Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:01:23 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16023
#KOTW16023
Increase Font Size Decrease Font Size
சனி, மே 30, 2015
போதிய உறுப்பினர்கள் பங்கேற்காததால், நகர்மன்றக் கூட்டம் நடைபெறவில்லை! அசைபடப் பதிவுகளுடன் விரிவான விபரங்கள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6473 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் அவசர கூட்டம் இம்மாதம் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 15.00 மணிக்கு என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

நகராட்சி கட்டிடம் இடித்தகற்றப்பட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால், நுழைவாயிலுக்கருகில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு, அதில் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வருகை தந்தோர்:

01ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஐ.அஷ்ரஃப்,
02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா,
03ஆவது வார்டு உறுப்பினர் பீ.எம்.எஸ்.சாரா உம்மாள்,
05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர்,
06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முகைதீன்,

07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி,
08ஆவது வார்டு உறுப்பினர் எம்.எம்.டீ.பீவி ஃபாத்திமா,
10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்,
11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன்,
13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன்,

14ஆவது வார்டு உறுப்பினர் ஏ.பாக்கியஷீலா,
15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமால்,
17ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத்,
18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி
ஆகியோர், அன்று 15.15 மணியளவில் கூட்ட நிகழ்விடம் வந்து நாற்காலிகளில் அமர்ந்தனர். அவர்களுள், 07, 13, 15ஆவது வார்டு உறுப்பினர்களான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், கே.ஜமால் ஆகியோர் மட்டுமே வருகைப் பதிவேட்டில் கைச்சான்றிட்டனர்.

தமிழக முதல்வரை வாழ்த்தி சிறப்புத் தீர்மானம்:

கூட்டப்பொருட்கள் வாசிக்கத் துவங்குகையில், அண்மையில் தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள ஜெ.ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானத்தை மேசைப் பொருளாக நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாசித்தார்.



துணைத்தலைவர், பெரும்பான்மை உறுப்பினர்கள் வெளிநடப்பு:

அவர் வாசித்துக்கொண்டிருந்தபோதே, நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் எழுந்து, பின்வருமாறு அறிக்கையை வாசித்து, நகர்மன்றத் தலைவரைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூற, அவரும், வருகைப் பதிவேட்டில் கைச்சான்றிட்ட உறுப்பினர்களைத் தவிர மற்றவர்களும் கூட்ட நிகழ்விடத்தை விட்டும் வெளியேறிச் சென்றனர்.









கூட்ட நிகழ்வுகள் குறித்த அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!



நகர்மன்றத் தலைவர் பேட்டி:

பின்னர், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். மீண்டும் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்கும் சிறப்புத் தீர்மானம், நகருக்குச் செய்ய வேண்டிய அத்தியாவசியப் பணிகளுக்கான கோரிக்கைகள் மீதான தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்கள் பொறுப்பற்று வெளியேறிச் சென்றுவிட்டமையால், போதிய உறுப்பினர்கள் இல்லாத நிலையில் இக்கூட்டம் நடத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.



“மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஏன் கூட்டம் நடத்தவில்லை?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு,

“எந்த விபரமும் தெரிவிக்காமல் மொத்த செலவுத் தொகையை மட்டும் காண்பித்து, 2015-2016ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு நகர்மன்றத்தின் தீர்மானத்தை ஆணையர் கேட்டிருந்தார்... என்னென்ன செலவினங்கள் என்ற விபரம் தந்த பின், அதைக் கூட்டப்பொருளில் சேர்த்து ஒப்புதல் வழங்கலாம்... என்று நான் கூறியிருந்தேன். எனினும் நீண்ட நாட்களாக அது தரப்படவில்லை.

பின்னர், காயல்பட்டினத்தில் செய்ய வாய்ப்பேயில்லாத சில பணிகளுக்கெல்லாம் செலவுத்தொகையிட்டு பட்ஜெட்டை தயாரித்தளித்திருந்தார்... அவற்றையெல்லாம் நீக்கிவிட்டு, இந்த ஊருக்கு எது தேவையோ அதை மட்டும் விபரத்தில் காண்பித்து மீண்டும் பட்ஜெட் தயாரித்துத் தருமாறு கேட்டிருந்தேன். ஆனால் இன்று வரை அவ்வாறு என்னிடம் தரப்படவில்லை.

குறைந்தபட்சம் (பின்வருமாறு) இப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விபரங்களையாவது தாருங்கள்... என்று கேட்டும் இன்று வரை எனக்குத் தரப்படவில்லை.



ஒரு நகர்மன்றத் தலைவராக, இந்த நகராட்சியில் எத்தனை வங்கிக் கணக்குகள் எங்கெங்கு உள்ளன; அவற்றில் எவ்வளவு தொகை உள்ளன; செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்குகள் எவை; செயல்பாட்டில் இல்லாத வங்கிக் கணக்குகள் எவை என்ற அடிப்படை. விபரம் கூட, நான் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் இன்று வரை எனக்குத் தரப்படவில்லை. இவ்வாறிருந்தால், எதை வைத்து எப்படி மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவது?

நேரில் பலமுறை கேட்டும் ஆணையர் இவ்விபரங்களைத் தராததால், பதிவுத் தபாலிலும், மின்னஞ்சல் மூலமும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் பலமுறை கேட்டும், இன்று வரை இந்த விபரம் எனக்குத் தரப்படவில்லை.

என் மேல் உள்ள குரோதங்களையெல்லாம் ஒரு பக்கத்தில் வைத்துவிட்டு, ஊர் நலன் கருதி உறுப்பினர்கள் இந்த விபரங்களையேனும் பெற்றுத் தரலாம்... ஆனால் அவர்களுக்கு இதிலெல்லாம் ஆர்வமே இல்லை...” என்று நகர்மன்றத் தலைவர் கூறினார்.

அரசுத் திட்டமான பயோகேஸ் திட்டத்தை நிறைவேற்ற விடாமல் நகர்மன்றத் தலைவர் தடுப்பதாக உறுப்பினர்கள் பலர் கூறும் குற்றச்சாட்டு குறித்து வினவியதற்கு,

90 லட்சம் ரூபாய் செலவில், தமிழக முதல்வர் காயல்பட்டினத்திற்கு அளித்துள்ள இத்திட்டம் மக்களுக்கு முழுப் பயனளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், அரசுக்குச் சொந்தமான இடங்களுள் ஒன்றில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நான் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்... ஆனால், அதிகம் நீர் கட்டும் இடத்தில், அணுகுசாலை குறித்து இன்று வரை தெளிவான விளக்கம் இல்லாத ஓர் இடத்தில், இத்திட்டத்தைக் கொண்டு வந்து நாசமாக்க பெரும்பான்மை உறுப்பினர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றனர்... இது ஒருபோதும் ஏற்க இயலாதது! மக்கள் நலனுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு திட்டம் எந்த ஆய்வும் செய்யாமல் வீணடிக்கப்படுவதை என்னால் பார்த்துக்கொண்டிருக்க இயலவில்லை...” என்றார்.

நகர்மன்றத் தலைவர் செய்தியாளர்களிடம் பேசியதன் அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!



உறுப்பினர்கள் எதிர்ப்பு முழக்கம்:

கூட்ட நிகழ்விடத்தை விட்டும் வெளியேறிய நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலக நுழைவாயிலுக்கு முன் நின்றவாறு, தமிழக முதல்வருக்கு ‘வாழ்க’ முழக்கமும், நகர்மன்றத் தலைவருக்கு ‘ஒழிக’ முழக்கமும் எழுப்பிக் கொண்டிருந்தனர்.





துணைத்தலைவர், உறுப்பினர் பேட்டி:

அவர்களின் சார்பில், நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர், கூட்டம் துவங்குகையில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களைக் கூறினர்.





நகர்மன்ற துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன் செய்தியாளர்களிடம் பேசியதன் அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!



18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி செய்தியாளர்களிடம் பேசியதன் அசைபடப் பதிவைக் காண கீழேயுள்ள படத்தின் மீது சொடுக்குக!



இதற்கு முன் நடைபெற்ற நகர்மன்றக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by kamalmusthafa (abha.ksa) [30 May 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40781

காயல் இலையதளத்திற்கு அன்பான வேண்டுகோள் இது மாதிரியான முக்கிய செய்திகளை முலுமையானதகவல் கிடைத்தபின் இளையதலத்தில் வெளி யிட்டால்பார்ப்பவர்களுக்கும் கருத்துக்கள் சொல்பவகளுக்கும் மிக நன்றாக இருக்கும் என்பதை கனிவோடு தெரிவித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...குட்டக்குட்ட குனிபவனும் மடையன் ,குனியக்குனிய குட்டுபவனும் மடையன்.
posted by Omer Abdul Qadir (Chennai) [30 May 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 40782

அஸ்ஸலாமு அலைக்கும்...குட்டக்குட்ட குனிபவனும் மடையன் ,குனியக்குனிய குட்டுபவனும் மடையன்...இப்படி ஊர் நலனுக்கு வெளிப்படையாகவே எதிராக இயங்கும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து கையெழுத்து சேகரித்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சாத்தியம் இருந்தால் சொல்லுங்கள் ..புண்ணிய வான்களே..ஊர் மக்களின் துஆ உங்களுக்கு கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. எனக்கு எதிரியே தென்படவில்லை எதிகட்சிகளே இல்லை!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [30 May 2015]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 40783

முடியை பிச்சிக்கிட்டு எதில் போய் முட்டிக்கொள்ளவது என்று தெரியாமல் முழிக்க வேண்டியதாய் இருக்கிறது.

இந்த கோஷ்டியும் புரட்சிதலைவி அம்மா வாழ்க அம்மாவின் எதிரிகள் ஒழிக என்ற கோஷம்.அந்த கோஷ்டியும் புரட்சிதலைவி அம்மா வாழ்க அம்மாவின் எதிரிகள் ஒழிக என்கின்ற கோஷம். எது அம்மாவின் உண்மை விசுவாசிகள்! எது போலி.ஒண்ணுமே புரியலையே!

நேற்று சேலத்தில் தி.மு க கவுன்சிலரை எதிர் கட்சினர்கள் புரட்டி எடுத்தற்காக, தி மு க கட்சியின் சுமார் பத்தாயிரத்திற்கும் மேலான தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் என்று செய்தி படித்தேன்.

ஆனால் இங்கோ ஒரே கட்சினர்களிடையே குழாயடி குமட்டும் விமர்சன வசனங்கள்! உன்னை விட்டேனா பார் என்ற சூளுரை ,சபதங்கள்!.

வீதிதோறும் வாசனை மணக்கிறது ஒரு கட்சியின் புகழ்! எனக்கு எதிரியே தென்படவில்லை எதிகட்சிகளே இல்லை என்றுஒரு கட்சி தலைவி சொன்னதின் சூட்சமமும், மர்மமும் இதுதானோ? அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 May 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40787

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த அசைபடத்தை '' பார்த்த பின்பு ...நமக்கு நமது மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்கள் மீதான மதிப்பும் ,, மரியாதையும் சுத்தம்கவே இல்லாமல் போய் விட்டது .....

மேலும் நாம் இவர்களை பற்றி சொல்வதற்கு சுத்தமாகவே ஒன்றும் இல்லை ......

தங்கள் தொகுதி மக்களையும் ,,, ஊரையும் ,,பற்றி கவலையே பட வில்லையே ..... இவர்களை தேர்வு செய்த நம்மை தான் நாம் நினைத்து பார்க்க வேணும் ......மனதளவில் நொந்து கொள்ளவேணும் ....வேறு என்னதான் செய்ய .......

நாம் நகர் மன்றத்தின் காலங்கள் ஒடி விட்டன .........இனியும் இவர்கள் நாம் வருகின்ற தேர்தலில் ....தேர்வு செய்யாமல் கவனமாகவே பார்க்க வேணும் ......அதான் முக்கியம் ........

நமது ஊர் பொது மக்களின் வரி பணம் தேவைக்கற்று போகிறதே ........அதான் மிகுந்த மன வருத்தம் ......

அல்லாஹ் நல்லதையே நம் ஊருக்கு நாடுவான் .... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நகர்மன்ற தலைவி ஒழிக..! புரட்சி தலைவி அம்மா வாழ்க என்ற போலி வீர வெத்துவேட்டு நாடகத்தால் வேலை நிறுத்த தடை நீங்கி விடுமா..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [31 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40788

உறுப்பினர்களே..! உங்களின் வெளிநடப்பால் / கூட்ட புறக்களிப்பால் தனியார் ஒருவர் வழங்கிய நிலத்தில் பயோ கேஸ் மற்றும் குப்பை கிடங்கு திட்ட பணிகளை நிறுத்தி வைத்திருக்கும் பசுமை தீர்பாயத்தின் தடைகள் விலகி விடுமா..!

இத்திட்டம் முழுமை பெற அதாவது நீதி மன்றத்தில் பயோ கேஸ் மற்றும் குப்பை கிடங்கு திட்ட பணிகளுக்கு எதிராக உள்ள வழக்கை தவிடு பொடியாக்க / தள்ளுபடியாக்க நீங்கள் விரும்பி இருந்தால் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ஆற்றவேண்டிய மிக முக்கிய வேலை BUFFER ZONE அனுமதி - சுற்று சூழல் துறையின் அனுமதி மற்றும் திட்டம் நடைபெறும் இடத்திற்கான அணுகு சாலை குறித்த தெளிவுகளை இக்கூட்டத்தின் போது நகராட்சி அதிகாரிகளை அணுகி இத்திட்டத்திற்கு தடையாக வேறு என்ன..! என்ன..! உள்ளது என கேட்டறிந்து அவைகளை நீங்கள் தீர்மானமாக ஆணையருக்கு அளித்தால் அதுவே நீதிமன்றத்தில் உள்ள இவ்வழக்கு தள்ளுபடியாகவும் / சர்வே எண் 278 ல் இத்திட்டம் நிறைவேறவும் பெரும் உதவியாக அமைந்து இருக்குமே.

அதைவிட்டுவிட்டு நகர்மன்ற தலைவி ஒழிக..! புரட்சி தலைவி அம்மா வாழ்க என்ற உங்களின் போலி வீர வெத்துவேட்டு நாடக முழக்கத்தினால் சர்வே எண் 278 ல் நடைபெற்று வந்த பணியின் வேலை நிறுத்த தடை நீங்கி விடுமா..!

அது சரி.....? படத்தில் 6வது வார்டு உறுப்பினரும், 17வது வார்டு உறுப்பினரும் நிற்கிறார்களே? அவர்களுமா “புரட்சித் தலைவி வாழ்க!” என்று கோஷமிட்டார்கள்? நம்பவே முடியலையே???

உறுப்பினர்களே..! நீங்கள் இக்கூட்டத்தை மட்டும் புறக்களிக்கவில்லை உங்களுக்கு வாக்களித்த நகர்மக்களின் எதிர்ப்பார்ப்பு மற்றும் தேவைகள் அனைத்தையும் புறக்களித்துள்ளீர்கள் என்பதே உண்மை.!

சர்வே எண் 278 ல் நடந்த வந்த பணிக்கு இடையூறு / சிக்கல் / பிரச்சனை / தடை ஏற்பட காரணமே நீங்கள் தான் - BUFFER ZONE தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இத்திட்டத்திற்கு முதல் முட்டுக்கடை போட்டதை நகர் மக்கள் மறந்து விடவில்லை...! இத்திட்டத்தின் மூலம் நகர் மக்கள் பயனடைவார்கள் என்ற சிறு அளவு எண்ணம் உங்களுக்கு இருக்குமானால் அது என்றைக்கோ BUFFER ZONE தீர்மானத்தை நிறைவேற்றி ஆதரவு அளித்து இருப்பீர்களே..!

யாருக்காக இந்த BUFFER ZONE தீர்மான எதிர்ப்பு..? நகரின் தனி நபர்களுக்கா..!

இத்திட்டம் நிறைவேற இத்தீர்மானத்தை (BUFFER ZONE) நீங்கள் ஆதரிக்காமல் சும்மா நகர்மன்ற தலைவி மீது வீண் பழி / அவதூறு பரப்புதல் / புற செயல்களில் ஈடுபடுதல் இவைகள் ஒரு போதும் உங்களுக்கு எந்த பயனையும் அளிக்காது..!

உங்கள் நோக்கம் என்ன..! பயோ கேஸ் அமைக்க 10 செண்டு நிலம் போதுமானதாக இருக்கும் போது 5.5 ஏக்கர் நிலம் எதற்கு..? அங்கு குப்பை கிடங்கு வர கூடாது என்ற எண்ணம் கூட்டத்தை புறக்கணித்த உறுப்பினர்களாகிய உங்களுக்கு இருப்பதாகவே தெரிகிறது..! அந்த எண்ணம் உங்களுக்கு இல்லையெனில் BUFFER ZONE தீர்மானத்தை ஆதரவு அல்லவா அளித்து இருப்பீர்கள்..!

வெளிநடப்பு செய்திருக்கும் உறுப்பினர்களே..! இது விசியத்தில் நகர் மக்கள் மிக மிக தெளிவாக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...வேடிக்கையும் வாடிக்கையும்
posted by mackie noohuthambi (kayalpatnam) [31 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40790

''வேடிக்கையாய் பொழுது போகணும் கொஞ்சம் விளையாட்டாய் வாழ்ந்து பார்க்கணும்'' என்று பாடல் உண்டு.

தமிழகத்தில் சட்டமன்றம் நகர்மன்றம் எல்லாமே இந்த பாடல் வரிகளை உண்மைப் படுத்துவதாகவே இருக்கிறது. தினசரி எந்த நாளிதழை படித்தாலும் இந்த நிலைதான் எல்லா நகர்மன்றங்களிலும் காண முடிகிறது. இதில் காயல்பட்டினம் மட்டும் என்ன விதி விலக்கா....

சட்டமன்றத்தில் எல்லா தீர்மானங்களும் விதி எண் 110 கீழ்தான் அங்கீகரிக்கப்பட்டு அமுல்படுத்தப் படுகிறது.நகர்மன்றதுக்கும் இந்த விதி பொருந்தி வராதா என்ன....

நல்ல வேளை . 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்று ஒரு நடைமுறை இருப்பதால் மக்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இல்லா விட்டால் மூச்சே விட முடியாமால் போகும்.

வாழ்க நமது அரசியல் சட்டங்களை வகுத்து தந்த பெரியவர்களின் நாமம்.

மக்களுக்கு விருப்பமில்லாத ஆட்சி நடக்கும்போது அந்த தலைவரையோ உறுப்பினர்களையோ திருப்பி அழைக்கும் ஒரு உரிமையையும் அவர்கள் அதில் சேர்த்து தரவில்லையே என்று கவலையாக இருக்கிறது......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S.ABDUL KADER (KAYAL PATNAM) [31 May 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40791

எல்லாம் நன்மைக்கே. இனி வரும்காலங்களில் இப்படி நிகழ்வுகள் ஒரு படிப்பினை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. ஒகோ?
posted by Dawood bin Shaffie (Hong Kong) [01 June 2015]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 40796

எல்லாரும் அவங்கவங்க கருத்தை சொன்னீங்க...

என்னை பொறுத்தவரை இந்த இணையதளமும் எத்தன ஆதரவாளர்களும் தலைவியும் அவரது சிங்க்சாக்கலுமே நகர் நல பணிகளுக்கு முதல் எதிரிகள்...

எனது சில கேள்விகள் / சந்தேகங்கள்..:

1. சில தினக்களுக்கு முன் 5வது வார்டு உறுப்பினர் (தனது கோரிகிக்கைகள் கூட்டபோருளில் இணைக்கப்படவில்லை என்ற) விளக்கம் கேட்க்கும் கடிதம் அனைத்து இணையதளங்களுக்கும் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்????

2. Buffer Zone பற்றி சிலர் கருத்து பதிந்துள்ளார்கள்... Bio Gas திட்டத்திற்கு செல்லும் அணுகு சாலைக்கு பின்னரும் (சாலையை விட கடலுக்கு நெருக்கமாக) மக்கள் குடியிருக்கும் வீடுகள் அமைந்துள்ளனவே... அவர்களின் மீது அக்கறை இல்லையா நகர்மன்றத்திர்க்கு... ?

3. தலைவியின் செய்தியை ஆசைப்பட பதிவிற்கு முன் விளக்கமாக எழுத்து மூலம் பதிவிட்ட இந்த இணையதலத்தவர்களே... மற்ற உறுப்பினர்கள் விஷயத்தில் இதை செய்யாதது என்?

விளக்கங்களை தருமா இந்த இணையத்தளம்? பொறுத்திருக்கிறேன்...

[Administrator: (1) செய்திகள் தகுதியின் அடிப்படையில் இவ்விணையதளத்தில் வெளியிடப்படுகிறது. நகர்மன்றத் தலைவர் - 18 உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெறும் அனைத்து கடித போக்குவரத்துகளும் செய்திக்கு தகுதியானவை அல்ல.

(2) "... அவர்களின் மீது அக்கறை இல்லையா நகர்மன்றத்திர்க்கு..." என்ற தங்கள் கேள்வி இணையதளத்திற்கு உள்ளது அல்ல.

(3) உறுப்பினர்கள் பேசியதும் - எழுத்தாக அதே செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் பார்க்கவும். //கூட்டம் துவங்குகையில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு //]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by AZATH JAWAHAR (kayalpatnam) [01 June 2015]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 40797

அம்மா ஆட்சியில் நல்லது செய்யனும்னு இப்பம் தான் இவங்களுக்கு மனசு வந்து இருக்கு போல! அடடா என்ன ஒரு நல்ல விசியம்!அப்பம் நீங்க அம்மா க்கு வாழ்த்து சொல்ல தான் கூட்டம் நடத்தப்பட்டது ஊரின் நலனுக்கு இல்ல?! ஆகா மொத்தத்தில் சுயட்சை ஆகா வெற்றி பெற்ற இவர்கள் எப்படி எல்லாம் அம்மா அம்மா ன்னு சொல்ல்றங்கா நல்ல கூவறாங்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [01 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40800

Buffer Zone மற்றும் Bio Gas திட்டத்திற்கு செல்ல அணுகு சாலை குறித்தும் சில கருதுக்களை நான் பதிந்துள்ளதால் சகோதரர் Dawood bin Shaffie அவர்களுக்கு சில தெளிவுகளை அளிக்க விரும்புகிறேன்..!

(குறிப்பு:- இணையத்தின் அட்மின் அவர்களே..! இக்கருத்தை விவாதமென ஒதுக்கி விட வேண்டுமென வேண்டுகிறேன்..! நன்றி..!)

Buffer Zone பற்றி சிலர் கருத்து பதிந்துள்ளார்கள்... (CP)

Buffer Zone க்கும் - Bio Gas திட்டத்திற்கும் எந்த தொடரப்போ, சம்பந்தமோ அல்ல..! அதை தாங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும், ஏன்..? எதற்காக எந்த தொடர்ப்பும், சம்பந்தமும் அல்ல.. என தாங்கள் கேள்வி எழுப்புவீர்களேயானால்...! Bio Gas திட்டத்திற்கு 2011 இன் சட்ட விதிமுறையான Buffer Zone தீர்மானம் பின்பற்ற அவசியமில்லை, Bio Gas Plant அருகில் குப்பை கிடங்கு அமைய இருப்பதால் இந்த குப்பை கிடங்கை அமைக்க மட்டுமே மத்திய அரசின் 2000 இன் சட்ட விதிமுறையான Buffer Zone தீர்மானம் பின் பற்றப்பட வேண்டும்..! Bio Gas திட்டத்திற்கு Buffer Zone தீர்மானம் அவசியமல்ல.!

Bio Gas திட்டத்திற்கு செல்லும் அணுகு சாலைக்கு பின்னரும் (C P)

Bio Gas திட்டத்திற்கு (கட்டிடத்திற்கு) செல்ல அணுகு சாலையே அங்கு இல்லாத போது அணுகு சாலைக்கு பின்னரும் என்ற தாங்களின் கேள்வி..! பெயர் இல்லாத ஊருக்கு பேருந்தில் பயணசீட்டு கேட்ட மாதிரி உள்ளது..!

சாலையை விட கடலுக்கு நெருக்கமாக மக்கள் குடியிருக்கும் வீடுகள் அமைந்துள்ளனவே... அவர்களின் மீது அக்கறை இல்லையா நகர்மன்றத்திர்க்கு... ? ( C P )

தாங்களின் இந்த கேள்வி நகர்மன்றத்தை நோக்கி அமைந்துள்ளது..! ஆகவே நமது நகர்மன்றம் தான் இது விசியத்தில் அக்கறை வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [01 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40801

Buffer Zone மற்றும் Bio Gas திட்டத்திற்கு செல்ல அணுகு சாலை குறித்தும் சில கருதுக்களை நான் பதிந்துள்ளதால் சகோதரர் Dawood bin Shaffie அவர்களுக்கு சில தெளிவுகளை அளிக்க விரும்புகிறேன்..!

(குறிப்பு:- இணையத்தின் அட்மின் அவர்களே..! இக்கருத்தை விவாதமென ஒதுக்கி விட வேண்டுமென வேண்டுகிறேன்..! நன்றி..!)

Buffer Zone பற்றி சிலர் கருத்து பதிந்துள்ளார்கள்... (CP)

Buffer Zone க்கும் - Bio Gas திட்டத்திற்கும் எந்த தொடரப்போ, சம்பந்தமோ அல்ல..! அதை தாங்கள் முதலில் அறிந்து கொள்ளவேண்டும், ஏன்..? எதற்காக எந்த தொடர்ப்பும், சம்பந்தமும் அல்ல.. என தாங்கள் கேள்வி எழுப்புவீர்களேயானால்...! Bio Gas திட்டத்திற்கு 2011 இன் சட்ட விதிமுறையான Buffer Zone தீர்மானம் பின்பற்ற அவசியமில்லை, Bio Gas Plant அருகில் குப்பை கிடங்கு அமைய இருப்பதால் இந்த குப்பை கிடங்கை அமைக்க மட்டுமே மத்திய அரசின் 2011 இன் சட்ட விதிமுறையான Buffer Zone தீர்மானம் பின் பற்றப்பட வேண்டும்..! Bio Gas திட்டத்திற்கு Buffer Zone தீர்மானம் அவசியமல்ல.!

Bio Gas திட்டத்திற்கு செல்லும் அணுகு சாலைக்கு பின்னரும் (C P)

Bio Gas திட்டத்திற்கு (கட்டிடத்திற்கு) செல்ல அணுகு சாலையே அங்கு இல்லாத போது அணுகு சாலைக்கு பின்னரும் என்ற தாங்களின் கேள்வி..! பெயர் இல்லாத ஊருக்கு பேருந்தில் பயணசீட்டு கேட்ட மாதிரி உள்ளது..!

சாலையை விட கடலுக்கு நெருக்கமாக மக்கள் குடியிருக்கும் வீடுகள் அமைந்துள்ளனவே... அவர்களின் மீது அக்கறை இல்லையா நகர்மன்றத்திர்க்கு... ? ( C P )

தாங்களின் இந்த கேள்வி நகர்மன்றத்தை நோக்கி அமைந்துள்ளது..! ஆகவே நமது நகர்மன்றம் தான் இது விசியத்தில் அக்கறை வேண்டும்.

சகோதரர் Dawood bin Shaffie அவர்களே..! இத்திட்டம் நல்ல முறையில் நடந்தேற இடையூறு, தடங்கள், பிரச்சனைகள் இல்லாமல் இருக்க முதலில் BUFFER ZONE தீர்மானத்தை நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவர்களும் நிறைவேற்றி நகர்மன்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையருக்கு அளிக்க அறிவுரை வழங்குங்கள் - நகரின் தனி நபர்களின் சுய தேவையை, அவர்களின் சுய எதிர்ப்பார்ப்பை எல்லாம் தவிர்த்து ஒட்டுமொத்த நகர்மக்களின் பொதுவான தேவையையும், பொதுவான எதிர்ப்பார்ப்பையும் நிறைவு செய்யட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. சகிக்கவில்லை!
posted by N.S.E.மஹ்மூது (Kayalpatnam) [02 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 40808

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகராட்சியில் நடைபெறும் நாடகம் காண சகிக்கவில்லை. இதில் யார்! யார் !! தவறு செய்கிறார்கள் ? என்று பிரித்துப் பார்ப்பதற்கில்லை.

அத்துனை பேர்களும் தப்பு செய்பவர்களாகவே கணிக்கப்படுகிறார்கள் - குறைந்த பட்சம் தவறாவது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மக்கள் பிரதிநிதிகள் என்று மட்டுமல்ல அரசு ஊழியர்களும் தவறுகளுக்கு காரணமாகத்தான் இருக்கிறார்கள்.

----------------------------------------

வெளிநடப்பு என்றால் என்ன என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்களை மக்களின் பிரதிநிதியாக நகர்மன்றத்திற்கு அனுப்பி வைத்தால் அவர்கள் இப்படித்தான் நடந்துக் கொள்வார்கள்.

கூட்டத்திற்கு சென்றோம் வருகை ஏட்டில் கையொப்பமிட்டு வருகையை பதிவு செய்தோம், கூட்டம் தொடங்கிற்று – அதன் பின் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி (அது தவறோ இல்லை சரியோ ) வெளிநடப்பு செய்தால் அதற்கு பெயர் தான் “ வெளிநடப்பு “.

வருகை ஏட்டில் கையெழுத்தும் பதிவாகவில்லை , கூட்டமும் நடைபெறவில்லை என்றால் நீங்கள் எதிலிருந்து வெளிநடப்பு செய்தீர்கள்?

கூட்டத்தை நடைபெறவிடாமல் புறக்கணித்திருக்கிறீர்கள் அவ்வளவுதான் அதை எப்படி வெளிநடப்பு என்று சொல்ல முடியும்.

இப்படி ரொம்ப விவரம் தெரிந்தவர்களைத்தான் நம் மக்கள் ”பிரதிநிதிகளாக” தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் – இனிமேலாவது நம் மக்கள் திருந்தி அடுத்த முறை, விவரம் தெரிந்தவர்களை, நேர்மையானவர்களை, மக்களுக்கு சேவையாற்றக்கூடியவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதுதான் வருங்கால சந்ததியினர் நிம்மதி அடைவர்.

--------------------------------------

தலைவர் திறமையானவர், வல்லவர், நல்லவர் என்றோ? அல்லது மன்ற உறுப்பினர்கள் எல்லோரும் திறமையற்றவர்கள் என்றோ சொல்ல வரவில்லை – எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.

இந்த மன்றம் தொடங்கியதிலிருந்து இதுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அத்தனை நிகழ்வுகளையும் பார்க்கும்போது – உங்களில் யாருக்குமே பொறுப்பு இல்லை என்றே! அறிய முடிகிறது.

உண்மையாகவே உங்களில் யாராவது பொறுப்புள்ளவர்களாக இருந்தால், மக்களுக்கு எந்த வகையிலும் நஷ்டமும், கஷ்டமும் வரக்கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்திருந்தால் இவ்வளவு காலம் இப்படி எந்த ஒரு காரியமும் செய்யாமல் நேரத்தை வீணாக்கி இருக்க மாட்டீர்கள்.

எந்த வகையிலாவது ஒத்துப்போய் காரியங்களை சாதித்திருப்பீர்கள் அல்லது நாம் இந்த பதவியிலிருக்க பொருத்தமானவர்கள் அல்ல என்று பதவியை விட்டு விலகிப்போய் இருப்பீர்கள் – அதை செய்தீர்களா? செய்யவில்லையே! - ஏன்? ஏன்??.

----------------------------------------------

“எந்த விபரமும் தெரிவிக்காமல் மொத்த செலவுத் தொகையை மட்டும் காண்பித்து, 2015-2016ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டுக்கு நகர்மன்றத்தின் தீர்மானத்தை ஆணையர் கேட்டிருந்தார்... என்னென்ன செலவினங்கள் என்ற விபரம் தந்த பின், அதைக் கூட்டப்பொருளில் சேர்த்து ஒப்புதல் வழங்கலாம்... என்று நான் கூறியிருந்தேன். எனினும் நீண்ட நாட்களாக அது தரப்படவில்லை. “ என்று நகர்மன்ற தலைவர் ஆணையர் மீது குற்றம் சுமத்துகிறார்.

குற்றம் சுமத்துவதில் நியாயமிருந்தாலும் அதை எம்மால் நியாயப்படுத்த முடியாது – காரணம் நம் நகராட்சியில் எந்த ஒர் ஆவணமும் பாதுகாத்து வைக்கப்படவில்லை, பாதுகாத்துவைக்கப்படுவதுமில்லை. அதனால் ஆணையருக்கு பட்ஜெட் தயாரிக்க சிக்கல் ஏற்படலாம்.

இருந்தபோதிலும் ஆணையர் அனுபவமுள்ளவர் என்றால், அல்லது திறமையுள்ளவர் என்றால் பட்ஜெட்டை முறைப்படி,மரபுபடி செய்து முடித்து, தலைவர் - உறுப்பினர்களுக்கு மத்தியில் உள்ள பிரச்சனைகளில் தன் தலை உருளாமல் பாதுகாத்து இருக்கலாம்.

--------------------------------------------------

”நம் நகராட்சியில் எந்த ஒர் ஆவணமும் பாதுகாத்து வைக்கப்படவில்லை “ என்பது தெளிவு – இதை ஏதோ! கிண்டல், கேலிக்காக எழுதவில்லை – தகவல் உரிமைச்சட்டத்தில் கிடைக்கப்பட்ட தகவல் மூலமும், அதன் வழக்குகளில் (நமது நகராட்சி மற்றும் சென்னையில் உள்ள நகராட்சியின் தலைமையகமும்) கலந்து கொண்டதில் எனக்கு கிடைத்த மறுமொழியின் காரணத்தினாலும்தான் எழுதியிருக்கிறேன்.

மேலும் புதிய ஆணையர் பொறுப்பேற்றதிலிருந்து எந்த ஒர் ஆவணமும் காக்கப்பட வில்லை என்றால் அதற்கும் – இதற்கு முன்பிருந்தவரிடமிருந்து எந்தெந்த ஆவணங்களை முறைப்படி ஒப்புக்கொண்டாரோ அதில் எதை பாதுகாக்காமல் விட்டார்களோ? அதற்கும் இப்போதைய ஆணையரே பொறுப்பாவார்.

ஆகவே, ஆணையாரக இருப்பவர் அவருடைய வேலைக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அங்குள்ளவர்களுடன் தொடர்பை வைத்துக்கொள்ள வேண்டும் – அதை அவர் மறந்தால் விதியை யாராலும் மாற்ற முடியாது.

-------------------------------------------

மக்களே!

ஊர் இரண்டானால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பார்கள் – அதனால் இனி வரக்கூடியக் காலங்களிலாவது சிந்தித்து செயலாற்றுங்கள்.

நல்லவர்களை,வல்லவர்களை உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களை தேர்ந்தெடுங்கள் – நகராட்சியை நலமுடன் செயல்பட செய்யுங்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. தலைவி திருந்தாதவரை அனைத்து கூட்டங்களுமே ஆல் பாஸ் தான்
posted by Habeeb Mohamed Nasrudeen (Qatar) [04 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40844

கூட்டம் துவங்கும் முன்னரே எல்லா தீர்மானமும் நிறைவேறியதாக கூறி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுக்க பயந்து ஆல் பாஸ் சொல்லி எஸ்கேப் ஆகும் தலைவியை, பயந்து ஒடாமல் தைரியத்தோடு முறையாக கூட்டத்தை நடத்தும் முறை பற்றி ஏதாவது ஸ்கூலில் போயி பாடம் படித்துவிட்டு வர சொல்லுங்கள்

தலைவி திருந்தாதவரை அனைத்து கூட்டங்களுமே ஆல் பாஸ் தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved