Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:54:50 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14304
#KOTW14304
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஆகஸ்ட் 14, 2014
“உங்களூர் வரலாற்றைப் பாதுகாக்க ஓர் அருங்காட்சியகம் அமைக்கலாமே...?” காவாலங்கா பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் ‘தி இந்து’ சமஸ் பேச்சு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3631 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“காயல்பட்டினத்தின் வரலாற்றைப் பாதுகாக்க ஓர் அருங்காட்சியகத்தை அமைக்கலாமே?” என இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராக சில நிமிடங்கள் கலந்துகொண்ட - ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ் கேள்வியெழுப்பினார். விரிவான விபரம் வருமாறு:

- இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 13ஆம் நாள் புதன்கிழமையன்று 11.00 மணியளவில், காயல்பட்டினம் துளிர் பள்ளியின் குளிரூட்டப்பட்ட சிற்றரங்கில் நடைபெற்றது.





மவ்லவீ ஹாஃபிழ் அபூபக்கர் ஷாதுலீ இறைமறை வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மவ்லவீ ஹாஃபிழ் உமர் ஃபாரூக் அஃழம் மஹ்ழரீ மார்க்க அறிவுரைகள் வழங்கினார்.

இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் இதுநாள் வரையிலான நகர்நலப் பணிகள் குறித்த செயல் அறிக்கையை மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக் கூட்டத்தில் வாசித்தார்.



நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காவாலங்காவின் மூத்த உறுப்பினர் மக்கீ நூஹுத்தம்பி, அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், வாழ்த்துரையும் வழங்கினார்.



இந்நிகழ்ச்சியில், தாய்லாந்து காயல் நல மன்ற (தக்வா) தலைவர் வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் அஜீஸ், அதன் நடப்பு செயலாளர் செய்யித் அஹ்மத், உறுப்பினர் டி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுள், ஹாங்காங் அப்துல் அஜீஸ் துவக்கமாக வாழ்த்துரை வழங்கினார்.



இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களின்போது காவாலங்காவுடன் இணைந்து நிவாரண நிதி வழங்கியதை செயலர் அறிக்கையில் சுட்டிக்காட்டியமைக்கு அவர் நன்றி தெரிவித்தார்.



அடுத்து பேசிய வாவு எம்.எம்.ஷம்சுத்தீன், தக்வாவின் முன்னெடுப்பில் வழமை போல நடப்பாண்டும் நகர பள்ளிவாசல்களின் இமாம் - பிலால்களுக்கு வழங்கப்பட்ட நோன்புப் பெருநாள் ஊக்கத்தொகையில் தமது பங்களிப்பையும் நிறைவாகச் செய்தமைக்காக காவாலங்காவுக்கும், பங்கேற்ற அனைத்து காயல் நல மன்றங்கள் மற்றும் தனி ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.

தொடர்ந்து, நிகழ்ச்சி நடைபெற்ற துளிர் பள்ளியின் செயலாளர் எம்.எல்.ஷேக்னா லெப்பை பேசினார்.



துளிர் பள்ளியின் நடப்புத் தேவைகள் குறித்து விளக்கிப் பேசிய அவர், நிறைய கட்டிட வசதிகள் உள்ளமையால் இது ஒரு தன்னிறைவு பெற்ற நிறுவனம் என தவறான கண்ணோட்டம் மக்களிடையே உள்ளதாகவும், அக்கட்டிடங்கள் அனைத்துமே உலக காயல் நல மன்றங்களும், தனி ஆர்வலர்களும் அன்பளிப்பாகக் கட்டிக் கொடுத்தவைதான் என்றும், தேவையான அளவுக்கு கட்டிடங்களும், வாகனங்களும் கிடைக்கப்பெற்ற பிறகுதான் நிர்வாகச் செலவினங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

துளிருக்கு என்ன தேவை என இலங்கைக்கு தான் சென்றிருந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது காவாலங்கா சார்பில் கேட்கப்பட்டதை நினைவுகூர்ந்துப் பேசிய அவர், தேவைகள் பல இருக்கின்றபோதிலும், பள்ளியின் சிறப்புக் குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதற்காக வெளியூர்களிலிருந்து வரும் ஆசிரியையர் தங்குவதற்காக இடம் ஒன்று அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறியதாகவும், உடனடியாக அதனை ஏற்று - தங்கள் மன்றத்தின் முதல் செயல்திட்டமாகவே அதை எடுத்துக்கொண்டு கட்டித் தந்தமைக்காக துளிர் அறக்கட்டளை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியின் துவக்கம் முதல் நிறைவு வரை - காவாலங்கா செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ நெறிப்படுத்தியதோடு உறுப்பினர் கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தார். காவாலங்கா உறுப்பினர்களான எம்.ஐ.மஹ்மூத் சுலைமான், ஏ.டி.ரியாஸுத்தீன், எம்.எம்.அப்துல்லாஹ் ஆகியோர் இக்கருத்துப் பரிமாற்றத்தில் தம் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.



இலங்கையில் அண்மையில் நடைபெற்ற கலவரங்களின்போது தாம் பட்ட அவதிகளையும், அந்நேரத்தில் பிற பகுதிகளிலிருந்த காவாலங்கா அங்கத்தினர் தமக்கு அளித்த ஆறுதல்களையும் நினைவுகூர்ந்துப் பேசிய அவர்கள், எக்காலமும் அந்நாட்டிலிருந்தவாறு பொருளீட்டும் நாம், இத்தருணத்தில் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்காக தாராளமாக உதவிட வேண்டியது கட்டாயக் கடமை என்றும், அதற்காக காவாலங்கா முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ், தனது செய்திப் பணி சார்ந்த விபரங்கள் சேகரிப்பிற்காக காயல்பட்டினம் வந்துள்ளதையடுத்து, இந்நிகழ்ச்சியில் சிறப்பழைப்பாளராக சில நிமிடங்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.



காயல்பட்டினத்தின் சரித்திரங்கள், கலாச்சார பண்பாடுகள், மதம் கடந்த மனிதநேயம் உள்ளிட்டவை குறித்து கடந்த இரண்டு நாட்களில் தான் நிறைய அறிந்து வைத்துள்ளதாகவும், சொந்த ஊரின் நலனுக்காக பல்வேறு சேவைகளை மனமுவந்து செய்யும் அரிய பணியை இங்கு தான் கண்டுகொண்டதாகவும், அவர்களின் விடுபட்ட சேவையாகக் கருதி - இந்த ஊரின் சரித்திரத்தைப் பாதுகாக்க அருங்காட்சியகத்தை விரைவாக அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.



பின்னர் அவருக்கு காவாலங்கா சார்பில் அதன் செயலாளர் நினைவுப் பரிசை வழங்கி கண்ணியப்படுத்தினார்.

அடுத்து, கூட்ட நிகழ்விடமான துளிர் பள்ளியின் சேவைகள் குறித்த புகைப்படங்கள் திரையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அசைபட விரிதிரை துணையுடன் அனைவருக்கும் படங்கள் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டன.



இக்கூட்டத்தில் காவாலங்கா உறுப்பினர்கள் உள்ளிட்ட இலங்கை வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி இடைவேளையின்போது அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது.





நிறைவாக, காவாலங்கா சார்பில் துளிர் பள்ளிக்காக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள ஆசிரியர் தங்கும் விடுதியை சுற்றிப்பார்த்த அவர்கள், அக்கட்டிட முகப்பில் நின்றவாறு குழுப்படம் எடுத்துக்கொண்டவர்களாகக் கலைந்து சென்றனர்.





நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காவாலங்கா செயற்குழு உறுப்பினர் ஓ.எல்.எம்.ஆரிஃப் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்திருந்தனர்.

படங்களுள் உதவி:
HYLEE


காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது. ஒரு படம் அகற்றப்பட்டது @ 23:53 / 15.08.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohamed salih (chennai) [14 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36403

மிக சரியாக சொன்னிர்கள் .. காலத்தின் கட்டாயம் . மிக அவசியம் கூட ..

‘தி இந்து’ தமிழ் நாளிதழின் தலையங்கப் பக்க ஆசிரியர் சமஸ், தனது செய்திப் பணி சார்ந்த விபரங்கள் சேகரிப்பிற்காக காயல்பட்டினம் வந்துள்ளதையடுத்து,

காயல்பட்டினத்தின் சரித்திரங்கள், கலாச்சார பண்பாடுகள், மதம் கடந்த மனிதநேயம் உள்ளிட்டவை குறித்து கடந்த இரண்டு நாட்களில்தான் நிறைய அறிந்து வைத்துள்ளதாகவும், சொந்த ஊரின் நலனுக்காக பல்வேறு சேவைகளை மனமுவந்து செய்யும் அரிய பணியை இங்கு தான் கண்டுகொண்டதாகவும், அவர்களின் விடுபட்ட சேவையாகக் கருதி - இந்த ஊரின் சரித்திரத்தைப் பாதுகாக்க அருங்காட்சியகத்தை விரைவாக அமைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார். ( C & p )

நாம் இதனையை மிக சீகிரமாக செயல் படுத்த வேண்டும் . இன்ஷா அல்லாஹ்..

வரும் காலங்களில் நம் பிள்ளைகள் நமது ஊரின் பாரம்பரியம் , மற்றும் கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன் ..

எங்கள் உள்ளத்தில் அடித்தளம் இட்ட ஆசிரியர் சமஸ், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல பல ..

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் இந்த திட்டம் வரும் என்று மாபெரும் கனவுகளோடு காத்து இருக்கும்

குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் ,
சென்னை

குறிப்பு :

மிக அழகஹா நடை பெற்ற இந்த நிகழ்ச்சியை எங்கள் குடும்ப உறுபினர்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [14 August 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36412

அஸ்ஸலாமு அலைக்கும்.

இத் திட்டம் தற்போதைய நமது ஊர் இளைய தலைமுறைகளுக்கு .....நமது ஊர் பற்றிய சிறப்பு மிக்க '''பழைய காலத்து '''' வரலாற்றினை '' தெரிய படுத்துவது ....மிகவும் நல்லதே .....அவசியமே .....

கூடிய விரைவில் இந்த நல்ல செயலினை ....செயல் படுத்துவது சிறப்பே .......

நம் ஊர் மக்களின் '' காவலங்கா '' அமைப்பின் நம் ஊருக்கான பல நல்ல செயல்கள் வெற்றியுடன் தொடரட்டும் ......வாழ்த்துக்கள் ....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M. S. Shah Jahan (Colombo) [15 August 2014]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 36432

நிகழ்ச்சியை திறம்பட ஏற்பாடு செய்த காவாலங்கா உறுப்பினர்களுக்கும், திரளாகக் கலந்து சிறப்பித்த சகோதரர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எம். எஸ். ஷாஜஹான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...பெருநாள் ஒன்றுகூடல்
posted by mackie noohuthambi (chennai) [16 August 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36454

நோன்பு காலங்களில் இப்தார் நிகழ்ச்சி என்று ஒன்று நடந்து அதில் எல்லோரும் பங்குகொண்டு நமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். பெருநாள் தினத்தில் ஒன்றுகூடி நமது சந்தோஷங்களை கடற்கரையில் பரிமாறிக் கொண்டோம். பெருநாள் ஒன்றுகூடல் என்ற ஒரு புதிய பரிணாமம் மீண்டும் நமது எண்ணங்களை பரிமாறிக் கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்கிறது.

குளிரூட்டப்பட்ட அறையில் இருப்பதே ஒரு மகிழ்ச்சி. குளிர்ச்சியான பேச்சுக்களை கேட்டுக்கொண்டிருப்பதும் ஒரு மகிழ்ச்சி. அதுவும் ஒரு கண்குளிர்ச்சியான நாட்டில் வசிப்பவர்கள் தொழில் புரிபவர்கள் கூடி இருக்கும் இடத்தில அமர்ந்து அவர்கள் தரும் தகவல்களை காது கொடுத்து கேட்பதும் அவர்கள் வாழ்வியல் வழக்கமான உபசரிப்புக்களை சிற்றுண்டிகளை உண்டு மகிழ்வதும் மனதுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. ஏழைகளுக்கு கொடுத்து வாழ்வது எல்லாவற்றையும் விட மிக்க மகிழ்ச்சி

இப்படி ஒன்றுகூடல்கள் தொடர்ந்து ஊரின் நாலா பக்கங்களிலும் நடந்து வந்தால் மன மாச்சரியங்கள் குறையும் நல்லிணக்கம் கூடும். "உறவுகள் தடிப்பமாக இருந்தால் தவறுகள் மெல்லிதாக தோன்றும். உறவுகள் மெல்லியதாக இருந்தால் தவறுகள் தடிப்பமாக தோன்றும்" என்ற தத்துவத்துக்கு காவலங்கா பெருநாள் ஒன்று கூடல் ஒரு சான்று.

தி ஹிந்து சமஸ் அவர்களை அழைத்து பேசியது நமது பிம்பத்தை உயர்த்தியுள்ளது. காயல்பட்டினத்தின் வரைபடத்தில் காவாலங்கா ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. திரு சமஸ் அவர்களின் கோரிக்கை, ஆதங்கம் பரிசீலிக்கப் பட வேண்டிய ஒன்று.

நாங்கள் தமிழ் ஹிந்துவுக்கு மாறி பல மாதங்கள் ஆகின்றன. காயல்பட்டினம், வைகறையில் 4.30 மணிக்கு விழித்துக் கொள்கிறது. ஆனால் தமிழ் ஹிந்து காலை 6.30 மணிக்கு காயல்பட்டினத்தையே எட்டிப் பார்க்கிறது. அது எங்களை வந்தடையும்போது நாங்கள் சோர்ந்து விடுகிறோம். சுமார் இரண்டு மணி நேரங்கள் எங்களுக்கு வேஸ்ட் என்ற மன உளைச்சலையும் அவரிடம் கூறினேன். அதனை உடனடியாக கவனிப்பதாக கூறினார்கள்.

அவரது உணர்வுகளை நம் மத்தியில் வெளியிடவும் நமது உணர்வுகளை அவர்களிடம் வெளியிடவும் களம் அமைத்துக் கொடுத்த காவாலங்கா உறுப்பினர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். .

ASSADHAQATHU RADDHUL BALAAU VAL QALAA. நபிகள் நாயகம் அவர்கள் சொன்னது இது. இதுவே என் பேச்சின் தலைப்பாக இருந்தது. வாவு சம்சுதீன் மாமா அவர்கள் என்னிடமிருந்து ஒரு பாடலை எதிர்பார்த்தார்கள். அவர்கள் சிந்தை குளிர செய்ய வேண்டாமா, அவர்களின் ஆசைக்கு ஒரு வடிகால்தான் இது.

"செய்த தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிற்கும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved