Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:16:21 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15034
#KOTW15034
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 13, 2014
மையவாடிகளை மேடாக்க மண் கொடுங்கள்! காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் வேண்டுகோள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4246 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நகரின் நிலத்தடி நீர்மட்டம் தரையளவுக்கு உயர்ந்துள்ளது. நடப்பு மழைக்காலத்தில், நகரில் பல பள்ளிவாசல்களில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதில் பெரும் அவதியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 23ஆம் நாளன்று காயல்பட்டினம் பெரிய குத்பா பள்ளியில் - இறந்த ஒருவரின் உடலை நல்லடக்கம் செய்வதற்காக மண்ணறை தோண்ட முற்பட்டபோது, அக்காலகட்டத்தில் தொடர்மழை இடைவிடாது பெய்துவந்த நிலையில், தரையளவில் நீர்மட்டம் இருந்த காரணத்தால் தோண்ட இயலவில்லை.

பின்னர், தரைக்கும் மேல் இரண்டடி அளவுக்கு மணல் மேட்டை அமைத்து, அதில் ஓரடி அளவுக்கு மண்ணறை தோண்டப்பட்டு, ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.













பின்னர், இறந்தவரின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறும் நிகழ்ச்சியின்போது - காயல்பட்டினத்தில் மரணித்தவர்களின் உடலைக் குளிப்பாட்டி அடக்கம் செய்வது வரை தன்னார்வத்துடன் செய்து வரும் - காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை பின்வருமாறு பேசினார்:-

அன்பார்ந்த சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

நமதூரில் மழைக்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துவிடுவதால், பெரும்பாலான பள்ளிவாசல்களில் ஜனாஸாக்களை அடக்குவதில் பெரும் அவதி உள்ளது. தற்போது பெய்து வரும் தொடர்மழையால், நகரின் எந்தப் பள்ளிவாசலிலும் ஜனாஸாவை அடக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

நகரின் அனைத்து தெருக்களிலும் சாலைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் உயர்த்தி போடப்பட்டு வந்ததால், பள்ளிவாசல்களின் மையவாடிகள் மிகவும் தாழ்ந்து காணப்படுகிறது. இதனால், சாதாரணமாக மழை பெய்தாலும் மையவாடிகளில் ஜனாஸாவை அடக்க முடிவதில்லை. இதுபோன்ற தொடர் கனமழைக் காலங்களில், ஒரு மஹல்லாவில் ஜனாஸாவை அடக்க இயலாமல், மேட்டுப் பகுதியிலுள்ள வேறு மஹல்லாவிலுள்ள மையவாடிக்குச் சென்று அடக்கும் நிலையுள்ளது.

இக்குறையைப் போக்க வேண்டியது நம் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமை. நாம் இந்த உலகில் குடியிருக்கும் வீடுகளுக்கு சிறிய பாதிப்பு என்றாலும் கூட பல ஆயிரங்களைச் செலவழித்து உடனடியாகச் சரிசெய்து விடுகிறோம். ஆனால், மறுமையில் நாம் எழுப்பப்படும் வரை தங்கியிருக்க வேண்டிய இந்த மையவாடிகளில் இத்தனை அவதிகளைக் கண்ணால் கண்ட பிறகும் அதுபற்றி அக்கறையற்று இருக்கிறோம்.

எனவே, கடமையெனக் கருதி - உங்கள் மஹல்லா ஜமாஅத் நிர்வாகத்தின் முறையான அனுமதியைப் பெற்று, தயவுசெய்து உங்களாலியன்ற அளவுக்கு மணல் வழங்குமாறும், தனிப்பட்ட முறையில் செய்ய இயலாதவர்களும் - குழுவாக இணைந்து மணல் வழங்கி, மையவாடிகளை மேடாக்கிட உதவிடுமாறும் உங்கள் யாவரையும் பணிவுடன் வேண்டுகிறேன்.


இவ்வாறு அவர் பேசினார். அதன் தொடர்ச்சியாக, நகரின் சில பள்ளிவாசல்களில் சிலர் தாமாக முன்வந்து மணலையோ அல்லது மணலுக்குத் தேவையான பணத்தையோ கொடுத்து வருகின்றனர்.

படங்கள்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...கண்களும் குளமாகும் என்பது திண்ணம்...
posted by N.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்) [14 December 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38447

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இந்த ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துக்கொள்ள சென்றபோது சகோதரர் மஹ்மூது லெப்பை அவர்கள் வேண்டுகோள் விடுத்ததை செவியேற்கும் வாய்ப்பும் எமக்கு கிடைத்தது - அது மிகவும் உருக்கமான வேண்டுகோள்.

நேற்றுக்கூட ஒரு ஜனாஸாவை அவர்கள் குடும்பத்தார் வழமையாக அடக்கக்கூடிய மையவாடியில் தண்ணீர் தேங்கி நின்றதால் வேறொறு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்தார்கள் – அந்த பள்ளி மையவாடியும் இக்கட்டான நிலையில்தான் இருக்கிறது.

-----------------------

பொதுவாக ஒருவர் மௌத்தாகிவிட்டால் அந்த வீட்டுக்கு சென்று மையித்தை போய் பார்ப்போம் , அவர்களுக்கு ஆறுதல் சொல்வோம், ஜனாஸாவுடன் சென்று தொழுது, அடக்கம் செய்தபின் நம் இருப்பிடம் திரும்புவோம். நம் வீட்டிலே உள்ளவர்கள் மௌத்தானால் கஃபன் துணி வாங்குவது முதல் அத்தனை செலவினங்களுக்கும் யாரிடமாவது பணத்தை கொடுத்து செய்ய சொல்லுவோம் அல்லது சிலர் தாங்களே முன்னின்று அவைகளுக்கான பணம் பட்டுவாடா செய்வார்கள்.

அதிகப்படியாக சொல்லவேண்டுமானால் ஜனாஸாவை எங்கள் குடும்பத்தவர்கள் அடக்கப்பட்டிருக்கும் இந்த இடத்தில் அடக்குங்கள் அந்த இடத்தில் அடக்குங்கள் என்று அந்த இடத்தின் நிலையை (புதிதாக ஜனாஸா அடக்கபட்டிருக்கிறதா? அல்லது வேறு ஏதும் இடையூறு இருக்கிறதா என்பதை) அறியாமல் பள்ளி நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்வோம். இதைத் தவிர மையவாடியில் இருக்கின்ற எந்த சிறமமும், குறை, நிறைகளும் நமக்கு தெரியாது.

---------------------------

ஜனாஸாக்களை குளிப்பாட்டி , அடக்கம் செய்வது வரை உள்ள பணிகளை அல்லாஹ்வுக்காக வேண்டி செய்துவரும் சகோதரர் மஹ்மூது லெப்பை அவர்கள் ஜனாஸாக்களை அடக்குவதில் என்னென்ன சிறமங்கள் இருக்கிறது இந்த நிலை நீடித்தால் மேலும் என்னென்ன பிரச்சனைகள் வரும் என்பதை நம் எல்லோரையும் விட மிகவும் நன்கு அறிந்தவர். ஆகவே சகோதரர் விடுத்திருக்கும் இந்த வேண்டுகோளை ஏற்று நாம் அனைவரும் அவரவர்களால் இயன்றளவு உதவிட வேண்டும். அதுவும் துரிதமாக உதவுவதில்தான் மிகுந்த பயன் உள்ளது.

எந்த ஓர் அபாயகரமான சூழலும் ஏற்படும்பொழுது அதற்கு நாம் அவசியம் உதவ வேண்டும் என்ற எண்ணம் நம்மவர்கள் மனதில் ஏற்படும் - அந்த எண்ணத்தை உடனே செயல்படுத்த வேண்டும். அப்படி உடனே செய்யவில்லையானால் அதன் வீரியம் குறைந்துவிடும் அது மறக்கடிக்கப்பட்டுவிடும் அதை மறந்துவிடுவோம் இதுதான் மனிதர்களின் இயல்பு.

இன்றைய தினம் வரை எல்லா மையவாடிகளும் தண்ணீர் தேங்கிய நிலையிலேயே உள்ளன. நம்மவர்கள் அதை ஒருமுறை சென்று பார்த்தால் மையவாடிகள் மட்டும் குளமாக தெரியாது - தூய எண்ணம் உள்ளவர்களின் கண்களும் குளமாகும் என்பது திண்ணம்.

------------------------------

இந்த ஜனாஸாவை அடக்க தோண்டப்பட்டிருக்கிற மண்ணறையை இந்த செய்தியிலே காட்டப்பட்டிருக்கிற படத்தில் பாருங்கள் எவ்வளவு உயரம் என்று - இரண்டு அடிகள்கூட இல்லை என்றே தெரிகிறது. எப்படியோ சமாளித்து அடக்கிவிட்டார்கள். இது போல் எத்தனை ஜனாஸாக்களை அடக்க முடியும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்!.

இந்த நிலை நீடித்தால் ஊரில் மௌத்தானவர்களை வெளியூருக்கு கொண்டு போய்தான் அடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் உணரவேண்டும்.

நாம் ஒவ்வொருவரும் இதை சிந்தித்து துரிதமாக செயல்பட்டோமானால் இன்ஷா அல்லாஹ்! நம் மையவாடிகள் அத்தனையும் மேடுகளாகி ஜனாஸாக்களை அடக்க சிரமம் ஏற்படாமல் இருக்கும்.

வல்ல அல்லாஹ்! நம் அனைவருக்கும் அந்த எண்ணத்தையும் அதை நிறை வேற்றக்கூடிய ஆற்றலையும் தருவானாக ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by AbdulKader (Muscat) [14 December 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 38448

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மாதுல்லாஹி வ பரகாதஹு

ஒரு புண்ணியமான காரியம். எல்லோரும் ஈடுபட்டு செய்ய வேண்டிய ஒரு காரியம்! தயவுசெய்து முன் வாருங்கள்.

சாதாரண செய்திக்கெல்லாம் கமெண்ட்ஸ் எழுதுவாங்க, இதுக்கு எத்தனைபேர் கமெண்ட்ஸ் எழுதுவாங்கன்னு பார்ப்போம்.

அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹப் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [14 December 2014]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38449

நான் ஆச்சரியத்துடன் பார்க்கும் மனிதர்களில் சகோதரர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை அவர்களும் ஒருவர். மரணம் சம்பவித்தால் முதல் அலைபேசி இவர்களுக்குதான் செல்லும். எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக ஆஜராகி விடுவார்கள்.

இவர்களுடன் சேர்ந்து மூன்று மையத்துகளை குளிப்பாட்டும் வாய்ப்பு கிடைத்தது. இவர்களின் செயலை கண்டு அதிசயத்து போனேன். வல்ல அல்லாஹ் இவர்களின் சேவைக்கு இரு உலகிலும் உயர்ந்த கூலியை வாரி வழங்குவானாக.

இவர்களின் கோரிக்கை அவசியமானதும் அவசரமானதும் ஆகும்.

நன்றாக இருக்கும் முடுக்குகளிலும் தெருக்களிலும் திருமண அழைப்புக்கு வண்டி வண்டியாக மண் அடித்து ஒரு பிரயோஜனமும் இல்லாமல் செலவு செய்கின்றார்கள். மைய்யவாடிக்கு ஒரு 2 வண்டி மண்ணை அடிக்கலாமே.

இந்த மாதம் ஊரில் நூற்றுக் கணக்கில் திருமணம் வருகிறது, கொஞ்சம் இதில் கவனம் எடுத்து உங்களின் நன்மை கணக்கை கூட்டிக்கொள்ளுங்களேன்.

இரண்டு அடியில் ஒரு மைய்யத்தை அடக்கி இருப்பதை பார்த்து மனது வலிக்கின்றது. இறைவனின் அருளால் நம் ஊர் மையவாடிகள் பாதுகாப்புடன் இருக்கின்றது. இல்லை என்றால் நாய்களும் நரிகளும் இரண்டு நோண்டு நோண்டினால்.......!!!! நிலைமை என்ன ஆகும்.

வல்ல அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் நிம்மதியான வாழ்வை இரு உலகிலும் தருவானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohamed salih (chennai) [16 December 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 38464

மிக உருக்கமான ஒரு அழைப்பு ..

மஹ்மூத் காக்கா பற்றி சொல்லி தெரிய வேண்டியது இல்ல ..

செய்தியை படித்ததும் , மற்றும் கருத்துகளை படித்ததும் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது ..

இது காலத்தின் கட்டாயம் . நாம் அனைவரும் போர் கால அடிப்படையில் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ் .. அல்லாஹ் இதற்க்கு துணை இருப்பான்..

என்றும் அன்புடன்,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:..நிலையான வீடு .
posted by ummuhani kareem (kayalpatnam) [16 December 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38489

நாம் போட்டு விட்டு செல்லும் இந்த தற்காலிக இல்லத்துக்காக பார்த்து பார்த்து செலவழிக்கிறோம் அதுவும் இந்த மழை வந்ததிலிருந்து ஒவ்வொரு வீட்டிலும் ரிப்பேர் வேலை நடக்கிறது.

அப்படிஎன்றால் ...................

நாம் நிரந்தரமாக இருக்கும் இதற்காக செலவழித்தால் இதன் நன்மையால் கியாமத் நாள் வரை கப்ரில் புது மாப்பிள்ளை போல் தூங்கிக்கொண்டிருக்கலாம்

அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியத்தாவ் தருவானாக ஆமீன்

உம்முஹானி கரீம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அவ்வப்போது சிறுமழை!  (13/12/2014) [Views - 2415; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved