Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:11:39 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13596
#KOTW13596
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 25, 2014
நாடாளுமன்றத் தேர்தலில் காயல்பட்டினம் வாக்குப்பதிவு: ஓர் அலசல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 5073 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் - காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு 62.48 சதவீதம் அளவில் இருந்துள்ளது. இது 1999 (52.37%) , 2004 (55%), 2009 (57%) ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விகிதத்தை விட அதிகம்.

காயல்பட்டினத்தில் 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் (66.69%), 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் (68.64%) காலங்களில் - பதிவான வாக்குகளோடு பார்க்கும்போது இது குறைவு.

1999ம் ஆண்டும் (நாடாளுமன்றம்), 2001ம் ஆண்டும் (சட்டசபை) நகரில் பதிவான வாக்குகள் முறையாக 52.37% மற்றும் 49.05%. ஆர்வக்குறைவுக்கான காரணம் - தி.மு.க. - அத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டது இருக்கலாம்.

காயல்பட்டினம் மக்கள் - பொதுவாக சட்டமன்றத் தேர்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாடாளுமன்றத் தேர்தலுக்கு கொடுப்பதில்லை. இருப்பினும் - கடந்த நாடாளுமன்றத் தேர்தல்களின் போது பதிவான வாக்குகளைவிட தற்போது அதிகம் வாக்குகள் பதிவாகியிருப்பது - களத்தில் எண்ணிக்கையில் அதிகமான கட்சிகள், அதனால் அதிகரித்த விழிப்புணர்வு, தேர்தலில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகள் போன்றவை காரணமாக இருக்கலாம்.

கடந்த சட்டசபை தேர்தலில் பதிவான சதவீதத்தை விட சுமார் 6 சதவீதம் குறைவாக காயல்பட்டினத்தில் வாக்குகள் பதிவாகியிருந்தாலும் (2011: 68.64%; 2014: 62.48%), எண்ணிக்கையில் சுமார் 500 வாக்குகள் தற்போது அதிகமாக பதிவாகியுள்ளது (2011: 19,499; 2014: 19,922). இதற்கு முக்கிய காரணம் - வாக்காளர்களின் எண்ணிக்கையில் காணப்பட்ட உயர்வு (2011: 28,313; 2014: 31,886).

காயல்பட்டினத்தில் வாக்குப்பதிவு எந்த கட்சிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கும் என்பதனை துல்லியமாக கணிப்பது கடினம் என்றாலும் - 2011ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளை அளவுகோளாக வைத்து - சில கணிப்புகளை மேற்கொள்ளலாம்.

2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது - நகரில் - தி.மு.க., 11,703 வாக்குகள் பெற்றது. அ.தி.மு.க., 7,302 வாக்குகள் பெற்றது. பாரதிய ஜனதா கட்சி 151 வாக்குகளும் - இதர கட்சிகள், சுயேட்சைகள் - 340 வாக்குகள் பெற்றன.

இந்த தேர்தலில் வாக்குகள் எவ்வாறு ஒவ்வொரு கட்சிக்கும் சென்றிருக்கும் எனக் காணுமுன், அளவுகோல் தேர்தலான 2011 சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் எவ்வாறு இருந்தது என்று பார்ப்போம்.

2011 சட்டமன்ற தேர்தலின்போது, தி.மு.க. அணியில் - காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகியோர் இருந்தனர்.

அ.தி.மு.க. அணியில் - தே.மு.தி.க., கம்யூனிஸ்ட்கள், புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றன.

நடப்பு தேர்தலில் - அ.தி.மு.க. தனியாக தேர்தலை சந்திக்கிறது.

தி.மு.க. அணியில் இருந்த காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை விலகிவிட்டன. புதிய தமிழகம், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை - தி.மு.க. அணிக்கு மாறியுள்ளன.

அ.தி.மு.க. அணியில் இருந்து பிரிந்த தே.மு.தி.க, தி.மு.க. அணியில் இருந்து பிரிந்த பாட்டாளி மக்கள் கட்சி, சட்டமன்றத் தேர்தலில் கலந்துக்கொள்ளாத ம.தி.மு.க. ஆகியவை - பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துள்ளன.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தனியாக நிற்கின்றன.

இவ்வாறு 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல் காட்சியில் இருந்து மாறி காட்சி அளிக்கும் தேர்தல் களத்தில் - ஆம் ஆத்மி கட்சி, புதிதாக அறிமுகமாகியுள்ளது.

இந்த பின்னணியில் - நகர வாக்குகள், எவ்வாறு ஒவ்வொரு கட்சிக்கும் சென்றிருக்கும்?

நகரில் 19,922 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் கம்யூனிஸ்ட் கட்சி, இதர கட்சிகள், சுயேட்சைகள் மற்றும் NOTA - 500 வாக்குகள் பெறலாம்.

இந்த தேர்தலில் - தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக நின்றவர்களில், திறமை வாய்ந்தவராக கருதப்பட்ட இரு வாக்காளர்களில் ஒருவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சண்முகம். மற்றொருவர் - ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் புஸ்பராயன்.

சண்முகம் நகரில் மேற்கொண்ட பிரச்சாரம், இவருக்கு ஆதரவாக இக்கட்சியின் மாநில தலைவர் ஞானதேசிகன் - நகரில், பொதுக்கூட்டத்திலும் பேசியது ஆகியவை இக்கட்சிக்கு - ஓர் அளவு ஆதரவை பெருக்கியது. நகரின் மேற்கு பகுதியில் அக்கட்சிக்கு என்று உள்ள ஆதரவும் சேர்ந்து - நகரில் - குறைந்தது 1000 வாக்குகளை காங்கிரஸ் கட்சி பெற வாய்ப்புள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் - பாரதிய ஜனதா கட்சி, நகரில் 151 வாக்குகள் பெற்றது. தற்போது - அக்கட்சியுடன் - தே.மு.தி.க., ம.தி.மு.க. ஆகியவை கூட்டணியில் உள்ளன. இக்கட்சிகளின் தனிப்பட்ட செல்வாக்கு நகரில் எந்த அளவில் உள்ளது என்பது தெளிவில்லை என்றாலும், நகரின் புற நகர் பகுதிகளில் - பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சி ம.தி.மு.க. வேட்பாளர் ஜோயலுக்கு - குறிப்பிடும்படியான அளவில், வாக்குகள் (சுமார் 1500 முதல் 2000 வரை) விழுந்திருக்கும் எனக்கூறப்படுகிறது. இந்த வாக்குகள் - சில பகுதிகளில் தி.மு.க.வின் அனிதா ஆதரவாளர்கள் வாக்குகள் என்றும், சில பகுதிகளில் அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் என்றும் கூறப்படுகிறது.

புதிதாக களம் கண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி, கனிசமான வாக்குகளை நகரின் கிழக்கு பகுதி மற்றும் கடலோர பகுதிகளிலும், மற்ற உள்ளூர் பகுதிகளில் குறிப்பிடும்படியிலான அளவிலும் பெறும் என்றும் கூறப்படுகிறது. நகரில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு எண்ணிக்கை 2500 - 3000 அளவில் இருக்கலாம்.

நகரில் பதிவான் எஞ்சிய 14,000 வாக்குகளை தி.மு.க. வும், அ.தி.மு.க. வும் - பகிர்ந்துக்கொள்ளும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் - இரு கட்சிகளும் சேர்ந்து ஏறத்தாழ 19,000 வாக்குகள் பெற்றிருந்தன. அதில் சுமார் 5000 வாக்குகளை தற்போது 4 கட்சிகள் பெற வாய்ப்புள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் - நகரின் 29 வாக்கு சாவடிகளில், அ.தி.மு.க., 10 வாக்கு சாவடிகளில் பெருவாரியான வாக்குகளை பெற்றிருந்தது. ஆனால், இத்தேர்தலில் - அக்கட்சி - நகரில் தனக்கு பலமான, கடலோர பகுதிகளில் குறிப்பிடும்படியிலான வாக்குகளை ஆம் ஆத்மி கட்சியிடம் இழக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் புற நகர் பகுதிகளில் தான் வழமையாக பெறும் வாக்குகளில் குறிப்பிடும்படியிலான வாக்குகளை ம.தி.மு.க. கட்சியிடம் இழக்கும் என்றும் கூறப்படுகிறது. அக்கட்சியின் உள்ளூர் வாக்குகளுக்கு - பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, தான் - முன்னர் பெற்ற 7,302 வாக்குகளில் சுமார் 1500 வாக்குகளை - அக்கட்சி, இத்தேர்தலில் நகரில் இழக்க வாய்ப்புள்ளது.

பாரம்பரியமாக அ.தி.மு.க. விற்கு வாக்களிக்கும் குடும்பங்களின் புதிய வாக்காளர்கள் இக்கட்சிக்கு வாக்களிக்கும் வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டால் - அ.தி.மு.க., நடப்பு பாராளுமன்ற தேர்தலில், நகரில் சுமார் 6,000 வாக்குகள் பெற வாய்ப்புள்ளது.

தி.மு.க. - கடந்த சட்டமன்றத் தேர்தலில் 11,703 வாக்குகள் பெற்றது. இது முந்தைய தேர்தல்களை விட குறைவு. இந்த தேர்தலிலும், இக்கட்சி இறங்கு முகம் காணும் என்றே தெரிகிறது.

இக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், பெரிய அளவில் பிரச்சாரம் செய்யவில்லை. அவரின் ஆதரவாளர்கள் - உள்ளூர் பகுதிகளில் தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கவும், புறநகர் பகுதிகளில் தி.மு.க.விற்கு வாக்களிக்காமல் ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு வாக்களிக்கவும் - தெரிவித்ததாக கூறப்படுகிறது. இது ஏறத்தாழ - அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரியின் நிலைப்பாடு.

தி.மு.க. விற்கு முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் போன்றவை ஆதரவு தெரிவித்தாலும், உள்ளூர் பகுதிகளில் அக்கட்சிக்கு பொதுவாக செல்லும் வாக்குகளும், இம்முறை பெருவாரியாக ஆம் ஆத்மி கட்சிக்கும், குறிப்பிடும்படியிலான அளவில் காங்கிரஸ் கட்சிக்கும் சென்றுள்ளது.

எனவே - 2011 சட்டமன்றத் தேர்தலில் தான் பெற்ற 11,703 வாக்குகளில் - இக்கட்சி கனிசமான வாக்குகளை - சுமார் 3,500 வரை நடப்பு தேர்தலில் இழந்து, நகரில் சுமார் 8000 வாக்குகளை பெற வாய்ப்புள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Kayalpatnam) [25 April 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34613

Good analysis...

we predict a bright future for AAP in our Kayal if it would go on the right track to fight against scam and to root out the communal elements and at the same time to focus on the local issue to put hands together with us against the evil environmental ruiners...

Also happy to see our new generation is far away from the traditional DMK mania...where they think themself wisely before casting the vote to the right person. I agree with your observations ..insha allah we will see after May 16.. how it works?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by netcom buhari (chennai) [25 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34614

ஓரளவு சரியான கருத்து கணிப்பாகவே தெரிகிண்டது . அனிதாவின் ஆதரவு ஆட்களின் வோட்டு ஆம் ஆத்மிகு விழுந்து தாக நான் அறிதேன் அப்படி விழுந்தால் AAP 3500 vote கிடைக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...யூகங்கள் யூகங்களே
posted by Salai Sheikh Saleem (Dubai) [25 April 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34617

இப்படியெல்லாம் கருத்து கணித்தால் தான் சிலருக்கு நல்ல கணிப்பு என்று சொல்ல மனசு வரும். சரி கொஞ்ச நாட்களுக்கு இப்படியே காலத்தை ஒட்டுங்கள்.

தி மு க விற்கு ஆதரவு என்றால் "MANIA " வாம். அப்போ மற்ற கட்சிகளுக்கு அளிக்கும் அளித்து வரும் ஆதரவை என்ன சொல்லி அழைப்பது?

நமது சமுதாயம் தி மு க வோடு கொண்டிருப்பது தேர்தல் கூட்டணி மட்டும் இல்லை, அது ஒரு உறவு. கலைஞர் மேல் வைத்திருக்கும் ஒரு நம்பிக்கை.

உடனேயே ஊழல் அது இது என்று கூவ ஒரு கூட்டம் இங்கே உள்ளது.

தி மு க வில் என்ன குறைகள் இருந்தாலும் - அவர்களால் நமக்கு தீமைகள் குறைவு, எதையும் கேட்டு பெறலாம், அடைந்த நன்மைகள் அதிகம் , சிறுபான்மை சமுதாயத்தினரின் ஈடேற்றத்திற்காக பாடுபடுவது எனபது அவர்கள் கொள்கை. இதைவிட நாம் திமுக வின் மேல் பற்று வைக்க என்ன காரணங்கள் வேண்டும் ?

இதை எல்லாம் தெரிந்து தான் கண்ணியமிகு முஸ்லீம் லீக்கும், தங்களின் முடிவை சரியான நேரத்தில் மாற்றிக்கொண்ட TNTJ போன்றோர் திமுக வின் பலமாக இருக்கின்றனர்.

ஊரில் உள்ள இளைய தலைமுறைகள் தெளிவாகவே உள்ளார்கள் - சித்திக்கும் திறனாளிகள்.

ஊழல் ஒழிப்பு என்பதை மட்டுமே தாரக மந்திரமாக வைத்து இந்திய அரசியலில் குதிரை ஓட்ட முடியாது. அது தவிர ஒராயிரம் பிரச்சனைகள் நம்முன்னே பூதாகரமாக தலை விரித்தாடுகிறது ...எனபது எல்லோரும் தெரிந்த ஒன்றே.

அதைவிட கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் ஆகிவிட முடியாது !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...என்ன அவசரம்?
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [26 April 2014]
IP: 36.*.*.* China | Comment Reference Number: 34621

அப்பா , 16 ம் தேதிவரைகூட பொறுத்திருக்க முடியவில்லையா?

எல்லாம் முடிந்துவிட்டது. இனிமேல் கூவி பிரயோஜனம் இல்லை. 16 ம் தேதி ஓட்டுப்பெட்டியை திறந்தால் எல்லாம் தெரிந்துவிடும். அதற்குள் என்ன அவசரம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [26 April 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34622

இந்த தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஆளும் அதிமுக விற்கு காயல் மாநகரில் இருந்து 4992 ஓட்டு மட்டுமே கிடைக்கும். முந்தைய தேர்தலில் வாக்கு வாங்கியதை காட்டிலும் குறைவு. காரணம் உள்கட்சி பூசல், கட்சிகாரர்களுகிடையே கருத்து வேறுபாடுதான் காரணம்.

தேர்தல் முடிவுக்குபின் மீதம்முள்லா 2 ஆண்டு அம்மா ஆட்சி, கட்சி காரர்களே கழகத்திற்கு மாசு களங்கமும் ஏற்படுத்தியவர்களுக்கு தேர்தல் முடிவுக்கு பின் சாட்டை உண்டு. இந்த தொகுதியை 15 ஆண்டுக்கு பின் இரட்டை இலை சின்னம் தக்க வைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [26 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34624

ஆக இந்த கருத்துகணிப்பின் படி புதிய வரவான ஆம் ஆத்மி வாக்குகளை பிரித்து நம் எதிரிகளுக்கு உதவியுள்ளது என்பதனை இந்த ஆய்வின் மூலம் ஊர்ஜித படுத்தி யுள்ளீர்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [26 April 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34625

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஓரளவு இந்த இந்த கருத்து சரியாக இருக்க வாய்புகள் இருக்கலாம் .

நகரின் 55 சதவீத வாக்குகள் தி . மு .க விற்கு கிடைக்கலாம் . ஆ . தி . மு .க விற்கு 20 சதவீதம் , ம .தி .மு .க விற்கு 12 சதவீதம் , காங்கிரஸ் 8 சதவீதம் , ஆம் ஆத்மி - 5 சதவீதம் என்ற அடிப்படைகளில் வாக்குகள் கிடைத்து இருக்கலாம் இன்ஷா அல்லாஹ் மே 16 வெள்ளி கிழமை ஜும்மா விற்கு பிறகு முடிவுகள் கிடைத்துவிடும் .

தூத்துக்குடியை பொறுத்தவரை தி . மு . க வின் வெற்றி வாய்புகள் கடினமான ஒன்றுதான் .

ஆ . தி .மு . க விற்கு வாய்புகள் அதிகம் நடுவில் பிஜேபி கூட்டணி தப்பித்தவறி கூட வந்துவிடக்கூடாது .

இதுவரை முடிந்த அளவில் 5 கட்ட தேர்தலில் பிஜேபி இக்கு நினைத்த அளவு வெற்றி கிடைக்க வாய்புகள் குறைவாகதான் இருக்கிறது .

இனி நடக்கும் கட்டங்கள் பிஜேபி க்கு அதிக சாதகமான இடங்கள் நம் முஸ்லிம் சமுதாயம் ஒருங்கிணைந்து பொது எதிரிக்கு ( பிஜேபி மற்று அதன் கூட்டணி ) க்கு எதிரான வலுவான எதிரி அணியை கண்டு ஆராய்ந்து அந்தந்த தொகுதிகளில் அவர்களுக்குதான் நம் வாக்குகள் இருக்கணும் அது தொகுதிகளின் அடிப்படைகளில் உத்திபிரதேசத்தை பெறுத்தவரை ( காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் , சமாஜ் வாதி ) .

பீகாரை பொருத்தவரை (காங் + லல்லு ) அல்லது நிதீஷ் குமார் இவர்களில் எந்த தொகுதிகளில் யார் பிஜேபி க்கு சமமான வலுவாக உள்ளார்களோ அவர்களுக்குதான் நம் வாக்குகளை போட வேண்டும் இவ்வாறு அமைந்தால் பொது எதிரி கண்டிப்பாக வீழ்வான் இன்ஷா அல்லாஹ் .

நம் காயல்பட்டின மக்களை போல் வாக்கினை சிதறவிடாமல் சமுதாயதின் நலன் கருதி செயல்பட்டால் நம் நாடு நல்லா இருக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...innee
posted by mohudoom (al-hasa) [26 April 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34626

அப்போ காயல்பட்டினம் இனி மோடி பட்டினம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் விரும்பும்,வெற்றியை தந்தருள்வானாக!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [26 April 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34627

kayalpatnam .com கணிப்பு கிட்டத்தட்ட சரியாக வரலாம்,ஆனால் வாகளிதவர்களின் மனநிலையை அந்த முன்னோனைத் தவிர வேறு எவரும் துல்லியமாக அல்ல முடியாது.தற்போது வாக்கு சதவீதம் கூடியிருப்பது மக்களுக்கு நம் ஜனநாயக அரசாட்சி யின் நம்பிக்கையையே காட்டுகிறது!

வாக்களிக்குமுன் நம்முடைய கடமை நாம் யாருக்கு வாக்களிக்கவேண்டுமென்பதை வலியுறுத்திவந்தோம்!வாக்களித்து விட்டார்கள் அவர்களின் உரிமையை அவர்களுக்கு சரியானதொரு தேர்வென முடிவெடுத் திருக்கிறார்கள்! தேர்வு முடிவு எப்படிவந்தாலும் ஏற்றுக்கொள்வதோடு வாக்களித்த வர்கள் அதன் பயனையும் அனுபவித்தாக வேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை!

அனிதா அண்ணாச்சியின் ஆதரவாளர்கள் தி.மு.க விற்கு எதிராக வாக்களிக்க பணிக்கப்பட்டார்கள் என்ற கருத்தாளம்போல் கோடிட்டிருக்கிறீர்கள்.அது உண்மையாக இருக்குமேயானால் இதைவிட ஒரு துரோகம் வேறு எதுவும் இல்லை.

எந்த கட்சியானாலும் கட்சிக்குள்ளிருந்து குரல் கொடுக்கலாம் ஆனால் (உள்குத்து என்ற )துரோகத்தில் ஈடுபடுவதென்பது,சாதம் தின்ற தட்டிலேயே சாக்கடையை நிரப்புவதற்கு சமம் உங்களுக்கு கருத்து வேறுபாடிருந்தால் ஒதிங்கி இருப்பதுதான் உத்தமம்,

அதற்கும் மேலே பிரச்னை போனால் கட்சியை விட்டு விலகுவது தான் பெருந்தன்மை.

நம் வீட்டிற்குள் ஒரு பிரச்னை வந்து நம்மை தனிமைபடுத்த முயன்றால் ஒரு நாளில் நம்மை புரிந்து கொள்வார்கள் என்று அமைதி காப்பதுதான் கண்ணியம்,அதை விட்டுவிட்டு நம் எதரியிடமே நம் வீட்டையழிக்கும் வேளையில் ஈடுபட்டால், அவரை அடுத்தவீட்டுக்காரன் கூட மதிக்க மாட்டான்!

இப்பேற்பட்ட குணமுள்ளவரைத்தான் நான் விமர்சிக்கிறேன் யாரும் தவறுதலாக அனிதா அண்ணாச்சியை குறிப்பிடுவதாக கற்பனையிடவேண்டாம் அனிதாஅண்ணாச்சியைப்பொருத்த வரை அவர்மீது எனக்கு மரியாதையுண்டு.என் மகள் கல்யாண மேடையில்வந்து முன்னிலைவகுத்து சிறப்பித்து தந்தவர்களில் அவரும் ஒருவர்.அவரின் நேரான, மறைவான கொடைத்தன்மை யை பல இடங்களிலும் புகழாரமாக பேசியும் இருக்கிறேன்!

அண்ணன் அழகிரியைபபொறுத்தவரை அவர் தி.மு.கவிலிருந்து தூக்கி எறியப்பட்டவர்அவரின் தற்போதைய நிலையைப் பொருத்தவரை அவர் கண்ணோட்டத்தில் அது சரியே!

அடுத்து,ஊழலுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும், வாக்களித்தும் இருக்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது! நான் கேட்கிறேன் ஊழல் இல்லாத கட்சி எது? தயவு செய்து சொல்லுங்கள்.

அண்மையில் முளைத்த ஆம் ஆத்மி கட்சியிலிருந்து டெல்லி சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வர்களில் ஒரு உறுப்பினர், ஆம் ஆத்மி தலைமை பற்றியும்,அங்குள்ள ஊழல் பற்றியும், நேர்மையற்ற நடுநிலையற்ற நிர்வாகம் பற்றியும் எல்லா நிருபர்களுக்கு மத்தயில் பேட்டியளித்ததை நாம் அனைவரும் கேட்டோம் ஆட்சிக்கு வந்து ஒரு சில நாட்களுக்குள்ளேயே இந்த குழாயடி குழப்பம் ஆரம்பமாகியது.உண்மையை இறைவன்தான் அறிவான்!

இதையடுத்து வேறு எந்த கட்சியில் ஊழல் இல்லை ஒரு கட்சியையாவது கை காட்ட முடியுமா?100 ரூபாய் ஊழல் செய்தாலும்,100 கோடி ஊழல் செய்தாலும் திருடன் திருடன்டதானே!

10 ரூபாய்திருடியவனை பெற்றோர்கள் அடித்து புத்திமதி சொல்லி திருத்துவார்கள்.10 கோடி திருடியவனை அரசு சிறையில் தள்ளி திருத்துவார்கள்.ஆக இருவரும் திருடர்கள் தானே.

ஏன் நம்மில் 99%சதவீதம் பேர் அவன் திருடன்,இவன் ஊழல் பேர்வழி, இலஞ்சம் வாங்குபவன் என்ற பெயரை சூட்டுகிறோம், நம் வாழ்கையை நினைத்துப்பார்த்தோமா, நாம் மனிதரில் புனிதர் என்று சொல்லிகொண்டால் மட்டும் போதாது வாழ்ந்தும் காட்டவேண்டும்! ஒரு சாதாரண பேருந்து இருக்கை முன்பதிவு முதல் பிள்ளைகள் படிக்க அனுப்பும் பள்ளிகள்வரை நம்மில் 99% சதவீத மக்களில எந்த கையூட்டும் இல்லாமல் காரியமாற்றி இருக்கிறோமா?

ஒரு செண்டு நிலத்திற்க்கு கூட பத்திர பதிவு கட்டணத்தை செலுத்தும் பொழுது ஒரு பைசாகூட பிசிறில்லாமல் செலுத்தியவர்களை இந்த 99%சதவீத மக்களில் ஒருவரைக் கூடகாட்ட முடியுமா?அடுத்தவர்களை அயோக்கியர்கள் ஊழல் பேர்வழிகள் என்றழைக்க நம்மில் பெரும்பான்மையான மக்களுக்கு எந்த யோக்கியதையும், அருகதையும் இல்லை!இல்லை!!இல்லை!!! நம் மனசாட்சியை தொட்டு நாமே கேட்டுக்கொள்வோம் நாம் 100% சதவீதம் சுத்தமானவர்கள் தானாவென்று!.

எல்லாம் வல்ல அல்லாஹ் நாம் விரும்பும்,வெற்றியை முஸ்லிகளுக்கு சாதகமான,பாதுகாப்பான வெற்றியை தந்தருள்வானாக ஆமீன்!

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Cnash (kayalpatnam) [26 April 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34628

சரி....மே 16 பின் வழக்கம் போல் சதவீத கணக்கும் தேர்தல் கமிசன் மேல் பழியும் போட்டு அறிக்கை வரும் அப்போது பார்த்து கொள்வோம்...உங்களுக்கு சகஜமானது தான் கவலை வேண்டாம்...

அப்புறம் சத்கு தம்பி காக்கா நீங்க தானே கருது கணிப்பு exit poll போடுங்க என்று கேட்டீங்க...இப்போ திமுக விற்கு சாதகம் இல்லை என்றதும் எதற்கு அவசரம் பொறுமையா இருங்கோ மே 16 வரை என்று சொல்லுறீங்க...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou,China ) [27 April 2014]
IP: 112.*.*.* China | Comment Reference Number: 34633

அது exit poll result இல்லையே ! ஆம் ஆத்மி யின் அபிலாஷைகளை வெளியிட்டிருக்கிறார்கள். அதானால்தான் நான் அப்படி எழுதிருந்தேன் .

பெரும்பாலான மீடியாக்களில் வரும் கருத்துக்கணிப்புகள் தாங்கள் விரும்பும் கட்சியினருக்கு ஆதரவை திரட்டுவதற்காக (கையூட்டு பெற்றுக்கொண்டு) பரப்புரைசெய்யப்படுபவை. அவைகள் ஒருபோதும் உண்மையாவது இல்லை . நீங்கள் 2004, 2009 தேர்தல்களின் கருத்து கணிப்பை அவதானித்தால் இந்த உண்மை விளங்கும் .

சரி, யார் வெற்றிபெறுவார்கள் என்ற பிரச்சனைக்கு நான் வரவில்லை.யார் வெற்றிபெறவேண்டும் என்ற பிரச்சனக்கு நான் வருகிறேன் ஊழல் ஒரு பொருட்டே அல்ல . எல்லா கட்சிகளிலும் ஊழல் இருக்கிறது.அதிலும், திமுக அதிமுக பற்றி சொல்லவே வேண்டாம்.ஊழலை தவிர்த்து பல பிரச்சனைகள் உள்ளன. முக்கியமாக பொருளாதாரம், உற்பத்தி, தொழில்துறை, கட்டமைப்பு வசதிகள் , வெளிநாட்டு கொள்கைகள்,மதசார்பற்ற தன்மை போன்றவவைகளையும் நாம் கவனிக்க வேண்டும்.

இவைகளுக்கு, மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் திமுகவுமே சாதகமான கட்சிகள்.

நியாயமாக நாம் காங்கிரஸ்க்குத்தான் வாக்களிக்கவேண்டும் என்றாலும் இங்கு தமிழ் நாட்டில் அது பயனற்றதாகிவிடும். இங்கு திமுகவே ஆதரிக்க தகுந்த கட்சி.பல வழிகளிலும் திமுகவே நமக்கு நெருக்கமான கட்சி.அதனாலேயே நம் இஸ்லாமிய கட்சிகள் அனைத்தும் திமுக வையே ஆதரித்திருக்கின்றனர்.

முடிவு எப்படி இருப்பினும் நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.எனினும் காங்கிரஸ் திமுக அணிகள் அதிக இடங்களில் வென்று ஆட்சியமைத்தால் , நம் நாட்டிற்கும் குறிப்பாக முஸ்லிம்களாகிய நமக்கும் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 April 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34652

கடந்த கால தேர்தல் என்பது கோடீஸ்வரர்கள் மட்டும் பங்கெடுக்கும் ஒரு துறையாக மட்டுமே இருந்து வந்தது...!

அதில் நம்மை போன்ற பாமர மக்களுக்கு இந்த கோடீஸ்வரர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே வேலையாக இருந்து வந்தது..!

தற்போது இத்தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் சகோதரர் கேஜ்ரிவால் அவர்கள் மட்டுமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நாம் அனைவரும் உத்தமர்தானா? சொல்லுங்கள்.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (சிங்கப்பூர் ) [29 April 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 34654

ஆதம் சுல்தான் காக்கா, பல விஷயங்கள் பொது தளத்தில் எழுத, விளக்க முடியாது. அப்படி எழுதினால், 'நம் பல்லை குத்தி, நாமே நாற்றத்தை முகர்ந்த மாதிரி. அது நம் அனைவருக்கும் நல்லதல்ல. விரிவாக எழுத தேவை இருக்காது, அனைவரும் புரியக்கொடிய ஆற்றல் உள்ளவர்கள் தான்.

"கடந்த கால தேர்தல் என்பது கோடீஸ்வரர்கள் மட்டும் பங்கெடுக்கும் ஒரு துறையாக மட்டுமே இருந்து வந்தது...! அதில் நம்மை போன்ற பாமர மக்களுக்கு இந்த கோடீஸ்வரர்களுக்கு வாக்களிப்பது மட்டுமே வேலையாக இருந்து வந்தது..!" (C &P )

என்னது? இந்த தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் எல்லோரும் சாதாரண நபர்கள் தானா? பாவம்! அவர்களிடம் தேர்தலில் செலவழிக்கக் கூட காசு இல்லை.

வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன், பம்பாயில் போட்டியிடும், முன்னாள் 'ராயல் பேங்க் ஆப் ஸ்காட்லாந்து' -யின் CEO ஆக இருந்த பெண்மணி, பெங்களூர் தொகுதியில் நின்ற 'Infosys' co-founder போன்ற பலரும் சாதாரண ஆட்கள் தான்.

இந்த தேர்தலில் ஒரு தொகுதியில் நிற்கும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 70 லட்சம் செலவழிக்க அனுமதித்துள்ளது. ஆனால் எந்த கட்சியின் வேட்பாளரும் அதற்கு மேல் தான் செலவழிக்கின்றனர். அதில் ஆம் ஆத்மியின் வேட்பாளர்களும் அடங்கும். 70 லட்சம் செலவழிப்பவர் சாதாரண மக்களா?

சொல்கிறவர் மட்டும் உத்தமராக இருந்தால் போதாது. அவருக்கு ஆதரவாக செயல்படுபவரும் யோக்கியமானவராக இருத்தல் வேண்டும். இப்போது நம் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளருக்காக உழைத்த ஒவ்வொரு சகோதரர்களும், இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு தான் நடக்கிறேன் என்று மனசாட்சியுடன் சொல்ல முடியுமா?

அரசியேலே சாக்கடை தான். ஒன்றை வேண்டுமானால் ஒத்துக் கொள்ளல்லாம். மற்ற கட்சிகளை விட ஆம் ஆத்மி கட்சியினர் ஓரளவு நியாயமாக நடப்பார்கள்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved