Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:42:10 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15466
#KOTW15466
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 21, 2015
காயல்பட்டினம் நகராட்சியின் சேவைகளை பெற லஞ்சம் கோரப்பட்டால் தகவல் தரவும்: நகர்மன்றத் தலைவர் துண்டு பிரசுரம் விநியோகம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3658 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் சேவைகளை பொது மக்கள் பெற, லஞ்சம் கோரப்பட்டால், அது குறித்த புகாரினை தனக்கு வழங்கும்படி - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:

லஞ்சம் கொடுக்காமல் அரசு சேவைகளை பெறுவது – அரசியல் சாசனம், மக்களுக்குத் தந்துள்ள அடிப்படை உரிமை!

அன்பார்ந்த பொதுமக்களே! நமதூர் காயல்பட்டினம் நகராட்சியில் சேவைகள் பெற லஞ்சம் கொடுக்கவேண்டியுள்ளது என புகார்கள் வருகின்றன. ஆதாரப்பூர்வமான அடிப்படையில் பெறப்படும் புகார்கள் மீது நான் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

காயல்பட்டினம் நகராட்சியில் சேவைகள் பெற உங்களிடம் லஞ்சம் கோரப்பட்டால், எனக்கு உடனடியாகத் தகவல் தரும் பட்சத்தில், லஞ்சம் கோரியவர்கள் மீது சட்டப்படி கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கள் புகார்களை – பதிவுத் தபால் மூலம் 28 மகுதூம் தெரு, காயல்பட்டினம் என்ற எனது முகவரிக்கோ அல்லது,

kayalchairman@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது,

நகராட்சி அலுவலகத்தில் என்னிடம் நேரடியாகவோ வழங்கலாம்.

அந்தப் புகாரின் நகலை,

The Director,
Vigilance and Anti-Corruption,
NCB 21, P.S.Kumarasamy Raja Salai,
Raja Annamalai Puram,
Chennai – 600 028.

என்ற முகவரிக்கும் அனுப்ப அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண்,
ஐ.ஆபிதா ஷேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.



Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. யார் செய்தாலும் குற்றம் குற்றமே!
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [21 February 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 39314

நகரமன்ற தலைவி அவர்களே ஒரு சந்தேகம், நம் நகராட்சியில் மக்கள் பணி செய்ய கடமைப்பட்டவர்கள் கையூட்டு கேட்டால் உடனே தகவல் தரும்படி கேட்டிருக்கிறீர்கள். எங்கள் புகார்களை எந்த அடிப்படையில் செய்வது.

வாய் மொழியால கேட்டால் அதை நிரூபிக்க முடியாதே, இதிலுள்ள சிக்கலை எப்படி களைவது. ஒருவேளை கையூட்டு பெற முடியவில்லையே என்று நம் வேலைகளை வேண்டுமென்றே தாமதப்படுதுபவர்களுக்குறிய நடவடிக்கை என்ன?.

நம் வேலைகளை தாமதபடுத்த சில காரணங்களை வேண்டுமென்றே உருவாக்குபவர்களிடம் உதவி பெறப்போகும் மக்களுக்கு, தங்கள் அவசரத்தேவையின் அவசியம் நாடி, எப்படியாவது நம் வேலை முடிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில், யாருக்கும் தெரியாது நான் இந்த வேலைக்குறிய செலவுகளை தருகிறேன், இது இலஞ்சம் இல்லை, என் வேலை உடனே முடிந்ததற்கு பகரமாக ஒரு பிரியமுடைய பரிசுதான் என்று இலஞ்சத்திற்கு இன்னொரு பெயர் சூட்டி அந்த அதிகாரியையோ அல்லது அவ் வேலைக்குறிய பொறுப்பானவரையோ கையூட்டு பெறச்செய்ய நிர்ப்பந்திப்பவர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது. அவர்கள் மீது எந்த அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது? .

நம் கண்ணோட்டம் ஒரு பிரிவு சாரார்கள்தான் குற்றம் செய்பவர்கள் போலவும் அவர்களை எப்படியெல்லாம் பிடிக்கலாம் என்ற சிந்தனையில் மட்டுமே நம்செயல்பாடுகள் இருக்கக்கூடாது.

குற்றம் யார் செய்தாலும் கையூட்டு பெறுபவர்,கொடுப்பவர் ஆக இரு பிரிவினரகள் மீதும் எப்பாகுபாடின்றி நம் நடவடிக்கை அமையுமேயானால் நாம் என்றென்றும் நடுநிலை நீதியுடயவர்கள் என்று மனசாட்சியுடைய மக்களால் போற்றப்படுவோம்!. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கை பிடிக்கும் கதை
posted by mackie noohuthambi (colombo) [21 February 2015]
IP: 103.*.*.* | Comment Reference Number: 39316

TIPS கொடுப்பதைத்தான் லஞ்சம் கொடுக்கிறது என்று சொல்வார்கள்.

"TO IMPROVE PROMPT SERVICE" என்பதன் சுருக்கம்தான் இந்த டிப்ஸ். 200 ரூபாய் லஞ்சம் வாங்கும் சாதாரண தொழிலாளி மாட்டிக் கொள்கிறான் கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் அதிகாரி தப்பித்துக் கொள்கிறார். மதிய அரசின் நிதி நிலை அறிக்கை பற்றிய முடிவுகளை முன் கூட்டியே கசியவிட்டு பல கோடிகளை சம்பாத்தியம் செய்துள்ளவர்கள், மணல் கொள்ளை, கல் குவாரி கொள்ளை பாலில் தண்ணீர் கலந்த கொள்ளை ஏன் நமது நகராட்சியில் நடந்த கொள்ளைகள் ஏதாவது நிரூபிக்கப் பட்டு தண்டனை பெற்றவர்கள் உண்டா.. கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கை பிடிக்கின்ற கதைதான்.

சரி, அம்மா அவர்களே,லஞ்சம் வாங்குபர்கள் பற்றி புகார் செய்ய ரகசிய எண் ஏதாவது இருந்தால் அதை ரகசியமாக எனக்கு அனுப்பி வையுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நகரில் பல ஆண்டுகளாக பழக்கபட்ட நோய் இது...!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [22 February 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 39317

பழக்கப்பட்ட கை அதை தான் எதிர்ப்பார்க்கும்...

எல்லோரும் மதிப்புக்குரிய திரு சகாயம் அவர்களை போல் இருக்க நினைப்பார்களா..!

காயல்பட்டினம் நகராட்சியில் பணி அமைந்தால் குறுக்கு வழியில் விரைவிலேயே தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளாலாம் என கயலப்ட்டினம் நகராட்சிக்கு டிரான்ச்பர் வாங்கி வர அவரின் மூத்த அதிகாரிக்கு அவர் சிறப்பு கவனிப்பு அளித்து நமது நகரின் நகராட்சிக்கு வருகிறார்கள் -

இங்கே வீட்டு பிளான் அப்ரூவல் அளிக்க பல ஆயிரம் / சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய பல நூறு / திருட்டு குடிநீர் இணைப்பு பெற பல ஆயிரம் / பிறப்பு - இறப்பு சான்றிதல் பெற சில நூறு / நகரில் சாலை பணிகள் மற்றும் பிற ஒப்பந்த பணிகள் நடந்தால் பல லட்சங்கள் இப்படி வாங்கி பழக்கப்பட்டவர்கள் எப்படி திருந்துவார்கள்.,,?

நாட்டில் எத்தனை சட்டங்கள் போட்டாலும் இந்த மாதிரி கேவலமானவர்களை திருத்தவே முடியாது.

நகராட்சி அலுவலர் கேட்கும் போதும் / நகராட்சி அலுவலர் கேட்காத போதும் கொடுப்பவர்கள் இருக்கும் வரை அதை (கையூட்டு) வாங்குபவர்கள் வாங்கி கொண்டு தான் இருப்பார்கள்..!

நகரில் உள்ள எல்லா அலுவகத்திலும் பல ஆண்டுகளாக பழகிய / பழக்கபட்ட நோய் இது...!

நகரில் செயல்படும் ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை - காயல்பட்டினம் கிளையில் நகரின் பல இளைய தலைமுறையினர்கள் லஞ்சத்திற்கு - ஊழலுக்கு எதிரான கொள்கையில் ஆர்வமாக இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதை அறியும் போது நகரின் இளைய தலைமுறையினர்கள் இந்நோய்க்கு மருந்து தெளிப்பார்கள் என்ற சிறிய நம்பிக்கை எனக்குள்ளது.

நாம் அனைவரும் பொறுத்திருந்து பாப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 February 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39319

அருமையான நடவடிக்கை.

லஞ்சம் ஊழலுக்கு எதிராக இருப்பேன், வெளிப்படையான நிர்வாகம் தருவேன் என்று வாக்குறுதி கொடுத்த மாதிரி, நடந்து கொள்ளும் தலைவி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இதனால் தான் அனைவர்களிடம் கெட்ட பெயர், எதிர்ப்புகள், ஒத்துழையாமை, பணிகளில் தேக்கம் போன்ற பல விஷயங்கள் தலைவி அவர்களுக்கு தலைவலி கொடுக்கின்றன.

ஆனால், லஞ்சம் ஊழலுக்கு எதிராக இருப்பது மிகவும் சிரமமான காரியம்தான். வீடு பிளான், அப்ரூவல் போன்ற காரியங்களுக்கு மக்கள் நேரடியாக நகராட்சிக்கு செல்லுவது இல்லை. அதற்க்கு அதற்க்கு என்று ஆட்கள் இருக்கின்றார்கள். அவர்களிடம் கொடுப்பதை கொடுத்து காரியங்கள் நடை பெறுகின்றன.

லஞ்சம் பரிபூரணமாக அங்கீகரிக்கப் பட்ட ஒரு துறை என்றால் அது பத்திரப்பதிவு துறை தான். நாம் நேரடியாக ஒரு ஆணியும் புடுங்க முடியாது. லஞ்சத்தை தவிர்க்க அரசு அங்கு காமெராக்களை நிறுவி அனைத்தையும் பதிவு செய்கின்றது. இதனால் எந்த பிரயோஜனமும் உள்ளாதா.. ? ஊழல் குறைந்துள்ளதா..??

பத்திரம் எழுதும் ஏஜெண்ட் ஒரு லிஸ்ட் கொடுத்து விடுகிறார், பத்திரம் இவ்வளவு, டைப் கூலி இவ்வளவு, சர்வீஸ் சார்ஜ் இவ்வளவு, பத்திர ஆஃபிஸ் செலவு இவ்வளவு, களப்பணிக்கு இவ்வளவு என்று கேட்டதும் அப்படியே கொடுத்து விடுகிறோம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், எவ்வளவு ஈமான் தாரியாக இருந்தாலும் ஒரு வார்த்தை பேச முடியாது. பேசினால் ....!!!

சரி, தற்போது உள்ள அரசாங்கத்தின் நிலமை என்ன..? லஞ்சம் ஊழல் தலைவிரித்து ஆடுகின்றது.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் அவர்கள் ஆளுநர் ராசையா அவர்களிடம், தற்போதைய செயல்படாத அரசாங்கதைப் பற்றி ஆதாரபூர்வமாக குட்டசாட்டுக்களை பட்டியலிட்டு, நடவடிக்கை எடுக்க மனு கொடுத்துள்ளார். அதை படித்த உடனே அதிர்ச்சியும், ஆவேசமும், அவமானமுமாக இருக்கின்றது.

அதில்
1 : கிரானைட் ஊழல்
2 : சட்டவிரோத தாதுமணல் கொள்ளை
3: ஆற்றுமணல் ஊழல்
4: மின்துறை ஊழல்:
5: மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தேவையில்லாத தாமதம்

6: ஒப்பந்ததாரர்களிடமிருந்து தாமதத்திற்கான அபராதம் வசூலிக்கப்படவில்லை
7: 3,600 மெகாவாட் மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்
8: மின்சார கொள்முதலில் ஊழல்
9: கட்டுமான மற்றும் கட்டட அனுமதி வழங்குவதில் ஊழல்
10: பொது விநியோகத்திற்கான பருப்பு கொள்முதல் செய்வதில் ஊழல்

11: முட்டை ஊழல்
12: ஆவின் பால் ஊழல்
13: ஒப்பந்தங்கள் ஊழல்
14: போக்குவரத்துத் துறை பணியாளர்கள் நியமனத்தில் ஊழல்
15: கோகோ கோலா ஆலைக்கு அனுமதி ஊழல்

16: கல்வித்துறை நியமனத்தில் ஊழல்
17: பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்
18: மது விற்பனையில் ஊழல்
19: ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நிழல் அரசாங்கம்

தலை சுத்துதா..! இல்லை.. இல்லை… இது எல்லாம் வழமை தான் என்கின்றீர்களா.!! யார் யாரிடம் கம்ப்ளைண்ட் கொடுப்பது.

வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்வதை தவிர வேறு இல்லை .

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [23 February 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39320

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் மரியாதைக்குரிய நகர் மன்ற தலைவி அவர்களை ...நாம் பாராட்டாமல் இருக்க முடிய வில்லை ....காரணம் ...தலைவி அவர்கள் தேர்தல் சமையம் நம் ஊர் மக்களிடம் நேரிடையாகவே ஒரு வாக்குறுதி '' அளித்தார்கள் ....அதாவது ...நேர்மையான நிர்வாகம் ....என்று ...அதைதான் இப்போது செய்யலாற்ற நினைக்கிறார்கள் ....பொது மக்களாகிய நாமும் ,, நம் மரியாதைக்குரிய தலைவி அவர்களுடன் முழுமையாகவே ஒத்துழைக்கனும் ...அப்போது தான் நம் தலைவி & பொது மக்களின் கனவும் நிறைவேறும் .....

இதையும் நாம் கவனித்து பொறுமையாக பார்ப்போம் ....நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும் ....ஆனால் நம் ஒத்துழைப்புக்கான நம் பங்கும் அவசியமே ....

நம் அருமை சகோதரர் ஒருவர் சொன்னது போன்று ....நமது ஊர் பஞ்சாயத்துக்கு வெளியூர் அதிகாரிகள் நான் ...நீ ...என்று போட்டி ....போட்டு கொண்டு ...அவர்களின் மேல் அதிகாரிகளுக்கு பல ..விதமான ..நற் செயல்களை ... ( புரிந்து இருக்கும் ) செய்து விட்டு ,,வருவதன் காரணம் ....என்ன.... நமது ஊர் பஞ்சாயத்தில் தான் அதிகமான வருவாய் '' கிடைக்கிறது ...என்கிற முழுமையான நம்பிக்கை அவர்களுக்கு உண்டு ....அது நிறைவேறியும் வருகிறது .... அது உண்மை தானே ....உண்மை ....

மரியாதைக்குரிய மேடம் ..அவர்களே இந்த நல்ல செயலுக்கு ...தாங்கள் ரகசியமான ஒரு தொலை தொடர்ப்பு எண்... பொது மக்களுக்கு தந்தாள் தான் நல்லது ....+ பொது மக்களும் தைரியமுடன் தங்களுடன் தொடர்ப்பு கொள்வார்கள் ......

தங்களின் இந்த நம் ஊர் மக்களுக்கான ...தொலைதூர'' நோக்க பார்வையுடன் கலந்த ...நல்ல பல செயல்கள் தொடரட்டும் ....

தங்களின் இந்த நற் செயல் மூலம் ...நம் ஊர் பொது மக்கள் தங்களை எப்போதும் நினைத்து பார்ப்பார்கள் என்பது உறுதியே ......நம் நகர் மன்றத்தில் தாங்கள்'' ஊழலை அகற்றி '' தாருங்கள் ....எங்களுக்கு ஊழலற்ற நிர்வாகம் வேணும் ........

மற்ற ஊரின் நகர் மன்றங்கள் ,, நம் ஊர் நகர் மன்றத்தை நினைத்து பெருமை படனும் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by omer anas (doha,qatar) [24 February 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 39322

இது பதவிக்கு தலைவி அவர்கள் வந்தப்பவே அடிக்கப்பட வேண்டிய நோட்டீஸ்! மூன்ரரைஆண்டு காலம் கடந்து வெளியிடப்பட்டு இருக்கிறது என்றால், இவராட்சியிலும் இது தொடர்கிறது என்றே அர்த்தம்.! தலைவி அவர்கள் காலம்தாழ்த்தி இருந்தாலும் வாழ்த்துக்கள்! முடிஞ்சா ஒழித்து காட்டுங்கள் பார்ப்போம், பாராட்டுவோம். பிடிபட்டால் நோட்டீஸ், வருமா? வராதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved