Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:31:16 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12258
#KOTW12258
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 5, 2013
முஹர்ரம் 1435: நவ. 05 செவ்வாய்க்கிழமையன்று முஹர்ரம் முதல் நாள்! அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2874 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நவம்பர் 05ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று முஹர்ரம் மாத முதல் நாள் என காயல்பட்டினம் அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஹர்ரம் முதல் நாள் குறித்து அப்பள்ளி நிர்வாகத்திடம் காயல்பட்டணம்.காம் வினவியபோது, நவம்பர் 03ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று முஹர்ரம் தலைப்பிறை தென்படாததால், 04ஆம் தேதி திங்கட்கிழமையன்று துல்ஹஜ் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்வது என்றும், 05ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று - ஹிஜ்ரீ 1434 முஹர்ரம் முதல் நாளென்றும், நவம்பர் 13ஆம் தேதி புதன்கிழமையன்று முஹர்ரம் 09 ஆஷூறா நாள் என்றும், அந்நாள் மற்றும் அதற்கடுத்த நாளில் ஆஷூறா நோன்பு நோற்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [06 November 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 31241

5.11.2013 தேதி முஹர்றம் முதல்நாள் என்பதை 4.11.2013 தேதியே முடிவு செய்து அறிவித்திருக்க வேண்டும். இவர்களுக்கு பின்னால் 6.11.2013 தேதி முஹர்றம் முதல்நாள் கடைபிடிப்பவர்கள் 5.11.2013 தேதியே இவர்களுக்கு முன்பாக முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு விட்டனர். ஏன் இவர்களுக்கு மட்டும் அறிவிப்பு வெளியிட இவ்வளவு தாமதம்? சவூதியில்தான் 4.11.2013 ல் அறிவிப்பு வெளிவந்துவிட்டதே !

எதிர் தரப்பு என்ன தேதியை அறிவிக்கிரார்களோ அந்த தேதியில் நாம் இணையக்கூடாது என்று எதிர்பார்த்து காத்திருந்து, இவர்கள் அறிவிப்பை வெளியிடுவார்கள் போல தெரிகிறது.

எதிலும் ஒரு ஒழுங்கு முறையை பின்பற்றவேண்டும். அறிவிப்பு வெளியிடுவதில் ஒரு systematic இருக்கணும்.

Moderator: செய்திகளை இணையதளம் பெறுவதற்கும், அதனை இணையதளம் வெளியிடுவதற்கும் - பல்வேறு காரணங்களுக்காக, சில நேரங்களில் கால தாமதம் ஆகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Abu Rushda (Dubai) [06 November 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31245

"உலகின் எந்த பகுதியில் பிறை தென்பட்டாலும்" என்பதை தங்கள் கொள்கையாக சொல்லுபவர்கள், தங்கள் உண்மை கொள்கையான "சவுதி அரேபியா அரசு எப்போ வெல்லம் பிறை தென் பட்டது என்று அறிவிகின்றதோ அப்பொழுது மட்டும்" என்பதை இனிமேல் எல்லா அறிவிப்புகளிலும் மறக்காமல் பிராக்கெட்டில் இட்டு சொன்னால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [06 November 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 31248

உலகத்திற்கு எல்லாம் ஒரே பிறை.

உண்மை சொன்னால் கசக்கும். சவுதி அரேபியாவில் பிறை தென்படும் போது உலக நாடுகள் அனைத்தும் ஏற்று கொள்கிறது. காயல்பட்டினம் மட்டும் என்ன விதி விலக்கா..

மலோகன் பிறை தென்பட்டால் ஏற்றுகொள்வீர்கள்.. நாகர்கோவில் கொழும்பில் தென்பட்டால் ரோட்டில் விட்டு விடுங்கள்.

என்ன கொள்கையோ?

சவுதி அரேபியா புளுடோவிலா இருக்கிறது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by shahul hameed (abudhabi) [06 November 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 31255

சவுதி அரேபியாவை அருகில் இருக்கும் ஓமன் கூட ஏற்று கொள்வதில்லை ,அவர்கள் தங்கள் விடுமுறைக்கு தகுந்தவாறு பிறையை ஏற்படுத்துவார்கள் என்பது உங்களுக்கு தெரியாது போல,சவுதி அரேபியா எங்களுக்கு இமாம் இல்லை ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [07 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31262

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல கலகலப்பாகவே .....முஹர்ரம் பிறை கணக்கு போய் கொண்டு இருக்கிறது ..........நமக்கும் ....சவுதிக்கும் 2. 5 மணி நேரம் தானே ....அப்படி இருக்க ....ஏன் தான் இந்த குழப்பமோ நமக்குள் .........அல்லாஹு தான் அறிவான் .....

நமது ஊரில் நாம் நோன்பு பெருநாளாகட்டும் / ஹஜ்ஜு பெருநாளாகட்டும் ( எல்லாமே ) 2 or 3 என்று தானே நல்ல விசயங்களை நாம் கொண்டாடி வருகிறோம் ....அதில் முஹர்ரமும் சேர்ந்து விட்டது ...... என்றே தான் நாம் நினைக்க தோன்றுகிறது .....

பொதுவாக நாம் எந்த ஒரு விசயத்திலும் ஒத்து போகாதது தனியொரு சிறப்பு என்றே நாம் நினைக்கலாம் ......

யாவர்களும் பாராட்ட படக்கூடிய ஒரு நல்ல செயல் தான்

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சவுதி = சர்வதேசம் ?
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [07 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31277

"They ask you (O Muhammad ) about the new moons. Say: These are signs to mark fixed periods of time for mankind and for the pilgrimage....... (2:189)
" (நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன........ (2:189)

அல்-குரான், பிறை மனிதர்களுக்கு காலத்தை காட்டுபவையாகவும் (காலண்டர்) ஹஜ்ஜை அறிவிப்பதாகவும் (அமல்களை செய்வதற்கு) உள்ளது என்று தெள்ளத் தெளிவாக கூறுகிறது. ஆனால் சவுதி அரசுக்கு காலண்டருக்கு ஒரு பிறையும் இபாதத்துகளை செய்வதற்கு வேறொரு பிறையும் தேவைப்படுகிறது. வானவியல் (அறிவியியல்) அறிவு கொஞ்சம் கூட இல்லாதவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சவுதி அரசின் முடிவை இபாதத் விசயத்தில் மற்றுமன்றி உலக நடைமுறைகளிலும் பின்பற்றுகிறார்கள்.

உதாரணம் ; சவுதி அரசு சொன்ன அதே காரணத்தை அல்-ஜாமிஉல் அஸ்கர் நிர்வாகமும் கூறுகிறது. அதாவது நவ 3 ம் தேதி பிறை தென்படாததால் நவ 4 துல் -ஹஜ் மாதத்தின் கடைசி நாளென்று.

பிறை என்று தென்படும் ? மேலும் நாளின் ஆரம்பம் எது? இவை இரண்டிற்கும் இவர்கள் விடை தேட முற்பட்டால்தான் உண்மையை அறிய முடியும்.

நவ 3 அன்று அமாவாசை நாள் (சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் நேர்கோட்டில் வருவது). பிறை கண்ணுக்கு மறைக்கப்படும் நாள் (சங்கம தினம்). அன்று குறைந்தது 12 மணி நேரத்திற்கு உலகில் எந்த பகுதியிலும் பிறை தென்படாது. அந்த பிறை தென்படவேண்டுமேன்றால் குறைந்தது 6 டிகிரி அது நேர் கோட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும். இது நடப்பதற்கு குறைந்தது 12 மணி நேரம் தேவை. அதுவும் அந்த பிறை அன்று சூரியன் மறைந்த பின்தான் பார்க்க இயலும். சங்கமம் நிகழும்போது நமதூர் நேரம் மாலை 6:20. சரியாக 12 மணி நேரம் கூட்டினால் நாம் அடுத்த (4ம் தேதி) நாள் கலை 6;20. அன்று சூரியன் உதித்த நேரம் காலை 6;09 சந்திரன் உதித்த நேரம் காலை 6;42. ஆகையால் பிறையை பார்க்க இயலாது. அன்று மாலை 6:20 மணிக்கு வளரும் பிறையின் வயது 24 மணி நேரம். பிறையை கண்ணால் காண முடியும். காரணம் சூரியன் மறந்த பின் (மாலை 5:53) சந்திரன் மறைந்ததால் (மாலை 6:44).

அனால் அன்று மேற்கு வானில் மழை மேகமாக இருந்ததால் நமதூரில் அன்று (4ம் தேதி) பிறை கண்ணில் தென் படவில்லை. பிற நாடுகளில் தென்பட்டிருக்கிறது.

-----------------------------

எப்போதெல்லாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் மார்கத்தில் அறிவுறுத்தப்பட்ட அமல்களை செய்வதற்கு துணைக்கு எடுத்துக் கொள்ளும்போது (விஞ்ஞான அறிவு இல்லாத) மௌலவிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். குறிப்பாக பெரும்பாலான துணைக் கண்ட மௌலவிகள்.

உதாரணம்.

1) 200 வருடங்களுக்கு முன் 5 வேலைத் தொழுகைக்கு கால அட்டவணை விஞ்ஞான அடிப்படியில் துல்லியமாக கணக்கிட்டு தயாரித்த போதும்.

2) 70 வருடங்களுக்கு முன் ஒளிபெருக்கியை பயன்படுத்தி "அதான்" (பாங்கு) சொல்லும்போது.

3) 60 வருடங்களுக்கு முன் ஹஜ் செல்வதற்காக பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்பட்டு நிழற்ப்படம் (Photos) எடுக்கும்போது.

இவைகளுக்கு எதிராக பாத்வவை வழங்கியுள்ளார்கள்.

பல நூறு வருடங்களுக்கு முன் இவர்கள் கொடுத்த பாத்வாவில் ஒன்று குர்-ஆனை பிற மொழயில் மொழிபெயர்ப்பது ஹராம் என்று. இதனால்தான் என்னவோ தமிழகத்தில் முஸ்லிம்கள் 1300 ஆண்டுகளாக இருந்தும் சுமார் 60-70 ஆண்டுகளுக்கு முன்புதான் அல்-குரான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத் தகுந்தது.

குர்-ஆனை தமிழில் முதன் முறையாக மொழிபெயர்த்த பெருமை முஸ்லிம் லீகின் முன்னாள் தலைவர் மர்ஹூம் அப்துஸ் சமத் சாஹிப் அவர்களின் தந்தையைச் சாரும்.

----------------------------

ஏரியா பிறை, மண்டலப் பிறை, மாநிலப் பிறை, தேசியப் பிறை, சர்வதேசப் பிறை ஆகிய நிலைபாட்டில் உள்ளோர்களிடம் நாம் கேட்க நினைக்கும் ஒரு கேள்வி.

கண்ணால் பார்க்க வேண்டும் என்பதுதானே உங்கள் கொள்கை. கண்ணால் என்றால் வெறுங்கண்ணாலா அல்லது Binoculars, Telescope போன்ற அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலம் காணும் பிறையை ஏற்றுக் கொள்வீர்களா?

What about மூக்குகண்ணாடி(Eye Spectacle / Eye Glasses)

(அறிவியல்) விபரமறிந்தவர்கள் விளக்கவும்.

-------------- END -------------

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved