Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:57:40 AM
திங்கள் | 28 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1915, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0815:2818:0419:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:53
மறைவு17:56மறைவு15:20
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1818:4319:07
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14413
#KOTW14413
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014
விநாயக சதுர்த்தி ஊர்வலம் காயல்பட்டினத்தை பிரச்சனைகளின்றி கடந்தது! (புகைப்படங்கள் இணைக்கப்பட்டது)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4959 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆறுமுகநேரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக திருச்செந்தூர் கடலில் விஜர்சனம் நடந்தது.

ஆறுமுகநேரியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதூர்தியை இந்து எழுச்சி விழாவாக கொண்டாடி வருகின்றனர். 23வது ஆண்டு இந்து எழுச்சி விழா கடந்த 25ம் தேதி துவங்கியது.

மெயின் பஜார் செந்தில் விநாயகர் ஆலயம் முன்பு 11 அடி உயர வீரவிநாயகர் சிலை பிரதிடை செய்திருந்தனர். இதே போன்று நடராஜநகர், பாரதிநகர், அம்பேத்கார்நகர், காமராஜபுரம், முத்துகிருஷ்ணாபுரம், ராஜமன்னியபுரம், வடக்கு சுப்பிரமணியபுரம், பூவரசூர், லெட்சுமிஅம்மன் கோயில் தெரு, பெருமாள்புரம், கீழநவலடிவிளை, காணியாளர்தெரு, பூபாலாநகர், சுப்பிரமணியசுவாமி கோயில் தெரு, பேயன்விளை புதூர், கிருஷ்ணாபுரம், பேயன்விளை, உட்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை நடந்தது. மேலும் ஆறுமுகநேரியில் உள்ள முக்கியமான 25 கோயில்களிலும் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடந்து வந்தது.

முன்னதாக ஆறுமுகநேரி பகுதியில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்ட்டிருந்த விநாயகர் சிலைகள் செந்தில் விநாயகர் கோயில் முன்பு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் மூலக்கரை, சண்முகபுரம், நல்லூர், நாலுமாவடி, இடையன்விளை, புன்னைநகர், தலைவன்வடலி, ஆத்தூர் குரும்பூர், கயத்தாறு, ஆழ்வார்திருநகரி ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்ட்டிருந்த விநாயகர் சிலைகளும் வந்தன.

பேரணியை ஆறுமுகநேரி நகர்நல மன்ற தலைவர் பூபால்ராஜன் துவக்கி வைத்தார்.



மாலை 4.15 மணிக்கு ஆறுமுகநேரி மெயின் பஜாரில் துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் ஜெயின்நகர், பேயன்விளை, அழகாபுரி, வழியாக ரத்னாபுரி வந்தடைந்தது.

அங்கு காயல்பட்டணம் பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுடன் இணைந்து காயல்பட்டணம் புதுபஸ் ஸ்டாண்ட், விசாலாட்சி அம்மன் கோயில் தெரு, மன்னராஜா கோயில் தெரு, பூந்தோட்டம, ஓடக்கரை வழியாக திருச்செந்தூர் சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து கடலில் விஜர்சனம் நடந்தது.











விநாயக சதுர்த்தி ஊர்வலம் காயல்பட்டினத்தை எவ்வித பிரச்சனையுமின்றி மாலை 6:45 மணியளவில் கடந்து சென்றது.







விழாவில் நகர பொருளாளர் சக்திதாசன், செயலாளர் முத்துக்குமார், பாஸ்கர், ராதாகிருஷ்ணன். தலைவன்வடலி மகாதேவன், வியாபாரிகள் ஐக்கிய சங்க தலைவர் தாமோதரன், முன்னாள் கவுன்சிலர் முருகேசன், பாஜக நகர தலைவர் மகேந்திரன், ஒன்றிய பொதுச் செயலாளர் தங்கபாண்டியன், ஆட்டோ சங்க தலைவர் செல்வராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதூர்த்தி விழா ஊர்வலத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. துரை மேற்பார்வையில் மதுவிலக்கு ஏடிஎஸ்பி கந்தசாமி, திருச்செந்தூர் டிஎஸ்பி கோவிந்தராஜ், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன் மற்றும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

ஆறுமுகநேரியில் துவங்கிய விநாயகர் ஊர்வலம் காயல்பட்டணம் கடக்கும் வரை ஆறுமுகநேரி - காயல்பட்டணம் இடையேயான போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.

புகைப்படங்களில் உதவி:
ஏ.கே.இம்ரான்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by shaik abbas faisal d (kayalpatnam) [31 August 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 36930

அனைத்து ஜும்மாகளிலும் ஐக்கியபேரவை சார்பாக வெளியிட்ட சுற்றறிக்கை வாசித்து காட்டப்பட்டது, அதில் நம் மக்கள் அனைவரும் இந்த ஊர்வலத்தை சென்று பார்ப்பதை தவிர்க்கவும் குறிப்பாக பெண்கள் என்று சொல்லப்பட்டது, இருந்தாலும் நமதூர் மக்கள் கூட்டத்தை காண முடிகிறது, அதிஷ்டவசமாக பெண்கள் தென்பட வில்லை.

இணையதளங்களும் இந்த ஊர்வலத்தை ஒரு செய்தியாக்காமல் இருப்பதே நல்லது என்பது என் கருத்து,காரணம் இதனை போய் பார்ப்பதாலும் செய்தியாக்குவதாலும் நாம் இந்த ஊர்வலத்தை அங்கீகரிப்பதாக ஆகி விடுகிறது,வரும் காலங்களில் இது நடக்குமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மத ஊர்வலம்
posted by NIZAR (kayalpatnam) [01 September 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 36931

கணபதி பாப்பா மோரியா,கணபதி பாப்பா மோரியா,என்னடா இந்த பாட்டை படிக்கிறானே என்று பார்க்கிறீங்களா?இதை படித்து கொண்டுதான் பம்பாயில் கணபதி என்ற விநாயாகர் சிலையை கடலில் கரைப்பார்கள்.இது போன்ற வழிபாடு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

பம்பாயில் கூட தாராவியில் மிகப்பெரிய தலைவராக திகழ்ந்த தமிழகத்தை சேர்ந்த வரதராஜ பெருமாள் என்பவரால்தான் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் வாழ்க்கை சரித்திரம்தான் நாயகன் என்ற திரைப்பட கருவாகும்.

காலப்போக்கில் சென்னையில் மீலாது மாதத்தில் மண்ணடியில் இருந்து சென்னை மெரினா வரை மீலாது நபி ஊர்வலம் நடந்தது. சிறிய கூட்டமாக ஆரம்பிக்கபட்ட அந்த மீலாது ஊர்வலம் நாளடைவில் மிகப்பெரிய கட்டுகடங்காத கூட்டத்தை எட்டியது.இந்த மீலாது ஊர்வலம் கடந்து செல்வதற்கு அன்னாசாலையே மணிகணக்கில் முடங்கிப்போனது.

இதற்கு மாற்றாக இந்துமுன்னனி தலைவர் இராமகோபாலன் அவர்களால் உருவாக்கபட்டதுதான் இந்த விநாயாக சதுர்த்தி ஊர்வலம்.

முந்தய காலங்களில் இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் மண்ணினால் செய்யப்பட்ட விநாயகர் சிறிய சிலைகளை கிணத்தில் போடுவதும் கொழுக்கட்டை சுட்டு அனைவருக்கும் கொடுப்பதும் தமிழ் வீடுகளில் வழக்கம். இதை போன்ற எந்த ஊர்வலமும் எந்த பதட்டமும் பரபரப்பும் இல்லை. அனால் இன்றும் கூட வாகனங்களும் சிலையும் கூடிஉள்ளது. அனால் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

விநாயகர் சிலை எடுக்கபடும் ஒவ்வொரு ஊரில் இருந்தும் அணைத்து மக்களும் கலந்து கொண்டால் பல லட்சம் பேர் வந்து இருக்கவேண்டும். எனவே இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்தான் இதில் பெரும்பாலும் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தை பொறுத்தவரையில் இந்து சமுதாய பெருமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள். முஸ்லீம் களோடு வியாபாரம் என்று ஏதாவது ஒருவகையில் இணக்க மாக உள்ளார்கள். அதனால் முஸ்லீம்களின் அணைத்து விசயங்களையும் அவதானித்து வருகிறார்கள்.

எனவே இதை போன்ற எந்த ஊர்வலமும்,வேறு எந்த நடவடிக்கை மூலமும் தமிழகத்தில் சகோதரர்களாக வாழ்வதை முறியடிக்க முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளது.

பொதுவாக இந்து சகோதரர்களிடம் ஒரு துளி கூட மத வெறி இருப்பதில்லை. அதற்கு உதாரணம் அவர்கள் குழந்தைகளை பள்ளிவாசல் கொண்டு வந்து ஒதிபார்த்து செல்கிறார்கள். உண்மையில் மனதில் சிறு வெறியோ,கபடமோ இல்லாதவர்கள்.

ஒவ்வொரு முஸ்லீமுக்கும் நிச்சயம் ஒரு பள்ளிகூட அல்லது கல்லூரி இந்து சகோதரர் இல்லாமல் இருக்கமுடியாது. இடையில் எங்கு சந்தித்தாலும் மதங்களை கடந்து கட்டிபிடித்து கண்ணீரை முட்டவைத்து விடுகிறார்கள்.

இந்த தமிழகம் அனைவரும் சுபிட்சமாக வாழும் சுந்தர மாநிலமாக தொடர்ந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் முடிக்கிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...விநாயகனே....
posted by mackie noohuthambi (chennai) [01 September 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36936

எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் நம்மை கடந்து சென்ற விநாயகனுக்கும் நமக்கும் பாதுகாப்பாக இருக்கும் காவல் துறைக்கு நமது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.N.N. Zainul abdeen (Dubai) [01 September 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36941

எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்ததுக்கு அல்லாஹுக்கு நன்றி தெரிவிக்கலாம், மனிதர்களுக்கு நன்றி தெரிவிக்கலாம் . அதைவிட்டுட்டு விநாயகனுக்கு எதுக்கு வாழ்த்துக்கள். ஒன்னுமே புரியல......

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அவரவர் மார்க்கம் அவரவர்க்கு...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [01 September 2014]
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 36942

நம்பிக்கையும் வழிபாடும் அவரவர் உரிமை! அதையே பிறருக்கு தொல்லை தரும் நோக்கில் செய்தல் குற்றம். வீர வணக்க நாள், விநாயக சதுர்த்தி, மீலாது ஊர்வலம், கந்தூரி சந்தணக்குடம் போன்ற சடங்கு சம்பிரதாயங்களை பொது இடத்தில் நடத்தும் போது பதட்டமும், இடைஞ்சலும் பொது மக்களுக்கு ஏற்படாத வண்ணம் நடத்துவது ஏற்புடையது. மதங்களும், மார்க்கங்களும் நல்லிணக்கத்தை போதிக்க ஒருபோதும் தவறியதில்லை.

எல்லோரும் நம் மக்களே எனும் மனப்பான்மை வருமேயானால் இது போன்ற கட்டுக்கடங்கா பாதுகாப்பு, காவர்லகளின் நேர விரயம், பதட்டம், பரபரப்பு ஆகியவற்றிர்க்கு வேலையே இல்லாமல் போய்விடும். அவரவர் மார்க்கம் அவரவர்க்கு என திருமறை கூறிய அழகிய வசனத்தை அனைவரும் கடைபிடைத்தால் மத நல்லிணக்கமும், ஒற்றுமையும் மக்கள் மனதில் வேரூன்றி நிற்கும். -ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [01 September 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 36948

அஸ்ஸலாமு அலைக்கும்

எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முடிந்ததே .....அல்ஹம்துலில்லாஹ் .....எல்லா புகழும் அல்லாவுக்கே தற்போதைய இக் காலதில் பிரசனை என்பது தானாகவே வந்து விடுகிறது ......நாமாக தேடி போக வேண்டிய அவசியமே இல்லை .... ஒற்றுமையும் .....மனப்பக்குவமும் நம் யாவர்களின் மனதில் தான் உள்ளது ....

மேலும் நம் ஊரில் பெண்மக்கள் அதிகம் இருப்பதால் ....நம்மில் பொறுமையும் + நிதானமும் அவசியமே ....

நமது மரியாதைக்குரிய காவல் துறைனர்களை இந்த நேரதில் நாம் மனதாரவே பாராட்டியே ஆகணும் ....தேங்க்ஸ் சார் ......

மற்றும் நமது ஊரின் '' ஐகிய பேரவை & நமது ஊரின் மற்ற பொதுநல அமைப்பினர்களையும் இந்த தருத்தில் ஒற்றுமைக்காகவும் ...நம் ஊர் ஆண் ...பெண் ....மக்களிடம் விழிப்புணர்வை ஏற் படுதியமைக்கு நாம் பாராட்டியே ஆகணும் .......தேங்க்ஸ் .....

>>>> அல்லாஹ் நல்லதையே நாடுவானாகவும் ஆமீன்.<<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அல் ஹம்துலில்லஹ்
posted by முஹம்மது. ஆதம் சுல்தான் (yanbu) [02 September 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 36952

"அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்"
அன்புடன்,ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved