Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:57:52 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15736
#KOTW15736
Increase Font Size Decrease Font Size
சனி, ஏப்ரல் 11, 2015
பரிந்துரைத்த இடத்தில் பயோகேஸ் திட்டம்! தமிழக அரசுக்கு ஐக்கியப் பேரவை நன்றியறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2373 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமதமைப்பு பரிந்துரைத்த - காயல்பட்டினம் புல எண் 278இல் பயோகேஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் பொதுச் செயலாளர் பிரபு எம்.ஏ.சுல்தான் - நேற்று (ஏப்ரல் 10) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழக அரசுக்கு காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் மனமார்ந்த நன்றி!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மாண்புமிகு டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் பயோ எரிவாயு திட்டம் காயல்பட்டணம் நகராட்சி பகுதியில் அமைவதற்கு ரூபாய்: 90,00000 (தொன்னூரு இலட்சம்) ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திட்டம் அமையவும், திடக்கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கும் 5 ஏக்கர் நிலம் தேவை. மேற்படி நிலத்தை அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு (ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம்) பெற்றுத்தரும் படியாக நமது நகராட்சிக்கு அரசு அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பின்படி, நமது நகராட்சின் சார்பாக நகர்மன்ற தலைவி அவர்கள் மேற்படி திட்டத்திற்கு தேவையான இடத்தினை அடையாளம் கண்டு நகராட்சிக்கு அறிவிக்கும் படியாக ஒரு பொது அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்கள்.

அரசு நிர்ணயித்துள்ள விலைக்கு நிலம் அமையாததால், மேற்படி பயனுள்ள திட்டம் அமைவதற்குரிய ஐந்து ஏக்கர் நிலத்தை நமதூர் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை பெற்றுத்தர வேண்டுமென்று, நகராட்சியின் 18 உறுப்பினர்களும் கையொப்ப மிட்ட வேண்டுகோள் மனு ஒன்றை டிசம்பர் 05, 2012 -ம் ஆண்டு நகர்மன்றத்தின் 13 உறுப்பினர்கள் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள்.

நகர்மன்ற உறுப்பினர்கள் தந்த மனுவை பரிசீலிப்பதற்காக டிசம்பர் 19, 2012-ம் ஆண்டு ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் அரங்கில், காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட ஐக்கியப் பேரவையின் கௌரவ ஆலோசனைக்குழு உறுப்பினரும், நகராட்சியின் முன்னாள் தலைவரும், வாவு வஜிஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத் தலைவருமான வணிக பெறுந்தகை ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில் 5 ஏக்கர் நிலத்தை தருவதாக வாக்களித்தார்கள்.

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஆலோசனை கூட்டத்தில் வாக்களித்தபடி 5 ஏக்கர் அல்ல, 5 1/2 ஏக்கர் நிலத்தை கடற்கரை மேலாண்மைத் திட்டப்பகுதி (CRZ) இல்லாதப் பகுதியில் கிரயத் தொகை எதுவும் பெறாமல், பத்திரப்பதிவு செலவையும் தானே செலுத்தி இலவசமாக அரசுக்கு அளித்துள்ளார்கள்.

பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை அக்டோபர் 24,2014-ம் ஆண்டு, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் பிரமுகர்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் ஹாஜி வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள் நேரில் அளித்தார்கள்.

மேற்படி நிலத்தில் திட்டத்திற்கான ஆயத்த பணிகள் அரசால் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. தொடங்கிய பணிகள் விரைவாக நிறைவுபெறவும், திட்டம் விரைவில் செயல்வடிவம்பெறவும் வாழ்த்துகிறோம்.

மேற்படி திட்டத்தை தொடங்குவதற்கு உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், இத்திட்டம் அமையப் பெறுவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கிய மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் அவர்களுக்கும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் காயல்பட்டணம் நகர மக்கள் சார்பாக, காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நெஞ்சம் நிறைந்த நன்றிகள்,மனமார்ந்த பாராட்டுக்கள்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா .) [11 April 2015]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40101

இந்த மக்கள் பொது நலத்திட்டத்திற்கு ஐக்கிய பேரவை அமைப்பிடம் கோரிக்கையை தாங்களே முன்வந்து தெரிவித்த அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும்,இதனை பொது சிந்தனையோடு பரீசிலித்து ஆலோசனை கூட்டம் நடத்தி இதற்கான இடத்தை உரிய முறையில் பெற்று தந்த பேரவை பெரியோர்களுக்கும் மேலும் தாரள மனதோடு இடமளித்த தயாள குணம் கொண்ட கொடையாளர் அல்ஹாஜ்,வாவு செய்யது அப்துர் ரஹ்மான் அவர்களுக்கும் மற்றும் இன்றுவரை இந்த திட்டம் வெற்றிபெற வேண்டும் என்று களமிறங்கி உழைக்கும் உதவும் மற்றும் ஓங்கி உரக்க குரல் கொடுக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.ஜசாக்குமுல்லாஹ் ஹைரா.

இந்த திட்டம் நிறைவேற உதவியுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், இத்திட்டம் அமையப் பெறுவதற்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கிய மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முக நாதன் அவர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.பாராட்டுக்கள்.

இன்ஷா அல்லாஹ் நமக்கு பயன் தரும் இந்த நல்ல திட்டத்தை நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஆர்வத்துடன் ஆதரவளிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. பேரவையின் அறிக்கையில் ஒரு சிறு திருத்தம் வேண்டும்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [12 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40105

காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் ஆலோசனை கூட்டத்தில் வாக்களித்தபடி 5 ஏக்கர் அல்ல, 5 1/2 ஏக்கர் நிலத்தை கடற்கரை மேலாண்மைத் திட்டப்பகுதி (CRZ) இல்லாதப் பகுதியில் கிரயத் தொகை எதுவும் பெறாமல், பத்திரப்பதிவு செலவையும் தானே செலுத்தி இலவசமாக அரசுக்கு அளித்துள்ளார்கள். CP

மேலே வெளியிட்டுள்ள அறிக்கையில் கீழே குறிப்பிட்டுள்ள மூன்றில் ஒன்றை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை திரும்ப பெறுவது நியாயமாக இருக்கும் - அல்லது - தெளிவு படுத்துவது நியாயமாக இருக்கும்..!

1) கிரயத் தொகை எதுவும் பெறாமல் பெற்று கொடுத்தோம் என்பதை ஏற்றுகொள்கிறேன்.

2) பத்திரப்பதிவு செலவையும் தானே செலுத்தி இலவசமாக அரசுக்கு அளித்தார் என்பதை ஏற்றுகொள்கிறேன்.

3) (CRZ) இல்லாதப் பகுதியில் அளித்தார் என்பதை என் போன்று பலரால் ஏற்றுகொள்ள முடியவில்லை.

(CRZ) இல்லாதப் பகுதியை காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நகராட்சிக்கு பெற்று கொடுத்து இருந்தால் ஏன் இதுவரை இத்திட்டத்திற்கு தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காமல் உள்ளது என்ற ஏன் போன்ற பலரின் நியாயமான கேள்விக்கு பேரவை விளக்கம் அளிக்க முடியுமா..?

பேரவை நகராட்சிக்கு பெற்று கொடுத்தது 5 1/2 ஏக்கர் நிலம் (CRZ) இல்லாதப் பகுதி என பேரவையால் நிரூபிக்க முடியுமா..?

முன்னுக்கு பின் முரணான பேரவையின் இந்த அறிக்கை யாரை திருப்தி படுத்த வெளியிடப்பட்டுள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

எனது இந்த கேள்வி யாரையும் புண்படுத்தும் நோக்கமல்லா..! ஒரு உண்மையை நானும் இன்னும் பலரும் அறிந்து கொள்ளும் நோக்கமே இன்றி வேறில்லை..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved