Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:29:03 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14049
#KOTW14049
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 8, 2014
காயல்பட்டினம் நகராட்சியில் பணிப்புரிந்து வந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3318 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியில் 2007ம் ஆண்டு முதல், ஒப்பந்தம் அடிப்படையில், 14 பேர் பணி செய்து வந்தனர். அதில் 10 பணியாளர்கள், ரோஜா ஆண்கள் சுய உதவி குழு என்ற அமைப்பின் பெயரிலும், மீதி நபர்கள் தனிப்பட்ட முறையிலும் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

இவர்களில் அஸ்கர் என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். வாகனத்திற்கு நிரப்பும் டீஸல் செலவீனம் குறித்து எழுந்த புகார்களை தொடர்ந்து, கடந்த ஜனவரி 2014இல் நடந்த நகர்மன்றக்கூட்டதில் ஒப்பந்தப்பணியாளர் அஸ்கரை தவிர, பிற ஒப்பந்தப்பணியாளர்களுக்கு - 89 நாட்களுக்கு பணி நீட்டிப்பு - வழங்கப்பட்டிருந்தது.

பணி நீட்டிப்பு - மார்ச் மாதம் இறுதியில் முடிவுற இருந்ததால், மார்ச் மாதம் நடந்த நகர்மன்றத்தின் அவசர கூட்டத்தில், மேஜை பொருளாக இவ்விஷயம் இணைக்கப்பட்டு, 13 ஒப்பந்தப்பணியாளர்களுக்கு - மேலும் 89 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதற்கிடையில் - திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர், ஒப்பந்தப்பணியாளர்கள் நியமனம் குறித்து சில கேள்விகளை எழுப்பவே, நகராட்சி ஆணையர் காந்திராஜ் - ஏப்ரல் 1 முதல் (ஒப்பந்த அடிப்படையில் தொழில் நுட்ப உதவியாளராக பணிப்புரியும் செந்தில் குமாரை தவிர்த்து) 12 ஒப்பந்தப்பணியாளர்களை - பணிக்கு வரவேண்டாம் என தெரிவித்தார். பிறகு இந்த அறிவிப்பு, தேர்தல் காலகட்டம் என்ற காரணத்திற்காக, 3 மாதங்கள் தள்ளிப்போடப்பட்டதாக தெரிகிறது.

கடைசியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்ட 89 நாட்கள், ஜூன் மாதம் இறுதியில் முடிவுற இருந்தாலும், ஜூன் மாதம் நடந்த காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டத்தில், ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நீட்டிப்பு - கூட்டபொருளில் இடம்பெறவில்லை. எனவே ஜூன் மாதம் இறுதியில் - ஒப்பந்தப் பணியாளர்கள் 12 பேர், ஜூலை 1 முதல் பணிக்கு வரவேண்டாம் என காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் காந்திராஜ் - பணியாளர்களிடம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து - பணியாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன் நகராட்சியை முற்றுகையிட்டனர். பின்னர் - காவல்துறையினர் தலையிட்டு, தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடத்தலாம் எனக் கூறவே அவர்கள் கலைந்து சென்றனர்.







ஒப்பந்தப் பணியாளர்களுக்கு - பல்வேறு காரணங்களுக்காக, பணி நீட்டிப்பு வழங்கமுடியாது என நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அவ்வேளையில் நகராட்சி ஆணையர் தெரிவித்ததாக தெரிகிறது.

ஒப்பந்தப் பணியாளர்களில் சிலர் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக்கை சந்தித்ததாகவும் தெரிகிறது. அவரும் - ஒப்பந்தப் பணியாளர்களுக்கு, பல்வேறு காரணங்களை மேற்கோள்காட்டி, பணி நீட்டிப்பு வழங்க முடியாது என தெரிவித்ததாக தெரிகிறது.

ஒப்பந்தப்பணியாளர்கள் 2007ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முறை, ரோஜா ஆண்கள் சுய உதவி குழுவின் பின்னணி, ஒப்பந்தப் பணியாளர்கள் பலரின் மீது தொடர்ந்து எழுந்து வந்த புகார்கள் போன்ற காரணங்களுக்காக - ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என தெரிகிறது.

ஞாயிறு அன்று நகரில் நடைபெற்ற அம்மா உணவகம் அடிக்கல் நாட்டும் விழாவின் போது ஒப்பந்தப் பணியாளர்கள் சுற்றுலா துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனிடம் மனு வழங்கினர்



புகைப்படங்களில் உதவி:
எம்.ஜஹாங்கிர்
மற்றும்
'தமிழன்' முத்து இஸ்மாயில்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35857

கம்யூனிஸ்ட் கட்சி தோழர். பன்னீர் அவர்கள் ஒப்பந்த தொழிலாளிகளின் குரல்கொடுக்காவா முன்வந்தார். தவறான வழியில் பணி நியம உத்திரவாதத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஆதரித்து போராடுமா?

படித்து, பட்டம் பெட்டு கொண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணியாளர்களின் கேதி என்னாவாம். தோழர் பன்னீர் அவர்களின் தலையீடு கண்டனத்துக்குரியது. வன்மையாக கண்டிக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நமதூர் மக்களுக்கு வேலை கிடைக்க வாழ்த்துக்கள்.
posted by syed ahamed (chennai ) [09 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35858

ஒப்பந்தப்பணியாளர்கள் 2007ம் ஆண்டு தற்காலிக அல்லது ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட முறை நகராட்சிகளின் சட்டத்திற்கு புறம்பாகவே அமைந்து இருக்கும் என இச்செய்தியை படிக்கும் போது நினைக்க தோன்றுகிறது - அப்படி இல்லையனில் பணி நீக்கம் செய்யப்பட்ட நபர்கள் நீதி மன்றத்தை அணுகி நகராட்சிக்கு எதிராக ஆணையர் மற்றும் சேர்மன் மீதும் வழக்கு தொடுத்து இருக்க மாட்டார்களா என்ன...! என்ற கேள்வி நம்மில் பலருக்கு எழுகிறது.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல வருட காலமாக வேலைக்காக பதிவு செய்து வைத்திருக்கும் படித்த பட்டதாரிகள் பலர் நகராட்சியின் செயல்பாடுகள் மற்றும் பணியமர்த்தப்பட்ட இவர்களின் தகவல்களை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று இருக்கலாம் என நினைக்கிறேன். அதன் எதிரொலியாக ஆளும் அரசு இது விசியத்தில் விசாரணையில் இறங்கி ஒரு நல்ல முடிவை எடுத்திருக்க கூடும் என தோன்றுகிறது..

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல வருட காலமாக பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் காலகாலமாக வேலைக்காக காத்திருக்கும் படித்த பட்டதாரிகளே இந்நகராட்சியில் காலி பணி இடங்களில் பணிக்கு சேர முயற்சி எடுங்கள் - நீங்கள் முயற்சி எடுத்தால் மட்டுமே உங்கள் கனவு நினைவாகும்.

படித்த பட்டதாரிகளுக்கு நமது நகராட்சியில் நமது ஊர் மக்களுக்கு வேலை கிடைக்க பிராத்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AZATH JAWAHAR (kayalpatanam) [10 July 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 35868

பனி அமர்த்தும் போது தெரிய வில்லை யாரும் கேப்பார் இல்லை இப்போது புதிதாக வந்த ஆணையர் வெளிய போக சொன்னால எப்படி?ஒரு போதும் கம்யூனிஸ்ட் கட்சி தவறாக போராடியது இல்லை இந்த விசியத்திலும் அவ்வாரே இந்த ஆணையரை பற்றி முழுமையாக தெரியாமல் கருத்துகளை பதிய வேணாம் பனி மூப்பு படி பனி அமர்த்துவதாக இருந்தால் இன்னும் ஏன் அமர்த்த படவில்லை?தான் எடுத்த முடிவில் நிலைத்து இருக்க ஏன் அவரால் முடியவில்லை?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வேலை விசியதிலும் சரி - பிற விசியங்களிலும் சரி அவர் எந்த சமுதாயத்தவனாக இர்ந்தாலும் சரி - யாருக்கும் அநீதி ஏற்பட்டு விட கூடாது...! அது எனது மாற்று கருத்துடைய எவராக இருந்தாலும் கூட...! நீதி வெல்ல வேண்டும்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [10 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35875

நான் அறிந்த சில தகவல்...!

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் நகராட்சியின் ஆணையர் அவர்கள் புதியதாக பொறுப்பேற்ற சமயம் இந்நகர்மன்றத்தின் அணைத்து ஊழியர்களின் வேலை சம்பந்தமான நடப்புகள், விபரங்கள், தெளிவுகள் இல்லாமல் குழம்பி போய் இருந்து அதை முறைபடுத்த அவரின் மூத்த அதிகாரியை அணுகி காலவதியான ஒப்பந்த பணியாளர்களின் பணி நீட்டிப்பை வழங்குமாறும் மேலும் பணி நீட்டிப்பு குறித்து சரியான அறிவரை - தெளிவு வழங்குமாறும் கூறி நகராட்சியின் மூத்த அதிகாரியான (RDMA) நகராட்சியின் மண்டல திருநெல்வேலி இயக்குனரிடம் தெளிவான தகவல் தருமாறு கேட்டுள்ளார் போல் தெரிகிறது -

புதியதாக பொறுப்பேற்றுள்ள ஆணையரின் தகவலுக்கு நகராட்சியின் மூத்த அதிகாரியான (RDMA - நகராட்சியின் மண்டல திருநெல்வேலி) இயக்குனர் கீழ்க்கண்ட விபரத்தினை அளித்துள்ளார் - கேட்டுள்ளார் போல தெரிகிறது.

1996 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த அணைத்து பணியாளர்களையும் வரன்முறைபடுத்தி காலமுறை ஊதியத்திற்கு கொண்டு வந்து உத்திரவுவிடப்பட்ட அரசாணையில் தெளிவாக இனிவரும் காலங்களில் எந்த காரணம் கொண்டும் பணியாளர்கள் தற்காலிக அடிப்படையிலோ, ஒப்பந்த அடிப்படையிலோ நியமனம் செய்ய கூடாது என்று உத்திரவுவிடப்பட்டுள்ள நிலையில் அதற்க்கு பின்னர் எந்த அடிப்படையில் காயல்பட்டினம் நகராட்சியில் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர் என்பதற்க்கான விபரங்களையும் தகவலையும் அளிக்கமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது..

RDMA இயக்குனர் கோரிய தகவலையோ, விபரதையோ முறையான பணி நியமன ஆணையயோ, கோப்புகளோ நகராட்சியின் சார்பில் வழங்க - அளிக்க எந்த ஆதரமுமும் நகராட்சியில் இல்லை என தெரிகிறது -

அப்படி எந்த ஆவணங்களும் ஆணைகளும் நகராட்சியில் இல்லாது இருக்கும் பட்சத்தில் மேலும் இந்த ஒப்பந்த பணியாளர்களை நகராட்சியில் பணி அமர்த்தி அவர்களுக்குரிய மாத ஊதியத்தை நகராட்சி வழங்கி வரும் போது வழங்கிய அந்த ஊதியத்தின் மொத்த செலவையும் நகராட்சிகளின் ( RDMA திருநெல்வேலி - CMA சென்னை) தலைமையிலான ஆடிட்டிங் டீம் காயல்பட்டினம் நகராட்சியின் கணக்குகளை ஆடிட்டிங் செய்யும் போது இந்த ஒப்பந்த ஊழியர்களின் செலவு தனியாக பிரித்து அதை அன்றைய வருடத்தில் பொறுப்பில் இருந்த ஆணையரின் தலையில் சுமத்தும்படி அதாவது ஆணையரிடம் வசூல் செய்யும்படி குறிப்பு எழுதி மேலிடத்திற்கு நகல் அனுப்பி வைக்கப்படும் போல தெரிகிறது -

கடந்த 2006 - 2011 நகர்மன்றத்தின் போது தற்போது பணி நீக்கம் செய்யப்பட்ட இவர்களின் பணி நியமனம் அன்று எவ்வாறு எந்த முறைகளின், ஆவணங்களின், ஆணைகளின், உத்தரவுகளின், சிபாரிசுகளின் அடிபடைக்கான ஆதாரம் (சட்டதிற்கு உட்பட்டு) நகராட்சியில் எதுவுமில்லை என தெரிகிறது..

இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு நாளை வரும் காலங்களில் ஆணையருக்கு பதவி உயர்வு மற்றும் அவரின் ஓய்வின் போது செட்டில்மென்ட் பிரச்னை இவைகளை தவிர்பதற்காக முன் நடவடிக்கை எடுத்து இருக்கார் போல தெரிகிறது..

அந்த அந்த பதவியில் இருந்தால் தான் அதற்க்கான வளைவு - அதன் விதிமுறைகள் நமக்கு விளங்கும்..

அப்படி சட்டத்திற்கு உட்பட்டு ஏதாவது ஆதாரம் ஒப்பந்த ஊழியர்களிடம் இருக்குமானால் நகர்மன்ற தலைவியாலும் ஆணையாராலும் தான் பணி நீக்கம் செய்யப்பட்டுவிட்டோம் என்று கருதும், நினைக்கும் பணி நீக்கம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த ஊழியர்கள் பணி நியமன அரசு தரப்பு ஆணை அல்லது இது சம்பந்தமான ஆதாரத்தை வைத்து நீதி வேண்டி நீதி மன்றதையோ அல்லது ஆடிட்டிங் செய்யவரும் நகராட்சிகளின் தலைமை அலுவலகத்தையோ அணுகி தனது தரப்பு நியாயத்தை நிலைநிறுத்த அணுகுவது வரவேற்க கூடியது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved