காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், கடற்கரையில் புதர்களை அகற்றும் பணி நேற்று 14.30 மணிக்குத் துவங்கியது.
![](/newsimg/192201546039.jpg)
![](/newsimg/192201546057.jpg)
![](/newsimg/192201546071.jpg)
![](/newsimg/192201546084.jpg)
![](/newsimg/192201546106.jpg)
கடற்கரையின் வடபகுதியில், கீரிக்குளத்தையொட்டிய பகுதிகளில் படர்ந்து வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அனைத்தும் பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது.
நேற்று துவங்கிய பணிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், பொறியாளர் சிவக்குமார், தொழில்நுட்ப உதவியாளர் செந்தில் குமார் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
காயல்பட்டினம் நகராட்சி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |