Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:14:01 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11719
#KOTW11719
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 2, 2013
காவல்துறையின் கடவுச் சீட்டு விசாரணையிலுள்ள சிரமங்கள் சரிசெய்யப்படும்: ஜலாலிய்யாவில் நடந்த பாராட்டு விழாவில் காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் பேச்சு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3162 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) தொடர்பாக காவல்துறையால் மேற்கொள்ளப்படும் விசாரணைப் பணிகளில் காணப்படும் சிரமங்கள் மிகுந்த கவனத்துடன் சரிசெய்யப்படும் என, காயல்பட்டினம் ஜலாலிய்யாவில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய - ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் கூறியுள்ளார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினத்தை உள்ளடக்கிய ஆறுமுகநேரி சரக காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வருபவர் டி.பார்த்திபன். இவர் காவல் துறையில் சிறப்புற பணியாற்றியமைக்காக, இம்மாதம் 23ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வரால் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது.

இதனைப் பாராட்டி, காயல்பட்டினம் ஜலாலிய்யா சங்கம், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.), கற்புடையார் பள்ளி நிர்வாகங்களின் சார்பில், இம்மாதம் 01ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் சிற்றரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.



காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி விழாவிற்குத் தலைமை தாங்கினார். மஸ்ஜித் மீக்காஈல் - இரட்டை குளத்துப் பள்ளியின் தலைவர் ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி என்ற துரை, அதன் செயலாளர் ஹாஜி எஸ்.ஏ.முஹ்யித்தீன் தம்பி, ஹாஜி சோல்ஜர் அப்துல்லாஹ் ஸாஹிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் இசட்.எம்.முஹம்மத் முஹ்யித்தீன் கிராஅத் ஓதி, விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். விழா தலைவர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பொருளாளர் ஹாஜி எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ வாழ்த்துரை வழங்கினார்.

பின்னர், அண்ணா பதக்கம் பெற்ற ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனுக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் சார்பில், அதன் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், கற்புடையார் பள்ளியின் சார்பில், அதன் தலைவர் ஹாஜி ஏ.கே.ஷம்சுத்தீன், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.சி.) சார்பில், அதன் செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி சார்பில், அதன் துணைச் செயலாளர் கே.எம்.டி.சுலைமான், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில், ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி, மஸ்ஜித் மீக்காஈல் சார்பில், அதன் தலைவர் ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி என்ற துரை, காவல்துறை ஆய்வாளருடன் படித்த மாணவர்கள் சார்பில், எஸ்.ஏ.ஆர்.யூனுஸ் உள்ளிட்டோர் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.



பின்னர், காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் ஏற்புரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-

எனது சொந்த ஊர் திசையன்விளை. எனினும், நான் படித்தது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும், பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியிலும்தான். எனவே, இப்பகுதி எனக்குப் புதிதல்ல.

பள்ளிப்படிப்பின்போது நான் ஒரு கடைநிலை மாணவனாகவே இருந்து வந்தேன்... ஆங்கில மொழியில் கூட எனக்கு அவ்வளவாகப் புலமை கிடையாது... இன்னும் சொல்லப்போனால், மூன்று முறை ஃபெயில் ஆகியவன் நான்.

எனினும், நமது இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்கள் “கனவு காணுங்கள்” என்று சொன்னதற்கேற்ப, எனக்கும் பள்ளிப் பருவத்திலேயே ஒரு போலிஸ் சப் இன்ஸ்பெக்டராக வரவேண்டும் என்ற கனவு இருந்து வந்தது.



ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் எம்.ஏ. பட்டப்படிப்பை முடித்த நிலையில், கல்லூரியின் இறுதி நாள் விழாவில், “நான் என்னவாகப் போகிறேன்...?” எனும் தலைப்பில் மாணவர்கள் சிலர் உரையாற்றினர். சப் இன்ஸ்பெக்டராகி, நாட்டு மக்களுக்கு பணியாற்றப் போகிறேன் என அந்நிகழ்ச்சியில் நானும் பேசி, அதற்காக பரிசும் பெற்றேன்.

என்னை ஒரு முழு மனிதனாக்கிய பெருமை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி, பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி ஆகிய இரு கல்லூரிகளுக்கும் சேரும். இவ்விரு கல்லூரிகளுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

அப்பா கல்லூரியில் நான் பயின்றபோது, என்னுடன் விடுதியில் தங்கிப் படித்த மாணவர்கள் மொத்தம் ஒன்பது பேர். அவர்களுள் எட்டு பேர் முஸ்லிம்கள். இதனால், முஸ்லிம்களோடு ஒன்றிப் பழகும் வாய்ப்பு எனக்கு அன்றே கிடைத்துவிட்டது. தொழுகைக்காக அழைக்கும் பாங்கு எனக்கு இன்றும் மனப்பாடமாக உள்ளது.

இந்த பாராட்டு விழாவில் பேசிய விழா தலைவர் முன் வைத்த கோரிக்கையான பாஸ்போர்ட் வெரிஃபிக்கேஷன் சம்பந்தமாக, உள்ளூர்வாசிகள் - குறிப்பாக பெண்கள் மற்றும் வயோதிகர்கள் காவல் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதாகக் குறிப்பிட்டனர். அதை நானும் பல முறை பார்த்திருக்கின்றேன்.

“அவர்களின் ஆவணங்களை சரி பார்த்து, காக்க வைக்காமல் உடனே அனுப்பி வையுங்கள்‘” என எனது சக பணியாளர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இனி அந்தச் சிரமம் ஏற்படாமல் மிக கவனமாகப் பார்த்துக்கொள்வேன்... காயல்பட்டினம் மக்களுக்கு என்றும் உறுதுணையாக இருப்பேன்...

இப்படி ஒரு விழாவை ஏற்பாடு செய்து, இந்த எளியவனைப் பாராட்டியமைக்கு உங்கள் யாவருக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பாராட்டுகளுக்கெல்லாம் காரணமாக உள்ள இந்த உயரிய விருதை வழங்கிய நம் தமிழக முதல்வர் அவர்களுக்கும் இவ்வேளையில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப் பட்டிருக்கின்றேன்.

தென் மாவட்டங்களான மூன்று மாவட்டங்களில், நம் மாவட்டத்தைச் சார்ந்த எனக்கு இவ்விருது கிடைத்திருப்பது பெருமையாக உள்ளது,..


இவ்வாறு அவர் பேசியதோடு, தான் பெற்ற - தமிழக அரசின் அண்ணா பதக்கம் மற்றும் காசோலையைக் காண்பிக்க, பார்வையாளர்கள் ஆவலுடன் அவற்றைப் பார்த்தனர்.



நன்றியுரையைத் தொடர்ந்து, மஸ்ஜித் மீக்காஈல் பள்ளியின் இமாம் மவ்லவீ முஹம்மத் ஹஸன் துஆ பிரார்த்தனையுடன் விழா நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.



இவ்விழாவில், காயல்பட்டினம் நகர பிரமுகர்கள், ஜமாஅத்துகள் - பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.



முன்னதாக, அண்ணா பதக்கம் பெற்ற காவல்துறை ஆய்வாளரை, நிகழ்விடமான ஜலாலிய்யா வளாகத்தின் முன் நகரப் பிரமுகர்கள் காத்திருந்து வரவேற்றனர்.



தகவல், களத்தொகுப்பு & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்


தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றமைக்காக, ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபனைப் பாராட்டி, ஆறுமுகநேரி நகர பொதுமக்கள் சார்பில் ஏற்கனவே பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த பலரும் அதில் கலந்துகொண்டனர்.

அதுபோல, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசரக் கூட்ட நிறைவில், நகர்மன்றத்தின் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்தப்பட்டது.

காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணியின் சார்பில் பாராட்டுக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இவர் இவ்வளவு நெருக்கமானவரா!
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [02 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 29937

நம் ஊருக்கும் முஸ்லிம்களுக்கும் இவர் இவ்வளவு அறிமுகமானவரா! இவர் பணி சிறக்க வாழ்த்துவோம். நாமும் இந்த போலீஸ் நண்பரின் சேவையை நன்கு பயன்படுத்துவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஒரு வித்தியாசமான காவலர்
posted by mackie noohuthambi (kayalpatnam) [02 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29938

காவல் துறை அதிகாரி என்றாலே மக்களுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக காட்சியளிப்பார். 1992 இல் நடந்த காயல்பட்டினம் கலவரத்தில் காவல் துறையினர் நடத்திய அராஜக அட்டூழிய பேயாட்டம் இந்த ஊர் மக்களை காவல் துறையினர் மீது வெறுப்பு கொள்ள செய்தது. அவர்கள் நடத்திய வெறியாட்டத்தால் இன்றும் கூட காது கேட்கும் திறனை இழந்து நிற்பவர்களின் நானும் ஒருவன்.

ஆனால் திரு பார்த்திபன் அவர்களின் சிறப்பான் அவை அடக்கமான பேச்சு நம் எலோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அதற்கு காரணம் அவரே சொல்கிறார். இஸ்லாமிய சகோதரர்களுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம். இறை அழைப்பை அவர் காது கொடுத்து கேட்டு அதை இன்னும் நினைவில் வைத்திருக்கும் பண்பு.

"காவல் துறை சீர்திருத்தத்துக்கான பரிந்துரைகளை அமுல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய மாநில அரசுகள் அதை நிறை வேற்றவில்லை என்ன காரணம்?" என்று புதிய தலைமுறை செப்டம்பர் 5,2013 இதழில் தலைப்பு கட்டுரையே வெளியாகியுள்ளது.

சில வேளைகளில் வேலைப் பளுவின் அழுத்தம் மனிதனை மிருக உணர்வுக்கு ஆளாக்கி விடுகிறது இதற்கு காவல்துறை விதிவிலக்கல்ல என்ற உண்மையை உணரும்போது காவலர்களின் அத்துமீறலில் ஒரு அர்த்தம் இருப்பது தெரிய வருகிறது. ஆனாலும் அது எல்லை மீறி போகின்றபோது, அடிபட்டவன் மிருகமாகிறான். விளைவு இரு சாரரும் ஒருவருக்கொருவர் விரோதிகள் போல் ஆகிவிடுகிறார்கள்.

எல்லா காவலர்களும் திரு பார்த்திபன் அவர் போல் மனித நேயத்துடன் பிரச்னைகளை அணுகினால் "காவலர்கள் எங்கள் தோழர்கள்" என்று காயலர்கள் நினைக்க தலைப்படுவார்கள். காவல் நிலையமே இல்லாத ஊர் என்று பெயர் பெற்ற காயல்பட்டினம் உங்களை வரவேற்று புகழாடை தந்து பாராட்டி இருக்கிறது.

முதலமைச்சர்கள் வரலாம், போகலாம் மாறலாம். ஆனால் இந்த காயலர்களின் அன்பும் பரிவும் பாசமும் என்றும் நிலையானது என்பதை பார்த்திபன் அவர்கள் 100% விழுக்காடு நம்பலாம். எங்களை நோக்கி நீங்கள் நீட்டும் நேசக் கரங்கள் உங்களை எங்களோடு இணைக்கும் பாசக் கரங்களாக நிச்சயம் மாறும் என்ற உறுதிமொழியை நாங்கள் தருகிறோம்.

நீங்கள் பல்லாண்டு காலம் இந்த மண்ணின் காவலராக நின்று நிலைத்து சேவை செய்து மக்களின் நன் மதிப்பை பெற்று வாழ வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Cnash (Makkah) [02 September 2013]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 29940

நல்ல ஒரு நிகழ்வு.. நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஜலாலியா நிர்வாகத்தினருக்கு பாராட்டுக்கள்!! அதே விழாவில் பாஸ்போர்ட் விசாரணை என்ற பெயரில் நடக்கும் சிரமங்கள் குறித்தும் எடுத்து வைத்தமைக்கு நன்றிகள்!!

முன்னர் ஒரு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பாஸ்போர்ட் விசாரணைக்காக பெண்கள் காவல்நிலையம் செல்ல வேண்டும் என்ற விதியை மாற்ற பரிசீலனை செய்ய படும் என்று சொன்னதாக ஞாபகம். இது குறித்து ஏதும் அரசானை பிறப்பிக்க பட்டதா? தகவல் தெரிந்தால் சொல்லவும்.

காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் அவர்களின் சேவையை நமதூர் மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திகொள்ளுவோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [03 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29970

ஒரு காலத்தில் தமிழக காவல் துறை நல்ல உலகத்தில் இச்காட்லாது யார்ட் காவல் துறைக்கு இணையாக இருந்தது. ஆனால் இடையபட்ட காலத்தில் அதன் தகுதிகளை இழந்து இருப்பது நமக்கு வருத்தத்தை தருவதாக உள்ளது . திரு.பார்திபன் போன்றோர்களை பார்ப்பது கனவு போல் உள்ளது பார்த்திபன் கனவு எப்படி நடந்ததோ, அவர்போல் நல்ல மனிதர்கள் இதுபோன்ற துறைகளுக்கு நிறைய தேவைபடுவதால் திறமையான் நலவர்கள் எத்துறைக்கு வந்து தமிழக காவல்துறையை முதல் நிலைக்கு கொண்டுவரணும். நம் மக்களும் காவல்துறை மற்றும் அது சார்த்து பணியை செயது நாட்டுக்கும் மக்களுக்கும் கடமையாற்றனும் காவல்துறை ஆய்வாளர் திரு .டி.பார்த்திபன் அவர்களுக்கு எங்கள் சல்யூட் இறைவன் இது போன்ற நல்லவர்களை தன அருளால் காக்கணும் அல்லாஹ் உன் காவல் தமிழக காவல்துறைக்கு என்றும் வழங்குவாயாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...வாழ்த்துக்கள்
posted by NIZAR (KAYALPATNAM) [03 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29977

திசையன் விலையை சேர்ந்த எங்கள் கல்லூரி முன்னாள் மாணவர் பார்த்திபன் அவர்களுக்கு தமிழக அரசு வழங்கி உள்ள அண்ணா விருது பெற்றதற்காக காயல் நகர அணைத்து பகுதி மக்கள் கொடுத்த வரவேற்பும், வாழ்த்துக்களும் அவருக்கு எல்லை இல்லா சந்தோசத்தை அளித்து இருக்கும் என எண்ணுகிறேன்., ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் இது போன்ற சாதனையாளர்களை கவுரவபடுத்துவது, கண்ணிய படுத்துவது நம் ஊரின் தொன்று தொட்டு வருகிற நடைமுறையாகும்.

அந்த அடிப்படையில் ஜலாளியாவில் நடந்த இந்த பாராட்டுவிழா மிகவும் வரவேட்புக்கிரியதாகும். பாஸ்போர்ட் விசாரணை விசயத்தில் இருக்கும் சிரமம் சரிசெய்யப்படும் என்று இன்ஸ்பெக்டர் சொல்லி இருப்பது மிகுந்த நன்றிக்குரியதாகும்.

முந்தய காலத்தில் பாஸ்போர்ட் எடுப்பவர்கள் போலிஸ் ஸ்டேஷன் போக வேண்டிய அவசியம் இல்லை. அனால் இப்பொழுது பெண்களாக இருந்தாலும், குழந்தைகளாக இருந்தாலும் நேரடியாக செல்லவேண்டிய உள்ளது. இந்த விசயத்தில் இருக்கும் சிரமங்களை சீர்செய்து மக்களுக்கு எளிமையான முறையில் விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று காயல் மக்கள் சார்பில் இன்ஸ்பெக்டர் அவர்களை கேட்டு கொள்கிறேன்,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved