Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:20:07 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11965
#KOTW11965
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 2, 2013
ஹஜ் பெருநாள் (1434) எப்போது?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3062 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

துல்ஹஜ் (1434) மாத அமாவாசை அக்டோபர் 5 சனிக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி நள்ளிரவு 12:34 மணி அளவில் ஏற்படுகிறது. அப்போது இந்திய நேரம் அக்டோபர் 5 அதிகாலை 6:04 மணி.



அக்டோபர் 5 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:06 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:21. அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மறைந்து 15 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைகிறது. மேலும் பிறையின் வயது சுமார் 12 மணி நேரம் ஆகும்.

அன்று பசிபிக் கடல் பகுதியில் வெறுங்கண்கள் கொண்டு எளிதாகவும், தென் அமெரிக்க கண்டத்தின் அநேக பகுதிகளில் வானிலை சூழல் தெளிவாக இருந்தால் வெறுங்கண்கள் கொண்டு எளிதாகவும், ஆப்ரிக்கா கண்டத்தின் மத்திய மற்றும் தென் பகுதிகளிலும், வட அமெரிக்கா கண்டத்தின் மத்திய பகுதியிலும், மத்திய அமெரிக்க கண்டத்திலும், தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.





அக்டோபர் 6 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:06 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:10. சூரியன் மறையும்போது சந்திரனின் வயது 36 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 64 நிமிடம் வரை பிறை இருக்கும். காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் எளிதாக காணலாம்.



வடக்கு ஐரோப்பா, வடக்கு ரஷ்யா பகுதிகளில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும், உலகின் இதர பகுதிகளில் வெறுங்கண்கள் கொண்டு எளிதாகவும் - அக்டோபர் 6 அன்று - பிறையை காணலாம்.

பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ள ஒரு சாராருக்கும் (Hijra Committee, Kerala), மற்றொரு விதிமுறை அடிப்படையில் பிறையினை கணக்கிடும் Islamic Society of North America [ISNA], Fiqh Council of North America [FCNA], European Council for Fatwa and Research [ECFR], Conseil Français du Culte Musulman அமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் சாராருக்கும் அக்டோபர் 6 - துல்ஹஜ் 1 ஆகும். அக்டோபர் 15 அன்று ஹஜ் பெருநாளாகும்.

உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு அக்டோபர் 5 (அமாவாசை) அன்று துல்கஃதா 29 பூர்த்தி ஆகிறது. அன்று பசிபிக் கடல் பகுதிகளிலும், தென் அமெரிக்க கண்டத்தின் அநேக பகுதிகளிலும் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காணலாம். அப்பகுதிகளில் அக்டோபர் 5 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் துல்கஃதா 29 பூர்த்தி செய்து, அக்டோபர் 6 அன்று துல்ஹஜ் மாதம் துவக்குவர். அக்டோபர் 15 அன்று ஹஜ் பெருநாளாகும். அவ்வாறு தகவல் கிடைக்கப்பெறவில்லை எனில் அவர்கள் - அக்டோபர் 6 அன்று துல்கஃதா 30 பூர்த்தி செய்து, அக்டோபர் 7 - துல்ஹஜ் மாதம் துவக்குவர். அப்போது அக்டோபர் 16 அன்று ஹஜ் பெருநாளாகும்.

அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு அக்டோபர் 5 (அமாவாசை) அன்று துல்கஃதா 28 பூர்த்தி ஆகிறது. அக்டோபர் 6 அன்று காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்ணால் காணலாம். அவ்வாறு பிறையைக்கண்டால் அக்டோபர் 6 அன்று அவர்கள் துல்கஃதா 29 பூர்த்தி செய்வர். அக்டோபர் 7 துல்ஹஜ் மாதம் துவக்குவர். அப்போது அக்டோபர் 16 அன்று ஹஜ் பெருநாளாகும். வானிலை சூழல் காரணமாக அன்று பிறை தென்படவில்லை எனில் - அக்டோபர் 7 அன்று துல்கஃதா 30 பூர்த்தி செய்து, அக்டோபர் 8 துல்ஹஜ் மாதம் துவக்குவர். அப்போது அக்டோபர் 17 அன்று ஹஜ் பெருநாளாகும்.

துல்கஃதா 1434 மாத பிறை விபரங்களை காண இங்கு அழுத்தவும்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஹஜ் பெருநாள் 15 Oct அறிவிப்பு.?
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [02 October 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30500

இரண்டு வாரங்களுக்கு முன் ஒரு ஜூம்மா தொழுகைக்காக இங்கு உள்ள கோங்க்தாலு பள்ளியில் நான் சென்று இருந்த போது ஹஜ் பெருநாள் 15 Oct என்றும் தொழுகைகான நேரமும் அறிவிக்க பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by farook (Saudiarabia) [02 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30501

சவுதி பிறையை கணக்கு எடுபவருக்கு எப்ப பெருனால்னு இதில் தெளிவில்லையே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. வந்துட்டாங்கையா....வந்துட்டாங்க
posted by முஹம்மது ஆதம் சுல்தான். . (YANBU) [02 October 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30503

வந்துட்டாங்கையா....வந்துட்டாங்க நாங்க ஏதோ ஒரு ஞாபகத்தில இருந்தாலும் இந்த இணையதள காரங்க சும்மா இருக்க மாட்டங்க போலிருக்குது. எப்ப பெருநாள்? எப்ப பிறை பிறக்கும்? எந்த குரூப் எப்ப கொண்டாடுவாங்க?

குடைஞ்சு எடுக்கிறதை கொஞ்சம் ஒரம் கட்டிவைச்சு பாருங்களேன் உங்களை மட்டுமல்ல, எல்லா அமைப்பினரையும எல்லா கொள்கைவாதிகளையும், சங்கடப்படும் ஜமாத்தார்கள் அனைவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்!

பிறகு பாருங்கள் இவ்விஷியத்தை ஊரில் சீண்டுவதற்கு ஆளே இருக்காது!

ஒரு காலத்தில் கல்யாண வீட்டில் ரேடியோ வைத்ததை கண்டித்த ஆலிம்கள் பிறகுஅதை யாரும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்ததால் அது தானாகவே நின்றுவிட்டது மட்டுமல்ல அது அநாகரிக செயல்போல் வடிவமாகிவிட்டது! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சர்வதேசப் பிறையல்ல. சவுதி தேசப் பிறை தான்.
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [02 October 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30508

"உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு அக்டோபர் 5 (அமாவாசை) அன்று துல்கஃதா 29 பூர்த்தி ஆகிறது. அன்று பசிபிக் கடல் பகுதிகளிலும், தென் அமெரிக்க கண்டத்தின் அநேக பகுதிகளிலும் வெறுங்கண்கள் கொண்டு பிறையை காணலாம். அப்பகுதிகளில் அக்டோபர் 5 அன்று பிறை காணப்பட்ட தகவல் கிடைக்கப்பெற்றால் - அவர்கள் துல்கஃதா 29 பூர்த்தி செய்து, அக்டோபர் 6 அன்று துல்ஹஜ் மாதம் துவக்குவர். அக்டோபர் 15 அன்று ஹஜ் பெருநாளாகும்"..... (Copy & Paste).

மேற்கூறப்பட்ட படி நடக்க வாய்ப்பில்லை. காரணம். நீங்கள் எழுதியதுபோல பசிபிக் பெருங்கடல் பகுதியிலோ அல்லது தென் அமெரிக்க கண்டத்திலோ புறக் கண்ணுக்கு பிறை தென்பட்டு (அவர்களுக்கு மக்ரிப் நேரத்தில்) அந்த செய்தி நம்ம ஊரை அடையும்போது (நமது நேரம் குறைந்தது அடுத்த நாள் 6-10-2013) அதிகாலை 3:30 மணி. (நம்மைவிட அவர்கள் குறைந்தது 8:30 மணி நேரம் பின் தங்கியுள்ளார்கள்). அதிகாலை 3:30 மணிக்குப் பிறகு வந்த செய்தியை பெற்று நாளை கணக்கிடுவது அல்லது பெருநாள் கொண்டாடுவது என்பது இவர்கள் சரித்திரத்தில் இல்லை. இரவு 10 மணியோட கடையை சாத்திடுவாங்க.

ஆதலால் 6ஆம் தேதி சர்வதேசப் பிறை கொள்கையுடையோருக்கு துல்-ஹஜ் முதல் நாள் ஆக முடியாது. மாறாக "துல்-கய்தா" 30 வது நாள் தான் பூர்த்தியாகும். காரணம், சர்வதேசப் பிறை கொள்கையை பின்பற்றுபவர்கள் சவுதி தேசப் பிறையைத்தானே ஏற்றுக் கொள்வார்கள். South America பிறையை அல்ல.

ஆனால் சொல்வதென்னவோ சர்வதேசப் பிறை என்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [02 October 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30509

அருமை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளை வெளேர் என்று விட்டுச் சென்ற மார்க்கத்தில் நிலைமை இப்படி உள்ளது.

வல்ல அல்லாஹ். அனைவர்களுக்கும் நல்ல வழியை காட்டுவானாக.

வேறு என்ன எழுத.. !!!!! துஆ தான் செய்யனும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஒரேவழி ஒற்றுமையே
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [03 October 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 30511

பிறை பார்ப்பதை ஆய்வு செய்வது இப்போது காயல் பட்டணத்தில் அதிகமாகி விட்டது.ஒவ்வொரு இயக்கங்களும் அவரவர் தகுதிக்கு தனித்தனியாக ஆய்வு செய்ய துவங்கிவிட்டன. காயல்பட்டணத்திற்கு மட்டும் மூன்று பெருநாள்.

இங்குள்ள வேற்றுமைபோன்று உலகில் வேறு எங்கும் காண முடியாது.இங்குள்ள மக்கள் உலகில் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்றனர்.அவரவர் வசிக்கும் நாட்டில் பெருநாள் கடைபிடிக்கப்படுவதர்க்கு ஏற்ப , அதே நாளில் காயல் பட்டணத்திலும் அவர்களின் உறவினர்கள் பெருநாள் கடைபிடிக்க வேண்டும் என ஆவல் கொள்கின்றனர்… ஒவ்வொரு பிரவினரின் ஆதீக்கத்திலும் ஒவ்வொரு வலை தளங்கள். அவர்களின் விருப்பத்திற்கேற்ப அந்த வலைத்தளங்கள் பரப்புரை செய்கின்றன. மார்க்க விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் உள்ளூர் ஆலிம்களின் அறிவுரைகளை மதிப்பதில்லை.இந்த மார்க்க அறிஞர்களின் அறிவுறுத்தல்களை ஊதாசீனம் செய்கின்றனர். அதன் விளைவாகவே இங்கு பெருநாட்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிகிறது.

முஸ்லிம்களின் ஆட்சி இல்லாத நாடுகளுடன் ஒப்பிடும்போது , இந்தியாவில் நிலைமை சற்று மேலானது.. இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் பிறை அறிவிப்பை செய்வதற்கு பெருநகரங்களில் காஜிகள் இருக்கின்றனர். மாவட்ட காஜிகளும் உள்ளனர். ஆனால் இவைகளைத்தான் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்ற அரசு சட்டம் இல்லை. எனினும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைபெரும்பாலான மாநிலங்கள் ஒரே நாளிலேயே பெருநாள் கடை பிடிக்கின்றனர்.

மேற்கு கரையோர மாநிலங்கள் மட்டும் இதில் விதிவிலக்கு.மேற்க்குகரையோர மாநிலங்களில் கடல் பகுதியாக இருப்பதால் 180 கோணம் சாய்வு வரை பிறை தெரிய வாய்ப்பு இருப்பதாலும், சூரியன்/சந்திரன் தாமதமாக மறைவதாலும் , இவர்களுக்கு நாட்டின் பிற பகுதிகளை காட்டிலும், சற்றுமுன் பிறை தெரிய வாய்ப்பு.எனவே ஒரு நாள் முன்னதாக பிறை தெரிய வாய்ப்பு… மேற்கு மலைதொடர் குருக்கிடுவதன் காரணமாக , கிழக்கு பகுதி மக்களுக்கு 135 கோணம் சாய்வு வரை மட்டுமே பிறை தெரிய வாய்ப்பு உள்ளதாலும் சூரியன்/சந்திரன் சற்று முன்னதாக மறைவதாலும் பிறையை அன்றே காணும் வாய்ப்பு சற்றே குறைவு. இதுவே நம் நாட்டில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கான வேறுபாடு.

எது எப்படி இருப்பினும் காயல்பட்ட்னத்தை பொருத்தவரையில் மஹழரா – ஜாவியா ஆலிம்களின் கூட்டு முடிவே இறுதியானது. அதுவே ஏற்புடையது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved