Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:02:37 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11547
#KOTW11547
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 9, 2013
நோன்புப் பெருநாள் 1434: காயல்பட்டினம் பள்ளிவாசல்களில் இன்று நோன்புப் பெருநாள் தொழுகை! பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்பு!! குருவித்துறைப் பள்ளி படக்காட்சிகள்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3857 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 09) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

பெருநாளுக்கு ஆயத்தம்:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தொழுகைக்கு செல்வதற்காக, அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து, வாசனைத் திரவியங்களைத் தேய்த்துக் கொண்டவர்களாக பொதுமக்கள் அவரவர் மஹல்லா ஜமாஅத்திலுள்ள பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகையில் கலந்துகொண்டனர்.

தொழுகை நடைபெறும் பள்ளிவாசல்கள்:

காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி, கடைப்பள்ளி, தாயிம்பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி, செய்கு ஹுஸைன் பள்ளி, புதுப்பள்ளி, மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி, மேலப்பள்ளி, அரூஸிய்யா பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, மகுதூம் ஜும்ஆ பள்ளி, ஹாஜியப்பா தைக்கா பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, ஜாவியா, சிறிய குத்பா பள்ளி, பெரிய குத்பா பள்ளி, இரட்டை குளத்துப் பள்ளி, கோமான் மொட்டையார் பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி, கற்புடையார் பள்ளி, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி ஆகிய பள்ளிகளில், இன்று காலை 07.30 மணி முதல் 10.30 மணி வரை நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

அந்தந்த பள்ளிவாசல்களின் இமாம்கள் தொழுகையை வழிநடத்தினர். பெருநாள் தொழுகை நிறைவுற்ற பின்னர், குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது. அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையில் அந்தந்த ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

திக்ர் மஜ்லிஸ்:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, முன்னதாக நேற்று (ஆகஸ்ட் 08ஆம் தேதி) இரவில் அனைத்து நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.

குருவித்துறைப் பள்ளியில் பெருநாள் தொழுகை:

காயல்பட்டினம் மஸ்ஜித் மவ்ரிதில் உஸ்ஃபூர் - குருவித்துறைப் பள்ளியில் இன்று காலை 09.45 மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது.



பள்ளியின் இமாம் எம்.எல்.முஹம்மத் அலீ ஆலிம் தொழுகையை வழிநடத்த, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ குத்பா பேருரையாற்றினார்.



கட்டிட புதுப்பிப்புப் பணி:

பின்னர், பள்ளியின் பழுதடைந்துள்ள கீழ்ப்பகுதியை உடைத்துக் கட்டிட, பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வகைக்காக மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தாராள நன்கொடைகளை வழங்கிடுமாறும், பள்ளியின் இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோளை முன்வைத்தார்.



‘முத்துச்சுடர்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீயின் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.







கலந்துகொண்டோர்:

இத்தொழுகையில், பள்ளியின் துணைத்தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், செயலர் ஹாஜி எஸ்.எம்.கபீர், இணைச் செயலாளர் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, மதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் காயல் அமானுல்லாஹ், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் தலைவர் ஹாஜி எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன், தேமுதிக மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.இஸ்ஹாக் லெப்பை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப், அதன் மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், ஹாங்காங் கஸ்வா அமைப்பின் உறுப்பினர்களான கானாப்பா செய்யித் அஹ்மத், எஸ்.என்.சுல்தான் அப்துல் காதிர், ஹாஜி என்.எஸ்.நூஹ் ஹமீத், ‘முத்துச்சுடர்’ ஹாஜி என்.டி.பாதுல் அஸ்ஹப், ஹாஜி எஸ்.எச்.முஹம்மத் நூஹ் உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.









கண்களைக் கவர்ந்த குழந்தைகள்:

சிற்சிறு குழந்தைகளுக்கும் பலவண்ணப் புத்தாடைகளை அணிவித்து பொதுமக்கள் தொழுகைக்கு அழைத்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.







மக்கள் திரள்:

வழமைக்கு மாற்றமாக, இவ்வாண்டு பெருநாளைக் கொண்டாடுவதற்காக, வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஊர் வந்திருந்தமையால், பள்ளிவாசல்களில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது.















வாழ்த்துக்கள் பரிமாற்றம்:

தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுமக்கள் தமது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.



பெருநாள் தொழுகையையொட்டி, பள்ளி நலனுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டு, சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை சேகரிக்கப்பட்டது.



ஜியாரத் நிகழ்ச்சி:

பின்னர், தொழுகையை வழிநடத்திய இமாம், குத்பா பேருரையாற்றிய கத்தீப் ஆகியோர் டங்கா (முரசு) முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லப்பட்டனர். மஹான் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத்தை முடித்துவிட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.







குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1433) நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை:

காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களில் பெண்களுக்கு தனியாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அதற்கென நியமிக்கப்பட்டிருந்த தற்காலிக ஆண் இமாம்கள் ஆண்கள் பகுதியிலிருந்தவாறு தொழுகையை வழிநடத்த, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அவர்களுக்கான பகுதியில் இருந்தவாறு தொழுகையில் கலந்துகொண்டனர்.

கடற்கரையில் மக்கள் கூட்டம்:

நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரையில் மக்கள் மிக அதிகளவில் திரண்டு செல்வர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [10 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29351

அனைவர்களுக்கும் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

கிருபை உள்ள வல்ல அல்லாஹ், நம் அனைவர்களின் பாவங்களை மன்னித்து, நம்முடைய நோன்பை அங்கீகரித்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்திற்கு அல்-ரய்யான் என்ற வாயில் வழியாக நுழையும் பாக்கியத்தை அருள்வானாக.

கடந்த ரமலான் மாதம் முழுவதும் பல நன்மையான காரியங்களும், அதிக வணக்கங்களும், குரானின் தொடர்பும், தான தர்மங்கள் செய்தும், வீணானா விசயங்களை தவிர்த்தும் வந்தோம். இதை வல்ல ரஹ்மான் ஏற்றுக்கொண்டு, இந்த நல்ல செயல்களை மற்ற காலங்களிலும் ஆயுள் வரை தொடர அருள் புரிவானாக.

மாஷா அல்லாஹ்..!! பள்ளிவாசல் நிறைந்து காணப்படுகின்றது. இந்த பெருநாள் விடுமுறைக்கு அதிக சகோதரர்கள் ஊர் வந்துள்ளார்கள்.

- சரிங்க, ஒரு மாறுதலுக்காக பஜர்/சுபுஹு தொழுகைக்கு பள்ளிவாசல்களை வலம் வந்து, எத்தனை நபர்கள் தொழுக வருகின்றார்கள், எந்தந்த பள்ளிவாசல்கள் நிறைந்து காணப்படுகின்றது என்று பதிவு செய்தால் நன்றாக இருக்குமே.

- சகோ. S.K.சாலிஹ் பதிவு செய்த செய்தியில் அவரின் புகைப்படம் இருப்பது அரிது. இந்த பதிவில் அதிசயம், பார்த்ததில் மிக்க சந்தோசம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (Wuji , Hebei.) [10 August 2013]
IP: 61.*.*.* China | Comment Reference Number: 29354

அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் . படங்கள் , கண்ணை கவரும் விதத்தில் அமைந்துள்ளது . அனைத்து படங்களையும் இணைத்து பார்த்தால் அநேகமாக தொழுகைக்கு வந்த அத்தனைபேரையும் ஒருவர் விடாமல் எடுக்கபட்டுள்ளதுபோல தெரிகிறது.

ஒருவேளை SK Salih காக்காவின் ஜமாத்தில் உள்ள பள்ளியாதலால் இந்த ஏற்பாடோ!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [10 August 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29356

குருவித்துறை பள்ளிவாசல் ஜமாத்தினர் அனைவர்களுக்கும் குறிப்பாக SMS மஹ்மூத் ஹசனுக்கும் எமது ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நன்றாக இருக்கிறது - நன்றாக இருந்திருக்கும்
posted by Musaffir SH (Kayalpatnam) [10 August 2013]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 29365

அட்மின் அவர்களுக்கு- குறுவிதுறைப் பள்ளிக் படக்காட்சிகள் நன்றாக இருந்தது, மற்ற பள்ளிகளுடைய படக்காட்சிகள் பதிவு செய்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

Moderator: பெருநாள் தொழுகையை அனைவரும் நிறைவேற்ற வேண்டியுள்ளதால், ஒரே நேரத்தில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனைத்திடங்களிலிருந்தும் செய்தியை சேகரித்து வெளியிட தற்போது போதிய வாய்ப்புகள் இல்லை.

எனினும், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுப்பித் தரும் தகவல்கள் மற்றும் படங்கள் உடனுக்குடன் வெளியிடப்பட்டு வருகிறது.

பார்க்க புதுப்பள்ளி (செய்தி எண் 11550) மற்றும் அரூஸிய்யா பள்ளி (செய்தி எண் 11551) செய்திகளை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இன்றைய மகிழ்ச்சிபோல நாளை சுவர்க்கத்திலும் உங்கள் அனைவரையும் நுழைந்திடச் செய்வானாக, ஆமீன்......
posted by S.K.Shameemul Islam (Chennai) [10 August 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 29367

எம் சுற்றத்தையும் நட்பையும் ஒருசேர ஓரிடத்தில் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி.

கிருபையுள்ள நாயன் ஒரு மாத கால நல்லமல்களை ஏற்றுக்கொண்டு இன்றைய மகிழ்ச்சி போல நாளை சுவர்க்கத்திலும் ரய்யான் வாயில் வழியாக பரவசத்தோடும் பூரிப்போடும் இன்றைய மகிழ்ச்சிபோல நாளை சுவர்க்கத்திலும் உங்கள் அனைவரையும் நுழைந்திடச் செய்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நன்றி !!
posted by Musaffir SH (Kayalpatnam) [10 August 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 29384

அன்பின் Moderator அவர்களே, தங்கள் விளக்கதிருக்கு நன்றி. பொது மக்களால் அனுப்ப படும் தகவல்கள் வரவேற்க படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தங்க தாம்பளத்திலும் ஒரு கீறல்.
posted by s.s.md meerasahib (kayalpatnam) [11 August 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 29387

அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ் குருவித்துறைப் பள்ளி நிகழ்வுகள்.....

மனதை கொள்ளை கொண்டது ஒற்றுமைக்கு எடுத்து காட்டு. என்றாலும் சகோதரர்களுக்கு இடையில் ஏற்ப்படும் செல்ல சண்டைகள் அடிக்கடி நிகழ்வதால் சில பொறுப்புள்ள விசயத்தில் கோட்டை விட்டுள்ளோம். என்றாலும் அது தங்க தாம்பளத்தில் ஏற்ப்பட்ட ஒரு கீறல். இன்ஷா அல்லாஹ் அதுவும் களையப்பட்டால் ஒரு முன்மாதிரி முஹல்லாவாக திகலும்.

எல்லாவறையும் கவர்பண்ணி இருக்கிறார் எஸ்.கே.சாலிஹ். என்னை மட்டும் விட்டு விட்டார். சரி பரவா இல்லை கோபம் ஒன்றும் இல்லை. வஸ்ஸலாம்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...குருவித்துறை பள்ளி சந்தோசங்கள் ,,,,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [11 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29394

குருவித்துறை பள்ளி பெருநாள் தொழுகை நிகழ்வுகளை சிரமம் மேற்கொண்டு ஒரு சேர தந்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. பெரும்பாலும் ஜமாத்தினர் அனைவரையும் தெளிவாக காண முடிந்தது. வெளிநாட்டில் இருக்கும் ஜமாஅத் மக்களுக்கு விருந்து படைத்தது போல் இருக்கும். அரபி ஷேக் தோரணையில் பெருநாள் உடை அணிந்த ஷேக் சுலைமான் காக்காவின் புகைப்படங்கள் அருமையாக இருந்தது. இந்த வருஷம் மக்களின் அன்பளிப்பு தொகை 23,000 ருபாய் கிடைத்தது

பாவங்களை பொசுக்கும், இறை அருளை பொழிந்த இந்த புனித நாள் நம்மை விட்டு பிரிந்த சோகம் மக்களை தொற்றி உள்ளது எனலாம். யாரும் விரும்பாத பசியை இறைவனுக்காக மட்டும் செலுத்தியது நம்மை காக்கும் இறைவனுக்காக எத்தனை பெரிய நன்றிகடன் எனலாம்.

உலகில் எவ்வளவு பணம், பதவி என எது கிடைத்தாலும் எவனுக்காகவும், யாருக்காகவும் பசித்திருபோமா? இறைவனுக்காக மட்டுமே இருக்கும் இந்த பசிக்கு நிகராக அல்லது அதற்கு மேலாக இறைவனின் அருள், சன்மானம் நமக்கு உறுதியாகிவிட்டது. இதை இறைவனே உறுதியிட்டு கூறியிருப்பது அடியார்களுக்கு கிடைத்த பாக்கியமாகும்.

அனால் இதன் அருமை தெரியாத சில இளைஞ்சர்கள் கூட சிறு வயதிலேயே பயிற்சி இல்லாதால் நோன்பு பிடிக்காமல் இருக்கிறார்கள். இவர்கள் வரும் காலங்களில் நோன்பு பிடிக்க முயற்சி செய்வது இறைவனின் நற்கூலியை பெற வாய்ப்பாகும். இறைவன் இந்த நல்ல நாளில் நாம் செய்த வணக்கங்களை ஏற்று, அருள் மழை பொழிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved