Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:11:15 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12453
#KOTW12453
Increase Font Size Decrease Font Size
சனி, நவம்பர் 30, 2013
நெசவு தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை ஒருவழிப்பாதை பணிகள் அடுத்த வாரம் துவக்கம்?
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3570 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



பெரிய நெசவு தெரு, ஐ.ஒ.பி. வங்கி சந்திப்பு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை மார்க்கத்தில் நிலுவையில் உள்ள சாலைப்பணியினை வரும் வாரம் துவக்க திட்டமிட்டிருப்பதாக - இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ள நாகூர் மீராசா, காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார்.

தற்போது மழைக்காலமாக இருப்பதால் பணி தாமதமாவதாகவும், இப்பணிகளை துவக்க தான் சில நாட்களுக்கு முன்னரே - பணி நடைபெறவேண்டிய இடத்திற்கு வாகனங்களை கொண்டு வந்துவிட்டதாக மேலும் அவர் தெரிவித்தார்.



சாலையை தோண்டும் பணி 2 - 3 நாட்கள் நடைபெறும் என்றும், அந்த நேரத்தில் மழை இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், அதன் பின்னர் முதல் அடுக்கு விரிக்க 7 நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த முக்கிய காலகட்டத்தில் மழை பெய்யாமலோ, குறைந்து பெய்தாலோ தோதுவாக இருக்கும் என தெரிவித்த அவர், முழு பணியும் முடிய சுமார் 1.5 மாதம் ஆகலாம் என்றும் தெரிவித்தார்.

இச்சாலைப் பணிகள் சம்பந்தமாக முதல் அழைப்பு பிப்ரவரி மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது.



ஒப்பந்ததாரர்கள் யாரும் இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்காததால், இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் மீண்டும் மார்ச் 4 அன்று கோரப்பட்டு விளம்பரம் வெளியிடப்பட்டது. ஒப்பந்தப்புள்ளிகளும் மார்ச் 21 வரை பெறப்பட்டன.



இருப்பினும் - நகர்மன்றத் தலைவர் மீது உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் சமர்ப்பித்து, அதற்குரிய கூட்டம் - ஏப்ரல் 5, 2013 அன்று நடைபெற இருந்ததால், மார்ச் மாதம் நகர்மன்றக்கூட்டம் நடைபெறவில்லை. அதனால் ஒப்பந்தப்புள்ளிகளும் அம்மாதம் பரிசீலனை செய்யப்படவில்லை.

பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்திலும், மார்ச் 4 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்திலும் - பணியின் மதிப்பீடு 28.5 லட்ச ரூபாய் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏப்ரல் 1, 2013 உடன் புதிய நிதியாண்டு பிறந்தது. நகர்மன்றத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, ஏப்ரல் 3 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தடையும் விதித்தது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 29 அன்று நகரமன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் - ஒருவழிப்பாதை சாலை பணிக்கான மார்ச் 21 அன்று வரை பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் பரிசீலிக்கப்பட்டு, ஒப்பந்ததாரர் நாகூர் மீராசாவிற்கு ஒப்பந்தம் வழங்க முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்ததாரர் மதிப்பீட்டு தொகையான 28.5 லட்ச ரூபாய்க்கு, 0.003% சதவீதத்திற்கு குறைவாக இப்பணியினை செய்ய முன்வந்தார்.



இப்பணிக்கான வேலை ஆணை கொடுக்கும் தருவாயில், திருநெல்வேலியில் உள்ள நகராட்சிகளின் மண்டல அலுவலகத்தை சார்ந்த மண்டல பொறியாளர் (REGIONAL ENGINEER), 25 லட்ச ரூபாய் அல்லது அதற்கான மேலான பணிகளுக்கான தொழில்நுட்ப முன் அனுமதி, மண்டல அலுவலகத்தில் - காயல்பட்டினம் நகராட்சி பொறியாளர்களால் பெறப்படவில்லை எனக்கூறி, இந்த பணிக்கான ஒப்புதலை தர மறுத்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் - பெரிய நெசவு தெரு சாலையை சார்ந்த சிலர், சாலையை தோண்டியே போடவேண்டும் என்று கோரிக்கை வைக்கவே, இந்த இரு காரணங்களுக்காக முந்தைய தீர்மானம் (தீர்மானம் எண் 383) ரத்து செய்யப்பட்டு, புதிய மதிப்பீடான 29.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் கோர மே 31 அன்று நடந்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.

நகராட்சி அலுவலர்களால் 28.5 லட்சம் என முந்தைய நிதியாண்டின் Schedule of Rates படி தயாரிக்கப்பட்ட மதிப்பீடு, புதிய நிதியாண்டில் மாற்றப்பட்டு - 2013-14 Schedule of Rates படி தயாரிக்கப்படாமலேயே - நகராட்சியின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனால், புதிய ஒப்பந்தப்புள்ளிகள் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதியன்று கோரப்பட்டதில், ஒப்பந்ததாரர் ஆர்.நாகூர் மீராசா - மதிப்பீட்டு தொகையைவிட 15.04% கூடுதலாகவும் (33.93 லட்ச ரூபாய்), மாடசாமி என்பவர் - மதிப்பீட்டு தொகையைவிட 20.89% கூடுதலாகவும் (35.66 லட்ச ரூபாய்) ஒப்பந்தப்புள்ளிகள் கோரியிருந்தனர்.

2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழக அரசு ஆணையின் ஒப்புதல் பெற்ற நகர்புற உள்ளாட்சி மன்றங்களுக்கான பொறியியல் கையேடு (ENGINEERING MANUAL FOR URBAN LOCAL BODIES) - மதிப்பீட்டில் இருந்து 5 சதவீதம் வரை கூடுதலான ஒப்பந்தப்புள்ளிகளை நகர்மன்றக்கூட்டத்திலேயே ஏற்றுக்கொள்ளலாம் என்றும், 5% - 10% வரையிலான ஒப்பந்தப்புள்ளிகளை, நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர் மற்றும் மண்டல பொறியாளர் ஆகியோர் கொண்ட குழுவின் ஒப்புதலோடு ஏற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது.

10 சதவீதத்திற்கும் மேலான ஒப்பந்தப்புள்ளிகளை, நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர், நகராட்சி நிர்வாகத்துறை அலுவலக பொறியாளர், சென்னை குடிநீர் வாரியத்தின் பொறியியல் இயக்குனர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பொறியியல் இயக்குனர், நெடுஞ்சாலைத் துறையின் தலைமை பொறியாளர், பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளர், நகராட்சி நிர்வாகத்துறையின் நிதி அலுவலர், சம்பந்தப்பட்ட நகராட்சியின் ஆணையர் மற்றும் நகராட்சி பொறியாளர் அடங்கிய குழுவே - பரிசீலித்து, ஒப்புதல் வழங்கவேண்டும்.







சென்னையில் 8 பேர் கொண்ட குழுவிடம் இருந்து ஒப்புதல் வாங்க காலதாமதம் ஆகலாம் என்பதால், 2013-14 ஆண்டிற்கான அட்டவணை அடிப்படையில், புதிதாக 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தப்புள்ளிகள் தயார் செய்யப்பட்டு, ஆகஸ்ட் 16 அன்று நடைபெறவிருந்த நகர்மன்ற கூட்டத்தில் கூட்டப்பொருள் 39 ஆக வைக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் (2013) மாத சாதாரண கூட்டத்தில் இருந்து பெருவாரியான உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த காரணத்தால், இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும் - அக்கூட்டத்தின் முடிவில் புதிய மதிப்பீட்டு தொகைக்கு - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் முன் அனுமதி வழங்கினார்.

ஆகஸ்ட் 27 அன்று கற்புடையார் பள்ளி வட்ட தொகுப்பு வீடு சம்பந்தமாக காயல்பட்டினம் நகர்மன்றத்தில் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அப்போது - ஒரு வழிப்பாதை குறித்த மதிப்பீட்டு தொகையும் (35 லட்ச ரூபாய்) மேஜை பொருளாக பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது.





இதனை தொடர்ந்து - செப்டம்பர் 12 அன்று ஒரு வழிப்பாதையில் சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரி, நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டு, அக்டோபர் 4, 2013 அன்று ஒப்பந்தப்புள்ளிகள் திறக்கப்பட்டது.



திறக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் அக்டோபர் 11 அன்று நடந்த நகரமன்றத்தின் அவசர கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டு - மதிப்பீட்டு தொகையை விட 4.85% சதவீதம் கூடுதலாக (36.7 லட்ச ரூபாய்) கோரியிருந்த ஒப்பந்ததாரர் நாகூர் மீராசாவிற்கு பணி வழங்கப்பட்டது. அக்டோபர் 16 அன்று காயல்பட்டினத்தில் மழை பெய்ய துவங்கியது. அக்டோபர் 21 அன்று வடக்கிழக்கு பருவமழை துவங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

29.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டின் அடிப்படையில் ஒப்பந்ததாரர் கோரியிருந்த 33.93 லட்ச ரூபாய் தொகைக்கும், கடைசியாக அறிவிக்கப்பட்ட 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டின் அடிப்படையில் அதே ஒப்பந்ததாரர் கோரியிருந்த 36.70 லட்ச ரூபாய் தொகைக்கும் ஏன் வித்தியாசம் என காயல்பட்டணம்.காம் - வினவியதில், 29.5 லட்ச ரூபாய் மதிப்பீடு, முந்தைய ஆண்டிற்கான அரசின் Schedule of Rates படி தயாரிக்கப்பட்டது என்றும், 35 லட்ச ரூபாய் மதிப்பீடு அரசின் 2013-14 ஆண்டுக்கான Schedule of Rates படி தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் - செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளில், இதே பணிக்காக முன்னர் மூன்று முறை வெளியிடப்பட்ட ஒப்பந்தப்புள்ளி கோரிக்கைகளில் இடம்பெறாத அம்சங்கள் இணைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:00 am / 1.12.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [01 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31752

எல்லா வாகனம் பட்டை உடைந்து, ஒருவழி பாதை முடங்கி மாற்று தடத்தில் பேருந்து போனபின்னரும் - எப்பந்த்தான் இங்கு நல்ல காலம் பிறக்க போகுது, ஒப்பந்தகாரர் வாயால் சொல்லிவிட்டார், எப்பம் பணிக்கு ஆட்களை விடப்போரறூ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [01 December 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31759

அஸ்ஸலாமு அலைக்கும்

நல்ல மகிழ்ச்சியான செய்தி தான் ....இது சம்பந்தமான ஒப்பந்தக்காரர் அவர்கள் மேலும் தாமத படுத்தாமல் ....பொது மக்களின் நலன் கருதி இவ் வேலையை கொஞ்சம் துரிது படுத்தி செயல் ஆக்கினால் நல்லதே .

இந்த ரோட்டில் செல்வதால் பொது மக்களுக்கும் சரி .... வாகனத்துக்கும் சரி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு....

பொது மக்களின் கோரிக்கை படி .இந்த ரோட்டை நன்றாக தோண்டி போடுவது தான் சரியானது . ...அப்பத்தான் ரோடும் உயராது + ரோட்டின் தரமும் நன்றாக இருக்கும் ....

நமது நகர் மன்றமும் ஒப்பந்தகாரரை கொஞ்சம் துரித படுத்தினால் சிறப்பாக இருக்கும் .

மழை இருப்பின் கால தாமதமாவது இயல்புதான் .......அல்லாஹ் ஹையறை நாடுவான் ............. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:..வாக்குறுதிகள் காற்றில் பறந்தன .
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31763

தேர்தல் காலங்களில் நமது அரசியல் கட்சிகள் அள்ளிவீசும் உறுதிமொழிகள் போல் நெசவு தெரு ஒரு வழிப்பாதை என்று மாறினால் அதனால் நெசவு தெருக்காரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் களையப்படும் என்ற நகரமன்ற தலைவியின் வாக்குறுதிகள் இதே இணைய தளத்தில், அப்போது வெளிவந்தது.

எப்படியோ ஒரு வழியாக நாம் விரும்பிய ஒரு வழிப் பாதை அமுலுக்கு வந்தது. அதன் பிறகு வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டது. கேட்பாரற்று போய்விட்டதே இது நியாயம்தானா என்று எண்ணிக் கொண்டிருக்க, அப்படியெல்லாம் இல்லை காரியம் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்ற செய்தி ஆறுதல் தந்தாலும் இந்த நகரமன்றத்தின் ஆட்சி காலத்தில் அது நடந்து முடிந்து விடும் என்று சொல்வதற்கில்லை போல் தெரிகிறது.

டெண்டர் கால தாமததிலேயே சுமார் 9 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வருகிறது. இது என்ன சேது சமுத்திர திட்டமா அல்லது கடல் நீரை குடிநீராக்கும் திட்டமா அல்லது பொன்னன்குரிச்சி பைப்லைன் திட்டமா, இவ்வளவு இழுத்தடிக்கிறார்கள்.நகரமன்ற தலைவியும் அதிகாரிகளும் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்ட உறுப்பினர்கள் எல்லோரும் மக்கள் பணத்தை இப்படி வீணடித்து இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்து ஆட்சி பொறுப்பில் அமர்ந்தவர்கள் ஒரு கண்கட்டி வித்தை காட்டி ஆட்சி நடத்துவதுபோல் மக்கள் ஏமாற்றம் அடைந்து விரக்தியின் விளிம்பில் நிற்கிறார்கள் என்பதை ஆளவந்தவர்கள் சிந்தித்து பார்த்து உங்கள் அணுகுமுறைகளை மாற்றுங்கள். நடக்கின்ற நிகழ்வுகளை பார்க்கும்போது ஒரு பழைய பாடல் நினைவுக்கு வருகிறது.

"நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள் உங்கள் ஆசை நெஞ்சை தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். கொள்ளை அடிப்போர் வள்ளலைபோலே, கோயிலை இடிப்போர் சாமியை போலே காண்கின்றார். ஊழல் செய்பவன் உத்தமன்போலே, ஊரை ஏய்ப்பவன் யோக்கியன்போலே காண்கின்றார்".

"ஒன்னும் புரியவில்லை தம்பி, எனக்கு ஒன்னும் புரியவில்லை தம்பி, கண்ணு ரெண்டும் சுத்துது காதை அடைக்கிது...".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Salai S Nawas (singapore) [03 December 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31782

மக்கி நூஹு தம்பி காக்கா,

//தேர்தல் காலங்களில் நமது அரசியல் கட்சிகள் அள்ளிவீசும் உறுதிமொழிகள் போல் நெசவு தெரு ஒரு வழிப்பாதை என்று மாறினால் அதனால் நெசவு தெருக்காரர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் களையப்படும் என்ற நகரமன்ற தலைவியின் வாக்குறுதிகள் இதே இணையதளத்தில், அப்போது வெளிவந்தது.// copy&paste

ஆனால் நடந்தது என்ன?

- பிப்ரவரி மாதம் டெண்டர் விட்டத யாரும் எடுக்கல.

- மார்ச் மாதம் விட்ட டெண்டர் திறக்கிற நேரத்தில நம்பிக்கை இல்லா தீர்மானம், ஏப்ரல் மாதம் கூட்டம் தள்ளிவைப்பு.

- ஆகஸ்ட் மாதம் 2013ல், 2012-13 ரேட்டுல ஒப்பந்தப்புள்ளிகள மீண்டும் வைத்தது… அதனால 15 சதவீதம் தொகை கூடுதலானது - வெளிநடப்பு, ஒத்துழையாமை, எல்லா ஆட்டமும் முடிந்து அக்டோபர் 11 மீண்டும் ஒப்புதல்.

- மதிப்பீடு 8 லட்சம் கூடுதல்தான். காரணம் பிப்ரவரில விட்ட டெண்டர்ல உள்ள வேலைகளும், செப்டம்பர்ல விட்ட டெண்டர்ல உள்ள வேலைகளும் சிறய வித்தியாசம் இருக்கு. செப்டம்பர் மாதம் விட்ட டெண்டரில் கூடுதல் வேலைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. நேராகப் பொய் விசாரித்தால் உண்மையைத் தெரிந்து கொள்ளலாம்.

அன்புடன்
மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved