Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:17:03 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13202
#KOTW13202
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 9, 2014
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: நாகர்கோவிலில் கருணாநிதி மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3309 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை குற்றம்சாட்டிய தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதா, முஸ்லீம்கள இட ஒதுக்கீடு கோரிக்கையை, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து, நாகர்கோவில் பொருள்காட்சித் திடலில் இன்று தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது:



இந்திய நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமென்றால் அதற்குத் தேவை மத்தியிலே ஆட்சி மாற்றம். அந்த மாற்றத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற வேண்டுகோளினை உங்கள் முன் வைப்பதற்காகவே நான் இங்கே வந்திருக்கிறேன்.

தற்போது மத்தியில் உள்ள மக்கள் விரோத ஊழல் காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, அதிமுக அங்கம் வகிக்கும் மக்கள் நல ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளினை, உங்களை நேரில் சந்தித்து உங்கள் முன் வைக்கவே நான் இங்கு வந்துள்ளேன்.

கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு ஊழல்கள் மூலம் இந்திய பொருளாதாரத்தையே சீரழித்த, நாட்டை சூறையாடிய, காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்; அது மட்டும் போதாது, எதிர்காலத்திலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை அமையவிடக் கூடாது என்ற மன நிலையில் இன்று நாடெங்கிலும் மக்கள் இருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலின் மூலம் இந்திய நாட்டிலே நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற குடும்ப ஆட்சிக்கு, ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். இதனை வரும் ஏப்ரல் 24-ஆம் தேதியன்று உங்கள் வாக்குகள் மூலம் உங்களால் நிறைவேற்றிட முடியும்.

மத்தியிலே மக்களாட்சி மலர்ந்தால் மட்டும் போதாது. அந்த ஆட்சி தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அங்கம் வகிக்கும் ஆட்சியாக அமைய வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும். தமிழர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். தமிழ் நாட்டு மக்களின் வாழ்வு வளம் பெறும்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு

தற்போது தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 3.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தி தர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இவர்களது கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து தனக்குத் தானே ஒரு கேள்வியை கேட்டுக் கொண்டு அதற்கு பதில் அளித்து அறிக்கை விடுத்திருக்கிறார் கருணாநிதி. அந்த அறிக்கையில், "வழக்கம் போல முஸ்லீம்களை ஏமாற்றப் பார்க்கிறார். முஸ்லீம்களுக்கு ஏற்கெனவே இட ஒதுக்கீடு அளித்ததே தி.மு.க. ஆட்சி தான். அந்த சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம். தற்போது அவர்களை ஏமாற்றுவதற்காக கோரிக்கையை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைத்திருப்பதாகக் கூறி சமாளிக்கப் பார்க்கிறார் ..." என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு குறித்த கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது என்ற உண்மையைத் தான் நான் சொன்னேன். இதில் ஏமாற்றுவதற்கு ஒன்றுமில்லை. தான் திருடி பிறரை திருடி என்று கூறுவாள் என்று ஒரு பழமொழி உள்ளது. அது போன்று ஏமாற்றியே பழக்கப்பட்ட கருணாநிதி நான் ஏமாற்ற பார்ப்பதாக குற்றம் சுமத்துகிறார்.

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று கருணாநிதி கூறி இருக்கிறார். 2006-ஆம் ஆண்டு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை திருத்தி அமைத்து அதில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடிப்படையாக வைத்து இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்ற அம்சத்தை முதன் முதலாக சேர்த்ததே எனது தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு தான். இது தான் முஸ்லீம்கள் இட ஒதுக்கீட்டிற்கு அடித்தளமாக, வித்தாக அமைந்தது. இதை முற்றிலும் மறைத்து முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தது தி.மு.க. தான் என்று கூறுவது தான் ஏமாற்று வேலை.

கருணாநிதி தனது கேள்வி-பதில் அறிக்கையில், இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகப்படுத்த வேண்டுமென்று முஸ்லீம்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்; அதைப் பற்றி உண்மையிலேயே அக்கறை இருந்தால் அந்தக் கோப்பினை உடனடியாக வரவழைத்து ஆணை பிறப்பித்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இப்படித் தான் கருணாநிதி ஆணை பிறப்பித்தாரா? நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் தலைமையில் திருத்தி அமைக்கப்பட்ட மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட ஆய்வு எல்லையில் எனது தலைமையிலான அரசு 2006-ல் தெரிவித்த முஸ்லீம்கள் கிறித்துவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு குறித்த ஷரத்தை கருணாநிதி ஏன் வார்த்தை மாறாமல் சேர்த்தார்?

2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டதைப் போல, உடனேயே அதற்குரிய சட்டத்தை கருணாநிதி இயற்ற வேண்டியது தானே! அதை ஏன் செய்யவில்லை? எதற்காக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை அவர் கேட்டார்? ஏனெனில் சட்டப்படி அவ்வாறு தான் செய்ய முடியும்.

மண்டல் கமிஷன் வழக்கில் 1990-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எந்த இட ஒதுக்கீடு குறித்தும் எந்த அரசும் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. இட ஒதுக்கீடு குறித்து மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரை பெற்ற பின்னரே அதை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெளிவாக உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தொடர்ந்து நடைமுறைப்படுத்த வழிவகை செய்யப்பட்டது.

அதே அடிப்படையில் தான் தற்போதும் இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏமாற்றுவது வஞ்சிப்பது துரோகம் இழைப்பது என்பதெல்லாம் கருணாநிதிக்கு தான் கைவந்த கலை என்பது நாடறிந்த உண்மை. கருணாநிதியின் பேச்சை இன்னமும் கேட்டு ஏமாறுவதற்கு தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

கன்னியாகுமரிக்கு நலத் திட்டங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கென பல்வேறு வசதிகளை கடந்த 33 மாதங்களில் நாங்கள் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் மூன்று மருத்துவர் வகை மருந்தகமும், மணவாளக்குறிச்சி பகுதியில் இரண்டு மருத்துவர் வகை மருந்தகமும் தொடங்கப்பட்டு உள்ளன. 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் துவங்கப்பட்டுள்ளன. ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சுசீந்திரம் தேரூர் மற்றும் மணக்குடி காயல் பகுதிகள் பறவையினங்களை பாதுகாக்கும் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கு 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அபிவிருத்தி மற்றும் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் நலன் கருதி 81 வருவாய் கிராமங்கள் சீரமைக்கப்பட்டு, புதியதாக 107 வருவாய் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் கட்டடங்கள் கட்ட 10 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1.5 கோடி ரூபாய் மதிப்பில் உள் விளையாட்டரங்கம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிவராத்திரி விழாவை விமரிசையாக கொண்டாடும் பொருட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்க நான் உத்தரவிட்டேன்.

திருவட்டாறு சுசீந்திரம் ஆகிய நகரங்கள் புராதன நகரங்களாக அறிவிக்கப்பட்டு, வளர்ச்சித் திட்டங்களுக்காக தலா 1 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரத்தை தலைமை இடமாகக் கொண்ட இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத திருக்கோயில்களின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் திருக்கோயில்களின் நிருவாகச் செலவினங்களுக்காக ஆண்டு ஒன்றுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் அரசு மானியம் 1 கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த இரணியல் அரண்மனையை புதுப்பிக்க 3 கோடியே 85 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குளச்சலில் மீன்பிடி துறைமுகம் அமைக்க 87 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இனையம் புத்தன் துறையில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மீன் இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுசீந்திரத்தில் தமிழ்க் கவிஞர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கும், களியக்காவிளையில் மொழிப்போர் தியாகி சிதம்பரநாதனுக்கும் சிலைகள் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ் நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை அரசு விழாவாகக் கொண்டாடவும், இந்த நாளில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட மார்ஷல் நேசமணி திருவுருவச் சிலைக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளேன். மார்ஷல் நேசமணி அவர்களின் திருவுருவச் சிலையுடன் நினைவு மண்டபம் ஒன்றினை அழகுற அமைத்து அதனை நான் திறந்து வைத்தேன்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடல்சார் தொழிற்சாலைகளை ஈர்க்கும் வகையில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு தொழில் புரிய விரும்புவோருக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. இவற்றுடன் பொறியியல் சார்ந்த தொழில்கள், ரப்பர் தொழில்கள் மற்றும் சுற்றுலாத் தொழில் ஆகியவற்றை ஊக்குவிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் மாற்றாந்தாய் போக்கினையும், அதற்கு துணை போகும் தி.மு.க-வின் சதித் திட்டங்களையும் மீறி எனது அரசின் முயற்சிகளால் தமிழகம் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இருப்பினும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் நாம் தீர்வு கண்டுவிட்டோமா என்றால் நிச்சயம் இல்லை என்பது தான் விடை.

மாநில அரசு மட்டுமே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியாது. உதாரணமாக மீனவர்கள் பிரச்சனை, அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனை, கச்சத் தீவு பிரச்சனை, மண்ணெண்ணெய் ஒதுக்கீடு, நிலக்கரி ஒதுக்கீடு போன்ற பெரும்பாலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் தான் இருக்கிறது.

இதனை தற்போதுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செய்கிறதா? நிச்சயமாக இல்லை. மாறாக தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய காங்கிரஸ் அரசு என்ன செய்தது? இலங்கை அரசுக்குத் தேவையான ராணுவப் பயிற்சி ஆயுதங்கள் ஆகியவற்றை அளித்தது. அங்குள்ள தமிழர்கள் அழியக் காரணமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்தது தி.மு.க. என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட தமிழின விரோத காங்கிரசுக்கும் தி.மு.க-விற்கும் இந்தத் தேர்தலில் நீங்கள் தக்கப் பாடம் புகட்ட வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறை பிடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காத அரசு தற்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. தமிழக மீனவர்களை "போராசை பிடித்தவர்கள்" என்று சொன்னவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. இப்படிப்பட்ட மீனவ விரோத காங்கிரசுக்கும் தி.மு.க-விற்கும் வருகின்ற தேர்தலில் நீங்கள் மறக்க முடியாத பாடத்தைப் புகட்ட வேண்டும்.

பாதுகாப்புத் துறையையே, பாதுகாப்பற்றது ஆக்கிவிட்ட அரசு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு. வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய நாட்டைப் பாதுகாக்க நமது பாதுகாப்புத் துறை வலுவானதாக இருக்க வேண்டும். ஆனால், நமது ராணுவத்தை, தரைப் படையினை, கடற் படையினை, விமானப் படையினை நவீனமாக்கவும், வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எடுக்கவில்லை என்பது தான் கசப்பான உண்மை.

மத்திய காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் இன்று, கடற் படையிடம் போதுமான கப்பல்களோ அல்லது நீர்மூழ்கி கப்பல்களோ தற்போது இல்லை. இதே போன்று விமானப் படையிடமும் போதுமான நவீன விமானங்கள் இல்லை. ராணுவத்திடமும் நவீன ஆயுதங்கள் மற்றும் முக்கிய உபகரணங்கள் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. கடந்த பத்து ஆண்டுகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வீணடித்துவிட்டது. முப்படையில் பணிபுரிபவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு போதிய அக்கறை செலுத்தவில்லை. நாட்டைப் பாதுகாக்கும் முப்படைகளையே அலட்சியப்படுத்தும் மத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு நீங்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்க வேண்டும் என்றால்; தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற வேண்டும் என்றால்; அதற்கு ஒரே வழி மத்தியில் ஆட்சி மாற்றம். அந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வழங்க வேண்டும்"


--- என்றார் முதல்வர் ஜெயலலிதா.

புகைப்படம் மற்றும் தகவல்:
தி இந்து

நாடாளுமன்றத் தேர்தல் குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 March 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 33635

எங்கள் ஓட்டு இரட்டை இலை சின்னதிர்க்கே. சாமானிய மக்களின் வேதனை நீங்க மத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். இந்தியாவின் வாழும் இஸ்லாமியரின் தலைவிதியை இந்த தேர்தல் மூலம் இட ஒதுக்கீடு பெற்றுத்தர அ.தி.மு.க.வை ஆதரிப்பீர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...உண்மை முகம்
posted by MOHUDOOM (AL-HASA) [09 March 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33637

இரு திராவிட கட்சிகளும் தேர்தல் சமயத்திலோ அதற்கு பின்போ மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அந்த கட்சியுடன் இணைத்து மந்த்ரி பதவியை பெறுவது வழக்கம் .ஆனால்இரு கட்சி தலைவர்களும் ஒரு சமயத்தில் பா ஜ க யுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னவர்களதாம் .

கருணாநிதி அவர்கள் பா ஜ க வை தீண்ட தகாத கட்சி யன்று சொல்லி பிறகு அதனுடன் கூட்டணி வைத்து கொண்டார் .ஜெயலலிதா அவர்கள் ஒரு அமைப்பு நடத்திய மாநாட்டில் இனி ஒரு போதும் பா ஜ க யுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார் . பிறகு அதனுடன் கூட்டணி வைத்து கொண்டார் . இது ஒன்றும் ஆச்சரியமோ,அதிர்ச்சியான விஷயமோ இல்லை.

ஏன் என்றால் இந்த கட்சிகள் ஒன்றும் முஸ்லிம்களால் நடத்தக்கூடிய கட்சிகள் அல்ல ஒவ்வரு கட்சியுமே ஆட்சியை பி்டிக்க வேன்டும். அதிகாரத்தை அனுபவிக்க வேன்டும். என்பதற்ககாகவே கட்சியை நடத்துகின்றன இதில் எந்த கட்சியையும் குற்றம் சொல்ல முடியாது .

முஸ்லிம் நலனா...? பதவியா..? எனறு வரும் பொழுது இந்த கட்சிகள் முஸ்லிம் நலனை கண்டுகொள்வதில்லை . பதவிககாவே முஸ்லிம் விரோத கட்சியுடன் இந்த கட்சிகள் கூட்டணி சேர்த்தாலும் நாம் அதை ஆதரிக்க முடியாது . இது இவ்வாறு இருக்க துல்லியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் உள்ளது .

ஜெயலலிதா அவர்கள் பாரளுமன்ற . தேர்தலோ அல்லது தமிழக சட்டமன்ற தேர்தலோ நடைபெறாத காலத்தில் பா ஜ க மத்தியில் ஆட்சயில் இல்லாத நேரத்தில் ( பதவியை பெறுவதற்காக என்று சமாளிக்க முடியாது )

குஜராத்தில் வெற்றி பெற்ற மோடி மற்றும் பா ஜ க தலைவர்களை தமிழகத்துக்கு அழைத்து விருந்து கொடுத்தார் என்றால் ஆட்சி அதிகாராம் மற்றும் பதவி சுகத்தையும் தாண்டி எதோ ஒரு விஷயம் யுள்ளது என்பது சிந்திக்க வேண்டிய தருணம் இது .

அது தண்ணீரை விட ரத்தத்துக்கு அடர்த்தி அதிகம் என்பது மட்டும் காரணமாக இருக்க முடியாது. குஜராதில் முஸ்லிம்களின் இரத்தத்தை ஒட்டி வெற்றி பெற்றதின் காரணமாக கூட இருக்கலாம். என்று சொல்லி தெரியவேண்டியது இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [09 March 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33638

அஸ்ஸலாமு அழைக்கும் ,

எல்லா அரசியல் வாதிகளும் மக்கள் என்றால் மடையர்கள் என்று நல்ல புரிந்து வைத்துள்ளனர் .

அதுவும் குறிப்பாக நம் தமிழ் நாடு அரசியல் வாதிகளை பற்றி சொல்ல தேவை இல்லை .

இதில் அனைது கட்சிகளும் சமம் தான் ஆனால் அவைகளிடைல சில சில குறைந்த அளவில் வேறுபாடுகள் வேண்டும் என்றால் இருக்கலாம் .

ஆனால் இந்த ----- நம் சமுதாயம் சறியாக புரிந்து கொள்ளனும் . இல்லையன்றால் பிஜேபி யோடு இணைந்து நம்மை கொல்லும் போது தான் புரிய வரும் .

அம்மா தாயி நீ ஒன்றும் செய்ய வேண்டாம் தாயி மின்சார சரியா கிடைக்க வழிவகை செய்தால் போதும் . இலவசம் ........ இலவசம்........... என்று பல பொருட்களை கொடுத்து விலைவாசிகளை கட்டுப்படுத்தாமல் விண்ணை தொட செய்த விண்ணரசி .

அம்மா உணவகதில் ஒரு இட்லி ஒரு ரூபாய்தான் ஆனால் அதன் அருகில் உள்ள உணவு விடுதிகளில் ஒரு இட்லி 5 -10 ரூபாய்க்கு விற்கிறது அந்த கடைகள் எல்லாம் நம் தமிழகத்தின் எல்லையில் வரவில்லையா அம்மா .

அம்மா குடிநீர் 10 ரூபாய் தான் வெளி தனியார் குடிநீர் 15 - 20 மற்றும் அதுக்கு சற்று அதிகமாகவும் இருக்கிறது அதனை நான் கட்டுப்படுத்த முடியாது என்று தான் இந்த நடவடிகையா . டாஸ்மார்க்குக்கும் அம்மா மார்க்கு என்று வைத்து விட்டால் நல்ல போறுத்தமாக இருக்கும் .

முன்பு கல்வி நிறுவனகள் , மருதுவம் , சேவை துறைகள் போன்ற அணைத்து துறைகளும் அரசிடம் .

கள்ளுகடை , சாராயக்கடை , எல்லாம் தனியாரிடம் ஆனால் .

இன்று அதிகமான கல்வி நிறுவனகள் , மருதுவம் , சேவை துறைகள் போன்ற அணைத்தும் தனியாரிடம் .

சாராயம் போன்ற வஸ்துகள் மட்டும் அரசிடம் மக்கள் மவுனியாக இருந்தால் இந்த கொடுமைகள் நம்நாட்டில் தொடரதான் செய்யும் .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இதுவரை இடஒதுக்கீடு உயர்த்தாது ஏன்?
posted by salih (bangkok) [09 March 2014]
IP: 61.*.*.* Thailand | Comment Reference Number: 33639

முஸ்லிம்களுக்கு அதிகப்படுத்தவேண்டிய இட ஒதுக்கீட்டை நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி முஸ்லிம்களுக்கு இதுவரை உயர்த்தி கொடுத்திருக்கலாமே! இதுவரை செய்யாதது ஏன்?

காங்கிரசைத் துடைத்தெறிய வேண்டும் என்று பேசுகின்றீர்கள் பா.ஜ.க மதவாதப் பாசிச அரசு பற்றி பேசுவதில்லை.

மத்தியில் அதிமுக அங்கம் வகிக்கும் மக்கள் நல ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்ற வேண்டுகோளின் இரட்டை வேடபேச்சு ஏன்? முஸ்லிம்கள் தெளிவாக இருக்கிறார்கள் இந்த முறை ஏமாற்றிவிட முடியாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...உருவு கண்டு எள்ளாமை வேண்டும்..
posted by mackie noohuthambi (chennai) [09 March 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33641

புரட்சி தலைவி அவர்களின் சுறுப்பும் முடிவெடுக்கும் ஆற்றலும் பாராட்டுக்கு உரியது. அதே நேரம் தோழமைக் கட்சிகளை மதிக்காமல் அவர் செயல்படுவது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையையும் ஒரு அசாத்திய துணிச்சலையும் மமதையும் காட்டுகிறது. SLOW AND STEADY WINS THE RACE என்று சொல்வார்கள்.

"பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா! பாதை தவறாமல் பண்பு குறையாமல் பழகி வர வேண்டும் தோழா!! அன்பே உன் அன்னை அறிவே உன் தந்தை..என்று அவரது அரசியல் ஆசான் அவருக்கு கற்றுக் கொடுத்த பாடம்.

துணிவு இருக்கிறது பணிவு இல்லை. பாதை தெரிகிறது.பண்பு தெரியவில்லை. அறிவு இருக்கிறது அன்பு இல்லை.அவர் சொன்ன அறிவுரைப்படி இவர் நடந்திருந்தால், இன்று கனவு காணும் இந்திய பிரதமர் சிம்மாசனம் அவருக்கு கிட்டியிருக்கும் . ஆனால் 110 விதியிலேயே ஆட்சி செய்து பழக்கப் பட்டு விட்டவர் திருவள்ளுவரின் 110 வது குறளின்படி நன்றி கொன்றவர் என்ற அவப் பெயரையும் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டு தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டிருப்பதை காண பரிதாபமாக இருக்கிறது.

காங்கிரசையும் திமுகவையும் மத்தியில் அரியணை ஏற விடாமல் தடுக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டிக் கொள்பவர், மதவாத - முஸ்லிம்களின் எதிரிகளாக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியையும் அந்த சிம்மாசனத்தில் அமர விடக் கூடாது என்றும் மக்களிடம் அவர் கோரி இருந்தால், பாரதி கண்ட ஒரு புதுமை பெண்ணாக - நவீன சமூக நீதி தலைவியாக நாம் அவரை அடையாளம் கண்டிருப்போம்.

ஒவ்வொரு நாளும் நடக்கின்ற அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒரு நாள் அம்மாவும் மறுநாள் கலைஞரும் மாறி மாறி புள்ளிகளை பெறுகிறார்கள். இறுதி வெற்றி யாருக்கு என்ற பரபரப்பில் நம்மை வியப்பில் ஆழ்த்தி ஒரு தமிழனை வெற்றி கொண்டு சாதாரண 22 வயது நிரம்பிய, நமக்கு அறிமுகமில்லாத கார்ல்சன் என்பவர் புரட்சி தலைவியின் பொற்கரங்களில் இருந்து 10 கோடி ரூபாயை தட்டிப் பறித்து சென்ற கதை சொல்லும் செய்தி என்ன...

"உருவு கண்டு எள்ளாமை வேண்டும். உருள் பெருந் தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து" என்று வள்ளுவன் அடிக்கும் எச்சரிக்கை மணி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மறுபடியும், மறுபடியும் முஸ்லிகளின் காதில் பூ சுற்ற முயல்கிறார் முதல்வர்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [09 March 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33642

மறுபடியும், மறுபடியும் முஸ்லிகளின் காதில் பூ சுற்ற முயல்கிறார் முதல்வர் அவர்கள்! முஸ்லிம்கலென்ன ஏமார்ந்த சோனகிரியா? அல்லது ஒரு சில ==== இருக்கிறார்களே,அவர்களைப்போல் ஆமாம் சாமி போடும் ஆட்டு மாட்டு மந்தைகளா?

2001லிருந்து 2006 வரை அ.தி மு க் தமிழகத்தை ஆண்டது , அந்த வருடத்திலிருந்தே பிற்படுத்தபட்டோர் ஆணையம் இயங்கி வருகிறது. அதன் ஆயுள் காலம் ஒரு வருடம் ஆகும். அந்த ஒரு வருடம் முடியும் தருவாயில் அப்பொழுது ஆண்டுவரும் அரசு அதை புதிப்பித்துக்கொண்டே இருக்கும்.இது தான் நடந்து வந்த உண்மை.

அம்மையாரின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இட ஒதிக்கீடு கொடுக்க வேண்டுமென்ற உண்மையான எண்ணமிருந்திருந்தாள் அவர் ஆண்ட 2001 லிருந்து 2006 வரைக்குள்ள அந்த ஐநது ஆண்டுக்குள்ளாகவே கொடுத்திருக்கலாமே? மாறாக என்ன செய்தார் தெரியுமா?

பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையகாலமும் முடியப்போகும் கடைசி நாளில் அதைப் புதுப்பித்து விட்டு. ஆ...பார்த்தீர்களா பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை புதுப்பித்து விட்டேன், முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீடு இனி பொத்துக்கொண்டு விழும் என்று கூறினார்.

அம்மாவின் வாக்கு அருள் வாக்கு என்று இன்று அவருக்கு கொடிபிடித்து கெண்டி தூக்கும் சில இஸ்ல்லாமிய தலைவர்களும் அன்று ஆமாம் அம்மா இடஒதிகீட்டை தந்திடுவார்,ஆகையால் நாம் நம் உயிரைக்கூடஉச்சமாக நினைக்காமல் இக்கணம் முதல் இரட்டை இலைதான் நம் மூச்சு, பேச்சாக இருக்கவேண்டுமென பேயாக பறந்து , பறந்து பிரச்சாரம் செய்தார்கள்.(ஆனால் இறுதியில் அல்லாஹ் அழகான முடிவை கொடுத்தான் அது வேறு விசியம்.)

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஆந்திர அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீதம் இடஒதிக்கீட்டை கொடுத்தது அதை அன்று வன்மையையாக கண்டித்த அதே ஜெயலலிதாதான், தன்னுடைய ஆட்சியில் முஸ்லிம்களுக்கு இடஒதிக்கீட்டுக்கு அடித்தளம் அமைத்தாராம். கேப்பையில் நெய் வடிகிறது கேணையர்களே கொஞ்சம் அள்ளிக்கொண்டு போங்கள் என்பது போல் இருக்கிறதல்லவா?

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by farook (ksa) [10 March 2014]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33646

முஸ்லிம்கள் இருக்கும் நாகர்கோயிலில் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறார் ஆனால் இங்கே கூட பிஜேபி மதவாத கட்சி பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே ????? தேர்தலுக்கு பின் தேவைப்படுமே .

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) [10 March 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33659

சகோதரர் ஆதம் சுல்தான் அவர்கள் தவறான தகவலைத் தருகிறார். பிற்ப்பட்டோர் ஆணையம் எப்போதும் இருக்கும்தான். ஆனால் இட ஒதுக்கீட்டு கோரிக்கை எனபது 2005 ஆம் ஆண்டின் இறுதியில்தான் டி என் டி ஜெ வினரால் கும்பகோணத்தில் மாநாடு நடத்தி முன் வைக்கப்பட்டது. கோரிக்கை வைத்த பின்புதான் அதை நடைமுறைப்படுத்த முடியும்.

இட ஒதுக்கீடு எனபது ஏதோ இலவச டி வி அல்லது இலவச ஆடு ,மாடுகள் மாதிரி முதலமைச்சரின் ஒற்றைக் கையெழுத்தில் நிறைவேறும் சாமாச்சாரம் அல்ல. அதற்காக பிர்ப்பட்டோர் ஆணையத்திடம் கருத்து கேட்டு அதன் அறிக்கையை பெற்ற பின்புதான் அரசு உத்திரவிட முடியும். அந்த அடிப்படையில்தான் கடந்த 2001-2006 ஆட்சியில் உத்தரவிடப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by farook (ksa) [11 March 2014]
IP: 79.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33669

சகோ சுஹைப் அவர்களே , டி என் டி ஜெ . கும்பகோணம் மாநாடு முன் யாருமே இந்த கோரிக்கை வைக்க வில்லையா ??? இது சரியான தகவலா ??? உண்மைலேயே அக்கறை இருந்தால் அந்த அம்மா ஆட்சிலே நிறைவேற்றி இருக்க முடியாதா ? காலம் தாழ்த்தி ஆணையம் மற்றும் அமைத்து ஏன் ? யார் ஆந்திராவில் முஸ்லிம் சமுதயாதுக்கு தரும் இடஒதுக்கிடை எதிர்த்தார் என்று சொல்லுங்கள் ?

அப்துல் லதீப் போன்றோர் சட்டசபையில் பேசியது பற்றி ஒரு டி என் டி ஜெ .குரிபிட்டாரே? நடைமுறை படுத்தியது யார் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved