Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:04:59 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11400
#KOTW11400
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 28, 2013
ரமழான் 1434: இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற்றது ரியாத் கா.ந.மன்றத்தின் 46ஆவது பொதுக்குழுக் கூட்டம்! ஒரு நாள் ஊதிய நன்கொடை திட்டம் அறிமுகம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3272 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்ற பொதுக்குழு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சியில் ஒரு நாள் சம்பளத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-

எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 46-ஆவது பொதுக்குழுக் கூட்டம் 26.07.2013 வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் நிகழ்ச்சியுடன், ஃபத்ஹாவிலுள்ள ஷிஃபா அல்ஜஸீரா பாலிக்ளினிக் பார்ட்டி ஹாலில், மன்றத் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகரது மகன் ஜனாப் அப்துல் அஜீம் அஜ்வர், ஜனாப். செய்யித் பாஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.



ஹாஃபிழ் பி.எஸ்.ஜெ.ஜைனுல் ஆப்தீன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.



ஹாஃபிழ் எஸ்.ஏ.சி.அஹ்மத் ஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.



‘இன்னிசைத் தென்றல்’ குளம் எஸ்.எச்.ஷெய்க் அப்துல் காதர் அவர்கள் இனிமையான பாடல் ஒன்றை பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.



தலைமையுரை:

அதனைத் தொடர்ந்து, மன்றத் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் தலைமையுரையாற்றினார்.



சிறப்பு விருந்தினர்களான - இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகரது மகன் ஜனாப் அப்துல் அஜீம் அஜ்வர், ஜனாப். செய்யித் பாஜி ஆகியோரையும் மற்றும் அனைவரையும் வரவேற்றார்.

பெண்களுக்கான சிறிய அளவிலான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தை (Small Scale Self Employment Scheme) இம்மன்றத்தின் அடுத்த படிநிலையாக விரிவாக்கம் செய்ய அலோசனை வழங்கி தனது கருத்தைப் பதிவு செய்தார்.

அடுத்து, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண்களைப் (கட் ஆஃப்) பெற்ற மாணவர்களுக்கு - மாணவர்களிடையே விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் ஏற்படுத்த, ரியாத் காயல் நற்பணி மன்றம் சார்பில் இவ்வாண்டும் 30 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.36,500 பணப்பரிசுகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

இதுபோன்ற சேவைகள் இறைவனின் பொருத்தத்தை நாடி தோய்வின்றி நடந்தேற, உறுப்பினர்கள் தங்கள் சந்தாக்களை முறையாக செலுத்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துரை:

அடுத்து, செயலாளர் எஸ்.ஏ.டி.முஹம்மத் அபூபக்கர் பேசினார். அமைப்பினரின் முழு ஈடுபாடே வெற்றிக்கு காரணம் என்றும், இரக்கச் சிந்தனை, உதவும் மனப்பான்மை, தம்மை வளர்த்தவர்களை கண்ணியப்படுத்துதல் ஆகியவற்றை நாம் கடைப்பிடித்தால் இறைவன் மென்மேலும் பரக்கத் செய்வான் என்றும், ''ஓர் அடியான் தன் சகோதரனுக்கு உதவும் காலமெல்லாம் அல்லாஹ் அவனுக்கு உதவுகிறான்” என்ற நபிமொழியை மேற்கோள் காட்டியும் இச்சேவையின் நன்மைகளைப் பற்றி எடுத்துரைத்தார்.

RKWA-வின் செயல்பாடுகள்:

அடுத்து, மன்ற ஆலோசகர் எம்.இ.எல்.செய்யித் அஹ்மத் நுஸ்கி உரையாற்றினார்.



இம்மன்றத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் தன்னலமற்ற சேவைகள் குறித்தும் அவர் விரிவுற எடுத்துரைத்தார்.

மேலும், “விசுவாசம் கொண்டோர்களே, எவர்கள் தங்களுடைய பொருட்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், பகிரங்கமாகவும் (அல்லாஹ்வின் வழியில்) செலவு செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் இருக்கிறது. அவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.” (அல்குர்ஆன் 2:274) என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியையும் கூறி தர்மத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.

ரமழான் உணவு திட்டம்:

அடுத்து, மன்றத்தின் உதவி பொருளாளர் ஒய்.ஏ.எஸ். ஹபீப் முஹம்மத் முஹ்ஸின் உரையாற்றினார்.



ரமழான் உணவுத் திட்டம் பற்றி அவர் கூறுகையில், இவ்வருடம் ஒரு குடும்பத்திற்கு ரூ.2,431 மதிப்பில், 72 குடும்பங்களுக்கு - மொத்தம் ரூ.1,75,032 செலவில், உணவுப் பொருட்களை மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஏ.தர்வேஷ் முஹம்மத் மூலம் பயனாளிகளின் முகவரிகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

நிதிநிலை அறிக்கை:

மன்றத்தின் நிதிநிலை அறிக்கையை மன்ற பொருளாளர் ஏ.டி.ஸூஃபீ இப்ராஹீம் சமர்ப்பித்தார்.



2013ஆம் ஆண்டு, மொத்தம் ரூ.8,78,732 நிதியுதவி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில்
மருத்துவத்திற்காக ரூ.4,70,500
கல்விக்காக ரூ.98,500
சிறுதொழிலுக்காக ரூ.25,000
இதர உதவிகளுக்காக ரூ.2,84,732
என்ற அடிப்படையில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, இவற்றுக்காக ஆதரவளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.

உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றம்:

மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. அதில், உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை ஆர்வத்துடன் பதிவு செய்தனர்.



சிறப்புக் குலுக்கல்:

பொதுக்குழுக் கூட்டத்தின் ஓரம்சமாக, மன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புக் குலுக்கல் நடத்தப்பட்டு, பத்து பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை, சிறப்பு விருந்தினர்களும், மன்றத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழுவினரும் தம் கரங்களால் வழங்கினர்.





ஒரு நாள் ஊதிய நன்கொடை திட்டம்:

இப்பொதுக்குழுவின்போது, மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக உறுப்பினர்கள் தமது ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாகக் கொடுக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.



உறுப்பினர்கள் தமது ஒருநாள் ஊதிய தொகையை - வைக்கப்பட்டிருந்த வெள்ளை உறையில் வைத்து பெட்டியில் இட்டனர். பின்னர், உறுப்பினர்கள் முன்னிலையில் கணக்கிடப்பட்டு, மொத்தம் ரூ.66,561 நன்கொடை நிதியாகத் திரட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.



நன்றியுரை:

நிறைவாக செயற்குழு உறுப்பினர்கள் என்.எம்.செய்யித் இஸ்மாயில் நன்றியுரையாற்ற, ஹாஃபிழ் பி.எஸ்.ஜெ.ஜைனுல் ஆப்தீனின் இறைப் பிரார்த்தனைக்குப் பின் நிகழ்ச்சிகள் இறையருளால் இனிதே நிறைவுற்றன.

இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்களும், சிறப்பழைப்பாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர். துவக்கமாக செயற்குழுவினரும், அவர்களைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் படமெடுக்கப்பட்டனர்.







மஃரிப் வேளையானதும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில், பொதுக்குழுவில் பங்கேற்ற அனைவரும் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர், பிரியாணி கஞ்சி, கடற்பாசி, குளிர்பானம், வடை வகைகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.












இவ்வாறு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
N.M.செய்யது இஸ்மாயில்
ஹாஃபிழ்.S.A.C.அஹ்மது ஸாலிஹ்

ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம் (RKWA)
ரியாத் - சஊதி அரபிய்யா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பெருமையாக உள்ளது....
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [28 July 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29019

பார்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நான் ரியாதிலிருந்த 1990-1998 காலகட்டங்கள் நினைவுக்கு வருகின்றது. இந்த நல மன்றத்தின் பொறுப்பாளர்கள் இவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார்கள். அதுவும் உறுப்பினர்களின் ஒருநாள் ஊதியத்தை ஊர் நலனுக்காக வாரி வழங்கியுள்ளனர்.

வெளிநாடு வாழ் காயலர்களை நினைக்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது. எனது நண்பர்கள் செய்மாலி, நுஸ்கி, தைக்கா சாஹிப் இன்னும் ஏராளமானோரை பார்த்து அளவிலா ஆனந்தம் அடைந்தேன்.

இது போன்று ஊர் அனமைக்காக பாடுபடும் எல்லா நல்லவர்களுக்கும் அல்லாஹ் பரக்கத்தையும், பூரண உடல் நலத்தையும், நீண்ட ஆயுளையும் கொடுத்து மேலாக்கி வைப்பானாக...ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 29030

"கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்" என்று ஒரு கவிஞன் பாடினான். இது எம்ஜீயார பாட்டல்லாவா, நீ இதை பாடலாமா என்று சிலர் கேட்க கூடும். அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இன்னொரு பாடல். "முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை. சிப்பிக்குள்ளே இருந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை".

எங்கே நன்மைகள் நடக்கின்றதோ அதை நாம் பாராட்ட கடமை பட்டிருக்கிறோம். அதை சொந்த கவியாக, கவிமகன் காதர் போல் பாடவும் செய்யலாம். கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலியின் சிறப்புக் கவிதைகள் மூலம் உதாரணமாகவும் பாடலாம்.

ரியாத் காயல் நல மன்றம் செய்துள்ள சேவைகள், ஆற்றி வரும் பணிகள் மெச்சத்தக்கவை. நான் காயல் அலையன்ஸ் கமிட்டி துணை தலைவராக ஏற்றம் பெறுவதற்கு எனக்கு உதவியவை இந்த மாதிரி தமிழ் அறிஞர்களின் முன்னுதாரணங்கள்தான்.

"காயல்பட்டினத்தின் சிறப்புக்கள்" என்ற தலைப்பில் 15 நிமிடங்கள் பேசுவதற்கு என்னை அழைத்தார்கள். நான் பேசி முடிக்கும்போது 25 நிமிடங்களை தாண்டிவிட்டது. பக்கத்தில் இருந்த தலைவர் மர்ஹூம் SL நூஹு மாமாவிடம் கேட்டேன் 15 நிமிடம் முடிந்து vittathaa என்று . அவர் சொன்னார், 15 நிமிடம் தாண்டி 15 பதினைந்து நிமிடம் ஆகிவிட்டது, நீ பேசு, இங்கு யார் அதை பற்றி கவலைப்படுகிறார்கள், உன் பேச்சில் மயங்கி இருக்கிறார்கள் என்று சொன்னார்.

"உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள், உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண என்ன வழி என்று எண்ணி பாருங்கள், அல்லாஹ் ரசூல் சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்" என்று என் பேச்சை முடித்தேன். எனக்கு முதல் பரிசு கிடைத்தது.அந்த நாள் இன்று ஞாபகம் வருகிறது அல்ஹம்து லில்லாஹ்.

இளைஞர்கள்தான் இந்த சமுதாயத்தை வழி நடத்தி செல்லமுடியும்." யா மஃஷர ஷபாப்" என்று இளைஞர்களைத்தான் நபிகள் நாயகம் அழைத்தார்கள். நபி தோழர்கள் என்றால் அவர்கள் எல்லாம் 70 வயதை தாண்டியவர்கள் என்ற தவறான கருத்து நம்மிடையே உள்ளது. நுபுவ்வத்தின் வயதே 40தான்.

எனவே காயல் நல மன்ற நண்பர்களை மனதார பாராட்டுகிறேன். உங்கள் நல்ல சேவைகள் தொடரட்டும்.

நல் அமல்கள் செய்தால் சுவர்க்கம் கிடைக்கும், நல்ல சேவைகள் செய்தால் அல்லாவே கிடைப்பான் என்று ஒரு உருது கவிதை கூறுகிறது.

AMAL KAREGA THO JANNATH MILEGA,
KHIDHMATH KAREGA THO KHUDHA MILEGA...

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நினைவில் நிலைதிருக்கும் என் இனிய RAKWA சகோதரர்களே
posted by Prabu Shaikna (Bangalore) [29 July 2013]
IP: 1.*.*.* India | Comment Reference Number: 29032

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்....

என் இனிய சகோதர்களே! உங்கள் எல்லோரையும் ஒன்றாக காண கண் குளிர்சி, நினைக்க மன நிறைவு, ஆனந்தம் எனும் அலையில் மிதந்து மகிழ்ச்சி எனும் கடலில் மூழ்கி தவிக்கிறேன். ஒன்றாக இருந்த அந்த இனிய நாட்களை அசைபோடுகிறேன்.

அல்ஹம்து லில்லாஹ், பாராட்டுக்கள். புனித ரமதான் மாதத்தில் நீங்கள் செய்யும் இந்த தொண்டுக்கு பகரமாக ஏழை, எளியோரின் துஆக்கள் ஓடிவருவதுடன், அதன் பலன் ஒன்றிக்கு பத்தாக தேடி வருவதுடன் அல்லாஹ் நாளை மறுமையில் உங்கள் மறு உலக வங்கி கணக்கில் சேமிக்கிரான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உங்களின் இந்த ஆர்வமும், வேகமும் மற்றவர்களையும் நன்மை செய்ய தூண்டுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமதானின் பொருட்டால் ரஹ்மத்தை சொறிவதுடன் உங்களின் நாட்ட தேட்டங்களையும், தேவைகளையும் பரிபூர்ணமாகி தருவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். வஸ்ஸலாம்

உங்கள் முன்னாள் RKWA உறுப்பினர்
பிரபு ஷைக்னா
பெங்களுரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Hearty Wishes
posted by Sithan Niyaz (Riyadh) [31 July 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 29097

Trust engrossed in obeisance in the month of forgiveness to plunder the bounties of Allah. let us include our prayers for all the RKWA members especially EC team for this great success of day by day hard work it is pleasure to grasp that RKWA has been grown up, growing Leaps & Bounds by the grace of Allah.

Hearty congratulations for these noble & compassionate service.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved