காயல்பட்டினம் தஃவா சென்டர் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் தஃவா & தர்பிய்யா பயிற்சியின் மூன்றாம் பிரிவு வகுப்புகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து - அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் சாராம்சம் வருமாறு:
அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த மூன்று வருடங்களாக நமது தஃவா சென்டர் சார்பாக நடத்தப்பட்டு வரும் பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது? என்ற தஃவா & தர்பிய்யா பயிற்சி வகுப்பானது தற்போது மூன்றாம் Batch ஏக இறைஅருளால் சிறப்புற நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இதன் தொடர்ச்சியாக 3rd Batch-ன் 5ஆம் வகுப்பு "இஸ்லாம் அறியா முஸ்லிம்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?" என்ற தலையங்கத்தில் கடந்த 09.03.2014 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
முதலில் காலை 09.30மணி முதல் 10மணி வரை மாணவ / மாணவியர் - களுக்கான சென்ற வகுப்பினை நினைவூட்டும் விதமாக தேர்வும் நடத்தப்பட்டது. "இஸ்லாம் அறியா முஸ்லிம்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?" என்ற வகுப்பை நடத்தித்தந்திட சென்னை-யை சார்ந்த சகோ. அலிம் அல் புஹாரி அவர்கள் வருகை தந்திருந்தார்கள்.
அல்லாஹ்வின் பேருதவியால் வகுப்பு காலை 10 மணி முதல் 1 வரை நடைபெற்றது. இதில் இஸ்லாமிய வரலாற்றில் எங்கிருந்து ஷிர்க் மற்றும் குழப்பங்கள் உருவானது என்றும் பின் வகுப்பிற்க்காக தொகுக்கப்பட்ட கேள்விகளுக்கும் விடைஅளித்தார்கள். கேள்விகளுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் இஸ்லாமிய வரலாறுடன் தெளிவாக விளக்கம் தந்தார்கள்.
அதனை தொடர்ந்து மாணவ / மாணவியர்களின் சந்தேகத்தை நீக்கும் வண்ணம் கேள்வி-பதில் நிகழ்ச்சி 02.20 முதல் 03.30 வரை நடைபெற்றது.
பின்பு மதியம் 3.30 முதல் அஸர் வரை துஆ மனனம் வகுப்பை சகோ.பிலால் அவர்கள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தாய்யிகளாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் உள்ளதை தூய்மை படுத்திக் கொள்ளும் பொருட்டு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை
"இக்லாஸ்" எனும் தலைப்பில் சகோ.அலிமல் புஹாரி அவர்கள் நடத்தினார்கள். நபிமார்கள் செய்திட்ட சிறந்த பணியை செய்ய விருக்கும் நாம் எப்படிபட்ட இக்லாஸுடன் இத்தகைய பணி செய்திட வேண்டும் என நயமுடன் எடுத்துரைத்தார்கள்.
மாலை 5.30 மணி முதல் தாய்யிகளுக்கான பேச்சு பயிற்சியில் இன்றைய வகுப்பாக பேச்சு பயிற்சியின் அடிப்படைகள் மற்றும் பயான் பண்ணும் விதம் அதற்கு எவ்வாறு தம்மை தயார் செய்திட வேண்டும் என்று சகோ.ஜக்கரிய்யா அவர்கள் சிறிது நேரம் உரையாற்றினார்கள்.
இறுதியாக கப்பாராஉடன் வகுப்பு இனிதே முடிவு நடை பெற்றது. வல்லோன் அல்லாஹ்வுக்கே வான் புகழ் உரித்தாகட்டும்.
வஸ்ஸலாம்,
இவண்,
இறைப்பணியில் இணைந்த சகோதரர்கள்,
சமூக நல்லிணக்க மையம் - CESH (தாவா சென்டர்),
காயல்பட்டணம் - 628 204
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross