Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:47:49 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15286
#KOTW15286
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 27, 2015
மதச்சார்புகளால் பிரிந்திருக்காத வரையில் இந்தியாவின் வெற்றி நீளும்: டெல்லியில் ஒபாமா உரை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2719 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும் என்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பேசினார்.

இந்தியா - அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும்போது, இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் கூறினார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

'இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கக் கூடிய எதிர்காலம்' (India and America: The Future We Can Build Together) என்ற தலைப்பில் டெல்லி டவுன் ஹாலில் அமெரிக்க அதிபர் ஒபாமா செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

அவர் பேசும்போது, "நமஸ்தே! (இந்தியில் 'வணக்கம்'). நேற்று குடியரசு தின விழா நிகழ்வுகளைக் கண்டு வியந்தேன். குறிப்பாக பைக் சாகசங்கள் என்னைக் கவர்ந்தன.

இந்திய குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றதில் பெருமிதம் கொள்கிறேன். நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்திய மக்களின் பெருமிதத்தையும், வேறுபட்ட கலாச்சாரத்தையும் கண்டு வியந்தேன்.

என்னை ஈர்த்த இரு பெரிய மாமனிதர்கள் மார்டின் லூதர் கிங், மகாத்மா காந்தி. மார்டின் லூதர் கிங் அமெரிக்கர், மகாத்மா காந்தி இந்தியர். இதன் காரணமாகவே நான் இன்று இங்கு நிற்கிறேன்.

'உலகமே பாதுகாப்பாக இருக்கும்'

இந்திய அரசியல் சாசனமும், அமெரிக்க அரசியல் சாசனமும் 'வீ த பீப்பிள்' என்ற வார்த்தைகளுடனேயே துவங்குகிறது. இந்தியா - அமெரிக்கா என்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் இணைந்து செயல்படும்போது இந்த உலகமே பாதுகாப்பாக இருக்கும்.

'இந்திய மின் தேவை பூர்த்தியடையும்'

நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்ததத்துக்கு தீர்வு கிடைத்துள்ளது. இதன் மூலம் இந்தியர்களும் மிகவும் தேவைப்படும் மின்சாரம் கிட்டும். எரிசக்தி துறையில் இந்தியா தன்னிறைவு காண அமெரிக்கா உதவும்.

'ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா'

இரு நாடுகளுமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. பயங்கரவாதத்தை கூட்டாக நாம் எதிர்கொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்; அதில், இந்தியா நிரந்தர உறுப்பினராக வேண்டும். (அரங்கத்தில் பலத்த கைதட்டல்).

தடுக்கக்கூடிய நோய்களில் குழந்தைகள் பலியாவதை தடுப்பதில் இந்தியாவும் - அமெரிக்காவும் இணைந்து செயல்படலாம். கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் அதிகமானோர் வறுமையில் இருந்து மீட்டெடுக்கப்பட்டுள்ளனர்.

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்த அளவு குறிப்பிடத்தக்கது. வளர்ந்த நாடு, வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகளிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக கரியமில வாயு வெளியீட்டை கட்டுப்படுத்துமாறு கோருவது சரியாகாது. ஆனாலும், நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்படாவிட்டால் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி காண முடியாது.

மோடிக்குப் புகழாரம்

தனிநபர் மரியாதைக்கு நாம் மதிப்பளிக்கும்போதே நாம் வலியவர் ஆகிறோம். அமெரிக்கா எனக்கு நிறைய கொடைகள் வழங்கியிருந்தாலும், என் வாழ்வில் நிற பேதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இழிவாக கருதப்படும் தொழிலை செய்பவர்கள் காணும் கனவுகூட மேன்மையானதே.

அதிர்ஷ்டவசமாக நாம் கனவு காண சுதந்திரம் உள்ள நாடுகளில் பிறந்திருக்கிறோம். அமெரிக்காவில் ஒரு சமையல்காரரின் பேரன் அதிபராக முடியும், இந்தியாவில் ஒரு டீ விற்பவர் பிரதமராக முடியும்(அதிபர் என தன்னையும், பிரதமர் என நரேந்திர மோடியையும் குறிப்பிட்டார்).

பெண்களுக்கு முக்கியத்துவத்தால் வியப்பு

பெண்கள் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நான்சி பெலோசியைப் பாருங்கள். அவர் அமெரிக்காவில் பெண்கள் எத்தகைய உயரத்தை எட்ட முடியும் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு பெண்ணும் ஓர் ஆணுக்கு சமமாக முக்கியமானவள். இந்திய ராணுவத்தில் பெண்களை பார்த்தபோது மகிழ்ந்தேன். எந்த தேசத்தில் பெண்கள் முன்னேறுகின்றனரோ அந்த தேசம் பெரிய வெற்றியை காணும்.

அமெரிக்க மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில வேண்டும்

அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும் என விரும்புகிறேன். தற்போது இந்திய மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் அமெரிக்கா வந்து கல்வி பயில்கின்றனர். அதேபோல் எதிர்காலத்தில் அமெரிக்க மாணவர்கள் இந்தியா வந்து கல்வி பயில வேண்டும். இளைஞர்களுக்கு அதிகாரம் வழங்கும்போது நம் தேசம் வலுப்பெறும்.

மத நல்லிணக்கம் தேவை:

ஒவ்வொரு தனி நபரும் தனக்கு விருப்பமான மதத்தை பின்பற்ற இந்திய அரசியல் சாசனம் வழிவகை செய்கிறது. இந்திய அரசியல் சாசனத்தில் சட்டப் பிரிவு 25 - மதச் சுதந்திரத்தை விரிவாக எடுத்துரைக்கிறது. எனவே தனி நபர் மதச் சுதந்திரத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். மதச்சார்புகளால் பிரிந்து கிடக்க இடம் தராத வரையில், இந்தியாவின் வெற்றி நீண்டிருக்கும்.

எனவே, ஒரு தனிநபர் தான் விரும்பும் மதத்தை, கொள்கையை பயமின்றி, பாகுபாடின்றி பின்பற்ற உரிமை இருக்கிறது. மத, இன, நிறப் பாகுபாடுகள் நம்மைப் பிரித்தாளாமால் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

ஷாருக்கான், மேரிகோம், மில்காசிங் இவர்கள் அனைவரது வெற்றியையும் சமமாக கொண்டாட வேண்டும். அவர்கள் மதம், நிறம் சார்ந்த பேதங்கள் கூடாது.

இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாட்டு அரசியல் சாசனங்களிலும் மத உரிமை இடம் பெற்றிருக்கிறது. நானும், மிஷெலும் எங்களுக்கு நாட்டம் உள்ள கிறிஸ்துவ மதத்தை பின்பற்றுகிறோம். அதுபோல் ஒவ்வொரு தனி நபருக்கும் அவருக்கான மத உரிமை வழங்கப்பட வேண்டும்.

அதேவேளையில், மத நம்பிக்கை என்ற பெயரில் சிலர் வன்முறைகளை, தீவிரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதையும் நாம் கண்டு வருகிறோம்.

இந்தியாவில் கர் வாப்ஸி என்ற பெயரில் சில இந்து அமைப்புகள் சார்பில் மறு மதமாற்ற நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா மதச் சுதந்திரம் பற்றி பேசியுள்ளது அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அணு ஆயுதம் இல்லாத உலகு செய்வோம்:

அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவதே இந்தியா, அமெரிக்காவின் பொதுவான குறிக்கோளாக இருக்கும்.

எழுச்சிமிகு இந்தியா:

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா அதிக பலத்துடன் எழுச்சி காண வேண்டும் என விரும்புகிறேன். பிராந்தியங்களுக்கு இடையேயான பிரச்சினைகளில் சுமுக தீர்வு எட்டப்பட்டவேண்டும்.

இந்த நூற்றாண்டின் சிறந்த கூட்டாளிகள்

இந்தியாவும் - அமெரிக்காவும் சிறந்த கூட்டாளிகளாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன். நமது நட்புறவு இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நட்புறவாக பறைசாற்றப்பட வாய்ப்புள்ளது.

இந்தியாவும் - அமெரிக்காவும் இணைந்து செயல்பட்டால் என்னவெல்லாம் சாதிக்கமுடியும் என்பதை உங்களிடம் நேரடியாக எடுத்துரைத்துவிட்டேன்.

இந்தியா - அமெரிக்க மக்களிடையே நிலவும் ஆழமான நட்புறவின் அடிப்படையிலேயே இருநாடுகளுக்கு இடையேயான இந்த புதிய சகாப்தத்தை நோக்கி நான் அடியெடுத்துவைத்துள்ளேன்" என்றார்.

தகவல்:
தி இந்து


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. காவிகள் வெட்கப்பட வேண்டும்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [27 January 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39101

என்னுடைய சௌதி நண்பரிடம் உங்கள் நாட்டிற்கு ஒபாமா வந்திருக்கிறாரே தெரியுமா என்று.கேட்டேன்,அந்த நண்பரும் ஆமாம் தெரியும் T .V யில் பார்த்தேன் அதெற்கென்ன, எல்லா நாட்டு தலைவர்களும் வந்து தங்கள் அனுதாபத்தை தெரிவித்து விட்டு போகிறார்கள் அந்த வரசையில் அமெரிக்க அதிர்பரும் வந்து விட்டு செல்கிறார் இதில் என்ன முக்கியத்துவ செய்தி என்று என்னை மடக்கி கேட்டார். நான் அசடு வழிய அசட்டு சிரிப்புடன் அகன்றேன்!

ஆனால் நம் நாட்டின் காவிக்கூட்டமோ இப்போதுதான் ஒபாமா வானத்திலிருந்து பொத்தென்று விழுந்து முதன்முதலில் இந்தியாவிற்குள் வருவது போல் விண்ணுக்கும், மண்ணுக்குமிடையில் தைய, தக்க,தை என்று குதித்து குத்தாட்டம் போடுகின்ற அனைவர்களின் அத்துமீறிய ஆர்ப்பாட்டத்தை புரிந்து கொண்ட ஒபாமா, ஒட்டுமொத்த காவிகளின் முகமூடியை கிழிக்கும் வண்ணம் தன் இறுதி பேச்சில் பெரிய குண்டைத்தூக்கி போட்டுவிட்டு சென்றுவிட்டார்.

ஆமாம் இங்கு மத துவேசத்தை தூண்டி மக்களை பிளவு படுத்தும் முயற்சியில் நிர்வாகம் நடக்குமேயானால் அங்கு அமைதியும்,ஒற்றுமையும் வெற்றியும் கிடைக்காது என்பதுபோன்ற உணர்வில் எதனாலையோ அடிப்பதுபோன்று சொற்சாட்டையை சுழற்றிவிட்டு சென்றுள்ளார்!

அதானே,பலகோடி டாலர்களை கொட்டி வியாபாரம் பண்ண நினைக்கும் வியாபாரி அந்த வியாபாரஸ்த்தளம் எப்படி இருக்கிறது என்று நினைப்பதில் அளப்பதில் என்ன தவறு இருக்கிறது!

மதமாற்றங்கள் முனைப்போடு நடைபெறுகிறது,மூன்று லட்சம் ஐந்து லட்சம் என்று நோட்டீஸில் விளம்பரபடுத்தி விலைக்கி வாங்கி மதமாற்றுகிறார்கள், இங்கு பிறப்பவர்கள் எல்லோரும் ராமன் பிள்ளைகள் என்றும்,மோடியை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லலாம் என்றும், ராமர்கோவிலை அயோத்தியில்கட்டியே தீருவோம் என்று எக்காலமிட்டும், கிருஸ்த்துமஸ்அன்று விடுமுறை இல்லை எல்லோரும் பள்ளிக்கு வரவேண்டும் என்ற கட்டளைகள் கூடிய காட்டு தர்பார் கட்டவிழ்க்கப்பட்டு ஒரு மதவேறியாட்டம் இங்கு நடந்து கொண்டிருக்கின்றது என்ற கொடுமையை நாம் மட்டுமல்ல இந்த உலகமே அறியக்கூடிய வகையில் ஊடகங்கள் செய்திகளாய் கொண்டு சென்று கொண்டிருக்கத்தானே செய்கிறது! ,

இந்த செய்திகள் அமெரிக்காவிற்க்கென்ன வானுயர ஊரான "நிலா" தேசத்தில் வாழ்பவருக்குகூட எளிதில் சென்றடையக்கூடிய இந்த கால கட்டத்தில்,ஒபாமா எந்த அளவிற்கு குறிப்பிடுகிறார் என்றால் நம்நாட்டு ஆளுமை சட்டப்பிரிவு 25-ம் சரத்து வரை பேசி எச்சரித்து இருக்கிறார் என்றால் அதில் எள்ளளவும் ஆச்சிரியமில்லை, அந்த அளவிற்கு அவருக்கு உதவுபவர்களை உள்ளங்கையில் வைத்திருக்கிறார் அதை எண்ணி காவிகள் கூட்டம்தான் வெட்கி தலை குனியவேண்டும்.

அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved