Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:08:53 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11502
#KOTW11502
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 7, 2013
வி.வி. மினரல்ஸ் நிறுவனத்தின் மணல் சுரங்கங்களை பரிசோதனை செய்ததால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாற்றம்: டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3013 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் குமார் IAS நேற்று திடீரென மாற்றப்பட்டார். இது குறித்து இன்று டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுக்காவில் உள்ள வைப்பார் மற்றும் வேம்பார் கிராமங்களில் சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவது குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் - நேற்று (ஆகஸ்ட் 6), துணைக் கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் வருவாய் அதிகாரி கதிரேசன் தலைமையில், வி.வி. மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மணல் சுரங்கங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பெரிய அளவில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த பரிசோதனைகள் மாலை 6 மணிக்கு முடிவுற்றது. அதன் பிறகு தனக்கு மாற்றல் ஆணை கிடைத்ததை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார், இரு விசயங்களுக்கும் தொடர்பு உள்ளது எனக்கூற மறுத்துவிட்டார். அதிகாரி என்ற அடிப்படையில் மாற்றல் உத்தரவை ஏற்று புதிய பொறுப்பில் பணியாற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

"கடலுக்கு அருகே 4 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ள அனுமதி பெற்றிருந்த இந்நிறுவனம், சுமார் 20 ஹெக்டேர் பரப்பளவில் மணல் அள்ளியுள்ளது. அனைத்தும் அரசு நிலங்கள்" என மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார் கூறினார்.

நேற்று நடந்த பரிசோதனைகள் - கடந்த மூன்று மாதங்களில் மணல் சுரங்கங்களில் மேற்கொள்ளப்படும் இரண்டாவது பெரிய பரிசோதனைகள் ஆகும். மூன்று மாதங்களுக்கு முன் பீச் மினரல்ஸ் என்ற நிறுவனத்தின் சுரங்கங்களையும் அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

இந்த இரு நிறுவனங்களும் கார்னெட், இல்மைனைட், ரூட்டைல் மற்றும் மோனசைட் போன்ற கனிமங்களை மணலில் இருந்து எடுத்து - பெரும் அளவில் ஏற்றுமதி செய்கின்றன.


இவ்வாறு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [07 August 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 29258

சென்னை : தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி கலெக்டராக இருந்த ஆஷிஷ்குமார், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட துணை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அரியலூர் கலெக்டராக இருந்த ரவிக்குமார் தூத்துக்குடி கலெக்டராகவும், பாடநூல் கழக நிர்வாக இயக்குனராக இருந்த சரவணவேல் ராஜ் அரியலூர் கலெக்டராகவும், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி எம்.குற்றாலிங்கம் அறிவியல் நகர துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:..சோதனையினால் கிடைத்த வேதனை
posted by seyed Ibrahim (yanbu, saudiarabiya) [07 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29261

தமிழக மக்களுக்கு ' அமைச்சர்கள் மாற்றம் ,IAS அதிகாரிகள்' மாற்றம் என்பது ஒன்றும் புதிது அல்ல அதே நேரம் நேர்மையான , நடுநிலையான IAS அதிகாரி மாற்றம் என்பது ஒரு கசப்பான ,வேதனையான செய்தி .அதே நேரம் திரு .ஆசிஷ் குமார் IAS அவர்கள் இடமாற்றம் செய்ததன் பின்னணி V V மினரல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைதான் என்ற செய்தி நமது மாவட்ட மக்களுக்கு கிடைத்த வேதனையான செய்தி. டைம்ஸ் ஆப் இந்தியாவிற்கு நன்றி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. அவர் எங்கு சென்றாலும் நேர்மையான முறையில் மக்கள் சேவையை தொடர்ந்து செயலாற்ற வாழ்த்துகிறேன்.
posted by S.K.Shameemul Islam (Chennai) [07 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29263

நல்லவர்களை வாழ விடமாட்டார்கள். அவர்கள் பந்தாடப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்.

நியாயம் என்றுமே பலிகடாவாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. சகோதரர் ஆஷிஷ் குமார் அதை நிச்சயம் புரிந்தே இந்த செயல்களைச் செய்திருப்பார்.

அவர் எங்கு சென்றாலும் நேர்மையான முறையில் மக்கள் சேவையை தொடர்ந்து செயலாற்ற காயல்பட்டணம் ஊர்வாசிகள் சார்பில் வாழ்த்துகிறேன்.

அவரைத் தொடர்ந்து புதிய கலெக்டராக பொறுப்பேற்றுள்ள திரு ரவிக்குமார் அவர்களையும் மனதார வரவேற்கிறோம்.

ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாணிக்க முத்தாக்த்தான் மிளிருவீர்கள்
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [07 August 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29264

மாசலாமா, மனிதருள் மாணிக்க கல்லே!

ஒரு இனிமையான இளகிய இதயம் இடம் மாறுகிறது! ஆமாம், ஒரு இரும்பு சக்தியின் ஏவலினால்.

அன்பின் ஆஷிஷ் அவர்களே, எங்கள் ஊருக்கு நீங்கள் செய்த ஏற்றமிகு எல்லா நற்காரியங்களுக்கும் எங்களூரின் சார்பாக இதயம் குளிரும் நன்ற்யினை தெரிவிக்கின்றேன்!

முத்து நகரிலிருந்து இடம்பெயரும் நீங்கள் எங்கு சென்றாலும் எல்லோர் இதயத்தையும் குளிர வைக்கும் மாணிக்க முத்தாக்த்தான் மிளிருவீர்கள்! அது உங்கள் நேர்மைக்கும்,நடுநிலைக்கும்,நெடிய உழைப்பிற்கும் வல்ல இறைவன் கொடுக்கும் வரன்!,

புதிய ஆட்சித்தலைவரை அன்பொழுக அனைத்து காயல் மக்களின் சார்பாக வருக,வருகவென வரவேற்க்கிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்க அம்மம்மா நாமம்.
posted by Abdul Wahid S. (Kayalpattinam) [07 August 2013]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 29267

"..... அதன் பிறகு தனக்கு மாற்றல் ஆணை கிடைத்ததை உறுதி செய்த மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார், இரு விசயங்களுக்கும் தொடர்பு உள்ளது எனக்கூற மறுத்துவிட்டார்". (C & P )

இந்த விசயத்தை அரசியலாக்க விரும்பாதது நமது மாவட்ட ஆட்சியரின் பெருந்தன்மையை காட்டுகிறது. இருந்தாலும் இவர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றுள்ளார். மக்களுக்குத் தெரியும் ஏன் இவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது.

இந்த Sand மாஃபியாக்கள் எல்லாம் ஆளுங்கட்சியின் Financiers & Heavy Weight களாவார்கள். மேலும் Jaya TV யின் shareholders ஆவார்கள். ஆதலால் அம்மாவின் கருணைப் பார்வை நமது மதிப்பிற்குரிய ஆட்சியர் திரு ஆசிஷ் குமார் அவர்கள் மீது பாய்ந்துள்ளது.

போன வாரம்தான் ஒரு முதலமைச்சரின் ( அகிலேஷ் யாதவ் - உ.பி) சுயரூபம் தெரிய வந்தது. துர்கா சக்தி நாக்பால் என்ற பெண் I.A.S. அதிகாரி அங்குள்ள Sand Mafi யாக்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்ததால் பொய் காரணங்கள் கூறப்பட்டு இரவோடு இரவாக இடை நீக்கம் செய்யப்பட்டார். அகிலேஷ் யாதவ் கூறிய காரணம். ஒரு பள்ளிவாசல் சுவற்றை இவர் இடிக்க உத்தரவு பிறப்பித்ததால் மதக் கலவரம் ஏற்பட காரணமாகிவிட்டார் என்பதே. ஆனால் அப்படி ஒரு நிலைமை அங்கு ஏற்படவில்லை என்று அங்குள்ள முஸ்லிம் அமைப்புகள் இந்த முதலமைச்சருக்கு எதிராகவும் அந்த இளம் பெண் அதிகாரிக்கு ஆதரவாகவும் போர்க்கொடி தூக்கியது நம்மில் பலருக்கு தெரியும்.

D.C.W. , Sterlite போன்ற நோய்களை பரப்பும் தொழிற்ச்சாலைக்கு எதிராக, பொதுமக்கள் நலத்தில் அக்கறை கொண்ட செயல்பட்ட நல்லதொரு ஆட்சியரை இழந்த்தது நமது துரதிஷ்டம்.

நமக்கு நல்லதொரு ஆட்சியர் அமைந்துவிட்டார், இவரது பணி அதிக வருடங்கள் நீடிக்கவேண்டும் என்று நம்மில் பலர் எண்ணியதுண்டு.

மக்களுக்காக நேர்மையாக செயல்படும் அதிகாரிகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் செய்யும் மக்கள் தொண்டு. வாழ்க அம்மம்மா நாமம், வளர்க பணநாயகம். இதுதான் நமது ஜனநாயகம்.

புதிய பொறுப்பை ஏற்க இருக்கும் நமது முன்னாள் ஆட்சியருக்கு எமது வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. வெட்கப்பட வேண்டிய விஷயம்...!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [07 August 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 29270

மக்களையும் மண்ணையும் சுரண்டி கொள்ளையடிக்கும் பணக்கார வர்கம் பற்றிப்பிடித்து வளர அதிகார வர்க்கம் எனும் ஊன்றுகோல் தேவை. பணமும் அதிகாரமும் இரட்டைக்குழந்தைகள். இதில் நேர்மைக்கோ, நன்மைக்கோ இடமில்லை!

நாளிதளில் வெளி வந்த செய்தி உண்மையாக இருப்பின் இக்கொள்ளையர்கள் நொடிப்பொழுதில் தலையெழுத்தையே மாற்றும் சக்தி கொண்டவர்கள் என பின் தங்கி தயங்கிவிடாமல், அநீதியின் பொய்முகத்தைக் கிழித்து உண்மையின் சுயரூபத்தை காட்ட அரசு அதிகாரிகள் முன் வர வேண்டும்.

குண்டு வைப்பது, வழிபாட்டுத்தலங்களை இடிப்பது, நாட்டைக் காட்டிக் கொடுப்பது மட்டும் தீவிரவாதமல்ல...அரசாங்கத்தின் சொத்தைக் கொள்ளையடிப்பதும், இயற்கை அன்னை தன் மடியில் ஏந்திவைத்துள்ள கனிமவளங்களை கூரிய நகங்களால் கொடூரமாக சுரண்டியெடுப்பதும் ஒரு வகையில் தீவிர வாதமே! இதற்கு அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. நச்சுப் பாம்புகளுக்கு கொண்டாட்டம்......
posted by kavimagan (doha-qatar) [07 August 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 29272

பூவின் மீது கோடரித் தாக்குதல்
பிய்ந்த பூவின் வாசம் கூடுகிறது...

இயற்கை அன்னையின்
மார்பினை அறுக்கும்
எத்தர்கள் ஏய்ப்பது
எத்தனை நாளைக்கு?

இடம்தானே மாறுகிறது...
இதயம்....?
எப்படி இருந்ததோ
அப்படியே இருக்கிறது
அவரிடமே பத்திரமாய்...

நகர்வதால் நதிக்கென்ன நஷ்டம்?
நனைவதால் நிலத்திற்கா கஷ்டம்?

மக்கள் மனதை கொள்ளை கொண்ட
மாவட்ட ஆட்சியர்
மணற்கொள்ளை மாஃபியாக்களால்
பணிமாற்றம்......
ஸ்டெர்லைட் முதல் டிசி டபிள்யு வரை
நச்சுப் பாம்புகளுக்கு கொண்டாட்டம்....

நிலவெளி மாற்றங்களால்
கடலின் கரைகள் மாறக் கூடும்...
அலைகளின் ஆரவாரம்?

ஆசிஷ் குமார்.....
ஸல்யூட் சார்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...காற்றுக்கென்ன வேலி ?
posted by சாளை பஷீர் (சதுக்கைத் தெரு , காயல்பட்டினம்) [07 August 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29273

இதயம் வலிக்கின்றது.

பொது விஷயத்திற்காக எப்போது ஆஷீஷ் குமார் அவர்களை அணுகினாலும் இவரிடம் நமக்கு நியாயம் கிடைக்கும் என்ற உணர்வு ஏற்படாமல் இருக்காது.

ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட ஆஷீஷ் குமார் அவர்களின் மழலை தமிழ் மனதிற்கு இனிமையானது. நீதமான ஆன்மா.

காற்றை சிமிழுக்குள்
அடைக்க முடியுமா?

ஆஷீஷ் குமார் போனால் என்ன? போராட்ட உணர்வும் நீதமும் படைத்த எண்ணற்ற போராளிகள் இந்த கொள்ளைகளுக்கு எதிராக நிற்கத்தான் செய்வார்கள்.

இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கூடன் குளம் மக்களின் அணு உலை எதிர்ப்பு போராட்டம். எந்த அதிகாரிகளின் துணையும் இல்லாமல் இன்று சாமானியனும் அணு உலைக்கு பின்னால் ஒளிந்துள்ள மக்கள் விரோத அரசியலை நன்கு புரிந்து விட்டான்.

எனவே வி,வி.மினரல்ஸ் , டி.ஸி.டபிள்யூ , ஸ்டெரிலைட் போன்ற மண் மலை விழுங்கி மகாதேவன்களுக்கு குதூகலிக்க ஒன்றுமில்லை.

தொழிற்சாலை மாஃபியாக்களின் முதல் பலி திரு.ஆஷீஷ் குமார். இனி இந்த பலி பட்டியல் பல்வேறு வடிவங்களில் தொடரும். போராளிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by A.S.L.சதக்கத்துல்லா (35,கதிட்ரல் சாலை,சென்னை_86) [08 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29288

தமிழக அரசு உத்தரவின்படி. I . A. S .அதிகாரிகள் இடமாற்றம் இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் அவர்களும் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்ட மக்களின் கண௳ நாயகன் நேர்மை திறமையுடன் கூடிய ஆட்சியர் திரு ஆஷிஷ் குமார் அவர்கள் பனி இடமாற்றம் செய்யப்படுவது நமது ஊருக்கும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் வருத்தம் உண்டு இது அரசு ஆனை அவரை வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்புவோம் புதிய ஆட்சியர் திரு ரவி குமார் அவர்களை வரவேற்போம் அவரும் திரு ஆஷிஷ்குமார் போல் திறமையுடன் செயல்படுவார் என நம்பிக்கையுடன்........ எதிர்பார்த்தவன்னம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved