Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:34:47 PM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15042
#KOTW15042
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 15, 2014
டிசிடபிள்யூ ஆலைக்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை: ஆட்சியரிடம் புகார்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3610 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 14)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

டிசிடபிள்யூ தொழிற்சாலைக்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆறுமுகநேரி நகர் நல மன்றம் மற்றும் வட்டார தொழில் வளர்ச்சி பாதுகாப்பு சங்க தலைவர் பூபால்ராஜன், செயலாளர் சண்முக வெங்கடேசன், பொருளாளர் காந்தி, பாதுகாப்பு சங்கம் சற்குரு மற்றும் விவசாயிகள் சிலர் ஆட்சியரிடம் அளித்த மனு:



தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி மற்றும் அந்த பகுதியை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாய மற்றும் உப்பள தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். அவர்களது வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும், இந்த பகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1959ல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கோசல்ராம், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோரின் முயற்சியால் அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் டிசிடபிள்யூ தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்.

அந்த தொழிற்சாலை தொடங்கி 55 ஆண்டுகளில், சுற்றுவட்டார பகுதி மக்கள் வேலைவாய்ப்பு மற்றும் பொருளதார வளர்ச்சி அடைந்துள்ளனர். அந்த தொழிற்சாலை சார்பில் காயல்பட்டினம் மீனவ மக்களுக்கு சமுதாய கூடம், விவசாய சங்கங்கள் மூலம் வடிகால் தூர்வாறும் பணி, மழை காலத்தில் உதவி, சிறு உப்பு உற்பத்தியாளர்களிகளிடம் உப்பு கொள்முதல் போன்ற பல வகைகளில் இந்நிறுவனம் உதவி செய்து வருகிறது.

ஆனால் சமீபகாலமாக காயல்பட்டினம் சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற பெயரில் சிலர் இந்த தொழிற்சாலைக்கு எதிராக பொய்ப் பிரச்சாரம் செய்து, ஆலையை மூடவேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளிநாட்டினரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து உள்நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைக்கு எதிராக விஷம பிரச்சாரத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களின் போக்கு சுற்றுவட்டார மக்களிடம் பகைமை உணர்வை எற்படுத்துகிறது. அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ்வைத் தரம் உயர்வதற்கு உறுதுனையாக இருக்கும் டிசிடபிள்யூ தொழிற்சாலைக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
www.tutyonline.com


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பரட்டை (DCW ) !!
posted by Salai. Mohamed Mohideen (Philly) [15 December 2014]
IP: 144.*.*.* United States | Comment Reference Number: 38456

பத்த வச்சிட்டியேடா பரட்டை (DCW ) !!

சகோதரத்துவத்துடன் வாழும் இருஊர் மக்களை இப்படியெல்லாம் உசுப்பேத்திட்டா பிரச்சனை சால்வ் ஆகிடுமா என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. எங்கள் இரு ஊரார்களையும் எந்த சக்தியாலும் பிரித்துவிட முடியாது!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [16 December 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38460

மத நல்லிணக்கதிற்கு வித்தூன்றிய ஊர்களில் காயல்நகர் ஆறுமுகநேரி என்கின்ற ஊர்கள் என்றால் அது மிகையல்ல.

சுதந்திரம் பெற்ற காலத்திற்கு முந்திய காலம்தொட்டே வாழ்ந்த பெரியவர்கள் புண்ணியவர்களான செல்வராஜ் போன்றவர்கள் அண்மைய ஊரான காயல் நகர மக்களோடு கைகோர்த்து ஒற்றுமைக்குறிய உன்னத வழிகாட்டியாய் பிரகாசித்த காரணத்தினால்தான்,பெரும்பாலான ஆறுமுகநேரி சகோதரர்கள் சந்தோசமாக காயலில் கடைகளை திறந்து சுதிந்திரமாக தொழில் செய்து வாழ்வின் உயரே சென்றார்கள் என்பது இந்த உலகறிந்தஉண்மையாகும்!
அந்தகாலத்தில் காயல் நகருக்கு ஒரு பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்ற நிலை வரும்பொழுது,காயல் தனவந்தர்கள் அதுக்கு சம்மதம் தெரிவித்து அந்தப்பள்ளியை காயல் நகரின் உள்ளே அமைக்காமல் நம் சகோதர சமுதாய மக்கள் வாழும் அண்மைய ஊரான ஆறுமுகநேரிக்கும் காயல் நகருக்கும் நடுவில் அமையப்படவேண்டும் இரு ஊர்பிள்ளைகளும் படித்து பயன்பெறவேண்டும் அதுவும் நம்பிள்ளைகள்தான் என்ற பெருந்தன்மை யோடும்,நம்மிரு ஊர்களின் மதநல்லிணக்கம் மற்றய ஊரார்களால் மெச்சப்படவேண்டும் என்ற ஒரே உன்னத நோக்கத்தோடு,பேயன்விளை பக்கத்தில் "காயல்பட்டணம் ஆறுமுகநேரி மேல்நிலைப்பள்ளி என்று பெயர்சூட்டி ஒரு பள்ளியை ஆரம்பித்த அந்தகாலத்திலிருந்தே நம் இரு ஊரார்களும் அண்ணன் தம்பிகளாய்,அக்கா,தங்கைகளாய் உறவாடி வாழ்ந்து வருகிறோம்!.

1950-ல் காயலுக்கு தண்ணீர் ஆத்தூரிலிருந்து கொண்டு வரவேண்டும் அதற்க்கு பெரும்தொகை தேவை என்ற தருணத்தில் காயல் தனவந்தர்கள் அந்த தொகையை செலுத்தி அந்த தண்ணீர் நேரடியாக காயல் நகரை வந்தடைய தேவையில்லை, அருகிலிருக்கும் ஆறுமுகநேரி மக்களும் பயன்பெறும் விதமாக திட்டங்களை அமையுங்கள் என்று வலியுறுத்திய வள்ளல்கள் வாழ்ந்து மறைந்த,அவர்கள் வழிகளில் வழிவழியாக இரு ஊரார் களும் ஒற்றுமையாக வாழ்ந்த்து கொண்டிருக்கும் இவ் வேலையில்,

DCW ஆலைக்கெதிராக விஷம பிரச்சாரம் பண்ணுகிறார்கள் அவர்கள்மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையோடுகளம் இறங்கி இருக்கும் ஒருசில சகோதரர்களே, இந்த ஆலையின் எதிர்ப்பு ஏதோ நேற்றோ, இன்றோ உருவாகியுள்ளது மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்க முயல்கிறீர்கள், உங்களிடம் ஒரு சிறு சில கேள்விகளை கேட்கிறோம், நீங்கள் மாவட்ட ஆட்சியரை அணுகுமுன் காயல் நகர மக்களை அணுகினீர்களா?

DCW ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் காயல் கடலுக்கு செல்லும் வழியிலும்,அது கலக்கும் தருணத்திலும் அக் கழிவிலிருந்து பரவும் கிருமிகளின் தாக்கத்தால் அதிகமாக பாதிப்படைந்து பலஉயிர்களை பறிகொடுதுக்கொண்டிருக்கின்ற இந்த பயங்கரமான பாதக நிலைக்கு,அந்த ஆலையின் கழிவுநீர் முக்கிய காரணம் என்ற ஆதாரத்தோடு அவாலைக்கெதிராக வழக்காடி வரும் "காயல் சுற்றசூழல் பாதுகாப்பு அமைப்பு" என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறதே,அந்த அமைப்பை அணுகி அதன் ஆதாரத்தையும்,விளக்கத்தையும் பெற்றீர்களா? அல்லது,

புதிய தலைமுறை போன்ற பல சின்னத்திரை ஊடகங்கள் DCW ஆலையின் கழிவுநீர் கொடுமையைப்பற்றி கூறியதே அந்த ஊடகங்களை அணுகி விளக்கம் பெற்றீர்களா?பெரும்பாலான தினசரி,வார,மாத பத்திரிகைகள் DCW ஆலையின் கொடுமை பற்றி பின்னிபெடலெடுத்தார்களே அவர்களை அணுகினீர்களா?

ஏன் "ஒரு ஊர்ல இரண்டு ராஜா" என்ற திரைப்படம் இந்த ஆலையின் அவல நிலையை சித்தரித்து இலைமறைகாயாக எல்லோருக்கும் தெரியும் வண்ணம் தமிழகம் முழுவதும் திரையிட்டார்களே அந்த பட இயக்குனரிடம் நீங்கள் விளக்கம் கேட்டீர்களா?அண்மையில் உப்பு த்தொழிலாளர்கள் தொலைக்காட்சிக்கு DCW க்கு எதிராக பேட்டி கொடுத்ததாவது உங்களுக்குத் தெரியுமா?

ஆகவே,நீங்களும் உங்கள் அமைப்பும் உண்மையாகவும்,மனசாட்சியுடனும் இயங்கி கொண்டிருக்குமேயானால் மேலே சொன்ன எந்த ஒரு அமைப்பை யாவது அணுகி இருப்பீர்கள்,ஆனால் நீங்கள் அதைசெய்யவில்லை. ஏனெனில் நீங்கள், நாங்கள் அண்ணணன்தம்பிகளாய் ஒருதாய் பெற்ற பிள்ளைகள் போல் உறவாடிகொண்டிருக்கும் உண்மையான ஆறுமுகநேரி சகோதரர்கள் அல்ல.

உங்கள் சூழ்ச்சியால் பலப்பல ஆண்டுகள் ஆலமர உறுதியாய் நிலைத்துநிற்கும் எங்கள் இரு ஊரார்களின் ஒற்றுமையின் ஒரு உரோமத்தைகூட உதிர்த்துவிட முடியாது,இந்த வையகம் வாழும்வரை எங்கள் உறவும் நீடிக்கும் நீசமுடைய நயவஞ்சகர்கள் அதைபார்த்து அதிர்ச்சியில் அழிந்துபோவார்கள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!.

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 December 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38466

இந்த சகோதரர்களை குறை கூறி எந்த பலனும் இல்லை.

இவர்களின் நடவடிக்கையை பார்த்து " செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து , வஞ்சத்தில் வீழ்ந்தாயடா..." என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது.

எங்களுடைய வலி உங்களுக்கு புரியாது சகோதரர்களே.. இரண்டு உயிர்களை கான்சருக்கு பலி கொடுத்து விட்டு, வீட்டில் இன்னும் ஒரு கான்சர் நோயாளியோடு கஷ்டப்பட்டு, குழந்தைகள் சுவாச கோளாறோடு அல்லல் பட்டுக்கொண்டு இருக்கும் நிலைமை உங்களுக்கு வந்தால் புரியும்.

இப்படி ஒவ்வொரு குடும்பமும் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டு வாழவும் முடியாமல், ஊரை காலிபண்ணிக்கொண்டு செல்லவும் முடியாமல், நிம்மதியான மரணமும் இல்லாமல் இருக்கும் அவலம் உங்களுக்கு புரியாது.

எங்களின் நோக்கம் DCW வை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது அல்ல. சட்ட திட்டங்களை பின்பற்றி அவர்களின் மாசுகளை ஒழுங்கு படுத்துங்கள் என்பது தான். நீயும் வாழு, எங்களையும் நிம்மதியாக வாழவிடு என்பது தான்.

வல்ல இறைவன் நிம்மதியான, நோய் நொடிகள் இல்லாத நல்ல வாழ்வை எங்களுக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக..!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பெருந்தலைவர் DCW வை மூடிட உத்தரவு பிறப்பித்து இருப்பார்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [16 December 2014]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 38474

இந்த பகுதி வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 1959ல் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கோசல்ராம், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோரின் முயற்சியால் அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் டிசிடபிள்யூ தொழிற்சாலையை தொடங்கி வைத்தார்,, (CP)

சகோதரர்களே..! கறைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர், தமிழகத்தின் கல்வி தந்தை மறைந்தும் மக்கள் மனதில் வாழும் அன்றைய முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் காலத்தில் தொடங்கப்பட்ட DCW தொழிற்சாலை உற்பத்தி வேறு...! இன்று அந்த DCW தொழிற்சாலை உற்பத்தி வேறு என்பதை நீங்கள் விளங்குவீர்களா..! உணர்வீர்களா..!

சகோதரர்களே..! அன்றைய முதல்வர் பெருந்தலைவர் இன்று இருந்திருந்தால் இந்நகர் மக்கள் படும் துயரத்தை அறிந்து மக்களின் உயிரை கொல்லும் இன்றைய DCW தொழிற்சாலையின் இரசாயன உற்பத்தியை மூடிட உத்தரவு பிறப்பித்து இருப்பார்..! இன்றைய முதவர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது..! ஆகவே நகரில் - குடும்பத்தில் சகோதரனை / சகோதிரிகளை / சிறுவர், சிறுமியர்களை / குழந்தைகளை பறிகொடுத்த துயரத்தில் வேதனையின் விழும்பில் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆலைக்கு எதிராக போராடுகிறார்கள்..

சகோதரர்களே.. உங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் நீங்கள் அதன் வேதனையை அறிவீர்கள்.. இந்து நாளிதழ் எழுத்தாளர் திரு. சமஸ் அவர்களுக்கு காயலின் அழுகுரல் கேட்டு இந்நகர் விஜயம் வந்து இங்கு நேரடி ஆய்வு செய்து சமீபத்தில் இந்து நாளிதழில் அரசே.. அபலைகளின் அழுகுரல் உனக்கு கேட்க்கிறதா..! என்ற தலைப்பில் இந்த ஆலையால் பாதிக்கப்பட்ட உண்மை நிலைமைகளை உலகறிய செய்த செய்தியை நாளிதழ்களில் நீங்கள் படிக்க தவறியது ஏன்..?

சுற்றுவட்டார மக்களிடம் பகைமை உணர்வை எற்படுத்துகிறது (CP)

சகோதரர்களாக பழகி வரும் சுற்றுவட்டார மக்களிடம் கம்பு வெட்டி போடும் உங்கள் சூழ்ச்சி ஒருபோதும் நிறைவேறாது..! காரணம்..? அணைத்து சமய மக்களும் மிக தெளிவாக இருக்கிறார்கள்.

இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுவட்டார மக்களின் வாழ்வைத் தரம் உயர்வதற்கு உறுதுனையாக இருக்கும் டிசிடபிள்யூ தொழிற்சாலை (CP)

பலரின் உயிர்களை கொன்னு புதைத்து தான் பொருளாதார வளர்ச்சி / பிறரின் வாழ்வு தரம் உயர வேண்டும் என நீங்கள் உங்கள் மனதில் எண்ணுகிறீர்களா..?

தூய்மையான நல்ல எண்ணத்தில் அகிம்சை / அமைதி வழியில் DCW அமில ஆலைக்கு அருகிலுள்ள சுற்றுவட்டார மக்களின் வாழ்வை அவர்களின் தலைமுறைகளை நோயின்றி காக்க ஆலையின் மாசுக்கு எதிராக போராடும் "காயல்பட்டினம் சுற்றசூழல் பாதுகாப்பு அமைப்புக்கு நீதி மன்றத்தில் நியாயம் கிடைக்க உங்களையும் / எங்களையும் படைத்த வல்ல இறைவனை பிராத்திப்போம்..!

சகோதர்களே..! நீதி வெல்லும்..! அநீதி தோல்வியுறும்..! உங்கள் மனசாட்சியே நாளைக்கு உங்களை கேள்வி கேட்கும்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Fareed (Dubai) [16 December 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38477

Finally DCW using their corporate policy.This is time our peoples and organization should be careful for all their activities.

In the mean time try to meet the persons in the photo with their hometown peoples and try to win their hearts if possible


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved