Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:15:24 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12251
#KOTW12251
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 4, 2013
எரியாத தெரு விளக்குகள்: நகராட்சியைக் கண்டித்து இளைஞர் ஐக்கிய முன்னணி ஆர்ப்பாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4285 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் 07ஆவது வார்டுக்குட்பட்ட தீவுத்தெரு, 08ஆவது வார்டுக்குட்பட்ட முத்துவாப்பா தைக்கா தெரு ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக தெரு விளக்குகள் பல எரியவில்லை என்றும், பலமுறை இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் அவை சரி செய்யப்படவில்லை என்றும் கூறி, காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், இன்று மாலை 04.30 மணியளவில் நகராட்சிக்கெதிராக கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.





இளைஞர் ஐக்கிய முன்னணியின் நடப்பு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினர், காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக நிகழ்விடம் வந்திருந்தனர்.



ஆர்ப்பாட்டம் துவங்க ஆயத்தமான நேரத்தில் அங்கு வந்த - இளைஞர் ஐக்கிய முன்னணியின் மூத்த உறுப்பினர் நஹ்வீ அஹ்மத் முஹ்யித்தீன், “அதான் தெரு விளக்குதான் பொருத்தப்படுகிறதே...? ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்ய வேண்டியதுதானே...? என்று கேட்டபோது, திட்டமிட்ட படி ஆர்ப்பாட்டம் நடக்கும் என, ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் கூறினர்.



தொடர்ந்து நடைபெற்ற வாதப் பிரதிவாதங்களால், இளைஞர் ஐக்கிய முன்னணியையொட்டிய - ஸீ கஸ்டம்ஸ் சாலை பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. சில நிமிடங்களில் அவ்விடம் வந்த ஆறுமுகநேரி காவல்துறையினர், காவல்துறை முன்னனுமதி பெறாததைச் சுட்டிக்காட்டி, ஆர்ப்பாட்டத்தைக் கைவிடுமாறு கூறினர். அடுத்த சில நிமிடங்களில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.



பின்னர், இளைஞர் ஐக்கிய முன்னணியின் கோட்டைச் சுவரையொட்டிய மின் கம்பத்தில் ஹரிக்கேன் விளக்கு எரிய விடப்பட்டது.



ஆர்ப்பாட்ட நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன், முத்துவாப்பா தைக்கா தெருவில் - தெரு விளக்குகள் எரியவில்லையெனக் கூறப்பட்ட மின் கம்பங்களில், 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி மேற்பார்வையில் புதிய தெரு விளக்குகள் நிறுவும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.







அவரிடம், எரியாத தெரு விளக்குகள் தொடர்பான முறையீடுகள் குறித்து வினவியபோது,



“எனது 07ஆவது வார்டுல 45 லைட் எரியலை... போன தடவையே எம்.இ. (நகராட்சி பொறியாளர்) உங்க வார்டுக்கு லைட் தாறேன்னு சொன்னாரு... போன திங்க கிழமை இவங்ககிட்டலாம் சொல்லிட்டு போனேன்... ஆர்ப்பாட்டம்லாம் பண்ணாதீங்க... லைட்டு தாறேன்னுட்டாங்கன்னு சொல்லி...

அதுக்குப் பிறகு எம்.இ. ஒரு வாரமா ஃபோனையே எடுக்கிறது கெடையாது... இன்னிக்கு ஃபோன எடுத்திருக்காரு... லைட்ட தாறேன்னு சொல்லியிருக்காரு... இன்னிக்கு போயி கேட்டிருக்கேன்... அதுக்கெடையில ஜெ.இ. (மின்வாரிய துணைப் பொறியாளர்) ஆள் விடவில்லை... அப்புறம் ஜெ.இ. கிட்ட ஆள் கேட்டு, அவரு நாலு மணிக்குப் பிந்திதான் ஆள் விட்டிருக்கிறாரு... இப்ப லைட்ட மாட்டிக்கிட்டு இருக்கோம்...

ஏன்னா, இந்த லைட்டு வந்து அரசியல் ஓடுற மாதிரி ஓடிக்கிட்டு இருக்கு... நான் லைட் கேட்டதற்குப் பிறகு கேட்ட நாலு வார்டுகளுக்கு மாட்டுறதுக்கு ஆள் விட்டுட்டாங்க... ஐந்தாவதாதான் எனக்கு தந்திருக்காங்க... இவங்க போராட்டம் பண்றாங்கன்னு சொன்னப்புறம்தான் லைட் தந்திருக்காங்க...”
என்றார்.

“போராட்டம் அறிவிக்கப்பட்ட பிறகுதான் இந்த முயற்சியை எடுத்தீர்களா, முன்பே எடுத்தீர்களா?” என கேட்கப்பட்டபோது,

“அதுக்கு முன்னாடி ஒன்னரை மாசமா கேட்டுக்கிட்டு இருக்கேன்... இன்னைக்குத் தாறேன், நாளைக்குத் தாறேன்னு (அதிகாரிகள்) ஏமாத்திக்கிட்டே இருக்காங்க...” என்றார் அவர்.

“எங்கெங்கு எவ்வளவு காலமாக விளக்குகள் எரியவில்லை?” என்று கேட்கப்பட்டதற்கு,

“தீவுத்தெரு, சிங்கித்துறை, ஈக்கியப்பா தைக்கா தெரு, பண்டகசாலை தெரு ஆகிய இடங்களில் 45 தெரு விளக்குகள் எரியவில்லை” என்றார்.

“இதுக்கிடையில், லைட் மாட்டுன காசக் கூட இன்னும் வாங்கவில்லை... மாசம் மூன்றரையாயிட்டு! போன வாட்டி மாட்டுன காசக் கூட இன்னும் தரலை... ஒரு லைட்டுக்கு 30 ரூபாய் கொடுத்து மாட்டுறோம்... நகராட்சியிலேர்ந்து இருபது ரூபாய் தரனும்... காசே தர மாட்டேங்கறாங்க... எங்க கையிலேர்ந்துதான் கொடுக்கனும் அத!”

இவ்வாறு, 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி கூறினார். உறுப்பினர் ஜெ.அந்தோணியின் இந்த கருத்துக்களை உள்ளடக்கிய அசைபடப்பதிவைக் காண இங்கே சொடுக்குக!

காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தெரு விளக்குகள் பல காலமாக எரியாமல் உள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்களால் தொடர்ந்து முறையிடப்பட்டும் வருகிறது.

மின் கம்பங்களில் தெரு விளக்குகளைப் பொருத்துவதற்கென நகராட்சியில் சிறப்பு ஊழியர்கள் இல்லாமையும், அவ்வப்போது தற்காலிகமாக பொறுப்பமர்த்தப்படும் ஊழியர்கள் சொற்ப காலத்தில் பணியை விட்டுவிட்டுச் சென்றுவிடுவதும் நகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு தருணங்களில் காரணங்களாகக் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு காயல்பட்டினம் தேர்வு நிலை பேரூராட்சி, நகராட்சி தரத்தைப் பெற்றது. மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920இன் படி, நகராட்சியில் அமைந்துள்ள தெரு விளக்குகளை நகராட்சியே பராமரிக்க வேண்டும் என்று உள்ளது. இருந்தும், கடந்த 9 ஆண்டுகளாக அதற்கென அரசால் பணியிடம் உருவாக்கப்படவோ, ஊழியர்கள் நியமிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், நகராட்சி தெரு விளக்குகள் பராமரிப்பில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக அவ்வப்போது குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

இந்நிலையில், காயல்பட்டினம் நகராட்சியின் தெரு விளக்குகள் பராமரிப்பை தனியார்மயமாக்க - அண்மையில் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [04 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31213

ஜமாத்தார் மூலம் தேர்வு செய்த 8வது வார்டு உறுப்பினர் தனது பகுதி மின்கம்பம் குறைகளை பார்க்க தவறியமைக்கு, தானாக தனது கொவருவ உறுப்பினர் பதவியை ராஜநாமா செய்வது மேல்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...பார்த்தீர்களா , ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு
posted by K .V .A .T .செய்யது அஹமது கபீர் . (kayalpatnam) [05 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31214

பார்த்தீர்களா , ஒன்றுபட்டாலே உண்டு வாழ்வு - என்பது விளங்குகிறதல்லவா? நகர உறுப்பினர்களும் , நகர மக்களும் ஒன்று சேரும்போது , தானாகவே வேலை நடக்கிறது பார்த்தீகளா? இனியாவது உங்களின் ஈகோவை விட்டு விட்டு , ஊர் நன்மைக்காக ,நகர் மன்ற தலைவியும் - உறுப்பினர்களும் , ஒன்று சேர்ந்து , ஊருக்கு நல்லது செய்ய , முயற்சியுங்களேன் .... எங்கள் ஆசையும் அதுதானே?

அன்புடன்
கே .வி .ஏ .டி . கபீர்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN (kayalpatnam) [05 November 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31217

நஹ்வி அஹ்மது மெய்தீன் அவர்கள் YUF ன் மூத்த உறுப்பினராக வந்து பேசவில்லை. எங்க கட்சிக்கு கெட்டபேர் வந்துவிடும் என்றுதான் பேசினார். அவருக்கு தெரு பிரச்சனையைவிட அவருடைய கட்சிதான் பெரிசுபோல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அழுவுன பிள்ளை தான் பால் குடிக்கும்
posted by M.S.Kaja Mahlari (Singapore) [05 November 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 31218

தெரு விளக்கு தொடர்ப்பான முழுமையான தகவல்களை தொகுத்து தந்த செய்தியாளருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !

உங்கள் பொதுநல சேவைகளை எல்லாம் வல்ல அல்லாஹ் அங்கீகரிப்பானாக !

இளைனர் ஐக்கிய முன்னணியின் பொதுநல சேவைகள் மென்மேலும் சிறந்தோங்க செய்வானாக !

நாடாக இருக்கட்டும் , ஊராக இருக்கட்டும், நகர்நல மன்றமாக இருக்கட்டும் , மக்கள் பிரச்சனை என வரும்போது இப்படி, ஆர்பாட்டம் , போராட்டம் என வரும்போதுதான் நடவடிக்கை என்ற போக்கு மாறவேண்டும் !

மொத்தத்தில் "அழுவுன பிள்ளை தான் பால் குடிக்கும் " என்ற கதையாகிவிட்டது !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by SHAIK SALAHUDEEN (DUBAI) [05 November 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31224

சஹோதரர் ஜைனுல் ஆப்தீன் கருத்து மிக சரியானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...ஆஹா !! ஆஹா பேஸ் ,பேஸ்
posted by A.R.Refaye (Abudhabi) [05 November 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31225

ஆஹா !! ஆஹா பேஸ் ,பேஸ் -நகராச்சி மன்ற உறுபினர்களின் ஒற்றுமை கண்டு மெச்சுகிறேன்.

காயல்பட்டினம் நகராட்சியின் 07ஆவது வார்டுக்குட்பட்ட தீவுத்தெரு, 08ஆவது வார்டுக்குட்பட்ட முத்துவாப்பா தைக்கா தெரு ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக தெரு விளக்குகள் பல எரியவில்லை என்பதற்காக வார்டு வரைமுறைகளை எல்லாம் தான்டி பிற பகுதி வார்டு உறுப்பினர்கள் குறிப்பாக காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாப்தீன், 17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத் ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக நிகழ்விடம் வந்திருந்தனர் c&p

உண்மையில் வாழ்த்தி வரவேற்க்கப்படவேண்டிய ஒன்று இதுபோல் அணைத்து வார்டுகளிலும் ஏற்படும் குறைகளை நீக்க கூட்டு குரல்கொடுக்க உறுதி எடுத்து கொள்ளுங்கள்,

எது எப்படியோ அப்பகுதி உறுப்பினர் ஜெ.அந்தோணி மேற்பார்வையில் புதிய தெரு விளக்குகள் நிறுவும் பணி நடைபெறும் நிகழ்வு கழகம் பிறந்தால் நியாயம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.பாராட்டுக்கள்.

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [05 November 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31226

வாழ்த்துக்கள் YUF சங்கத்தின் மகத்தான சேவை. மக்களுக்காக தான் கட்சியே தவிர, கட்சிக்காக மக்கள் அல்ல .இந்த மாதிரி நேரத்தில் கட்சியை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு நமது பகுதிக்காக போராட வேண்டும். நமது வார்ட் உறுப்பினர் எங்கே? ஏன் கலந்து கொள்ள வில்லை என்று சங்க நிருவாகிகள் அழைத்து பேச வேண்டும் சரியான விளக்கம் தர வில்லை என்றால் ராஜினாமா செய்ய சொலுங்கள்.

அடுத்து இந்த ஆர்பாட்டம் செய்ய வில்லை என்று சொன்னால் நகராத மன்றம் (செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று கும்ப கர்ணனாக தூங்கி கொண்டே இருக்கும்) தற்போதும் தூங்கி கொண்டு தான் ருக்கிறது ) ஆர்பாட்டம் என்று சொல்ல போய் தான் அடித்து பிரண்டு வந்து LIGHT மாட்டுகிறார்கள்.பேசாமல் தலைவி, உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டு செல்லுங்கள் அதிகாரிகளை எப்படி வழிக்கு கொண்டு வரமுடியும் என்பதை எங்கள் YUF சங்கம் உள்ளிட்ட சங்கங்கங்கள் பார்த்து கொள்ளும்.எப்பேர் பட்ட மேல் மட்ட அதிகாரிகளையே பார்த்து வழிக்கு கொண்டு வந்த சரித்திரம் YUF சங்கத்திற்கு உண்டு. யா அல்லாஹ் எங்கள் ஊர் மக்களை காப்பாற்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. அன்று விட்டிருந்தால் இன்று வெளிச்சம் கிடைத்திருக்கும்....!
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [05 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31231

வெளிச்சம் கேட்டு மக்கள் வீதிக்கு வந்துவிட்டனர். சபாஷ்...! மின்விளக்கு விஷயத்தில் உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் மற்றும் குளறுபடிகள், பதுக்கல், உருட்டல், மிரட்டல் அனைத்தயும் சேர்மன் ஆபிதா அவர்கள் தன்னிலை விளக்க பொதுக்கூட்டத்தில் மேடையில் போட்டு உடைத்தார்கள்.

பிற ஊர்களிலுள்ள நகராட்சிகளில் தெரு விளக்கு மாட்டும் பணிக்கு கூலி குறைந்த விலையில் இருக்கும் போது காயல்பட்டினத்தில் மட்டும் ஏன் அதிக பணம் கொடுக்க வேண்டும்? சரி அதுக்கு பிறகும் ஒரு வழியாக தீர்மானம் போட்டு கூலி கொடுத்து லைட் மாட்ட தனியார் ஆட்களை அழைத்து வந்து வேலை செய்ய வைத்தால் நமது வீர தீர உருப்பினர்கள் அவர்களை கம்பத்தில் ஏற விடாமல் அப்ப்டியே ஏறினால் காலை உடைத்துவிடுவேன். லைட் மாட்டக்கூடாது என மிரட்டியதாக தலைவி பொது மேடையில் முழங்கினார்களே?

மொத்தத்தில் உறுப்பினர்களும் சரி, ஊழியர்களும் சரி ஏன் நகராட்சி ஆணையரும் சரி இந்தம்மா தலைவராக இருக்கும் போது எதுவுமே நடக்கக் கூடாது என்பதில் தெளிவா இருக்காங்க. இருக்கட்டும்... இருக்கட்டும் இப்படி இருந்ததால்தான் இப்ப மக்கள் கொடி பிடிக்க வந்துட்டாங்க இதுலெ வேடிக்கை என்னவெனில் இத்தனை நாளா இருந்த பிரச்சனையை கண்டுகொள்ளாமல் சேர்மன் ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேர்ந்த நாலாவது நாளே போராட்டம், ஆர்ப்பாட்டம் என அதுவும் பல வார்டு மெம்பர்கள் சேர்ந்து கொண்டு கைகோர்த்திருப்பது வேடிக்கையாக உள்ளது.

பொது மக்களே..உஷார்! உங்கள் வார்டு உறுப்பினர்கள் சட்டையைப் பிடித்து தட்டிக்கேளுங்கள். இந்த இரண்டாண்டுகளில் நீங்கள் வெளிநடப்பு செய்தே காலத்தை ஓட்டி விட்டீர்கள். உறுப்படியா எங்களுக்கு (மக்களுக்கு) என்ன செய்தீர்கள்? சேர்மன் ஆபிதாவை எதிர்ப்பதை தவிர...?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...8ம் வார்டு உறுப்பினர்க்கு விடுமுறை
posted by A.S.L.சதக்கத்துல்லா (சென்னை-86) [05 November 2013]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 31233

இந்த ஆர்ப்பாட்டம் தலைவிக்கு எதிராகவோ அல்லது உறுப்பினர்களுக்கு ஆதரவாகவோ நடத்தப்படவில்லை எங்கள் தெருக்கள் இருளில் மூழ்கி பலமாதங்கள் ஆகின்றது இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும் வேண்டும் என்பதற்காக வேண்டி நடத்தப்பட்டது தான் விளக்கு ஏற்றும் போராட்டம் எங்களது வார்டு உறுப்பினர் மாயமாக மறைந்து விட்டார் இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்கு சேவைகள் செய்யத்தான் என்பதை மனதில் கொள்ளவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by K.D.MOHAMED LEBBAI (JEDDAAH) [06 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31237

அஸ்ஸலாமு அலைக்கும்

ரொம்பவும் முழுமையான ஒரு விளக்கம் தந்தமைக்கு இந்த இணைய தளத்துக்கு நன்றி ''' மேலும் தொகுதி உறுப்பினர் தந்த பதிலும் முற்றிலும் நியாயமானதே .....உண்மையில் தவறு எங்கோ ......இடிக்கிறது ...அது என்ன வென்று நாம் அறியாமல் தெரு விளக்கு பிரச்சனை ஓயாது ......

நம் பொது மக்கள் இன்னும் கொஞ்சம் தீவிரமாகவே தெருவில் இறங்கி போராடினால் தான் .....நமக்கு தெருவில் ஒளி கிடைக்கும் ......

சூப்பரான , ஒரு வித்தியசமான எதிர்ப்பு கலந்த போராட்டம் என்றும் நாம் நினைக்கலாம் + நம் ஊர் மக்களின் முழு கவனத்தையும் திருப்பிய .....காமடியான தென்றும் கூட நாம் நினைத்து பார்க்க கூடிய போராட்டம் தான் இது என்றும் நமக்கு தெரிகிறது ......எது எப்படியோ நம் தெருக்களின் விளக்குகள் எப்போது தான் பிரகாசமாக எரியுமோ ??

நம் நகர் மன்றம் தான் இதற்கு உண்மையான பதில் சொல்லணும் ...நம் நகர் மன்றம் மீது நாம் யாவர்களும் வைத்து உள்ள முழு நம்பிக்கையும் கொஞ்சம் ....கொஞ்சமாகவே ....குறைந்து கொண்டு வருவது வேறு விசையம் ........

பொது மக்களின் வெறுப்பை சம்பாதிக்க கூடிய யாராக இருந்தாலும் அல்லாஹ் மன்னிக்க மாட்டான்....

காலம் தான் நம் மக்களுக்கு பதில் சொல்லவேணும் .....காலமும் .....நேரமும் ....ஓடி கொண்டு தான் இருக்கிறது ....எங்கே நமக்கு விடிவு காலம் வரும் .....இல்லை ...இல்லை ...நம் '' நகர் மன்றத்துக்கு '' தான் எப்போது தான் விடிவு காலம் வரும் .....????

பொறுத்தோம் நாம் பொறுமையாகவே ...இவர்களின் செயல் பாட்டை....

காலம் தான் 2. 5 வருசத்தை அழைத்து சென்று விட்டது ....மீதம் உள்ள 2.5 வருசத்தையும் நாம் பொறுமையாகவே பார்ப்போமே .......

நம்மிடம் ( தலைவி + உறுப்பினர்கள் ) ஒற்றுமை இல்லாத வரையில் நமக்கு கண்டிப்பாகவே எதுவுமே நடக்காது என்பதும் நாம் யாவர்களும் அறிந்ததே ...........

இந்த அரிக்கன் விளக்கை நாம் பார்க்கும் போது நாம் பழையபடி அந்த காலத்துக்கு சென்று விட்டோமோ ...என்றும் பார்க்க தோன்றுகிறது ......

அல்லாஹு நல்லதையே நமக்கு நாடுவான் .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by NAHVI (CHENNAI) [06 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31253

நஹ்வி அஹ்மத் மெய்தீன் "அவருக்கு தெரு பிரச்சனையைவிட அவருடைய கட்சிதான் பெரிசுபோல" என்று தம்பி ஜைனுல் ஆப்தீனும், அதை, நண்பர் சலாஹுதீனும் (துபை) சரி கண்டு எழுதி இருப்பது வருத்தம் அளிக்கிறது.

நஹ்வி அஹ்மத் மெய்தீன் அவர்கள், தன்னை விட, தன் குடும்பம், குழந்தைகளை விட சமூக நலன் கொண்டவர்கள். பொது ஸ்தாபனங்களில் கூட கமிஷன், கட்டிங் பார்க்கும் இந்த நாளில், இது நாள் வரை கமிஷன், கட்டிங் என எதனையும் சம்பாதிக்காதவர்கள்.

தனக்கு சரி என்று படுவதை யாருக்கும், எதற்க்கும் பயப்படாமல் சொல்லக்கூடியவர்கள்.மறைந்த மர்ஹூம், ஹாபிஸ் சொளுக்கு ஷெய்கலி மாமா கூட ஒரு சமயம், "தம்பி நஹ்வி அஹ்மத் மெய்தீன், பேசுவது RIUGH ஆக இருந்தாலும், நியாயம் என்று தனக்குபட்டதைத்தான் பேசுவான் என்றார்கள்.

தயவு செய்து கருத்துக்கள் யார் மனதையும் புண் படுத்தாமல் பார்ப்பது அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by M.A.K.JAINUL ABDEEN (kayalpatnam) [06 November 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 31257

மரியாதைக்குரிய நஹ்வி ஆலிம் காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்கள் தந்தையை கமிஷன் வாங்கினார்கள், கட்டிங் வாங்கினார்கள் என்று சொல்லவில்லையே!? "எங்க கட்சிக்கு கெட்டபேர் வந்துவிடும்" என்று அவர்கள் சொன்ன வார்த்தையைத்தானே குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதை நீங்கள் உங்கள் தந்தையிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by NAHVI (CHENNAI) [07 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31266

தம்பி ஜெயின், தாங்கள் அப்படி கூறினீர்கள் என்று நானும் கூற வில்லையே!

"நஹ்வி அஹ்மது மெய்தீன் அவர்கள் YUF ன் மூத்த உறுப்பினராக வந்து பேசவில்லை. எங்க கட்சிக்கு கெட்டபேர் வந்துவிடும் என்றுதான் பேசினார். அவருக்கு தெரு பிரச்சனையைவிட அவருடைய கட்சிதான் பெரிசுபோல. " என்று தாங்கள் கூறி இருந்தீர்கள்.

அதற்கு, "நஹ்வி அஹ்மது மெய்தீன் அவர்களின் சமூக , தெரு அற்பணிப்பை எடுத்து காட்டும் என் கருத்தை பதிவு செய்தேன். அவ்வளவுதான்.

அவர்களின் சமூக, தெரு, முஹல்லா, அகீதா, ஊர் நேசத்தையும், வெறியையும் அல்லாஹ் அறிவான். அவரை புரிந்தவர்கள் , அவரால் பயன் அடைந்தவர்கள் அறிவார்கள்.

தம்பி, இந்த கருத்து பரிமாற்றங்கள் இதோடு போதும் என் கருத்து தங்களை ஏதாவது வகையில் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும். சலாம்ஸ் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. பொய்களின் ஊர்வலம்!
posted by kavimagan m.s.abdul kader (doha...qatar) [07 November 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 31270

தம்பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள் தனது கருத்துப் பதிவில், நஹ்வி அஹமத் மெய்தீன் மச்சான் அவர்களைப் பற்றி எழுதியுள்ள கருத்தை வாசிக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.

பொதுவாழ்வில் தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டிருக்கும் தம்பி ஆப்தீன், தனது முஹல்லா வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

இரு முறை வார்டு மெம்பராக வாய்ப்பு கிடைத்தும், முஹல்லாவின் நன்மைக்காக தான் சார்ந்திருக்கும் கட்சியின் கோரிக்கையை நிராகரித்தவர் அஹமத் முஹைதீன் மச்சான் அவர்கள்.

சட்டமன்ற, நகரமன்ற தேர்தல் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட காலம் அது. அண்ணா தி.மு.க.சார்பில் போட்டியிடவிருந்த மச்சான் அவர்கள், முஹல்லாவாசிகளின் வேண்டுகோளையேற்று, அப்போதைய தி.மு.க. மாவட்டப் பிரதிநியான எதிர்க்கட்சியை சேர்ந்த ஒருவரை ஆதரித்து, தேர்தல் பணியாற்றியதோடு, தனது சொந்தக் கட்சியை எதிர்த்து தி.மு.க.வேட்பாளரின் தேர்தல் ஏஜென்டாக பணியாற்றிய வரலாறு உங்களுக்குத் தெரியுமா? அந்த வேட்பாளர் யார் என்பதாவது தெரியுமா? அவர்கள் உங்களது பாட்டனாரும், எனது மரியாதைக்குரிய மாமாவும், எம்.இ.எல்.நுஸ்கி மச்சான் அவர்களது தந்தையும், ஊர் அறிந்த தி.மு.க.பிரமுகரும், சமுதாயத் தொண்டருமான மர்ஹூம். சொளுக்கு முஹம்மத் ஈசா லெப்பை மாமா அவர்கள்... ஆதாரம் வேண்டும் எனில், ஜமாஅத்தின் நன்மையைக் கருதி அஹமத் முஹைதீன் மச்சான் அவர்களுடன் இணைந்து தேர்தல் ஏஜென்டாக பணிபுரிந்த இன்னொரு அண்ணா.தி.மு.க.பிரமுகர் ஆன சகோதரர் எம்.ஜே.செய்யத் இப்ராஹிம் காக்கா அவர்களைக் கேளுங்கள்... அண்ணா.தி.மு.க. பூத் ஏஜென்டாக இருந்த சொளுக்கு செய்மூசா மச்சான் அவர்களிடம் கேளுங்கள்....

மற்றொருமுறை வார்டு மெம்பராக போட்டியிட ஜமாஅத் வலியுறுத்திய போது, தன்னை விட இந்தப் பதவிக்கு பொருத்தமானவர் எஸ்.இ.அமானுல்லாஹ் காக்கா அவர்கள் எனக் கூறி, பிறிதொரு கட்சியை சேர்ந்தவரை வேட்பாளாராக்கி, வெற்றி பெறச் செய்த அவர்களது பெருந்தன்மையையும், கட்சி என்ன? தனது குடும்பத்தை விடவும் முஹல்லாவை அதிகம் நேசிக்கக் கூடிய ஒரு நல்ல மனிதரின் இதயத்தையும் புரிந்து கொள்ளுங்கள்....

எந்த ஒரு போராட்டமும் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப் படும் வரைதான்... கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் பட்டு,செயல்பாடுகள் ஆரம்பிக்கப் பட்டபின் அந்தப் போராட்டத்தை தொடர்வது வெறும் ஸ்டண்ட்.... அது எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும் என்ற அவரது கூற்று பழுத்த அனுபவத்தின் வெளிப்பாடு....

முஹல்லாவிற்காக அஹமத் முஹைதீன் மச்சான் அவர்கள் மனதாலும், உடலாலும் பட்ட காயங்களும், பல்வேறு வழக்குகளை சந்திக்க நேரிட்டு பெரும் அவதிக்குள்ளானதும் முஹல்லா வாசிகள் யாவரும் அறிந்ததே....

ஆகவே,தம்பி ஜெய்னுல் ஆப்தீன் அவர்கள், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற பாணியில் கூறிய குற்றச்சாட்டை திரும்பப் பெறுவது, அவரது பொது வாழ்க்கைக்கு மேலும் அழகு சேர்க்கும் என்பதே எனது கருத்து.....

தெரு விளக்குகள் பொருத்துவது தாமதமாவதைக் குறித்து ஒருசில காக்காமார்கள் தம்பிமார்களுக்கு தருகின்ற கருத்துகளும், காரணங்களும் சரிதானா என்பதனை ஆதாரங்களுடன் அறிந்து கொள்ள நேயர்களே காத்திருங்கள்.... உண்மைகள் சற்றே உறங்குகிறது... அதுவரை பொய்களின் ஊர்வலம் தொடரட்டும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...SARIYE
posted by Eassa Zakkariya (Jeddah) [07 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31271

அருமை தம்பி ஜைனுல் மற்றும் சலாஹ் கருத்துகளுக்கு நன்றி. நமது நகரமன்ற தலைவர் இது குறித்து ஒரு நீண்ட விளக்கத்தை தந்தார்களே -ஒரு தனவந்த பெருமகன் நம் மன்ற தலைவர் அவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்? யார் யார் இதற்கு பின்னாலிருந்து நமது நகரமன்ற நல்ல திட்டங்களுக்கு தடையாக செயல்படுகிறார்கள்?

தாங்கள் இருவரும் நஹ்வி அஹ்மத் முஹியித்தீன் ஒரு மூத்த உறுப்பினர் என்ற முறையில்லாமல் கட்சிதான் முக்கியம் என்று வந்தார்கள் என்று விளக்கம் தந்தாள் அது தவறு அன்பர்களே..

நமது நகரமன்ற தலைவர் ஒரு சரியான முடிவை (தற்போது கலைஞ்சர் முதல்வராக இருந்து; நமது நகரமன்ற தலைவர் தன்னை அக்கட்சியில் இணைந்து இந்த அதிகாரிகளுக்கு ஒரு பயத்தை) எற்படுதிதிதாலும் நாம் வரவேற்கவேண்டும் . கொஞ்சம் நிதானமாக நாம் சிந்தித்தால் சில சண்டாளர்களின் உண்மை முகம் நமக்கு புரியும். எந்த கட்சியானாலும் நம் ஊருக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பில் செயல்படும் அருமை தம்பி ஜைனுல் மற்றும் சலாஹ் கருத்துகளுக்கு நன்றி.

எந்த கட்சியானாலும் நம் ஊருக்கு நல்லது நடக்கவேன்றும் என்று அயராது உழைக்கும் அருமை தம்பி ஜைனுல் இருந்து நான் எதிர்பார்பதை சலாஹ் க்கா விடம் நான் எதிபார்கமுடியாது நமக்கு இருக்கும் சந்தேகமெல்லாம் முதன்மை அமைச்சரை நமது நகரமன்ற தலைவர் சந்தித்தபிறகு நம் பின்னால் யாரோ நம்மை முட்டாள்களாக ஆகிகிரர்களோ? என்பதுதான். கவனம் தேவை. நிதானம் மிக அவசியம்.

நஹ்வி அஹ்மத் முஹியித்தீன் ஒரு மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையில் செய்த காரியங்களை என்னால் பட்டியலிடமுடியும்

1) ஊர் காவல் படையை "தரவை" மையமாக கொண்டு 1969-1979 வருடங்களில் நிறுவி நம்மை கட்டை பஞ்சாயத் செய்த ராகவ நாடாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள்

2) நம்முடைய ஆலிம் அவர்களின் தொப்பியை தட்டிய ஆறுமுகநேரி வரை சென்றும் நம் ஊரை விட்டு ஓடுவதற்கும

3) மதரசா ஜாவியவின் பல கோடி சொத்துகளை சில சண்டாளர்கள் சுரண்ட நினைத்தபொழுது மற்றும் சங்கரலிங்கம் என்கிற போலீஸ் அவர்கள் உன்னுடைய எழும்பை உடைப்பேன் என்று சொல்லியபொழுது தனியாக நின்று எந்த கமிஷன் மற்றும் கட்டிங்கும் இல்லாமல் சமூகசிந்தனை யோடு அவர்கள் முடித்க்கொடுதார்கள். நம் முஹல்லா பிரச்னையில் எல்லோர்களும் கை விட்ட பிறகும் பல வருடங்கள் அதற்காக வாதாடி சம்பந்தம் பட்டவர்களுக்கு புரியும் படி செய்தார்கள்.

அவையெல்லாம் சலாஹ் காக்கவிற்கு தெரியுமே (?). 1992-93 மத்தியில் ஊர் கலவரம் ஏற்பட்டபோது மனிமுத்தர் போலீஸ் பட்டலியன் தான் காரம் என்று சொன்னதும் நம் முன்னணியின் மூத்த உறுப்பினர் என்ற முறையில்தான். ஆக தற்போது த்ரீ சங்கு தரம்கெட்ட அரசியலை சில பாவிகள் நல்லர்வகள் என்ற போர்வையில் செயல்படுகிறார்கள். கவனம் தேவை. இந்த பதிவு இப்பொழுது அவசியமே சிலர்கள் புரியவேடும். அருமை தம்பி ஜைனுல் சமூக செயல்பாடுகள் அல்லாஹ்வின் துணை கொண்டு வெற்றிபெறும் -ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...NERUDAL
posted by Eassa Zakkariya (Jeddah) [07 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31272

மரியாதைக்குரிய நஹ்வி ஆலிம் காக்கா அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். நான் உங்கள் தந்தையை கமிஷன் வாங்கினார்கள், கட்டிங் வாங்கினார்கள் என்று சொல்லவில்லையே!? "எங்க கட்சிக்கு கெட்டபேர் வந்துவிடும்" என்று அவர்கள் சொன்ன வார்த்தையைத்தானே குறிப்பிட்டு எழுதியிருந்தேன். அதை நீங்கள் உங்கள் தந்தையிடமே கேட்டு தெரிந்து கொள்ளலாமே? (ஜைனுலாப்தீன்)

அருமைத்தம்பி ஜைனுல் நீங்கள் சரியாகதான் தங்களின் பதிவை தந்துளீர்கள் . அனால் "இவருக்கு தெருவை விட கட்சிதான் முக்கியம் போல" என்பதுதான் கொஞ்சம் நெருடல் .WASSALAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by NAHVI (CHENNAI) [07 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31280

தம்பி ஹாபிழ் ஈசா ஜகரியா குறிப்பிட்ட ஆலிம், வேறு யாரும் இல்லை. நம் கண்ணியத்திற்குரிய, மர்ஹூம் சா. ஷாகுல் ஹமீது ஆலிம் முப்தி அவர்களின் அருமை மகனார், ஹாபிழ் சா.ஹ. பாதுல் அஸ்ஹாப் ஆலிம் அவர்கள்தான்.

மேலும், கவிமகன் கருத்து எங்களின் புண்பட்ட நெஞ்சங்களுக்கு அருமருந்தாக அமைந்தது. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...சிறய thanthai
posted by Eassa Zakkariya (Jeddah) [07 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31282

கவிமகன் கருத்து எங்களின் புண்பட்ட நெஞ்சங்களுக்கு அருமருந்தாக அமைந்தது. நன்றி

எங்கள் தந்தை பல பிரச்சனைகளால் சூழ்லபடும் காலமெல்லாம் எங்கள் சாச்சப்ப (கத்தார்) சையது மூசா நம்மூர் மற்றும் முஹலவிற்காக இரத்தமும் , வேதனையும் அடைதுள்ளர்கள் . கடந்த பதிவில் மறந்துவிட்டேன் .(மன்னிக்கவும்). முஹல்லா மற்றும் தேர்தல் காலங்களிலும் இவர்கள் இருவரும் வீடு வந்து சேருவார்கள? என்பது எங்களின் கவலையாக இருததுன்று.

அல்லாஹ் போதுமானவன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:... கத்திரிக்கோளின் ஒற்றைக்கால்
posted by T.S.A. Aboothahir (chennai) [07 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31286

டியர் அட்மின் அவர்களே

ஏனோ அவ்வப்போது உங்களின் கத்திரிக்கோளின் ஒற்றைக்கால் உடைந்து போகிறது.

கருத்துக்கள் பதிவு செய்யப்படுவதற்கு தாங்கள் வைத்திருக்கும் நிபந்தனைகளில் இலக்கம் 4 மற்றும் 5ன் படி தனிநபர் தாக்குதல் விவாதத்திற்குரிய கருத்தை நீங்கள் தணிக்கை செய்திருக்கலாமே. மன வருத்தங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாமே, கொஞ்சம் கவனம் செலுத்துங்கள், சர்ச்சைக்குரிய அந்த வாசகங்களையும் கருத்துக்களையும் நீக்குங்கள்.

வாசகர் பார்வைக்கு;

கீழ்க்காணும் சில காரணங்களுக்காக - பதிவாகும் கருத்துக்களில் உள்ள சில வார்த்தைகள் தணிக்கை செய்யப்படும் என்பதனையும், சில நேரங்களில் முழுமையாக நிராகரிக்கப்படும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

(1) செய்திக்கு தொடர்பில்லா கருத்து
(2) ஊர்ஜிதம் செய்யமுடியாத தகவல்
(3) ஆபாச, வன்மையான வார்த்தைகள்
(4) தனிப்பட்ட நபர் தாக்குதல்
(5) நீண்ட விவாதங்களை உருவாக்கக்கூடிய கருத்துக்கள்
(6) ஒருவரே பல பெயரில் பதிவு செய்வது
(7) ஒரே கருத்து பல முறை பதிவு செய்யப்படுவது
(8) தவறான ஈமெயில் முகவரி
(9) அடையாளம் தெளிவில்லாத நபரின் கருத்து

இவைகளை தவிர வேறு பல காரணங்களுக்கும், கருத்துக்கள் தணிக்கை/தள்ளுபடி செய்யப்படலாம் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Eassa Zakkariya (Jeddah) [08 November 2013]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31297

இமை திறப்பது விழீப்பன்று மூளையின் இமை திறப்பே உண்மையான விழிப்பு . மகன் தன் தந்தையின் ரகசியமாக இருக்கிறான் என்பதும் தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லது மால் என்கிற உலக பந்தபாசத்தால் ஒரு பக்கமாக சாய்வது என்கிற நிலையெல்லாம் தாண்டி -

கடந்த பதிவில் சமூக சிந்தனை உடையவர் நஹ்வி அஹ்மத் காக்கா அவர்கள் என்பதற்கு சான்றாக

பல லச்சங்கள் செலவழித்து நடைபெறும் நம் வீட்டு திருமண விருந்தில் எத்தனை "குருவை" ஆடுகள் (கடா விற்கு பதிலாக) அறுக்கப்படுகிறது என்பதனை பற்றி இவர்கள் கவலை படாத நாட்கள் ரெம்ப குறைவு . இதிலும் நமக்கு கவனம் தேவை

2) நம் நகர மன்ற உறுப்பினர் அவர்களை அழைத்து என்றாவது இது குறித்து நம் முன்னணியின் மூலம் நாம் நம்முடைய நிலைபாட்டை எவ்வாறு அமைத்து கொள்வது நகர் மன்றத்தில்? கேட்டதோ?

அடுத்தவரின் பொருளை பாதுகாப்பதும் பொது நல சிந்தனைதான்.

அல்லாஹ்- சூழ்ச்சி காரர்களை விட மிக பெரிய சூழ்ச்சிகாரன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. மன்னிக்கவும்!
posted by kavimagan.m.s.abdulkader (doha-qatar) [08 November 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 31300

மர்ஹூம் மாவன்னா செனா ஈசா லெப்பை என்பதற்குப் பதிலாக சொளுக்கு ஈசா லெப்பை என எனது முந்தைய கருத்துப் பதிவில் தவறாகக் குறிப்பிட்டமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [08 November 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31301

மரியாதைக்குரிய நஹ்வி அகமது மெய்தீன் மாமா அவர்கள் நீண்ட நாட்களாக ஊருக்கும் குறிப்பாக எங்கள் முஹல்லா பிரச்சனைகளில் யாரும் அழைக்காமல் தன்னந்தனியாக தைரியத்துடன் குரல் கொடுக்க கூடியவர்கள் என்பதை இன்றைய தலமுறையினருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். எங்களை போன்றவர்கள் நேரிடையாக நன்கு கண்ட உண்மைகள்.

நஹ்வி ஆலிம், தம்பி ஈஸா ஜக்கரியா, நண்பர் கவிமகன் காதர் போன்றோரின் கருத்துக்கள் அத்தனையும் உண்மை. யாருக்கும், எதற்கும் ( குறிப்பாக அதிகார வர்க்கம், பண வசதி படைத்தோர்) பயப்படாமல், தன் மனதில் பட்டதை கடைசி வரை வாதாட கூடியவர்கள். எங்களை போன்றவர்களுக்கு அவர்கள் தான் முஹல்லா விஷயங்களில் முன்னோடி. எங்களை போன்றவர்கள் அவர்களிடம் படித்து கொண்டது ஏராளம்.

எனவே தம்பி ஜெய்னுல் ஆப்தீன் ஏதோ அப்போதைய சூழ்நிலைக்கு சொல்லி விட்டர் என்று எண்ணுகிறேன். அவரும் நமது முஹல்லா விசயங்களில் முன்னின்று சேவை செய்ய கூடியவர் தான். சில சமயங்களில் அது சரி தவறு என்பது வேறு விஷயம். இத்தகைய பல கருத்துகளால் தனது நிலையை நன்கு புரிந்திருப்பார் என்று எண்ணுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved