Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:19:57 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14071
#KOTW14071
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஜுலை 13, 2014
கடையில்லை, குடியுண்டு?!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3800 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகரின் பெருமைகளாக கூறப்படுவதில் இங்கு மதுக்கடைகள் இல்லை என்பதும் ஒன்று.

இருப்பினும் - புதிய பேருந்து நிலையம் வளாகம் மது விற்க பயன்படுத்தப்படுகிறது என்றும், நகரின் ஒரு பகுதியில் - அனைவரும் அறிந்தே - தனி நபர் ஒருவர் மது விற்கிறார் என்றும், அவரின் வாடிக்கையாளர்களில் அதிகாரிகளும் உண்டு என்றும் குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து வந்துள்ளது.

நகரில் குடி போதையில் நடக்கும் தகராறுகளும் அன்றாடும் காணும் காட்சிகள்.

காயல்பட்டினம் பெருமைகளின் ஒன்றான அதன் கடற்கரையின் நுழைவு வாயிலில் - இங்கு மது அருந்தக்கூடாது என தெளிவாக எழுதப்பட்டிருக்கிறது. இருப்பினும் - கடற்கரையின் ஓரப்பகுதிகளில் நடந்து வந்த மது அருந்தும் விஷயம், தற்போது நடுப்பகுதிகளிலும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது. மது அருந்துபவர்கள் - வெற்று மது குப்பிகளுடன் தண்ணீர் உறைகள், தின்பண்ட எச்சங்களையும் க்டற்கரை மணலில் வீசி விட்டு செல்கின்றனர்.

இது போன்ற செயல்கள் நடைபெறுவதும், பொதுமக்கள் எச்சரிப்பதும், கைகலப்பு ஏற்படுவதும் கிட்டதட்ட அன்றாட நிகழ்வுகள் போல மாறி வருகின்றன.

ஜூலை 11, இரவு 11 மணியளவில் கடற்கரையில் மது அருந்திவிட்டு ஒரு சிலர் வீசி சென்றவை





தகவல் மற்றும் புகைப்படங்கள்:
சாளை பஷீர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒருவரோ இருவரோ மட்டும் ஒழுக்க சீரழிவை நினைத்து கவலை பட்டாள் மட்டும் போதாது...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [13 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35899

எத்தனை சகோதரர்கள் (சாளைகள் - பஷீர்கள்) சமூக சீரழிவு காரணமான தகவலும் - ஆதாரமான புகைப்படங்களும் நமது பார்வைக்கு தந்தாலும் கண் முன் நடக்கும் தவறை சமூக பொறுப்புடன் அக்கறையுடன் ஒருவரோ இருவரோ மட்டும் ஒழுக்க சீரழிவை நினைத்து கவலை பட்டாள் மட்டும் போதாது...!

பலரும் கவலை பட்டாள் மட்டுமே ஓரளவு சமூக ஒழுக்கத்தை நாகரீகத்தை - நியாயத்தை காப்பாற்ற முடியும்..

புகை படத்தையும் செய்தியையும் பார்க்கும் போது கவலை அளிக்கிறது... அடுத்த தலைமுறைகளை நினைக்கும் போது...!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்று குடியுண்டு,நாளை ?
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [13 July 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35900

இன்று அவனுக்கு கடையில்லை ஆனால் குடியுண்டு நாளை அவனுக்கு குடிமட்டுமுண்டு ஆனால் அவன் குடி இருக்குமா......?

கடற்கரை சீர் இயக்கமே சற்றாவது கவன விழிப்பை கையாளுங்களேன்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...பிரச்சனைகளும் தீர்வுகளும்
posted by Salai Sheikh Saleem (Dubai) [13 July 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35901

இப்படிப்பட்ட சமுதாய சமூக விரோத செயல்களை படம்பிடித்து காட்டும் காயல்பட்டணம் இணையதளத்திற்கு காயலர்களின் சார்பில் நன்றிகள்.

பிரச்சனைகளை மட்டுமே படம்பிடித்து காட்டுவதோடு நின்று விடாமல் அதற்க்குண்டான தீர்வுகளையும் அதாவது இதற்க்கு யார் யார் பொறுப்பாளர்களோ அவர்களின் கவனத்திற்கும் தயவுசெய்து கொண்டு செல்லுங்கள்.

கடற்க்கரை பயனாளிகள் சங்கம் என்று ஓன்று ஆரம்பிச்சாங்களே,,அவர்கள் இதில் அக்கறை காட்ட மாட்டார்களா?

நகராட்சியே, இதில் உங்களின் கடமை இல்லையா ?

மாநகராட்சி உறுப்பினர்களே உங்களின் கவனக்குறைவால் தானே இதுபோல் சம்பவங்கள் நடைபெறுகின்றன..

தயவு செய்து விரைவில் உரிய நடவடிக்கை எடுங்கள், இல்லாவிட்டால்

கஞ்சி விற்ப்பதுபோல் "சரக்கும்" கடைக்கு வந்து விடும்.

அப்படி வந்துவிடக்கூடாது என்று எல்லோரும் இறைவனை வேண்டுவோமாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [13 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35905

ஹலோ. ஹலோ. எந்த காலத்தில் இருக்கின்றீர்கள்.

நம் வீட்டு பிரிட்ஜ்-களில் பீர் குடிவந்து பல காலங்கள் ஆகிவிட்டன.

இரவு 9 மணிக்கு மேல், நகராட்சிக்கு மேற்கே உள்ள ( மகாலரா காலனிக்கு பின்பு), ஆசாரிமார் - கோமான் தெரு சாலையில் பாருங்கள். நம் சகோதர்களின் பைக்களும், கார்களும் பார்க்கிங் போட்டுவிட்டு, பார் திறந்து வைத்துள்ளார்கள்.

என்னமோ அதிசய செய்தி போட்ட மாதிரி..

வல்ல அல்லாஹ் நம்மை தீமைகளில் இருந்து காப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. வாழ்க தமிழகம். வளர்க குடிமக்கள்.
posted by syed ahamed (chennai ) [13 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35906

புதிய பேருந்து நிலைய பயணிகள் இருக்கை பகுதியில் மது, கஞ்சா மற்றும் பான்மசாலா வியாபாரம் படு ஜோராக பல மாதமாக எந்த தடங்களும் இடையூறும் இல்லாமல் இயங்கி வருகிறது என மதுவுக்கு அடிமையானவர்கள் அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். மேலும் பஸ் போக்குவரத்து செலவு வெளியூர் போய் திரும்பி வரும் நேர சிக்கனம் என பல வகையில் இந்த புதிய பேருந்து நிலையம் குடிகாரகளுக்கு பயன் அளிக்கிறதாம்.

இனி சொல்லவே வேண்டாம் அம்மா உணவகமும் விரைவில் திறக்கப்பட உள்ளது குடிகாரர்களுக்கு மது அருந்து விட்டு இரவு நேர உணவும் இந்த புதிய பேருந்து நிலையம் அருகிலேயே அமைந்து விடுகிறது.

வாழ்க... மது பிரியர்கள் - வளர்க... போதை பொருள் வியாபாரிகள் - பெருகுக... அம்மா உணவக பணியாளர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [13 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35908

பாரம்பரியம்மிக்க காயல் மாநகரில் சினிமா திரையகம் இல்லை, நகரை கண்காணிக்கா காவல் நிலையம் இல்லை, மதுக்கடை இல்லை என்று சொன்னது எல்லாம் அந்தகாலம்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:... KAYALPATNAM BEACH USERS ASSOCIATION
posted by mackie noohuthambi (chennai) [13 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35909

காயல்பட்டினம் கடற்கரையில் நடக்கும் அத்துமீறல்கள் பாலியல் விஷயங்கள் எல்லாவற்றையும் கண்காணிக்க, அவற்றை தடுக்க என்று ஒரு இயக்கம் நமதூரில் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள காஇதே மில்லத் நற்பணி மன்றம் உள்ளே வைத்து விரிவாக பேசப்பட்டு KAYALPATNAM BEACH USERS ASSOCIATION ஆரம்பிக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் என்னானது. பொருளாதாரம் இல்லாமல் முடங்கி விட்டதா அல்லது யாரும் அந்த வேலைகளை செய்வதற்கு முன்வரவில்லையா அல்லது அவர்களின் நல்ல எண்ணங்களுக்கு பெரியவர்கள் அங்கீகாரம் தரவில்லையா ஒன்றுமே புரியவில்லையே.

நகரமன்ற தலைவி அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்த வேண்டும்.முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

KAYALPATNAM ENVIRONMENTAL PROTECTION ASSOCIATION (KEPA)நண்பர்களுக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. இந்த விஷயத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ள மருமகன் சாலிஹ் அவர்களும் இதன் முக்கிய பொறுப்பில் இருப்பதால் நீங்களே இந்த விஷயத்தை மக்கள் முன் எடுத்து சொல்லி சம்பந்தப்பட்டவர்களை கலந்து ஆவன செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்.

மனதுக்கு மிகவும் வேதனையான செய்தி. நாம் கட்டி காத்து வரும் பாரம்பரியத்துக்கு ஒரு சவாலான செய்தி இது. தயவு செய்து போர்க்கால அடிப்படையில் ஏதாவது செய்யுங்கள். அல்லாஹ் ரஹ்மத் செய்வான்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADHU ) [14 July 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35910

அஸ்ஸலாமு அலைக்கும்

நமது ஊர் அனைத்து நல் உள்ளம் கொண்ட பொது மக்களால் இந்த செயல் பாட்டினை மிக துரிதமாகவே கண்காணிக்க பட வேணும்.......இல்லையேல் நமது ஊரின் நற் பெயரினை ( நம் முன்னோர்களால் நம் ஊரை பாது காட்க பட்ட பண்பாடும் + நற்பெயரும் ) நம்மால் ஒன்றும் செயல் முடியாமல் போய் விடும் ..........அல்லாஹு தான் நம்மையும் சரி ....நம் ஊரையும் சரி காபாற்ற வேணும்..........

நம் ஊர் கடற்க்கரை விசயத்தில் நம் நகர் மன்ற மரியாதைக்குரிய தலைவி அவர்களும் & நம் மரியாதைக்குரிய அனைத்து சக உறுப்பினர்களும் ஒன்றாகவே இணைந்து ....கண்காணித்து ஒரு சில மாற்றங்களை சரி செய்தால் ஒழிய ....இப்பிரச்சனை சரியாகாது ..........

பொது மக்களும் ஒன்றாக இணைந்து .... இவ் விசயத்தில் நகர் மன்றத்தினை முறையாகவே அணுக வேணும்....

நமது ஊர் கடற்க்கரை ஒரு வரலாற்றுமிக்க கடற்கரை ....கடற்கரையின் அழகையும் & கண்ணியத்தையும் கூட பாதுகாட்க பட வேணும் ....

நம் ஊர் கடற்கரையை ரசித்து மன நிம்மதி பெறுவதற்கும் & பாதுகாப்பையும் நம்பிதான் ..... வெளியூர் + நம் உள்ளூர் மக்கள் குடும்பத்துடன் டெய்லி வருவதையும் நாம் கண் கூடாகவே பார்க்கிறோம் ........இந்த நம்பிக்கையை நம் நகர் மன்றம் வீணாக்க கூடாது அல்லவா ..............

நம் அருமை சகோதரர் .சாலை ஜியாவுதீன் அவர்களின் மன அழுத்தமான ....வேதனைகளந்த ....வார்த்தைகள் முற்றிலும் நியாமானதே.....நம் நகர் மன்றமும் & எங்கள் தொகுதி கவுன்சிலர் ஐயா...சாமி அவர்களும் கொஞ்சம் இக் மன குறை விசயத்தில் முழுமையான கவனம் செலுத்தினால் ரொம்ப நல்லது ........... அப்பகுதி பெண்களுக்கும் + குழந்தைகளுக்கும் பாதுகாட்பு வேணும் அல்லவா ............

குறிப்பு <<<< தயவு செய்து நம் நகர் மன்றம் நம் ஊரின் கண்ணியத்தை பாது காட்க முக்கியத்துவம் கொடுக்க பட வேணும் ....இது தான் நம் அனைவர்களின் எண்ணம் .............

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. காவல் துறைக்கு தெரிந்தே நடக்கிறது.
posted by சாளை.அப்துல் ரஸ்ஸாக் லுக்மான் (காயல்பட்டினம்) [14 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35911

கடற்கரையில் நடைபெறும் சம்பவங்களும் தம்பி சாளை.ஜியாவுதீன் மனவேதனை அடைந்த சம்பவங்களும் காவல்துறைக்கும் தெரியும். அவர்கள் மனது வைத்தால், ஓரளவு (முற்றிலுமாக அல்ல) குறைக்கலாம். நாட்டில் நடைபெறுவதை போல், காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதனால் தான், இவர்கள் துணிந்து செய்கின்றனர்.

இதில் மிக வேதனை அடையும் விஷயம், நமது சமுதாய சகோதரர்களும், புனித ரமலான் மாதம் என்றும் பாராமல், துணிந்து இந்த ஹராமான செயலை செய்கின்றனர். அல்லாஹ் தான் அவர்களுக்கு ஹிதாயத் எனும் நேர்வழியை கொடுக்க வேண்டும்.

- சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved