Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:59:39 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16020
#KOTW16020
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மே 29, 2015
சமய நல்லிணக்கம், உலக அமைதி, நாட்டு நலனுக்காக அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் பங்கேற்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3648 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 88ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 19.04.2015 அன்று திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி, மே 20 அன்று நிறைவடைந்தது.

ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவதும், நிறைவு நாளன்று அபூர்வ துஆ பிரார்த்தனை செய்யப்படுவதும் வழமை. அந்த அடிப்படையில் மே 20 அன்று அபூர்வ துஆ நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதிகாலை நிகழ்ச்சிகள்:

அன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன் கிராஅத் ஓத, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப், குருவித்துறைப்பள்ளி ஆகியவற்றின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ நிறைவுநாள் பாடத்தை ஓதி துவக்கி வைத்தார்.

காலை நிகழ்ச்சிகள்:

அன்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ வழங்கினார்.

தொடர்ந்து, கூட்டு துஆவின் மகிமைகள் எனும் தலைப்பில், ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எம்.என்.ஹாமித் பக்ரீ மன்பஈ தமிழ் மொழியிலும், மவ்லவீ ஹாஃபிழ் முஹம்மத் இஸ்மாஈல் அஸ்ஹரீ மலையாள மொழியிலும் உரையாற்றினர்.

அபூர்வ துஆ பிரார்த்தனை:

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலாளர் கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்ற, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் சிறப்பாசிரியர் மவ்லவீ நஹ்வீ ஏ.எம்.முஹம்மத் இப்றாஹீம் மஹ்ழரீ அபூர்வ துஆ பிரார்த்தனை இறைஞ்சி, இவ்வாண்டின் நிகழ்ச்சிகளை நிறைவுபடுத்தினார்.

சமூக ஒற்றுமை, உலக அமைதி, சகோதரத்துவம், நாட்டு நலன், இயற்கைப் பேரிடர்களிலிருந்து பாதுகாப்பு, நோய் நிவாரணத்திற்காக சிறப்புப் பிரார்த்தனை செய்யப்பட்டது.



இப்பிரார்த்தனையில் பங்கேற்பதற்காக, உள்ளூரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் ஆண்களும், பெண்களும் பெருந்திரளாக வந்து கலந்துகொண்டனர்.

பிரமுகர்கள் பங்கேற்பு:

தமிழக முன்னாள் அமைச்சர் - தி.மு.க.வைச் சேர்ந்த டீ.பி.எம்.மைதீன் கான், அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு தலைவர் அப்பாஸ் உள்ளிட்ட பிரமுகர்களும் பிரார்த்தனையில் பங்கேற்றனர்.

பிரார்த்தனையில் பங்கேற்ற முக்கியமானோர்:

காயல்பட்டினம் பள்ளிவாசல் ஜமாஅத்துகளின் நிர்வாகிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், காயல்பட்டினம் நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ், நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவன தலைவர் வாவு செய்யித் அப்துர்ரஹ்மான், பெண்கள் பகுதியில் - நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உட்பட - நகர பொதுமக்களும், வெளியூர்களைச் சேர்ந்த பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.

















































































































இட வசதி:

ஆண்களுக்கு, மஜ்லிஸின் ஆண்கள் பகுதி ஹல்கா, பெரிய முத்துவாப்பா தைக்கா தெரு, குருவித்துறைப்பள்ளியின் உட்பள்ளி, நடுப்பள்ளி, வெளிப்பள்ளி, குருவித்துறைப்பள்ளி மையவாடி மைதானம் உள்ளிட்ட இடங்களில் சிறப்பேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பெண்களுக்கு, மஜ்லிஸின் பெண்கள் பகுதி ஹல்கா, கிழக்குப் பகுதி மைதானம், பெரிய முத்துவாப்பா தைக்கா, ஈக்கியப்பா தைக்கா உள்ளிட்ட பகுதிகளில் இட வசதி செய்யப்பட்டிருந்தது. அனைவரும் ஒரே குரலில் ‘ஆமீன்’ என்று கூறி, துஆ - பிரார்த்தனை செய்தனர்.

துஆ இறைஞ்சிய ஆலிமுக்கு வழியனுப்பு:

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற துஆ பிரார்த்தனை நிறைவுற்ற பின்னர், துஆ இறைஞ்சிய ஆலிமை - ஹாமிதிய்யா பைத் பிரிவினர் அரபி பைத் பாடி நகர்வலமாக அவரது இல்லம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர்.



பாதுகாப்பு ஏற்பாடுகள்:

ஆறுமுகநேரி காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மஜ்லிஸ் வைபவக் கமிட்டியின் சார்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - கே.எம்.டி. மருத்துவமனை சார்பில் ஆம்புலன்ஸ் முதலுதவி வாகனம் நிகழ்விடத்தில் ஆயத்தமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. திருச்செந்தூரிலிருந்து தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டிருந்தது.

போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக, அப்பாபள்ளித் தெருவிலிருந்தே வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.

மக்கள் திரளைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை - அப்பாபள்ளித் தெரு - தீவுத் தெரு சந்திப்பில் துவங்கி, மஜ்லிஸ் வளாகம் வரை ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.











































மாலை நிகழ்ச்சிகள்:

இறுதி நாளை முன்னிட்டு, அன்று மாலையில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர் ரஸூல் முஹம்மத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, நபிகளார் மீதான மவ்லித் மஜ்லிஸ், மரைக்கார் பள்ளியின் இமாம் டீ.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெற்றது. மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ துஆ ஓதி நிறைவு செய்தார்.

17.35 மணிக்கு எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப், வைபவக் கமிட்டி தலைவர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் ஏலம் விடும் நிகழ்ச்சியை நடத்தினர்.

இரவு நிகழ்ச்சிகள்:

19.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பங்கேற்கும் பல்சுவை இஸ்லாமிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

20.45 மணிக்கு, மாதிஹுல் கவ்த் மர்ஹூம் அல்லாமா சே.கு.நூகுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா திக்ர் மஜ்லிஸ், முத்துச்சுடர் மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ தலைமையில் நடைபெற்றது.

21.45 மணிக்கு, நிறைவு நாள் சிறப்பு நிகழ்ச்சிகளின் கடைசி கட்ட நிகழ்ச்சிகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஹாஃபிழ் எஸ்.எச்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா கிராஅத் ஓதி துவக்கி வைக்க, மஜ்லிஸ் வளைவுகளில் பதியப்பட்டிருக்கும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்கினார்.

ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் நன்றி கூற, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ துஆவுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. மே 21 அன்று 06.00 மணி முதல் 08.30 மணி வரை நேர்ச்சை வினியோகம் நடைபெற்றது.

வைபவ நிறைவு திக்ர் மஜ்லிஸ்:

இவ்வாண்டு வைபவத்திற்கான வரவு-செலவு கணக்குத் தணிக்கைகள் நிறைவடைந்ததையடுத்து, 28.05.2015 வியாழக்கிழமையன்று 17.00 மணியளவில் எஞ்சிய சாமான்கள் ஏலம் விடப்பட்டது. அன்றிரவு 17.00 மணியளவில், குருவித்துறைப் பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ ஃபைஜீ தலைமையில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது. ‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ துஆவுடன் இவ்வாண்டு வைபவ நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.

ஏற்பாடுகள்:

அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், துணைத்தலைவர் டீ.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம், மேலாளர் ஒய்.எஸ்.முஹம்மத் உமர் ஃபாரூக், இணைச் செயலாளர்களான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ, கம்பல்பக்ஷ் எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப், எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, துணைச் செயலாளர் எஸ்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஸூஃபீ ஆகிய நிர்வாகிகளும், வைபவக் கமிட்டி தலைவர்களான கே.எம்.செய்யித் அஹ்மத், கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் உள்ளிட்ட வைபவக் கமிட்டியினரும் செய்திருந்தனர்.

படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
நோனா உவைஸ்னா லெப்பை


மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) அபூர்வ துஆ மற்றும் வைபவ நிறைவு திக்ர் மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இறைவா இறைஞ்சல்களை அங்கீகரித்தருள்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [30 May 2015]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40779

அஸ்ஸலாமு அலைக்கும் வ்ரகுமத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

ஆலம்படைத்து அருள்புரிபவனே இறைஞ்சிய மன்றாட்டங்களைஎல்லாம் அங்கீகரித்து அருள்புரி ரப் அல் ஆலமீனே. அல்லாஹும்ம ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [31 May 2015]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40785

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ்....இந்த நிழற்படத்தில் அனைத்து மதத்தினர்களையும் ஒற்று மொத்தமாக பார்பதற்கும் & நம் சொந்தபந்த மக்களையும் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது .....அல்ஹ்ஹம்துளில்லாஹ் .....

சென்ற வருடம் இந்த மிகவும் உன்னதமான சமய நல்லிணக்கம் அபூர்வ துஆ வில் நானும் கலந்து கொண்டதை தற்போது நினைத்து பார்க்கிறேன் ...இன்ஷா அல்லாஹ் ,, வருகின்ற வருடம் இந்த சிறப்பான '' அபூர்வ துஆ '' வில் கலந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்......

சமய நல்லிணக்கம் அபூர்வ துஆ ,,வின் பொருட்டால் எல்லாம் வல்ல நாயன் நம் மக்கள் அனைவர்களின் நோய் நொடிகளை விட்டும் ,, நமக்கு மன நிம்மதியையும் ,, நமக்கு பொருளாதார செழிப்பையும் ,, நம்மில் ஒற்றுமையும் ,,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் ,, தந்தருள்வானாகவும் ஆமீன் .....

இந்த சிறப்பான சமய நல்லிணக்கம் அபூர்வ துஆ ...வின் ஒலி நாடா ''WHATS APP '' மூலம் மிக துரிதமாகவே உலகம் பூரா வந்து நாங்களும் கேட்டு உள்ளம் பூரிப்பானது ( மகிழ்ச்சியானோம ).... வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved