Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:08:11 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12865
#KOTW12865
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 25, 2014
இந்திய தமிழ் மீனவர்களுக்கான ‘கடல் தாமரை’ மாநாட்டில் கலந்துகொள்ள காயல்பட்டினம் கடலோரப் பகுதி மக்களுக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நேரில் அழைப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3063 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாரதீய ஜனதா கட்சியின் சார்பில், இம்மாதம் 31ஆம் தேதியன்று, இந்திய தமிழ் மீனவர்களுக்காக ராமேஸ்வரம் மண்டபம் நகரில் நடத்தப்படும் ‘கடல் தாமரை’ மாநாட்டில் கலந்துகொள்ள காயல்பட்டினம் கடலோரப் பகுதி மக்களுக்கு பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருமலைச்சாமி நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று 14.00 மணியளவில் காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் (சிங்கித்துறை) பகுதியைச் சேர்ந்த மீனவ மக்களை நேரில் சந்தித்துப் பேசியபோது அவர் கூறியதாவது:-



அண்மைக் காலமாக இந்திய தமிழ் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையால் தொடர் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. இதனால் அவர்கள் உயிர்களையும், உடமைகளையும் தொடர்ந்து இழந்து வருகின்றனர்.

இவர்களைப் பாதுகாக்க வேண்டிய மத்திய அரசு, பாராமுகமாக இருந்து வருகிறது. இந்திய மீனவர்கள் கச்சத்தீவுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என இந்திய உச்சநீதிமன்றமும் அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறது. மீனவர்களை நாடு பாதுகாக்கத் தவறினால் அவர்களின் வாழ்வு மட்டுமின்றி, நம் நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும்.

இந்தியாவில் அடுத்து வரும் ஆட்சி பாஜக தலைமையிலான ஆட்சியாக இருக்கும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அந்நேரத்தில் இந்திய தமிழ் மீனவர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தர இயலும் என்பன குறித்து ஆலோசிப்பதற்காகவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதற்காகவும், ராமேஸ்வரம் - மண்டபம் நகரில் வரும் 31ஆம் தேதியன்று மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை, ‘கடல் தாமரை மாநாடு’ என்ற பெயரில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் இம்மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, கடலோரப் பகுதிகளிலுள்ள அனைத்து மீனவ மக்களையும் சந்தித்து அழைப்பு விடுக்கும் பணியை கடந்த 3 நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் துவங்கி, இதுவரை 25 மீனவ கிராமங்களுக்குச் சென்று வந்துள்ளேன்.

இன்று காயல்பட்டினம் சிங்கித்துறை, கொம்புத்துறை பகுதிகளுக்கும், அதனைத் தொடர்ந்து புன்னைக்காயல், தூத்துக்குடி என ராமேஸ்வரம் வரையிலும், வரும் 31ஆம் தேதி வரை பயணித்துச் சென்று, ஆங்காங்கேயுள்ள எங்கள் கட்சியின் நிர்வாகிகள் துணையுடன் நேரில் அழைப்பு விடுக்கவுள்ளேன்.


இவ்வாறு, பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருமலைச்சாமி கூறினார். கட்சியின் காயல்பட்டினம் நகர தலைவர் என்.மகேஷ் கண்ணன், கேந்திர பொறுப்பாளர் ஏ.பண்டாரம், நகர பொருளாளர் செபஸ்தியான், 07ஆவது வார்டு கிளை தலைவர் சுரேஷ் மோட்சையா, 12ஆவது வார்டு கிளை தலைவர் ஐ.காளிமுத்து, சிவசெந்தில், ஒன்றிய தலைவர் எல்.பி.ஆர்.தனம், மீனவரணி மாவட்ட பொதுச் செயலாளர் டி.ஸ்ரீ கிருஷ்ணகுமார், ஒன்றிய துணைத்தலைவர் பி.முத்துகுமார், ஒன்றிய பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.மணிபிள்ளை, ஒன்றிய செயலாளர் சூசை எஸ்.சத்தீஷ் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எங்கே வைகோ ?
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [25 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32705

பா.ஜாக்காவில் தன்னை புதிதாய் புதைத்துக்கொண்ட "வைகோ" அவர்களை இந்த அழைப்பு குழுவோடு காணவில்லையே, இலங்கை பிரச்சனைக்கு என்றால் என்னுயிர் எப்பொழுதும் சேவை செய்ய சித்தமாக இருக்கிறது என்று சீறிப்பாயும் சிங்கமல்லவா?

அந்த சிங்கம் இன்று நம்மூர் வந்தால் அவரையும் வரவேற்க வரிந்து கட்டிக்கொண்டு ஓடுபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.அல்லது மாணவர்களையும்,மாணவிகளையும் வரிசயாக நிற்கவைத்து வரவேற்ப்பு பாமாலையை பாடத்தூண்டும் பக்த கோடிகளும் நம்மில் இருக்கிறார்கள்.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (Makkah ) [26 January 2014]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 32734

1999 இல் இதே தானே தலைவர் அந்த BJP யுடன் கூட்டணி போட்ட போது கொடி பிடித்து கோசம் போட்ட கொள்கை கோமான்கள் இருக்கும் போது வைகோவிற்கு மட்டும் வாழ்த்து தெரிவிப்பதில் மட்டும் என்ன வஞ்சனை ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Farook (KSA) [26 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32739

பழைய காலத்தில் யாரோ ஆதரவு கொடுத்தாலே , வைகோ செய்வது சரி காண லாமா ? இப்ப பிரதம வேற்பாளர் யார் என்று வைகோ க்கு தெரியாதா? எப்படியாவது பிஜேபி இந்த தேர்தலில் மோடி தலமையில் மண்ணை கவ்வ ஆர்வமா இருக்கும் பொது , வைகோ போன்ற தலைவர்கள் ஆதரவு கொடுத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மே தாவிகள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [26 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32742

1999 இல் தான் செய்த தவறுக்காக மக்கள்முன்னால் மனிப்பு கேட்ட மகிமை மிகு தலைவர் தான் கலைஞர் அவர்கள். அன்று முதல் இன்று வரை அப் பா.ஜா க்காவின் பக்கம் சீண்டிக்கூட பார்க்கவில்லை என்பது தான் உலகம் அறிந்த உண்மை!

அன்று அவர் செய்த தவறுக்குநிகராக இன்று வைகோ செய்வது சரிதான் என்று வாதாடும் மே தாவிகளின் மேல்மட்டம் எதால் நிரம்பியுள்ளது என்று எனக்கு தெரியவில்லை! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [26 January 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 32749

அஸ்ஸலாமு அழைக்கும் ,

தேர்தல் வந்து வீட்டது அல்லவா இந்த சங்க பரிவர்களுடைய கைகூலிகள் ஹிந்து மக்களிடம் தங்களுடைய காவலர்கள் போல் நடித்து ஒட்டுகாக யன்னவண்டுமானாலும் சொளுவார்கள் இந்த முறை நம் கடல் ஓர மக்களை குறிப்பாக மீனவர்களை தங்கள் வலையில் வீழ்த்த பீ . ஜே .பீ . படாத பாடுபடுகீறது நமுடைய மீனவ சமுதாயம் இவர்களிடம் மிகவும் கவனமாக இருக்கனும் .நாம் எல்லாரும் தமிழர்கள் ஹிந்து என்பது ஆர்ய கைபர் , போலன் கணவாய் வழி வந்தவர்கள் நம்மை பிரிக்க செய்த சதிதான் தேர்தல் வருவதால் இவர்களுக்கு தமிழ் மீனவர்கள் மீது கவலை வந்து விட்டது .

வையாபுரி மகன் கோபல்சாமீ இந்த கூடத்தில் சார்ந்து கூட்சல் போட கடல் தாமரை அலையடித்து அழிந்து விடும் கூட மோடி அலையும் மறைந்து விடும் .

வரும் பாராளுமன்றம் மாகான் கட்சிகளுடைய கைகளில் தான் இருக்கும் காங்கிரஸ் 115 - 135 , பீ . ஜே .பீ . 145 - 165 ,மாகாண கட்சிகள் 165 - 205 ,மற்ற கட்சிகள் 20 - 30 எனவே கூட்டணி அரசுதான் இந்த 2014 யை இந்தியாவில் அமைக்கும் . பல விதமான் கூட்டணிகள் அமையும் என்பதால் நாம் நம்முடைய வாக்கை கவனமாக பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால் அது மோசமானவல்களுக்கு சாதகமாக அமைந்து விடும் இதில் ஹிக்மதாக செயல்படவேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
கூட்டணிகள் இதுவரை!  (25/1/2014) [Views - 4282; Comments - 9]
DCW தொழிற்சாலையில் தீ!  (24/1/2014) [Views - 3030; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved