Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:40:13 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14774
#KOTW14774
Increase Font Size Decrease Font Size
வியாழன், அக்டோபர் 23, 2014
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியருக்கு இக்ராஃவில் நேர்காணல்! நடப்பாண்டில் மொத்தம் 67 மாணவ-மாணவியரின் விண்ணப்பங்கள் ஏற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2372 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடை பெற்றது. இது குறித்து இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை:

இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, I.T.I. போன்ற படிப்புகளுக்கு வருடந்தோறும் 50 முதல் 60 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடம் அனுசரணை பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல்:

இது தவிர கடந்த நான்கு ஆண்டுகளாக இக்ராஃவுக்கு ஜகாத் நிதி தனியாக சேகரிக்கப்பட்டு அதற்கு தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று இவ்வருடமும் (2014-15) இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் கடந்த 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை, காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவிலுள்ள இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.



கடந்த 16-06-2014 அன்று நடைபெற்ற இக்ராஃவின் செயற்குழுக் கூட்டத்தில் ஜகாத் நிதிக்கு நேர்காணல் செய்திட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர்களில், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். இக்ராஃ மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.

18 மாணவர்கள், 4 மாணவியர் உட்பட மொத்தம் 22 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை - (இக்ராஃவின் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான ரூ.2,27,000/-) அடுத்த சில நாட்களில் வழங்கி முடிக்கப்பட்டது.

திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவர்கள், பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம் - பிலால்களின் மக்களுக்கு இந்நேர்காணலில் முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண் (மெரிட்) பெற்றிருந்த மாணவ-மாணவியருக்கு மற்ற மாணவர்களை விட கூடுதலாக உதவித்தொகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் பெரும்பாலும் பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., உள்ளிட்ட படிப்புகளுக்காக உதவித்தொகை கோரியிருந்தனர். மாணவியர் - பிஸியோதெரோபி, பி.எட். , B.Tech (Pharmaceutical Technology Programme ) உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.

இக்ராஃ ஜகாத் நிதியைப் பொருத்த வரை,
2010-11ஆம் வருடம் ரூபாய் 48,800/- கிடைக்கப் பெற்று 5 மாணவ-மாணவியருக்கும்,
2011-12ஆம் வருடம் ரூபாய் 91,000/- கிடைக்கப்பெற்று 10 மாணவ-மாணவியருக்கும்,
2012-13ஆம் வருடம் ரூபாய் 4,36,400/- கிடைக்கப்பெற்று 39 ஏழை-எளிய மாணவர்களுக்கும்,
2013-14ஆம் வருடம் ரூபாய் 2,40,600/- கிடைக்கப்பெற்று 25 மாணவ-மாணவியருக்கும்,
இவ்வருடம் (2014-15) ரூபாய் 2,27,000/- கிடைக்கப்பெற்று 22 மாணவ-மாணவியருக்கும்
கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

வழமையான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல்:

இது தவிர முன்னதாக உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு (2014-15) கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 69 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.



அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணி முதல் மதியம் 01:45 மணி வரை காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவில், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.

இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் மற்றும் இக்ராஃ செயலர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் ஆகியோரடங்கிய குழு, நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தது.இவர்களுக்கு உதவியாக இக்ராஃவின் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் மற்றும் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நேர்காணலில், 21 மாணவர்கள், 24 மாணவியர் - நடப்பாண்டு (2014-15) கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர். இதில் 7 மாணவ-மாணவியருக்கு அவர்களுக்கான முழுக் கல்விக் கட்டணமும் மூன்றாண்டுகளுக்கு பொறுப்பேற்கப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியருள் பலர் ஆதரவற்றவர்கள்; வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதும், இந்த மாணவ - மாணவியருக்குத் தேவையான வழிகாட்டுதலும், மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இக்ராஃவின் முறையான கல்விப்பணிகளை நேரில் கண்டும், கேள்விப்பட்டும் ஏராளமான கல்வி ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும், காயல் நல மன்றங்களும் தாங்களாகவே முன்வந்து கல்விக்காக ஸதக்கா மற்றும் ஜக்காத் நிதி வழங்கி வருவது குறித்து இக்ராஃ நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியையும், நிதி வழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.


இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம் - காயல்பட்டினம்


இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் கடந்தாண்டு (2013-2014) ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல் செய்யப்பட்டது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் கடந்தாண்டு (2013-2014) வழமையான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல் செய்யப்பட்டது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...எங்கே பணம் வந்து குவிகிறதோ அங்கே பொறுப்பும் அதிகரிக்கிறது...
posted by mackie noohuthambi (chennai) [24 October 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 37872

எங்கே பணம் வந்து குவிகிறதோ அங்கே பொறுப்பும் அதிகரிக்கிறது. ஏனெனில் அங்கு கணக்கு கேட்பதும் அதிகமாகிறது.

இக்ராவின் செயல்பாடுகள் - நம்பகத் தன்மை - அவர்கள் ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைத்திருப்பதும், அதை பொதுக் குழுவில் செயற்குழுவில் சமர்ப்பித்து உறுப்பினர்களின் ஒப்புதலை வாங்குவதும், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பதும், நல்ல யோசனைகளை ஏற்றுக் கொள்வதும், குறைகள் சுட்டிக் காட்டப்பட்டால் அவற்றை மீளாய்வு செய்வதும் - இப்படி எல்லா அம்சங்களுமே சிறப்பாக நடந்து வருவதை நான் சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டபோது அவதானித்தேன். இப்படி எல்லா இயக்கங்களும் இயங்க வேண்டும் என்று ஆசைப் பட்டேன்.

உலமாக்கள் ஒரு செய்தியை சொல்லிக் காட்டுகிறார்கள் . அல்லாஹ்வினால் பெரிய அரசாட்சியை கொடுக்கப்பட்ட சுலைமான் நபியவர்கள் ஆட்சி அதிகாரத்தை அல்லாவுக்கு பயந்து அவன் சொல்லியபடி ஆட்சி புரிந்தார்கள் என்றாலும் அவர்கள் நபிமார்களில் கடைசியாக சுவர்க்கம் செல்வார்களாம். காரணம் அல்லாஹ்விடம் அவர்கள் கணக்கு கொடுத்து விட்டு வருவதற்கு அவ்வளவு விஷயம் இருந்திருக்கிறது.

நபி தோழர்களில் அபரிமிதமான செல்வம் வழங்கப் பட்டவர்கள் அப்துர் ரஹ்மான் இப்னு அவப் அவர்கள். அல்லாஹ்வின் பாதையிலேயே அவ்வளவையும் செலவு செய்தவர்கள். அவர்கள் நபி தோழர்களில் கடைசியாக சுவர்க்கம் செல்வார்களாம். காரணம் அல்லாஹ்விடம் அவர்கள் கணக்கு கொடுத்துவிட்டு வருவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருந்திருக்கிறது.

அப்படியானால் சாதரணமான நாம் எம்மாத்திரம். அல்லாஹ் நம்மை பாது காப்பானாக . நமது நல்ல செயல்களை ஏற்றுக் கொள்வானாக. இந்த பணியில் தங்களை இனைதுக்கொண்டாவர்கள், இந்த கல்வி சேவைக்காக உதவுபவார்கள் எல்லோருடைய செயல்களையும் கபூல் செய்வானாக. இவர்கள் எல்லோருக்கும் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் நீடித்த ஆயுளையும் கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேற்றிரவு இதமழை!  (24/10/2014) [Views - 2467; Comments - 0]
மீண்டும் மழை எச்சரிக்கை!   (23/10/2014) [Views - 2743; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved