Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:33:16 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12870
#KOTW12870
Increase Font Size Decrease Font Size
சனி, ஐனவரி 25, 2014
கூட்டணிகள் இதுவரை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4286 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரம் வெளிவரலாம் எனவும் தெரிகிறது.



முடிவுக்கு வரும் நடப்பு பாராளுமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி - மொத்த இடங்களான 543 இடங்களில் - 262 இடங்கள் பெற்றிருந்தது. அதில் காங்கிரஸ் பெற்ற 206 இடமும், திரிணமுல் காங்கிரஸ் பெற்ற 19 இடமும், தி.மு.க. பெற்ற 18 இடமும் அடங்கும்.



பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 159 இடங்கள் பெற்றிருந்தது. அதில் பி.ஜே.பி. பெற்ற 116 இடமும், ஜனதா தளம் (ஐக்கியம்) பெற்ற 20 இடமும், சிவ சேனா பெற்ற 11 இடமும் அடங்கும்.



இத்தேர்தலில் மூன்றாவது அணி - 79 இடங்கள் பெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெற்ற 16 இடமும், இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற 4 இடமும், பி.எஸ்.பி. பெற்ற 21 இடமும், பிஜு ஜனதாதள் பெற்ற 14 இடமும், அ.இ.அ.தி.மு.க. பெற்ற 9 இடமும், தெலுகு தேசம் பெற்ற 6 இடமும், ம.தி.மு.க. பெற்ற 1 இடமும் அடங்கும்.



சமாஜ்வாதி கட்சி 23 இடம் பெற்றது.





2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் - ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 27 இடங்களை வென்றது. அதில் தி.மு.க. வென்ற 18 இடமும், காங்கிரஸ் வென்ற 8 இடமும், விடுதலை சிறுத்தைகள் வென்ற 1 இடமும் அடங்கும். மேலும் பதிவான் மொத்த வாக்குகளில் இவ்வணி 42.5 சதவீத வாக்குகளையும் பெற்றது.



தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் உருவாகவில்லை. பி.ஜே.பி. தனியாக நின்று 2.3 சதவீத வாக்குகளும், தே.மு.தி.க. தனியாக நின்று 10.3 சதவீத வாக்குகளும் பெற்றன.

மூன்றாம் அணி 12 இடங்களைப் பெற்றது. இதில் அ.தி.மு.க. பெற்ற 9 இடங்களும், ம.தி.மு.க. பெற்ற 1 இடமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெற்ற 1 இடமும், இந்திய கம்யூனிஸ்ட் பெற்ற 1 இடமும் அடங்கும். பா.ம.க. ஒரு இடமும் பெறவில்லை. இவ்வணி பதிவான் மொத்த வாக்குகளில் 38 சதவீத வாக்குகளையும் பெற்றது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக கூட்டணிக் காட்சி மாறியிருந்தது.



அ.தி.மு.க. அணியில் - கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சி தவிர புதிதாக தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை இடம்பெற்றன. பதிவான மொத்த வாக்குகளில் இக்கூட்டணி 51.9 சதவீதம் வாக்குகள் பெற்றது. 234 இடங்களில் 203 இடங்களையும் பெற்றது.

தி.மு.க. அணியில் - காங்கிரஸ், பா.ம.க. விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இக்கூட்டணி, பதிவான வாக்குகளில் 39.5 சதவீதம் வாக்குகள் பெற்றது. 234 இடங்களில் 31 இடங்களையும் பெற்றது.

2014ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் தமிழக அளவிலான கூட்டணிக் காட்சி இன்னும் முழு வடிவம் பெறவில்லை.

தற்போதைய நிலவரப்படி, அ.தி.மு.க. கூட்டணியில் - அதன் சட்டசபை கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகியவை - எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் இடம்பெறாது என்பது ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் தொடருகின்றன என்பதனை - பிப்ரவரி 07 அன்று நடைபெறவுள்ள ராஜ்ஜிய சபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அ.தி.மு.க. ஆதரவு வழங்கியுள்ளது ஊர்ஜிதம் செய்துள்ளது. வேறு எந்த பெரிய கட்சியுடனும் அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. அ.தி.மு.க. சார்பில் அதற்காக பெரிய முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவரவில்லை.



தி.மு.க. கூட்டணியில், சட்டமன்றத் தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மனித நேய மக்கள் கட்சி இடம்பெறும் என்பது உறுதியாகி உள்ளது. புதிய தமிழகம் கட்சியும் தி.மு.க. அணிக்கு மாறும் என்று தெரிகிறது. முன்னரே தி.மு.க. அணியில் - சட்டமன்ற தேர்தலின்போது - இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியும், முஸ்லிம் லீக் கட்சியும் - அவை தி.மு.க. அணியில் தொடரும் என அறிவித்துள்ளன.







காங்கிரஸ் உடன் கூட்டணி இல்லை என தி.மு.க. தனது பொதுக் குழுக் கூட்டத்தில் அறிவித்திருந்தாலும், அண்மையில் நடந்த சில சந்திப்புகள் (கருணாநிதி - குலாம் நபி ஆசாத்; சோனியா காந்தி - கனிமொழி), தி.மு.க.வின் காங்கிரஸ் குறித்த முந்தைய அறிவிப்பு இறுதியானது அல்ல என எண்ணத் தூண்டுகிறது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றால் - விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம்.

பி.ஜே.பி. அணியில் ம.தி.மு.க. இணைவது உறுதியாகி உள்ளது. பா.ம.க. கட்சியும் பி.ஜே.பி. உடன் கூட்டணி பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் - பி.ஜே.பி. விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சியையும் அதன் கூட்டணியில் இணைக்க விரும்புவதை பா.ம.க. ஏற்றுக்கொள்ளவில்லை என தகவல்கள் கூறுகின்றன.



இதற்கிடையில், தே.மு.தி.க. கட்சியை தன் அணிக்கு இழுக்க தி.மு.க. முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த மு.க.அழகரி கட்சியில் இருந்து இடைக்கால நீக்கம் செய்யப்பட்டது, தே.மு.தி.க.வை திருப்திபடுத்தத்தான் எனவும் கூறப்படுகிறது.

கூட்டணிகள் இறுதி நிலவரம் - தே.மு.தி.க.வின் உளுந்தூர்பேட்டையில் நடைபெறவுள்ள பிப்ரவரி 02 மாநில மாநாட்டிற்கு பிறகு தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வைப் பொருத்த வரை - பல்வேறு கூட்டணிகளாக எதிர்கட்சிகள் இருப்பதையே விரும்புவது போல் தெரிகிறது. அதனால் வாக்குகள் சிதறுவதால், அ.தி.மு.க.விற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டில் அது உள்ளது.

எந்த கூட்டணி என இதுவரை முடிவை அறிவிக்காத இரு பெரிய கட்சிகளில் - தே.மு.தி.க.வை தன் வசம் இழுத்தால், கூட்டணி பலம் அடையும் என தி.மு.க. நினைக்கிறது.

அண்மைக் காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துள்ள தே.மு.தி.க. - தனது அடுத்த கட்ட நடவடிக்கையை அவசர கதியில் எடுக்க விரும்புவதாகத் தெரியவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தல் போல் தனித்து நின்று - இம்முறை அக்கட்சி சுயபரிசோதனை செய்துகொள்ள வாய்ப்புகள் குறைவு.

பாராளுமன்றத் தேர்தலை விட, இரு ஆண்டுகள் கழித்து நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலே தன் கட்சிக்கு முக்கியம் என விஜயகாந்த் முடிவெடுத்தால், தே.மு.தி.க. - தி.மு.க. அணி பக்கம் சாய வாய்ப்புகள் அதிகம்.

தே.மு.தி.க., பி.ஜே.பி. கூட்டணியில் சேர்ந்தாலும், சேராவிட்டாலும், அவ்வணியில் பா.ம.க. சேரும் வாய்ப்பே அதிகம்.

கூடுதல் தகவல்:
விக்கிபீடியா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [26 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32723

எத்தனை கட்சி ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்ததாலும், நாளைய பாரதம் அம்மா கையில். இந்தியாவை ஆளக்கூடிய தலைசிறந்த ஒரே தலைவி ஜெ.ஜெயலலிதா மட்டும்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [26 January 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32736

அருமையான கட்டுரை. பல விவரங்களை அங்கும் இங்கும் தேடாமால், இந்த கட்டுரையிலே அனைத்து விவரங்களும் உள்ளன. நன்றிகள் பல.

இதில் நெருடல் என்னன்னா, ரெம்ப நல்லவர்.. ரெம்ப நல்லவர் என்று புகழப்பட்ட வைகோ வின் துரோகம் தான்.

நாயை அடித்து விரட்டுவது போல, மிகக் கேவலமாக, கழகத்தின் போர்வாளை, கலைஞர் தி.மு.க வை விட்டு இவரை விரட்டி, ம.தி.மு.க ஆரம்பிக்க வைத்தார். கொஞ்சம் கூட சொரணை இல்லாமல், தி.மு.க வுடன் அழுகை சீன போட்டு கூட்டணி வைத்தவர், இந்த ஈழ வியாபாரி.

இவர் பி.ஜே.பி யுடன் கூட்டணி சேர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

2002 ஆம் வருடம், குஜராத்தில் நடை பெற்ற கலவரத்தில் பல்லாயிர முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த கலவரத்தை நியாயப் படுத்தி பாராளுமன்றத்தில் பேசியவர் தான் இந்த வை.கோ.

ஆச்சரியமாக இருக்கா..! பழைய வரலாறு..!! மறந்து விடாதீர்கள், சகோதரர்களே.!

அவர் பேசியது தெரியுமா..!! எப்படி நியாயப்படுத்தி பேசினார் பாருங்கள்.

------------------------------------------------

"1969ம் ஆண்டு குஜராத்தின் சமூக கலவரங்களில் 600 பேர் கொல்லப்பட்டது உண்மையில்லையா ? அது யாருடைய ஆட்சியில் ? காங்கிரஸ் ஆட்சி.

1970ம் ஆண்டில் 400 பேர் கொல்லப்படவில்லையா ? அது யாருடைய ஆட்சியில் ? காங்கிரஸ் ஆட்சி.

1990ம் ஆணடு 400 பேர் மறுபடியும் கலவரங்களில் கொல்லப்படவில்லையா ? அது யாருடைய ஆட்சியில் ? காங்கிரஸ் ஆட்சி. 1

1992ம் ஆண்டில் 441 பேர் சமூக கலவரங்களில் கொல்லப்படவில்லையா ? யாருடைய ஆட்சி. காங்கிரஸ். அவர்கள் பதவி விலகினார்களா ? தங்கள் ராஜினாமாவை சமப்பிக்க வந்தார்களா ? இவர்கள்தான் மறுவாழ்வு பற்றியும் நிவாரணம் பற்றியும் பேசுகிறார்கள்"

--------------------------------

ஆக யாரையும் நாம் நம்ப முடியாது. ஒரு விஸ்வரூப திரைபடத்திற்க்காக ஒன்று கூடிய நம் சமுதாயம், மீண்டும் ஒற்றுமையுடன், ஒரே அணியில், ஒரே தலைமையில் ஒன்று கூடினால்.. !! கேட்கவே எவ்வளவு நன்றாக உள்ளது. ஒன்று கூடுங்கள் சகோதரர்களே. இன்ஷா அல்லாஹ்.. கூடிய விரைவில் நடக்கும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Farook (KSA) [26 January 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32740

பீஎஸ் சொன்ன சரியா தான் இருக்கும் அதை நான் வழிமொழிகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. அலசிப்பார்பார்களா அருமை முஸ்லிம் மாந்தர்கள்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான். (yanbu) [26 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32741

கருத்து கணிப்பில் ப.ஜா.விற்கு 200 to 220 இடங்கள் என்றும் காங்ரஸ்க்கு 110 to 120 இடங்கள் என்றும் தனியாக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக எழுதுகிறார்கள்!

தமிழகத்தில் அதிமுகவிற்கு 20 இடங்கள் வரை என்றும் கூறுகிறது. ஒருவேளை இக்கருத்து கணிப்பு போல்நடந்தால். தமிழக கட்சிகளின் நாளைய நிலைப்பாடு என்னாவாக இருக்கும்.

கலைஞரை பொறுத்தவரை மதவாதகட்சிக்கும்,மதச்சார்புடைய கட்சிக்கும் தி.மு.க ஒருபோதும் ஆதரவு கொடுக்காது என்று திட்டவட்டமாக அறிவித்து விட்டார்!

ஆனால் அம்மாவோ ஒரு நாள் கூட மதவாதசக்திகள், மதச்சார்புடைய சக்திகள் மதசார்பற்ற இந்நாட்டை ஆளக்கூடாது என்று ஒரு வார்த்தை கூட இதுவரை சொல்லவில்லை!

இதிலிருந்து என்ன தெரிகிறது நாம் 40 யும் வென்று மற்றைய மாநில கட்சியோடு சேர்ந்து 3-வது அணி அமைத்து அதற்க்கு தன்னை பிரதமராக்குவதற்குறிய அனைத்து வியூகத்தையும் வகுத்து நான் பிரதமராகி விடுவேன் என்ற பகல் கனவில் பவணி வந்து கொண்டிருக்கிறார் புரட்சி தலைவி அவர்கள்!

ஒருவேளை இந்த கனவு பொய்த்துவிட்டால் ,எனக்கு துணைபிரதமர் பதவியாவது தாருங்கள் என்று பா.ஜா காவிடம் தஞ்சம் அடைய தயங்க மாட்டார் தமிழக முதலவர்!

தான் ஆளும் மாநிலத்திலேயே மருத்துவ மனையில் இடஒதிக்கீடு இல்லை என்று அறிவித்த அம்மா அவர்கள் கலைஞர் முஸ்லிம்களுக்கு தந்த 3 1/2% சதவீத இடஒதிகீட்டையும் தாண்டி மேலும் அதிகமாகவா தரப்போகிறார்? ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதிக்கீடு அறிவித்த அரசாங்கத்தையே வன்மையாக கண்டித்த மென்மையான குணமுள்ள தலைவி அல்லவா?

"அ.தி.மு.க.வை பொறுத்தவரை - பல்வேறு கூட்டணிகளாக எதிர்கட்சிகள் இருப்பதையே விரும்புவது போல் தெரிகிறது. அதனால் வாக்குகள் சிதறுவதால், அ.தி.மு.க.விற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டில் அது உள்ளது".(C&P)

அட்மின் அவர்கள் கணித்ததுதான் முற்றிலும் உண்மை. நாம் வெவ்வேறாக பிரிந்து நின்றால் அம்மாவிற்குத்தான் அடித்தது யோகமாகிவிடும்!

ஆகவே அன்புக்குறிய முஸ்லிம்மாந்தர்களே, அனைத்து முஸ்லிம் அமைப்புகளே, அனைத்து முஸ்லிம் கட்சிகளே நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒற்றுமையுடன் ஒட்டுமொத்தமாக ஒரு கட்சியுன் சேர்ந்து இந்த தேர்தலை சந்திப்போம், இன்ஷா அல்லாஹ் நாம் அதிக இடங்களை வெல்வது மட்டுமல்ல நமுடைய வலிமையை இவ்வையகம் உணர்ந்துகொள்ளும் சரித்திரத்திற்கு சொந்தக்காரராகிவிடலாம் நேர்மையான நடுநிலை நெஞ்சத்தோடு அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக அலசி பார்ப்பார்களா அனைத்து முஸ்லிம் சகோதரர்களும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [26 January 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 32743

சகோதரர் சாளை ஜியாவுத்தீன் அவர்களின் கருத்தை பார்த்தேன்,நியாயமான கருத்து தான்,ஆனால் அவரின் கருத்தில் சமுதாய அக்கறையை விட தலைவர்(dmk )மேல் உள்ள அக்கறை தான் அதிகம் வெளிப்படுகிறது,காரணம்

1.வைக்கோவை [ஆற்றி குறிப்பிடும் போது //நாயை அடித்து விரட்டுவது போல, மிகக் கேவலமாக, கழகத்தின் போர்வாளை, கலைஞர் தி.மு.க வை விட்டு இவரை விரட்டி, ம.தி.மு.க ஆரம்பிக்க வைத்தார். கொஞ்சம் கூட சொரணை இல்லாமல், தி.மு.க வுடன் அழுகை சீன போட்டு கூட்டணி வைத்தவர், இந்த ஈழ வியாபாரி.//(copy &paste ) என்று குறிப்பிட்டார்,ஆனால் தற்போது அழகிரி நீக்கத்தை பற்றி குறிப்பிடவில்லை.

2.குஜராத் கலவரம் பற்றி வைகோ பேசியதை குறிப்பிட்டார்,சரி தான்,அந்நேரத்தில் வாஜ்பாய் தலைமையிலான bjp ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது,அப்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த திமுக அமைச்சர்களான முரலொசி மாறன்,tr பாலு இது பற்றி வாய் திறக்க வில்லை,அப்போது கலைஞரிடம் இந்த கலவரம் பற்றி கேட்ட போது பிற மாநிலத்தில் நடக்கும் விஷயம் பற்றி கருத்து சொல்ல அல்லது தலையிட எனக்கு உரிமை இல்லை என்றால் நீங்கள் கூறும் "இஸ்லாமியக்காவலர்"

வைகோ பேசியதை பற்றி குறிப்பிட்ட சகோதரர் இந்த கலைஞரின் பேச்சை மறந்து விட்டார் அல்லது மறைத்து விட்டார்.தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்னும் நிலை வருமேயானால் திமுக பிஜேபியோடு ஒரு போதும் கூட்டு சேராது என்று கலைஞர் சார்பில் சகோதரர் சாளை ஜியாவுத்தீன் உத்தரவாதம் தர தயாரா?நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [26 January 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32752

சகோதரர்களே.. ! நான் யாருக்கும் சப்போர்ட் பண்ணி பதிவு செய்யவில்லை. கலைஞருக்கு சொம்பும் தூக்கவில்லை. இந்த வலை தளத்தில், கலைஞரை அதிகம் தாக்கி கருத்து பதிவு செய்ததும் நான்தான்.

வைக்கோ ஒன்றும் கலைஞருக்கு சளைத்தவர் இல்லை என்பதை நினைவு படுத்தவே இந்த கருத்து பதிவு.

அதனால்தான் யாரையும் நம்ப முடியாது என்றும் கூறியுள்ளேன்.

இன்றைய சூழ்நிலையில் நாம் ஒற்றுமையாக ஒன்று சேரும் வரை, எதிரியா, துரோகியா, சாதாரண துரோகியா, பச்சை துரோகியா - யாரிடம் உறவு வைக்கலாம் என்பதை அவரவர்கள் முடிவெடுத்துக் கொள்ளவேண்டியதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. யானைக்கு தன் பலம் அறியாது!!!.
posted by s.s.md meerasahib (TVM) [26 January 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 32756

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு தமிழக இஸ்லாமியர்களே... நல்ல தருணம் நமக்கு கைகூடுகிறது. இந்த தருணத்தை பயன் படுத்தி ஒட்டு மொத்த நம் சமுதாயம் ஓரணியில் ஓட்டுகளை பதித்து நம் மானம்களையும், மரியாதைகளையும், நம் இனத்தையும் காப்பாற்றி...

"எங்களிடமும் உண்டு ஓட்டு வங்கி" என்பதை நிரூபிச்சி. அடுத்த சட்டசபை தேர்தலில் நம் இயக்கம்கள் கேக்கும் சீட்டுகளை தருவோருக்கு ஓட்டு என்பதை நிலை நிறுத்தி. "நாம் காணிக்கும் நபரே முதல்வர்". என்ற நிலை வரும் தருணத்தின். முதல் படி இது. சிந்திப்பீர் தன் மானம்காப்பீர்.

குறிப்பு :- இந்த நம் ஓட்டு வங்கியை கணக்கு பண்ணிதான் அன்று பழனி பாபா கத்து கத்துன்னு கத்தினார். இது பலிச்சிருமோண்டு பயந்து தான் பாசிச கும்பல் பழனி பாபாவை குறிவைத்து வெறியை தீர்த்து குளிர் காய்கிறது. இந்த தருணம் அல்லாஹ் உண்டாக்கி தரும் தருணம். ஒற்றுமை முக்கியம்.வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஒற்றுமை ஒன்றே நம் முன் நிற்கும் நிலையான தீர்வாகும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [27 January 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32781

மறுபடியும் மறுபடியும் மடிப்பிச்சை கேட்பதுபோல் நம் முஸ்லிம் மாந்தர்களுக்கு நான் கேட்பது சகோதரர் மீராசாஹிப் போன்ற உண்மையான ஒற்றுமை விரும்பிகளின் உணர்வலைகளை ஒரு கணம் உணர்ந்திடுவீர்களாக!

நமக்கு இது நல்ல தருணம், நமக்குள் ஆயிரம் மார்க்க அணுகுமுறை கொள்கைபேதங்கள் இருக்கலாம்,அதை ஒருபுறம் ஒருநிலையில் நிறுத்தி விட்டு,நம் அனைவரும் முஸ்லிம் சகோதரர்கள் என்ற அந்த ஒரு இன ஒற்றுமையே மேலோங்கி நிற்க வேண்டும்!

நம் ஒட்டுமொத்த இனத்தையே இல்லாமலாக்க சூலுரைக்கும் சத்திகள் சுனாமியின் வேகம் போல் விஸ்வரூபமெடுத்து வலம் வந்து ஒரு பிரமையை ஏற்படுத்தி கொண்டிருக்கும் இத் தருணத்தில் நாம் யார்? நம்முடைய வலிமை என்ன? நம்முடைய ஒற்றுமை என்ன? என்பதை நிரூபிக்கும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்!

பேதம் பாராட்டும் நேரமல்ல இது,பிரித்தெடுக்கமுடியாத ஒற்றுமை ஒன்றே நம் முன் நிற்கும் நிலையான தீர்வாகும்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. ஒரே குட்டையில் ஊறி நாற்றெமெடுத்த மட்டைகள்!
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [27 January 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 32806

அம்மாவும், ஐயாவும் 'ஒரே குட்டையில் ஊறி நாற்றெமெடுத்த மட்டைகள்தான்'. இந்த ஈழ புலியும்(?) விதிவிலக்கல்ல.

தமிழகத்தில், 1998 நாடாளுமன்ற தேர்தல் வரை, அட்ரஸ் இல்லாமல் இருந்த பா.ஜ.க.-வை தமிழகத்தில் 4 சீட் ஜெயிக்க வைத்த பெருமை புரட்சி தலைவிக்கு உண்டு. பின்னர் தி.மு.க. ஆட்சியை கலைக்கவில்லை என்ற காரணத்தால் மத்திய ஆட்சியை கவிழ்த்தார்.

மீண்டும் 2004 நாடாளுமன்ற தேர்தலில், அந்த கட்சியுடன் கூட்டணி வைத்து 7 சீட் கொடுத்தார். அனைத்திலும் அந்த கட்சி தோல்வி கண்டது வேறு விஷயம்.

ஆனால், அம்மாவுக்கு கொள்கை ரீதியாக உடன்பாடான கட்சி, பா.ஜ.க தான். இந்த தேர்தலிலும், ஒரு வேளை பா.ஜ.க ஆட்சி அமைக்க அ.தி.மு.க ஆதரவு தேவைப்பட்டால், எந்த சலனமும் இல்லாமல் ஆதரவு கொடுப்பார்.

அதற்கு எள்ளளவும் குறைந்தவர் இல்லை, நமது 'மஞ்சள் துண்டு' கலைஞர். அம்மா ஆதரவு வாபஸ் வாங்கி விட்டார் என்றதும், 'தன் மனசாட்சி' மருமகன் மாறனுக்காக, ஓடோடி ஆதரவு தெரிவித்ததும் இவர்தான்.

1999 பாராளுமன்ற தேர்தலிலும், 2001 சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வைத்து, சட்டமன்றத்தில் பா.ஜ.க. தன் கணக்கை துவக்க வைத்தவரும் இவர்தான். மருமகன் மறைவிற்கு பின், 'ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும்' என்று விலகியவர்.

இந்த தேர்தலில் புரட்சி(?) புயல், ஈழ புலி, வைகோ, பா.ஜ.க- உடன் கூட்டணி சேர்ந்தது ஒன்றும் வியப்பில்லை. தி.மு.க. & அ.தி.மு.க ஆகியவை அவரை அழைக்காத காரணத்தினால், அங்கு சேர்ந்துள்ளார். இந்த தேர்தலில் அவரே ஜெயிக்கப் போவதில்லை. அதனால் நாம் கவலை பட வேண்டியதில்லை.

அதனால் நம் சமுதாயத்துக்கு ஒருவரும் விசுவாசம் இல்லை. இப்படி இருக்கும் சூழலில், நம் சமூதாய கட்சிகளில், இரு பெரும் கட்சிகளான, முஸ்லிம் லீக் மற்றும் ம.ம.க. ஆகியவை, தி.மு.க கூட்டணியில் இடம் பெரும் என்று அறிவித்துள்ளனர். இன்னொரு பெரிய அமைப்பான (கட்சி அல்ல) த.த.ஜ (TNTJ) யாருக்கு ஆதரவு தெரிவிக்கும்? என்பது தான் இப்போதைய கேள்விக்குறி.

த.மு.மு.க விலிருந்து பிரிந்த பின்னர், இது நாள் வரை, TNTJ அமைப்பினர், த.மு.மு.க / ம.ம.க. எந்த அணியில் இருக்கிறதோ அதற்கு மாற்று அணியில் தான் இருப்போம் என்று கொள்கையாகவே வைத்துள்ளனர்.

ஆனால், நமது சமுதாயத்தின் பலத்தை காட்ட வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தங்களது வீராப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, சமுதாயத்திற்காக ஒரே அணியில் திரண்டு நமது பலத்தை காட்டுவோம்.

இப்போது இருக்கும் அணிகளில், பா.ஜ.க வை வீழ்த்தக்கூடிய கூட்டணியாகிய தி.மு.க அணியில் நம் சமுதாய கட்சிகள் / இயக்கங்கள் ஒன்று சேர்ந்து, நமது Bargaing power -ஐ அதிகரித்து, நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை பெற முயற்சிப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக ஆமீன்!

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved