Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:48:34 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13132
#KOTW13132
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, பிப்ரவரி 28, 2014
சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் தொடரும் பிரச்சினை! விடைத்தாள்களைக் கேட்டு சில மாணவர்களின் பெற்றோர் முற்றுகை!! வட்டாட்சியர் நேரில் விசாரணை!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5610 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி, சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் இம்மாதம் 26ஆம் நாள் புதன்கிழமையன்று வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.

இவ்வாறிருக்க, வகுப்பறை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி தலைமையாசிரியரால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அரசுத் தேர்வுக்கு ஆயத்தமாக வேண்டிய இத்தருணத்தில், யாருடைய தூண்டுதல் காரணமாகவோ அவர்களது மக்கள் பள்ளிக்கெதிராக போராட்டத்தில் ஈடுபடுவதாவும், உரிய அறிவுரைகளை வழங்கி, அவர்களை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறும் அக்கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (பிப்ரவரி 28 வெள்ளிக்கிழமை) காலையில் சில மாணவர்களின் அன்னையர் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர்.







மாணவர்களின் திருப்பத் தேர்வு (revision test) விடைத்தாள்களைத் தமக்குத் தருமாறு அவர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் கோரியதாக அறியப்படுகிறது. இது தொடர்பாக பள்ளி வளாகத்தில் பரபரப்பான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. விபரமறிந்து, திருச்செந்தூர் வட்டாட்சியர் நல்லசிவன் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார்.



அவரிடம் பேசிய பள்ளியின் முன்னாள் தாளாளர் ஹாஜி வாவு எம்.எம்.முஃதஸிம், பெற்றோர் தம் பிள்ளைகளின் விடைத்தாள்களைக் கேட்பதாகவும், அதைக் கொடுக்கும் வரை அவர்கள் அவ்விடத்திலிருந்து செல்ல மாட்டார்கள் என்றும் கூறினார்.



விடைத்தாள்கள் விரைவில் பெற்றோர் கரங்களில் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடைநீக்கம் செய்யப்பட்ட - பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் முஜீபுர், திருப்பத் தேர்வின்போது குறைவான மதிப்பெண் பெறுமளவுக்கே விடையெழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதாகவும், அந்த விடைத்தாள்களை பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேறொரு இடத்தில் திருத்தக் கொடுத்தபோது, மாணவர்களின் உண்மையான மதிப்பெண்ணுக்கும், ஆசிரியர் முஜீபுர் வழங்கிய மதிப்பெண்ணுக்கும் மிகப்பெரிய வேறுபாடுகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே அந்த விடைத்தாள்களை மாணவர்களின் பெற்றோர் கேட்டதாகத் தெரிகிறது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நீக்கவும்.
posted by Ansari YentY (KaYal) [01 March 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 33434

எது எப்படியோ.. நம் சகோதரிகளின் புகைப்படம் இங்கு அவசியம் இல்லை..அதை நீக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பிரச்சனையை தேர்வு நேரம் நெருங்கும் தருவாயில் நடப்பதை எந்த பெற்றோர்களும் விரும்பவில்லை..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [01 March 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33435

சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் தொடரும் இப்பிரச்சினையை பார்த்தால் இது உள்குத்து (நிர்வாக EGO) விவகாரமாக இருக்குமோ என்ற சந்தேகம் வெளிபடுகிறது..

. எது எப்படியோ... பாதிக்கப்படுவது மாணவர்களே...!

எந்த விவகாரமோ இருக்கட்டும்..! அது மாணவர்களின் தேர்வு நேரம் நெருங்கும் தருவாயில் நடப்பதை எந்த பெற்றோர்களும் விரும்பவில்லை..!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nahvi.Sa ishaq lebbai (abudhabi) [01 March 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33436

அட்மின். பெண்கள் பு கை படத்தை ௺க்கஉம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Hamza (Naperville) [01 March 2014]
IP: 67.*.*.* United States | Comment Reference Number: 33439

ஒன்னுமே புரியல .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. எஜமான் visuvaasam
posted by Abdul Wahid S. (Kayalpatnam) [01 March 2014]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 33442

பள்ளிமுன் சாஸ்பெண்ட் செயப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டபோது பள்ளிக்கு சம்பந்தமில்லாத, வேறு ஒரு கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியை ஒருவர் மாணவர்களை தூண்டும் விதத்தில் பேசினார் என்று எனக்கு நெறுங்கிய நண்பர் ஒருவர் கூறியதை கேட்டதும் அதிர்ச்சியடைந்தேன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [01 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33447

பெண்கள் முற்றுகையிட்டு பள்ளி வளாகத்தில் போராட்டம். நமது கலாச்சாரம் ரெம்பவே முன்னேறியுள்ளது.

இப்பள்ளியை நிறுவி ஆரம்ப கல்வி முதல் உயர் நிலை கல்வி வரை இங்கு கொண்டுவர அரும்பாடு பட்டவர்கள் தற்போது ஹயாத்தோடு இருந்து இக்காட்சிகளை கண்கொண்டு பார்த்தால் அவர்கள் மனது என்ன பாடு படும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இரும்படிக்கு இடத்தில் ஈக்கு என்ன வேலை...?
posted by M.N.L.Mohamed Rafeeq. (Singapore.) [01 March 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33448

தலைமை ஆசிரியர் தமது கடமையைத்தான் செய்திருக்கின்றார். பள்ளி மாணவர்களுக்கு போராட்டம் அவசியமில்லை அதெல்லாம் கல்லூரிக்குச் சென்ற பின் பார்த்துக்கொள்ளுங்கள். பள்ளி என்பது கட்டுப்படும் ஒழுக்க நெறியை போதிக்கும் ஆலையமாகும். இங்கு குடும்ப அரசியல் வேண்டாம்.

ஒரு முறை நான் இதே பள்ளிக்குடத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் சில மாணவர்கள் ஆசிரியருக்கு எதிராக வகுப்பை புறக்கனித்த போது இடது பக்கம் பெரிய சதுக்கை வலது பக்கம் ஜலாலியா சங்கம் இரண்டு அமைப்பைச் சார்ந்த சில பெரியவர்கள் (அம்மாணவர்களின் உறவினர்கள்) மிரட்டி விரட்டிப் பிடித்து பள்ளிக்கூடத்திற்குள் இழுத்துச் சென்று விட்டதை நான் இங்கு நினைவு கூர்கின்றேன்.

அன்றைய மாணவர்கள் சொல்லுக்கு கட்டுப்படுவார்கள். ஆனால் இப்போது யார் சொல்லுக்கு(?) கட்டுப்படுகின்றனர் எனபது புரியாத புதிராக உள்ளது.

நம் மூததையர்கள் சமுதாயம் மேலோங்க வேண்டும் எனும் உயர்ந்த நோக்கில் உருவாக்கிய கல்விச்சாலைகளை உருக்குலைத்து விடாதீர்கள். இத்துடன் இந்த பிரச்சனை ஓய்ந்து சுமூகமான நிலை உருவாக வேண்டும் என்பது முன்னாள் மாணவர்களாகிய எம் போன்றோரது விருப்பம்.

-ஹிஜாஸ் மைந்தன்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Abdul Wahid S (Kayalpatnam) [01 March 2014]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 33451

இந்த பள்ளி விசயமாக என்னுடைய முந்தைய பதிவைப் பார்த்த எனக்கு தெரிந்த நபர் சற்றுமுன் என்னுடைய கைபேசியில் என்னை அழைத்து சொன்ன வார்த்தைகள்,

"காக்கா நீங்கள் கேள்விபட்டது முற்றிலும் உண்மை. உங்கள் பதிவில் எனக்கு 100% உடன்பாடு. காரணம் நானும் அந்த இடத்தில் அந்தபெண் ஆசிரியை உரக்க சபதமிட்டதை கேட்டேன். அப்போது அவர் மற்றொரு கல்வி நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் என்று தெரியாது. மாணவரின் உறவினராக இருக்கும் என்று எண்ணினேன். அந்த பெண்மணியின் சப்தம் அவரை யாரென்று அறிய என்னை தூண்டியது. ".

+2 பரீட்சை மாணவர்களின் வாழ்கையில் முக்கியமான ஒரு திருப்புமுனை என்பதை இந்த போராட்டத்தை தூண்டியவர்கள் / துவக்கியவர்கள் உணரவேண்டும்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [01 March 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33453

பல இடங்களில் விசாரித்ததில், இந்த பிரச்சனைக்கு மூல காரணம், இரண்டு எழுத்து கொண்ட வார்த்தை தான்.

இங்கு மட்டும் அல்ல, பல இடங்களில் பல பிரச்சனைக்கு மூல காரணமே இது தான். அது " ஈகோ ".

ஆக மொத்தத்தில் இந்த நிகழ்வுகள் பலருடைய மனதை பாதித்துள்ளது என்பது உண்மை. வல்ல ரஹ்மான், அனைத்திலும் ஒரு நன்மையை வைத்து இருப்பான். இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Ahamed Sulaiman (Dubai) [01 March 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33455

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இது போன்ற பிரச்னைகளுக்கு கருத்து அளிபவர்கள் சற்று நிதானித்து தங்களுடைய கருத்துகள் அவைகளை சரி செய்ய உதவும் விதத்தில் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும் நிர்வாகம் இந்த குழப்பத்தை போக்க சுமூகமான துரித செயல்பாடுகளை எடுக்க வேண்டும் .

தேர்வு காலமாக இருபதால் உடன் நல்ல தீர்வு காண வேண்டும் நம்மவர்கள் இது போன்ற சந்தர்பங்களில் முடிந்தால் .அவைற்றை சரி செய்ய தங்கள் கருத்துகளையும் பதிய வேண்டும் மாறாக குழப்பமான கருத்துகளை பதியாமல் இருந்தால் அது ஒன்று போதும் .

நிர்வாகமும் , மாணவர்களும் இணைந்து சுமுக முடிவை எடுத்து தேர்வுக்கு மாணவர்களை தாயர்படுத்த வேண்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by V D SADAK THAMBY (Chennai) [02 March 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 33459

இப்பள்ளி குறித்து வெளிவரும் தகவல்கள் மேலும் மேலும் அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளன. அன்னியரின் தலையீடு இல்லாமல் சுமுகமாக பிரச்சனையை தீர்க்க வேண்டும் . நீண்ட நாட்களாக இங்கு புகைந்து கொண்டே இருக்கிறது . நெருப்பில்லாமல் புகையாது . நெருப்பை அணைக்க ஆளில்லை . அருகிலுள்ள முகல்லா ஜமாஅத் இதில் தலையிட்டு ஒற்றுமையை நிலைநாட்டவேண்டும் .

ுஇன்னும்மிக ியமாக அப்பகுதிக்கு உட்பட்ட மற்ற 2 மெட்ரிகுலேசன் பள்ளிகளை ஒன்றிணைத்து ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து ,ஆண்பாலர் பெண்பாலர் என தனித்தனியாக பிரித்து இன்னும் சிறப்பாக நடத்த வேண்டும் .இதன் மூலம் தேவையற்ற ஆள்பிடிக்கும் போட்டி குறைந்து ,பலமான நிர்வாகம் அமைக்க முடியும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [02 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33468

அஸ்ஸலாமு அலைக்கும்

பழங்காலத்து நமது ஊர் பள்ளியின் தற்போதைய இந்த நிலைமையை நினைத்து நமது மனது வேதனை படுவதோடு ....ஒரு பாராபரிய மிக்க ஸ்கூல் ...காலம் , காலமாக , கண்ணியம் காட்க பட்டு வந்த இப்பள்ளிக்கா இந்த தேவைகற்ற போராட்டங்கள் ....நமது ஊர் பொது மக்கள் கல்வின் தரத்தில் நல்ல முன்னேற்றதில் சிறந்து விளங்க வேணும் என்கிற கண்ணோட்டதில் தங்களின் நேரடி பார்வையில் தங்களின் சொந்த பணத்தில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி முழு மனதோட ஆரபித்து நமது ஊரில் பல நல்ல பண்பு உள்ள மாமனிதர்களை உருவாக்கி காட்டிய ..... எங்களின் மரியாதைக்குரிய ஜனாப் மர்ஹும் .M.K.T.அப்பா அவர்களை தான் இப்போது நாங்கள் நினைத்து பார்க்கிறோம் ..

தற்போது எங்களின் மரியாதைக்குரிய M.K.T.அப்பா அவர்களின் செல்வங்கள் ஊரில் தானே உள்ளார்கள் அவர்கள் தயவு செய்து இப்பிரச்சனையில் முழுக்கவே தலையிட்டு சரி செய்தால் நன்றாகவே இருக்கும் இது தான் நம் பகுதி பொது மக்களின் முழுமனதான எண்ணம் .....மேலும் எங்கள் இரட்டை குளத்து பள்ளி ஜமாத்தினர்களும் & ஜலாலியா சங்கத்து உறுப்பினர்களும் ஓன்று சேர்ந்து தயவு கூர்ந்து இந்த விஷயதில் முழுமையான கவனம் செலுத்தி யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வராமல் நல்லதோர் முடிவு எடுக்க வேணும் ..... அப்போது தான் இதற்க்கு நல்லதோர் தீர்வு ஏற்படும் ..

இப்பள்ளி நிர்வாகத்தினர்கள் மேலைக்கு வாத்தியார்களை வேலைக்கு அமர்த்தும் போது கவனமுடன் நல்ல ஒழுக்கமனவராக பார்த்து அமர்த்துவது தான் நல்லது ....மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த விடாமல் போராட்டம் என்கிற கண்ணோட்டதில் அழைத்து செல்வது கொஞ்சமும் சரி இல்லை .....அது யாராகவும் இருந்தாலும் கொஞ்சமும் சரி இல்லை....

மாணவர்களின் பரிச்சை நேரத்தில் இது போன்ற தேவைகற்ற போராட்டங்கள் கண்டிப்பாக தவிர்க்க படவேணும் ... நம் மாணவர்களுக்கு இந்த நேரம் பொன்னானது படிப்பில் முழு கவனம் செலுத்த வேணும் .... தவற விட்டால் காலம் தான் இவர்களுக்கு பின்பு பதில் சொல்லும் .....

எங்கள் பகுதியில் காலம் ,,காலமாக ,, கண்ணியமுடன் நடந்து வருகின்ற பள்ளியில் தேவைக்கு இல்லாத வேற்று பகுதி மக்களின் தலையிடும் .. +.. சம்பந்தமே இல்லாத கட்சி நபர்களின் தலையிடும் &.மற்ற அமைப்பினர்களின் தலையிடும் கண்டிப்பாகவே இருக்கவே கூடாது என்று இப்பகுதி பொது மக்களின் ஒற்று மொத்தமான கருத்தும் / எண்ணமும் .....தயவு செய்து பொது அமைப்பினர்கள் மாணவ கண்மணிகளின் படிப்பில் கவனம் செதராமல் நாம் தான் பாதுகாட்க வேணும் ..

மேலும் வேறுபகுதி பெண்மணி கூட இங்கு வந்து தேவைக்கு இல்லாமல் தலையிட்டு மக்களை குழப்பியதாகவும் பரவலான ஒரு வாசகம் ....

இப் பள்ளியில் நாம் ஒற்றுமையை தான் எதிர் நோக்கி உள்ளோம் .....

நமது பெண்மணிகளின் நிழற்படத்தை தாங்கள் தவிர்த்து இருக்கலாம் ........

நம்மை படைத்த நாயன் இப்பள்ளியை முன்போல சிறப்பாக நடத்திட அருள் புரிவானாகவும் ஆமீன்......

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED லெப்பை

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் சிறுமழை!  (28/2/2014) [Views - 2477; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved