்தவாறு ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், பொதுமக்களை அவரவர் இல்லப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வர்.



முரசு பள்ளிவாயிலின் வெளியே வந்தவுடன், அங்கு துஆ இறைஞ்சப்படும். பின்னர், அனைவரும் தமது வலது கையை உயர்த்தி, ஆட்காட்டி விரலை நீட்டியவாறு ஒரே குரலில், “தீன் தீன் முஹம்மத்; ஸலவாத் முஹம்மத்; அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹ்” என உரக்கக் கூறுவர்.



பின்னர், பள்ளியிலிருந்து சதுக்கைத் தெரு வழியாக பெரிய சதுக்கை வரையில் ஒரு நாளும், பள்ளியிலிருந்து நெய்னார் தெரு வழியாக குத்பா பெரிய பள்ளி வரை மறு நாளும் தெருவலமாகச் சென்று, ஜமாஅத்தினரை அவரவர் இல்லங்கள் வரை சென்று அனுப்பி வைப்பர்.

சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இப்பள்ளியைச் சுற்றி குடியிருப்புகள் மிகவும் குறைவாகவும், சுற்றுவட்டாரம் முழுக்க காடுகள் போலவும் இருந்தமையால், பள்ளிக்கு வரும் பொதுமக்கள் தமதில்லங்கள் வரை அச்சமின்றி செல்வதற்காகவே இந்த ஏற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. இன்றளவும் இந்நடைமுறை பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நல்லவருக்கு பெய்யும் மழையே....... எல்லோருக்கும்.
posted by s.s.md meerasahib (TVM) [15 July 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 28667

அஸ்ஸலாமு அலைக்கும். மாஷாஅல்லாஹ்.... இதயம் குளிர்ந்து.

பாரம்பரிய நிகழ்ச்சிகள் அழிந்து போகும், இந்த நவீன பூமியில் இப்படி பாரம்பரிய நிகழ்ச்சியை கடைப்பிடித்து நவீனத்துக்கு சாகுமணி அடிக்கும். நம் இரட்டை குலத்துப்பள்ளி ஜமாத்தாரை வாழ்த்துகிறேன்

வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by mohamed younus (muscat) [15 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28671

எனது இளைமை கால நினைவுகள். இப்போது கொள்கை வேறுபட்டாலும் சில நினைவுகளை அசைபோட வேண்டி உள்ளது.

இப்போது உள்ள புதிய கட்டுமானம் இல்லாத பழைய பள்ளி. வெளிவராண்டாவில் தொழுகை நடக்கும். பக்கத்தில் உள்ள வேப்ப மரத்தில் வெளிச்சத்திற்கு ஒரு டியுப் கட்டப்பட்டு இருக்கும். நான் இரவு எட்டுமணிக்கே சென்று அந்த வெளிவராண்டாவில் படுத்து ஒரு சிறு குட்டி தூக்கம் போட்டு விடுவேன். அவ்வளவு இதமான காற்று வரும்.

வித்ரியாவில் தற்போது துபாயில் இருக்கும் குடாக் சித்தீக் காக்கா, பஹ்ரைனில் இருக்கும் வி.பி காக்கா. சீனாவில் இருக்கும் ருக்நூர்தீன் சாஹிப், துபாயில் இருக்கும் லெப்பை சாஹிப், லியாவுல் ஹக் போன்றவர்கள் என்னோடு போட்டி போட்டு ஓதுபவர்கள்...வித்ரியாவும் வெளி வராடாவில் தான் நடக்கும்.

பரிமாறப்படும் சுக்கு காபி ஒரு புது உற்சாகத்தை கொடுக்கும். அப்போது பெரிய சதுக்கைதான் இறுதி. அதற்கு பின் வீடுகள் கிடையாதாம். மின்சாரமும் இல்லாத காலம்.

தொழுகைக்கு வருபவர்கள் வீடு செல்ல பயப்படுவார்களாம். இதற்காகவே பைத்து சொல்லி மன்னண்ணை விளக்கோடு மோதினார் ஒவ்வொரு வீடாக சென்று எல்லோரையும் விட்டு விட்டு இறுதியில் அவர் பள்ளி செல்வாராம்..இந்த பழக்கம் இன்னும் வரை தொடர்கிறது..

முன்பு சதுக்கை தெரு வழியாக மட்டுமே இந்த பைத்து செல்லும் ..ஜமாத்தார்கள் யாராவது மரணித்து விட்டால் அன்று பைத்து கிடையாது...பைத்து இல்லை என்றால் பெண்கள் தரப்பில்ருந்து புகார் வந்துவிடும்...

சுகமான நினைவலைகள்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:..
posted by AHAMED SULAIMAN S M (kayalpatnam) [15 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28673

இன்ஷால்லாஹ் கியாமத்து நாள் வரை தொடர இறைவனிடம் பிராத்தினை செய்வோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [15 July 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28676

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்....எங்கள் ஜமாத்தின் இந்த சிறப்புமிக்க பாரபரியமான அந்த காலத்து நிகழ்வுகள் ....தாங்கள் குறிப்பிட்டது போன்று நமது ஊரில் வேறு எங்குமே எப்போதுமே நடந்தது இல்லை ....

நாங்கள் வயது வந்த பருவமான காலத்தில் ....சிறப்பான ரமலான் மாதம்...கல்கத்தா / கட்டாக்கு ...ஊரில் இருந்து ஒரு குருப்பாகவே ஊரு வந்து எங்கள் ஜமாத்தில் நடக்க கூடிய பாரபரியமான வைபவகளில் கலந்து கொள்வது எங்கள் யாவர்களுக்கும் அப்படி ஒரு மன மகிழ்சியை தரும் ......

தாங்களின் இந்த புகைபடம் எங்களை பல வருடகளுக்கு பின்னோக்கி அழைத்து சென்று விட்டது ......எங்கள் ஜமாத்தின் அந்த'' சுக்கு காப்பியின் மனமான வாசமும் ...அந்த சுவையும் இப்போதும் எங்களின் மன கண் முன் நிற்கிறது ......அந்த சிறப்பான இரவு நேர தராவிக்கு தொழுகையும் / வித்ரு முடிந்த கையோடு ....பைத்துடன் முரசு ,டங்கா கொட்டு சவுண்டும் எங்கள் பகுதி ...ஆண் / பெண் இவர்களின் மனதை ஒரு மென்மையாக்கி கொள்ளும் ..........

மேலும் துஆ ஓதிய பின்பு.நாங்கள் யாவர்களும் எங்களின் '' வலது கையை உயர்த்தி கொண்டே .... ஆட்காட்டி விரலை நீட்டியவாறு எங்கள் ஜாமத்தினர்கள் அனைவர்களுமே ஒட்டு மொத்தமாகவே ..... ஒரே குரலில் '''“தீன் தீன் முஹம்மத்....ஸலவாத் முஹம்மத்.... அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலைஹ்”'' என உரக்கக் கூறும் பொழுது எங்களின் சத்தம் வானை பிளக்கும் அளவுக்கு இருக்கும் .....

இந்த பாரபரியமான நிகழ்வுகளை யாம்...எம் நண்பர்களுடன் நேரில் அனுபவிக்கும் பொழுது அளவற்ற சந்தோசத்தையே .....தரும் .

குறிப்பு ; இது போன்ற நமது ஊரின் பாரபரியமான நிகழ்வுகளை தங்கள் இணைய தளம் மூலம் அறிய தந்தாள் ...நாங்களும் அறிந்து கொள்வோம் அல்லவா ......... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved